Tuesday, 22 July 2025

தமிழ்தேசிய சொர்க்கம்

தமிழ்தேசிய சொர்க்கம்

 அன்று பூவுலகை விட்டு விண்ணுலகம் வந்த தமிழர்கள் அவர்களது 'இனநலன் கணக்கு' பார்க்கப்பட்டு சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அனுப்பட்டுக் கொண்டு இருந்தனர்.
 ஒருவர் பேன்ட் சர்ட் போட்டு கறுப்பு கண்ணாடி போட்டிருந்தார். ஆங்கிலம் கலந்து பேசிக்கொண்டு இருந்தார்.
 அவரை சொர்க்கத்துக்கு அனுப்பினார்கள்.
 இன்னொருவர் வேட்டி சட்டையில் தூய தமிழில் பேசிக் கொண்டு இருந்தார். அவரை நரகத்துக்கு அனுப்பினார்கள்!!
 இவர்களுக்கு பின்னால் நின்ற ஒருவர் எனக்குத் தெரிந்தவர் அவரை கணக்கு பார்த்து பூவுலகிற்கே அனுப்பிவிட்டனர்.
 எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
அங்கே நீதிபதி போல தமிழ்த்தாய் அமர்ந்திருந்தார்.
 முதலில் மூன்றாவது நபரைப் பற்றி கேட்டேன்.
"அவர் இனத்திற்கென்று எதுவும் செய்யவில்லை.
சாமானியனாக வாழ்ந்தார். அதனால் மீண்டும் பிறக்க அனுப்பிவிட்டேன்" என்றார் தமிழ்த்தாய்.
 நான் "அவர் ஜாதி பட்டத்தை தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டவர் ஆயிற்றே" என்று கேட்டேன்.
 அதற்கு "உலகம் முழுவதும் அப்படித்தானே?!
உலகின் மிக மதிக்கப்படும் தலைவர்கள் தம் பெயரையும் தம் குடிப்பட்டத்தையும் சேர்த்துதானே வைத்திருந்தனர்! சாதிப் பட்டத்தை பயன்படுத்துவது தவறில்லை பிற சாதிகளை மேலாகவோ கீழாகவோ எண்ணுவதுதான் தவறு!"
 "சரி! இன்னொருவரை நரகத்திற்கு அனுப்பினீர்களே அவர் யார்?!"
 "அவர்தான் எழுத்தாளர் தூயத்தமிழன்!"
"அவரா?! அவர் எழுத்துகளை வாசித்திருக்கிறேனே?!
 நல்ல எழுத்தாளர்தானே?!  இன உணர்வு உள்ளவர்தானே?! பிறகு ஏன் அவரை நரகத்தில் தள்ளினீர்கள்?!"
 "அவர் மொழிப்பற்றாளர்! மொழிபற்று மட்டுமே இன உணர்வு ஆகாது! தமிழில் கோர்வையாக நான்கு வரி எழுதத்தெரியாதவர்கள் கூட இனத்திற்காக பெரும் போராட்டங்களைச் செய்யவில்லையா?! 
அவர் தூய தமிழில் பேசுகிறார் மகிழ்ச்சிதான்! ஆனால் 'தமிழ் பேசுவோரெல்லாம் தமிழர்' என்றும் 'சாதியை விட்டொழிப்பதே தமிழ்தேசியம்' என்றும் 'தமிழர் தூய தமிழில் பேச வேண்டும்' என்றும் 
'கடவுள் நம்பிக்கையை விடவேண்டும்' என்றும் பேசியும் எழுதியும் வந்தார்"

"சரியாகத்தானே இருந்துள்ளார்?!"

"என்ன சரி?! இவரால் இயல்பான இனவுணர்வுடன் போராட வந்த பலரும் தலைதெறிக்க ஓடிவிட்டனர்"

"எப்படி?"

 "இன அடையாளமான குடிப்பட்டத்தை மறைத்துக்கொண்டு....
 தமிழை நன்கு கற்று சிறப்பாகப் பேசத் தெரிந்த வேற்றினத்தவரை எல்லாம் ஆதரித்து...
 இயல்பான சாதிய மத பற்றுடன் இருந்தவர்களை வெறியர்கள் என்று தூற்றி...
 ஆங்கில சொற்களை கலந்து பேசினால் அவன் பிறப்பையே சந்தேகப்பட்டு...
 என் வயிற்றுப் பிள்ளைகளான பார்ப்பனர்களை வேற்றினம் என்று வெறுப்பை பரப்பி... 
 'தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்' என்று முட்டாள்த்தனமாக எண்ணிக்கொண்டு....
 இனப்பற்றை புறந்தள்ளி மொழிப்பற்றை முதன்மையாகக் கொண்டு...
 ச்சே ச்சே இத்தக்கைய நபர்களால்தான் தமிழினத்தில் புகுந்த வந்தேறிகள் அதிகாரத்திற்கு உயர்ந்து இனத்தையே அழிக்கின்றனர்"

 "என்றால் மொழி பெரிது இல்லையா?! அதுதானே இனத்தின் உயிர்?"

 "இனம் என்பது ஒரு மனிதன் என்றால் மொழி என்பது அவனது முகம்!
 இனம் எனும் உயிர் வாழவேண்டும்! மொழி எனும் அடையாளம் அவ்வளவு முக்கியமில்லை"

 "சரி அந்த கறுப்புக் கண்ணாடி ஆசாமியை சொர்க்கத்துக்கு ஏன் அனுப்பினீர்கள்?!"
 
"முதலில் அவர் தன் குடிப்பட்டத்தை சேர்த்துக் கொண்டு வாழ்ந்ததால் வந்தேறிகள் ஊடுறுவலைத் தடுத்து நிறுத்தினார்"
 
 "அதைத்தானே பூமிக்கு திரும்பச் சென்றவரும் செய்தார்?!" 

 "ஆம்! ஆனால் இவர் இனத்திற்கு பெரிய நன்மை ஒன்றைச் செய்துள்ளார்!"

"அப்படி ன்ன செய்தார்?!"

"நான்கு பிள்ளைகள் பெற்றுள்ளார்!"

"அட! இது பெரிய இனத்தொண்டா?!"

