Sunday, 7 September 2025

சசிகலா செங்கோட்டையனை புறக்கணித்தாரா

சசிகலா செங்கோட்டையனை புறக்கணித்தாரா
 இதோ விளக்கம்!
சசிகலா சரியாகவே நடந்துள்ளார்!
நியாயப்படி அவர் கட்டுப்பாட்டில் பலமாக இன்று இருந்திருக்க வேண்டிய அதிமுக அப்போது பாஜக வின் தூண்டுதலால் எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தால் ஜனநாயகப் படுகொலை நடந்து விதிகளெல்லாம் மீறப்பட்டு சசிகலாவிடம் இருந்து பிடுங்கப்பட்டு இந்த நிலையில் இருக்கிறது! 
 அன்று வளர்மதி பாடநூல் கழகத் தலைவராக நியமித்தார், தளவாய் சுந்தரம் அரசின் சிறப்பு பிரதிநியாக நியமித்தார். இருவருமே சசிகலாவின் சமூகத்தவர்கள் கிடையாது.
 அன்று முதல்வரை நியமிக்கும் அதிகாரம் இருந்த போதும் 4 சீனியர் முக்குலத்து அமைச்சர்கள் இருந்தபோதும் மூப்பு அடிப்படையில் சீனியரான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா. 
 எடப்பாடியை விட சீனியரான நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம் ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்து இருந்தனர்.
 அன்று ஓபிஎஸ் தர்மயுத்தம் என்று அவரே வெளியே போய்விட்டார்.
 செங்கோட்டையனை 2016 இல் ஜெயலலிதா வே அமைச்சராக நியமிக்கவில்லை! 
 அதனால் ஓ.பன்னீர்செல்வம் உடன் வெளியேறிய மாஃபா பாண்டியராஜன் வகித்த கல்வியமைச்சர் பதவியை செங்கோட்டையனுக்கு வழங்கினார். 
ஓபிஎஸ் வகித்த நிதியமைச்சர் பதவியை மீனவ சமுதயாத்தைச் சேர்ந்த ஜெயக்குமாருக்கு வழங்கினார்.
 இப்படி சசிகலா நியமித்த எவருமே முக்குலம் இல்லை! 
 இப்படி கட்சி விதிப்படி சமுதாய உணர்வில்லாமல் நியாயமாக நடந்துகொண்டார் சசிகலா!