Showing posts with label வேலுநாச்சியார். Show all posts
Showing posts with label வேலுநாச்சியார். Show all posts

Saturday, 29 April 2017

மருதுபாண்டியர் பயன்படுத்திய ராக்கெட் தொழில்நுட்பம்

வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலி சும்மா உதவவில்லை.

வேலுநாச்சியாரிடம் ராக்கெட் தொழில்நுட்பத்தை வாங்கிக்கொண்டுதான் படை உதவி செய்தான்.

வளரி தொழில்நுட்பத்தையும் வாங்கியதாகத் தெரிகிறது.

மீ  மனோகரனின் மருது பாண்டியர்கள் நூலில் இது பற்றி உள்ளதூ

திப்புவுக்கு மருது பாண்டியர் வேலு நாச்சியார் தலைமையில்   தூத்துக்குடியை சேர்ந்த ஜாதி தலைவர் இலான் காபெரியல் உதவியுடன் ராக்கெட் பயன்படுத்தியதற்கு இப்பொழுது சான்றுகள் அதிகம் வந்து கொண்டு இருக்கின்றன

வேலு நாச்சியார் ஹைதர் திப்புவை திண்டுகல்லில் சந்தித்த பின்பே இந்த தொழில் நுட்பம் திப்பு சுல்தானால் பயன் படுத்த பட்டது

(மருதுபாண்டியருடனான திருப்பத்தூர் போரில் ஆங்கிலேயர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,

அதில் கர்னல் இன்னிங்ஸ் உயிர்தப்பியதாகவும் குறிப்பு உள்ளது.
military consulations 285 (18-6-1801) pp. 4559-61
military consulations 286 (4-8-1801) pp. 5348-49

நூல்: மாவீரர் மருதுபாண்டியர்
ஆசிரியர்: எஸ்.எம்.கமால்)

Friday, 28 April 2017

முத்துவடுகநாதர் வரலாறு கூறும் பாடம் என்ன?

முத்துவடுகநாதர் வரலாறு கூறும் பாடம் என்ன?

ஆங்கிலேயர் தமிழகத்தில் கால்பதித்துவிட்டிருந்தனர்.
அவர்களுக்கு இடம் கொடுத்தது துருக்கிய-ஈரானிய கலப்பு இனமான முகலாயர்களும் அவர்களுக்கு கீழிருந்த ஆற்காடு நவாபுகளும்.

மதுரை வரை அவர்கள் கைக்குப் போய்விட்டது.

1752ல் மதுரை மன்னர் விஜயகுமார நாயக்கர் (தெலுங்கர்) மீது கேப்டன் கோப் (ஆங்கிலேயர்) போர் தொடுத்து மதுரையை  கைப்பற்றினார்.

இதை அறிந்த முத்துவடுகநாதர் (தமிழர்) தனது படையுடன் சென்று கேப்டன் கோப்பையும் அவர் படைகளையும் தோற்கடித்து மதுரையைக் கைப்பற்றினார்.

நியாயப்படி மதுரையை மீண்டும் விசயகுமார நாயக்கரிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பினார்.

ஆனால் அதன்பிறகு நடந்தது என்ன?

முத்துவடுகநாதர் காளையர் கோவிலுக்கு சென்ற நேரம்,
அவரது தளபதி ஒருவனை கைக்குள் போட்டுக்கொண்டு முத்துவடுகநாதரின் பாளையமான இராமநாதபுரம் பாளையத்தின் மீது போர்தொடுத்துக் கைப்பற்றினர் ஆங்கிலேயர்.

இப்போது அந்த நன்றிகெட்ட தெலுங்கு மன்னன் முத்துவடுகநாதருக்கு உதவ வரவில்லை.

தமிழர்களான மறவர்கள்தான் உதவிக்கு வந்தனர்.
மறவர்களின் படைகளுடன் வந்த முத்துவடுகநாதர் மீண்டும் ஆங்கிலேயரைத் தோற்கடித்து தனது ஆட்சியை மீட்டார்.

பிறகு ஆங்கிலேயர் இனி இராமநாதபுரம் மீது போர்தொடுக்கமாட்டோம் என்று சமாதான ஒப்பந்தம் போட்டனர்.

முத்து வடுகநாதர் அதை நம்பி பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் (போரில் வீழ்ந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த) காளையார் கோவில் போயிருந்த நேரம் ஆங்கிலேயருடன் கூட்டு அமைத்திருந்த ஆற்காடு நவாப் (துருக்கிய- ஈரானிய கலப்பு இனத்தவர்) அனுப்பிய படை கோயிலை திடீரென்று சூழ்ந்து அவரைக் கொன்றனர்.

அதேநேரத்தில் ஆங்கிலேயர் இராமநாதபரத்தில் ஆங்கிலப்படை நுழைந்து அப்பாளையத்தைக் கைப்பற்றியது.

இதிலிருந்து நமக்கு என்ன பாடம் கிடைக்கிறது?