Thursday 24 January 2019

இமயத்தைத் தோற்கடிக்கும் திறனுடையோர்

இமயத்தைத் தோற்கடிக்கும் திறனுடையோர்

சிங்களம் புட்பகம் சாவக மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு

விண்ணை யிடிக்கும் தலையிமயம் – எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு

சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு

செந்தமிழ் நாடெனும் போதினிலே– இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே

- பாரதியார்

No comments:

Post a Comment