"என்ன இப்படி கேட்டுவிட்டாய் இனம் பெருக வேண்டும் இல்லாவிட்டால் அழிவுதான்!"
 உனக்கு எளிதாக புரியவைக்கிறேன்!
இனம் என்பதை ஒரு மனிதனாக கற்பனை செய்துகொள்!
 அவனுக்கு உயிர் வேண்டும்!
உயிரைக் காத்துக் கொள்ளும் தற்காப்பு சிந்தனை வேண்டும்!
அவன் பலசாலியாக இருக்க வேண்டும்!
அவன் அறிவாளியாகவும் இருக்க வேண்டும்! 
அதன் பிறகுதான் அவன் அழகாக இருக்கிறானா?! பாடுகிறானா?! ஆடுகிறானா?! என்ற தகுதிகள் எல்லாம்!
அதே போல,
 தமிழினம் வாழ இனம் பெருக வேண்டும்! மக்கட்தொகை பெருக வேண்டும்!
 பிற இனங்களுடன் போட்டி போடும் வலு வேண்டும்!
அதாவது இனத்திற்கு அரசும் ராணுவமும் வேண்டும்!
 அறிவியலும் தொழில்நுட்பமும் வேண்டும்!
 அதற்குப் பிறகுதான் அது தாய்மொழியை வளர்க்கிறதா?! சமத்துவத்தைப் பேணுகிறதா?! பழமையை நிறுவுகிறதா?! பிற இனங்களுக்கு உதவுகிறதா? என்பதெல்லாம் கணக்கில் வரும்"
இதைவிட வேறொரு நன்மையும் இனத்திற்கு செய்துள்ளார்"

"அது என்ன?!"

 "வேறொரு இனத்தில் பிறந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். அவள் மூலம் பிறந்த அந்த நான்கு குழந்தைகளையும் தமிழினத்திலேயே மணம் முடித்துள்ளார்"

 "புரியவில்லையே?!"

 "அதாவது ஒரு பெண் மூலம் வேறொரு இனம் விருத்தியாவதை தடுத்து தன் இனத்தில் அந்த விருத்தியைக் கொண்டுவந்துள்ளார்.
 அந்த நால்வரும் அம்மாவழியில் திருமணம் செய்திருந்தால் அவரை நரகத்தில் போட்டிருப்பபேன்!"

 "என்றால் வேற்றின பெண்களை குறிவைக்க சொல்கிறீர்களா?!"

 "அட முட்டாள்! தமிழினத்தில் பிறந்த ஆணோ பெண்ணோ வேறு இனத்தில் திருமணம் செய்து தமது சந்ததிகளை தமிழினத்தில் மணமுடித்து அடுத்த சந்ததிகளை உருவாக்குவது இனத்திற்கு பெரிய நன்மை!"

 "தமிழ்த்தாயே நீங்கள் கூறுவது பூலோகத்தில் பலரும் தமிழ்தேசியம் என்றால் என்ன என்று கூறும் வரையறைக்கு மாறாக இருக்கிறதே?!"

 "தமிழ்த்தாயே எனக்கும் உங்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று ஆசை! நான் இனத்திற்குள்ளேயே திருமணம் செய்துவிட்டேன்! அதிக பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் வயதையும் கடந்துவிட்டேன்! தமிழிலும் புலமை கிடையாது! நான் என்ன செய்ய?!"
 
 "இனப்பற்றோடு இரு! இன அரசியல் பற்றி அறிந்திரு! என்றாவது ஒருநாள் என் வயிற்றில் பிறந்த வீரமறவர்கள் இனம் காக்க வீறுகொண்டு எழுவார்கள்! அப்போது முடிந்தால் அவர்களுடன் சேர்ந்துகொள்! அல்லது முடிந்த அளவு உதவி செய்! நீ என்ன சாதியோ மதமோ எந்த நாட்டில் வாழுகிறாயோ அதையெல்லாம் இரண்டாம் இடத்தில் வை! நீ ஒரு தமிழன் என்ற இன உணர்வை முதல் இடத்தில் வை!
 எனக்கு ஆங்கிலேயர் போல உலகை தம் மொழியும் தம் இனமும் தம் மதமும் ஆள வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை! 
 என் நிலத்தில் என் மக்கள் தனி நாடு அமைத்து பாதுகாப்பாக நிம்மதியாக வாழவேண்டும்!
 அவ்வளவுதான் என் ஆசை!

" இதை என்னால் முடிந்த அளவு மக்களிடம் கொண்டுசெல்கிறேன் அன்னையே! நன்றி!"


 

Saturday, 19 July 2025

வெட்டி முண்டம்

வெட்டி முண்டம்

 இது மதுவிலக்கு பற்றிய சிறுகதை! 
மதுப்பிரியர்கள் படிப்பது அவர்களது விருப்பம்!
போதை இறங்கிவிட்டால் நான் பொறுப்பில்லை! 

 இதோ நல்ல வெயில் காலத்தில் திங்கட்கிழமை மதியம் வயிறு முட்ட தின்றுவிட்டு நடு வீட்டில் செங்கல் தரையில்  தலையணை வைத்துக்கொண்டு  காற்றாடியை முழு வேகத்தில் வைத்துக் கொண்டு இடுப்பில் இருந்த லுங்கிக் கட்டை அவிழ்த்து மார்பு வரை மூடி  இணையத்தில் இலவசமாக தரவிறக்கம்  செய்த புதிய ஒரு திரைப்படத்தை சுவற்றில் மாட்டி இருக்கும் டிவியில் போட்டு ஜன்னல்களையும் கதவுகளையும் அடைத்து விட்டு சத்தத்தை அதிகமாக்கி பார்த்துக்கொண்டிக்கும் போதே தூங்கி கிடக்கும் இவர்தான் இந்த கதையின் நாயகர். 
 இவர் என்றா சொன்னேன் மன்னிக்கவும் இவன்!
 இவன் ஒரு வெட்டி முண்டம்.
 இவனுடைய அன்றாட வேலை காலையில் 9 மணிக்கு மிக நிதானமாக எழுந்து நிதானமாக காலை கடன்களை முடித்துவிட்டு நல்ல உடைகளை உடுத்திக் கொள்வான். குழந்தைக்கும் இவனுக்கும்  அவனது மனைவி எதாவது ஒரு பழத்தை மிக்சியில் நாட்டு சக்கரையுடன் அரைத்து கூழ் போல கொடுப்பாள். அதைக் குடித்துவிட்டு பனிரெண்டாயிரம் ரூபாய் செல்போன் (அதில் 5ஜி இன்டர்நெட்) பணம் நிரம்பி வழியும் பர்ஸ், ஆயிரம் ரூபாய் ப்ளூடூத் நெக் பேன்ட், கர்சீப் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு எப்போதுமே முழு டேங்க் பெட்ரோல் இருக்கும் பைக்கை வெளியே இறக்கி குழந்தையை ஏற்றிக்கொண்டு பள்ளியில் கொண்டு விட செல்வான். சாலை வழியே போகாமல் தெரு வழியே சுற்றி சுற்றி போவான். அப்போது குழந்தையுடன் பேசிக்கொண்டே போவான்.
குழந்தையை பள்ளியில் இறக்கி டாட்டா காட்டிவிட்டு நல்ல தேநீர் கடைக்குப் போய் ஒரு தேநீரை வாங்கி அமர்ந்துகொண்டு நிதானமாக ரொம்ப நிதானமாக குடிப்பான். வாட்சப்பில் பத்து  ஸ்டேடஸ் போடுவான். ஒரு பருப்பு வடை அல்லது பஜ்ஜி வாங்கிக்கொள்வான்.
 அருகிலிருக்கும் பெட்டிக் கடையில் வேர்க்கடலையோ, பிஸ்கட்டோ வாங்கிக்கொள்வான்! வெயில் காலம் என்றால் குளிர்பானம் ஒன்று வாங்குவான். வீட்டிற்கு வந்து பழைய சோற்றை மோரில் பிசைந்து இரண்டு வகை ஊறுகாய் வைத்து வீட்டில் செய்த வத்தல் மற்றும் வாங்கிவந்த வடையுடன் மிக நிதானமாக டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவான். இப்போது நேரம் பதினோரு மணி ஆயிருக்கும். பிறகு கடையில் போய் அமர்வான்.
இவன் வீட்டிற்கு முன்பக்கமே கடை வைத்திருக்கிறார்கள். இவனுடைய அம்மாவும் மனைவியும் கடையை நடத்தி வந்தார்கள். அந்த கடைக்கு பொருட்கள் வாங்கி வருவது அந்த இருவரும் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் நேரத்தில் கடையில் போய் அமர்வதை தவிர இவனுக்கு வேறு எந்த வேலையும் இல்லை. இதுவும் இவன் மாமனார் புண்ணியம். ஓரளவு வசதியான சமூகத்தில் ஆனால் தின்றுகெட்ட குடும்பத்தில் பிறந்தவன் இவன்!
  இவன் கடையில் இருக்கும் நேரத்தில் வெயில் ஏறியிருக்கும் கடைக்கு ஆட்கள் வருவதும் குறைவாக இருக்கும்!
கடையில் எவனாவது வந்து எதையாவது எடுத்துக்கொண்டு போனால் கூட தெரியாத அளவுக்கு விட்டால் செல்போனுக்கு உள்ளே விழுந்துவிடும்படியாக அதை நோண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான். சமூக வலைகளில் புரட்சிகரமாக எதையாவது எழுதி பத்து லைக் வாங்க முக்கிக்கொண்டு இருப்பான். ஆனால் அது எப்போதும் நடந்ததில்லை.
 சிறிது நேரம் கழித்து தேநீர் போடச் சொல்லி அதையும் வாங்கி குடிப்பான்.
வெயில் நன்றாக உச்சிக்கு வந்து இறங்கும்போது 3 மணிக்கு மதிய சாப்பாடு சாப்பிடுவான். நல்ல அரிசியில் சோறு, வீட்டில் அரைத்த மசாலாவில் குழம்பு, அதில் நிறைய காய்கறிகள், கடலை எண்ணெயில் கூட்டு, ஆம்லேட், வாசலுக்கு வரும் கெட்டியான மோர், வீட்டு வத்தல், இரண்டு சுவையில் குரு ஊறுகாய், சின்ன அப்பளம் இரண்டு என்று அரைமணி நேரம் நிதானமாக சாப்பிடுவான். முன்னொரு காலத்தில் வடக்கே நல்ல வேலை கிடைத்து அங்கே போய் கைநிறைய சம்பாதித்து பை நிறைய பணத்துடன் அரிசிச் சோற்றுக்கு சிங்கி அடித்த  அனுபவம் உள்ளதால் சோற்றின் அருமை அதுவும் வீட்டுச் சமையலின் அருமை அவனுக்குத் தெரியும். "சாப்பாட்டுக்கு செலவு பண்ணலைனா நோய்க்கு செலவு பண்ண வேண்டி இருக்கும்" என்பது இவன் அப்பாவின் வேதவாக்கு.
 இவன் அப்பாவை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இவன் ஒட்டுண்ணி என்றால் இவன் அப்பன் ஒரு பொணந்தின்னி. அதாவது தட்டில் ஒரு உயிரினம் செத்துகிடக்காவிட்டால் அவனுக்கு தொண்டையில் கடப்பாரை வைத்து இடித்தாலும் சோறு இறங்காது.
எதுவும் இல்லையென்றாலும் பத்துரூபாய் பாக்கெட் கருவாடை வாங்கி தோசைக்கல்லில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கருக்கியாவது கொடுக்கவேண்டும் அல்லது ஒரு முட்டையையாவது ஆப்பாயில் போட்டு வைக்கவேண்டும். தட்டு சுத்த சைவமாக இருந்தால் அவனுக்கு அவனுடைய  நாயைப் போலவே கோபம் வந்துவிடும். உடனே அந்த நாயைப்போலவே தட்டை தள்ளிவிட்டு நடுவீதியில் நின்று கத்துவான். குடிகாரனாக இருந்தாலும் கட்டிய மனைவி அவனை சகித்துக் கொண்டாள். காரணம் அவன் அப்பன் கடைசி வரை வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை. இல்லையென்றால் என்றோ பாயாசத்தைப் போட்டிருப்பாள். சரி! அவனது அப்பன் தின்று கெட்ட கதையை பிறகு பேசுவோம்! இப்போது கதையை விட்ட இடத்திற்கு வருவோம்! 
 நம் வெட்டி முண்டம் சாப்பிட்டுவிட்டு 4 மணிக்கு குழந்தையை அழைத்துவர போவான். மீண்டும் தெருவழியே சுற்றிக்கொண்டு குழந்தையுடன் பேசிக்கொண்டே வரும் வழியில் பேக்கரியில் நிறுத்தி சாக்லேட்டோ அல்லது சிறிய விளையாட்டு பொருட்களோ வாங்கிக்கொடுப்பான்.
அப்படியே அவனும் தேநீர் குடிப்பான் அல்லது குளிர்பானம் குடிப்பான்.
 வீட்டிற்கு வந்ததும் கை கால் கழுவி லுங்கியை மாற்றிக்கொண்டு மெத்தையில் பல தலையணைகளை அடுக்கி ஒரு டேபிள் பேன், ஒரு சீலிங் பேன், ஒரு கூலர் என்று காற்றோட்டமாக  குழந்தையுடன் ஆனந்தமாக தூங்குவான்.
 அல்லது குழந்தைகளுக்கான படங்களை இணையத்தில் எடுத்து டிவியில் ஓடவிட்டு குழந்தை பார்க்க அவன் அருகிலேயே படுத்து தூங்கிவிடுவான்.
 மாலை 6 மணிக்கு தேநீர் போட்டுவிட்டு அவன் மனைவி எழுப்புவாள். எழுந்து கை,கால், முகத்தைக் கழுவிக்கொண்டு சூடான தேநீருக்குள் உள்ளூர் உற்பத்தியான கைசுற்று முறுக்கை உடைத்துப் போட்டு ஸ்பூனால் எடுத்து தின்றுகொண்டே மூவரும் குடிப்பார்கள். முறுக்கு தீர்ந்துவிட்டால் பிஸ்கெட் அல்லது குக்கரில் சூடான பாப்கான் செய்துகொள்வார்கள். மழை பெய்தால் இவனே இவன் கையால் மேகி செய்வான். மற்றபடி இவனுக்கு வெந்நீர் வைக்க கூட தெரியாது.
 6:30 மணிக்கு வண்டியை எடுத்துக்கொண்டு இவனது நண்பனின் மெடிக்கல்  கடைக்கு போவான். இவன் ஒரு வெட்டி முண்டம் என்றால் இவனது நண்பன் ஒரு வீணாப்போன தெண்டம். இருவரும் அங்கே அமர்ந்து இந்த உலகத்தை எப்படி திருத்துவது என்று விவாதிப்பார்கள். அப்படியே அங்கே அருகில் ஒரு கடை இருக்கிறது. இங்கே வாழைத்தண்டு சூப், முருங்கை கீரை  சூப், உளுந்தங்கஞ்சி, பருத்திப்பால், சுண்டல், களி என்று இயற்கையாக எதையாவது உள்ளே தள்ளிக்கொண்டே பேசுவார்கள்.
 அல்லது கொஞ்சம் தள்ளி ஒரு தள்ளுவண்டியில் சூப், குடல், காளான், சில்லி சிக்கன் என்று எதையாவது தின்பார்கள். நீள்வட்டத்தின் இரு மையங்கள் போன்ற இவர்களைச் சுற்றி ஒரு நட்பு வட்டம் இருந்தது.
 இருட்டும் நேரம் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தள்ளுவண்டியில் சூடாக தோலுடன் அவிக்கப்பட்ட வேர்க்கடலை வாங்கி தின்பார்கள் அல்லது சுக்கு காபி, சுண்டல் வாங்கித் தின்பார்கள். இப்போது அங்கே உலக பிரச்சனைகளுக்கு நூறு சதவீதம் சரியான தீர்வுகள் காணப்படும். 
  இருட்டிய பிறகு தேநீர் கடை சென்று சூடான பக்கோடா தின்றுகொண்டு தேநீர் குடிப்பார்கள். இது எல்லாவற்றுக்கும் இவன்தான் செலவு செய்வான்.
கடன் மட்டும் கொடுக்கமாட்டான். இவன் நண்பன் வீணாப்போன தண்டம் ஒரு நூறு ரூபாய் கடன் கேட்டதற்கு ஒரு வாரம் அவனை அன்பிரன்ட் செய்துவிட்டான்.  
 உலகத்தை திருத்திய பிறகு வீணாப்போன தெண்டம் மெடிக்கலில் இருந்து 8 மணி வாக்கில் கிளம்புவான். ஏடிஎம் இல் பணம் எடுத்துக்கொண்டு பெரிய கடைகளில் தன் கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிகொண்டு பண்ணையில் பால் வாங்கிக்கொண்டு தின்ன இரண்டொரு பழங்கள் வாங்கிக்கொண்டு 9மணி வாக்கில் வீட்டுக்கு வருவான்.
 குழம்பை சுட வைத்து தோசை சுட்டு சட்னியும் வைத்து சாப்பிடுவான். ஒரு தோசைக்கு ஒரு கின்னம் குழம்பு குடிப்பான். அப்படியே ஒரு ஆப்பாயிலும் உள்ளே தள்ளுவான். வாரம் ஒருமுறை பரோட்டா, சால்னா, காடை, சில்லி சிக்கன் என வாங்கி வந்து தின்பார்கள்.
 பிறகு டிவியைப் போட்டுக்கொண்டு விளம்பர இடைவெளிகளில் செல்போனை நோண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான். 
 பத்து மணிக்கு மேல் வண்டியை உள்ளே எடுத்துவிட்டு கதவைப் பூட்டுவான். அனைவரும் படுக்கையில் படுப்பார்கள். மனைவியும் குழத்தையும் தூங்குவார்கள் இவன் படுத்துக்கொண்டே செல்லை நோண்டிக்கொண்டு இருப்பான். பனிரெண்டு மணிக்கு மேல் பாலை குடித்துவிட்டு பழம் சாப்பிடுவான். பிறகு மெல்ல தூங்கிவிடுவான். தூக்கம் வராவிட்டால் மனைவியை எழுப்புவான். அப்போதும் அவள் வெளியே எங்கேயாவது கூட்டிப்போ என்பதைத் தவிர வேறு எதுவும் கேட்பதில்லை. 
 இவன் வெளியே எங்கேயும் போகமாட்டான்.
பக்கத்து ஊருக்கு போகக்கூட மூக்கால் அழுவான். கேட்டால் இமயமலை உயரமே 9 கிலோமீட்டர்தான் என்பான்.
 9 மணிநேரம் தூங்கி 3 வேளை சாப்பிட்டு நினைத்தபோதெல்லாம் ஒன்றுக்கும் இரண்டுக்கும் போய் நாக்கைத் தவிர எந்த உடல் பாகத்திற்கும் அதிக வேலை கொடுக்காமல் சுகபோகமாக வாழ்ந்துவந்த அவனது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் வந்தது. அவனது பெண் குழந்தை ஆளாகிவிட்டது. இப்பதானே நடக்க ஆரம்பித்தாள் என்று குழம்பி நின்ற அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனால் குடும்ப பெரியவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்கள். மாமனாரும் மச்சான்களும் எல்லாவற்றையும் சிறப்பாக செய்தார்கள். அவன் மீது அனைவரும் கொஞ்சம் மரியாதை வைத்திருப்பது அவனுக்கு அப்போது தெரிந்தது.
சடங்கு வீட்டில் ஒப்புக்கு சப்பாணியாக சுற்றிக்கொண்டு இருந்தான்.  கடைசியில் கணக்கு பார்க்கும்போது செலவை விட வரவு அதிகமாக இருந்தது .  பெரிய திருப்பம் என்று நினைத்தது சிறிய திருப்பம் ஆகிவிட்டதால் அவன் பழையபடி வெட்டி முண்டமாகவே வாழ்க்கையைத் தொடர முடிவெடுத்தான்.  அன்று இரவு அவனது மாமியாரும் மனைவியும் பேசிக்கொண்டனர். அவனது மாமியார் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறவே இல்லை என்று அங்கலாய்த்துக் கொண்டார். தன் கணவனைக் குறைகூறியதும் பொறுக்க முடியாத அவன் மனைவி "என் புருசன் குடிப்பதில்லை! ஒழுங்கா இருக்காரு! இதுக்கு மேல என்ன வேணும்?!" என்று சினந்தாள்.
 இந்த கதை மூலம் இதை எழுதியவர் இந்த உலகத்துக்கு சொல்ல வருவது என்னவென்றால் குடிப்பழக்கம் இல்லாதவன் பத்த பைசா பேறாத வெட்டி முண்டமாகவே இருந்தாலும் மதிக்கப்படுவான்!
ஆக இதுதான் அந்த மதுவிலக்கு சிறுகதை!
 பெரிதாக எதிர்பார்த்தவர்கள் மன்னிக்கவும்! 
கடைசியாக ஒரே ஒரு பஞ்ச் டயலாக்!
 குடிப்பவனுக்கு குடி மட்டும்தான் போதை! 
குடிக்காதவனுக்கு வாழ்க்கையே போதை! 

Friday, 18 July 2025

தமிழ்நாடு பெயர்மாற்றமும் அண்ணாதுரையும்

தமிழ்நாடு பெயர்மாற்றமும் அண்ணாதுரையும்

*1920 இல் காங்கிரஸ் கட்சி 'அமையவுள்ள தங்களது ஆட்சியில் மொழி உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்' என்று உறுதியளித்து அதற்கு முன்மாதிரியாக கட்சி கட்டமைப்பை மொழிவாரி கிளைகளாக மாற்றி அமைத்தது.
 அப்படி அமைந்ததே 'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி' எனும் கிளை (அதாவது தமிழ்நாடு என்பதே மக்கள் இயல்பாக பயன்படுத்திய சொல்.
 மக்கள் ஆதரவைப் பெற இதைச் செய்த அதே காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த பிறகு மொழிவாரி உரிமைகளை தர மறுத்தது).

*  1920 இல் காங்கிரசின் இந்த கொள்கையை ஏற்று தீவிர காந்தி பக்தரான வரதராஜுலு நாயுடு "தமிழ்நாடு" எனும் காங்கிரஸ் ஆதரவுப் பத்திரிக்கையைத் தொடங்கி 1931 வரை நடத்தினார் (1925 இல் தமிழ்நாடு காங்கிரசுக்கு இவர் தலைவரானார்).

*1942 இல் 'தமிழ் ராஜ்யம்' என்ற பெயரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனர் நூல் ஒன்று வெளியிட்டார்.
 அதில் இருந்த வரைபடத்தில் அன்றைய மதாராஸ் மாகாண தமிழர் பெரும்பான்மை மாவட்டங்கள், பாண்டிச்சேரி காரைக்கால், திருவனந்தபுரம் உள்ளடக்கிய குமரி, இலங்கையின் வடபகுதி எல்லாம் இருந்தது (பார்க்க: படம்).

* குமரியை தமிழகத்துடன் இணைக்க போராடிய போராளிகளை 'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில்' சேர்க்க முடியாது என்று காமராஜர் துரத்திவிட்டார்.
 இதையடுத்து 1945 இல் குமரித் தமிழர்கள் சாம் நத்தானியேல் நாடார் தலைமையில் காங்கிரசில் இருந்து பிரிந்து தொடங்கிய கட்சி  1946 இல் 'திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' என்று பெயர்மாற்றப்பட்டது. தமிழ்நாடு என்ற பெயரில் இருந்த முதல்  கட்சி இதுவே (தமிழ்நாடு என்பதே இயல்பான பெயராக அப்போதும் விளங்கியது).

* 1947 இல் தமிழர் கழகம் எனும் கட்சி தொடங்கி 'தமிழர் நாடு' எனும் பெயரில் பத்திரிகையும் தொடங்கினார்  'முத்தமிழ் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை 

 *1953 இல் மதராஸ் என்ற பெயரை மாற்றுவது குறித்து சட்ட மேலவையில் முதன்முதலாகப் பேசினார் ம.பொ.சி  (ஆனால் 1953 இல் 'ஆந்திர ராஜ்யம்' உருவாகிவிட்டது. 1956 இல் 'ஆந்திர பிரதேசம்' ஆனது).

* 1955 இல் ம.பொ.சி தனது தமிழரசுக் கழக செயற்குழு கூட்டத்தில் தமிழர் மாநிலத்துக்கு 'தமிழ்நாடு' என்ற பெயரை முன்மொழிந்தார்.

 * 1955 இல் சட்டசபையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் "தமிழ் ராஜ்யம்" என்று பெயரிடுமாறு குரல் கொடுத்தார்.
தனது பத்திரிக்கையிலும் தொடர்ந்து எழுதினார்.

* 1956 இல் 'மதராஸ் மாகாணம்' அதே பெயரால் 'மதராஸ் மாநிலம்' ஆனது.
'மதராஸ்' என்ற பெயருக்கு பதிலாக 'தமிழ்நாடு' என்று பெயரிட சங்கரலிங்க நாடார் உண்ணாவிரதம் இருந்தார்.

* காமராசர் பாராமுகமாக இருக்க 74 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 1956 அக்டோபரில் அவர் இறந்தார்.
அதற்குப் பிறகு 42 நாட்கள் கழித்து சட்டமன்றத்தில் பெயர்மாற்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் காமராசர் அதைத் தள்ளுபடி செய்தார்.

* 1960 இல் ம.பொ.சி தலைமையில் மீண்டும் பெயர்மாற்றத்திற்கான மக்கள் திரள் போராட்டம் நடந்தது.
இதில் அண்ணாதுரை கலந்துகொண்டதோடு சரி.

* 1961 இல் சின்னதுரை கொண்டுவந்த தீர்மானத்தில் மதராஸ் மாகாணம் தமிழில் எழுதும்போது 'தமிழ்நாடு' எனவும் ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றும் எழுதப்படும் என்று நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் உறுதியளித்தார்.
அந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை 'தமிழ்நாடடின் நிதிநிலை அறிக்கை' என்ற பெயரிலேயே தாக்கல் செய்து வாசித்தார்.

அதாவது பாதி வெற்றி அடைந்த இந்த நிலையில்தான் அதுவரை வேடிக்கை பார்த்த ('திராவிட நாடு' பத்திரிக்கை நடத்திவந்த) அண்ணாதுரை இதில் நுழைகிறார்.

இதற்குக் காரணம் அண்ணாதுரை 1962 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் தான் பிறந்த மண்ணான காஞ்சிபுரத்திலேயே மண்ணைக் கவ்வினார்.

அப்போது மக்கள் மத்தியில் 'தமிழ்நாடு' பெயர்மாற்றத்திற்கு இருக்கும் பரவலான ஆதரவை கவனித்து மக்கள் கவனத்தைப் பெற இந்த விடயத்தில் பங்கெடுக்கிறார் அண்ணாதுரை.

* 1962 இல் காமராசர் ஆட்சியில் பெயர்மாற்றத் தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்பட்டு நிறைவேறாமல் போனது.

* 1963 இல் இந்திய பாராளுமன்றத்தில் அண்ணாதுரை தமிழ்நாடு பெயர்மாற்றத்திற்கு குரல்கொடுத்து தனது வாதத் திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.
இதுவே இவர் இப்பெயர்மாற்ற போராட்டத்தில் செய்த குறிப்பிடத் தகுந்த பங்களிப்பு ஆகும்.

* பிறகு 1964 இல் பக்தவச்சலம் ஆட்சியில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு மீண்டும் நிறைவேறாமல் போனது.

* அதற்கடுத்த இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் மத்திய மற்றும் மாநில காங்கிரஸ் அரசுகள் செய்த அடக்குமுறைகள் மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தி 1967 ஏப்ரலில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்க காரணமானது.

(இந்தியெதிர்ப்பு போராட்டமும் இவ்வாறே!
அதாவது சோமசுந்தர பாரதியார் தலைமை ஏற்று நடத்தியதே.
அண்ணாதுரை பங்கு அதிலும் பெரிதாக ஏதுமில்லை.
ஈவேரா ஒரு படி மேலே போய் போராடும் மாணவர்களை சுடச்சொல்லி எழுதிவந்தார்)

* ஆட்சிக்கு வந்து மூன்று மாதம் கழித்து 18.7.1967 அன்று சட்டமன்றத்தில் அண்ணாதுரை பெயர்மாற்றம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
அது ஏகமனதாக நிறைவேறியது.
 அன்று அண்ணாதுரை பேசியதைக் கவனிப்போம்...
"மதிப்பு மிக்க திரு. ம.பொ.சி அவர்கள் இதிலே மிகுந்த மன எழுச்சி பெற்றது இயற்கையானதாகும். அவர்கள் பல ஆண்டுகளாக 'தமிழ் நாடு' என்ற பெயர் இந்த நாட்டுக்கு இடப்படவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையோடு பாடுபட்டவர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தோழர்களும், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதிலே “திராவிட” என்பதை நினைத்துக் கொண்டிருப்பதாலே "தமிழ்நாடு" என்பதிலே அக்கரை இல்லாமல் போய்விடுமோ என்று சிலர் எண்ணிய நேரத்தில் ‘தமிழ்நாடு' என்று பெயரிடுதல் வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்திக்கொண்டு வந்திருக்கிறோம்."

அதாவது ம.பொ.சி பாடுபட்டார், திமுக வலியுறுத்தியது.
 இதிலிருந்து இது யாருடைய போராட்டம் என்பது தெளிவாகப் புரிகிறது அல்லவா?! 

* ஓராண்டு கழித்து 1968 ஆண்டுக் கடைசியில் பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது.

* 14.01.1969 அன்று முதல் தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வந்தது.
அடுத்த ஒரு மாதத்தில் அண்ணாதுரை புகையிலைக் குதப்பும் பழக்கத்தால் வந்த புற்றுநோயினால் உயிரிழந்தார்.

ஏதோ அண்ணாதுரை சாகும்வரை போராடி பெயர்மாற்றம் கொண்டுவந்தது போல புனைக்கதைகள் எழுதப்படும் அதே வேளையில்
"தமிழ்நாடு" என்ற பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்க நாடாரை 'பெயர்மாற்ற விழா' அன்று நினைவுகூர்ந்ததோடு சரி அதன்பிறகு இருட்டடிப்பு செய்துவிட்டனர்.

  தமிழ்நாடு என்ற பெயரை முன்மொழிந்து போராட்டம் நடத்தி சாதித்துக் காட்டிய ம.பொ.சி கூட பிற்பாடு மெல்ல மெல்ல இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டார்.

 இன்று தமிழ்நாடு என்ற பெயரை உருவாக்கியதே அண்ணாதுரைதான் என்றும் அவர் இல்லாவிட்டால் நாம் 'மதராசி'களாக இருந்திருப்போம் என்றும் திராவிடவாதிகள் பேசுவதைப் பார்க்கிறோம்.

அண்ணாதுரைக்குப் பிறகும் இவர்களின் லட்சணம் (செயலழகு) எவ்வாறு என்றால்,

* கால் நூற்றாண்டு கழித்துதான் 1996 இல் மதராஸ் சென்னை ஆனது.

* (பிற மாநிலங்கள் போல அல்லாமல்) தமிழகத்தின் உயர்நீதி மன்றம் தமிழில் "சென்னை உயர்நீதிமன்றம்" ஆங்கிலத்தில் "மதராஸ் ஹைகோர்ட்" என்றே இன்றுவரை உள்ளது.
"தமிழ்நாட்டு உயர்நீதி மன்றம்" என்று இல்லை

* பிற மாநிலங்கள் தமது மாநிலத்தின் பெயரிலேயே தலைமைப் பல்கலைக்கழகம் வைத்துள்ளன.
ஆனால் இன்றுவரை தமிழகத்தின் தலைமைப் பல்கலைக்கழகம் "அண்ணா பல்கலைக்கழகம்" என்றே உள்ளது. 
"தமிழ்நாடு பல்கலைக் கழகம்" என்று இல்லை.
 இதிலும் ஒரு சதி 'அண்ணாமலைப் பல்கலைக்கழகம்' என்பதை சுருக்கி 'அண்ணா பல்கலை' என்று அண்ணாதுரையைக் குறிக்கும் வகையில் திரிக்கின்றனர். 

 அண்ணாதுரையும் தமிழுக்கோ தமிழருக்கோ செய்தது ஏதுமில்லை!  

(23.08.2018 மற்றும் 31.10.2021 பதிவுகள் இணைத்து மேலதிக தரவுகள் சேர்த்தது இப்பதிவு)

Wednesday, 16 July 2025

பெண்ணுரிமை என்று ஈவேரா உளறியவை

பெண்ணுரிமை என்று ஈவேரா உளறியவை

 ஈ.வே.ரா தன் வாழ்நாளில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரு நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் இருந்தார் என்றால் அது அவரது பெண்களைப் பற்றிய நிலைப்பாடுதான்!

"பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்.
அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மைவிடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
------------------
"தவிர 'பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விர்த்தியாகாது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது'
என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள்.
உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்?
மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்?"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-------------------
"பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைகுட்டிக்காரனாய் இருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான்.
அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-----------------
ஆண், பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கர்ப்பமாவதும், பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும் பெண்கள் சுயேச்சைக்கு, கர்ப்பம் என்பது கொடிய விரோதியாய் இருக்கிறது. அதனால்தான் நாம் கண்டிப்பாய் "பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும்' என்கிறோம்.
- "குடியரசு' (6.4.1930)
---------
"ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.
உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும்.
உண்மையான சமரசம் தோன்றிவிடும்.
பிறகு கஷ்டமே இருக்காது"
- ஈ.வே.ரா (குடி அரசு 8-2-1931)
-----------------
"ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும்.
ஜிப்பா போடவேண்டும்.
உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது"
- ஈ.வே.ரா (நூல்: பெரியார் ஒரு வாழ்க்கை நெறி)
--------
"பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும்.
பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்"
- ஈ.வே.ரா (குடியரசு, 21-09-1946)

---------
"திருமணம் என்பது மனிதத்தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமைகொள்ளவே ஏற்பட்டது. அது ஆண்களுக்கு நன்மையாகவும் பெண்களுக்குக் கேடாகவும் இருக்கிறது. பெண்ணடிமைக்கு அடிப்படைக் காரணங்கள் திருமணம், கற்பு என்பவைகளேயாகும்.  பெண்களை அடிமையாக வைத்திருப்பது என்பது ஆண்களுக்கு லாபமாக இருக்கிற காரணத்தால், பெண்கள் உரிமைக்கு ஆண்கள், ஒப்புவது இல்லை. இந்த நிலை மாறியாக வேண்டும். நாளைக்கே ஒரு அரசாங்கம் வந்து, திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சட்டம் செய்து விட்டால் பிரச்சனை இல்லை... எனவே, பெண்ணடிமை ஒழிய திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல. மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டுமென்றாலும், இந்த திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்."
- ஈ.வே.ரா (நூல்: உயர்ந்த எண்ணங்கள்) 
----------------
"உத்தியோகத்துக்குப் போக ஆரம்பித்தால் பிள்ளைபெற வேண்டும் என்ற எண்ணமே பெண்களுக்கு வராது.
உத்தி யோகத்தில் சரிபகுதி பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அதில் அவர்களை திருப்பி விட்டால் தாங்களாகவே பிள்ளை பெறுவதைத் தடுத்துக்கொள்வார்கள்.
பிள்ளை பெறுவதைத் தொல்லையாக கருதுவார்கள்.”
- ஈ.வே.ரா 17-3-1970
----------
"தாலி என்பது நாய்க்கு நகராண்மைக் கழகம் கட்டும் பட்டை போன்றது.
தாலி பெண்ணை அடக்கி ஆளும் மூர்க்கத் தனத்தின் சின்னம்.
தாலிபற்றிப் புலவர்கள் பேசும்போது காளையை அடக்குதல், புலிவேட்டையாடுதல் போன்ற பொருத்தமற்ற இலக்கிய ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள்.
பெண்களுக்கு அறிவு வந்தாலொழியத் தாலியை நீக்கமுடியாது"
- ஈ.வே.ரா (நூல்: நாய்க்கு லைசன்ஸ் பெண்ணுக்குத் தாலி)
-----------
"உலகில் ‘கற்பு’, ‘காதல்’ என்பன போன்ற வார்த்தைகளை எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கியாளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ,
அது போலவேதான் ‘ஒழுக்கம்’ என்னும் வார்த்தையும்"
- ஈ.வே.ரா ( நூல்: மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்)
-----------

'பெண்களே உங்களுடைய கர்ப்பப் பைகளை வெட்டி எறியுங்கள்'

‘பெண் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்’ (தலைப்பு)

‘ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது’

(நூல்: பெண் ஏன் அடிமையானாள்)
----------------
ஈவேரா சொன்னவற்றை சுருக்கமாகச் சொன்னால்
 "ஒரு பெண் திருமணம் செய்யாமல் குழந்தை பெறாமல் வாழவேண்டும் அதுதான் பெண் சுதந்திரம்" 

06.09.2017 அன்றைய முகநூல் பதிவை மேம்படுத்திய பதிவு 

Tuesday, 15 July 2025

காமராஜரை 6 முறை பெண்ணாக வரைந்த கருணாநிதி

காமராஜரை 6 முறை பெண்ணாக வரைந்த கருணாநிதி 

 காமராசர் வாழ்நாளில் அவரை அதிகம் இழிவு படுத்தியவர் கருணாநிதி!
 தனது முரசொலி பத்திரிக்கையில் அட்டைப் படமாக தொடர்ந்து காமராசர் பற்றி கேலிச்சித்திரம் வரைந்து கேவலப்படுத்தி வந்தார்.
 அதிலும் அவரது வக்கிர புத்தி  உச்சகட்டமாக காமராசரை ஆறு தடவை பெண் உருவத்தில் வரைந்து பிற அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக சேர்த்துவைத்து வரைந்துள்ளார்.

ரிசானா நிமிஷா வேறுபாடு

 ரிசானா நிமிஷா வேறுபாடு

  ஏமனில் ஒரு மலையாள பிராடு !
அவளுடைய லோக்கல் கூட்டாளியை கொன்றுவிடுகிறாள்! 
 மரண தண்டனை அடைகிறாள்!
 அவளைப் பற்றி தெரிந்தும் 8.5 கோடி திரட்டி நட்ட ஈடு அளித்து அரும்பாடு பட்டு இன்று கடைசி நிமிடத்தில் மரண தண்டனையில் இருந்து அவரைக் காப்பாற்றிய மலையாளிகள் எங்கே?!

 17 வயது ஈழத்து சிறுமி ரிசானா!
 25 வயது என பொய் சொல்லி சவுதி க்கு வீட்டுவேலைக்கு போன இடத்தில் தவறுதலாக உணவு கொடுத்து ஒரு 4மாத கைக்குழந்தை இறந்ததால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கழித்து 2013 இல் நடுத்தெருவில் தலையை வெட்டி கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்த நாம் எங்கே?! 

 

Friday, 11 July 2025

வாசிக்கவேகூடாத ஒரு கதை

வாசிக்கவேகூடாத ஒரு கதை 

 என் பெயர் நிக்கி!
 நான் ஒரு டாக்டர்! ஆனால் அது வெளிப்பார்வைக்கு தான்!
உண்மையில் என் அடையாளம் எதுவென்றால் அது என்னுடைய உடம்பு தான்!
 அதுதான் எனக்கு எல்லாமே!
 அதை வைத்து பெரிதாக வாழ்க்கையில் உயரத்துக்கு வந்து விட்டேன்!
  பள்ளியில் நல்ல மார்க் வாங்க ஆசிரியருடன் படுத்தபோது என் கணக்கு தொடங்கியது!
 கல்லூரியில் பணக்கார காதலனுக்கு கால்களை திறந்தேன்!
 அவனுக்கும் அவன் கூட்டத்துக்கும் என் அப்பாவித் தோழிகளை விருந்தாக்கினேன்!
அப்படியே அது தொழிலாகிவிட்டது! 
 
 பெரிய இடத்து பிள்ளைகள் மூலம் நான் மருத்துவம் செய்யப் போகும் அனைவரும் பெரிய மனிதர்கள்.
 நான் அவர்களை எங்கே தொட்டு எப்படி தூண்ட வேண்டுமோ அப்படி வளைத்து என் வழிக்குக் கொண்டுவருவேன்!

 பூ வாடை வீசும் ஒரு விலைமாதின் இறுக்கமற்ற துளைகளை புணர்ந்த அவனுக்கு மருந்து வாசனை வீசும் அதிகம் நுழைவுகள் நடக்காத என் துளை சொர்க்கமாகத் தெரியும்!

 என்னிடமும் அதே மார்புதான் ஆனால் வெள்ளைகோட்டுக்குள் கைவிட்டு அதைப் பிடித்தால் வேறு மதிப்பு!
  அவர்களுக்கு ஐந்து நிமிடம் நான் அடிமையாக இருந்தால் அவர்கள் ஆயுசு முழுக்க எனக்கு அடிமையாக இருப்பார்கள்!
 இது ஒன்றும் பெரிய விடயம் இல்லை!
 இரண்டு நிமிடத்திற்கு மூன்று துளைகளை அவர்கள் என்ன செய்தாலும் சம்மதிக்க வேண்டும்!
 மிஞ்சி போனால் பத்து நிமிஷம்!
 இந்த சூத்திரம் தெரியாதவர்கள் இன்னமும் ஏழைகளாக பஞ்சப்பராதிகளாக இருக்கிறார்கள்!
 சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் பல கனவுகளுடன் கடினப்பட்டு டாக்டர் ஆனேன்!
 அதன்பிறகு தான் தெரிந்தது வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் செட்டிலாக டாக்டர் படிப்பு பெரிதாக உதவாது என்று.

