Saturday 28 May 2022

பா.ம.க வின் தலைவராக ஒரு தமிழர் வந்ததில் மகிழ்ச்சி

பா.ம.க வின் தலைவராக ஒரு தமிழர் வந்ததில் மகிழ்ச்சி!

ஆனால் அன்புமணி அவர்கள் எல்லா வாரிசுரிமைத் தலைவர்களையும் போன்றவர் என்றே தோன்றுகிறது.

 தன் தந்தையைப் போல மொழிப்பற்றோ, இனப்பற்றோ, கடின உழைப்போ, கள அறிவோ இதுவரை வாய்க்கப்பெறாதவர் என்றும் படுகிறது.

 இராமதாசு ஐயா தமிழகத்தில் வந்தேறிகள் ஆதிக்கத்தின் மத்தியில் தேமுதிக போல தடந்தெரியாது போகாமல் மதிமுக போல மங்கிப் போகாமல் விசிக போல மானங்கெட்டு போகாமல் தனது கட்சியை மூன்றாவது பெரிய கட்சியாக தக்கவைத்ததே பெரிய சாதனை ஆகும்.

 ஆனாலும் இனி அன்புமணி அவர்கள் பா.ம.க வைத் தாங்கி நிற்கும் தமது சமுதாயத்திற்கும் தான் பிறந்த தமிழினத்திற்கும் களத்தில் இறங்கி பணியாற்றுவார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. 

 வடுகர் கொட்டத்தை அடக்கும் வகையில் 'இனக்குழுக்களின் ஒற்றுமையை அடிப்படையாக்க கொண்ட தமிழ்தேசியத்தைக்' கையிலெடுப்பார் என்றும் நம்பிக்கை இருக்கிறது.

No comments:

Post a Comment