Monday 15 August 2022

தலைக்கு எட்டாயிரம் பிடுங்கி மோடி அளித்த சுதந்திரம்

தலைக்கு எட்டாயிரம் பிடுங்கி மோடி அளித்த சுதந்திரம் 

 கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக அரசு தள்ளுபடி செய்த வாராக் கடன் மட்டும் பத்து லட்சங்கோடி!
 கடந்த 2 ஆம் தேதி மத்திய நிதித் துறை இணையமைச்சர் பகவத் கே காரத் இதைத் தெரிவித்தார்.

 அதாவது இந்திய மக்கட்தொகை 125 கோடி என்றால் இந்த 10 லட்சம் கோடி  தலைக்கு 8,000 ரூபாய் வருகிறது.

 2022 இல் ஒரு குடிமகனின் சராசரி மாத வருமானமே 12,000 ரூபாய் தான்.
 
 ஆக உங்கள் ஒரு மாத சம்பளத்தில் முக்கால்வாசியை பிடுங்கி கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்துள்ளார் மோடி.
 இதன் மூலம் பெரும் லாபம் அடைந்த முக்கியமான பத்து பேர் (பார்க்க: படம்) குஜராத்தி அல்லது மார்வாடிகள்.
 
 விவசாயக் கடனோ, கல்விக் கடனோ, சிறுதொழில் கடனோ நயா பைசா தள்ளுபடி செய்யப்படவில்லை!

 மேலும் சாமானியனுக்கு பெட்ரோல், பால் பொருட்கள், உள்ளாடை என வரி போட்டு பிடுங்குகிறது பாஜக அரசு!

 ஓடி உழைத்து வரியெல்லாம் கட்டி சிறுக சிறுக சேர்த்து வங்கியில் போட்டால் அதை இப்படி தாரை வார்க்கிறது மத்திய அரசு!

 மோடி இதற்கெல்லாம் தீர்வாக முன்வைப்பது வீட்டில் தேசியக் கொடி ஏற்றி செல்பி போடுவதை மட்டுமே! 
 
 சுதந்திர தினம் முடிந்துவிட்டது!

இனி நீங்கள் அடிமை என்பதை உணருங்கள்! 

யாருக்கு அடிமையாக இருக்கிறோம் என்பதையும் புரித்துகொள்ளுங்கள்!

No comments:

Post a Comment