Friday, 6 June 2025

ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிப்பு

ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிப்பு
நமக்கு எல்லா வசதிகளையும் செய்வது மாநில அரசு. மாநில அரசை விட அதிகம் வரி வாங்கும் மத்திய அரசு நமக்கு செய்வது ரயில், தபால், ராணுவ பாதுகாப்பு போன்றவை மட்டுமே!
மத்திய அரசு எப்படி தமிழகத்தைச் சுரண்டி கொழுக்கிறது என்பதை பலமுறை சான்றுகளுடன் பார்த்துள்ளோம்.
தற்போது மத்திய அரசால் நமக்கு ஓரளவு பலனளிக்கும் ரயில்வே பற்றி பார்ப்போம்.
கேரளாவுடன் ஒப்பிட்டால் தமிழகம் ரயில்வே வளர்ச்சியில் 20 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது.
இத்தனைக்கும் இவ்விரு மாநிலங்களும் ஒரே (தென்னக ரயில்வே) மண்டலத்தில் உள்ளன.
அதாவது மாநில எல்லைகள் வேறு ரயில்வே எல்லைகள் வேறு (காண்க: படம்)
இதில் தென்னக ரயில்வே மண்டலத்துக்கு ஒதுக்கப்படும் நிதியும் திட்டங்களும் கேரளாவுக்கு பலனளிக்கும் வகையில் செலவு செய்யப்படுகின்றன.
இது பற்றி 02.09.2022 இல் தினகரன் வெளியிட்ட செய்தி வருமாறு,
கேரளாவுக்கு அடிக்கும் ஜாக்பாட்!
ரயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிப்பு:
கிடப்பில் கிடக்கும் நீண்ட கால கோரிக்கைகள்
நாகர்கோவில்:
கேரளாவில் ரயில்வே துறை சம்பந்தமான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி, துவங்கி வைத்துள்ளார். மேலும் பல்வேறு புதிய ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளார்.
இதில் முக்கியமாக 750 கோடியில் 27 கி.மீ தூரம் உருவாக்கப்பட்ட குருப்பந்தாரா - கோட்டயம் - சிங்கவனம் புதிய ரயில் பாதை இரு வழி பாதை திட்டம்
மற்றும் 76 கோடியில் கொல்லம் - புனலூர் மின்மயமாக்கல் திட்டம் உள்ளிட்டவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இது தவிர எர்ணாகுளம் சந்திப்பு, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ள இருப்பு பாதை தடத்தில் எர்ணாகுளம் - கோட்டயம்- காயங்குளம் மார்க்கத்தில் புதிய மெமு ரயில் சேவையும் துவங்கப்பட்டுள்ளது.
கொல்லம் - புனலூர் மார்க்கத்தில் இயங்கி வந்த இரு ரயில்கள் மெமு ரயில் ஆக மாற்றம் செய்யும் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது.
கேரளாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டத்தில் கொல்லம் - புனலூர் மின்மயமாக்கல் திட்டம் முழுக்க முழுக்க தமிழகத்தில் உள்ள மதுரை கோட்டம் நிர்வகித்து வருகிறது.
கோட்டம் எதுவாக இருந்தாலும் கேரள மாநிலம் அதிகளவில் புதிய ரயில்களை பெறுகிறது.
ஆனால் தமிழகம் அந்தளவுக்கான ரயில்வே திட்டங்களை பெற முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டங்களும் அதை நிரூபிக்கும் வகையில் இருப்பதாக ரயில் பயணிகள் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அப்படியே தமிழகத்தில் புதிய ரயில்வே திட்டம் வந்தாலும் கூட, கேரள பயணிகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன்படும் விதத்தில் தான் இயக்கப்படுகிறது என்பதும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருவனந்தபுரம் - திருநெல்வேலி மெமு ரயில் சேவை இன்னும் கனவாகவே உள்ளது.
இந்த பகுதி மின்மயமாக்கல் 2014-ம் ஆண்டு நிறைவு பெற்று இதுவரை ரயில்வே துறையால் மெமு இயக்கப்படவில்லை.
நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கத்தில் இயங்கும் பழைய ரயில்கள் மாற்றம் செய்து விட்டு மெமு ரயில்களாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை தெற்கு ரயில்வே தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
இதே போல் சென்னை முதல் மதுரை வரை இருவழி பாதை பணிகள் முடிந்து 5 வருடங்கள் ஆகி விட்டது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதை இரு வழியாக மாற்றும் பணிகள் 80 சதமானம் முடிவு பெற்றுவிட்டன. ஆனாலும் இந்த பாதையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பதும் இன்னும் பரிசீலனை செய்யப்படாமல் உள்ளது.
சென்னையிலிருந்து செல்லும் ரயில்களான
தாம்பரம் - ஐதராபாத் சார்மினார்,
சென்னை- புதுடெல்லி ஜிடி எக்ஸ்பிரஸ்,
சென்னை - ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
போன்ற ரயில்களை மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையிலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
தமிழ்நாட்டில் சமீபத்தில் திண்டுக்கல் - பொள்ளாச்சி, திருவாரூர் - காரைக்குடி, மதுரை - தேனி ஆகிய பகுதிகள் அகல பாதையாக மாற்றம் செய்யப்பட்டு விட்டது. இதில் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் ரயில் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக ரயில் வசதி இல்லாத தேனி மாவட்ட மக்களுக்கு கூட தேனி - சென்னை புதிய ரயில் சேவையை தொடங்க வில்லை.
இவ்வாறு செய்வதை பார்க்கும் போது ரயில்வே துறையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்பதை நன்கு அறிய முடிகின்றது என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் செயலாளர் எட்வர்ட் ஜெனி கூறினார்.
கடந்த இருபது வருடங்களாக ஒவ்வொரு ரயில் பட்ஜெட்டில் தமிழகத்தை போல் எதிர்கட்சி எம்.பிக்கள் அதிகம் உள்ள கேரளா ஜொலித்தது.
பாரதிய ஜனதா ஆட்சியிலும் இது தொடர்ந்து கொண்டே வருகிறது.
ஆனால் தமிழ்நாடு ரயில்வே துறை வளர்ச்சியில் கேரளத்தை விட இருபது வருடம் பின் தங்கி காணப்படுகிறது.
இந்த நிலையை மாற்ற தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
4 செப்., 2022 

கண்ணுக்கு கண்

கண்ணுக்கு கண்!

 தமிழர் எல்லைப் பகுதி கர்நாடகத்துடன் சேர்க்கப்பட்ட காரணத்தால் தமிழகத்தில் ஒரு கன்னடர் இருக்கிறார் என்றால் எதிர்ப்பக்கம் கர்நாடகத்தில் இரண்டு தமிழர்கள் இருக்கின்றனர்!
கலவரம் வரும் சூழல் உருவாகி உள்ளது!
 அப்படியே தமிழருக்கு இரண்டு கண்கள் போகும் அதேநேரத்தில்  கன்னடருக்கு ஒரு கண் தான் போகும் என்றாலும் நாம் எதிர்த்து சண்டையிட வேண்டும்!
 1991 இல் கன்னடர் தமிழரை அடித்தபோது வீரப்பனார் திருப்பியடித்தார்!
 அவர் இருந்த வரை அடுத்த கலவரம் வரவில்லை!
 தமிழர்களான நமது ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒரு வீரப்பன் இருக்கிறான்! 
 நாம் இம்முறை நிமிர்ந்து நிற்போம்!
அடிக்கு அடி கொடுப்போம்! 
 துளு, குடகு, கொங்கணி என சிறுசிறு இனங்களையும் மராத்திய பேரினத்தையும் நம் அணியில் சேர்ப்போம்!
கன்னடர் கொட்டத்தை அடக்க நம்மால் முடியும்!
 இறுதி வெற்றி நமதே! 

இறுதிக் கட்டத்தில் கன்னடர் தமிழர் மோதல்

இறுதிக் கட்டத்தில் கன்னடர் தமிழர் மோதல் 

 இதே நாம் தனிநாடாக வல்லரசாக இருந்திருந்தால் கன்னடர் தமது மொழி தமிழில் இருந்து வந்தது என்பதை ஒத்துக்கொண்டு இருப்பார்கள்!
 கன்னடம் தமிழில் இருந்து வரவில்லை என்று கன்னடர் சொல்வது ஒருவன் தனக்கு அப்பன் பெயரே தெரியாது என்று சொல்வதைப் போன்றதாகும்!
 கன்னடரை நாம் குறைத்து எடைபோடக் கூடாது!
நமக்கு அழிவு அவர்களால்தான் நடக்கப் போகிறது!
 இது 2000 ஆண்டுகள் தொடரும் பகை!
 அதாவது கரிகாலன் தந்தை காலத்தில் இந்திய துணைக்கண்டத்தை விழுங்கிவிட்டு எஞ்சியிருந்த தமிழகத்தை நோக்கி வந்த மௌரிய பேரரசை வழிநடத்தி வந்தது கர்நாடகப் பகுதி வடுகரே! 
 அன்று மூவேந்தர் கூட்டணிப்படை பெரும்பாடுபட்டு இப்படையெடுப்பை முறியடித்தது!  
 கர்நாடகத்தின் பாழி நகரில் இருந்த படைமையத்தை அழித்தே போர்முடிவுக்கு வந்தது.
 அப்போது கன்னடம் ஒரு தனிமொழியாகவே இல்லை திரிந்த மொழியாக இருந்தது!
 அதாவது கன்னடர் கன்னடராவதற்கு முன்பே நமக்கு எதிரிகளாகி விட்டனர்.
 அதன் பிறகும் கன்னடர் மூன்று முறை தமிழகத்தைப் புரட்டிப்போட்டு உள்ளனர்!
 வடதமிழகம் தவிர்த்து பாண்டிய நாடு வரை பிடித்த களப்பிரர் கன்னடரே! 
 விஜய நகர அரசாக தமிழகத்தைப் பிடித்ததும் கன்னடர்தான்!
 (கன்னடரால் நாயக்கர்களாக நியமிக்கப்பட்ட தெலுங்கர் பிறகு தனியரசுகளை நிறுவினர்.
 இந்த நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பெருமளவு ஆந்திராவிலிருந்து தெலுங்கர் குடியேறி நிலவுடைமை பெற்று தமிழகத்தில் வலுவாக நிலைபெற்றனர்)
 நாயக்கர் காலத்திலும் தென்தமிழக பாண்டிய சிற்றரசுகளை ஒழிக்க முடியாமல் திணறிய தெலுங்கு நாயக்கர்கள் வித்தலராயன் (அ) வெங்கலராசன் எனும் கன்னட தளபதியை அழைத்து வந்தே பாண்டிய வாரிசுகளை இல்லாதொழித்தனர்.
 இந்த படுகொலைக்கு பரிகாரமாக திருநெல்வேலியில் இவன் வெட்டியதே கன்னடியன் கால்வாய் எனும் மாபெரும் கால்வாய் என்று நம்பப்படுகிறது! 
 வித்தலராயன் பற்றி மறைத்து தாமே பாண்டியரை வென்றதாக நாயக்கர்கள் காட்டிக்கொண்டனர்!
 கன்னடியன் கால்வாய்க்கு வேறொரு கட்டுக்கதையை எழுதிவைத்தனர்! 

 தமிழரும் சளைத்தவர் இல்லை!
 இந்திய துணைக்கண்டத்தின் மையம் அதாவது கன்னோசி வரை வென்ற புலிகேசி தமிழகத்தில் பல்லவ நாட்டை நிர்மூலமாக்கிவிட்டு பாண்டிய நாடு வரை வந்து கொடி நாட்டிச் சென்றவன்!
 நமக்கு ராசராசன் போல கன்னடருக்கு புலிகேசி!
 பல்லவர் மீண்டெழுந்து பாண்டியருடன் கைகோர்த்து சாளுக்கிய அரசை வென்று தலைநகர் வாதாபியை அழித்து புலிகேசியின் கொட்டம் அடக்கினர். 
 ராசேந்திரன் படையெடுத்த காலத்தில் கன்னட நாட்டு பிராமணரையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்றதாக அந்த நாட்டு கல்வெட்டு கூறுகிறது!
 (சில ஆண்டுகளுக்கு முன் அன்னிகேரி எனுமிடத்தில் பல எலும்புக்கூடுகள் ஓரிடத்தில் கிடைத்த போது இந்த படுகொலை சோழர் செய்தது என்று கன்னடர் வதந்தி பரப்பினர்)
 மைசூர் அரசு திருமலை நாயக்கர் காலத்தில் தமிழகத்தின் மீது படையெடுத்து மதுரைக்கு மிக அருகேவரை முன்னேறி வந்தபோது ராமநாதபுரம் மறவர் படைகள் வந்துதான் அப்படையெடுப்பை திருப்பியடித்து புறப்பட்ட இடத்திற்கே தள்ளியது!
 இப்படி வரலாறு நெடுக தமிழரும் கன்னடரும் மோதிக்கொண்டே இருந்துள்ளனர்!
 தமிழக கன்னட எல்லையும் கூட இழுபறியிலேயே இருந்து வந்துள்ளது!
 அதாவது நம் எல்லையை அவர்கள் ஆக்கிரமிப்பதும் நாம் மீட்பதும் என!
 கர்நாடகத்திற்குள் ஏறத்தாழ அம்மாநில மத்தியில் உள்ள தமட்டக்கல் எனுமிடத்தில் 6 ஆம் நாற்றாண்டு தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது! 
 அதில் ஏழூர் சாத்தன் எனும் பெயருள்ளது.
 அப்போது அங்கே தமிழர் அரசாட்சி பரவியிருக்கவும் இல்லை! 
தமிழகத்தினுள் இத்தகைய பழமையான கன்னட சான்று எதுவும் கிடையாது!
 1956 இல் தமிழகத்திற்கு சேரவேண்டிய எல்லை மாவட்டங்களை எத்தனையோ சான்றுகள் இருந்தும் தமிழகத்திற்கு கிடைக்கவிடாமல் பறித்த கன்னடர் ஏற்கனவே இருந்த எல்லையைத் தாண்டி அன்றைய கோவை மாவட்ட ஒரு பகுதியையும் எடுத்துக் கொண்டனர்!
 திராவிட மாயையில் கிடந்த , கிடக்கும் தமிழர் இதை மீட்க முயலவே இல்லை!
 இதுவே நமது இன்றைய தோல்விக்குக் காரணம்!
 குடகு மொழி பேசும் கொடகர் பகுதியில் காவிரி உற்பத்தி ஆகிறது! 
 அவர்களையும் அடக்கி ஒடுக்கிவிட்ட கன்னடர் காவிரி நீரை மறித்து தேவையில்லாமல் தேக்கி தமது மாநில தொழிற்சாலைகளுக்கு வழங்கியும் தமிழகத்தில் அவர்களின் பங்காளிகளான திராவிட அரசுகள் நீரில்லாத ஆற்றில் மணலை அள்ளி விற்றும் மனிதத்தன்மை அற்ற அரசியல் செய்கின்றனர்!
 கேட்டால் கன்னடர்கள் நல்லவர்களாம் சில கன்னட வெறியர்கள் இப்படி அரசியல் செய்கின்றனராம்!
 எனவே நாம் இருவருமே சண்டை போடாமல் இருக்க வேண்டுமாம்!
 இதுவும் ஒரு திராவிடப் பிரச்சாரம்!
அடிப்பவனையும் அடிவாங்குபவனையும் ஒரே தரத்தில் வைப்பது!
 ஒரு உயிருக்கு தண்ணீரை மறுப்பது எவ்வளவு பெரிய பாவம் என்று விலங்குகளுக்கு கூட புரியுமே?!
 கன்னட இனத்தில் ஒருவருக்கு கூடவா இந்த அறிவும் இரக்கமும் இல்லை!
 கர்நாடக ஆறுகள் ஆண்டுக்கு ஆயிரம் டிஎம்சி கடலில் சென்று கலக்கின்றன. 
 ஆனால் தமிழகத்துக்கு வரும் 100 டிஎம்சி நீரை மறித்து அரசியல் செய்கின்றனர்.
 கேட்டால் கடலில் கலக்கும் 10 டிஎம்சி காவிரி நீரை சேமிக்கிறார்களாம்.
 கன்னடரோ உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டது இல்லை!
 அவர்கள் பணிந்தது வீரப்பனார் நீட்டிய துப்பாக்கிக்கு மட்டும்தான்!
 இன்றுவரை தமிழகத்தை ஒரு வெள்ள வடிகாலாக ஒரு சாக்கடையாகவே  பயன்படுத்துகின்றனர் கன்னடர்.
 இதனால் நெற்களஞ்சியமான டெல்டா விவசாயம் பெரும்பங்கு அழிந்துவிட்டது.
 மன்னார்குடி வரை நிலத்தடியில் கடல் நீர் புகுந்துவிட்டது.
 ஹிந்திய அரசு இதைத் தட்டிக்கேட்கவில்லை.
 ஹிந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இத்தனை ஆண்டுகால பகையிருந்த போதும் இப்போது வரை சிந்து நதியை மறிக்கவில்லை!
 தற்போது ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளனரே தவிர நடைமுறையில் எதுவும் செய்யவில்லை! 
 ஹிந்தியாவை நம்பி பல ஆண்டுகளாக போராடி அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தையும் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக பயன்படுத்துகிறது.
 பாகிஸ்தானுக்கு தண்ணீர் விடும் ஹிந்தியருக்கு ஒரு தமிழ்க் குழந்தை தண்ணீர் குடிப்பதில் உடன்பாடில்லை!
 ஹிந்தியர் ஆதரவுடன் காவிரி ஆணையத்திலேயே தீர்மானத்தை நிறைவேற்றி மேகதாது அணை கட்ட கன்னடர் தயாராகிவிட்டனர். 
 இந்த ஆணையம் சூழ்ச்சியாக டெல்டா கால்வாய்களைத் தூர்வார கடன் பெற்றுத்தருவதாக ஒரு அம்சத்தைச் சேர்த்து தமிழக அரசை ஆணைய கூட்டத்திற்கு வரவழைத்து மேகதாது கட்ட தீர்மானம் கொண்டுவந்து தமிழகமும் புதுச்சேரியும் எதிர்த்தும் கூட அத்தீர்மானம் நிறைவேறியுள்ளது.
 இதன் மூலம் வெளிநாட்டு கடனாக தமிழக அரசுக்கு கிடைக்கும் 1400 கோடியில் ஏறத்தாழ 40% திமுகவுக்கு கமிசன் கிடைக்கும்.
 இந்த பணத்திற்காக தீர்மானம் நிறைவேறும் என்று தெரிந்தும் பல ஆண்டுகள் செய்தது போல புறக்கணிப்பு செய்யாமல் கூட்டத்தில் கலந்துகொண்டு பிறகு வெளியே வந்து அயோக்கித்தனம் செய்துவிட்டார்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாடகமாடி பேட்டி கொடுக்கிறார்.
 அதாவது இன்னும் சில ஆண்டுகளில் சொட்டு நீர் கூட தமிழருக்கு கிடைக்காது.
 5கோடி தமிழர்களுக்கு தண்ணீர் இருக்காது!
 இது ஒரு வெளிப்படையான இனப்படுகொலை ஆகும்.
 இந்த இனப்படுகொலை குற்றவாளிகளைத் தான் அதுவும் அவர்கள் வெளிப்படையாக இனவெறுப்பு பேசிக் கொண்டிருந்த போது தான்  தமிழக முதலமைச்சரே நேரில் சென்று பிரச்சாரம் செய்து ஆட்சியில் அமர்த்தினார்.
 ஈழத்தில் ஹிந்தியாவும் சிங்கள அரசும் செய்த இனப்படுகொலைக்கு துணைநின்றது போலவே 
 தமிழகத்திலும் ஹிந்தியரும் கன்னடரும் செய்யவுள்ள நேரடி இனப்படுகொலைக்கு திமுக துணை நிற்கிறது.
 நியாயப்படி தமிழர்தான் கன்னடரை கொலைவெறி கொண்டு அடிக்க வேண்டும்.
 ஆனால் கன்னடர் தொடர்ந்து தமிழரை அடிப்பதும் கொல்வதும் நடக்கிறது.
1982 இல் கன்னடத் திணிப்பை எதிர்த்து போராடிய நான்கு கோலார் தமிழர்களை சுட்டுக் கொன்றதன் மூலம் தொடங்கியது கொலைத் தாண்டவம். 1991 இல் மிகப்பெரிய கலவரம் நடத்தி நூறு பேர் வரை கொன்று பல நூறு பேரை முடமாக்கி 2 லட்சம் தமிழரை அடித்து விரட்டிவிட்டனர் கன்னடர்.
 தொடர்ச்சியாக அவ்வப்போது தமிழரைத் தாக்கியே வந்துள்ளனர்.
 2016 இல் கூட தமிழர்களைக் குறிவைத்து கலவரம் நடந்தது.
 தற்போது நடந்த கிரிக்கெட் மோதல்களையும் இதில் சேர்க்கலாம்.
 இப்படி முழுவெறியுடன் இருக்கும் கன்னடர் மேகதாது அணையைக் கட்டிவிட்டால் தமிழர் அழிவுக்காலம் தொடங்கிவிடும்.
 நாம் குடகு மழைக்குப் போகும் மழை மேகங்களை தடுத்து செயற்கை முறையில் மழை பொழிய வைப்பதைத் தவிர வேறு வழியிருக்காது!
 அப்படிப் பொழிந்தாலும் அது அமில மழையாகவே இருக்கும்!
 திராவிடத்தை வீழ்த்தி இனப்பற்றுள்ள தமிழரை ஆட்சியில் அமர்த்தி மேகதாது அணையைத் தடுக்க வேண்டும்! 
 கன்னடர் கொட்டமடக்க இன்னொரு வீரப்பன் உருவாக வேண்டும்! 
 இந்த தேர்தலை விட்டால் மேகதாது கட்டப்படும்! தமிழகத்தில் நிரந்தர பஞ்சம் வரும்!
 நாம் இன்னொரு சோமாலியா ஆக வேண்டியதுதான்! 
 அதன்பிறகு எத்தனை வீரப்பன்கள் உருவானாலும் பலனில்லை! 
 
 
 
 

Tuesday, 3 June 2025

செங்கிஸ்கான் கருணாநிதி

 செங்கிஸ்கான் கருணாநிதி

 ஈவேரா வசதி படைத்தவர்! ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்! நகர வாசி!
எம்.ஜி.ஆர் ஏழை என்றாலும் அழகும் உடல்வாகும் கொண்டவர்! 
ஜெயலலிதா கூட ஓரளவு பின்புலம் கொண்டவர்! அழகு வாய்க்கப் பெற்றவர்! நகர வாசி!
 பழனிச்சாமி கூட சமூக மற்றும் பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்! உடல்வாகு வாய்க்கப் பெற்றவர்! கல்வித் தகுதியும் உண்டு!
 ஆனால் கருணாநிதி அப்படி இல்லை!
 அழகு இல்லை! உடல்வாகு இல்லை! ஒரு கண் குறைபாடு! தகர குரல்!
 கிராமத்தில் பிறந்தவர்!
 ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்!
கல்வியறிவும் பெரிதாகக் கிடையாது!
 தனிமனிதனாக திருட்டு ரயில் ஏறி சென்னை வந்துள்ளார்! 
 இப்படிப்பட்ட ஒரு மனிதர் ஆசியாவிலேயே பணக்காரனாக உயர்ந்திருக்கிறார்!
 ஒரு இனத்தையே சுரண்டி அழித்து பெரிதாக எந்த தண்டனைக்கும் ஆளாகமல் 
3 மனைவிகள் பல துணைவிகள் என சுகபோகமாக 90 வயது வரை வாழ்ந்து
 எந்த தகுதியும் இல்லாத தன் வாரிசுகளை ஆதிக்க சக்தியாக ஆக்கிவிட்டு செத்திருக்கிறார்!
 இந்த மண்ணில் இன்னும் 30 ஆண்டுகளுக்கு அவருடைய தாக்கம் இருக்கும்!
 அவரை நினைக்கும்போது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது! 
 கருணாநிதி செங்கிஸ்கான் உடைய மறுபிறவி என்றே சொல்லலாம்! 
#HBDfatherOFcorruption 
 

சண்டாள சதிகாரன்

சண்டாள சதிகாரன்

 ஒரு நபர் இருந்தார். ஒரு கிராமத்தில் பலான புரோக்கருக்கு பிறந்தவர்.
 சரியான திருட்டு புத்தி வாய்ந்தவர்.
 அவரது தாத்தா காலத்தில்  இருந்தே வெள்ளையருக்கு சேவை செய்த வகையறா.
 அவருக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள் அவளும் மர்மமான முறையில் இறந்து விடுகிறார். அவளது அண்ணன்கள் இவர் மீது சந்தேகம் கொண்டு அடித்து உதைக்கின்றனர். கண்ணிலேயே குத்தினர். 
 எப்படியோ தப்பித்தவர் ஊரில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்று ஊரைவிட்டு ஓட தீர்மானித்தார்.
 பக்கத்து ஊரில் இவருக்கு உறவினரான ஒரு நாட்டியக்காரி அக்கா சென்னையில் ஒருவருக்கு வைப்பாக இருந்தாள்.
 காலில் விழுந்து கெஞ்சியதால் எடுபிடி வேலைக்கு இவரை சென்னைக்கு அழைத்துச் சென்றார்கள்.
 முதல் வகுப்பு பெட்டியில் அந்த செல்வந்தரும் இவரது அந்த அக்காவும் உல்லாசமாக இருக்க டிக்கெட் இல்லாமல் வெளியே கிடந்த இவரை பரிசோதகர் பிடித்தார்.
 கதவைத் தட்டி கேட்க செல்வந்தர் இவரை யார் என்று தெரியாது என்று கைகழுவி விடுகிறார்.
 ரயிலில் இருந்து கழுத்தைப் பிடித்து தள்ளப் படுகிறார். 
சென்னைக்கு சற்று முன்னதாக இரவில் இறக்கிவிடப்பட்ட அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
 கையிலும் பணமில்லை. அப்போது அருகில் ஒரு பத்திரிக்கையாளர்களுக்கான கூட்டம் ஒன்று நடக்கிறது.
  இவரும் அங்கே சென்று உணவு ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கிறார்.
 அங்கே இருந்தவர்கள் விசாரித்த போது தானும் எழுத்தாளர் என்றார்.
 நகரத்துக்கு சென்று செக்ஸ் புக் வாங்கி வந்து அதை கையால் எழுதியே பல பிரதிகளை தயார் செய்து அநியாய விலைக்கு விற்ற தன் விடலைப் பருவ அனுபவத்தையும் 
அவ்வப்போது பெண்களை ஏமாற்ற காதல் கடிதங்கள் எழுதிய தனது அனுபவத்தையும் 
 கொஞ்சம் மேம்படுத்தி தான் கையால் எழுதும் பத்திரிக்கையை நடத்தியதாகவும் தற்போது உள்ளூரில் மட்டும் பிரபலமாக இருக்கும் ஒரு சிறு பத்திரிக்கை நடத்துவதாகவும் தன்னை இறக்கிவிட்ட செல்வந்தரைப் பற்றிச் சொல்லி தான் அவருடைய உறவினர் என்றும் பொய் சொன்னார்.
 இரண்டொரு நாட்கள் அவர்களுடன் சுற்றிக் கொண்டிருந்த இவர் ஒரு இரவில் அவர்களுடைய பொருட்களைத் திருடிக்கொண்டு ஓடுகிறார்.
 அந்த அக்காவைத் தேடி அலைகிறார். அப்போது ஒரு பிளாட்பாரத்தில் தங்கினார். அங்கே ஒரு பெண் ஒரு வாடகை வீட்டில் இன்னொருவருக்கு வைப்பாக இருந்தார். அங்கே சோறு போட்டால் போதும் என்று வேலைக்கு சேர்ந்தார். சில நாட்களில் உன்னைப் பற்றி ஊரெல்லாம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியும் தன் பாலியல் புத்தியாலும் அந்தப் பெண்ணை தன் வழிக்கு கொண்டு வந்தார்.
 அந்த வயதான செல்வந்தர் வந்திருந்த நேரம் அவர் மனைவியிடம் இதை போட்டுக் கொடுத்து அவர் இங்கேயே தங்கும் படி செய்து விடுகிறார்.
 சிறிது காலத்தில் அந்த செல்வந்தரும் சந்தேகமான முறையில் இறந்து விடுகிறார்.
 அந்த வாடகை வீட்டில் அவருடைய பெயரை தான் எடுத்துக் கொண்டு இவர் செட்டில் ஆகிவிடுகிறார். குடும்பத் தொழிலான புரோக்கர் தொழிலை ஆரம்பிக்கிறார். அந்த நாட்டியக்காரி அக்காவை கண்டுபிடிக்கிறார்.
 அவள் மூலம் இன்னொரு அக்காவுக்கு தம்பியாக இருந்த ஒருவரின் பழக்கம் கிடைக்கிறது.
 இவரும் அண்ணன் தம்பி போல ஆகின்றனர்.
 அக்காவின் புண்ணியத்தால் ஒரு பணக்கார பெரியவருடன் நெருக்கம் கிடைக்கிறது.
  அவர் ஒரு லெட்டர்பேடு கட்சி நடத்திவந்தார்.
 அதில் இவர்களும் சேர்கின்றனர்.
பெரியவர் சரியான பெண்பித்தர் ஆனால் ஒரு பெண்ணை ஒரு முறைதான் தொடுவார்.
 அவரது குறுக்கு புத்தி வேலை செய்தது.
தன் வகையறாவில் ஒரு இளம்பெண்ணை வேலைக்காரியாக அனுப்பி வைத்தார்.
 இவரது வழிகாட்டுதலில் அந்த பெண் அந்த பெரியவரை கவிழ்த்து வேலைக்காரி, வைப்பாட்டி, வாரிசு, மனைவி என்று முன்னேறி அவரது சொத்துக்களை அடைகிறாள்.
 இதன் மூலம் அவரை கேவலப்படுத்தி கட்சி தலைமையில் இருந்து இறக்கி தன் அண்ணாவை தலைமைக்கு உயர்த்தி அக்காக்களின் புண்ணியத்தால் பிறரை சரிகட்டி இவ்விருவரும் பதவிகளை அடைகின்றனர்.
 ஒரு நடிகரிடம் வைப்பாக இருந்த இன்னொருத்தியையும் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கி ஒரு மகள் பிறந்த பிறகு பெரிய பிரச்சனை ஆகிறது. அந்த குழந்தை தன் மகளே இல்லை என்று கடைசி வரை சாதிக்கிறார்.
 இன்னொரு முக்கிய நடிகர் இவரது அக்கா சேவைக்காக இவருக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தார்.
 ஆனால் வேறொருத்தி தன் அழகான மகளை நடிகையாக்கி இந்த முக்கிய நடிகருடன் கோர்த்துவிட்ட பிறகு பிரச்சனை வருகிறது. இவருக்கு அழிவுக்காலம் ஆரம்பமாகிறது.
 இன்னொரு மசாலா நடிகை இவர் மூலம் தொழில் செய்து வந்தாள்.
  அவளை கர்ப்பமாக்கி ஒரு மகனை கொடுக்கிறார்.
 இந்த நடிகை அவரது மூன்றாவது மனைவி பற்றி இரண்டாவது மனைவியிடம் சொல்லி குடும்பத்திலும் பிரச்சனை ஆகிறது.
 இன்னொரு சினிமாக்காரர் இவரது சேவைக்கு தாசனாக இருந்தவர் ஒரு கட்டத்தில் மனசாட்சி உறுத்த இவரைப் பற்றிய உண்மைகளை பக்கம் பக்கமாக எழுதினார். ஒரு புரோக்கரிடமே ஒரு விபச்சாரி பணம் வாங்கலாமா என்று ஒரு விபச்சார விடுதியில் அவர் பிரச்சனை செய்தது வெட்ட வெளிச்சமானது.
 அவர் செக்ஸ் கதைகள் எழுதி பணம் சம்பாதிப்பதும் அவ்வப்போது திருடுவதும் வெளியே தெரிந்தது. 
இப்படி எத்தனையோ பிரச்சனைகள் வந்தன.
 ஆனாலும் இவரை சரிக்க முடியவில்லை.
 ஏனென்றால் பல வைப்புகளை மெயின்டெய்ன் செய்த இவரது புரோக்கர் குடும்பம் முக்கியமாக அவர்கள் மூலம் வரும் கறுப்பு பணத்தை எப்படி கையாள்வது என்று நன்கு தெரிந்து வைத்திருந்தனர். ஆனால் அரசியலில் இறங்க பயந்தனர். 
 இவர் அரசியலில் இறங்கியதால் அவரது சமுதாயமே மாபியா போல இவரின் கீழ் ஒன்றிணைந்தது.
 கறுப்பு பண மையமாக இவர் மாறியிருந்தார்.

 தொடரும்...
 
 

Saturday, 24 May 2025

கோபுரங்கள் சாய்வதில்லை அகதிகளின் கதை

கோபுரங்கள் சாய்வதில்லை அகதிகளின் கதை கோபுரங்கள் சாய்வதில்லை - இரு அகதி(?)களின் கதை 03.01.2016 1982ல் இரண்டு நண்பர்கள் கடற்கரையில் சந்தித்துக் கொண்டனர். 20 ஆண்டுகள் முன்பு கொழும்பு காவல்துறையிடமிருந்து தப்பித்து கள்ளத்தோணியில் கடல்கடந்து வந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்தனர். அதில் ஒருவர் வெற்றியம்பதி என்ற ஊரில் குடியேறினார். 15 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர். திருமண வயதில் பெண் இருந்தாள். அவளுக்கு 80 பவுண் நகை சேர்த்துவைத்திருந்தார். அவள் பெயர் அருக்காணி. அவளுக்கு மாப்பிள்ளை அமையவில்லை. இன்னொருவர் சென்னையில் குடியேறினார். வட்டிக்கடை வைத்து வசதியாக இருக்கிறார். திருமண வயதில் அவருக்கு முரளி என்றொரு மகன் இருந்தான். நல்ல படிப்பு, பெரிய நிறுவனத்தில் மேலாளராக இருந்தான். இருவருக்கும் திருமணமானது. முரளிக்கு அருக்காணியைப் பிடிக்கவில்லை. தமிழர் மண்ணான பெங்களூரில் ஒரு ஜூலி என்றொரு தமிழ்ப்பெண்ணை பார்த்து காதல்வயப்படுகிறான். தனக்கு திருமணமானதை மறைத்து அவளைத் திருமணம் செய்துகொள்கிறான். இப்படி மேற்கொண்டு கதை செல்கிறது. ஆமாம். இதில் அகதி முகாம் கொடுமைகள் வரவில்லையே? இது அகதி முகாம்களில் இருக்கும் 2லட்சம் தமிழர்களின் கதை இல்லை. தமிழகம் முழுவதும் வாழும் 5லட்சம் அகதிகள் இல்லையில்லை எப்படியோ குடியுரிமை பெற்றுவிட்ட ஈழத்தமிழர்களின் கதை.

