Showing posts with label ஏஜன்ட். Show all posts
Showing posts with label ஏஜன்ட். Show all posts

Monday, 4 September 2017

இங்கு திருமா மட்டுமே தமிழரல்ல!

எனக்கு தோன்றுகிறது....

திருமாவளவனின் ஏதோவொரு அசிங்கமான ரகசியம் திமுக கைவசம் உள்ளது.

இல்லையென்றால் எந்த ஒரு மனிதனும் திருமா போல கணக்கில்லாத அவமானத்தையும் அசிங்கத்தையும் கேவலத்தையும் சகித்துக்கொண்டு அடிமையாகவே காலில் விழுந்து கிடக்கமாட்டான்,
பதிலுக்கு எத்தனை பெரிய பணமோ பதவியோ கிடைப்பதாக இருந்தாலும் சரி.

ஆனால் திருமா செய்யும் தரகர் வேலைக்கு  பெரிதாக எதுவும் கிடைப்பதாகத் தெரியவில்லை.

தமிழ்தேசியம் பற்றிய புரிதல் இல்லாத ஒரு தமிழர் இப்படி ஒரு அடிமைச் சேவகம் செய்தால் கூட மனதை தேற்றிக்கொள்ளலாம்.

ஆனால் தமிழ்க்குடியில் பிறந்து தமிழ்தேசியம் பற்றி நல்ல புரிதலுள்ள ஒருவர் இவ்வாறு வந்தேறிகள் தூக்கியெறியும் எச்சிலுக்கு வாலாட்டும் நாயாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

திருமாவளவன் இந்த பிழைப்பு பிழைப்பதை விட பேசாமல் செத்துத்தொலையலாம்.

நான் எப்பொதும் ராஜபக்சவிடம் பல்லிளித்த திருமாவை ஆதரித்ததில்லை.
எதிர்க்கவே செய்கிறேன்.
ஆனாலும் சிலர் இனப்பற்றினால் அவர் மீது இன்னமும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

முத்துக்குமார் உயிரைக் கொடுத்து ஏற்படுத்திய எழுச்சியை தானே முன்னின்று ஊற்றிமூடியது போல
தற்போது தங்கை அனிதா மரணத்தால் ஏற்பட்ட உணர்ச்சி அலையையும் சத்தமில்லாமல் அவர் முடித்துவைத்ததைக் கண்கூடாகக் கண்டாயிற்று.

இனியும் யாராவது 'அவர் தமிழர்' என்ற இனப்பாசத்தினால் கண்மூடித்தனமாக ஆதரிப்பதாக இருந்தால்,
அந்த எண்ணத்தை விட்டுவிட்டு அவரை வேற்றினத்தவர் போல முற்றாக புறக்கணிக்க வேண்டும்.

தமிழர்கள் அதிலும் குறிப்பாக அவரைத் தாங்கிநிற்கும் பறையர்கள் வி.சி.க விலிருந்து விலகவேண்டும்.

இங்கு திருமா மட்டுமே தமிழரல்ல!