Friday, 25 April 2025

போலி சங்கராச்சாரி

 போலி சங்கராச்சாரி

காஞ்சி மடம் ஒரு சங்கர மடமே அல்ல!
அது ஆதிசங்கரர் நிறுவியது என்பது முழுப் பொய்! 

அதன் தலைமை மடாதிபதிகள் சங்கராச்சாரியார் என்ற பட்டத்தைப் பயன்படுத்துவதும் ஏமாற்று!

காஞ்சி காமகோடி மடம் சிருங்கேரி மடத்தின் கிளை என்று போலி சாமியார்களால் 1780களில் உருவாக்கப்பட்டது! 

 ஏழாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் நான்கு மடங்களை நிறுவினார்.
அவற்றுக்கும் காஞ்சி மடத்திற்கும் தொடர்பே கிடையாது.
 துவாரகா, சிருங்கேரி, ஜோஷி மடம், கோவர்த்தன பீடம் ஆகிய நான்கு மடங்களே ஆதிசங்கரர் நிறுவிய உண்மையான சங்கர மடங்கள்!
 அவை இன்றும் உண்மையான சங்கராச்சாரிகள் தலைமையில் இயங்கி வருகின்றன.

காஞ்சி சங்கராச்சாரிகள் அத்தனைபேரும் முழுப்பொய்யர்கள் என்பதையும் அவர்கள் கூறும் வரலாறு அனைத்துமே கட்டுக்கதை என்பதையும் இந்நான்கு மடங்களின் உண்மையான சங்கராச்சாரிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

இதற்கெல்லாம் சான்று காஞ்சி சங்கராச்சாரிகள் பத்திரிக்கைகளில் எழுதிய தொடருக்கு வரிக்கு வரி பதிலடி கொடுத்து 'வாரணாசி ராஜ்கோபால் சர்மா' (பிராமணர்) எழுதிய "Kanchi Kamakoti Math - A Myth" என்ற புத்தகம்.

அந்த கொலகாரனுக மொதல்ல சங்கராச்சாரியே கெடையாது ஓய்!


24.01.2018 அன்றைய பதிவு
தலைப்பு: பொய்களின் மடம்

Wednesday, 23 April 2025

டெல்லித் தமிழர் வருங்காலம்

டெல்லித் தமிழர் வருங்காலம்

  இத்தனை நாள் வரை பொதுமக்களைத் தாக்காத காஷ்மீரிகள் இன்று அதைச் செய்துள்ளனர்!
 அது பற்றி நமக்கு கவலை இல்லை!
 காஷ்மீர் பிரச்சனையை காஷ்மீரிகள் பார்த்துக் கொள்வார்கள்! 
 நாம் நமது டெல்லி தமிழர்களைப் பற்றி யோசிப்போம்!
 700 தமிழ்க் குடும்பங்கள் 60 ஆண்டுகளாக வசித்து வரும் (ஜங்புரா) மதராசி குடியிருப்பை காலி செய்ய முயற்சி நடக்கிறது.
 இதை எதிர்த்து டெல்லியில் 500 தமிழர்கள் கலந்துகொண்ட பேரணி காவல்துறையால் வலுக்கட்டாயமாக தடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது!
வழக்கம் போல சீமான் தவிர்த்து எந்த தலைவரும் குரல் கொடுக்கவில்லை!
 டெல்லியில் 10 லட்சம் தமிழர்கள் இருக்கின்றனர்.
 இதை கணக்கிட்டு தேமுதிக தேர்தலில் போட்டி கூட போட்டது!
 நாம் தமிழர் கட்சி ஏன் அதைச் செய்யவில்லை?! 
இனியாவது அதைச் செய்யலாமே?!
 அடிமட்ட அதிகாரத்தையாவது கைப்பற்றலாமே?! 

Monday, 14 April 2025

தமிழ்ப் புத்தாண்டு குழப்பத்திற்குத் தீர்வு


தமிழ்ப் புத்தாண்டு குழப்பத்திற்குத் தீர்வு
14.04.2017

தமிழர்களிடம் புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் இல்லை.
இருந்தாலும் புத்தாண்டு என்பது இருந்திருக்க வேண்டும்.

இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவி வாழ்ந்த இனமல்லவா?

