காலில் விழாததுதான் குறை
ஒரு மாநில முதல்வர்,
இன்னொரு மாநில முதல்வரை
(நேரம் ஒதுக்கிக் கேட்டு) நேரில் போய் சந்திப்பது வரலாற்றில் நடக்காத கேவலம்.
முதலில் இந்த மரபை உடைத்து தன்மானத்தை விட்டு தானே நேரில் போய் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த அற்ப மனிதர் பன்னீர்செல்வம்.
(அப்படி செய்தும் நியாயமாக நமக்குத் தரவேண்டிய தண்ணீர் வரவில்லை.
ஏதோ பிச்சை கிடைத்தது)
இப்போது எடப்பாடி பழனிச்சாமி இந்த அவமானகரமான செயலை செய்யவுள்ளார்.
இந்திய ஜனநாயகத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வழியில்லைதான்.
அதற்காக இப்படியா?!
முதுகெழும்பில்லாத பிராணிகளை அரியணையில் ஏற்றினால் இப்படித்தான் மானத்தை வாங்குவார்கள்.
இனியாவது (கெட்டவனாக இருந்தாலும்) கொஞ்சமாவது நெஞ்சுரம் கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவோம்.
Tuesday 30 January 2018
காலில் விழாததுதான் குறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment