Showing posts with label அதியமான். Show all posts
Showing posts with label அதியமான். Show all posts

Thursday, 10 July 2014

இளநங்கை ஔவை



ஔவையின் அழகை எடுத்துரைக்கும் பாடல்.

"இழையணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி"
(புறம் 89)

இப்பாடல் அதியமானின் தோழியான 'சங்ககால ஔவையின்' அழகைக் குறிப்பதாக அமைந்துள்ளது; இதில்,

இழையணி (நூலால் கோர்க்கப்பட்ட ஒருவகை அணிகலன்) அணிந்த எடுப்பான பின்புறம்(புட்டம்) கொண்டவள்;
மடப்பத்தன்மை (மென்தன்மை) பொருந்திய மடவரல் (பேதைப்பெண்);
மை தீட்டிய கண்களும், வாள்போன்ற (வளைந்த பளபளப்பான) நெற்றியும் கொண்ட விறலி (விறல்-நாடகக் கலையின் ஒரு பிரிவு).

%%%%%%%%%%%%%%%%

"சிறிய கள் பெறின் எமக்கு ஈயும் மன்னே!
பெரிய கள் பெறின்
யாம் பாடத் தாம் மகிழ்ந்து உண்ணும் மன்னே..."

அதியமான் இறந்தபோது ஔவை நெஞ்சுருகிப் பாடும் பாடலான இதில் ,

கள் கொஞ்சமாக இருந்தால் எனக்குக் கொடுத்துவிடுவானே!
அதிகமாகக் கிடைத்தால் என்னைப் பாடவைத்து உண்டு மகிழ்வானே!

என்று ஔவை பாடுகிறார்