Friday 26 July 2019

தெலுங்கரின் எமன்

தெலுங்கரின் எமன்

இராசராசனுக்கு "தெலுங்கரின் எமன்" என்று பொருள்படும் வகையில் "தெலுங்கு குல காலன்" என்கிற பட்டம் இருந்ததா?!

ஆம்!

புதுக்கோட்டை க்கு வடக்கே உள்ளது நார்த்தமலை.
  இங்குள்ள திருமயக் கடம்பர் கோயிலுக்கு வடபுறத்துப் பாதையில் உள்ள கல்வெட்டு குலோத்துங்க சோழனின் 27 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது.
இதில்,
'இரட்டைபாடி கொண்ட சோழவள நாட்டுத் தெலுங்க குலகாலபுரத்துப் பள்ளிவயல்' என்று குறிக்கப்பட்டுள்ளது.

  கி.பி. 1431 ஆம் ஆண்டைச் சேர்ந்த இன்னொரு கல்வெட்டும் உண்டு.
இதிலும்,
"கடலடையா திலங்கைகொண்ட சோழவளநாட்டு நகரம் தெலிங்ககுலகால புரமான குலோத்துங்க சோழ பட்டணம்" குறிக்கப்பட்டுள்ளது.

சோழர் ஆட்சிக்காலத்தில் நிலப்பரப்பு 'மாவட்டம்' என்பதைப் போன்று 'வளநாடு' என்ற பெயரால் வகை பிரிக்கப்பட்டு ஆளப்பட்டன.
அப்படியான "இரட்டைபாடி கொண்ட சோழவளநாடு" எனும் மாவட்டத்தில் "தெலுங்க குல கால புரம்" எனும் ஊர் இருந்துள்ளது.
இதுவே இன்றைய நார்த்தமலை.

இது குலோத்துங்கன் காலத்தில் "குலோத்துங்க சோழ பட்டணம்" என்று பெயர்மாற்றப்பட்டுள்ளது.

(சான்று நூல்: சமணமும் தமிழும்
நூலாசிரியர்: மயிலை.சீனி. வேங்கடசாமி )

தந்தை வழியில் சாளுக்கியனான குலோத்துங்கன்,
தெலுங்கரை சோழர் அழித்ததை விரும்பவில்லை போலும்!

முதலாம் கல்வெட்டில் "இரட்டைபாடி கொண்ட" என்று உள்ளது.
இப்பட்டம் இராசராச சோழனுக்கு உரியதாகும்.

இரண்டாம் கல்வெட்டில் "கடலடையாது இலங்கை கொண்ட" என்றும் உள்ளது.
இது இராசராசன் கடல் தாண்டாமல் தன் மகனை அனுப்பி ஈழத்தைக் கைப்பற்றியதைக் குறிப்பிடுகிறது.

ஆக இந்த "தெலுங்ககுல கால புரம்"  இராசராசன் புதியதாக நிறுவிய நகரமாக இருக்கலாம்.

No comments:

Post a Comment