Wednesday 26 May 2021

கட்டாயத் தீவிரவாதம்

கட்டாயத் தீவிரவாதம்

இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் புலிகள் தீவிரவாதிகள் என்றுதான் இந்தி திரைப்படங்கள் காட்டும்.
இவர்களுக்கு நாம் ஆயுதம் தூக்கியே ஆகவேண்டும். அப்போதுதான் ஜனநாயக வழியில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லாமல் தீவிரவாத முத்திரை குத்தி ஒரேடியாக கொன்றொழித்துவிட்டு அடுத்தடுத்த இனங்களைத் தின்று செரிக்கும் வேலையைப் பார்க்க முடியும்.
அதற்குத்தான் நமது எல்லா உரிமைகளையும் பறித்து அளவுக்கதிகமாகச் சுரண்டி நம் பொறுமையைச் சோதிக்கிறார்கள்.

நாமும் விட்டோமா என்றால் இல்லை. செத்தாலும் ஆயுதம் தூக்கமாட்டோம் மிதிக்கும் கால்களுக்கு முத்தம்தான் கொடுப்போம் என்று எருமைமாட்டுப் பொறுமையுடன் அகிம்சை பேசிக்கொண்டு இருக்கிறோம்.

தற்போதைய பிரச்சனைக்கு வருவோம். இந்திய உளவுத்துறை இதுவரை உருப்படியாக எதையுமே கிழித்ததில்லை. அந்த தாழ்வு மனப்பான்மையைப் போக்க திரையில் வீரசாகசம் புரிகிறார்கள். அப்படியான ஒரு கற்பனை காவியம்தான் பேமிலி மேன்.
போலியான நாட்டுக்கு ஒரு கற்பனையான கதாநாயகன்தானே வாய்ப்பான்!
உலக ஆதிக்கத்தை இழந்த பிரிட்டன் உலகத்தையே காப்பாற்றும் ஜேம்ஸ் பாண்ட்டை உருவாக்கியது போல
வியட்நாமிடம் மண்ணைக் கவ்விய அமெரிக்கா அவமானத்தை மறக்க ரேம்போ படங்களை எடுத்துத் தள்ளியதுபோல
ஹிந்தியர்கள் திரையில் பாகிஸ்தானைப் பந்தாடிக் கொண்டிருந்தனர்.
ராஜீவ் காந்தியின் ஈழம் மீதான நடவடிக்கை படுதோல்வியில் முடிந்து ஹிந்தியா அடைந்த அவமானம் அதன் வரலாற்றில் மறைக்க முடியாத கறை. 2009 இல் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்து வஞ்சம் தீர்த்த பிறகும் ஆற்றமுடியாமல் அலைகிறார்கள். தற்போது இலங்கைக்கு எதிரான (உப்புசப்பில்லாத) தீர்மானம் ஐநாவில் நிறைவேறியிருப்பதும் ராஜீவ் கொலைவழக்கில் சிறையில் இருந்து விடுதலை செய்ய (வெளிப்பார்வைக்கு) மாநில அரசு முயல்வதும் ஹிந்தியர்களுக்கு ஆத்திரத்தை மூட்டியிருக்கிறது.

போதாக்குறைக்கு கொரோனா பேரிடரில் பல்லிளித்துவிட்ட ஹிந்திய அரச கட்டமைப்புக்கு மூவர்ண மேற்பூச்சு பூசியாகவேண்டிய கட்டாயம்.
எனவே ஹிந்தியர்களை திசைமாற்ற அவர்களின் பொதுவான எதிரியான தமிழர்களை சீண்டுகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஓரளவு பலனும் கிடைத்துள்ளது.

ஆனால் உண்மையில் ஹிந்தியருக்கு அறிவேயில்லை என்றுதான் கூறவேண்டும்.
ஏன் வலிக்க வலிக்க பெரிய பெரிய பொன்முட்டைகளை இடும் வாத்தை அறுக்க நினைக்கிறார்கள் என்று புரியவில்லை.

தமிழர்கள்தான் அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்தது போல ஹிந்தியாவின் சுரண்டலுக்கு ஒத்துழைக்கிறார்களே!

பிறகென்னன அதே வழியில் போய் அவர்களை மெல்ல நிதானமாகத் தின்று செரிக்க வேண்டியதுதானே?!

தமிழர்களை ஆயுதம் தூக்க ஊக்கப்படுத்துவது ஹிந்தியாவுக்கு நல்லதல்லவே!

மிருகக்காட்சி சாலையில் சிவனே என்று இருக்கும் ஒரு காட்டுப் புலியை வைத்து நன்றாக சம்பாதிப்பவன் அதைக் காட்டில் கொண்டுவிட்டு அதன்பிறகு தேடி வேட்டையாடிக் கொன்று வீரத்தை நிரூபிப்பேன் என்று முடிவெடுப்பது போல இருக்கிறது.

இப்போது நாங்கள் ஆயுதம் தூக்கினால் ஹிந்தியா தாங்காது!
அதிலும் தீவிரவாதிகளாக மாறிவிட்டால் உலகமே தாங்காது!

ஆகவே ஹிந்தியர்களே! படம் எடுப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! நிஜத்தில் நீங்கள் செய்வதையே தொடர்ந்து செய்யுங்கள் கட்டாயம் நாங்கள் தோற்றுவிடுவோம்!

இன்னும் இருபது ஆண்டுகளில் தொகுதிக்கு ஒரு ஊர், ஊருக்கு ஒரு பகுதி, பகுதிக்கு ஒரு தெரு, தெருவுக்கு ஒரு வீடு, வீட்டுக்கு ஒரு நபர் தமிழரல்லாதவராக இருப்பார்.

அப்போது நாங்கள் ஆயுதம் தூக்கித்தான் ஆகவேண்டும்! அப்போது உங்கள் அழித்தொழிக்கும் திட்டத்தை தொடங்கினால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்!

இப்போதே சீண்டி வெண்ணை திரண்டுவரும் நேரத்தில் தாழியை ஏன் உடைக்கிறீர்கள்?!

இப்போது நாங்கள் ஆயுதம் தூக்கினால் உங்களுக்குத் தோல்வியும் எங்களுக்கு விடுதலையும் உறுதி என்பது உங்கள் மரமண்டைக்குத் ஏறவில்லையா?

No comments:

Post a Comment