அதனால் பல நாட்காட்டிகள் நடைமுறையில் இருந்தன.

கதிரவனின் இயக்கத்தைப் பின்பற்றி ஒரு நாட்காட்டி

நிலவின் இயக்கத்தைப் பின்பற்றி ஒரு நாட்காட்டி.

விண்மீன்களைப் பின்பற்றி ஒரு நாட்காட்டி.

தற்போது தமிழ் மாதங்களும் பஞ்சாங்க ஆண்டுகளும் 15ம் நூற்றாண்டுக்குப் பிறகு அதாவது தெலுங்கர் ஆட்சியில் சமஸ்கிருதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஹேவிளம்பி என்பது தமிழில் பொற்றடை என்று வழங்கப்பட்டது.

இதற்கு சான்று 'விவேக சிந்தாமணி' என்ற நூல் 1400 களில் எழுதப்பட்டது,
அதில் 60 ஆண்டுகளும் (தமிழில்) வருமாறு ஒரு பாட்டு உள்ளது.

ஆக நாரதர் - கிருஷ்ணர் ஆபாசக்கதையை (அதை எழுதியதும் வந்தேறிகளே) திராவிடம் மூலம் பரப்பி அதை ஆரியப் புத்தாண்டு ஆக்கி
தமிழர்கள் தற்போதும் பின்பற்றும் (சமஸ்கிருத மயமாக்கப்பட்ட) தமிழ் (கதிரவன்) நாட்காட்டியை நாமே எதிர்க்குமாறு செய்து நம்மை முட்டாளாக்கி வருகின்றனர்.

நாம் எந்த நாட்காட்டியைப் பின்பற்றவேண்டும்?
எது நமது புத்தாண்டு?

இதையெல்லாம் தமிழர்நாடு அமைந்ததும் வானியல், மெய்யியல், இலக்கியம், வரலாறு என பலதுறைகளைச் சேர்ந்த வல்லுநர் குழுவை அமைத்து முடிவு செய்யவேண்டும்.

அதுவரை குழம்பாமல் அடித்துக்கொள்ளாமல்  கதிரவன் புத்தாண்டையே பின்பற்றுங்கள்.

தற்போதைய பஞ்சாங்க ஆண்டுகளின் உண்மையான (தமிழ்ப்)பெயர்களை அண்ணன் மேகநாதன் அவர்கள் பதிவிட்டுள்ளார்.

அது பின்வருமாறு,

01. பிரபவ -நற்றோன்றல்
02. விபவ - உயர்தோன்றல்
03. சுக்ல - வெள்ளொளி
04. பிரமோதூத - பேருவகை
05. பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்
06. ஆங்கீரச - அயல்முனி
07. ஸ்ரீமுக - திருமுகம்
08. பவ - தோற்றம்
09. யுவ - இளமை
10. தாது - மாழை
11. ஈஸ்வர - ஈச்சுரம்
12. வெகுதானிய - கூலவளம்
13. பிரமாதி - முன்மை
14. விக்கிரம - நேர்நிரல்
15. விஷு - விளைபயன்
16. சித்திரபானு - ஓவியக்கதிர்
17. சுபானு - நற்கதிர்
18. தாரண - தாங்கெழில்
19. பார்த்திப - நிலவரையன்
20. விய - விரிமாண்பு
21. சர்வசித்து - முற்றறிவு முழுவெற்றி
22. சர்வதாரி - முழுநிறைவு
23. விரோதி - தீர்பகை
24. விக்ருதி - வளமாற்றம்
25. கர - செய்நேர்த்தி
26. நந்தன - நற்குழவி
27. விஜய - உயர்வாகை
28. ஜய - வாகை
29. மன்மத - காதன்மை
30. துன்முகி - வெம்முகம்
31. ஹேவிளம்பி - பொற்றடை
32. விளம்பி - அட்டி
33. விகாரி - எழில்மாறல்
34. சார்வரி - வீறியெழல்
35. பிலவ - கீழறை
36. சுபகிருது - நற்செய்கை
37. சோபகிருது - மங்கலம்
38. குரோதி - பகைக்கேடு
39. விசுவாசுவ - உலகநிறைவு
40. பரபாவ - அருட்டோற்றம்
41. பிலவங்க - நச்சுப்புழை
42. கீலக - பிணைவிரகு
43. சௌமிய - அழகு
44. சாதாரண - பொதுநிலை
45. விரோதகிருது - இகல்வீறு
46. பரிதாபி கழிவிரக்கம்
47. பிரமாதீச - நற்றலைமை
48. ஆனந்த - பெருமகிழ்ச்சி
49. ராட்சச - பெருமறம்
50. நள - தாமரை
51. பிங்கள - பொன்மை
52. காளயுக்தி - கருமைவீச்சு
53. சித்தார்த்தி - முன்னியமுடிதல்
54. ரௌத்திரி - அழலி
55. துன்மதி - கொடுமதி
56. துந்துபி - பேரிகை
57. ருத்ரோத்காரி - ஒடுங்கி
58. ரக்தாட்சி - செம்மை
59. குரோதன - எதிரேற்றம்
60. அட்சய - வளங்கலன்
(நன்றி: மேகநாதன்)

மாதங்களின் பெயர்கள் பின்வருமாறு,

சித்திரை - மேழம்
வைகாசி - விடை
ஆனி - ஆடவை
ஆடி - கடகம்
ஆவணி - மடங்கல்
புரட்டாசி - கன்னி
ஐப்பசி - துலை
கார்த்திகை - நளி
மார்கழி - சிலை
தை - சுறவம்
மாசி - கும்பம்
பங்குனி - மீனம்

தமிழர் படைபல வீழ்ச்சிக்கு காரணம் யார்?

தமிழர் படைபல வீழ்ச்சிக்கு காரணம் யார்?

16.01.2021

 தமிழர் ஆட்சி என்றாலே மூவேந்தர் ஆட்சிதான்.
 அதிலும் முக்கியமானவர்கள் சோழர் மற்றும் பாண்டியர்.
 சோழர் வீழ்ந்து போனதற்கு பல  காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் மன்னர் குடும்பத்தில் இனக்கலப்பு.
 இதுவே வாரிசில்லாதபோது சாளுக்கியர் ஆட்சியைப் பிடிக்க வழிவகுத்தது.
 இரண்டாவது பாண்டியர் அரசு.
 இது வீழ பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் பங்காளி சண்டை அதன்மூலம் வேற்றினத்தவர் ஊடுருவல்.

 ஆக மன்னர் குடும்பங்களில் பிரச்சனை வந்து மன்னர்கள் வீழ்ந்துவிட்டனர்.
 ஆனாலும் அதற்கு அடுத்த நிலையில் இருந்த தளபதிகள், படைவீரர்கள் அதிகம் கொண்ட போர்க்குடிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு தத்தமது பகுதிகளை அந்நியரிடம் இருந்து காக்க முற்பட்டனர்.
 இவர்களை வென்றுதான் அந்நியர் ஆட்சி தமிழகத்தில் பரவியது.

 அப்படியான போர்க்குடிகளில் படைத் தொழிலையே விட்டுவிட்டு கோழைத்தனமாக வணிகத்திற்கு மாறிய போர்க்குடிகள் தமிழ் இனத்தின் இந்த பெரும் சறுக்கலுக்கு பொறுப்பு.

 அப்படியானவர்கள் கைக்கோளர், செங்குந்தர் மற்றும் சேனைத்தலைவர் ஆகியோரே!
(இம்மூவரும் சங்க காலத் தமிழ்க் குடியான கோசர் வழிவந்த வம்சாவளிகள் என்பது பாவாணர் கருத்து)

 இவர்களே அந்நிய ஆட்சிக்கு போர்த்தொழில் செய்ய மறுத்து வணிகத்திற்கு மாறினர்
 (திரு. சேசாத்திரி சிறிதரன் அவர்கள் எழுதிய "கைக்கோளர் படை" பதிவில் படித்தபிறகு இந்தப் படையினர் விலகலுக்கு சைவ மதம் காரணம் என்று கூறியுள்ளார். அதில் எனக்கு உடன்பாடில்லை. மக்களைக் கோழையாக்க சைவம் ஒன்றும் அகிம்சை மதம் இல்லை).
 
 இவர்கள் செய்த தவறு (மறவர், கள்ளர், வன்னியர், etc போன்ற) பிற தமிழின போர்க்குடிகள் செய்ததுபோல அந்நிய தலைமைக்கு அப்போதைக்கு அடங்கி போர்த்தொழில் செய்துகொண்டு வாய்ப்பு வரும்போது தமக்குள் கூட்டணி அமைத்து அந்நியரை தூக்கியெறியும் போக்கைக் கையாளாமல் மரபுத் தொழிலையே மாற்றியதுதான்.

 இதில் கைக்கோளர் நெசவுத் தொழிலுக்கும் செங்குந்தர் ஆடை தொடர்பான (பருத்தி) விவசாயம் மற்றும் வணிகத்திற்கும் சேனைத்தலைவர் காய்கறி விவசாயம் மற்றும் வணிகத்திற்கு மாறினர்.

 இதனாலேயே அதன் பிறகு எழுந்த தமிழ் சிற்றரசுகள் படைவலிமையைப் பெருக்க முடியாமல் தொடர்ந்து வீழ்ந்தன. 

 அன்று எல்லா சாதிகளிலும் படைவீரர்கள், தளபதிகள், அமைச்சர்கள் இருந்தனர்.
ஆனால் முழுக்க போர்செய்வதையே தொழிலாகக் கொண்ட சாதியினர் சிலரே!
 அப்படியானவர்கள் முற்றாக விலகியது தமிழ் நில பாதுகாப்பிற்கு பேரிழப்பு!

 இந்த விடயத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள் மறவர்களே!
 கள்ளர்களையும் பாராட்டலாம்!
(வெள்ளாளர்கள் கூட அந்நிய எதிர்ப்பு வணிகக் கூட்டணி ஒன்றை வைத்திருந்தனர்)

 இவ்விரு சாதியினரும் ஆங்கிலேயர் காலம் வரைக்கும்கூட தாக்குப்பிடித்துள்ளனர்.

 தமிழர் வீழ்ச்சிக்குக் காரணம் சோழ, பாண்டிய குடும்ப வாரிசுகள் செய்த தவறு முதல் காரணம் என்றால் தம் கடமையிலிருந்து விலகிய கைக்கோளர், செங்குத்தர் மற்றும் சேனைத்தலைவர் ஆகியோர் செய்த துரோகம் இரண்டாவது காரணம்.

 இன்றைய நிலையில் மூவேந்தர் மறைந்துவிட்டனர்!
அவர்களது வாரிசுகளும் அழிந்துவிட்டனர்!
அதனால் இன்று மேற்கண்ட மூன்று சாதிகளும் தமிழர் வீழ்ச்சிக்கு முதற்காரணம்!
(இந்த குற்றவுணர்ச்சியின் காரணமாகத்தான் இவர்கள் மூவரும் நாங்கள் போர்க்குடி ஆண்ட சாதி என்று பெருமை பேசுவதேயில்லை போலும்!)

 ஆக இவர்களே இனி தமிழர்தேசியத்தை முன்னெடுக்க வேண்டிய முதல் பொறுப்பாளிகள்!

 செங்குந்த முதலியாரான பாரதிதாசன் தமிழர் விடுதலைக் கருத்தியலுக்கு குறிப்பிட்ட பங்களிப்பைச் செய்துள்ளார்.
 இந்த தலைமுறை பேச்சோடு நிற்காமல் செயலில் இறங்கவேண்டும்.
 தமிழர் சேனை ஒன்றைக் கட்டவேண்டியது இம்மூவரின் பொறுப்பு!

 தொண்டை மற்றும் கொங்குநாடுகள் அந்நிய நிலத்திற்கு அருகில் இருப்பதால் பாதுகாப்பு அதிகம் கிடையாது என்று கொண்டு அப்பகுதி போர்க்குடிகளை மன்னித்து விடலாம்.

 ஆனால் சோழ மற்றும் பாண்டிய நாடுகள் நில அமைப்பின்படி இரும்புக் கோட்டை போன்றவை.
 அதிலும் பாண்டிய நாட்டு போர்க்குடிகள் கடமை தவறியதை மன்னிக்கவே முடியாது.

 சோழ நாட்டு அகமுடையார்களையும் கடமை தவறிய இம்மூவருடன் நான்காவதாக சேர்க்கலாம்தான். ஆனால் அவர்கள் முழுமையான போர்க்குடிகள் கிடையாது.
 அவர்கள் உள்நாட்டு பாதுகாப்புக்கு மட்டுமே (அதாவது போலீஸ் போன்ற தொழில்) அதனால் மன்னிக்கலாம்.

 நாடார்களில் சாணார் மட்டுமே போர்க்குடி இவர்களையும் ஐந்தாவதாக சேர்க்கலாம்தான்.
 ஆனால் மண்மீட்பின் போது குமரி மற்றும் சென்னையை மீட்டுக் கொடுத்து தம் தவறுக்கு சிறிய பிராயச்சித்தம் செய்துள்ளனர். 

 இதிலும் சேனைத்தலைவர் மிகச் சிறுபான்மை (தமிழக மக்கட்தொகையில் 0.5%) , அவர்களைக் கூட மன்னித்துவிடலாம்.
 [சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் வணிகத்திற்கு மாறிய பிறகும் தமது போர்த்தாகத்தைத் தணிக்க வழி தெரியாமல் வந்தேறிகளின் கீழ் படையில் இணையவும் மனமில்லாமல் தம்மை ஆறுதல் படுத்திக்கொள்ள மூத்த தமிழனான முருகனுக்கு போர்த் தொழில் செய்வதாக தம் மீது கற்பனைக் கதைகளை எழுதிக்கொண்டனர்.
  பிற்கால புராணங்களில் வரும் முருகனின் தளபதியான வீரபாகு என்கிற கற்பனையான கதாபாத்திரத்தைத் தத்தெடுத்துக் கொண்டனர்.
 வீர+பாகு இரண்டுமே தமிழ்ச்சொல் இல்லை]

 தாம் செய்த தவறுக்கு இனி வரும் காலங்களில் தமிழினத்தை அடிமைச் சங்கிலியிலிருந்து விடுவித்து மேற்கண்ட  மூன்று போர்க்குடிகளும் அதிலும் குறிப்பாக பாண்டிநாட்டு கைக்கோள (செங்குந்த முதலியார்) சாதிகள் தமது தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்!

-  ஆதிமூலப்பெருமாள் மூப்பனார் சேனைத்தலைவன் 



 

 

 
 

 
 

Sunday, 13 April 2025

சேனைத்தலைவர் தமிழ்த்தலைவர் ஆவது எப்போது

சேனைத்தலைவர் தமிழ்த் தலைவர் ஆவது எப்போது? 01.01.2023 என் சேனைத் தலைவர் சமுதாயமே! படைகளைக் கட்டியாண்ட தளபதி வம்சமே ! உங்களை நோக்கி சில கேள்விகள்.... நாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு சுயநலமாக இருக்கப் போகிறோம்? இன்னும் எத்தனை நாட்களுக்கு தானுண்டு தன் வேலையுண்டு தன் சமூதாயமுண்டு என்று இருக்கப் போகிறோம்? மூவேந்தர் காலத்தில் படைகளை வழிநடத்தும் தளபதிகளாக இருந்த நாம் இன்று எப்படி இருக்கிறோம்?! கல்வியில் முன்னேறி இருக்கிறோம்! நாடு போற்றும் இரண்டு விஞ்ஞானிகள்! பத்ம ஸ்ரீ வரை கூட வாங்கிவிட்டோம்! சரிதான்! வணிகத்தில் ஓரளவு முன்னேறி நாம் வாழும் பகுதிகளில் கோலோச்சியும் வருகிறோம்! சரிதான்! ஆனாலும் நம் சமுதாயத்தில் பாதிபேர் அன்றாடங் காய்ச்சிகளாக இன்றும் உள்ளனரே அது பற்றி சிந்தித்தீர்களா?! மரம் செழித்தால்தான் கிளை செழிக்கும், இனம் செழித்தால்தான் குலம் செழிக்கும் என்பது தெரியுமா? வரலாற்றில் வாளே தூக்கியிராத சமூகமெல்லாம் தாங்கள் போர்க்குடி என்று மார்தட்டும் சூழலில் இன்று நாம் இருக்கிறோமா இல்லையா என்று தெரியாத அளவிற்கு ஊமையாக வாழ்வது ஏன்? அரசியலில் நம் சமுதாயம் காணாமல் ஆக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகாலம் ஆகிறது என்பது தெரியுமா? என்னதான் திறமையிருந்தாலும் செல்வம் இருந்தாலும் அரசியல் செய்யாமல் மேலெழவே முடியாது என்பது தெரியுமா? ஜனநாயகத்தில் மிகச் சிறுபான்மையாக இருக்கும் நாம் என்ன செய்யமுடியும் என்கிற தாழ்வு மனப்பான்மையா? தமிழக மக்கட்தொகையில் 0.003% இருக்கும் ஒரு வந்தேறி சமுதாயம் அரசியலில் தலைமையில் இருக்கும் போது 0.4% இருக்கும் நாம் ஏன் எதையும் சாதிக்க முடியவில்லை? இனியும் நாம் ஒதுங்கியிருப்பதில் அர்த்தம் இல்லை. நாம் நமது சமுதாயத்தை ஒருங்கிணைத்து நம் தமிழ் இனத்தை வழிநடத்தும் கட்டாயத்தில் இருக்கிறோம். மூவேந்தரை அழித்த மன்னர்களின் வாரிசுகள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களது போர்க்குடிகளும் அவர்களது இன மக்களும் இன்னமும் அதே அதிகாரத்துடன் நவீன மன்னராட்சி நடத்தி வருகின்றனர். ஆனால் மூவேந்தர் வாரிசுகள் மறைந்துவிட்டனர். அவர்களது போர்க்குடிகள் விலைபோய் விட்டன. தமிழ் இனமும் வேற்றாரை அனுசரித்துப் போகப் பழகிவிட்டது. தமிழரை வழிநடத்த யாருமில்லை! இந்நிலையில் தமிழினப் போர்க்குடிகளுக்கு தலைமை வகித்த குடியாகிய சேனைத்தலைவர் நாம் இருக்கிறோம். தகப்பன் இல்லாத நிலையில் மூத்த மகன் குடும்ப பாரத்தைச் சுமப்பது போல இன்று இந்த இனத்தின் தலைசிறந்த போர்க்குடி என்ற வகையில் நாம் தமிழினத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கிறோம். ஆம்! இனி தமிழ்தேசியத்தைக் கையில் எடுப்போம். ஏனென்றால் இனி தமிழ்தேசியத்தின் காலம். பிற குடிகளில் இளைய சமுதாயம் இதை உணரத் தொடங்கிவிட்டனர். நம் சமுதாயத்திலும் அத்தகையோர் உண்டு. மற்றவர்களை முந்திக் கொண்டு நாம் தமிழ்தேசியத்திற்கு அதிக பங்களிப்பைச் செய்து தமிழினத்தின் தலைமைக்கு உயர வேண்டும். பங்களிப்பு என்றால் சிந்தனை, செயல், பொருளாதாரம், உழைப்பு, தியாகம், வீரம் என்று பங்களிப்பது. இனி தமிழ்தேசிய எழுச்சிக் காலம்! இனி தமிழ் இனத்திற்காக அதிகம் செயல்படுவோர் ஆதிக்க சாதி! இனத்திற்காக எதுவும் செய்ய முன் வராதோர் அடிமை சாதி! எவன் தமிழினத்திற்காக படைகட்டி எழுப்புகிறானோ அவனே சேர, சோழ, பாண்டியருக்கும் மேலான அரசன்! அவன் சந்ததியும் உறவினரும் அரச பரம்பரை! அவன் சமூகமே ஆதிக்க சாதி! நாம் மீண்டும் ஆதிக்க சாதியாக மாற வேண்டும்! சேனைத் தலைவர் என்றால் தமிழ் மக்களுக்காக எதையும் செய்பவர் என்றாக வேண்டும்! சேனைத் தலைவர் வாழ்ந்தால் தமிழர் வாழ்வார் என்கிற எண்ணம் தமிழர்களிடம் வரவேண்டும்! சேனைத் தலைவரை ஒழித்துவிட்டால் தமிழினம் அழிந்துவிடும் என்று தமிழின எதிரிகள் நினைக்க வேண்டும்! தமிழருக்கு ஆபத்து வந்தால் சேனைத்தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று ஒவ்வொரு தமிழனும் நம்ப வேண்டும்! உலகில் எங்காவது ஒரு தமிழருக்கு பிரச்சனை என்றால் ஒரு சேனைத் தலைவனை சந்தித்துக் கூறிவிட்டால் சரியாகிவிடும் என்றாக வேண்டும்! தமிழினம் சிறிது வீழ்ந்தாலும் சேனைத் தலைவர் பெரும் பின்னடைவு அடைய வேண்டும்! தமிழினம் சிறிது உயர்ந்தாலும் சேனைத் தலைவர் பெரும் வளர்ச்சி பெற வேண்டும்! அரசியலில் மட்டும் இல்லை தமிழினம் நம் தலைவர் பிரபாகரன் வழியில் ஆயுதம் தூக்க நேர்ந்தாலும் நாம் முன்னின்று செய்ய வேண்டும்! நமக்கு போர்த் தொழில் புதிதல்ல! மூவேந்தர் காலத்தில் வெற்றிகளைக் குவித்த வரலாறு நமக்கு உண்டு! நம் உடலில் வீர ரத்தம் ஓடுகிறது! மூவேந்தர் வீழ்ந்த பிறகு வந்தேறிகளுக்கு போர்த்தொழில் செய்யமாட்டோம் என்று மானத்தோடு வெளியேறிய நாம் இன்று வரை வந்தேறி ஆட்சியாளர்களுக்கு அடிபணியவில்லை. எவனுக்கும் கூழைக் கும்பிடு போட்டதில்லை! இனி நாம் வீறுகொண்டு எழுவோம்! தமிழராக சிந்திப்போம்! தமிழ்தேசிய கட்சிகளிலும் இயக்கங்களிலும் சேர்வோம்! பிற தமிழரை விட அதிகம் பங்களித்து தலைமைக்கு உயர்வோம்! எந்த கட்சியில் இருந்தாலும் எந்த வேலையில் இருந்தாலும் நம் குடிக்கும் அதற்கு அடுத்து பிற தமிழருக்கும் சாதகமாக நடப்போம்! காலம் வந்தால் உண்மையிலேயே சேனைத் தலைவராக மாறவேண்டும்! படையொன்று கட்டியெழுப்பி தனிநாடு காணவேண்டும்! தலைமை ஏற்று ஆள்வதற்கு மட்டுமில்லை இனத்திற்காக உயிரைக்கூட இழக்க முன்வர வேண்டும்! நம் முன்னோன் முருகன் போல இறைநிலை அடையவேண்டும்!! அரசியலில் பெரும்பான்மைத் தமிழ்க் குடிகளில் ஆதிக்க குடிகள் வந்தேறிகளிடம் பேரம் பேசி பங்கு வாங்குவதிலும் பட்டியலினத்தார் பங்கு பிச்சை கேட்பதிலும் குறியாக இருக்கிறார்கள். சிறுபான்மை தமிழ்க்குடிகள் அரசியலில் நம்பிக்கை இழந்து ஒதுங்கிவிட்டனர். இந்த நிலையை மாற்ற நமக்கு தகுதி இருக்கிறது. நமக்கு வீர வரலாறு இருக்கிறது! பொருளாதாரத் தகுதியும் அறிவும் இனப்பற்றும் நம்மிடம் இருக்கிறது. நாம் நினைத்தால் நம் இனத்தை வேற்றினத்தார் பிடியிலிருந்து விடுவிக்க முடியும். நாம் மனது வைத்தால் நம் தாய்நிலத்தை விடுதலை செய்து ஆளமுடியும். நம் சமுதாயத்தை ஒன்று திரட்டுவோம்! சாதியில்லை என்கிற வந்தேறிகளின் சதியை முறியடிப்போம்! சாதிப் பட்டத்தை பெயருக்குப் பின் சேர்ப்போம்! குடிகள் சேர்ந்துதான் இனம் என்கிற புரிதலுக்கு வருவோம்! சக தமிழ்க் குடிகளை அரவணைப்போம்! வந்தேறு குடிகளை சிதறடிப்போம்! இனப் பகைவர்களை வேரறுப்போம்! பெரியவர், சிறியவர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், ஏழை, பணக்காரன் என எல்லா சேனைத்தலைவரும் தமிழினத்தை காத்து வழிநடத்த சூளுரைப்போம்! சமுதாய கூட்டங்களிலும், விழாக்களிலும் தமிழ்தேசியம் குறித்து பேசுவோம்! தமிழ்தேசியம் என்றால் சேனைத்தலைவர் என்றாக்குவோம்! ஒரு சேனைத்தலைவரிடம் பேச்சுக் கொடுத்தால் தமிழ்தேசியம் தான் பேசுவார் என்று ஆக வேண்டும்! ஒரு சேனைத்தலைவன் இனத்துக்கு தீங்கு நினைத்தால் தன் மகனே ஆனாலும் இரக்கம் காட்டமாட்டான் என்று எல்லாரும் பேச வேண்டும்! ஒரு சேனைத்தலைவன் இனத்துக்காக முன்வராவிட்டால் தாயே அவனை ஒதுக்கிவிடுவாள் என்று அனைவரும் நம்ப வேண்டும்! நம் பங்களிப்பைப் பார்த்து பிற ஆதிக்க தமிழ்க் குடிகள் நாண வேண்டும்! நம் இனப்பற்றைப் பார்த்து பிற குடிகளும் இனப்பற்று கொள்ளவேண்டும்! இதன் மூலம் இனி நம் தாய்நிலத்தில் வேற்றின அதிகாரம் என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் என்றாக்குவோம்! தமிழகம் ஈழம் சேர்ந்த தமிழ்த்தாய் நிலத்தில் ஆள்பவன் சேனைத்தலைவனாக இருக்க வேண்டும் அல்லது ஆளவைத்தவன் சேனைத்தலைவனாக இருக்கவேண்டும்! நம் மேலாண்மையை சக தமிழ்க் குடிகள் முழுமனதுடன் ஏற்கும் வகையில் நம் செயல்பாடு இருக்க வேண்டும்! இன எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் நாம் சிம்ம சொப்பனமாகத் திகழவேண்டும்! பெரும்பான்மைத் தமிழ்க்குடிகளால் முடியாத ஒன்றை நம்மால் சாதிக்க முடியும் என்று காட்டவேண்டும்! ஒரு தமிழர் எப்படி இருப்பார் என்று கேட்டால் எல்லாரும் ஒரு சேனைத்தலைவரைக் காட்ட வேண்டும்! ஜனநாயகம் என்றாலும் சரி ஆயுத வழி என்றாலும் சரி! தமிழினத்தை முன்னின்று காக்க சேனைத்தலைவர் தயாராக வேண்டும்! சாமுராய்கள் ஆண்ட ஜப்பான் போல சேனைத்தலைவர் ஆளும் தமிழர்நாடு இருக்கும்! உலகில் சிறந்த நாடு தமிழர்நாடு! அதிலும் சிறந்தது சேனைத்தலைவர் ஆட்சி என்று வரலாறு பேச வேண்டும்! தமிழின எதிரிகள் அழிவு சேனைத்தலைவர் கையால் நடக்க வேண்டும்! சேனைத்தலைவரில் ஒரு இனத் துரோகி கூட கிடையாது என்றிருக்க வேண்டும்! சேனைத் தலைவரைத் தாண்டித்தான் பிற தமிழரைத் தொடமுடியும் என்கிற நிலை வரவேண்டும்! ஒன்று தமிழ்தேசியத்தைக் கையிலெடுத்து தமிழினத் தலைவர் ஆகத் தயாராவோம்! அப்படி இல்லை வேறு எந்த தமிழ்க்குடி தலைமைக்கு உயர்ந்தாலும் அவர்களுக்கு மனமனமுவந்து அடிமை சேவகம் செய்ய தயாராவோம்! இந்த 2023 ஆம் புத்தாண்டில் உறுதி ஏற்போம்! இனி தமிழ்தேசியம் நம் கொள்கை! தனிநாடு நம் இலக்கு! நாமே இனி தமிழர்நாட்டை ஆளப்போகும் பரம்பரை! இனம் வாழ்ந்தால் குடிகள் வாழும்! குடிகள் வாழ்ந்தால் இனம் வாழும்! இனி தமிழ்தேசியத்தின் காலம்! இனி சேனைத்தலைவரின் காலம்!