Thursday 27 August 2015

புலிகளும் இசுலாமியரும்

புலிகளும் இசுலாமியரும்

புலிகள்-இசுலாமியர்கள் கூட்டறிக்கையில் இருந்து

*முஸ்லீம்கள் தமிழ்த் தேசிய இனத்தில் தனித்துவமான கலை, கலாச்சாரம், பண்பாடுகளைக் கொண்ட இனக்குழு

*முஸ்லீம்களின் நிலம்தான் அதிகம் பறிபோயிருக்கிறது.
எனவே எமது மண் மீட்பு போராட்டம் முஸ்லீம்களின் உரிமைக்குரலையே முதன்மைப் படுத்துகிறது

*வடக்கு-கிழக்கு இணைந்த தாயகத்தில் முசுலீம்கள் 18%.
மாகாண சபையில் 30%க்கு குறையாமல் பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.
அரசு நிலப்பங்கீடு முஸ்லீம்களுக்கு
கிழக்கு மாகாணத்தில் 35% குறையாமல்,
மன்னார் மாவட்டத்தில் 30% குறையாமலும்,
ஏனைய வட மாவட்டங்களில் 5% குறையாமல் காணி வழங்கப்படும்.

*பல்கலைகழகம் வரை முஸ்லீம்களுக்கு பிரத்யேக வசதிகள் தரப்படும்

*இசுலாமியப் பல்கலைக் கழகம் நிறுவப்படும்

*வடக்கு-கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஒரு முஸ்லீம் நியமிக்கப்படவில்லை எனில் அம்மாகாண சபையின் துணை-முதலமைச்சராக ஒரு முஸ்லீம் நியமிக்கப்படுவார்

இவை புலிகளும் இசுலாமியத் தலைவர்களும் செய்துகொண்ட உடன்பாட்டின் முக்கிய அம்சங்கள்தான்.
மேலும் பல சலுகைகள் புலிகளால் இசுலாமியருக்கு வாக்களிக்கப்பட்டன.

1988ல் சிங்கள அரசுடனான புலிகளின் அதிகாரப் பங்கீடு  குறித்த பேச்சுவார்த்தை  ராஜீவ் காந்தியின் முன்னிலையில் நடக்கவிருந்தது.

அப்போது அதிகாரப் பங்கீட்டில் இசுலாமியர் பங்கு பற்றி விவாதிக்க இசுலாமியத் தூதுக்குழு ஒன்று 'பக்ருதீன் முகமது' தலைமையில் சென்னை வந்து புலித்தளபதி 'கிட்டு'வை சந்தித்தது.

இருதரப்பினரும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் மேற்கண்ட அம்சங்கள் இருந்தன.

அதாவது 18% உள்ள இசுலாமியருக்கு 30% அளவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு அவ்வொப்பந்தம் கையெழுத்தானது.

மேற்கண்ட ஒப்பந்தமானது புலிகளுடனான இசுலாமியரின் இணக்கத்தை மேலும் அதிகமாக்கியது.

கிறித்தவருக்கு இல்லாத முக்கியத்துவம் இசுலாமியருக்கு ஏன்?

தமிழ் மக்களிடமிருந்து தமிழ்இசுலாமியரைப் பிரிக்கும் முயற்சி ஆங்கிலேய ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது.
கிறித்துவ, சைவ சமயங்களைப் பின்பற்றும் தமிழர்களைப் பொதுவாக "தமிழர்" என்றும்

பௌத்த, கிறித்துவ சமயங்களைப் பின்பற்றும் சிங்களவரைப் பொதுவாக "சிங்களவர்" என்றும்
ஆங்கிலேயர் குறிப்பிட்டனர்.

ஆனால் தமிழர்களான இசுலாமியர்களை அவர்கள் வெறுமனே "முஸ்லீம்" என்று குறிப்பிட்டனர்.

மூன்று இனங்கள் என்று பகுத்து இசுலாமியரை ஏனைய தமிழரிடம் இருந்து பிரித்து வகைப்படுத்தினர்.
இது ஆங்கிலேயரின் பிரித்தாளும் தந்திரம் ஆகும்.

