Thursday, 18 September 2025

கச்சத்தீவு தாரைவார்ப்பு கருணாநிதி பங்கு

கச்சத்தீவு தாரைவார்ப்பு கருணாநிதி பங்கு

 புனித ஜார்ஜ் கோட்டையில் 19.06.1974 இல் நடந்த ஒரு சந்திப்பு பற்றிய ஆவணம் RTI மூலம் பெறப்பட்டுள்ளது.
 இது அன்றைய வெளியுறவுத்துறை செயலாளர் அளித்த அறிக்கை ஆகும்.
 அன்றைய தினம் வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, தலைமை செயலர் பி.சபாநாயகம், உள்துறை செயலர் எஸ்.பி.ஆன்ட்ரூஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 அப்போது முன்னுரையில் 1973 இலேயே அக்டோபர் 13 மற்றும் 19 தேதிகளில் டெல்லியில் இது தொடர்பாக ஏற்கனவே முதல்வரோடு நடந்த பேச்சுவார்த்தை பற்றி மீள நினைவு படுத்தினார் உள்துறை செயலர்.
 அதில் 1973 அக்டோபர் 13 தமிழ அரசிடம் பேசிய பிறகே 14 தேதி இலங்கையுடன் இந்திய அரசு பேசத் தொடங்கியது. அதன் பிறகு அக்டோபர் 19 தேதி கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றி முழுமையாக தமிழக அரசுக்கு விளக்கப்பட்டு நன்கு கவனிக்கவும் முழுமையாக விளக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
 அப்படி நினைவு கூர்ந்த பிறகு தற்போது ஒப்பந்தம் தொடர்பான தமிழக அரசின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்க இந்த கூட்டம் என்று கூறி பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை பிரதிநிதியாக இலங்கை இந்தியா இடைப்பட்ட பாக் நீரிணைப்பு சுமூகமாக பங்கு பிரிக்கப்பட ஒத்துழைக்குமாறு தமிழக முதல்வரைக் கேட்டுக்கொண்டு சந்திப்பை தொடங்கி வைத்தார். 
 இந்த ஒப்பந்த ஏற்பாட்டுக்கு தான் முழுமையாக உடன்படுவதாக முதலமைச்சர் கருணாநிதி உறுதியளிக்கிறார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக தன்னால் இதை வெளிப்படையாகச் செய்யமுடியாது என்றும் ஆனால் இது பெரிய பிரச்சனையாக மாறாமல் பார்த்துக் கொள்வேன் என்றும் உறுதியளிக்கிறார்.
 இதைப் பாராட்டிய வெளியுறவுத்துறை செயலர் மத்திய அரசுக்கு எதிராக இந்த பிரச்சனை திரும்பக்கூடாது என்று அறிவுறுத்தினார். இதை அறிக்கையாக மத்திய அரசுக்கு அளித்த ஆவணமே தற்போது வெளியிடப்பட்டது.

 அதாவது 1973 லிருந்தே மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்திவந்துள்ளது!
கருணாநிதியிடம் பேசிய பிறகே இலங்கையிடம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது!
  ஆனால் இதே கட்சிதான் மத்திய அரசை மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் கச்சத்தீவு கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டி வருகிறது.
  மத்திய அரசு 1974 இல் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த ஒப்பந்தமும் 1976 இல் மீன்பிடி உரிமைகள் பறிக்கப்பட்டதற்கும் கடந்த 20 ஆண்டுகளில் 6184 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் 1175 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கும் யார் காரணம் என்று இந்த ஆவணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்

 - தற்போதைய வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் அளித்த பேட்டியிலிருந்து 

Tuesday, 9 September 2025

திமுக.வில் பட்டியல் வகுப்பினருக்கு முக்கிய பதவி கிடையாதா

திமுக.வில் பட்டியல் வகுப்பினருக்கு முக்கிய பதவி கிடையாதா?’- 
அதிகார தீண்டாமையை கடைபிடிக்கும் அறிவாலயம்
By இரா.வினோத்


திமுகவின் 71 ஆண்டு கால வரலாற்றில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகள் இதுவரை ஒரு முறை கூட பட்டியல் வகுப்பினருக்கு வழங்கப்படவில்லை. தற்போது காலியாக இருந்த பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளில் ஒன்று ஆ.ராசாவுக்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. சமூக வலைதளங்களில் திமுகவினரால் கொண்டாடப்படும் ஆ.ராசா பட்டியல் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டு இருப்பது அக்கட்சியின் சமூக நீதி கொள்கையை கேள்வி எழுப்புகிறது.


சத்தியவாணி :-
கடந்த 1949-ல் திமுக.வை அண்ணா தொடங்கிய போது முன்னணி தலைவர்களாக இருந்தவர்களில் ஒருவர் சத்தியவாணி முத்து. பட்டியல் வகுப்பினரான அவர், கட்சிக்காக கர்ப்பிணியாக இருந்த போதும் சிறை கொட்டடியை அனுபவித்தவர். அதனால் கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராகவும், ஆட்சியில் அமைச்சராகவும் உயர்ந்தார். அண்ணாவுக்கு பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் புறக்கணிக்கப்பட்ட சத்தியவாணி முத்து, `தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகம்' என்ற தனிக்கட்சியை தொடங்கினார். பின்னர் அதிமுக.வில் இணைந்தார். அவருக்கு எம்ஜிஆர் மத்திய அமைச்சர் பதவி வழங்கினார்.


கடந்த 1959 சென்னை மாநாகராட்சி தேர்தலில்தான் திமுக.வுக்கு அரசியலில் முதல் வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியை பெற்று தந்தவர்கள் ஒருங்கிணைந்த சென்னையின் மாவட்ட செயலாளர்களாக இருந்த ஏ.கே.சாமியும், இளம்பரிதியும். இருவரும் பட்டியல் வகுப்பை சேர்ந்த செல்வாக்கான தலைவர்கள். இந்த வெற்றி தந்த தன்னம்பிக்கையிலே அண்ணா, `ரிப்பன் கோட்டையை கைப்பற்றி விட்டோம். இன்னும் சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஜார்ஜ் கோட்டையையும் கைப்பற்றுவோம்'' என்றார்.

பட்டியல் வகுப்பினர் திமுக.வை ஆதரித்ததால் 1980-களில் தமிழகம் முழுவதும் வெல்ல முடிந்த எம்ஜிஆரால் சென்னையில் மட்டும் அவரால் பெரிய வெற்றியை பெற முடியவில்லை. சென்னையில் திமுக.வின் தளபதிகளாக இருந்த ஏ.கே.சாமி, இளம்பரிதி, வை.பாலசுந்தரம் போன்ற ‌பட்டியல் வகுப்பினர் ஓரங்கட்டப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினர். அதன் பிறகே சென்னையில் திமுக தோல்வியை தழுவ தொடங்கியது.


குறிஞ்சிப்பாடி ராஜாங்கம், ஓ.பி.ராமன், டாக்டர் ராமகிருஷ்ணன் போன்ற பட்டியல் வகுப்பு தலைவர்களால் ஆட்சியில் அமைச்சர் பதவி பெற முடிந்தாலும், கட்சியில் பெரிய பொறுப்புக்கு வர முடியவில்லை. பொள்ளாச்சி பொதுத் தொகுதியில் வென்ற சி.டி.தண்டபாணி, முரசொலி மாறனை விட டெல்லியில் செல்வாக்காக இருந்தார். நாடாளுமன்ற துணைக் குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த அவர், முரசொலி மாறனுக்காக பலி கொடுக்கப்பட்டார்.

