Saturday 11 September 2021

மேகதாது அணைக்கு பதிலடி

மேகதாது அணைக்கு பதிலடி

 கன்னடர்கள் எப்படியும் மேகதாது அணையைக் கட்டத்தான் போகிறார்கள். அப்படிக் கட்டினால் நாம் கடலில் இருந்து கர்நாடகாவுக்கு தமிழகம் வழியே செல்லும் மேகங்களைத் தமிழக எல்லைக்குள்ளேயே தடுத்து மழை பொழிவிக்க வேண்டும்.
தமிழகம் நீரில் தன்னிறைவு பெற்றாலும் விடாமல் மழை மேகங்களை கடலிலேயே தடுத்து மழையாக்க வேண்டும்.

 இப்படி ஐந்து ஆண்டுகள் முழுமையாகத் தடுத்தால் கர்நாடகாவில் பஞ்சம் வந்து கன்னடர் தமிழர் முன் பணிவர்!

கர்நாடக எல்லையை மூடி தமிழகத்தில் உள்ள கர்நாடக நிறுவனங்கள் மற்றும் பொருட்களுக்குத் தடைவிதித்து கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்து மின்சாரத்தையும் நிறுத்திவிட்டால் மூன்று ஆண்டுகளில் பணிந்துவிடுவர்!

காவிரி ஆற்றுக்குக் குறுக்கே கர்நாடகா கட்டியுள்ள அனைத்து சட்டவிரோத அணைகளையும் இடிக்கச் சொல்லவேண்டும்.

பிறகு மேகங்களை விடவேண்டும். அதன் பிறகே அவை மலையில் மோதி குளிர்ந்து மழை பெய்து ஆறாக மாறும்!

முறை: குளிர் மேகங்களைத் தடுத்து செயற்கை மழையை பொழிவிக்க மழை மேகங்களில் யூரியா, சமையல் உப்பான சோடியம் குளோரைடு, அம்மோனியம் நைட்ரேட், உலர்பனி ஆகியவற்றைத் தூவி மழைமேகங்களின் கனமானது அதிகரிக்கப்படுகிறது.  இப்போது மேகங்களின் மீது வெள்ளி அயோடைடு, உலர் பனிக்கட்டி ஆகியவை தூவப்பட்டு மேகங்கள் குளிர்விக்கப் படுகின்றன. குளிர்ந்த மேகங்களில் இருந்து நீர்த்துளியானது மழையாகப் பெய்கிறது.

 இப்படிப் பெய்யும் மழை ரசாயனத் தாக்கம் கொண்டது.
 சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இதைச் செய்யக்கூடாது.

பி.கு: தமிழகம் 1985 மற்றும் 2003 வறட்சி காலத்தில் (மழைமேகங்கள் இல்லாத சூழலில்) செயற்கை மழை பெய்விக்க முயற்சித்து எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

இதுவே நம்மிடம் ராணுவம் இருக்கிறது என்றால் இயற்கையை தொந்தரவு செய்யாமல் கர்நாடகா மீது படையெடுத்துச் சென்று அத்தனை அணைகளையும் உடைக்கவேண்டும். தமிழர் இழந்த பகுதிகளை மீட்கவும் வேண்டும். குடகு தனிநாடாக உதவவும் வேண்டும்.

ஏனென்றால் சிங்களவர் போல மக்களை நேரடியாகக் கொல்வது மட்டும் இனப்படுகொலை அல்ல!
 ஹிந்தியர் போல மீத்தேன் எடுக்கிறேன் என்று வேளான் மண்டலத்தை அழிப்பதும்,
அண்டை மூன்று இனத்தார் போல தண்ணீரைத் தடுப்பதும் கூட இனப்படுகொலையே!

No comments:

Post a Comment