Thursday 2 November 2017

சாகர்மாலா எனும் சவமாலை

சாகர்மாலா எனும் சவமாலை

சாகர்மாலா திட்டம் அதாவது கடல்மாலைத் திட்டம் எனும் நாசகார திட்டம் இந்திய ஒன்றித்திலேயே மிகப்பெரிய செலவில் வரவுள்ள திட்டமாகும்.
அதூவது 8 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
(அதாவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனிடம் இருந்தும் ரூ.6400 இந்த திட்டத்திற்கு போகிறது).

இது 2003 ல் வாஜ்பாய் பா.ஜ.க அரசால் பெரிதாக வெளியே தெரியாமல் தொடங்கப்பட்டு மன்மோகன் காங்கிரஸ் அரசால் மறைமுகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று பா.ஜ.க அரசால் முக்கிய கட்டத்திற்கு வந்துள்ளது.
இத்திட்டத்திற்கு மேற்கண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த அத்தனை கட்சிகளும் உடந்தை.

- - - - - - -
சுருக்கமாக:-

இந்திய ஒன்றியத்தின் கடற்கரை ஒட்டி பல வளங்கள் உள்ளன.
*அவற்றை தொழிற்சாலை அமைத்து சுரண்டுவார்கள்.

*வெளிநாட்டிற்கு விற்க வசதியாக கடற்கரை வரை சாலைபோடுவார்கள்

*கப்பலேற்ற வசதியாக புதிய துறைமுகங்கள் கட்டுவார்கள்

*அந்த துறைமுகங்களுக்கு மக்களிடமிருந்து பாதுகாப்பு கொடுக்க வசதியாக ராணுவ முகாம்கள் ஏற்படுத்தி அம்முகாம்களை அகலமான கடற்கரை சாலைகள் அமைத்து இணைப்பர் மற்றும் தீவுகளில் ராணுவ தளங்களை அமைப்பார்கள்.

(இவ்வாறு அனைத்து வளங்களையும் கப்பலேற்றி அனுப்பவுள்ளனர்.
ஆனால் கூறுவதோ இந்தியாவின் பழைமையான கடல்வணிகத்தை மறுபடி கொண்டுவருகிறோம் என்று.
அதாவது தமிழர்களின் கடல்வழி வணிகத்தை இவர்கள் இந்தியாவின் பெயரில் போட்டுக் கொள்கின்றனர்.

மேற்கண்ட எல்லாமே மத்திய அரசு பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் கொடுக்க அவர்கள் கான்ட்ராக்டர்கள் மூலம் செய்வார்கள்.
இதனால் வரும் லாபம் மொத்தமும் அவர்களுக்கே!
மக்களுக்கு நட்டம் மட்டுமே!)

* 12 பிரம்மாண்ட துறைமுகங்களும் 200 சிறிய துறைமுகங்களும் கட்டவுள்ளனர்.

* 1208 தீவுகளை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளனர்

* 7500 கி.மீ நீளமுள்ள கடற்கரை சாலை போடவுள்ளனர்

* 1450 கடல்வழி பாதைகளும் 76 ரயில்வழி பாதைகளும் 101 ஆற்றுவழி பாதைகளும் போடவுள்ளனர்

* 12 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கவுள்ளனர்.
(அதாவது பூர்வகுடிகளை வெளியேற்றிவிட்டு வடயிந்தியரை அனைத்து வசதிகளுடன் குடியேற்றுதல்)

- - - - - - - - -
இந்த திட்டம் 4 தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளது.

1) துறைமுக நவீனப்படுத்தல் :-

இந்திய கடற்கரை 14 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டும்.
அதில் 3 தமிழக கடற்கரையை முற்றாக விழுங்கியபடி உள்ளன.
முதலில் இந்த பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்படும்.
அதில் தமிழக அரசு எந்த தலையீடும் செய்யமுடியாது.
(ஏற்கனவே எல்லைப் பகுதிகளை மலையாளி, தெலுங்கர், கன்னடர் விழுங்கிவிட்டனர்.
தற்போது கடற்கரையை ஹிந்தியர் விழுங்கவுள்ளனர்)

பிறகு இந்த நிலங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுக்கப்படும்.
(இங்கே புரோக்கர் வேலையை மட்டுமே அரசாங்கம் செய்கிறது)

பிறகு மீனவ மக்களின் குடியிருப்புகளைக் காலிசெய்து  அவர்களை வெளியேற்றுவர்.
(ஏற்கனவே 30 கிராமங்களை வெளியேற்றிவிட்டனர்)

பிறகு துறைமுகம் கட்டுதல், சாலை போடுதல், கடலை ஆழமாக்கல், திட்டத் தொழிலாளர் குடியிருப்பு அமைத்தல் போன்றவை நடக்கும்.
- - - - - - - -

2) துறைமுக இணைப்பு :-

துறைமுகங்களுக்கு சுரண்டிய வளங்களை கொண்டுவர வசதியாக ரயில், சாலை, ஆறு, பைப்லைன் ஆகியன போடப்படும்.

கடற்கரையை ஒட்டி 60 முதல் 200 மீட்டர் அகலமுள்ள சாலைகள் போடப்படும்.
இது சாதாரண சாலைகளாக இருக்காது.
இராணுவ டாங்கிகள் நகர்வதற்கென்றே உறுதியான அகலமான சாலைகள் போடப்படும்.  இதுபோக ஆங்காங்கே ராணுவ விமானங்கள் இறங்கும் தளங்களும் அமைக்கப்படும்.
இதற்கான அனுமதியை முதலில் முந்திக்கொண்டு கொடுத்துவிட்டது தமிழக அரசு.
(இங்கே செக்யூரிட்டி வேலை மட்டுமே அரசு பார்க்கிறது)
- - - - - - -

3) துறைமுகங்களை தொழிற்சாலை மயமாக்கல்

ஏற்கனவே இருக்கும் துறைமுகங்களை நன்கு நவீனப்படுத்தி விரிவாக்குவர்.
அதில் தொழிற்சாலைகளும் கட்டுவர்.

இதன்மூலம் அதானி உள்ளிட்ட பணமுதலைகள் ஆஸ்திரேலியாவில் தோண்டி எடுக்கும் நிலக்கரியை சிரமமில்லாமல் இறக்குமதி செய்யும்.
( இதிலும் ஒரு கொடுமையான நகைச்சுவை உண்டு.
ஒரு டன் நிலக்கரியை ஆஸ்திரேலியாவிடம் அரச நிறுவனமான கோல் இந்தியா  ரூ.25,000 கொடுத்து வாங்கி அதை ரூ.2,500 க்கு கார்ப்பரேட்களுக்கு கொடுக்கும்.
இத்தனைக்கும் ஆஸ்திரேலியாவிடம் பணம் வாங்கிக்கொண்டு நிலக்கரியை வெட்டி எடுத்து அனுப்புவது இதே கார்ப்பரேட்கள்தான்.
அதாவது அரசாங்கம் இங்கே டிரைவர் வேலை மட்டும் பார்க்கிறது.
இந்த வெட்டியெடுக்கும் கான்ட்ராக்ட்டை  ஆஸ்திரேலியாவிடம் பேசி அதானிக்கு வாங்கித்தரத்தான் மோடி ஆஸ்திரேலியாவே போனார்.
இதற்கே வாய்பிளந்தால் எப்படி?
ஏற்கனவே 'நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்து தாருங்கள்' என பத்தாண்டுகள் முன்பே டாடா மற்றும் அம்பானிக்கு 45,000 கோடி சென்ட்ரல் வங்கியில் கடன் வாங்கி கொடுத்துள்ளது மத்திய அரசு.
அவர்கள் 'நிலக்கரி தாருங்கள் ஆரம்பிக்கிறோம்' என்று இன்றுவரை வேலையைத் தொடங்கவில்லை)

இப்போதே அதானியிடம் 11 பெரிய துறைமுகங்கள் உள்ளன.
இத்திட்டம் மேலும் 6 துறைமுகங்களை வழங்கும்
(இதில் ஒன்று தமிழகத்தில் வரும்)

இறக்குமதி அதானி என்றால் ஏற்றுமதி கார்ப்பரேட் சாமியாரான பாபா ராம்தேவ்.
ஒரு சைக்கிளில் வாழ்க்கையை ஆரம்பித்த சாமியார் ஹிந்துத்வா சக்தி மூலம் இன்று இந்திய ஒன்றியத்தின் மூன்றில் ஒரு பங்கு உணவுச் சந்தையை கட்டுப்படுத்தும் அளவு வளர்ந்துவிட்டார்.
இவர் முக்கியமாக உணவுப் பொருள் மற்றும் சித்த மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்து இன்னொரு அதானி  ஆகவுள்ளார்.

