Friday 12 August 2022

கட்டபொம்மன் வாரிசுகளின் தொடரும் அடாவடி

கட்டபொம்மன் வாரிசுகளின் தொடரும் அடாவடி

 கொள்ளைக்காரன் கெட்டிபொம்மு பற்றி ஏற்கனவே தமிழ்வாணன் அவர்களின் நூல் துணைகொண்டு சான்றுகளுடன் எழுதிவிட்டோம். முடிந்துபோனதை பேசி என்னவாகப் போகிறது என்போருக்கு இன்று வரை கூட பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மு வகையறா அடாவடி தொடர்கிறது என்பது தெரியுமா?!

 பாஞ்சாலங்குறிச்சியின் இப்போதைய நிலையை அலசுவோம்.
திராவிட அரசுகள் தெலுங்கு பாசத்துடன் எப்போதுமே நடந்துகொண்டு வருவது இந்த விடயத்திலும் நிகழ்ந்திருக்கிறது.

 அண்ணாதுரை முதல்வரானதும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை இருந்த இடத்தை தமிழக அரசின் சுற்றுலா (!) தளமாக அறிவித்தார்.
 தெலுங்கர் பந்துலு 1959 இல் சிவாஜிகணேசனை வைத்து கட்டபொம்மன் பற்றி திரைப்படம் எடுத்து (ஆங்கிலேயரிடம் 'கள்ளர் தன்னரசு நாடுகள் கூட்டமைப்பு' பேசிய வீரவசனங்களை பேசவைத்து) தமிழக மக்களை முட்டாளாக்கினார்.
 கருணாநிதி இடிந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை மீண்டும் கட்டிக்கொடுத்து அகழ்வாராய்ச்சி (!) நடத்தும் தளமாக அறிவித்தார்.
 அப்போதைய கட்டபொம்மன் வாரிசுக்கு மாத உதவித் தொகை கொடுத்தார்.
அத்தோடு நில்லாமல் கட்டபொம்மன் வம்சாவளியினர் மற்றும் அவர்களுடன் கடந்த ஆறு தலைமுறைகளாக பெண்கொடுத்து பெண்ணெடுத்த 202 குடும்பங்களை தென் மாவட்டங்கள் அனைத்திலும் தேடி திரட்டி அழைத்துவந்து பாஞ்சாலங்குறிச்சியில் தொகுப்பு வீடு கட்டிக்கொடுத்தார். 
 இது மட்டுமில்லை ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 3 ஏக்கர் என 606 ஏக்கர் நிலத்தையும் தாரைவார்த்துக் கொடுத்தார் (இதுபோக கயத்தாறு பகுதியில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் என்று 47 சென்ட் நிலம் கட்டபொம்மனின் சிலையுடன் அரசு பொறுப்பில் இருக்கிறது).

 இந்தியாவில் எந்த அரசும் எந்த தியாகியின் வாரிசுக்கும் இவ்வளவு சிறப்பு செய்திருப்பார்களா என்பது சந்தேகமே!

 வேறு எந்த சுதந்திரப் போராட்டக்கார வாரிசுகளுக்கும் எதுவும் செய்யவில்லை கருணாநிதி! 
  
 ஒப்பீட்டிற்கு குமரியை மீட்க போராடிய தியாகிகளை சாகும்வரை அலையவிட்டு நயா பைசா பென்சன் கொடுக்கவில்லை கருணாநிதி!

 பிற்பாடு தூத்துக்குடி தனியாக பிரிந்தபோது எம்.ஜி.ஆர் திருநெல்வேலி மாவட்டத்துக்கே கட்டபொம்மன் பெயர் வைத்தார். இத்தனைக்கும் பாஞ்சாலங்குறிச்சி தூத்துக்குடியில் இருக்கிறது.
அது மட்டுமில்லை ஒன்றேகால் கோடியில் 2015 இல் ஜெயலலிதா மணிமண்டபம் கட்டிக் கொடுத்தார்.

 ஆனால் கருணாநிதியின் இனப்பாசத்திற்கு ஈடு இணை இல்லை.
பூலித்தேவர் போன்ற தமிழ் மறவர் பாளையங்களின் வீர வரலாறுகளை மறைக்கவும் கட்டபொம்மன் போன்ற தெலுங்கு பாளையக்காரர்களின் கோழைத்தனமான வரலாறுகள் வெளிப்படாமல் இருக்கவும் எழும்பூர் ஆவணக் காப்பகத்தையே எரித்தவர் அல்லவா கருணாநிதி?!

 அதாவது அரசாங்கத்திடம் உதவித்தொகை கேட்கும் நிலையில் இருந்த கட்டபொம்மன் வாரிசுகள் கருணாநிதியின் கருணையால் ஒரே ஆண்டில் அப்பகுதி ஆதிக்க சக்தியாக உருவெடுத்தனர்.
 சொத்து, நிலவுடைமை, எண்ணிக்கை என எல்லாம் பெருகிவிட்ட பிறகு கம்பளத்தார் பாஞ்சாலங்குறிச்சியை தமது தனி சாதியத் தலைநகரம் போன்று ஆக்கிவிட்டனர்.

 இந்த கூட்டம் பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் ஜக்கம்மா அல்லது ஜக்கதேவி கோவிலை பெரிதாகக் கட்டி ஆண்டுக்கொரு முறை மொத்தமாகத் திரண்டு அடாவடி செய்துவந்தது.

 இந்த பகுதியில் பள்ளர் பெருமக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர்.
 அவர்களை வம்புக்கு இழுக்கவே அவர்களின் முக்கிய தெய்வமான கோட்டை கருப்பசாமி கோவில் கொடை நடக்கும் நாளிலேயே தங்களது கொடை விழாவையும் மாற்றிக்கொண்டு 1990 களின் தொடக்கத்தில் மோதலைத் தொடங்கினர். 1995 க்குப் பிறகு ஆயுதங்களுடன் ஒன்றுகூடி நேரடியாகவே மோதத் தொடங்கினர். 

 எப்போதும் தமிழர்களுக்கு எதிராகவே இயங்கும் காவல்துறை பள்ளர் பெருமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பதும் தெலுங்கர் மனம்போன போக்கில் விழா நடத்தவிடுவதும் வழக்கமானது.
 கோட்டைக் கருப்பசாமி கோவில் விழா நேரத்தை குறைத்ததுடன் கோவிலை விரிவாக்க விடாமல் சுற்றுப்பகுதி நிலத்தை அகழ்வாராய்ச்சி என்கிற பெயரில் அரசின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

 தேவர் குருபூசை அளவுக்கு ஆர்ப்பாட்டமாக நடக்கும் இவ்விழாவில் கம்பளத்து சாதி வெறியர்கள் பள்ளர்களை வம்புக்கு இழுப்பதும் அது மோதலில் முடிவதும் இறுதியில் பள்ளர் மீதே வழக்கு பாய்வதுமாக நிலைமை தொடர்ந்தது.

 இறுதியில் 2015 க்குப் பிறகு கோட்டைக் கருப்பசாமி கொடை விழா தடை செய்யப்பட்டது.

 ஆம்! பாஞ்சாலங்குறிச்சி இன்னொரு குறிஞ்சாக்குளம் ஆனது.

இந்த பிரச்சனை தொடர்பாக "பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கருப்பசாமி" எனும் நூல் வெளிவந்துள்ளது.

 பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் பள்ளர்களுக்குத் துணை செய்யாதது மறவர், நாடார் போன்ற சக தமிழர் குடிகள்!

 அது மட்டுமல்ல பள்ளர்கள் மறவர்களுடனோ நாடார்களுடனோ மோதும்போது வரிந்துகட்டிக் கொண்டு வரும் மள்ளர் இயக்கங்களும் கட்சிகளும் கூட இந்த பள்ளர் நாயக்கர் மோதல் விடயத்தில் மௌனம் காக்கின்றன.

 திருச்செந்தூர் முருகன் கோவிலை உரிமை கோருவது, சென்னையிலும் டெல்லியிலும் கட்டபொம்மன் சிலை கோருவது என்று ஆரம்பித்து தற்போது "நாம் தெலுங்கர் கட்சி" என்று தொடங்கி 'தமிழகத்தில் பாதி மக்கட்தொகை தெலுங்கர்' என்று பேசியதும் இந்த கூட்டம்தான். 

 பள்ளர் பெருமக்களுடன் தமிழ்க் குடிகள் ஓரணியில் திரள வேண்டிய நேரம் இது! திரள வேண்டிய இடம் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கருப்பசாமி கோவில்! 

 [பின்குறிப்பு:- பள்ளர் எனும் பெருமைமிகு இயற்பெயர் இருக்க தேவேந்திரர், மள்ளர், வேளாளர் போன்ற மாற்றுப் பெயர்கள் தேவையில்லை என்பது என் கருத்து]

 
 

 

 

No comments:

Post a Comment