Wednesday 11 August 2021

மாற்றி யோசித்து ஒரு ஒப்பீடு

மாற்றி யோசித்து ஒரு ஒப்பீடு

 ஒரு தமிழர் பொழுதுபோகாமல் இருக்கிறார்.
 அவர் சென்னையிலிருந்து கிளம்பி இருசக்கர வாகனத்திலேயே ஆந்திர பிரதேசத்தில் நுழைந்து அப்படியே வடக்கு நோக்கி ஆந்திராவின் மறு எல்லை வரை ஓராண்டு கால சுற்றுலா செல்ல திட்டமிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

 அதற்குத் துணையாக ஆந்திரா வாழ் தமிழரான தனது நண்பருடன் விசாகப்பட்டினம் வரை சுற்றுப்பயணத்தைத் திட்டமிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

 தமிழக எல்லை தாண்டி ஆந்திராவில் நுழைந்ததும் தமிழர்களே அரசியல்வாதிகளாகவும் நடிகர்களாகவும் பெரும் செல்வந்தர்களாகவும்  இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

 ஆந்திர முதலமைச்சர் அவரது தாத்தா காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பிழைக்க வந்த குடும்பத்தின் ஒரு தமிழ் வம்சாவளி என்றும் அவரது அமைச்சரவையில் நான்கில் ஒருவர் தமிழர் என்றும் வைத்துக்கொள்வோம்.


 ஆந்திரத் தமிழர்கள் நாம் பேசும் தமிழை விட சிறிது தூய தமிழில் பேசுவதாக வைத்துக்கொள்வோம்.

 அந்த தமிழர் இருசக்கர வாகனத்தில் ஆந்திர மாநில நகர பெருஞ்சாலைகள் வழியே போய் ஆங்காங்கே தங்கி அருகிலிருக்கும் கிராமங்களுக்கும் சென்று சுற்றிப் பார்த்து விட்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

 ஆந்திர நகரங்களில் பெரிய பெரிய வீடுகள் மாளிகைகள் கட்டிடங்கள் போன்றவையும் பெரிய பெரிய வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், நகைக் கடைகள் போன்றவையும் தமிழர்களுக்கு சொந்தமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

 நகரங்களில் தமிழர்கள் சொந்த வீடு வைத்திருக்க மண்ணின் மைந்தர்களான தெலுங்கர்கள் வாடகைக்கு இருக்கிறார்கள் எனவும் வைத்துக் கொள்வோம்.

 ஆந்திர கிராமங்களில் பெரிய பெரிய நிலக்கிழார்கள், முக்கிய நபர்கள், பெரும்புள்ளிகள் தமிழர்களே என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.

 ஆந்திரா முழுவதும் தமிழர்களுக்கான சங்கங்கள் இயக்கங்கள் போன்றவை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

 பழங்கால ஆந்திர அரசர்கள் கட்டிய பிரசித்தி பெற்ற கோவில்கள் தமிழர்களால் நிர்வகிக்கப்படுவதாகவும்  ஆந்திர மக்களும் தமிழில் பாடி பஜனை செய்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 

 அரசு அதிகாரிகள், போலீஸ், அரசிடம் கான்ட்ராக்ட் எடுப்பவர்கள், தாதாக்கள், எந்தவொரு சங்கத்திலும் தலைவர் என ஆந்திராவில் எங்கே பார்த்தாலும் தமிழர்கள் அதிகாரம் பெற்று விளங்குவதாகவும் தெலுங்கர்கள் அவர்களை அண்டி நிற்கும் நிலையில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

 எந்த தெலுங்கனும் ஒரு தமிழனை எதிர்த்து எதையுமே செய்யமுடியாது  என்கிற நிலை இருப்பதாகவும் வைத்துக்கொள்வோம்.

  தமிழ்நாட்டுத் தமிழர்களை விட ஆந்திரத் தமிழர்கள் செழிப்பாகவும் வசதியாகவும் வாழ்கிறார்கள் அதுவும் ஆந்திராவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் குடியேறி வாழ்கிகிறார்கள் என்றும்
 ஒரு சில பகுதிகளில் பூர்வகுடித் தெலுங்கரைவிட பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்றும் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு கணிசமான சிறுபான்மையாக இருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

 இப்படி பனிரெண்டு மாதங்களாக வடக்கு நோக்கி சென்று விசாகப்பட்டினத்தை அவர் அடைகிகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

 அப்படி விசாகப்பட்டினத்தை அடைந்தாலும் அங்கேயும் 70 ஆண்டுக்கும் மேலாக விசாகப்பட்டின ஊரக நகரப் பகுதிகளில் கவுன்சிலர் முதல் எம்.எல்.ஏ வரை அனைவருமே தமிழர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

  இவர் போகும் இடங்களிலெல்லாம் தமிழர்கள் அவரை வரவேற்று இனப் பாசத்துடன் தமிழில் பேசி கலந்துரையாடி மகிழ்ச்சியுடன் உபசரித்து வழினுப்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

 அப்போது அந்த தெலுங்கர் எவ்வளவு மகிழ்ச்சியும் பெருமையும் அடைவார்.

 அதே அளவு மகிழ்ச்சியை நெல்லூரில் இருந்து கிளம்பும் ஒரு தெலுங்கர் தூத்துக்குடிக்கு சுற்றுப்பயணம் வந்தால் நிச்சயம் அடைவார்.

No comments:

Post a Comment