தமிழகத்தில் முதலில் விவசாய நிலங்களை அழித்து மீத்தேன் அதாவது ஹைட்ரோகார்பன் எடுத்து விற்பார்கள்.
இந்த மீத்தேன்தானே அதற்கு கீழே இருக்கும் நிலக்கரியை எடுக்க தடையாக இருக்கிறது?
எனவே வேகவேகமாக மீத்தேன் எடுத்தபிறகு மண்ணையெல்லாம் தோண்டி நிலக்கரி, பெட்ரோல் என எல்லாவற்றையும் எடுத்து விற்பார்கள்.
இதுபோக மலைகளை வெட்டி கிரானைட், மணலை அள்ளி தாது,  பாலாற்றை நாசமாக்கிய தோல் தொழிற்சாலை உற்பத்தி, நொய்யல் ஆற்றை நாசமாக்கிய துணி உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, மற்றும் இறைச்சி மீன்வகைகளை பதப்படுத்தி உற்பத்தி என தமிழகத்தையே மொட்டையடிக்க உள்ளனர்.
- - - - - -

4) கடலோர சமூக மேம்பாடு :-

பெரும்பாலும் கடல்சார் தொழிலைச் செய்யும் கடலோர மக்களை தொழில்செய்யவிடாமல் கெடுத்து படிப்படியாக இவர்களை காலி செய்து அகதியாக அலையவிட்டுவிட்டு அந்த இடத்தில் இந்த திட்டத்தோடு தொடர்புடையோர் குடியமர்த்தப்படுவர்.
அதாவது ராணுவ முகாம், ராணுவ குடியிருப்பு, எஞ்சினியர் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்பு.
இவைகளே ஸ்மார்ட் சிட்டி என்று வசதியான குடியேற்றம்.
இதுபோக லேபர் காலணி, அதற்கான கடைகள், கட்டடங்கள், விடுதிகள் என கடற்கரை முழுக்க பல இனங்களைச் சேர்ந்த கார்ப்பரேட் சமூகம் குடியேற்றப்படும்.
இதுதான் இவர்கள் கூறும் டெவலப்மெண்ட்.

அதாவது இந்திய கடற்கரையை ஒட்டி மீனவ கிராமங்களுடன் ஏறத்தாழ 3600 ஊர்கள் மற்றும் நகரங்கள் உள்ளன.
கடலோரம் 25 கோடி மக்கள் வாழ்கின்றனர்.
இவர்களை ஒழித்துவிட்டு
1 கோடி பேருக்கு வேலை தருவார்களாம்.
அதிலும் 10% வரையான வேலைவாய்ப்பு நிரந்தர வேலையாக இருக்கலாம்.
மற்றபடி அனைத்து வேலைகளும் கான்ட்ராக்ட் முறைப்படிதான்.
அதிலும் பெரும்பாலும் எடுபிடி வேலைகள்.
இதுதான் இவர்கள் கூறும் வேலை வாய்ப்பு.

ஏற்கனவே 30 கிராமங்களை காலி செய்துவிட்டனர்.
நல்லதண்ணி குப்பம் சமீபத்தில் போலீசை விட்டு அடித்து நொறுக்கப்பட்டு காலிசெய்யப்பட்டது.
மாற்றுநிலம் மாற்றுத்தொழில் என எதுவும் வழங்கப்படவில்லை.

200 வீடுகள், பள்ளி, கோவில், வாக்குச்சாவடி கொண்ட தனுஷ்கோடி வாழத்தகுதியற்ற இடம் என்று அறிவித்தது இதனால்தான்.

கடற்கரை அருகே பழமையான ஒரு கோவிலைக்கூட இடித்துள்ளனர்.
தமிழரது பழமைக்கான அகழ்வாராய்ச்சி தளங்கள் கடற்கரையை ஒட்டி உள்ளன.
அவை அனைத்தும் அழிக்கப்படும்.

தீவுகள் தனியாருக்கு சொந்தமாகும்.
தனியாருக்கு பாதுகாப்பாக கடற்படை ராணுவ தளங்களும் அமைக்கப்படும்.
(இங்கே ஒரு ரவுடியின் வேலையை மட்டும் அரசாங்கம் செய்கிறது)

- - - - - -

சாகர் மாலா எனும் இந்த திட்டம் மக்களை மண்ணோடு சேர்த்து அழிக்க போடப்படும் ஒரு சவமாலை.

