Sunday 10 May 2020

பல்லவர் கட்டிய திருப்பதி



திருப்பதி கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கல்வெட்டு ஆய்வு 1920 இல் மஹந்த் ப்ரயாக்தாஸ் என்பவரால் தொடங்கப்பட்டது.
ஆனால் திருப்பதி வரலாறு என்றாலே நினைவுக்கு வந்து நிற்பவர் சாது சுப்பிரமணிய சாஸ்திரி ஆவார்.
1922 லிருந்து 1933 வரை திருப்பதி வட்டாரத்தில் 1,150 கல்வெட்டுகளை இவர் மொழிபெயர்த்துள்ளார்.
இதில் பெரும்பாலானவை தமிழ் மொழியில் உள்ளன.
அதற்கு அடுத்ததாக கன்னட கல்வெட்டுகள் உள்ளன.
தெலுங்கு கல்வெட்டுகள் சிலவையே!
கி.பி.830 ஆம் ஆண்டைச் சேர்ந்த பல்லவர் விஜயதந்தி வர்மன் என்பவரது கல்வெட்டே மிகப் பழமையானது.
மேற்கண்ட தகவல்கள் 2009 ஆம் ஆண்டு திருப்பதி முதல் பிரகாரத்தின் உட்பகுதி தங்கத் தகடுகளால் மூடப்பட இருந்தபோது 80 கல்வெட்டுகள் மறைக்கப்பட இருப்பதாக [தலைப்பு: Gold coat to hide Tirumala carvings (Sep 22, 2009)] டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட கட்டுரையில் உள்ளவை ஆகும்.
கோவிலின் இதயப் பகுதியான இதில் இருக்கும் இந்த 80 கல்வெட்டுகளிலும் 55 தமிழ், 15 கன்னடம், 10 தெலுங்கு கல்வெட்டுகள் என தமிழே அதிகம்.
இதில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு பழமையான பல்லவர் கல்வெட்டும் மறைக்கப்பட்டது.
எதை மறைத்தாலும் சாது சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியுள்ள நூல்கள் இன்றும் திருப்பதி தமிழர்களுக்குச் சொந்தம் என்பதற்குச் சான்றாக இருக்கின்றன.
படம்: 1930 இல் S.Subrahmanya Sastri வெளியிட்ட Early inscriptions எனும் நூலில் இடம்பெற்றுள்ள பல்லவர்காலத் தமிழ்க் கல்வெட்டு பற்றிய பக்கம்




1 comment:

  1. உங்க முகநூல் பக்கம் என்னாச்சு ?

    ReplyDelete