Friday 10 July 2020

ராஜபாளையத்தைக் கட்டியாளும் ராஜுக்கள்


ராஜபாளையத்தைக் கட்டியாளும் ராஜுக்கள்
விஜயநகர ஆட்சிக் காலத்தில் விஜயவாடா பகுதியை ஆண்டுவந்த பூசாபதி பரம்பரையினர் கிருஷ்ண தேவராயர் காலத்திலிருந்து விஜயநகர அரசை ஆதரிக்கும் சிற்றரசர்களாக இருந்து வந்தனர்.
தமிழகத்தில் விஜயநகர ஆட்சி பரவியபோது அதிகாரிகளாக செயல்பட ஆந்திராவிலிருந்து இந்த ராஜு குலத்தினர் கி.பி. 1600 - 1750 வரையான காலகட்டத்தில் தமிழகத்தில் குடியேறினர்.
இவர்களிடைய நான்கு "கோத்திரங்கள்" மற்றும் அதன் உட்பிரிவுகளாக "வீடு"களும் உள்ளன.
ஒவ்வொரு வீடுகளையும் ஒருங்கிணைக்கும் "சாவடி" என்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
ஒரு சாவடி வசிக்கும் பகுதி "கோட்டை" என்கிற கட்டமைப்பின் கீழ் வருகிறது.
1650 களில் பழையபாளையம் கோட்டை பூசாப்பதி சின்னராஜா என்பவரால் நிறுவப்பட்டது.
1750 களில் திம்மராஜு என்பவரால் சிங்கராஜகோட்டை நிறுவப்பட்டது.
1790 களில் ஜக்காராஜு கோட்டை துரை திம்மராஜு என்பவரால் நிறுவப்பட்டது.
(சிங்கராஜ கோட்டையைச் சேர்ந்த சில சாவடியினர் மிகவும் பிற்பாடு 1951 இல் திருவந்தாபுரம் கோட்டை (பச்சைமடம்) யை நிறுவினர்)
கோட்டையை வைத்து வாழ்விடத்தையும் சாவடியை வைத்து பங்காளி முறையையும் அடையாளம் கண்டுகொள்வர்.
வீடு என்பதை வைத்து அவர் எந்த குடும்பத்தின் வாரிசு என்று கண்டறியமுடியும்.
வேறுபட்ட கோத்திரங்களில் திருமணத் தொடர்பு வைத்துக்கொள்வர்.
  மதுரையைச் சுற்றி சிதறியவாறு குடியிருந்த இவர்கள் சொக்கநாத நாயக்கர் ஆட்சியின்போது இராஜபாளையம் பகுதியில் மொத்தமாகக் குடியேறினர்.
இன்று ராஜபாளையமே இவர்கள் உள்ளங்கையில் என்றால் அது மிகையில்லை.
1923 இல் காக்கிநாடா வில் நடந்த அனைந்திந்திய காங்கிரஸ் மாநாட்டில் ராஜபாளையத்தில் இருந்து சென்றவர் இந்துக்கூரி அரங்கசாமி ராஜா என்பவர்.
இவரை அங்கே வந்திருந்த சிந்தலப்பட்டி பப்பி ராஜு என்பவர் சந்திக்கிறார்.
இதில் இருவரும் ஒரே சாதியினர் என்பதையும் 250 ஆண்டுகள் தாண்டியும் தாய்நிலத்தில் இருந்து 300 மைல்கள் அப்பால் தள்ளியிருந்தாலும் ராஜபாளையம் ராஜு சமுதாயம் தமது தெலுங்கு இன, மொழி, குலம், கோத்திரம், பழக்கவழக்கம் ஆகியனவற்றை அப்படியே பேணிவருவதையும் அறிந்து ஆச்சரியமடைகிறார் பப்பி ராஜு.
இவ்விருவரும் சேர்ந்து மீண்டும் இருதரப்புக்கும் இடையே தொடர்புகளைப் புதுப்பித்துக் கொள்ள முயன்றனர்.
சில திருமண உறவுகள் கூட ஏற்பட்டன.
ஆனால் இதில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை.
ஆனால் ராஜபாளைய ராஜுக்கள் தமக்குள் ஒருங்கிணைய இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.
1927 இல் ஒரு கல்வி அறக்கட்டளை ஏ.கே.டி தர்மராஜா என்பவரால் நிறுவப்பட்டது.
1931-1932 இல் தேனி நகர முதல் பஞ்சாயத்து பிரசிடென்ட் ஆக என்.ஏ.கோண்டு ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1932 இல் ஸ்ரீ ஜெயராம் மோட்டார் என்கிற நிறுவனம் ரங்கசாமி ராஜா குடும்பத்தினரால் தொடங்கப்பட்டது.
1947-1948 ராஜபாளையம் சேர்மனாக என்.ஏ.பி. அழகிரிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1949 - 1952 மதராஸ் மாகாண முதலமைச்சராக பூசாப்பதி பி.எஸ்.குமாரசாமி ராஜா பதவி வகித்தார்.
மேலும் 1952-1954 ஓரிசா கவர்னராகவும் பதவி வகித்தார்.