வடயிந்தியாவில் இது நன்றாக வேலை செய்தது.
தெற்கே அதுவும் தமிழரிடம் இது வேலை செய்யவில்லை.

தந்தை செல்வா(கிறித்தவர்) காலத்திலும் இசுலாமியர் தனியாகப் போராடவில்லை.
தமிழரோடு தமிழராகத்தான் போராடினர்.
இசுலாமியப் பகுதிகளில் தந்தை செல்வாவின் கட்சி வாக்குகளைப் பெற்றது.

"இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்" என்ற கட்சி மிகவும் பிற்பாடு 1981ல் தான் தொடங்கப்பட்டது.
அதுவும்கூட பரவலான ஆதரவைப் பெறமுடியவில்லை
(இதைத் தொடங்கிய அஸ்ரப் 2000ம் ஆண்டு சிறிலங்காவால் மர்மமான முறையில் வான்'விபத்தில்' கொல்லப்பட்டார்).

புலிகள் தலையெடுத்ததும் அதுவரை 'முஸ்லீம்' என்று ஏடுகளில் குறிப்பிடப்பட்ட பெயரைத் திருத்தி 'இசுலாமியத் தமிழர்' என்றே குறிப்பிடத் தொடங்கினர்.

இவ்வளவு நெருக்கமாக இருந்த புலிகள்-இசுலாமியர் உறவு எப்படி சரிந்தது?

புலிகளையும் இசுலாமியரையும் எதிரிகளாக சித்தரிப்பவர்கள் இரண்டு முக்கிய சம்பவங்களைக் கூறுகிறார்கள்.
ஒன்று யாழ் முஸ்லீம்கள் வெளியேற்றம்.
மற்றொன்று காத்தான்குடி படுகொலை.

இவற்றை கூர்ந்து நோக்குவோம்.
புலிகள்-இசுலாமியர் ஒற்றுமையைக் கெடுக்க நினைத்த சிங்கள அரசு சில பொறுக்கி்களைத் தேர்ந்தெடுத்து,
அதில் இசுலாமிய பொறுக்கிகளை 'ஊர்க் காவல் படை' என்ற பெயரில் உருவாக்கி ஆயுதம் கொடுத்து சைவ,கிறித்துவ தமிழர்களைத் தாக்கச் சொன்னது.
இதே பொறுக்கிகளில் இசுலாமியர் அல்லாதோரை அப்பாவி இசுலாமிய மக்களைத் தாக்கச்சொன்னது.

இசுலாமியர் மீதும் ஏனைய தமிழர்மீதும்
ஒருவர் மீது ஒருவர் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்கள் பட்டியல் நீளமானது.

சிங்கள ஊடகங்கள் இசுலாமியர் தமிழரைத் தாக்குவதாகவும்
பதிலுக்கு புலிகள் இசுலாமியரைத் தாக்குவதாகவும் செய்திகளைப் பரப்பின.

இதன் தொடர்ச்சியாக 1990ல்  அம்பாறையில் கலவரம் மூண்டது.
சிங்கள அரசின் ஆதரவுடன் இசுலாமியரல்லாத தமிழர்கள் மீது பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டு பலர் விரட்டியடிக்கப்பட்டனர்.
இசுலாமியர் மீதும் தாக்குதல் நடந்தது.
யாழ்ப்பாணத்திலும் கலவரம் மூளும் சூழல் உருவாகிறது.

இந்த நேரத்தில்தான் புலிகள் தவறான முடிவொன்றை எடுக்கின்றனர்.
அதாவது குறைந்த அளவில் இருக்கும் இசுலாமியரை அங்கே இருந்து வெளியேற்றி சூழ்நிலை சரியானதும் திரும்ப அழைத்துக்கொள்ளலாம் என்று தமது வரலாற்றுப் பிழையான முடிவை தலைவர் எடுக்கிறார்.
(தலைவர் பிற்காலத்தில் இதற்காக வருத்தமும் தெரிவித்துள்ளார்).

