Sunday 2 August 2015

அ.தி.மு.க அடிமைகளின் வாய்நீளம்

அ.தி.மு.க அடிமைகளின் வாய்நீளம்

மாதர்குலப் பெருமையைக் காக்கும் மதுரை மீனாட்சியே!
புரட்சித் தாயே
பூமி மாதாவே
வாழும் எங்கள் வேலுநாச்சியே!
-செல்லூர் கே.ராஜு.

இந்துக்கள் வணங்கிடும் கீதையைப் போல்,
கிறித்தவர்கள் வணங்கிடும் பைபிளைப் போல்,
இசுலாமியர்கள் வணங்கிடும் குரானைப்போல்,
உலகத் தமிழ் மக்கள் வணங்கிடும் புனிதப் பொக்கிஷம் நீங்கள் அம்மா
-செந்தில் பாலாஜி.

பாலினைப் போன்று பண்புகளைக் கொண்டிருக்கும் எங்கள் குலமாதா
-வி.மூர்த்தி.

உலகமே ஒரு நூலகம், அதில் எல்லாரும் ஒரு நூல் என்பார்கள்.
ஆனால், அம்மா நீங்களோ ஒரு நூலகம்
-பி.பழனியப்பன்.

சுனாமி வந்த கடலைவென்றெடுத்த கருணைக் கடல்தான் எங்கள் அம்மா
-ஆர்.பி.உதயகுமார்.

டெங்கு எங்கும் இல்லை என்று சங்கு ஊதிய மருத்துவ சிங்கம் அம்மா
-சி.விஜயபாஸ்கரன்.

புதிய கால்நடை கிளைநிலையங்கள் தோன்றுவிக்கப்பட்டதால் அதிக தூரம் நடந்த கால்நடைகளுக்கு தூரம் குறைந்தது.
அந்த வாயில்லா ஜீவன்கள் அம்மாவை வாழ்த்தின.
37தொகுதிகளில் வென்றதற்குக் காரணம் இந்த வாயில்லா ஜீவன்களின் வாழ்த்துகள்தான்
-டி.கே.எம்.சின்னையா.

தமிழர்கள் லேப்டாப் உபயோகிப்பது அம்மா போட்ட பிச்சை
-நாஞ்சில் சம்பத்.

No comments:

Post a Comment