கடந்த 1980-களில் திமுக இளைஞர் அணியை கட்டமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் பரிதி இளம்வழுதி. பட்டியல் வகுப்பை சேர்ந்த அவர், மு.க.ஸ்டாலினுக்கு வலதுகரமாக செயல்பட்டு, 6 முறை எம்எல்ஏ.வாக வெற்றிப் பெற்றார். ஆட்சியில் அமைச்சர் பதவியை பெற முடிந்த அவரால் கட்சியில் துணை பொதுச் செயலாளர் பொறுப்பை மட்டுமே அடைய முடிந்தது. ஒரு கட்டத்தில் திமுக.வில் ஒதுக்கப்பட்டதால் பரிதி இளம்வழுதியும் கட்சியில் இருந்து விலகி, அதிமுக.வில் இணைந்தார்.

இதனால் பரிதி இளம்வழுதி வகித்த துணை பொதுச் செயலாளர் பதவி, மற்றொரு பட்டியல் வகுப்பில் அருந்ததியர் பிரிவை சேர்ந்த வி.பி.துரைசாமிக்கு வழங்கப்பட்டது. திமுக.வில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம் சாட்டிய வி.பி.துரைசாமி, 2-வது முறையாக அக்கட்சியில் இருந்து விலகினார். பாஜக.வில் இணைந்த அவருக்கு உடனடியாக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பேசி ஆட்சியைப் பிடித்த திமுக.வில் பட்டியல் வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. பிரதான பதவிகளில் தொடங்கி மாவட்ட செயலாளர், நகர செயலாளர் பதவி வரை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. 65 மாவட்ட செயலாளர்களைக் கொண்ட அக்கட்சியில் பட்டியல் வகுப்பை சேர்ந்த ஒரே ஒருவருக்கு மட்டுமே அந்த பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

பச்சை அக்கரை:- 
திமுக.வில் பட்டியல் வகுப்பினர் புறக்கணிக்கப்படும் அதே வேளையில், எம்ஜிஆர் அதிமுக.வை தொடங்கியவுடன் அவ்வகுப்பை சேர்ந்த எஸ்.எம்.துரைராஜூக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து சௌந்தர பாண்டியன் என்பவருக்கு பொருளாளர் பதவியும், தொழில்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. பட்டியல் வகுப்பை சேர்ந்த டாக்டர் வேணு கோபாலுக்கு, ஜெயலலிதா நாடாளுமன்ற குழு தலைவர் பதவியை வழங்கினார். சாதி பாகுபாட்டுக்கு ஆளான தனபாலுக்கு சட்டப்பேரவைத் தலைவர் பதவியும், உணவுத் துறை அமைச்சர் பதவியும் வழங்கினார். ஏ.எஸ்.பொன்னம்மா, செ.கு.தமிழரசன் ஆகிய பட்டியல் வகுப்பினரை தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராகவும் நியமித்தார்.

அதே போல காங்கிரஸில் பட்டியல் வகுப்பை சேர்ந்த மரகதம் சந்திரசேகருக்கு நேரு அமைச்சரவையிலும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் என்ற பெரும் பதவியும் வழங்கப்பட்டது. முனுசாமி பிள்ளை, கக்கன், டி.ஆர்.பரமேஷ்வரன், ஜோதி வெங்கடாசலம் போன்றவர்களுக்கு முறையே உள்ளாட்சித் துறை, உள்துறை, இந்து அறநிலையத் துறை, சுகாதாரத் துறை வழங்கப்பட்டது. ஜோதி வெங்கடாசலத்துக்கு கேரள மாநில ஆளுநர் பதவி கூட வழங்கப்பட்டது. பட்டியல் வகுப்பை சேர்ந்த இளையபெருமாள் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதோடு, தேசிய ஆணையத்தின் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

இன்னொரு தேசிய கட்சியான பாஜக.வும் பட்டியல் வகுப்பை சேர்ந்த டாக்டர் கிருபாநிதியை 2000-ம் ஆண்டு மாநிலத் தலைவராக நியமித்தது. கடந்த மார்ச் மாதம் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச்சில் எல்.முருகன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக.வினரால் பிற்போக்கான கட்சியாக சொல்லப்படும் பாஜக.வில் எவ்வித பின்புலமும் இல்லாத முருகனால் தலைவராக முடிகிறது. முற்போக்கான கட்சியாக சொல்லப்படும் திமுக.வில் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர், எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் பிரதான பதவிக்கு வர முடியாதது ஏன்?

