Thursday 11 November 2021

மொழி வரைபடம் 1822


மொழி வரைபடம் 1822 

கி.பி. 1822 இல் Serampore missionary வெளியிட்ட இந்திய மொழிவரைபடத்தில் ஒரு பகுதி இங்கே தரப்பட்டுள்ளது.

 வரைபடத்தில் தெளிவாக இருப்பது ஆறுகள் மட்டுமே!

அவற்றைக் கணக்கில் கொண்டு முடிந்தவரை சரியாக கணித்து வரைந்துள்ளேன்.

இக்கோடு செல்லும் வழியில் வடக்கில் உள்ள தற்போதைய பெயர்களையே தருகிறேன்.

 இந்த எல்லைக்கோடு pulikat ல் தொடங்கி வட மேற்காக swrnamuki ஆறு தொடங்கி வளையும் இடத்தில் உள்ள naidupet வழியாக cheyyaru தொடங்கும் இடமான rayachoty வரை செல்கிறது.

[இதன்படி காளத்தி, திருப்பதி தமிழ்ப் பகுதிகள் என்றாகிறது.
 சித்தூர் தெளிவாகவே தமிழ்ப் பகுதி என்று குறிக்கப்பட்டுள்ளது.]

பிறகு இக்கோடு தெற்காக திரும்பி சிறிது உள்வாங்கி தர்மபுரி அருகே சிறிது வெளிநோக்கிச் சென்று சரியாக (காவிரி ஆறு தெற்கு நோக்கி வளையும்) ஒகேனக்கல் வரை வருகிறது.

[இதன்படி கிருஷ்ணகிரி நமது கொள்ளேகால் நமது இல்லை]

பிறகு மேற்கு நோக்கி வளைந்து (கபினி மற்றும் காவரி) ஆறுகள் சேருமிடமான மேகதாது க்கு சற்று முன்னே ஆறு வளையும் இடம் வரை செல்கிறது
(அதாவது தற்போதைய எல்லை).

[இதன்படி மேகதாட்டு அணைப்பகுதி நமது இல்லை]

 இதன் பிறகு எல்லைக்கோடு காவிரி ஆற்றின் மறுபுறம் செல்கிறது ( ஆனால் தற்போதைய தமிழக எல்லை ஆற்றை ஒட்டி அதிகம் உள்வாங்குகிறது).

 எல்லைகோடு பவானி ஆறு தொடங்கும் கொடநாடு பகுதியை கேரள, கன்னட, தமிழக எல்லைப் புள்ளியாக குறிக்கிறது.

 தொடர்ந்து இக்கோடு தெற்காக நொய்யல் ஆறு தொடங்கும் இடத்தைக் கடக்கிறது.

[இதன்படி பாலக்காடு நகரம் வழியாக எல்லைக் கோடு செல்கிறது. இங்கே சிறிது வெளிநோக்கி வளைந்திருப்பதால் பாலக்காடு நகரம் நமது எனலாம்.]

பிறகு பெரியாறு மற்றும் அமராவதி ஆறு எதிர் எதிர் திசையில் தொடங்கும் இடத்தைக் கடக்கிறது. 
இது தற்போதைய வால்பாறை க்கு சற்று மேற்கே உள்ள எல்லை வளைவு எனலாம்.

இங்கிருந்து மலைகள் உள்நோக்கி வளைய எல்லைக் கோடு வெளிநோக்கி வளைந்து கொச்சி அருகே செல்கிறது 

[இதன்படி கோட்டயம் வரை நமது]

இதன்பின் கொல்லம் பகுதி வரை கடற்கரை விடுபடுகிறது.
[அதாவது காயம்குளம் மற்றும் கொல்லம் ஆகியன நமது. திருவனந்தபுரம் திட்டவட்டமாக நமது என்றாகிறது]

ஆனால் இவ்வரைடபத்தில் ஈழம் விடுபடுகிறது.

 கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்றவற்றின் வடக்கு முழுவதும் மராத்தி என்று குறிக்கப்பட்டுள்ளது. 

 அதாவது தமிழகப் பகுதிகளை சரியாக குறித்துள்ளனர் மற்ற பகுதிகள் தோராயமாக வரைந்துள்ளனர் எனலாம்.

No comments:

Post a Comment