நீ எவனுக்கு அப்பா?!
பெற்றவனைத் தவிர தமிழர்கள் யாரையும் "அப்பா" என்று அழைப்பதில்லை!
அதனால்தான் பெரியப்பா, சித்தப்பா போன்ற சொற்கள் தோன்றின!
பெரியமாமா சின்னமாமா என்று முறைகள் கிடையாது!
ஏனென்றால் ஒரு குழந்தைக்கு எத்தனை மாமாக்கள் வேண்டுமானும் இருக்கலாம்!
ஆனால் அப்பா ஒருவன்தான்!
இதுவே ஆண்பாலுக்கும் பொருந்தும்!
அதாவது சித்தி, பெரியம்மா உண்டு!
சின்னத்தை, பெரியத்தை கிடையாது!
ஆனால் சிலரை பின்னொட்டாக "ம்மா" என்று மரியாதையாக அழைக்கும் வழக்கம் உள்ளது!
வாங்கம்மா போங்கம்மா என்றோ டீச்சரம்மா, கலெக்டரம்மா என்றோ கூட அழைக்கலாம்.
அதேபோலத்தான் "ப்பா" என்பதும்.
(இந்த "அம்மா" வேறு என்று தொல்காப்பியம் கூறுகிறது).
நேரடியாக "அம்மா" என்றோ "அப்பா" என்றோ பெற்றோரைத் தவிர எவரையும் அழைப்பது தமிழர் வழக்கம் இல்லை!
No comments:
Post a Comment