திமுக.வில் பிற வகுப்பினர் தாக்குப் பிடித்து பிரதான பதவியை பிடிக்க முடிகிறது. ஆனால் பட்டியல் வகுப்பினர் சத்தியவாணி முத்துவில் தொடங்கி வி.பி.துரைசாமி வரை அக்கட்சியில் தாக்குப் பிடிக்க முடியாமல், தொடர்ந்து வெளியேற்றப்படுகின்றனர். ஒரு காலத்தில் பட்டியல் வகுப்பினரின் கட்சி என அழைக்கப்பட்ட திமுக.வில், இன்று அவ்வகுப்பினர் இல்லாத கட்சியாக மாறி இருக்கிறது. சமூக நீதி, சாதி ஒழிப்பு பேசி, பெரியாரின் பெயரை மேடைதோறும் உச்சரிக்கும் திமுக, அதனை கட்சியில் கடைப்பிடித்து, 20 சதவீத மக்கள் தொகை கொண்ட பட்டியல் வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்குமா?

நன்றி: Hindu Tamil 
08.09.2020

Sunday, 7 September 2025

சசிகலா செங்கோட்டையனை புறக்கணித்தாரா

சசிகலா செங்கோட்டையனை புறக்கணித்தாரா
 இதோ விளக்கம்!
சசிகலா சரியாகவே நடந்துள்ளார்!
நியாயப்படி அவர் கட்டுப்பாட்டில் பலமாக இன்று இருந்திருக்க வேண்டிய அதிமுக அப்போது பாஜக வின் தூண்டுதலால் எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தால் ஜனநாயகப் படுகொலை நடந்து விதிகளெல்லாம் மீறப்பட்டு சசிகலாவிடம் இருந்து பிடுங்கப்பட்டு இந்த நிலையில் இருக்கிறது! 
 அன்று வளர்மதி பாடநூல் கழகத் தலைவராக நியமித்தார், தளவாய் சுந்தரம் அரசின் சிறப்பு பிரதிநியாக நியமித்தார். இருவருமே சசிகலாவின் சமூகத்தவர்கள் கிடையாது.
 அன்று முதல்வரை நியமிக்கும் அதிகாரம் இருந்த போதும் 4 சீனியர் முக்குலத்து அமைச்சர்கள் இருந்தபோதும் மூப்பு அடிப்படையில் சீனியரான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா. 
 எடப்பாடியை விட சீனியரான நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம் ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்து இருந்தனர்.
 அன்று ஓபிஎஸ் தர்மயுத்தம் என்று அவரே வெளியே போய்விட்டார்.
 செங்கோட்டையனை 2016 இல் ஜெயலலிதா வே அமைச்சராக நியமிக்கவில்லை! 
 அதனால் ஓ.பன்னீர்செல்வம் உடன் வெளியேறிய மாஃபா பாண்டியராஜன் வகித்த கல்வியமைச்சர் பதவியை செங்கோட்டையனுக்கு வழங்கினார். 
ஓபிஎஸ் வகித்த நிதியமைச்சர் பதவியை மீனவ சமுதயாத்தைச் சேர்ந்த ஜெயக்குமாருக்கு வழங்கினார்.
 இப்படி சசிகலா நியமித்த எவருமே முக்குலம் இல்லை! 
 இப்படி கட்சி விதிப்படி சமுதாய உணர்வில்லாமல் நியாயமாக நடந்துகொண்டார் சசிகலா!