Showing posts with label வையாபுரி. Show all posts
Showing posts with label வையாபுரி. Show all posts

Tuesday, 27 March 2018

வைகோ: போராளியும் நானே புரோக்கரும் நானே

போராளியும் நானே! புரோக்கரும் நானே! - வைகோ

மூன்று மாநிலங்கள் துரத்தியடித்த ஸ்டெர்லைட்டுக்கு கருணாநிதி அனுமதி அளித்து,
ஜெயலலிதா அடிக்கல் நாட்டியதில் இருந்தே மக்கள் தீவிரமாகப் போராடி வந்துள்ளனர்.

வழக்குரைஞர் வி.பிரகாஷ் என்பவர் தொடுத்த வழக்கில் அரசியல் தரகர் வைகோ பிற்பாடு வந்து செருகிக்கொண்டார்.

தமிழகத்தில் அவ்வப்போது போராட்டம் வெடிக்கும்போது தானே கலந்துகொண்டு முதல் வரிசையில் நின்று வாயாலேயே வடை சுட்டு தலைமை தாங்குவது போல காட்டிக்கொள்வார்.

ஊடகங்களும் இவரையே முன்னிலைப்படுத்தும்.

போராடும் மக்கள் சிறிது சோர்வடைந்த்தும் வைகோ பல படங்களில் வரும் யூனியன் லீடர் போல நிர்வாகத்திடம் தனியே டீல் பேசுவார்.

பிறகென்ன! கமிசன் அவருக்கும் வாக்குறுதி மக்களுக்கும் கிடைக்கும்.

இவ்வாறாக வைகோவின் மகன் வையாபுரி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் 2% பங்குதாரர் ஆனது அனைவருக்கும் தெரியும்.

(வைகோவின் மகன் ஒரு மாவட்டத்திற்கே புகையிலை சப்ளை செய்யும் டொபாக்கோ ஏஜன்ட் என்பதையும் பலர் அறிவீர்கள்)

மேலும் தம்பி ரவிசந்திரனின் மைத்துனன் ஜெகதீஸ் என்பவருக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கான எரிபொருள் ஏஜென்சியை வைகோ பிடித்துக் கொடுத்துள்ளார் என்பதையும் தற்போது அறிவோமாக.

ஏதோ ம.தி.மு.க மட்டும்தான் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருவதுபோல வைகோவின் எடுப்புகள் ஊடகங்களில் பரப்பிவருகின்றனர்.

அதை யாரும் நம்பவேண்டாம்.

ஸ்டெர்லைட் பிரச்சனை இழுத்துக்கொண்டே போவதற்கு வைகோதான் காரணம்.