Friday, 23 May 2025

இதயத்துடிப்பு

இதயத்துடிப்பு

 கண்ணாடியைப் பார்த்து என் கூந்தலில் இருந்த சில நரைமுடிகளை நகவெட்டியை வைத்து வெட்டிப் போட்டேன்.
 அகவை நாற்பதைத் தொடவுள்ளது. இன்னும் சில காலம் தான். நாகரீகத்தின் ஆதித்தொழிலில் 40 வயதுக்கு மேல் வருமானம் குறைந்துவிடும்.
 அதன்பிறகு என்ன செய்வது என்று நான் சிந்திப்பதில்லை. ஏனென்றால் அதற்கான நேரமும் இல்லை துணிச்சலும் இல்லை.
 கதவு தட்டப்பட்டது. திறந்தேன்.  "அத்தை" தான்.
"ஏன்டி இவ்வளவு நேரம்?!"
"சீவி சிங்காரிக்க வேண்டாமா அத்தை?!"
"அத கேக்கல வர்றதுக்கு ஏன் இவ்வளவு நேரம்? எவனோடடி ஊர்சுத்திட்டு வர்ற?"
"கடைவீதிக்கு போய் மேக்கப் சாமான்கள் வாங்கப்போனேன்"
"ம்..! வாசனை பத்தலையே?! பூவும் வைக்கலையா?"
"அத்தர் பூசினேனே! போதும் போதும்!"
"ஆமா... வர்றவன் உன் வீட்டுக்காரன் பாரு மல்லிப்பூவோட வர்றதுக்கு?! இந்தா பூ"
"அத்தை பசிக்குது"
"சனியனே! மதியம் நல்லா சாப்டலயா நம்ம தொழில்ல மதியத்துக்கு பிறகு சாப்பிட முடியாதுனு உனக்கு தெரியாது! இரு சர்பத் அனுப்புறேன்"
 அத்தை போய்விட்டாள்.
இவளும் ஆண்களைப் போலத்தான். இளமை இருந்தபோது செல்லம், பட்டு என்று எவ்வளவு கொஞ்சுவாள் இப்போது நான் சனியன் ஆகிவிட்டேன்.
 சர்பத்தை குடித்துவிட்டு படுக்கையில் காத்திருந்தேன்.
 இந்த விலைமாதர் விடுதியில் பத்து ஆண்டுகள் ஓட்டிவிட்டேன். அனாதை! ஏமாற்றிய காதலன்! கற்பழிப்பு! பிச்சை! போலீஸ்! விபச்சாரம்! அடுத்து என்ன...?! சாவுதான்!
 என் தொழில்முறை தோழி ஒரு யோசனை கூறியிருந்தாள்!
 "இளமை இருக்கும்போது கொஞ்சம் வயதான பணக்காரனை வளைத்துப் போட்டு சின்னவீடு ஆகிவிடு! அப்படியே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டால் இரண்டாம் தர வாழ்க்கையாவது கிடைக்கும்".
 இளமை இருந்த திமிரில் அந்த அறிவுரை காதுகளில் ஏறவில்லை! 
 இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை!  
 என் உருவம் சிறியது! உள்ளாடை போடாமலே நேராக குத்திட்டு நிற்கும் என் மார்பகம்! எவனையும் அளவுக்கு மீறி கசக்க விட்டதில்லை! அளவான உணவு மற்றும் நல்ல பகலுறக்கம்! அதனால் வாய்த்த கட்டான உடல்! கொஞ்சம் நடனம் கற்றுக் கொடுத்துள்ளனர்! தீய பழக்கங்கள் பக்கம் போகவில்லை! எனவே இப்போதும் பார்க்க 25 வயது போல இருக்கிறேன் (என்று நினைக்கிறேன்).
தோழி சொன்ன திட்டத்தை இன்றே நிறைவேற்ற வேண்டியதுதான்.
 வருபவன் கொஞ்சம் பணக்காரனாக இருந்தால் சரி!
 இந்த ஆண்களைக் கவிழ்ப்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை!
 ஆண் ஒரு பெண்ணின் உடல் மீது வைத்திருக்கும் ஆசைதானே இந்த உலகமே இயங்க அடிப்படை!
 ஆறுதலாக நான்கு வார்த்தைகள்!
பிறகு கொஞ்சம் வலியைத் தாங்கிக்கொண்டால் போதும்! காலில் விழுந்து கிடப்பார்கள்!
 கதவு தட்டப்பட்டது! திறந்தேன்!
 ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபர் நின்றுகொண்டு இருந்தார்!
 இருவரும் ஒருவருக்கொருவரை பார்வையால் அளந்தோம்!
 அவரை கையைப் பிடித்து உள்ளே இழுத்து கதவைத் தாழிட்டேன்!
 சிலர் தாழிடும்போது பின்புறத்தில் இருந்து கட்டிப்பிடிப்பார்கள்! இவர் அப்படி இல்லை! தலையைக் குனிந்தபடி நின்றுகொண்டு இருந்தார்.
 நல்ல உடைகள் உடுத்தி இருந்தார்! நடுத்தர வர்க்கம் என்று தெரிந்தது! அரசாங்க ஊழியராக இருக்கலாம்!
 "என்னங்க முதல் தடவையா?!" 
"ம்"
"உக்காருங்க! இந்தாங்க தண்ணி குடிங்க!"
"இல்ல வேண்டாம்.."
"சரக்கு எதும்..."
"இல்ல பழக்கமில்ல"
"டீ கொண்டு வர சொல்லவா"
"இல்ல அதுவும் பழக்கமில்லை" 
"சரி உக்காருங்க"
அவர் உட்கார்ந்தார். அருகில் அமர்ந்தேன்.
"சொல்லுங்க என்ன பண்ணனும்?!"
"நா அதுக்காக வரலை! ஏதோ வேகத்துல வந்துட்டேன்"
"முதல் தடவை எல்லாரும் இப்டித்தான் சொல்வாங்க! கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா நானே போதும்னு கையெடுத்து கும்புடுற மாதிரி பண்ணுவீங்க!"
 அவர் என் முகத்தைப் பார்த்து சிரித்தார்.
"நா என்ன சொன்னாலும் செய்வீங்களா?!"
"செய்வேன். என்ன நீங்க என்னவேணாலும் செய்யலாம்!"
 ஏன்தான் இந்த வார்த்தைகள் ஆண்களுக்கு ரொம்ப பிடிக்குமோ தெரியாது!
  அவர் தயாரானார்! தன் கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்தார்.
 "அங்கே போய் நில்லு"
அடடா! என்ன அதிகாரம்! 
கொஞ்சம் தூரம் போய் நின்றேன்! 
அவர் தன் சட்டையைக் கழற்றினார்.
நானும் என் உடைகளைக் கழற்றினேன்!
அவர் கண்களை சுருக்கி விரித்து பார்த்தார்.
கண் கண்ணாடி இல்லாமல் அவருக்கு மங்கலாகத் தெரிகிறேன் என்று புரிந்தது.
 சட்டைப்பையில் சிறிய பொட்டலம் வைத்திருத்தார் அதில் பாரம்பரிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் வாசனைப் பவுடர் இருந்தது. அதை என்னை நோக்கி விட்டெறிந்து "இதைப் போட்டுக்க" என்றார்.
 நான் அதைக் கைகளில் கொட்டி கழுத்து அக்குள் மார்பு என பூசிக்கொண்டேன்! 
 கட்டிலில் அமர்ந்தபடி அவர் கண்களை மூடிக்கொண்டு இரு கைகளையும் நீட்டி குழந்தை போல அழைத்தார்! 
 நான் அருகே வந்ததும் கட்டி அணைத்துக் கொண்டார்.
 அவர் வலது காதை என் இடது மார்பில் வைத்து அழுத்தியபடி இறுகக் கட்டியணைத்தார்.
 நான் ஏதோ சொல்லவர "ஷ்..." என்று அமைதிப் படுத்தினார்.
 அவர் என் இதயத் துடிப்பைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
 மார்புக்கு அடியில் என் விலா எலும்புகளில் கைவைத்து நான் மூச்சுவிடுவதை உணர்ந்தார்.
ஐயோ பாவம்! காதல் தோல்வி அடைந்தவர்! இவருடைய காதலி இறந்துவிட்டாள் போலிருக்கிறது! அவளை உயிரோடு இருப்பதாக உணர்வதற்காக இப்படி செய்கிறார்!
 அவர் தலையை என் மார்போடு அணைத்தேன்.
என் மூச்சுக்காற்று அவர் மீது படும்படி செய்தேன்!
என் மார்பைச் சுட்டது அவரது கண்ணீர்.
கொஞ்ச நேரம் அழவிட்டேன். பிறகு கண்ணீரைத் துடைத்துவிட்டேன். தலைமுடியைக் கோதிவிட்டேன்!
முதுகைத் தடவிக் கொடுத்தேன்!
 "தங்கம்... எந்...தங்கம்! எந்ந்ந்... தங்க்...கம்!" என்று அவர் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்ததார். 
சில காதல் தோல்வி அடைந்தவர்கள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள்! ஒரு பெண்ணின் உடலில் இன்னொரு பெண்ணின் ஆன்மாவைத் தேடுவார்கள்! பிறகு அது கிடைக்காமல் மேலும் நொறுங்கிப் போவார்கள்! 
 பார்க்கவே பாவமாக இருக்கும்!
 நான் அணைத்தபடி அவரைத் தூங்கவைப்பது போல  தட்டிக் கொடுத்தேன்! அவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்தார்! விசும்பியபடி கைக்குட்டையால் கண்களையும் மூக்கையும் துடைத்துக் கொண்டார்!
 நான் அவர் அருகில் அமர்ந்தேன்!
 அவரது ஒரு கையை என் மார்பில் பதியுமாறு அணைத்துக்கொண்டு ஒட்டி உட்கார்ந்தேன்!
"என்ன ஆச்சுங்க?! ஏன் அழறீங்க?"
"என் காதலி நினைவு வந்துருச்சு" 
"அவங்க பேரு தங்கமா?!"
"இல்ல! நா அவள அப்பிடித்தான் கூப்பிடுவேன்!"
"ம்..."
"இன்னைக்கு கடைவீதில உன்னைப் பார்த்தேன்! அவள மாதிரியே இருந்தே! அதான் பின்னாடியே வந்தேன்"
 "கவலைப் படாதீங்க எல்லாம் சரியாயிடும்! ஆமா உங்களுக்கு ஏன் அவங்க கிடைக்காம போனாங்க?! உங்களுக்கு விருப்பம் இருந்தா எங்கிட்ட சொல்லலாம்!"
 "அவ எங்க வீட்டுக்கு பக்கத்து தெரு! சொக்கத் தங்கத்துல செஞ்ச சிலை மாதிரி இருப்பா! அவ பேரு தெரியாதப்பவே அவளுக்கு நா எனக்குள்ள வச்ச பேருதான் தங்கம்! தங்கத்தை ரொம்ப நாளா ஒரு தலையாக் காதலிச்சேன்! ஆனா என் தங்கத்துக்கு என்ன புடிக்கல! அப்பறம் சாக மனசில்லாம எங்கேயோ போய்ட்டேன்! ஆனா ரொம்ப நாள் கழிச்சு விதி எங்களை சேத்துவச்சது!"
 "அப்போ அவங்க இப்ப..."
"என் மனைவி!"
"அவங்க கிடைச்சிட்டாங்களே அப்பறம் ஏன் இவ்வளவு சோகம்?!"
"அவ மனசுல யாரோ இருக்காங்க! அவளால என்னோட ஒட்ட முடியல! காதலி கிடைச்சிட்டா ஆனா காதல் கிடைக்கல!"
 அடக் கடவுளே! இதென்ன கொடுமை! 
காதலி இறந்துவிட்டால் தானும் இறந்துவிடலாம்! காதலி நிராகரித்துவிட்டால் மனதைத் தேற்றிக்கொண்டு வேறு பெண்ணை ஏற்றுக் கொண்டு வாழலாம்!
 ஆனால் இது வாழவும் முடியாத சாகவும் முடியாத நிலை ஆயிற்றே!
 காதலே இல்லாத கண்களை தினமும் பார்க்கும் இவர் எத்தனை கொடுப்பினையற்ற பிறவி?!
 இருந்தாலும் அவருக்கு ஆறுதல் சொல்லித் தேற்றத் தோன்றியது! 
"இவ்வளவு காதல் வச்சிருக்கீங்க!? இதுவே வாழ்க்கைக்கு போதுமே! பெரும்பாலும் காதலர்கள் னு சொன்னாலே அதுல ஒருத்தர்தான் காதலிப்பாங்க! இன்னொருத்தர் அத ஏத்துக்குவாங்க! ஒருத்தரோட காதலை வச்சுதான் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வாங்க! இதுதான் யதார்த்தம்"
 "ஆமா! ஆனா.... எப்ப அவ என்னை வேண்டாம்னு சொன்னாளோ அப்பவே என் உலகம் நின்னு போச்சு! 
 நா காதலிச்ச தங்கமும் என் மனைவியும் ஒருத்திதான் னு என்னால ஏத்துக்க முடியல!"
 நான் என்ன சொல்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தேன்!
"எனக்கு பெண்குழந்தை பிறக்கும்னு நெனச்சேன்! அத என் தங்கமா நெனச்சு வாழலாம்னு நெனச்சேன்! அதுவும் நடக்கல!"
 "அவங்க மனசுல இருக்குறது யாரு?!"
"தெரியாது! இருக்காங்களா இல்லையானு கூட தெரியாது!"
அவர் அமைதியாக எதையோ வெறித்தபடி உட்கார்ந்திருந்தார். பிறகு மூச்சை இழுத்த படி நிமிர்ந்து உட்கார்ந்தார்.
 "என் தங்கம் இவ இல்ல! அவ இன்னும் எங்க வீட்டு பக்கத்துல தெருவுல இருக்கா! அவ என்னையே நினச்சுக்கிட்டு இருக்கா! எனக்கு நல்லா தெரியும்! அவ என்னோட தங்கம்! எனக்கு மட்டும்தான் அவ சொந்தம்!"
 அப்படியே இருந்தோம்! 
கதவு தட்டப்பட்டது! 
நேரம் முடிந்துவிட்டது!
அவர் கிளம்பினார். அவரது பர்சை எடுத்துக் கொடுத்தபோது பார்த்தேன் ஒரு பழைய புகைப்படத்தில் மாணவி ஒருவர் சிரித்தபடி இருந்தார். 
 
 

 

 

Wednesday, 21 May 2025

இந்திய அமைதிப்படை கொலைகள் முழு பட்டியல்

இந்திய அமைதிப்படை கொலைகள் முழு பட்டியல் இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் நடத்திய படுகொலைகளின் பட்டியல் 1) 02.06.1987 - Liberation Operation படுகொலை - வடமராட்சி 2) 10.06.1987 - முகமாலை இளைஞர் படுகொலை - முகமாலை சந்தி 3) 14.06.1987 - Operation Liberation சிறை படுகொலை - பூசாசிறைச்சாலை 4) 17.06.1987 - liberation operation இராணுவ நடவடிக்கை - வடமராட்சி 5) 28.06.1987 - நாட்டுப்பற்றாளர் க.ஏகாம்பரம் படுகொலை - கூனித்தீவு 6) 08.07.1987 - தையிட்டி பராசக்தி சன சமூக நிலைய மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் படுகொலை 7) 10.07.1987 - வடமாராட்சி தேடுதல் வேட்டை - (கல்லூரி, ஆலயம், குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்) 8 ) 19.07.1987 - பன்குளம் குழந்தைகள் எரித்துப் படுகொலை - கிராமம் 9) 26.07.1987 - அளவெட்டி ஆசிரமம் படுகொலை - ஆசிரமம் 10) 23.09.1987 - மனு கொடுக்கச் சென்ற யோகன் படுகொலை - எழுத்தூர் 11) 10.10.1987 - கோட்டைப் படுகொலை - யாழ் 12) 11.10.1987 - பள்ளி அதிபர் தாமோதரம்பிள்ளை படுகொலை - பெரியபுலம் 13) 11.10.1987 - காங்கேசன்துறை தேடுதல் வேட்டை - வீடு 14) 11.10.1987 - புதுக்காட்டு சந்தி படுகொலை - சந்தி 15) 12.10.1987 - மல்லாகம் படுகொலை - கிராமம் 16) 12.10.1987 கொல்லங்கலட்டி படுகொலை - கிராமம் 17) 12.10.1987 - சுன்னாகம் படுகொலை - கிராமம் 18) 12.10.1987 - பிரம்படி படுகொலை - கிராமம் 19) 12.10.1987 - பொற்பதி படுகொலை (கவச வாகனங்களை ஏற்றிப் படுகொலை) 20) 19.10.1987 - யாழ் சுற்றிவளைப்பு & படுகொலை - குடியிருப்புப் பகுதி 21) 19.10.1987 - கொட்டடி, ஆனைக்கோட்டை, கொக்குவில் இராசப்பாதை, உரும்பிராய், கோப்பாய், வசாவிளான் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய படுகொலை 22) 20.10.1987 - மன்னார் தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 23) 20.10.1987 - கேரதீவு இறங்குதுறை தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 24) 20.10.1987 - சுண்டுக்குளி தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 25) 20.10.1987 - உரும்பிராய் தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 26) 21.10.1987 - யாழ் மருத்துவர்கள் படுகொலை - மருத்துவமனை 27) 21.10.1987 - யாழ் மருத்துவமனைப் படுகொலை - மருத்துவமனை 28) 22.10.1987 - சுண்டுக்குளி தேடுதல் வேட்டை - குடியிருப்புப் பகுதி 29) 22.10.1987 - யாழ் மருத்துவமனை ஊழியர்கள் படுகொலை 30) 22.10.1987 - அராலி தேடுதல் வேட்டைப் படுகொலை 31) 22.10.1987 - சுண்டுக்குளி படுகொலை 32) 22.10.1987 - அராலித்துறை படுகொலை 33) 24.10.1987 - யாழ் மத்திய கல்லூரி மாணவர் லக்ஸ்மணன் படுகொலை 34) 24.10.1987 - கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலை 35) 25.10.1987 - கொக்குவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது பீரங்கித்தாக்குதல் 36) 25.10.1987 - சேரதீவு படுகொலை 37) 25.10.1987 - சந்தை மீது உலங்கு வானூர்தித் தாக்குதல் 38) 25.10.1987 - இந்துக்கல்லூரி அகதி முகாம் படுகொலை 39) 26.10.1987 - சூறாவத்தை படுகொலை 40) 26.10.1987 - அளவெட்டி படுகொலை 41) 26.10.1987 - புத்தூர் படுகொலை 42)26.10.1987 - அளவெட்டி படுகொலை 43) 26.10.1987 - புத்தூர் படுகொலை 44) 27.10.1987 - சாவகச்சேரி கந்தசட்டி கோயில் படுகொலை 45) 04.11.1987 | - களபூமி, வீமன்காமம், கோண்டாவில் படுகொலை 46) 05.11.1987 - மூளாய் மருத்துவமனை படுகொலை 47) 07.11.1987 - உரும்பிராய் தேடுதல் வேட்டைப்படுகொலை 48) 07.11.1987 - உரும்பிராய் படுகொலை 49) 09.11.1987 - மானிப்பாய் படுகொலை 50) 10.11.1987 - அச்சுவேலி தேடுதல் வேட்டைப் படுகொலை 51) 10.11.1987 - கோப்பாய் தேடுதல் வேட்டைப் படுகொலை 52) 10.11.1987 - அராலி தேடுதல் வேட்டைப் படுகொலை 53) 11.11.1987 - நெடுங்கேணி தேடுதல் வேட்டைப்படுகொலை 54) 12.11.1987 - இணுவில் தேடுதல் வேட்டைப்படுகொலை 55) 12.11.1987 - சுன்னாகம் தேடுதல் வேட்டைப்படுகொலை 56) 16.11.1987 - கோப்பாய் தேடுதல் வேட்டைப் படுகொலை 57) 19.11.1987 - குழந்தைகள் சுவரில் அடித்து படுகொலை 58) 20.11.1987 - அச்செழு படுகொலை 59) 21.11.1987 - ஆனைக்கோட்டைச் சந்தி பதுங்குகுழி படுகொலை 60) 30.11.1987 - மூதூர் எழுவர் படுகொலை 61) 02.12.1987 - மட்டக்களப்பு படுகொலை 62) 27.12.1987 - மட்டக்களப்பு எறிகணைவீச்சு 63) 02.12.1987 - தம்பாப்பிள்ளைசிவம் படுகொலை 64) 02.12.1987 - ஏழாலை இளைஞர்கள் படுகொலை 65) 03.12.1987 - மட்டக்களப்பு பேரூந்து படுகொலை 66) 20.12.1987 - ஊரெழு தேடுதல் வேட்டைப் படுகொலை 67) 27.12.1987 - சாவகச்சேரி பொதுச்சந்தை படுகொலை 68) 28.12.1987 - முல்லைத்தீவு நகர் படுகொலை 69) 30.12.1987 - காத்தான்குடி படகு பயணிகள் படுகொலை 70) 04.01.1988 - புதுக்குடியிருப்பு தேடுதல் வேட்டை 71) 13.01.1988 - வட்டுக்கோட்டை காவல் முகாம் படுகொலை முகாம் 72) 19.01.1988 - பாண் வியாபாரி தங்கராசா படுகொலை 73) 21.01.1988 - தாண்டியடி படுகொலை 74) 26.01.1988 - கிண்ணியடி படுகொலை 75) 02.02.1988 - வட்டக்கச்சி பதுங்குகுழி படுகொலை 76) 03.02.1988 - வட்டக்கச்சி து.கிருஷ்ணப்பிள்ளை படுகொலை 77) 08.02.1988 - தம்பிலுவில் அரசியல் பிரமுகர் நடேசன் படுகொலை 78) 08.02.1988 - ஏறாவூர் வானூர்தித் தாக்குதல் 79) 08.02.1988 - திருக்கோவிலில் குண்டு வெடித்து 9 வயது சிறுவன் சிறுவன் விஜேந்திரன் இறப்பு 80) 13.02.1988 - நாட்டுப்பற்றாளர் சிவா படுகொலை 81) 16.02.1988 - பம்பலப்பிட்டி விநாயகர் ஆலயப்படுகொலை 82) 19.02.1988 - வட அளவெட்டி அமைதிப்படை முகாம் படுகொலை 83) 04.03.1988 - கோணமலை விமானத் தாக்குதல் 84) 06.03.1988 - மட்டக்களப்பு பொதுமக்கள் படுகொலை 85) 11.03.1988 - திருமலை பேருந்து படுகொலை (வவுனியா வழியில்) 86) 11.03.1988 - முத்தையன்கட்டு படுகொலை 87) 15.03.1988 - தம்பலகாமம் எல்லை பேருந்து பயணிகள் படுகொலை 88) 15.03.1988 - ஸ்கந்தபுரம் தமிழர் படுகொலை 89) 15.03.1988 - கோட்டைக்கல்லாற்றில் பேராதனை வைத்தியபீட மாணவன் கொலை 90) 15.03.1988 - வடக்கந்தை தமிழர் படுகொலை 91) 16.03.1988 - ஸ்கந்தபுரம் துப்பாக்கிச்சூடு 92) 16.03.1988 - மட்டு தமிழ் இளைஞர் படுகொலை 93) 16.03.1988 - வந்தாறுமூலையில் இளையோர் படுகொலை 94) 22.03.1988 - ஹொரவபொத்தானை பேரூந்து பயணிகள் படுகொலை 95) 22.03.1988 - பம்பைமடு தேடுதல் வேட்டை படுகொலை 96) 05.04.1988 - இந்துக் கல்லூரி மாணவன் கொலை 97) 21.04.1988 - பண்ணாகம் தேடுதல் வேட்டை 98) 28.04.1988 - வட்டக்கச்சி கணபதிப்பிள்ளை படுகொலை 99) 10.05.1988 - கெப்பிட்டிகொலாவ தாய் - சேய் படுகொலை 100) 12.05.1988 - கிளிநொச்சியில் விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர் கொலை 101) 13.05.1988 - மணலாறு தமிழர்கள் படுகொலை 102) 13.05.1988 - விசாரணை முகாமில் மகாவித்தியாலய மாணவன் படுகொலை 103) 13.05.1988 - நாசிவன்தீவு சரிபுதீன் மொகமட் சபீர் படுகொலை 104) 14.05.1988 - திருகோணமலை பெண் திரைப்படத் தயாரிப்பாளர் கொலை (ஒட்டுக்குழு + IPKF) 105) 16.05.1988 - கிராம சேவையாளர் கடத்தல் (வெற்றிலைக்கேணி சேவையகம்) 106) 17.05.1988 - மல்லாவி விவசாயி படுகொலை 107) 19.05.1988 - மதவாச்சிபாரவூர்திக்கு தீ வைப்பு 108) 27.05.1988 - பிரசைகள் குழுத்தலைவர் படுகொலை (ஆரையம்பதி வீதி) 109) 01.06.1988 - உரும்பிராய் நாட்டுப்பற்றாளர் பாக்கியம் அக்கா படுகொலை (ஒட்டுக்குழு + IPKF) 110) 01.06.1988 - நல்லூர் நாட்டுப்பற்றாளர் க.நடராசா படுகொலை (ஒட்டுக்குழு + IPKF) 111) 11.06.1988 - கிரான்குளம் பொதுமகன் படுகொலை 112) 01.07.1988 - பாவற்குளம் பொதுமகன் படுகொலை 113) 06.06.1988 - அருட்திரு. சந்திரா பெர்னாண்டோ படுகொலை 114) 03.07.1988 - நெடுங்கேணி தாய், மகள் வல்லுறவுப் படுகொலை 115) 08.07.1988 - நவஜீவனம் தேடுதல் வேட்டைப் படுகொலை 116) 09.07.1988 - இராமநாதபுரம் தேடுதல் வெட்டிப்படுகொலை 117) 12.07.1988 - சில்லாலை நீர்ப்பாசன இலாகா அலுவலப் படுகொலை 118) 13.07.1988 - ஆரையம்பதி விசாரணை முகாம் இளைஞர் படுகொலை 119) 13.07.1988 - இன்பருட்டியில் சிற்றூர்தி மீதான தாக்குதல் 120) 15.07.1988 - பரந்தன் சந்தி தேடுதல் வேட்டை 121) 15.07.1988 - தமிழ்ப்பொதுமகன் படுகொலை (தள்ளாடி முகாம்) 122) 18.07.1988 - பரந்தன் தமிழ்ப்பொதுமகன் படுகொலை 123) 18.07.1988 - கம்பர்மலை இளைஞர் கைது - படுகொலை 124) 04.08.1988 - பரந்தன் குடியிருப்புப் பகுதி படுகொலை 125) 15.08.1988 - யாழ் நாட்டுப்பற்றாளர் இரங்கநாதன் படுகொலை 126) 16.08.1988 - திருகோணமலை வீதி துப்பாக்கிச்சூடு 127) 18.08.1988 - பேராதனை பல்கலை., பொறியியல் பீடம் மீதான தாக்குதல் 128) 24.08.1988 - நாட்டுப்பற்றாளர் துரைராசா படுகொலை (உரும்பிராய்) 129) 31.08.1988 - முல்லைத்தீவு மருத்துவமனை ஊழியர் சுட்டுக்கொலை 130) 05.09.1988 -மட்டக்களப்பு விசாரணை முகாம் படுகொலை 131) 08.09.1988 - நுணா தேடுதல் வேட்டைப் படுகொலை 132) 11.09.1988 - ஈச்சமோட்டை பொறியியலாளர் படுகொலை (நல்லூர் நாவலர் மண்டபம்) 133) 17.09.1988 - நல்லூர் வீதி தேடுதல் வேட்டை படுகொலை 134) 23.09.1988 - செல்வக்குமார் படுகொலை (யாழ் வீதி) 135) 25.09.1988 - பட்டிருப்பு பொதுமக்கள் படுகொலை 136) 29.09.1988 - யாழ்ப்பாணம் இராமலிங்கம் வீதி இளைஞர் படுகொலை 137) 02.10.1988 - சிறுப்பிட்டி மாணவன் நந்தன் சுட்டுக்கொலை 138) 04.10.1988 - கெருடாவில் தந்தை, மகன் படுகொலை 139) 04.10.1988 - சாளம்பைக்குளம் படுகொலை 140) 04.10.1988 - யாழ் மத்திய பேருந்து நிலைய படுகொலை 141) 04.10.1988 - பூநகரி மரத்தடி படுகொலை 142) 05.10.1988 - மின்சாரம் பாய்ச்சிக்கொல்லப்பட்ட துரையம்மா (விசாரணை சித்ரவதை) 143) 05.10.1988 - இடைக்காடு தமிழர்கள் படுகொலை 144) 06.10.1988 - மயிலங்காடு பொன்னம்பலம் சுட்டுக்கொலை 145) 06.10.1988 - மட்டக்களப்பு உபதபாலதிபர் சுட்டுக்கொலை (காங்கேயன் ஓடை) 146) 09.10.1988 - இராணுவ முகாமில் மட்டக்களப்பு மாணவன் படுகொலை 147) 11.10.1988 - திருமலை வீதி தேடுதல் வேட்டை 148) 11.10.1988 - ஈரற் பெரியகுளம் பேருந்து படுகொலை 148) 11.10.1988 - கட்டைபறிச்சான் படுகொலை 148) 13.10.1988 - ரவி சுட்டுப்படுகொலை 149) 13.10.1988 - தெல்லிப்பழை வீதி படுகொலை 150) 13.10.1988 - இணுவில் வீதி படுகொலை 151) 14.10.1988 - யாழ் கதிர்காமநாதன் படுகொலை 152) 14.10.1988 - பொன்னையா சிறிதரன் படுகொலை 153) 17.10.1988 - மங்களஓயா படுகொலை 154) 18.10.1988 - குளிர்பான நிலையம் மானிப்பாய் சற்குணராசா படுகொலை 155) 21.10.1988 - செல்வராசா விசாரணைப் படுகொலை 156) 21.10.1988 - தமிழீழ மக்கள் மன்றத்தலைவர் சிவானந்தசுந்தரம் படுகொலை (வெலிங்டன் சந்தி) 157) 22.10.1988 - ஊர்காவற்றுறை புதுமணத் தம்பதியர் கொலை (பொன்னாச்சி கடைச்சந்தி) 158) 22.10.1988 - கிற்றார் கலைஞர் கி.செல்லையா படுகொலை (இசைக்கூடம்) 159) 22.10.1988 - பொன்னாச்சி இளம்தம்பதியார் படுகொலை (கடைச்சந்தி) 160) 25.10.1988 - விஞ்ஞான ஆசிரியர் படுகொலை (யாழ் மருத்துவமனை வீதி) 161) 25.10.1988 - சுகாதார அத்தியட்சகர் பணிமனை படுகொலை 162) 25.10.1988 - மல்லாகம் வர்த்தகர்சங்கத் தலைவர் படுகொலை 163) 25.10.1988 - வவுனியா சுகாதார பணிமனை படுகொலை 164) 25.10.1988 - சங்கானை ஆசிரியர் படுகொலை 165) 25.10.1988 - மல்லாகம் வர்த்தக சங்கத் தலைவர் சிவதாசபிள்ளை படுகொலை 166) 26.10.1988 - கரடிக்குழி படுகொலை 167) 26.10.1988 - மறிச்சுக்கட்டி படுகொலை 168) 31.10.1988 - நெடுங்கேணி படுகொலை 169) 31.10.1988 - யாஸ் பரியோவான் கல்லூரி மாணவர் சுட்டுக்கொலை 170) 31.10.1988 - நுணாவில் தேடுதல் வேட்டை 171) 31.10.1988 - மகாவித்தியாலய மாணவர்கள் படுகொலை 172) 02.11.1988 - நாட்டுப்பற்றாளர் வெள்ளையன் படுகொலை 173) 02.11.1988 - கனகராயன்குளம் படுகொலை 174) 02.11.1988 - சகோதரர்கள் உயிருடன் எரித்துக்கொலை 175) 02.11.1988 - பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டைப்படுகொலை 176) 03.11.1988 - சரசாலை நாட்டுப்பற்றாளர் சுந்தரம் படுகொலை 177) 04.11.1988 - புங்குடுதீவு கடற்றொழிலாளர்கள் படுகொலை 178) 04.11.1988 - பச்சனூர் படுகொலை 179) 04.11.1988 - இணுவில் நாட்டுப்பற்றாளர் தனபாலசிங்கம் படுகொலை 180) 04.11.1988 - புங்குடுதீவு படுகொலை 181) 05.11.1988 - சாவகச்சேரி வர்த்தகர் சங்கத் தலைவர் செல்வராசா படுகொலை 182) 06.11.1988 - ஆனையிறவு குடியிருப்புப் பகுதி படுகொலை 183) 07.11.1988 - மூதூர் 55ஆம் கட்டைபகுதி படுகொலை 184) 07.11.1988 - மூதூர் நாட்டுப்பற்றாளர் ரகு படுகொலை 185) 08.11.1988 - அளவெட்டி நாட்டுப்பற்றாளர் பிரேம்குமார் படுகொலை 186) 08.11.1988 - சாவகச்சேரிதமிழ் மாணவன் படுகொலை 187) 08.11.1988 - பண்டத்தரிப்பு பிரசைகள் குழுவினர் படுகொலை 188) 09.11.1988 - வடமராட்சி அட்டூழியம் 189) 11.11.1988 - மன்னார் உயர்வகுப்பு மாணவன் படுகொலை 190) 11.11.1988 - ஆசிரியர் பாலகிருஷ்ண படுகொலை 191) 12.11.1988 - பொருளியல் ஆசிரியர் கிருஷ்ணானந்தன் படுகொலை 192) 12.11.1988 - சரசாலை தமிழ் இளைஞர் படுகொலை 193) 13.11.1988 - மகேந்திரநாதன் படுகொலை 194) 13.11.1988 -தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் படுகொலை (மாம்பழம் சந்தி - அரியாலை) 195) 13.11.1988 - ஊரிக்காடு தேடுதல் வேட்டைப் படுகொலை 196) 13.11.1988 - திருநெல்வேலி நாட்டுப்பற்றாளர் வைகுந்தவாசன் படுகொலை 197) 14.11.1988 - முல்லைத்தீவு நாட்டுப்பற்றாளர்கள் சங்கர்-கிளியன் கொலை 198) 16.11.1988 - சங்கத்தானை நாட்டுப்பற்றாளர் குணாளன் படுகொலை 199) 16.11.1988 - இருதயக்கல்லூரி தேடுதல் வேட்டை 200) 17.11.1988 - பொத்துவில் படுகொலை 201) 17.11.1988 - முல்லைத்தீவு குடியிருப்புப் படுகொலை 202) 19.11.1988 - மகாவித்தியாலய மாணவன் படுகொலை 203) 21.11.1988 - கோணாவில் நாட்டுப்பற்றாளர் சங்கரன் படுகொலை 204) 22.11.1988 வவுனியா நாட்டுப்பற்றாளர் பூலோகசிங்கம் படுகொலை 205) 22.11.1988 - பாவற்குளம் 4 ஆம் படிவம் படுகொலை 206) 22.11.1988 - கல்முனை படுகொலை 207) 23.11.1988 - யாழ் செயலக கணக்காளர் படுகொலை 208) 23.11.1988 - திருகோணமலை தேடுதல் நடவடிக்கை 209) 25.11.1988 - கடற்றொழிலாளி படுகொலை 210) 26.11.1988 - வட்டக்கச்சி கட்சன் வீதி படுகொலை 211) 27.11.1988 - வட்டகச்சி கண்ணிவெடி படுகொலை 212) 27.11.1988 - யாழ் பேராலய இளைஞர் படுகொலை 213) 28.11.1988 - நாவற்குழி நாட்டுப்பற்றாளர் மனோகரி படுகொலை 214) 28.11.1988 - நாவற்குழி தேடுதல் வேட்டை படுகொலை 215) 29.11.1988 - இணுவில் மருத்துவமனையில் நோயாளி இளம்பெண் படுகொலை 216) 30.11.1988 - மூதூர் தமிழர்கள் படுகொலை 217) 01.12.1988 - புத்தூர் புத்தெழில் ஆசிரியர் திருஞானம் படுகொ (தேசவிரோதிகள் + IPKF)லை 218) 03.12.1988 - கருகம்பனை சிவதாசன் நிர்மலன் படுகொலை 219) 03.12.1988 - பற்றிக்சுவீதி தமிழர் படுகொலை 220) 04.12.1988 - ஆசிரியர் கருணானந்தசிவம் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 221) 05.12.1988 - வவுனிக்குளம் படுகொலை 222) 07.12.1988 - காணிக்கை மாதா கோயில் படுகொலை 223) 08.12.1988 - யாழ் சிற்றூர்தி சங்கத்தலைவர் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 224) 09.12.1988 - காங்கேசன்துறை மாணவன் படுகொலை 225) 12.12.1988 - திருகோணமலை எறிகணைத்தாக்குதல் 226) 15.12.1988 - ஊரெழு தேவதாசன் படுகொலை (கோப்பாய் முகாம், தேசவிரோதிகள் + IPKF) 227) 17.12.1988 - அக்கரைப்பற்று படுகொலை 228) 17.12.1988 - ஆலையடிவேம்பு படுகொலை 229) 19.12.1988 - சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவர்கள் படுகொலை 230) 19.12.1988 - ஆனைக்கோட்டை படுகொலை 231) 19.12.1988 - அளவெட்டி நாட்டுப்பற்றாளர்கள் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 232) 19.12.1988 - மன்னார் இளைஞர்கள் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 233) 21.12.1988 - அப்புத்தளை மலையகம் தமிழிளைஞர்கள் படுகொலை 234) 23.12.1988 - மானிப்பாய் ஜெயதாசன் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 235) 27.12.1988 - மட்டக்களப்பு அட்டூழியம் 236) 02.01.1989 - ஒட்டிசுட்டான் துப்பாக்கிச்சூடு 237) 07.01.1989 - கண்டாவளை தேடுதல் வேட்டை 238) 08.01.1989 - இராமநாதபுரம் பழைய கண்டி வீதி கண்ணிவெடி வெடிப்பு 239) 09.01.1989 - அக்கரைப்பற்று பேரூந்து நிலைய காவல் சோதனை படுகொலை 240) 13.01.1989 - பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டை படுகொலை 241) 17.01.1989 - காத்தார் சின்னக்குளம் படுகொலை 242) 20.01.1989 - மன்னார் காவல் நிலைய படுகொலை 243) 26.01.1989 - இந்துக் கல்லூரி படுகொலை 244) 28.01.1989 - அரியாலை பொதுமக்கள் படுகொலை 245) 29.01.1989 - அளம்பில் தேடுதல் வேட்டை 246) 30.01.1989 - ஆறுகால்மடம் தொழில் நுட்பக்கல்லூரி மாணவர் படுகொலை 247) 31.01.1989 - கரவெட்டி இராணுவ முற்றுகை படுகொலை 248) 03.02.1989 - மிருசுவில் சிவரஞ்சன் சுட்டுக்கொலை 249) 08.02.1989 - பிறவுண்வீதி இளைஞர் படுகொலை (கிழக்கு கொக்குவில்) 250) 10.02.1989 - பேசாலை படுகொலை 251)15.02.1989 - மாவிட்டபுரம் மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்ட இளைஞர் 252) 15.02.1989 - முள்ளியவளை செல்வரட்ணம் சுதர்சன் படுகொலை 253) 15.02.1989 - உடுப்பிட்டி முகாமில் யாழ் சகோதரிகள் சுட்டுக்கொலை 254) 16.02.1989 - மொறக்கொட்டாஞ்சேனை படுகொலை (டெலோ + IPKF) 255) 22.02.1989 - நெல்லியடி மருத்துவமனைக் காவலாளி படுகொலை 256) 23.02.1989 - துன்னாலை எறிகணைத் தாக்குதல் 257) 23.02.1989 - திக்கம் மக்கள் படுகொலை 258) 01.03.1989 - புத்தூர் தேடுதல் வேட்டை படுகொலை 259) 14.03.1989 - பளை தேடுதல் வேட்டைப் படுகொலை 260) 16.03.1989 - மட்டுவில் தேடுதல் வேட்டை 261) 19.03.1989 - மணற்காட்டு தமிழ் இளைஞர்கள் படுகொலை 262) 11.04.1989 - காட்டுமுறி தமிழ்ப்பொதுமகன் படுகொலை 263) 14.04.1989 - கரம்பன் மேற்கு பக்தி கிராமம் கிராமசேவகர் படுகொலை 264) 25.04.1989 - கட்டுவன்புலம் பள்ளி மாணவன் படுகொலை 265) 01.05.1989 - நாட்டுப்பற்றாளர்கள் சிறி.முறிசெல்வம் & செ.பாலேந்திரன் படுகொலை (வவுனியா சிறை) 266) 02.05.1989 - பருத்தித்துறை தேடுதல் வேட்டை 267) 03.05.1989 - மல்லாகம் செல்லையா நிர்மலன் படுகொலை 268) 03.05.1989 - புங்குடுதீவு முருகேசு குகதாஸ் படுகொலை 269) 14.05.1989 - மிருசுவில் பேருந்து மீது தாக்குதல் 270) 14.05.1989 - மணலாறு உணவு விடுதி படுகொலை 271) 14.05.1989 - யாழ் மருத்துவமனையில், தமிழிளைஞரை சடலமாக ஒப்படைத்தது 272) 16.05.1989 - தரவத்தை விவசாயப் பெண் கூலித்தொழிலாளர் கடத்தல் 273) 16.05.1989 - பால்நிலைய அதிபர் படுகொலை 274) 16.05.1989 - புத்தூர் வாதரவத்தை படுகொலை 275) 17.05.1989 - மல்லாவி பெண் படுகொலை 276) 17.05.1989 - அத்தியாயர் கல்லூரி மாணவன் படுகொலை 277) 17.05.1989 - புன்னாலைக்கட்டுவன் படுகொலை 278) 18.05.1989 - புத்தூர் தேடுதல் வேட்டை படுகொலை 279) 19.05.1989 - உரும்பிராய் தமிழ்ப்பொதுமகன் படுகொலை 280) 20.05.1989 - சுதுமலை படுகொலை 281) 20.05.1989 - நிலாவெளி கோயில் படுகொலை (ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 282) 23.05.1989 - கிளிநொச்சி பிரசைகள் குழுப்பிரமுகர் கொலை (கனகபுரம் - ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 283) 28.05.1989 - வந்தாறுமூலை இளைஞர்கள் படுகொலை (ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 284) 28.05.1989 - தமிழ்ப்பொதுமகன் சுட்டுக்கொலை (சாவச்சேரி) 285) 28.05.1989 - வண்ணார்பண்ணை இருதமிழர் சுட்டுக்கொலை (நாகர்கோவில்) 286) 01.06.1989 - நாவாந்துறை தேடுதல் வேட்டைப் படுகொலை 287) 01.06.1989 - திருநெல்வேலி தேடுதல் வேட்டைப் படுகொலை 288) 01.06.1989 - மாணிக்கம் யோகேந்திரன் படுகொலை 289) 01.06.1989 - ஏழாலை தேடுதல் வேட்டைப் படுகொலை 290) 01.06.1989 - வைத்தீஸ்வரா கல்லூரி மாணவர் ஆனந்தராசா படுகொலை 291) 04.06.1989 - கட்டுடைச்சந்தி வணிகர் கணபதிப்பிள்ளை படுகொலை 292) 04.06.1989 - பிராம்பத்தை கோடீஸ்வரி பத்மநாதன் படுகொலை 293) 04.06.1989 - தபால்பெட்டிச்சந்தியில் அரியாலை தமிழ்ப்பொதுமகன் படுகொலை 294) 05.06.1989 - வரணி எறிகுண்டுத் தாக்குதல் 295) 05.06.1989 - கண்டிக்காடு படுகொலை 296) 17.06.1989 - சங்கத்தானை தேடுதல் வேட்டை 297) 19.06.1989 - கோப்பாய் சண் படுகொலை 298)19.06.1989 - புதுக்குடியிருப்பு பேபி படுகொலை 299)20.06.1989 - கந்தர்மடம் சண்முகம் உதயவர்மன் படுகொலை 300) 20.06.1989 - மாவிட்டபுரம் கந்தையா குஞ்சுக்கிளி படுகொலை 301) 20.06.1989 - முருகுசசிக்குமார் படுகொலை 302) 20.06.1989 - யாழ் வைத்தியசாலையில் முகமாலை நாகேந்திரராசா படுகொலை 303) 24.06.1989 - நாகர்கோவில் தேடுதல் வேட்டை 304) 24.06.1989 - கந்தரோடை கணேசகுமார் படுகொலை 305) 24.06.1989 - தாண்டிக்குளம் பெரியதம்பி படுகொலை 306) 24.06.1989 - வேப்பங்குளம் மோகன்ராஜ் படுகொலை 307) 24.06.1989 - வல்லிபுரம் முருகேசு படுகொலை 308) 24.06.1989 - நெடுந்தீவு ஏரம்புநடராசா படுகொலை 309) 26.06.1989 - அத்தாய் மகேந்திரராசா படுகொலை 310) 28.06.1989 - அல்வாய் மாலிசந்தி தேடுதல் வேட்டைப் படுகொலை 311) 28.06.1989 - நந்தாவில் அம்மன்கோவிலடி படுகொலை 312) 28.06.1989 - பண்டத்தரிப்பில் இளைஞர் சடலம் மீட்பு 313) 28.06.1989 - அளவெட்டி தேடுதல் வேட்டைப் படுகொலை 314) 28.06.1989 - மிருசுவில் தேடுதல் வேட்டைப் படுகொலை ஆசைப்பிள்ளை ஏற்றம் 315) 28.06.1989 - செல்வம் அக்கா சித்ரவதை படுகொலை (ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 316) 28.06.1989 - புலோலிகந்த முருகேசனார் சிலை தமிழ்ப்பெண் சுட்டுப்படுகொலை 317) 29.06.1989 - அளம்பில் துப்பாக்கிச்சூடு 318) 29.06.1989 - நீர்வேலி பெண்கள் வன்படுகொலை 319) 03.07.1989 - ஓமந்தை எறிகணைத் தாக்குதல் 320) 03.07.1989 - கிளிநொச்சி துப்பாக்கிச்சூடு 321) 18.07.1989 - திருகோணமலை தேடுதல் வேட்டை 322) 19.07.1989 - பாரதிபுரம் தேடுதல் வேட்டை படுகொலை 323) 24.07.1989 - உயரப்புலம் தமிழிளைஞர் சுட்டுப்படுகொலை 324) 26.07.1989 - அல்வாய் ஆசிரியர் சின்னத்தம்பி படுகொலை 325) 26.07.1989 - தெல்லிப்பளை ரவீந்திரன் படுகொலை 326) 26.07.1989 - ஓராம்கட்டை இராணுவ நடவடிக்கை 327) 02.08.1989 - தீருவில் தேடுதல் வேட்டைப் படுகொலை 328) 02.08.1989 - அரியாலை இளைஞர் கைது 329) 02.08.1989 - வல்வெட்டித்துறை படுகொலை (மருத்துவமனை, சமூக நிலையம், கோயில், குடியிருப்புப் பகுதி) 330) 02.08.1989 - வல்வை 15 பெண்கள் பாலியல் வன்படுகொலை 331) 04.08.1989 - கீரிமலை தேடுதல் வேட்டைப் படுகொலை 332) 07.08.1989 - புன்னாலைக்கட்டுவன் தேடுதல் படுகொலை 333) 07.08.1989 - புன்னாலைக்கட்டுவன் எறிகணைத்தாக்குதல் 334) 10.08.1989 - கோண்டாவில் இளைஞர் சடலமாக மீட்பு 335) 14.08.1989 - பருத்தித்துறை வியாபாரி எரித்துப்படுகொலை 336) 14.08.1989 - மூலை நடன ஆசிரியர் படுகொலை 337) 14.08.1989 - யாக்கரை எறிகணைவீச்சு படுகொலை 338) 17.08.1989 - நெடுங்கேணி தமிழ்க்குழந்தைகள் படுகொலை 339) 17.08.1989 - கன்னியர்மட மாணவியர் வன்படுகொலை (எழுதுமட்டுவாள்) 340) 17.08.1989 - உடுப்பிட்டி இமையணனை படுகொலை (கரவெட்டி வதிரிச்சந்தி) 341) 18.08.1989 - ஐயன்குளம் படுகொலை 342) 18.08.1989 - நுணா சிறுவன் சுட்டுக்கொலை 343) 21.08.1989 - வடமராட்சி தேடுதல் வேட்டைப் படுகொலை (திக்கம், அல்வாய் பகுதிகளில்) 344) 21.08.1989 - மாணவன் அருளானந்தம் சுதாகரன் கொலை 345) 21.08.1989 - கந்தளாய் படுகொலை 346) 23.08.1989 - மன்னார் தேடுதல் வேட்டைப் படுகொலை 347) 23.08.1989 - மாவிட்டபுரம் வியாபாரி படுகொலை 348) 25.08.1989- ஆவரங்கால் இந்திரன் சுட்டுப்படுகொலை 349) 27.08.1989 - பேசாலை எறிகணைத்தாக்குதல் 350) 31.08.1989 - ஆவிரங்கால் விவசாயி சுட்டுக்கொலை 351) 02.09.1989 - ஆண்டான்வளவு தேடுதல் வேட்டை 352) 02.09.1989 - ஆண்டான் வளவுப் பகுதியில் தமிழ்ப்பொதுமகன் படுகொலை 353) 08.09.1989 - பருத்தித்துறை பொதுமக்கள் படுகொலை 354) 17.09.1989 - கிளிநொச்சி முகாம் படுகொலை 355) 18.09.1989 - புற்றளை தேடுதல் வேட்டைப் படுகொலை 356) 22.09.1989 - நமசிவாயம் தெய்வேந்திரன் படுகொலை 357) 23.09.1989 - இயக்கச்சி நாட்டுப்பற்றாளர் தர்மகுலேந்திரன் படுகொலை 358) 25.09.1989 - பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டைப் படுகொலை 359) 26.10.1989 - கரடிக்குழி தேடுதல் வேட்டைப் படுகொலை 360) 26.10.1989 - மறிச்சுக்கட்டி தேடுதல் வேட்டை 361) 29.10.1989 - யாழ் நாட்டுப்பற்றாளர் ரவீந்திரன் படுகொலை 362) 17.11.1989 - மானிப்பாய் செல்லத்தம்பி படுகொலை 363) 26.11.1989 - கிளாலி நாட்டுப்பற்றாளர் பவுண் படுகொலை 364) 10.12.1989 - மன்னார் பெண் குழந்தை படுகொலை 365) 28.12.1989 - யாழ் நாட்டுப்பற்றாளர் பாலா படுகொலை 366) 12.01.1990 - கோண்டாவில் நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை படுகொலை 367) 24.05.1990 - வங்காலை முகாம் படுகொலை 368) 14.06.1990 - கந்தளாய் பேருந்து பயணிகள் வெட்டிப்படுகொலை 369) 14.06.1990 - மூதூர் பீரங்கித் தாக்குதல் (இப்பட்டியல் The North-East Secretariat on Human Rights (NESoHR), Voice உலகத்தமிழர்கள் உரிமைகள் குரல் அமைப்பு, Tamil Nation, ஆகியவை வெளியிட்ட ஆவணங்கள் & நூல்களில் இருந்து இப்பட்டியலை பரப்புரை நோக்கத்திற்காக தயாரித்துள்ளோம்) தோழர் சிவப்ரியன் செம்பியன் பதிவிலிருந்து பகிர்வு

Tuesday, 20 May 2025

ஆகாஷ் பாஸ்கரன் இன்னொரு உதயநிதி

ஆகாஷ் பாஸ்கரன் இன்னொரு உதயநிதி

 தற்போது அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கியுள்ள ஆகாஷ் பாஸ்கரன் சேலம் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் தம்மம்பட்டி யைச் சேர்ந்தவர்!
 1940 களிலேயே இவரது பாட்டன் ரங்கசாமி ரெட்டியார் நகைக்கடை ஆரம்பித்து அதை இன்றும் நடத்தி வருகிறது இவர்களது குடும்பம்!
 ஆகாஷின் அக்கா அன்பில் மகேஸ் பொய்யாமொழி யின் உறவினர் ஒருவரை மணந்துகொள்கிறார்.
 இதன் பிறகு அன்பில் மகேஷ் இந்த குடும்பத்துக்கு நெருக்கம் ஆகிறார்.
 இதன்மூலம் உதயநிதி தொடர்பு கிடைக்கிறது!
 ஆகாஷ் திரைத்துறையில் நுழைகிறார்.
இரண்டு பெரிய படங்களில் (நானும் ரவுடிதான், அமரன்) உதவி இயக்குநராக இருந்ததாக சொல்கிறார்கள்!
 பிறகு இவரது பெயரில் டான் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் உருவானது!
 அது முதல் படம் (இட்லிக்கடை)  தயாரித்து அது இன்னும் வெளிவரவில்லை!
 ஆனால் பராசக்தி, முரளியின் இதயம், சிம்பு நடிக்கும் ஒரு படம் என முன்னனி நடிகர்கள் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கிறார்.
 கருணாநிதியின் முதல் மகனான மு.க.முத்து வின் மகள் தேன்மொழி (கவின் கேர் உரிமையாளர்). இவரது மகளான தாரணியை ஆகாஷ் திருமணம் செய்துள்ளார்! 
தற்போது ஆகாஷுக்கு 30 வயது! 

 இவரது குடும்பம் தம்மம்பட்டியில் இருந்த நகைக்கடையை (PRR) பெரிதாக கட்டிக்கொள்கின்றனர்.
 திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய நகரங்களில் மூன்று கிளைகள் தொடங்க வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன.
 குறைந்தது ஒரு டன் தங்கம் இவர்களது கைவசம் இருப்பதாக சொல்கிறார்கள்! 
 ஆட்சியாளர்கள் தங்களது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பிரபலமான நிறுவனங்களை இப்படி சட்டவிரோதமாக பயன்படுத்திக் கொள்வது வழக்கம்! 
 அந்த வகையில் தற்போது திமுக உருவாக்கிய ஆகாஷ் பாஸ்கரன் ஈ.டி ரெய்டில் சிக்கியுள்ளார்.

தகவல்களுக்கு நன்றி Shiva media 
 
 இருந்தால் தெலுங்கராக இருக்க வேண்டும்!
 அதிலும் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்!
 அதிலும் தற்போதைய ஆட்சியில் இருக்க வேண்டும்! 
அப்படி இருந்தால் எந்த கவலையும் இல்லை! 

Monday, 12 May 2025

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை
26.04.2017

திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்,

மாசி மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கும்
இது மாசித் திருவிழா.
மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தம்பதிகளாக ஊர்வலம் வரும் தெருக்கள் இன்றும் மாசிவீதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

இரண்டு மாதம் கழித்து,
சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவார்.
அதுவும் மதுரையில் அல்ல தேனூர் அருகே.

என்றால் கள்ளழகர், மீனாட்சி கல்யாணத்தைப் பார்க்க வருகிறார் என்ற கதை பொய்தானே?!

திருமலை நாயக்கர் இந்த இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சித்திரையில் கொண்டாடுமாறு மாற்றியமைத்துள்ளார்.

மீனாட்சி அழகரின் தங்கை என்பதற்கு எனக்குத் தெரிந்தவரை எந்த சான்றும் கிடையாது.

இதேபோல இராசராசனின் சதய திருவிழாவும் மாதம் மாற்றப்பட்டுள்ளது.

கடவுள்கள் வரலாறை ஆள்பவன் நினைத்தால் மாற்றமுடிகிறதே?!

வந்தேறிகள் இப்படித்தான் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களின் ஒவ்வொரு விழாவையும் குழப்பி  வைத்துள்ளனர்.

முகம் சிதைந்த கண்ணகி சிலை


முகம் சிதைந்த கண்ணகி சிலை
20.12.2015

எச்சரிக்கை:
இப்பதிவைப் படிப்போருக்கு இனவெறி வர வாய்ப்புள்ளது.

சமண மதத்தைச் சேர்ந்த கண்ணகி ,
சோழநாட்டில் பிறந்து
பாண்டிநாட்டில் வழக்காடி
சேரநாட்டில் தெய்வமானாள்.

தமிழ் மூவேந்தர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டார்கள் என்றும் தமிழர் இனவுணர்வு இல்லாமல் பாண்டிநாட்டான்,சோழநாட்டான், சேரநாட்டான் என்ற நாட்டு உணர்வுடன் இருந்தனர் என்றும் சிலர் கூறுகின்றனர்.

தமிழர்கள் என்றும் தமிழர்களாகத்தான் இருந்தனர் என்பதற்கான சான்றுதான் மூவேந்தரும் சமமாகப் போற்றப்பட்டு எழுதப்பட்ட சிலப்பதிகாரமும் இன்றும் தொடரும் கண்ணகி வழிபாடும்.

என்றால் ஈழம் விடுபடுகிறதே?
இல்லை, ஈழத்தான் மட்டும் சளைத்தவனா?
இன்று தமிழகத்தை விட அதிகமான கண்ணகிகோவில்கள் ஈழத்திலே உள்ளன.

கண்டியில் உள்ள புத்தர்கோயிலில் பத்தினி வழிபாடு பத்தினித்தெய்யோ என்ற பெயரில் திருவிழாவாகச் சிங்களவரால்  கொண்டாடப்பட்டு வருகிறது.
இது பத்தினித் தெய்வம் வழிபாட்டின் திரிபேயாகும்.
(இது கண்ணகி வழிபாடு கிடையாது).

சேரன் செங்குட்டுவன் இமயம் சென்று கல் எடுத்துவந்து கண்ணகிக்குக் கோயில் எழுப்பியதும் தமிழ் மன்னர்கள் அனைவரும் அப்பத்தினிக்குக் கோவில்கள் எழுப்பினர்.
ஈழத்திலும் அதேகாலகட்டத்தில் கண்ணகிக்கோவில்கள் கட்டப்பட்டன.
ஆக கண்ணகி வழிபாடு
மதம், நாடு தாண்டிய தமிழ் இன உணர்ச்சியின் அடையாளம் ஆகும்.

கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பழமையானதும் சேரன் கட்டியதுமான அந்தக் கோவில் இன்று மங்கலதேவி கண்ணகிக் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
மங்கல தேவி என்பது யார் என்ற கேள்விக்கு தமிழ்ப்பார்ப்பனர் உ.வே.சா வின் விளக்கமானது,
கண்ணகிக்கு வஞ்சிக்காண்டம் வரந்தரு காதையில்:
"மங்கலமடந்தை கோட்டத் தாங்கண்
வெங்கோட்டுயர் வரைச் சேனுயர் சிலம்பில்"
என்று குறிப்பு உள்ளது. மங்கல மடந்தை என்பதற்குப் பொருள் மங்கல தேவி என்றும் அது கண்ணகியைக்குறிக்கும் சொல்லாகும்
என்கிறார் தமிழ்த்தாத்தா.

தமிழ் நிலத்தை கிட்டத்தட்ட 1500ச.கி.மீ ஆக்கிரமித்து இன்று 38,863சகீமி பரப்பளவுகொண்ட கேரள மாநிலம் இன்னமும் மண்வெறி பிடித்து அலைகிறது.

தமிழக எல்லைக்குள் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள வனப்பகுதியில் 4380 அடி உயர சிகரத்தில் உள்ளது கண்ணகிகோயில்.
1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை.
அதன்பிறகு சிறிய சிறிய பிரச்சனைகளைச் செய்யத்தொடங்கியது.

பிரச்சனையைத் தீர்க்க 1976ல் தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும் கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப்பகுதியில் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதற்கிடையில், கூடலூரில் சில தமிழார்வலர்கள் 'மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு'  என்று ஒன்றைத் தொடங்கி கோவிலைப் புதுப்பிக்க திட்டமிட்டனர்.

1976ல் இந்த சீரமைப்புக்குழு,
அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து உதவி கேட்டது.
கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டசபையில் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதியில் கூடலூர் பனியங்குழி வழியாக 6 கி.மீ சாலையை போடுவதற்காக ரூ.20 லட்சம்நிதி ஒதுக்கப்பட்டது.
இதிலும் மலையாள அரசு எதிர்ப்பு தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று முட்டுக்கட்டை போட்டது.
இந்தநிலையில் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது.
இதனால் இத்திட்டம் தாமதப்பட்டது.

இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு 1976ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக மலையாள அரசு 16 கி.மீ பாதை ஒன்றை அமைத்தது.
இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாக தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்லத்தொடங்கினர்.
தற்போது இந்த
சாலையை வைத்துக் கேரள
அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச்
சொந்தமானது என்று உரிமை
கொண்டாடுகிறது.

சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் ஒருவாரம் சிறப்பு வழிபாடுகள் செய்து வந்தனர்.
மலையாளிகள் இதை மூன்று நாட்களாக்குதான் அனுமதிக்கமுடியும் என்று மூன்றுநாளாக்கினர்.
அதன்பிறகு ஒரே ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கினர்.
அதுவும் இப்போது காலை, 9மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே
என்று ஆக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மலையாள அதிகாரிகளைச் சந்தித்து கெஞ்சிக்கூத்தாடி அனுமதி வாங்குவதும், மலையாளிகள் அவர்கள் மனம்போன போக்கில் விதிமுறைகளை விதிப்பதும் தொடர்கதை ஆகிவிட்டது.

மற்ற நாட்களில்
தமிழர்கள் இங்கு செல்ல
அனுமதி அளிக்கப்படுவதில்லை.
மலையாள காவல்துறை நடமாட்டம் எப்போதும் உள்ளது.
இதனால் கோயில் பராமரிப்பின்றி பாழடைந்த மண்டபம் போல ஆகிவிட்டது.
கோவிலின் பல பகுதிகள்
சிதைந்து போய்விட்டன.கோவில் சுவற்றின் கற்கள் உடைந்து போய் கிடக்கின்றன.
கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன.
(இரு கல்வெட்டுகள் மிகமுக்கியமானவை.
முதலாம் இராசராச சோழனின் கல்வெட்டு ஒன்றும், பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் காலத்துக் கல்வெட்டு ஒன்றும் மேலும் பல கல்வெட்டுகளும் இக்கோவிலில் உள்ளன).
இவையும் விரைவில் அழியவுள்ளன.

5-5-82இல் சித்திரை பெளர்ணமி அன்று கண்ணகி கோவிலில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்ளச்சென்ற தமிழர்களை
கேரள அரசு கைது செய்தது. அதுபற்றி பேசச்சென்ற சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.டி. கோபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கம்பம் நடராசன் ஆகியோரை
மலையாளிகள் மரியாதையின்றி நடத்தினர்.
இதை தமிழக முதலமைச்சரிடம் அவர்கள் முறையிட,  இதைச் சுட்டிக்காட்டி கேரள ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் தந்தி அனுப்பினார்.
அதற்குக் கேரள அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.

பிறகு அக்கோவில் மலையாளிகளின் துர்கா கோவில் என்று கூறிக்கொண்டு 15.3.1983ம் அன்று கண்ணகி கோவிலுக்குள் துர்க்கா தேவி சிலையை இ.சி. சுகுமாரன் என்பவர் மலையாள தாசில்தார் உதவியுடன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மற்றும் கேரள போலீஸ் அதிகாரிகளுடன் வந்து கோவிலுக்குள்  நிறுவினார்.

இதுவாவது பரவாயில்லை.
அதன்பிறகு கண்ணகிசிலையை முகத்தை உடைத்து சிதைத்தனர்.
வேறுவழியின்றி  தற்போது சித்திரை முழுநிலவு நேரத்தில் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது.

9மணிக்கு அனுமதிக்கப்படும் தமிழர்கள் வெறும் 8மணிநேரத்திற்குள் விழாவை நடத்திமுடித்து இடத்தைக் காலிசெய்தாகவேண்டும்.
வழிபாட்டு நேரத்தில் அங்கே இருக்கும் மலையாள காவல்துறை தமிழர்களை அடிப்பதும் திட்டுவதும் இஷ்டப்படி விதிமுறைகளை விதிப்பதும் வழிபாட்டில் முடிந்த அளவு இடைஞ்சல் செய்வதும் கண்கூடாகக் காணலாம்.
நான்கரை மணிக்குமேல் அடித்துவிரட்டத் தொடங்கிவிடுவார்கள்.

நம் எல்லைக்குள் நமக்கு தடை விதித்து மண்ணைக் கைப்பற்றிக்கொண்டு ஆண்டுக்கொருமுறை வரும் நம்மை தமது ராணுவமான காவல்துறையை அனுப்பி அப்பாவி மக்கள்மீது இனவெறியைத் தீர்த்துக்கொள்கிறான் மலையாளி.

தமிழ் ஆர்வலர்கள் சிலர் "மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை"என்ற
ஒரு அமைப்பு நிறுவியுள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில் சித்திரை முழுநிலவு தினத்தன்று கண்ணகிகோயிலில் வழிபாடுகள் செய்வதுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் உட்பட பல உதவிகள் செய்து வருகிறது.
இந்த அமைப்பு தமிழ்நாட்டின்.கூடலூர் (தேனி) மலைப்பகுதியிலுள்ள பளியங்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குத் தனிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் கண்ணகிகோயில் தமிழ்நாட்டுக்குரியது அதை மீட்க வேண்டும் என்றும் போராடிவருகிறது.

மலையாளிகளின் அராஜகத்தைப் பொறுக்கமுடியாமல் தமிழர் ஒருவர் கோயிலுக்குப் போகும்வழியில் தனக்கு சொந்தமான இடத்தில் ஒரு கண்ணகிகோவில் கட்டி அங்கே வழிபாடு நடத்த வழிசெய்துள்ளார்.
கண்ணகி கோயிலில் அவமானப்பட்ட தமிழர்கள் மறுமுறை அங்கே போகமனமில்லாதவர்கள் இங்கே அதேபோல வழிபாடு நடத்துகின்றனர்.

நாதியற்ற தமிழினம் செய்யமுடிந்தவை இவைதான்.

இத்தனை கெடுபிடிகளிலும் தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் இப்போதும் சென்றுவருகின்றனர்.
ஜீப் கட்டணம், குமுளி வருவதற்கும்,.தங்குவதற்கும் என்று, எந்த வசதிகளும் செய்யப்படாத நிலையில் பக்தர்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

கண்ணகியின் மீது கொண்ட ஈடுபாடு குறையாத தமிழக மக்கள் மனக்குமுறலுடன் மலையாள இனவெறியையும் தமிழக வந்தேறி அரசுகளின் பாரமுகத்தையும் சகித்துக்கொண்டு வழிபாட்டைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.
பழமையான, பாரம்பரியமான,  பல்வேறு தமிழ்கல்வெட்டுக்களை கொண்டு, தமிழர் அடையாளமாக திகழும் இந்த கண்ணகி கோவிலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நாம் விரைந்து எதாவது செய்யவேண்டும். கோவிலை எப்பாடுபட்டேனும் தமிழர்கள் மீட்டு எடுக்க வேண்டும்.

என்னதான் கேவலப்பட்டாலும் உணவுக்கு தமிழகத்தை நம்பியிருக்கும் வெறும் ஒன்றரை கோடி மலையாளிகள் ஏறிமிதிக்கும் கேவலமான இனமாக நாம் இருப்பது கொஞ்சம்கூட நியாயமே இல்லை

செந்தூர் என்பதே sindoor

செந்தூர் என்பதே sindoor

 தூர் என்பது பொடி எனும் பொருள் தரும்.
தூரல் - சிறு சிறு மழைத்துளிகள் 
தூர்ந்து போதல்- சிறு மணல் சேர்ந்து மேடாகுதல்.
தூர் வாருதல் - படிந்த நுண் மணலை அள்ளுதல்
தூர்த்தல் - சிறு மணலை அள்ளுதல் அதாவது சுத்தம் செய்தல் (திருநெல்வேலி வழக்கு)

 இவ்வாறாக செந்தூர் என்பது சிவந்த பொடியைக் குறிக்கும். இதுவே குங்குமம் ஆகும்.
 தூரம் ஆவது என்பது மாதவிலக்கைக் குறிக்கும் என்பதை நோக்குக.
 செந்தூரப்பூ சிவந்த நிறமுடையது.
 இது வடக்கே உள்ள குங்குமப்பூ  என்றும் செம்பருத்திதான் செந்தூரப்பூ என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.
 அதேவேளை செந்தூர் பயன்பாடு ஆண்பாலுடன் தொடர்புடையது.

 செந்தூரன், செந்தூரப் பாண்டியன், திருச்செந்தூர் போன்றவை இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டவை.

 வடக்கே சென்ற இச்சொல் சிந்தூர் என்றாகி மீண்டும் தமிழுக்கு வந்து செந்தூரம் என்றானது.

Saturday, 10 May 2025

ஹிந்தியா வல்லரசாக என்ன செய்யவேண்டும்

ஹிந்தியா வல்லரசாக என்ன செய்யவேண்டும்? 20.07.2016 நான் ஹிந்தியனாக பிறந்து ஹிந்தியாவை ஆண்டால்... *) முதல் வேலையாக ஹிந்தியுடன் தொடர்பில்லாத பகுதிகளுக்கு விடுதலை அளித்துவிட்டு ஹிந்தி மொழிக் குடும்பத்துடன் தொடர்புடைய பகுதிகளை மீட்பேன் *) காஷ்மீருக்கு விடுதலை அளித்துவிடுவேன் *) சீன இனங்களுடன் தொடர்புடைய கிழக்கு மாநிலங்களான சிக்கிம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மிசோரம் ஆகியவற்றுக்கு விடுதலை அளித்துவிடுவேன் *) தமிழ் மொழிக்குடும்ப பகுதியான தென்னிந்தியாவுக்கும் விடுதலை அளித்துவிடுவேன் *) வங்கதேசத்திலும் நேபாளத்திலும் உள்ள ஹிந்தி தொடர்பான பகுதிகளை ஹிந்தியாவுக்கு தரச்சொல்வேன். மறுத்தால் படை எடுத்து கைப்பற்றுவேன். *) பாகிஸ்தானின் மீது படையெடுத்து அதன் நடுவே ஓடும் சிந்து பேராறு வரையான ஹிந்தி தொடர்புடைய பகுதியை ஹிந்தியாவுடன் இணைப்பேன். ஆப்கானியா, பஷ்தூன், பலூச்சிஸ்தான் போன்ற பகுதிகளுக்கு விடுதலை அளிப்பேன். இதன்மூலம் பாகிஸ்தான் என்றநாடோ மாநிலமோ இல்லாது ஒழிந்து போகும். *) இத்தனை பெரிய நாட்டையும் வளங்களையும் மக்கள் எண்ணிக்கையையும் வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கும் வறிய நாடாக இருக்காமல் வறுமையை ஒழிக்க வேளாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்துவேன். *) கறுப்பு பணத்தை மீட்க முயற்சி செய்வேன். பெருமுதலாளிகளை இயற்கையைக் கொள்ளையடிக்க விடமாட்டேன். கையூட்டு, ஊழல் ஆகியவற்றை இல்லாது ஒழிப்பேன். *) வேதங்களில் குறைகளைக் களைந்து நடைமுறை வாழ்க்கைக்கேற்ப ஒரு எளிய ஹிந்து மத புனித நூலை உருவாக்குவேன். அது எல்லா மொழிகளில் கிடைக்கச் செய்வேன். மூடநம்பிக்கைகளையும் போலிச் சாமியார்களையும் ஒழிப்பேன். *) ஹிந்து மதத்தை ஹிந்தியாவின் தேசிய மதமாக அறிவிப்பேன். ஹிந்துநாடு (Hindutva republic of Hindia) என்று பெயர் மாற்றுவேன். எவரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம். சிறுபான்மை மதத்தினருக்கு பாதுகாப்பும் சலுகைகளும் வழங்குவேன். *) மக்கள் தொகையைப் படிப்படியாக பல கட்டங்களில் சரியாகத் திட்டமிட்டு குறைப்பேன் *) சேனையை பலமானதாக நவீனமானதாக வைத்திருப்பேன். நாட்டு மக்களின் உடல் நலத்தைப் பேணுவேன். *) பசு மாடு உட்பட அனைத்து விலங்குகளின் நலங்களையும் காப்பேன். காட்டு வளத்தைப் பெருக்குவேன். *) மக்களிடம் ஒழுக்கத்தைப் புகுத்துவேன். விதிகளை மீறும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவேன். *) ஹிந்தி மொழியை மற்ற ஹிந்திக் குடும்ப மொழியினர் மீது திணிக்கமாட்டேன். இறந்துபோன சமஸ்கிருதத்தைத் தூக்கிவைத்து அழாமல், இருக்கும் மொழிகளுக்கு உரிய உரிமைகளை அளிப்பேன். *) ஒவ்வொரு ஹிந்தி குடும்ப இனங்களுக்கும் சரியான மாநில உரிமைகள் அளிப்பேன். (இராணுவம், தகவல் தொடர்பு நடுவணரசு கட்டுப்பாட்டில்) *) திபெத்தியருக்கு ஆயுதம் கொடுத்து சீனாவிடமிருந்து விடுதலை பெற உதவுவேன். மங்கோலியாவுக்கும் உதவி செய்து சீனாவிடம் பறிபோன தமது பகுதிகளை மீட்க தூண்டுவேன். கேண்ட்டான் (ஹாங்காங்) சீனாவிடமிருந்து விடுதலை பெருவதில் உதவுவேன். இதன் மூலம் சீனாவைத் துண்டாடி வலுவிழக்கச் செய்வேன். *) இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தி பொருளாதாரத்தைப் பெருக்கி எந்த வல்லரசுக்கும் அடிமையாக ஆகாமல் சொந்தக்காலில் இந்துநாட்டை நிற்கவைப்பேன். பிற நாடுகளில் குடியேறிய ஹிந்தியரை திரும்ப அழைத்து வருவேன். *) ஹிந்தியா மற்றும் அதனைச் சுற்றி நிலவழித் தொடர்புடைய நாடுகளை இணைத்து ஒரு ஒன்றியத்தைத் தொடங்குவேன். பொதுவான நாணயம் (currency) ஒன்றை உருவாக்குவேன் *) எந்த நாட்டில் இந்து, இந்தி இன மக்களுக்குக் கொடுமை நடந்தாலும் குரல்கொடுப்பேன்.

Thursday, 8 May 2025

பலூச்சிஸ்தான் விடுதலை

பலூச்சிஸ்தான் விடுதலை

  பலூச் மொழி பேசும் மக்கள் எப்போதுமே நேரடி ஆங்கில ஆதிக்கத்தில் இருந்ததில்லை!
 1947 இல் சுதந்திர நாடு என்று அறிவிக்கப்பட்ட பலூச்சிஸ்தானை பல்வேறு சதிகளைச் செய்து ஆக்கிரமித்தது பாகிஸ்தான்.
 ஆனால் பலூச்சிகள் துவண்டு விடவில்லை.
அன்று விடுதலைக்காக ஆயுதத்தை தூக்கிய அவர்கள் தொடர்ந்து நடந்த துரோகங்களுக்கு பிறகும் விடுதலைப் போராட்டத்தை சளைக்காமல் முன்னெடுத்து  இன்று உச்சக்கட்ட எழுச்சியில் இருக்கின்றனர்.
 பாகிஸ்தானால் இனி அவர்களுடன் மோதி வெல்ல முடியாது என்ற கட்டத்திற்கு வந்துவிட்டனர்.
 கூடிய விரைவில் விடுதலை அடைந்துவிடுவர்.
 இதை ஏதோ தாங்கள்தான் செய்தது போல ஹிந்திய அரசு பொய்க் கதைகளை பரப்பி வருகிறது.

 பலூச் மக்களின் வரலாற்றில் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும் நாணித் தலைகுனிய வேண்டிய தருணங்களும் ஏராளம்!
 
 இது பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்!

  பலூச்சிகள் ஒரே மொழி பேசும் பல்வேறு இனக்குழுக்களாக சிதறி இருந்தனர்.
 ஆனால் இவர்களை 12 ஆம் நூற்றாண்டில் மொழி அடிப்படையில் ஒன்று திரட்டி ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தியவர் மீர் ஜலால் கான்.
 இவர் செய்த தவறு இவர்களுடன் வாழும் பிராகுய் இன மக்களையும் இந்த கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டது.
  இந்த கூட்டமைப்பு அறிவிக்கப்படாத தலைமை ஒன்றை ஏற்படுத்தி அவரை அரசராகக் கொண்டு அதன் மூலம் பலூச்சிஸ்தானில் இருக்கும் பல்வேறு இன குழுக்களை ஒன்றிணைத்து நாடாக செயல்பட்டது.
 ஆனாலும் பலூச் இனக்குழுக்கள் ஒற்றுமை இல்லாமலேயே இருந்தன.
 குறிப்பாக வடக்கே இருந்த பலூச் இனக்குழுக்கள் இந்த கூட்டமைப்பையும் அதன் தலைமையையும் முழுமையாக ஏற்கவில்லை.
  ஆங்கிலேயர் இவர்கள் மீது படையெடுத்த போது இவர்களை பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் கட்டுப் படுத்தினர்.
 வடக்கை ஆக்கிரமித்து குத்தகை என்கிற பெயரில் ஒப்பந்தம் போட்டு தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தெற்கு பகுதியை தனக்கு அடங்கிய சுதந்திரப் பகுதியாக வைத்திருந்தனர். பலூச்சிகளின் எல்லைப் பகுதியில் கொஞ்சத்தை பிய்த்து ஈரானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் தாரை வார்த்தனர்.
 இப்படி நான்காக உடைக்கப்பட்ட பலூச் தாய்நிலத்தைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்குள் அடித்துக் கொண்டு இருந்த பலூச்சியர்கள் இனம் பெரிதென எண்ணாமல் இனக்குழுவே பெரியது என்று எண்ணி குறுகிய மனப்பான்மையுடன் இருந்தனர்.
 ஆனால் மீர் ஜலால் வம்சாவளிகளும் தெற்கு பலூச்சிகளும் பலூச்சிய கூட்டமைப்பை கைவிடாமல் பலூச்சிஸ்தானை ஒன்றிணைத்து சுதந்திர நாடாக்குவதில் குறிக்கோளுடன் செயல்பட்டனர்.
 ஆங்கிலேயர் வெளியேறும்போது பலூச் கூட்டமைப்பு வசம் உள்ள தென்பகுதியை சுதந்திர நாடு என்று அறிவித்தனர்.
 அப்போது கூட வடக்கு பலூச்சிகள் அதில் இணையவில்லை. பறிபோன எல்லைகளை மீட்பது பற்றி யோசிக்கவில்லை. இவ்வளவு ஏன் பலூச்சிஸ்தான் என்று பெயர் கூட இல்லை. 
 இந்த சுதந்திர பிரகடனத்தை அன்று இந்தியப் பிரிவினையின் போது நேரு, ஜின்னா, மவுண்ட்பேட்டன் என அனைவருமே அங்கீகரித்தனர்.
  ஆனால் பாகிஸ்தான் நாடு அமைந்த உடனேயே ராணுவத்தை அனுப்பி சுதந்திர பலூச்சிஸ்தானை ஆக்கிரமித்தது.
 அன்று அதன் மன்னர் போல இருந்த கூட்டமைப்பின் தலைவர் ஆங்கிலேயரிடம் முறையிட அவர்களும் உதவ முடியாது என்று கூறிவிட்டனர் எங்கும் ஆதரவு கிடைக்காத நிலையில் தோல்வி அடைந்து சரணடைந்த மன்னர் பாகிஸ்தானுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டார்.
  ஆனால் மன்னரின் தம்பி நவுரோஸ் கான் இதை ஒத்துக் கொள்ளாமல் தலைமறைவாகி பலூச்சிகளை ஒன்று திரட்ட முயன்றார். ஒரு தனிப்படையை திரட்டி கோரில்லா தாக்குதல்கள் நடத்தி  பலூச்சிஸ்தான் விடுதலைக்காக போராட ஆரம்பித்தார். ஓராண்டு போருக்குப் பிறகு அவரைப் பிடித்து சிறையில் தள்ளி பிறகு கொன்றது பாகிஸ்தான். 
 அப்போதும் பலூச் இனக்குழுக்கள் ஓரணியில் திரளவில்லை.
 ஆனாலும் தனித் தனியாக ஆயுதக் குழுக்கள் தொடங்கப்பட்டு எல்லா பலூச் இனக்குழுக்களும் போராட ஆரம்பித்தன.
  அன்றிலிருந்து இன்று வரை தூக்கிய ஆயுதத்தை கீழே போடவில்லை.
 பாகிஸ்தான் எவ்வளவோ முயன்றும் கொரில்லா குழுக்களை ஒழிக்க முடியவில்லை.
 பாகிஸ்தான் குரான் மீது சத்தியம் செய்து பலூச் ஆயுதக்குழுக்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து சத்தியத்ததை மீறி சிறைபிடித்து முதுகில் குத்தியிருக்கிறது.
 இதனாலேயே பலூச்சிகளுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டாலும் அவர்களால் பாகிஸ்தானை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 1970 களில் பூமியைத் தோண்டி எரிவாயு எடுக்கும் நாசகர திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
 அதை எதிர்த்தும் பெரிய போராட்டம் நடத்தது.
 பிறகு 2000 களில் பாகிஸ்தானின் தெற்கே கடலில் துறைமுகம் அமைத்து அங்கிருந்து காஷ்மீர் வழியே சீனா வரைக்குமான பாதை அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
 பலூச்சிகளின் நிலம் பிடுங்கப்பட்டது. வளங்கள் அழிக்கப் பட்டன. அதில் வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை.
 இதனால் ஆயுதக் குழுக்கள் தொடர்ந்து இந்த பாதையில் தாக்குதல் நடத்தினர். 4 சீனர்களையும் கொன்றனர். 
 பாகிஸ்தான் முழுப் பலத்துடன் பலூச்சிஸ்தானில் இறங்கியது. ஆனாலும் கொரில்லா குழுக்களை வெல்ல முடியவில்லை.
  2000 களில் தான் இந்த இன குழுக்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டான பலூச்சிஸ்தான் ராணுவத்தை நிறுவினர்.
  பலூச் மக்கள் இப்போதுதான் மொழி அடிப்படையில் ஓரணியில் திரண்டு பெரும் எழுச்சி பெற்று அரசை எதிர்த்து சுதந்திர தாகத்துடன் போராடி வருகின்றனர்.
 இன்னொரு ஹிந்தியாவான பாகிஸ்தான் உடையட்டும்!
 தேசிய இனமான பலூச்சியர் விடுதலை அடையட்டும்!
 தமிழர் தனிநாடு அமைக்க முன்மாதிரியாக விளங்கட்டும்! 
 

 

Sunday, 4 May 2025

பஹல்காம் எங்கே இருக்கிறது

பஹல்காம் எங்கே இருக்கிறது பயங்கரவாத தாக்குதல் நடந்த பஹல்காம் எல்லைப் பகுதியில் இல்லை எல்லைக் கோட்டிலிருந்து காஷ்மீர் தலைநகர் sri nagar ஐயும் தாண்டி உள்நாட்டில் இருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மேற்கிலிருந்து வந்திருந்தால் (haveli இலிருந்து) pahalgam 270 கிமீ உள்ளது (ஏற்கனவே தாக்குதல் நடந்த pulwama பஹல்காம் அருகிலேயே உள்ளது அதுவும் எல்லையிலிருந்து 222 கிமீ) . சாலைகளை பயன்படுத்தாமல் கால்நடையாக மலைகளில் ஏறி இறங்கி வந்தாலும் நேர்கோடாக கணக்கிட்டாலும் 150 கி.மீ குறைந்த பட்சம் இருக்கும். வடக்கில் மலைகள் உள்ளன. வடக்கிலிருந்து வந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு குறைவு. அப்படி வடக்கிலிருந்து கால்நடையாக கணக்கிட்டாலும் குறைந்தது 100 கி.மீ வருகிறது. அதாவது dras இலிருந்து அமர்நாத் பனி லிங்கம் 64 கி.மீ. அமர்நாத்திலிருந்து பஹல்காம் வர ஸ்ரீநகர் சுற்றிதான் வரவேண்டும். நேர்கோடாக கணக்கிட்டாலும் 33 கி.மீ இருக்கும். ஆக எல்லையிலிருந்து 100 கிமீ மலைகளில் ஏறி இறங்கி வந்து தாக்குதல் நடத்துவது கூட சாத்தியம் தீன். ஆனால் தாக்குதல் நடத்திவிட்டு திரும்புவது சாத்தியமில்லை. மேற்கு வழியாக வந்தாலும் இதே நிலைதான். இத்தனைக்கும் இந்தியாவிலேயே அதிக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பது இந்த எல்லைப் பகுதியில்தான். உலகிலேயே அதிக ராணுவக் குவிப்பு உள்ள எல்லைகளில் இது இரண்டாம் இடம். ஏற்கனவே தாக்குதல் நடந்த புல்வாமாவுக்கு 66 கிமீ தூரத்தில் உள்ள பகல்காம் இல் மற்றொரு தாக்குதல் நடந்துள்ளது.

Saturday, 3 May 2025

சேனைத்தலைவர் என்றே பதிவோம்

சேனைத்தலைவர் என்றே பதிவோம் 

 சேனைத்தலைவர் உறவுகளே!
நான் பிறந்த தமிழ்க் குடியே!

 நடக்கவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பின் போது நமது குடிப்படங்களான மூப்பனார், முதலியார், செட்டியார், பிள்ளை போன்ற பின்னொட்டுப் பெயர்களையும் தவிர்த்து
 சேனைக்குடையார், சேனைக்குடியர், சேனையர், இலைவாணியர், கொடிக்கால் பிள்ளை போன்ற கொஞ்சம் மருவிய குடிப் பெயர்களையும் தவிர்த்து
 "சேனைத்தலைவர்" எனும் நமது உண்மையான குடிப் பெயரை மட்டுமே சாதியாக கணக்கெடுப்பிலும் சாதித் சான்றிதழ் இலும் நமது பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்!
 "சேனைத்தலைவர்" என்ற 7 எழுத்துகளே நமது முதல் இலக்கிய சான்று படி நமது அடையாளம் ஆகும்.
 
  கி.பி. 6ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு குறிப்பிடும் "செங்குந்தப் படையர் சேனைத்தலைவர் தந்துவாயர் காருகர் கைக்கோளர்.." எனும் வரிகளே அந்த சான்று!

 நாம் தமிழ்க்குடி அதிலும் போர்க்குடி என்பதற்கான வெளிப்படையான சான்றும் "சேனைத்தலைவர்" எனும் பெயரே! 
 இந்நாள் வரை இப்பெயரை அழியாமல் காத்து வந்த நாம் இனியும் அந்தப் பெயரை விட்டுக் கொடுக்கக் கூடாது!
 அதே நேரத்தில் அந்த பெயருக்கு ஏற்றாற்போல தமிழினத்தை சூழ்ந்திருக்கும் ஆபத்திலிருந்து காக்கவும் முற்பட வேண்டும்!

 தமிழினத்தில் வெறும் அரை சதவீதம் இருந்தாலும் நாம் முக்கியமான குடி!
சேர, சோழ, பாண்டியருக்கு அடுத்து படைத் தலைவர்களாக நாட்டை கட்டியாண்டது நாமே! 
 போர் வீரர்கள் லட்சக்கணக்கில் இருப்பர் ஆனால் அவர்களுக்கு தளபதிகள் சிலரே இருப்பர்!
 அந்த வகையிலேயே நாம் சிறுபான்மையாக உள்ளோம்!

 பிற போர்க்குடிகள் போல பழைய வரலாறுகளை தோண்டி எடுத்து நேரத்தை வீணாக்காமல் நாம் புதிய வரலாறு படைப்போம்! 
 
 மரத்திலிருந்து கிளை போல நாம் சக தமிழ்க்குடிகளில் இருந்தே வந்தோம்!
இன்று அனைத்து தமிழ்க் குடிகளையும் ஏற்றத்தாழ்வு இன்றி அரவணைத்து வழிநடத்தவேண்டிய பெரும் பொறுப்பும் நமக்கு உள்ளது! 
 தமிழரில் எவர் ஆளும் பொறுப்புக்கு வருகிறாரோ அவரே மூவேந்தர் வாரிசு! 
 அப்படி நாமோ அல்லது சக தமிழ்க்குடி ஒருவரோ அரியணைக்கு உயர்ந்தால் அதற்கு தோள்கொடுக்க வேண்டியதும் அரணாக நிற்க வேண்டியதும் நமது கடமை! 

சுருங்கச் சொன்னால்
 தமிழரைத் தமிழர் ஆள வேண்டும்!
அப்படி ஆள வைத்தவன் சேனைத்தலைவன் என்றிருக்க வேண்டும்!  

 சேனைத்தலைவர் என்றே பதிவோம்!
சேனைத்தலைவர் என்பதை நிரூபிப்போம்! 

நன்றி! 

Friday, 2 May 2025

மரபணு சோதனையின் அவசியம்

மரபணு சோதனையின் அவசியம்

 தமிழ் தேசியவாதிகளின் அன்பிற்குரிய நார்வே இங்கர்சால் அவர்கள் ஒரு தெலுங்கர் என்று யாரோ கிளப்பி விட அது தொடர்பாக ஒரு சிறிய உரையாடல் முகநூலில் நடந்தது.
நான் எப்போதும் போல அவருடன் இணைய வழி தொலைபேசும்போது இது பற்றி பேச்சு வந்தது.
 'தற்போது இனத்திற்கான ஒரே சான்று சாதி சான்றிதழ் மட்டுமே' என்று கூறி அதை காட்ட சொல்லி கேட்டேன்.
 முதலில் தயங்கினாலும் பிறகு தனது குடிச்சான்றை அவர் காட்டினார்.
  தமிழர்தான்!
 முழுமையான நம்பிக்கைக்கு உரியவர் ஆகிவிட்டார்!
 ஏன் இவ்வளவு தயக்கம் என்று கேட்டேன்.
 அதற்கு சாதி சான்றும் தற்போதைக்கு நம்ப தகுந்தது இல்லை என்றும் தன்னிடம் டி என் ஏ மேப்பிங் தொடர்பாக ஒரு யோசனை இருப்பதாகவும் அதன் மூலம் ஒரு ஆணினுடைய சந்ததியை அவர்களுடைய டி என் ஏ மரபணு மாதிரிகளை வைத்து வாழையடி வாழையாக கண்டுபிடித்து விடலாம் என்றும் அவ்வாறு செய்தால் நூறு சதவீதம் நம்ப முடியும் என்றும் கூறினார்.
 மரபணு ஆராய்ச்சி தற்போது உச்சத்தைத் தொட்டுவிட்டது. இத்தாலியில் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் உடையில் கிடைத்த சிறு சதைத் துணுக்கை வைத்து அருகிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் டிஎன்ஏ சோதனை செய்து அதில் ஓரளவு ஒத்துப்போன ஒரு நபரைப் பிடித்து அவரது தூரத்து பங்காளி வரை தேடி குற்றவாளியைப் பிடித்த சாதனை நடந்துள்ளது.
 அதாவது கொடிவழி, கொத்து, கூட்டம் என்று பலவாறு அழைக்கப்படும் தந்தையிடமிருந்து மகனுக்கு கடத்தப்படும் அந்த மரபு மிக முக்கியமானது!
கோத்திரம் என்றும் கூறுவர்! 
 இதேவழியில் தான் குடிப்பட்டமும் கடத்தப்படுகிறது!
 இதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும்!
 ஒவ்வொரு குடியும் தனது dna sample ஐ ஆவணப்படுத்தி heritage map ஐ உருவாக்க வேண்டும்.
 இந்த சான்று இருந்தால் காகிதச் சான்றுகள் அவசியமில்லை! 
  ஆனால் அதுவரை சாதிச் சான்றுதான் ஒரே வழி!
 அண்ணன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது குடியை வெளிப்படுத்த தற்போது இயலாது!
 சக தமிழ்தேசியவாதிகள் மன்னிக்கவும்! 
 இங்கர்சால் ஒரு தகைசால் தமிழர்தான்!

Friday, 25 April 2025

போலி சங்கராச்சாரி

 போலி சங்கராச்சாரி

காஞ்சி மடம் ஒரு சங்கர மடமே அல்ல!
அது ஆதிசங்கரர் நிறுவியது என்பது முழுப் பொய்! 

அதன் தலைமை மடாதிபதிகள் சங்கராச்சாரியார் என்ற பட்டத்தைப் பயன்படுத்துவதும் ஏமாற்று!

காஞ்சி காமகோடி மடம் சிருங்கேரி மடத்தின் கிளை என்று போலி சாமியார்களால் 1780களில் உருவாக்கப்பட்டது! 

 ஏழாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் நான்கு மடங்களை நிறுவினார்.
அவற்றுக்கும் காஞ்சி மடத்திற்கும் தொடர்பே கிடையாது.
 துவாரகா, சிருங்கேரி, ஜோஷி மடம், கோவர்த்தன பீடம் ஆகிய நான்கு மடங்களே ஆதிசங்கரர் நிறுவிய உண்மையான சங்கர மடங்கள்!
 அவை இன்றும் உண்மையான சங்கராச்சாரிகள் தலைமையில் இயங்கி வருகின்றன.

காஞ்சி சங்கராச்சாரிகள் அத்தனைபேரும் முழுப்பொய்யர்கள் என்பதையும் அவர்கள் கூறும் வரலாறு அனைத்துமே கட்டுக்கதை என்பதையும் இந்நான்கு மடங்களின் உண்மையான சங்கராச்சாரிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

இதற்கெல்லாம் சான்று காஞ்சி சங்கராச்சாரிகள் பத்திரிக்கைகளில் எழுதிய தொடருக்கு வரிக்கு வரி பதிலடி கொடுத்து 'வாரணாசி ராஜ்கோபால் சர்மா' (பிராமணர்) எழுதிய "Kanchi Kamakoti Math - A Myth" என்ற புத்தகம்.

அந்த கொலகாரனுக மொதல்ல சங்கராச்சாரியே கெடையாது ஓய்!


24.01.2018 அன்றைய பதிவு
தலைப்பு: பொய்களின் மடம்

Wednesday, 23 April 2025

டெல்லித் தமிழர் வருங்காலம்

டெல்லித் தமிழர் வருங்காலம்

  இத்தனை நாள் வரை பொதுமக்களைத் தாக்காத காஷ்மீரிகள் இன்று அதைச் செய்துள்ளனர்!
 அது பற்றி நமக்கு கவலை இல்லை!
 காஷ்மீர் பிரச்சனையை காஷ்மீரிகள் பார்த்துக் கொள்வார்கள்! 
 நாம் நமது டெல்லி தமிழர்களைப் பற்றி யோசிப்போம்!
 700 தமிழ்க் குடும்பங்கள் 60 ஆண்டுகளாக வசித்து வரும் (ஜங்புரா) மதராசி குடியிருப்பை காலி செய்ய முயற்சி நடக்கிறது.
 இதை எதிர்த்து டெல்லியில் 500 தமிழர்கள் கலந்துகொண்ட பேரணி காவல்துறையால் வலுக்கட்டாயமாக தடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது!
வழக்கம் போல சீமான் தவிர்த்து எந்த தலைவரும் குரல் கொடுக்கவில்லை!
 டெல்லியில் 10 லட்சம் தமிழர்கள் இருக்கின்றனர்.
 இதை கணக்கிட்டு தேமுதிக தேர்தலில் போட்டி கூட போட்டது!
 நாம் தமிழர் கட்சி ஏன் அதைச் செய்யவில்லை?! 
இனியாவது அதைச் செய்யலாமே?!
 அடிமட்ட அதிகாரத்தையாவது கைப்பற்றலாமே?! 

Monday, 14 April 2025

தமிழ்ப் புத்தாண்டு குழப்பத்திற்குத் தீர்வு


தமிழ்ப் புத்தாண்டு குழப்பத்திற்குத் தீர்வு
14.04.2017

தமிழர்களிடம் புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் இல்லை.
இருந்தாலும் புத்தாண்டு என்பது இருந்திருக்க வேண்டும்.

இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவி வாழ்ந்த இனமல்லவா?

அதனால் பல நாட்காட்டிகள் நடைமுறையில் இருந்தன.

கதிரவனின் இயக்கத்தைப் பின்பற்றி ஒரு நாட்காட்டி

நிலவின் இயக்கத்தைப் பின்பற்றி ஒரு நாட்காட்டி.

விண்மீன்களைப் பின்பற்றி ஒரு நாட்காட்டி.

தற்போது தமிழ் மாதங்களும் பஞ்சாங்க ஆண்டுகளும் 15ம் நூற்றாண்டுக்குப் பிறகு அதாவது தெலுங்கர் ஆட்சியில் சமஸ்கிருதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஹேவிளம்பி என்பது தமிழில் பொற்றடை என்று வழங்கப்பட்டது.

இதற்கு சான்று 'விவேக சிந்தாமணி' என்ற நூல் 1400 களில் எழுதப்பட்டது,
அதில் 60 ஆண்டுகளும் (தமிழில்) வருமாறு ஒரு பாட்டு உள்ளது.

ஆக நாரதர் - கிருஷ்ணர் ஆபாசக்கதையை (அதை எழுதியதும் வந்தேறிகளே) திராவிடம் மூலம் பரப்பி அதை ஆரியப் புத்தாண்டு ஆக்கி
தமிழர்கள் தற்போதும் பின்பற்றும் (சமஸ்கிருத மயமாக்கப்பட்ட) தமிழ் (கதிரவன்) நாட்காட்டியை நாமே எதிர்க்குமாறு செய்து நம்மை முட்டாளாக்கி வருகின்றனர்.

நாம் எந்த நாட்காட்டியைப் பின்பற்றவேண்டும்?
எது நமது புத்தாண்டு?

இதையெல்லாம் தமிழர்நாடு அமைந்ததும் வானியல், மெய்யியல், இலக்கியம், வரலாறு என பலதுறைகளைச் சேர்ந்த வல்லுநர் குழுவை அமைத்து முடிவு செய்யவேண்டும்.

அதுவரை குழம்பாமல் அடித்துக்கொள்ளாமல்  கதிரவன் புத்தாண்டையே பின்பற்றுங்கள்.

தற்போதைய பஞ்சாங்க ஆண்டுகளின் உண்மையான (தமிழ்ப்)பெயர்களை அண்ணன் மேகநாதன் அவர்கள் பதிவிட்டுள்ளார்.

அது பின்வருமாறு,

01. பிரபவ -நற்றோன்றல்
02. விபவ - உயர்தோன்றல்
03. சுக்ல - வெள்ளொளி
04. பிரமோதூத - பேருவகை
05. பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்
06. ஆங்கீரச - அயல்முனி
07. ஸ்ரீமுக - திருமுகம்
08. பவ - தோற்றம்
09. யுவ - இளமை
10. தாது - மாழை
11. ஈஸ்வர - ஈச்சுரம்
12. வெகுதானிய - கூலவளம்
13. பிரமாதி - முன்மை
14. விக்கிரம - நேர்நிரல்
15. விஷு - விளைபயன்
16. சித்திரபானு - ஓவியக்கதிர்
17. சுபானு - நற்கதிர்
18. தாரண - தாங்கெழில்
19. பார்த்திப - நிலவரையன்
20. விய - விரிமாண்பு
21. சர்வசித்து - முற்றறிவு முழுவெற்றி
22. சர்வதாரி - முழுநிறைவு
23. விரோதி - தீர்பகை
24. விக்ருதி - வளமாற்றம்
25. கர - செய்நேர்த்தி
26. நந்தன - நற்குழவி
27. விஜய - உயர்வாகை
28. ஜய - வாகை
29. மன்மத - காதன்மை
30. துன்முகி - வெம்முகம்
31. ஹேவிளம்பி - பொற்றடை
32. விளம்பி - அட்டி
33. விகாரி - எழில்மாறல்
34. சார்வரி - வீறியெழல்
35. பிலவ - கீழறை
36. சுபகிருது - நற்செய்கை
37. சோபகிருது - மங்கலம்
38. குரோதி - பகைக்கேடு
39. விசுவாசுவ - உலகநிறைவு
40. பரபாவ - அருட்டோற்றம்
41. பிலவங்க - நச்சுப்புழை
42. கீலக - பிணைவிரகு
43. சௌமிய - அழகு
44. சாதாரண - பொதுநிலை
45. விரோதகிருது - இகல்வீறு
46. பரிதாபி கழிவிரக்கம்
47. பிரமாதீச - நற்றலைமை
48. ஆனந்த - பெருமகிழ்ச்சி
49. ராட்சச - பெருமறம்
50. நள - தாமரை
51. பிங்கள - பொன்மை
52. காளயுக்தி - கருமைவீச்சு
53. சித்தார்த்தி - முன்னியமுடிதல்
54. ரௌத்திரி - அழலி
55. துன்மதி - கொடுமதி
56. துந்துபி - பேரிகை
57. ருத்ரோத்காரி - ஒடுங்கி
58. ரக்தாட்சி - செம்மை
59. குரோதன - எதிரேற்றம்
60. அட்சய - வளங்கலன்
(நன்றி: மேகநாதன்)

மாதங்களின் பெயர்கள் பின்வருமாறு,

சித்திரை - மேழம்
வைகாசி - விடை
ஆனி - ஆடவை
ஆடி - கடகம்
ஆவணி - மடங்கல்
புரட்டாசி - கன்னி
ஐப்பசி - துலை
கார்த்திகை - நளி
மார்கழி - சிலை
தை - சுறவம்
மாசி - கும்பம்
பங்குனி - மீனம்

தமிழர் படைபல வீழ்ச்சிக்கு காரணம் யார்?

தமிழர் படைபல வீழ்ச்சிக்கு காரணம் யார்?

16.01.2021

 தமிழர் ஆட்சி என்றாலே மூவேந்தர் ஆட்சிதான்.
 அதிலும் முக்கியமானவர்கள் சோழர் மற்றும் பாண்டியர்.
 சோழர் வீழ்ந்து போனதற்கு பல  காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் மன்னர் குடும்பத்தில் இனக்கலப்பு.
 இதுவே வாரிசில்லாதபோது சாளுக்கியர் ஆட்சியைப் பிடிக்க வழிவகுத்தது.
 இரண்டாவது பாண்டியர் அரசு.
 இது வீழ பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் பங்காளி சண்டை அதன்மூலம் வேற்றினத்தவர் ஊடுருவல்.

 ஆக மன்னர் குடும்பங்களில் பிரச்சனை வந்து மன்னர்கள் வீழ்ந்துவிட்டனர்.
 ஆனாலும் அதற்கு அடுத்த நிலையில் இருந்த தளபதிகள், படைவீரர்கள் அதிகம் கொண்ட போர்க்குடிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு தத்தமது பகுதிகளை அந்நியரிடம் இருந்து காக்க முற்பட்டனர்.
 இவர்களை வென்றுதான் அந்நியர் ஆட்சி தமிழகத்தில் பரவியது.

 அப்படியான போர்க்குடிகளில் படைத் தொழிலையே விட்டுவிட்டு கோழைத்தனமாக வணிகத்திற்கு மாறிய போர்க்குடிகள் தமிழ் இனத்தின் இந்த பெரும் சறுக்கலுக்கு பொறுப்பு.

 அப்படியானவர்கள் கைக்கோளர், செங்குந்தர் மற்றும் சேனைத்தலைவர் ஆகியோரே!
(இம்மூவரும் சங்க காலத் தமிழ்க் குடியான கோசர் வழிவந்த வம்சாவளிகள் என்பது பாவாணர் கருத்து)

 இவர்களே அந்நிய ஆட்சிக்கு போர்த்தொழில் செய்ய மறுத்து வணிகத்திற்கு மாறினர்
 (திரு. சேசாத்திரி சிறிதரன் அவர்கள் எழுதிய "கைக்கோளர் படை" பதிவில் படித்தபிறகு இந்தப் படையினர் விலகலுக்கு சைவ மதம் காரணம் என்று கூறியுள்ளார். அதில் எனக்கு உடன்பாடில்லை. மக்களைக் கோழையாக்க சைவம் ஒன்றும் அகிம்சை மதம் இல்லை).
 
 இவர்கள் செய்த தவறு (மறவர், கள்ளர், வன்னியர், etc போன்ற) பிற தமிழின போர்க்குடிகள் செய்ததுபோல அந்நிய தலைமைக்கு அப்போதைக்கு அடங்கி போர்த்தொழில் செய்துகொண்டு வாய்ப்பு வரும்போது தமக்குள் கூட்டணி அமைத்து அந்நியரை தூக்கியெறியும் போக்கைக் கையாளாமல் மரபுத் தொழிலையே மாற்றியதுதான்.

 இதில் கைக்கோளர் நெசவுத் தொழிலுக்கும் செங்குந்தர் ஆடை தொடர்பான (பருத்தி) விவசாயம் மற்றும் வணிகத்திற்கும் சேனைத்தலைவர் காய்கறி விவசாயம் மற்றும் வணிகத்திற்கு மாறினர்.

 இதனாலேயே அதன் பிறகு எழுந்த தமிழ் சிற்றரசுகள் படைவலிமையைப் பெருக்க முடியாமல் தொடர்ந்து வீழ்ந்தன. 

 அன்று எல்லா சாதிகளிலும் படைவீரர்கள், தளபதிகள், அமைச்சர்கள் இருந்தனர்.
ஆனால் முழுக்க போர்செய்வதையே தொழிலாகக் கொண்ட சாதியினர் சிலரே!
 அப்படியானவர்கள் முற்றாக விலகியது தமிழ் நில பாதுகாப்பிற்கு பேரிழப்பு!

 இந்த விடயத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள் மறவர்களே!
 கள்ளர்களையும் பாராட்டலாம்!
(வெள்ளாளர்கள் கூட அந்நிய எதிர்ப்பு வணிகக் கூட்டணி ஒன்றை வைத்திருந்தனர்)

 இவ்விரு சாதியினரும் ஆங்கிலேயர் காலம் வரைக்கும்கூட தாக்குப்பிடித்துள்ளனர்.

 தமிழர் வீழ்ச்சிக்குக் காரணம் சோழ, பாண்டிய குடும்ப வாரிசுகள் செய்த தவறு முதல் காரணம் என்றால் தம் கடமையிலிருந்து விலகிய கைக்கோளர், செங்குத்தர் மற்றும் சேனைத்தலைவர் ஆகியோர் செய்த துரோகம் இரண்டாவது காரணம்.

 இன்றைய நிலையில் மூவேந்தர் மறைந்துவிட்டனர்!
அவர்களது வாரிசுகளும் அழிந்துவிட்டனர்!
அதனால் இன்று மேற்கண்ட மூன்று சாதிகளும் தமிழர் வீழ்ச்சிக்கு முதற்காரணம்!
(இந்த குற்றவுணர்ச்சியின் காரணமாகத்தான் இவர்கள் மூவரும் நாங்கள் போர்க்குடி ஆண்ட சாதி என்று பெருமை பேசுவதேயில்லை போலும்!)

 ஆக இவர்களே இனி தமிழர்தேசியத்தை முன்னெடுக்க வேண்டிய முதல் பொறுப்பாளிகள்!

 செங்குந்த முதலியாரான பாரதிதாசன் தமிழர் விடுதலைக் கருத்தியலுக்கு குறிப்பிட்ட பங்களிப்பைச் செய்துள்ளார்.
 இந்த தலைமுறை பேச்சோடு நிற்காமல் செயலில் இறங்கவேண்டும்.
 தமிழர் சேனை ஒன்றைக் கட்டவேண்டியது இம்மூவரின் பொறுப்பு!

 தொண்டை மற்றும் கொங்குநாடுகள் அந்நிய நிலத்திற்கு அருகில் இருப்பதால் பாதுகாப்பு அதிகம் கிடையாது என்று கொண்டு அப்பகுதி போர்க்குடிகளை மன்னித்து விடலாம்.

 ஆனால் சோழ மற்றும் பாண்டிய நாடுகள் நில அமைப்பின்படி இரும்புக் கோட்டை போன்றவை.
 அதிலும் பாண்டிய நாட்டு போர்க்குடிகள் கடமை தவறியதை மன்னிக்கவே முடியாது.

 சோழ நாட்டு அகமுடையார்களையும் கடமை தவறிய இம்மூவருடன் நான்காவதாக சேர்க்கலாம்தான். ஆனால் அவர்கள் முழுமையான போர்க்குடிகள் கிடையாது.
 அவர்கள் உள்நாட்டு பாதுகாப்புக்கு மட்டுமே (அதாவது போலீஸ் போன்ற தொழில்) அதனால் மன்னிக்கலாம்.

 நாடார்களில் சாணார் மட்டுமே போர்க்குடி இவர்களையும் ஐந்தாவதாக சேர்க்கலாம்தான்.
 ஆனால் மண்மீட்பின் போது குமரி மற்றும் சென்னையை மீட்டுக் கொடுத்து தம் தவறுக்கு சிறிய பிராயச்சித்தம் செய்துள்ளனர். 

 இதிலும் சேனைத்தலைவர் மிகச் சிறுபான்மை (தமிழக மக்கட்தொகையில் 0.5%) , அவர்களைக் கூட மன்னித்துவிடலாம்.
 [சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் வணிகத்திற்கு மாறிய பிறகும் தமது போர்த்தாகத்தைத் தணிக்க வழி தெரியாமல் வந்தேறிகளின் கீழ் படையில் இணையவும் மனமில்லாமல் தம்மை ஆறுதல் படுத்திக்கொள்ள மூத்த தமிழனான முருகனுக்கு போர்த் தொழில் செய்வதாக தம் மீது கற்பனைக் கதைகளை எழுதிக்கொண்டனர்.
  பிற்கால புராணங்களில் வரும் முருகனின் தளபதியான வீரபாகு என்கிற கற்பனையான கதாபாத்திரத்தைத் தத்தெடுத்துக் கொண்டனர்.
 வீர+பாகு இரண்டுமே தமிழ்ச்சொல் இல்லை]

 தாம் செய்த தவறுக்கு இனி வரும் காலங்களில் தமிழினத்தை அடிமைச் சங்கிலியிலிருந்து விடுவித்து மேற்கண்ட  மூன்று போர்க்குடிகளும் அதிலும் குறிப்பாக பாண்டிநாட்டு கைக்கோள (செங்குந்த முதலியார்) சாதிகள் தமது தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்!

-  ஆதிமூலப்பெருமாள் மூப்பனார் சேனைத்தலைவன் 



 

 

 
 

 
 

Sunday, 13 April 2025

சேனைத்தலைவர் தமிழ்த்தலைவர் ஆவது எப்போது

சேனைத்தலைவர் தமிழ்த் தலைவர் ஆவது எப்போது? 01.01.2023 என் சேனைத் தலைவர் சமுதாயமே! படைகளைக் கட்டியாண்ட தளபதி வம்சமே ! உங்களை நோக்கி சில கேள்விகள்.... நாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு சுயநலமாக இருக்கப் போகிறோம்? இன்னும் எத்தனை நாட்களுக்கு தானுண்டு தன் வேலையுண்டு தன் சமூதாயமுண்டு என்று இருக்கப் போகிறோம்? மூவேந்தர் காலத்தில் படைகளை வழிநடத்தும் தளபதிகளாக இருந்த நாம் இன்று எப்படி இருக்கிறோம்?! கல்வியில் முன்னேறி இருக்கிறோம்! நாடு போற்றும் இரண்டு விஞ்ஞானிகள்! பத்ம ஸ்ரீ வரை கூட வாங்கிவிட்டோம்! சரிதான்! வணிகத்தில் ஓரளவு முன்னேறி நாம் வாழும் பகுதிகளில் கோலோச்சியும் வருகிறோம்! சரிதான்! ஆனாலும் நம் சமுதாயத்தில் பாதிபேர் அன்றாடங் காய்ச்சிகளாக இன்றும் உள்ளனரே அது பற்றி சிந்தித்தீர்களா?! மரம் செழித்தால்தான் கிளை செழிக்கும், இனம் செழித்தால்தான் குலம் செழிக்கும் என்பது தெரியுமா? வரலாற்றில் வாளே தூக்கியிராத சமூகமெல்லாம் தாங்கள் போர்க்குடி என்று மார்தட்டும் சூழலில் இன்று நாம் இருக்கிறோமா இல்லையா என்று தெரியாத அளவிற்கு ஊமையாக வாழ்வது ஏன்? அரசியலில் நம் சமுதாயம் காணாமல் ஆக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகாலம் ஆகிறது என்பது தெரியுமா? என்னதான் திறமையிருந்தாலும் செல்வம் இருந்தாலும் அரசியல் செய்யாமல் மேலெழவே முடியாது என்பது தெரியுமா? ஜனநாயகத்தில் மிகச் சிறுபான்மையாக இருக்கும் நாம் என்ன செய்யமுடியும் என்கிற தாழ்வு மனப்பான்மையா? தமிழக மக்கட்தொகையில் 0.003% இருக்கும் ஒரு வந்தேறி சமுதாயம் அரசியலில் தலைமையில் இருக்கும் போது 0.4% இருக்கும் நாம் ஏன் எதையும் சாதிக்க முடியவில்லை? இனியும் நாம் ஒதுங்கியிருப்பதில் அர்த்தம் இல்லை. நாம் நமது சமுதாயத்தை ஒருங்கிணைத்து நம் தமிழ் இனத்தை வழிநடத்தும் கட்டாயத்தில் இருக்கிறோம். மூவேந்தரை அழித்த மன்னர்களின் வாரிசுகள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களது போர்க்குடிகளும் அவர்களது இன மக்களும் இன்னமும் அதே அதிகாரத்துடன் நவீன மன்னராட்சி நடத்தி வருகின்றனர். ஆனால் மூவேந்தர் வாரிசுகள் மறைந்துவிட்டனர். அவர்களது போர்க்குடிகள் விலைபோய் விட்டன. தமிழ் இனமும் வேற்றாரை அனுசரித்துப் போகப் பழகிவிட்டது. தமிழரை வழிநடத்த யாருமில்லை! இந்நிலையில் தமிழினப் போர்க்குடிகளுக்கு தலைமை வகித்த குடியாகிய சேனைத்தலைவர் நாம் இருக்கிறோம். தகப்பன் இல்லாத நிலையில் மூத்த மகன் குடும்ப பாரத்தைச் சுமப்பது போல இன்று இந்த இனத்தின் தலைசிறந்த போர்க்குடி என்ற வகையில் நாம் தமிழினத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கிறோம். ஆம்! இனி தமிழ்தேசியத்தைக் கையில் எடுப்போம். ஏனென்றால் இனி தமிழ்தேசியத்தின் காலம். பிற குடிகளில் இளைய சமுதாயம் இதை உணரத் தொடங்கிவிட்டனர். நம் சமுதாயத்திலும் அத்தகையோர் உண்டு. மற்றவர்களை முந்திக் கொண்டு நாம் தமிழ்தேசியத்திற்கு அதிக பங்களிப்பைச் செய்து தமிழினத்தின் தலைமைக்கு உயர வேண்டும். பங்களிப்பு என்றால் சிந்தனை, செயல், பொருளாதாரம், உழைப்பு, தியாகம், வீரம் என்று பங்களிப்பது. இனி தமிழ்தேசிய எழுச்சிக் காலம்! இனி தமிழ் இனத்திற்காக அதிகம் செயல்படுவோர் ஆதிக்க சாதி! இனத்திற்காக எதுவும் செய்ய முன் வராதோர் அடிமை சாதி! எவன் தமிழினத்திற்காக படைகட்டி எழுப்புகிறானோ அவனே சேர, சோழ, பாண்டியருக்கும் மேலான அரசன்! அவன் சந்ததியும் உறவினரும் அரச பரம்பரை! அவன் சமூகமே ஆதிக்க சாதி! நாம் மீண்டும் ஆதிக்க சாதியாக மாற வேண்டும்! சேனைத் தலைவர் என்றால் தமிழ் மக்களுக்காக எதையும் செய்பவர் என்றாக வேண்டும்! சேனைத் தலைவர் வாழ்ந்தால் தமிழர் வாழ்வார் என்கிற எண்ணம் தமிழர்களிடம் வரவேண்டும்! சேனைத் தலைவரை ஒழித்துவிட்டால் தமிழினம் அழிந்துவிடும் என்று தமிழின எதிரிகள் நினைக்க வேண்டும்! தமிழருக்கு ஆபத்து வந்தால் சேனைத்தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று ஒவ்வொரு தமிழனும் நம்ப வேண்டும்! உலகில் எங்காவது ஒரு தமிழருக்கு பிரச்சனை என்றால் ஒரு சேனைத் தலைவனை சந்தித்துக் கூறிவிட்டால் சரியாகிவிடும் என்றாக வேண்டும்! தமிழினம் சிறிது வீழ்ந்தாலும் சேனைத் தலைவர் பெரும் பின்னடைவு அடைய வேண்டும்! தமிழினம் சிறிது உயர்ந்தாலும் சேனைத் தலைவர் பெரும் வளர்ச்சி பெற வேண்டும்! அரசியலில் மட்டும் இல்லை தமிழினம் நம் தலைவர் பிரபாகரன் வழியில் ஆயுதம் தூக்க நேர்ந்தாலும் நாம் முன்னின்று செய்ய வேண்டும்! நமக்கு போர்த் தொழில் புதிதல்ல! மூவேந்தர் காலத்தில் வெற்றிகளைக் குவித்த வரலாறு நமக்கு உண்டு! நம் உடலில் வீர ரத்தம் ஓடுகிறது! மூவேந்தர் வீழ்ந்த பிறகு வந்தேறிகளுக்கு போர்த்தொழில் செய்யமாட்டோம் என்று மானத்தோடு வெளியேறிய நாம் இன்று வரை வந்தேறி ஆட்சியாளர்களுக்கு அடிபணியவில்லை. எவனுக்கும் கூழைக் கும்பிடு போட்டதில்லை! இனி நாம் வீறுகொண்டு எழுவோம்! தமிழராக சிந்திப்போம்! தமிழ்தேசிய கட்சிகளிலும் இயக்கங்களிலும் சேர்வோம்! பிற தமிழரை விட அதிகம் பங்களித்து தலைமைக்கு உயர்வோம்! எந்த கட்சியில் இருந்தாலும் எந்த வேலையில் இருந்தாலும் நம் குடிக்கும் அதற்கு அடுத்து பிற தமிழருக்கும் சாதகமாக நடப்போம்! காலம் வந்தால் உண்மையிலேயே சேனைத் தலைவராக மாறவேண்டும்! படையொன்று கட்டியெழுப்பி தனிநாடு காணவேண்டும்! தலைமை ஏற்று ஆள்வதற்கு மட்டுமில்லை இனத்திற்காக உயிரைக்கூட இழக்க முன்வர வேண்டும்! நம் முன்னோன் முருகன் போல இறைநிலை அடையவேண்டும்!! அரசியலில் பெரும்பான்மைத் தமிழ்க் குடிகளில் ஆதிக்க குடிகள் வந்தேறிகளிடம் பேரம் பேசி பங்கு வாங்குவதிலும் பட்டியலினத்தார் பங்கு பிச்சை கேட்பதிலும் குறியாக இருக்கிறார்கள். சிறுபான்மை தமிழ்க்குடிகள் அரசியலில் நம்பிக்கை இழந்து ஒதுங்கிவிட்டனர். இந்த நிலையை மாற்ற நமக்கு தகுதி இருக்கிறது. நமக்கு வீர வரலாறு இருக்கிறது! பொருளாதாரத் தகுதியும் அறிவும் இனப்பற்றும் நம்மிடம் இருக்கிறது. நாம் நினைத்தால் நம் இனத்தை வேற்றினத்தார் பிடியிலிருந்து விடுவிக்க முடியும். நாம் மனது வைத்தால் நம் தாய்நிலத்தை விடுதலை செய்து ஆளமுடியும். நம் சமுதாயத்தை ஒன்று திரட்டுவோம்! சாதியில்லை என்கிற வந்தேறிகளின் சதியை முறியடிப்போம்! சாதிப் பட்டத்தை பெயருக்குப் பின் சேர்ப்போம்! குடிகள் சேர்ந்துதான் இனம் என்கிற புரிதலுக்கு வருவோம்! சக தமிழ்க் குடிகளை அரவணைப்போம்! வந்தேறு குடிகளை சிதறடிப்போம்! இனப் பகைவர்களை வேரறுப்போம்! பெரியவர், சிறியவர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், ஏழை, பணக்காரன் என எல்லா சேனைத்தலைவரும் தமிழினத்தை காத்து வழிநடத்த சூளுரைப்போம்! சமுதாய கூட்டங்களிலும், விழாக்களிலும் தமிழ்தேசியம் குறித்து பேசுவோம்! தமிழ்தேசியம் என்றால் சேனைத்தலைவர் என்றாக்குவோம்! ஒரு சேனைத்தலைவரிடம் பேச்சுக் கொடுத்தால் தமிழ்தேசியம் தான் பேசுவார் என்று ஆக வேண்டும்! ஒரு சேனைத்தலைவன் இனத்துக்கு தீங்கு நினைத்தால் தன் மகனே ஆனாலும் இரக்கம் காட்டமாட்டான் என்று எல்லாரும் பேச வேண்டும்! ஒரு சேனைத்தலைவன் இனத்துக்காக முன்வராவிட்டால் தாயே அவனை ஒதுக்கிவிடுவாள் என்று அனைவரும் நம்ப வேண்டும்! நம் பங்களிப்பைப் பார்த்து பிற ஆதிக்க தமிழ்க் குடிகள் நாண வேண்டும்! நம் இனப்பற்றைப் பார்த்து பிற குடிகளும் இனப்பற்று கொள்ளவேண்டும்! இதன் மூலம் இனி நம் தாய்நிலத்தில் வேற்றின அதிகாரம் என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் என்றாக்குவோம்! தமிழகம் ஈழம் சேர்ந்த தமிழ்த்தாய் நிலத்தில் ஆள்பவன் சேனைத்தலைவனாக இருக்க வேண்டும் அல்லது ஆளவைத்தவன் சேனைத்தலைவனாக இருக்கவேண்டும்! நம் மேலாண்மையை சக தமிழ்க் குடிகள் முழுமனதுடன் ஏற்கும் வகையில் நம் செயல்பாடு இருக்க வேண்டும்! இன எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் நாம் சிம்ம சொப்பனமாகத் திகழவேண்டும்! பெரும்பான்மைத் தமிழ்க்குடிகளால் முடியாத ஒன்றை நம்மால் சாதிக்க முடியும் என்று காட்டவேண்டும்! ஒரு தமிழர் எப்படி இருப்பார் என்று கேட்டால் எல்லாரும் ஒரு சேனைத்தலைவரைக் காட்ட வேண்டும்! ஜனநாயகம் என்றாலும் சரி ஆயுத வழி என்றாலும் சரி! தமிழினத்தை முன்னின்று காக்க சேனைத்தலைவர் தயாராக வேண்டும்! சாமுராய்கள் ஆண்ட ஜப்பான் போல சேனைத்தலைவர் ஆளும் தமிழர்நாடு இருக்கும்! உலகில் சிறந்த நாடு தமிழர்நாடு! அதிலும் சிறந்தது சேனைத்தலைவர் ஆட்சி என்று வரலாறு பேச வேண்டும்! தமிழின எதிரிகள் அழிவு சேனைத்தலைவர் கையால் நடக்க வேண்டும்! சேனைத்தலைவரில் ஒரு இனத் துரோகி கூட கிடையாது என்றிருக்க வேண்டும்! சேனைத் தலைவரைத் தாண்டித்தான் பிற தமிழரைத் தொடமுடியும் என்கிற நிலை வரவேண்டும்! ஒன்று தமிழ்தேசியத்தைக் கையிலெடுத்து தமிழினத் தலைவர் ஆகத் தயாராவோம்! அப்படி இல்லை வேறு எந்த தமிழ்க்குடி தலைமைக்கு உயர்ந்தாலும் அவர்களுக்கு மனமனமுவந்து அடிமை சேவகம் செய்ய தயாராவோம்! இந்த 2023 ஆம் புத்தாண்டில் உறுதி ஏற்போம்! இனி தமிழ்தேசியம் நம் கொள்கை! தனிநாடு நம் இலக்கு! நாமே இனி தமிழர்நாட்டை ஆளப்போகும் பரம்பரை! இனம் வாழ்ந்தால் குடிகள் வாழும்! குடிகள் வாழ்ந்தால் இனம் வாழும்! இனி தமிழ்தேசியத்தின் காலம்! இனி சேனைத்தலைவரின் காலம்!