பூசாப்பதி பி.ஏ.சி. ராமசாமி ராஜா ராஜபாளையத்தின் முதல் சேர்மன் (1941-1947) ஆக பதவிவகித்தார்.
[இதன்பிறகு ராஜபாளையம் சேர்மன் பதவி ராஜுக்களின் பரம்பரை சொத்து என்றே ஆகிவிட்டது]
இவரே ராம்கோ குழுமத்தை நிறுவியவர்.
இவரது மகன் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா ராம்கோ நிறுவனத்தை பெரிய அளவில் வளர்த்தெடுத்தார்.
பேரன் வெங்கட்ராம ராஜா காலத்தில் இது 7000 தொழிலாளர்கள், 2500 கோடி சொத்துமதிப்பு என பெரிய நிறுவனமாக வளர்ந்தது.
பி.எல்.துரைசாமி ராஜா ராஜபாளையம் நகராட்சியின் இரண்டாவது சேர்மன் (1948-1952) ஆக பதவி வகித்தார்.
1952-1957 வரை ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ வாக டி.கே.ராஜு இருந்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட தியாகியான கே.எம். சங்கர ராஜா 1959-1964 வரை ராஜபாளையம் சேர்மனாக இருந்துள்ளார்.
கே.ஏ. ஐயாசாமி ராஜா வடகிழக்கு மாநிலங்கள் ஒன்றாக இருந்தபோது அதன் ராணுவ அதிகாரியாக 1966-1975 வரை இருந்துள்ளார்.
அருணாச்சல பிரதேசம் உருவானபோது அதன் லெப்டினல் கவர்னராக 1975-1977 வரை இருந்தார்.
இவரது சகோதரர் சிங்கப்ப ராஜாவும் இந்திய பாதுகாப்பு பணியில் 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
பங்களாதேஷ் விடுதலைப் போரில் தென்னிந்திய படையணிக்கு இவர் தலைமை தாங்கியுள்ளார்.
மேலும் இந்திய அமைதி காக்கும் படையில் (ஐநா சார்பில்) ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் பணியாற்றியுள்ளார்.
1962-1967 வரை ராஜபாளையம் எம்.எல்.ஏ வாக ஏ.ஏ. சுப்பராஜா இருந்துள்ளார்.
இவர் ராஜபாளையம் சேர்மனாக தொடர்ந்து ஐந்துமுறை தேர்ந்தெடுப்பட்டவர்.
1970 இல் கோட்டைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து சிந்தலப்பட்டி எஸ்.ஆர். நாராயண ராஜா தலைமையில் ராஜபாளைய சத்திரிய மகா சபை (தெலுங்கில் - நாலுகு கோட்ட கும்ப்பு)  தொடங்கப்பட்டது
(இவரது பெயரை வைத்து பார்க்கும்போது முதலில் பார்த்த பப்பிராஜு வாரிசு என்று தோன்றுகிறது).
இன்றுவரை ஒரு நல்ல சமூதாய நீதிமன்றமாக செயல்பட்டு வருகிறது.
1980 இல் சத்திரிய சேவா சமிதி என்ற அமைப்பு  ஐ.பி.ஆர் ரகுபதி தலைமையில் தொடங்கப்பட்டு "கொத்தலு" எனும் பத்திரிக்கையும் தொடங்கப்பட்டது.
என்.ஆர். அழகராஜா தேனி யின் அல்லிநகரம் சேர்மேனாக 1986-1991 வரை இருந்தார்.
மேலும் தேனி தொகுதி எம்.எல்.ஏ வாக 1996-2001 இருந்துள்ளார்.
பூசாப்பதி கந்தசாமி ராஜா வின் மனைவியான தாயம்மாள் 2001 இல் கடையநல்லூர் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தகவல்களுக்கு நன்றி :-
நூல்: Rajapalayam Kshatriya Rajus - The originand nature of the Community.
ஆசிரியர்: I.B.R. Ragupathi Raja.
இந்நூலில் 2002 க்கு பிறகான தகவல்கள் இல்லை.
சிமென்ட் ஆலைகள், மில்கள், கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், அரசியல் என ராஜுக்கள் தமிழகத்தின் எந்த சாதியையும் விட பல படிகள் முன்னேறிய நிலையில் உள்ளனர்.

2 comments:

  1. ஒருவர் இப்படி சொல்கிறார் "ஆரியம் தமிழர் பண்பாட்டை சிதைக்க வடுகர்கள் காரணமில்லை, சைவ சித்தாந்தமும், கோயில் நிர்வாகம் செய்த
    நம் முன்னோர்களும் எதிர்க்காததும்தான் காரணம்."

    ReplyDelete
  2. முதலில் மனித நேயம் பேணுவோம்

    ReplyDelete