இந்தியாவில் தனி ஹெலிகாப்டர் வைத்திருக்கும் சில கார்ப்பரேட் முதலாளிகள், பத்து தலைமுறை ஆனாலும் செலவு செய்யமுடியாத பணமாக பூட்டிவைக்கப்பட உள்ளது இந்த அத்தனை கொடூரங்களின் லாபமும்.

இந்த தாய்த் திட்டத்தின் கீழ் 126 துணைத் திட்டங்கள் உள்ளன.
அவையே கதிராமங்கலம், நெடுவாசல் ஆகிய திட்டங்கள்.

இந்த திட்டம் சுற்றுசூழலுக்கு முற்றிலும் எதிரான திட்டம்.
எந்த திட்டமாக இருந்தாலும் சுற்றுசூழல் மாசடையாமல் எப்படி கையாள்வது என்று தலைப்பு பெயருக்காவது இருக்கும்.
இதில் சுற்றுசூழல் எனும் வார்த்தையே வரவில்லை.
இத்திட்டத்திற்கு எந்த சுற்றுசூழல் அனுமதியும் வாங்கப்படவில்லை.
வாங்கவும் படாது.

மோடி நியமித்த சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியேற்றவுடன் செய்த முதல்வேலை 'தொழிற்துறை வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் துறை தடையாக இருக்காது' என்றும்
'தொழில் வளர்ச்சிக்கு விரைவாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும்' என்றும் அறிவித்து
எந்த திட்டத்திற்கும் முதல் அவசியமான சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆய்வு தேவையில்லாயல் ஆக்கப்பட்டதுதான்.
சாகர்மாலா காற்றை மாசாக்கும், விளைநிலத்தை சாக்கடையாக்கும், நிலத்தை சுடுகாடாக்கும், மழையைத் தடுக்கும், கடலை மாசாக்கும், நிலத்தடி நீரை கெடுக்கும், உணவு உற்பத்தியை பாதிக்கும், இனப்படுகொலை நடத்தும், மழைப்பொழிவைத் தடுக்கும், பஞ்சம் வரவைக்கும்
கடைசியாக மனிதர் மட்டுமன்றி பல லட்சம் உயிர்களைக் கொல்லும்.
பூமியில் ஒரு பகுதியையே நாசமாக்கும்.

எண்ணூர் பக்கம் கடலில் எண்ணெய் கொட்டியபோதே வாளியால் அள்ளிக்கொண்டிருந்த லட்சணத்தில் எதை நம்பி நாம் சாகர்மாலா போன்ற நாசகார திட்டங்களுக்கு இடம் கொடுப்பது?

இதை நாம் வருமுன் தடுக்கவேண்டும்.
வரும்பொழுது தடுக்கலாம் என்று நினைக்கவேண்டாம்.
ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கிவிட்டன.
இன்னும் கொஞ்சநாட்களில் ஹிந்தியாவின் இராணுவ டாங்கிகள் வர ஆரம்பிக்கும்.
அதன்பிறகு நாம் ஒன்றும் செய்யமுடியாது.

பூமித்தாய்க்கு எதிரான இந்த திட்டத்திற்கு நாம் உடன்பட்டால் நம்மைப் போன்ற ஒரு துரோகி யாருமில்லை.

முடிந்த அளவு ஊடகங்களால் மறைக்கப்பட்டு மெல்ல மெல்ல நடந்துவரும் இந்த திட்டம் பற்றி வேறு எந்த இனத்தவருக்கும் விழிப்புணர்வு இல்லை.

தமிழர்களுக்கு மட்டுமே ஓரளவு விழிப்புணர்வு உள்ளது.
இதை தடுக்க நாம்தான் களத்தில் இறங்கவேண்டும்.
தலைமை ஏற்கவேண்டும்.

தகவல்களுக்கு நன்றி:
திரு. இங்கர்சால் (Tamil research institute)
__________________________________

எதாவது செய்யுங்கள் தமிழர்களே!

புலிகள் வழியில் ஆயுதம் தாங்கி பல ஆயிரம் பேரைக் கொன்றேனும் இந்த திட்டத்தை நிறுத்தினால் அந்த படுகொலை கூட நியாயமாகவே கருதப்படும்.

ஏனென்றால் ஆயுதப் போராட்டத்தை முன்கூட்டியே கணித்து ராணுவ மயமாக்கப்பட்ட திட்டமாகவே இது வரவுள்ளது.

ஜனநாயக வழிகள் ஹிந்தியாவில் உதவாது என்பது கண்கூடான வரலாறு!

1 comment: