1920 இல் இந்தியெதிர்ப்பு
இந்தியை முதலில் எதிர்த்து போராடியவர் ஈழத்தமிழரான ஈழத்தடிகள் என்று அறிவோம்!
அதன்பிறகு அவருடன் இணைந்து சோமசுந்தர பாரதியார் மற்றும் மறைமலையடிகள் ஆகியோர் இணைந்து போராடி இந்தியெதிர்ப்பு போரை நடத்தி வெற்றி கண்டனர்.
அதில் கடைசியாக வந்து ஒட்டிக்கொண்டது தான் திராவிடம்!
ஆனால் இவர்களுக்கு முன்பே (ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் நடுவே இருக்கும் பாம்பன் இல் வாழ்ந்த) பாம்பன் சுவாமிகள் 1899 ஆம் ஆண்டிலிருந்தே இந்தி திணிக்கப்படும் என்று உணர்ந்து அதை எதிர்த்து பேசிவந்துள்ளார்.
சைவ அடியாரான இவர் எழுதிய நூல் 1920 இல் அச்சேறிய பிரதி உள்ளது.
"இந்தி முதலிய வேறு பாடைகளை
இந்நாட்டகத்தும் விருத்தி செய்ய விழையும்
வடநாடரது சுயநலத்தினை ஆதரித்தல் தமிழர்
கடன்மை யன்று"
-திருப்பா, நூன்முகம், பக்.17
அதாவது தமிழகத்தில் இந்தி திணிக்கப்படும் அதை தமிழர்கள் ஆதரித்தல் கூடாது தெளிவாகவே கூறியுள்ளார்.
நன்றி: கதிர் நிலவன்
No comments:
Post a Comment