Saturday 25 December 2021

பாவாணர் திருத்தம் செய்த தமிழ்த்தாய் வாழ்த்து

பாவாணர் திருத்தம் செய்த தமிழ்த்தாய் வாழ்த்து

 நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் முகமெனவே திகழ் நாவற் கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தாங்குநறும் பொட்டணியும்
தெக்கணமும் அதிற்சிறந்த தென்மொழிநற் றிருநாடும்
அத்தகும் பொட் டருமணம்போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்
உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

நூல்: தமிழ்வளம்
ஆசிரியர்: தேவநேயப் பாவாணர்

தகவலுக்கு நன்றி: ஐ வலையொளி 

No comments:

Post a Comment