கலவரம் வரும் என்று அவசர அவசரமாக இசுலாமியர்கள் பொருட்கள் எதையும் எடுக்கவிடாமல் ஆங்காங்கே கூட்டப்பட்டு உடனடியாக வெளியேற்றப்படுகிறார்கள்.

வரலாற்றுப் பிழைகள் எல்லா தலைவர்களின் வரலாற்றிலும் உண்டு.

ஐந்து வருடம் கழித்து 1995ல் யாழ்ப்பாணத்தின் அத்தனை தமிழர்களையும் தலைவர் வெளியேற்றினார்.

இதைப் போன்ற ஒரு முடிவுதான் யாழ் இசுலாமிய வெளியேற்றமும்.
ஆனால், இது தவறான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

(இந்த நிலையில்தான் தமிழகத்தில் அப்துல் ரவூப் என்ற தமிழ்இசுலாமியர் யாழ் அகதிகளை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று முதன்முதலாக ஈழத்திற்காகத் தீக்குளிக்கிறார்)

யாழ் இசுலாமியரை திரும்ப அழைத்துவர புலிகள் அளித்திருந்த வாக்குறுதி இந்த யாழ் வெளியேற்றத்தால் நிறைவேறாமல் போனது.

இரண்டாவது காத்தான்குடி படுகொலை.
காத்தான்குடி பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அப்பால் சிங்கள ராணுவ முகாமின் பாதுகாப்புடன் முழுக்க முழுக்க இலங்கை அரசின் பாதுகாப்பில் இருந்த பகுதி.
இங்கே மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த அப்பாவி மக்களை புலிகள் சீருடை அணிந்த ஒரு குழு ஆயுதங்களுடன் வந்து கண்மூடித்தனமாக சுட்டு மக்களைக்கொன்றது மட்டுமல்லாமல் ஒருவர்கூட பிடிபடாமல் தப்பிவிட்டனர்.

புலிகள் மீது பழிபோட்டது சிங்கள அரசு.
புலிகள் மறுத்துவிட்டனர்.
புலிகள் சிங்கள மக்களையே கூட இவ்வாறு தாக்கியதில்லை.
இது அரசாங்கம் திட்டமிட்டு நடத்திய படுகொலை.
(முதல் பள்ளிவாசல் படுகொலையானது 1976ல் புத்தளம் வணிக சாலையை இலங்கை அரசு சிங்களப் பகுதிவழியே திருப்பியபோது
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க பொத்துவில் பள்ளிவாசலில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடந்ததது.
சிங்கள போலீஸ் ஒரு முஸ்லீம் ஏ.எஸ்.பி தலைமையில் 9பேரைக் கொன்றுபோட்டது)

மேற்கண்ட இரண்டும் தமிழ்இசுலாமியரை புலிகளுக்கு எதிராகத் திருப்ப சிங்கள அரசு செய்த திட்டமிட்ட சதி ஆகும்.

புலிகளுக்கு கிடைத்த இசுலாமிய ஆதரவானது குறைந்ததே ஒழிய
சிங்கள அரசின் திட்டம் முழுமையாக நிறைவேறவில்லை.
வடக்கு-கிழக்கு இசுலாமியர் தங்கள் ஆதரவை புலிகளுக்கு தொடர்ந்து வழங்கினர்.
(புல்மொட்டை என்ற இசுலாமிய சிற்றூர் புலிகளுக்கு அதிகமான போராளிகளைக் கொடுத்துள்ளது).

சில முஸ்லீம் தலைவர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு சிங்கள அரசு அவர்களுக்கு சலுகைகள் வழங்கி புலிகளை விமர்சிக்கவைத்து
அதன்மூலம் ஒட்டுமொத்த இசுலாமியரும் புலிகளை வெறுப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

இலங்கை முழுவதும் வாழும் தமிழ்இசுலாமியர்கள் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
கல்வியறிவும் மிகவும் குறைவு.
இலங்கை அரசோ அல்லது அதோடு ஒட்டிக்கொண்டு பிழைக்கும் இசுலாமிய தலைவர்களோ அம்மக்களுக்கு யாதொரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
சில சலுகைகளை அளித்து புலிகளுக்கு எதிராக அவர்களை பயன்படுத்தவே நினைக்கிறார்கள்.

புலிகளின் போராட்டமானது இசுலாமியநாடான வங்கதேச விடுதலையை முன்மாதிரியாகக் கொண்டது.
புலிகள் "பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம்" (லெபனான் நாட்டில்) பயிற்சி கூட பெற்றுள்ளனர்.
இசுலாமியர்கள் மீது வெறுப்பைக்காட்ட அவர்களுக்கு எந்த காரணமும் இல்லை.

புலிகள் நடத்திய முதல் போரில் முதல் களப்பலி ஜுனைத்தின் என்ற தமிழ்இசுலாமியர்தான்.

ஜின்னா, அக்பர், பசீர், இம்ரான், அன்சார், ரகுமான் போன்ற மூத்த போராளிகள் பலர் இருந்தனர்.

நியாஸ், டானியேல், மஜித் போன்ற எத்தனையோ இசுலாமிய மாவீரர்கள் புலிகளாக மரித்துள்ளனர்.

இம்ரான் பாண்டியன் என்ற படையணி கூட இருந்தது.

பல இசுலாமியரல்லாத போராளிகளுக்கு கடாபி, அக்பர், சல்மான், அப்துல்லா போன்ற இசுலாமியப் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

இசுலாமியப் போராளிகளுக்கு இசுலாம் சாராத பெயர்கள் தரப்பட்டிருந்தன.
(1987ல் குப்பி கடித்து இறந்த 12 புலிகளில்
கேணல் அப்துல்லாவின் உண்மையான பெயர் நகுலராசா.
கேப்டன் ரகுவப்பாவின் உண்மையான பெயர் ரகுமான்).

இருந்தாலும் இது குறைவுதான்.
அரசியலிலும் ஆயுதப்போராட்டத்திலும் இசுலாமியத் தமிழர்கள் முழுமையாக இறங்காததே இதற்குக் காரணம்.

2009 ஈழப் படுகொலைக்குப் பிறகு நிலை முற்றிலும் மாறிவிட்டது.
ஈழத்தில் வாழும் இசுலாமியர்களில் புலிகளை எதிர்ப்போரும் புலிகளை ஆதரிப்போரும் சரிசமமாக உண்டு.
ஆனால் தமிழுணர்வு இல்லாத தமிழ்இசுலாமியரோ
சிங்களரை விரும்பும் தமிழ்இசுலாமியரோ இல்லை.

தமிழகத்தில் புலிகளை வெறுக்கும் தமிழ்இசுலாமியர் கிடையவே கிடையாது.
தமிழகத்தில் முதன்முதலாக ஈழ ஆதரவு கூட்டத்தை சென்னை சீரணி அரங்கில் நடத்தியவர் ஒரு இசுலாமியர்தான்.

தமிழரை சாதியாக மதமாக பிளவுபடுத்தும் அரசியல் என்றும் வெற்றிபெற்றதில்லை.
சில பிழைப்புவாதிகள் தங்கள் காலத்தை ஓட்டத்தான் இதைச் செய்கின்றனர்.

இசுலாமிய தமிழ்ச் சிறுமி அப்பாவி ரிசானாவை நடுவீதியில் தலையை வெட்டிக் கொன்ற சவுதி அரேபிய மக்களுக்கு இல்லாத இசுலாமிய உணர்வு இங்கே தீவிரமாக வலியுறுத்தப்படுவதில் நியாயமில்லை.

தமிழ்இசுலாமியரை தமிழரிடமிருந்து தனிமைப் படுத்தி தங்கள் பிழைப்புக்கு வழிதேடும் சில தமிழக இசுலாமிய மதவாதிகள் இதைப் புரிந்துகொண்டால் அவர்களுக்கு நல்லது.

No comments:

Post a Comment