 என் அப்பா ஓடிப்போய்விட்டதாக என் அம்மா சொல்லித்தான் அப்படி ஒருவர் உண்டு என்பதே தெரியும்.
 ஆனாலும் அம்மா என்னை கண்டிப்பாக வளர்ந்தாள்.
 அவளும் விரைவில் இறந்துபோன பிறகு எனக்கு பாட்டி மட்டுமே!
 எனக்கு விருப்பமான எதையும் நான் செய்ய முடியும்!

 அந்த வகையில் கல்லூரி முடித்ததும் நான் முதலில் பெரிய பொறுப்பில் முதல்துணையாக இருக்கும் ஒருவருக்கு உதவியாக இருக்கும் ஒருவரை மருத்துவத் தொழில் மூலம் பிடித்தேன்!
 அவருக்கு என்னையே வலையாக விரித்தேன்!
 வசமாக சிக்கிக்கொண்ட அவர் மூலம் வேலை வாங்கித் தருவதாக பல இளம் டாக்டர் மாணவிகளின் கன்னித்தன்மையை பல பெரிய மனிதர்களுக்கு விருந்தாக்கி கொழுத்த லாபம் பார்த்தேன்!
 ஆண் மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு வேலைவாங்கித் தருவதாக ஏமாற்றினேன்.
 பல நூறு பேரை ஏமாற்றியும் யாராலும் என்னை எதுவும் செய்ய முடியவில்லை.

ஏனென்றால் என்னிடம் மாயமந்திரம் இருக்கிறது அதாவது அவ்வப்போது என் கவட்டைக்கு  மத்தியில் பல பெரிய மனிதர்களின் முகங்கள் தோன்றும்!
 மக்கள் தினமும் டிவியில் பார்க்கும் பல பிரபலங்களில் எவனுக்கு எவ்வளவு நீளம் என்று எனக்குத் தெரியும்!
  பெரிய அளவில் சொத்தும் பணமும் நகையும் சேர்த்துக் கொண்டேன்.
 ஊருக்காக ஒருவனை திருமணம் செய்து கொண்டேன். கொஞ்சம் முனகினான் என்று அவனையும் துரத்திவிட்டு என் இஷ்டத்திற்கு இருக்க ஆரம்பித்தேன்!
 என்னைப் பொறுத்தவரை ஆண் என்பவன் அற்பப்புழு!
 தாயோ தங்கையோ முந்தானை சட்டென்று விலகினால் ஒரு நுண்நொடி பார்த்துவிட்டுத்தான் பார்வையை விலக்கும் பலவீனமான இழிபிறவி!
 
  இருந்தாலும் நான் மற்றவர்கள் கண்களுக்கு பத்தினியாகத் தெரிய அடிக்கடி கோவிலுக்கு போவேன்.
 அப்போது அங்கே வாட்டசாட்டமாக ஒருவன் இருப்பான்.
  எடுபிடி என்றாலும் கம்பீரமாக இருப்பான்!
நான் எப்போதும் ஒரு ஆணை பார்த்து மயங்கியது இல்லை.
 ஆனால் அவனைப் பார்க்கும்போது ஒரு சபலம் தட்டும்.
 ஏனென்றால் அவனை பார்க்கும்போது என் கன்னித்திரையை தன்னுடைய மிகப்பெரிய தடியால் கிழித்து தாங்கமுடியாத வலியையும் அதோடு தாங்க முடியாத சுகத்தையும் தந்த அந்த கணக்கு வாத்தியார் நினைவு வரும்.
 அவனை மயக்கலாமா வேண்டாமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்!
 அவனோ பரம ஏழை! கோடீஸ்வரர்கள் தவம் கிடக்கும் என் பொன்னுடலுக்கு இவன் எம்மூலை?!
 ஆனால் அவன் என்னை திரும்பிக் கூட பார்ப்பதில்லை!
 அன்றும் நான் கோவிலுக்கு போனேன் முழு நகையும் மேக்கப்பும் போட்டுக்கொண்டு என் பாட்டியை கூட்டிக்கொண்டு போனேன்.
 மற்ற எல்லாரும் என்னை கவனிக்காமல் இருக்க மாட்டார்கள்.
 அவன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை!
 'இவன் என்ன பெரிய இவனா?! இதோ ஒரு நொடியில் வீழ்த்துகிறேன்' என்று நினைத்தபடி அவன் அருகே வந்தபோது இடதுகையைத் தூக்கி மார்பக உருண்டை தெரியுமாறு செய்தேன்!
  அவன் அதை மதிக்கவில்லை!
எவ்வளவு திமிர்!
 எனக்கு வயதாகிவிட்டதா?!
 ஆண்களின் மீதான எனது உடலின் ஆதிக்கம் முடிவுக்கு வரப்போகிறதா?!
 அன்று முழுவதும் என் மனம் கொதித்துக் கொண்டே இருந்தது!
 இன்றைய இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம்வரும் அந்த ஹீரோவை வீட்டுக்கு அழைத்தேன்!
 அவன் முக்கியமான ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வந்தான்! எச்சில் வழியும் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு பல நாய்களுக்கு பிறகாக கடைசியாகவேனும் பெட்டை நாயை ஏற அலையும் ஆண்நாய்களைப் போல அவன் வந்து சேர்ந்தான்!
 "எங்கே!" என்றான் 
"என்ன?" என்றேன்
"சிட்டுக்குருவி இல்லையா" என்றான்!
 "ஏன்?! உனக்கு கன்னி பொண்ணுதான் வேணுமோ?! என்னைப் பார்த்தால் பொண்ணா தெரியலயாடா நாயே?!"
 அவன் முகம் சுருங்கியது பேன்ட்டில் நெளிந்து விரைத்து நின்ற இடமும் குறுகியது!
 என்னால் இதைத் தாங்கமுடியவில்லை!
பட்டென்று உடைகளைக் கழட்டி அவன் முகத்தில் விட்டெறிந்துவிட்டு வெட்கமே இல்லாமல் நின்றேன்!
 அவன் ஸ்விட்ச் போட்டது போல மறுபடி தெருநாயானான்!
 அவன் பேன்ட்டை உருவி சட்டையைக் கிழித்து கீழே தள்ளி மேலே பாய்ந்து அவனைக் கற்பழித்துப் போட்டேன்!
 மூச்சு வாங்க கண்கள் செருகி சாவது போலக் கிடந்தான்!
 "த்தூ! இவ்வளவுதான்டா நீங்க!" என்றேன்!
 அவன் எழ முயன்றான் கீழே மிதித்துத் தள்ளினேன்!
 "என்னடா! போதுமா?! சிட்டு வேணுமா! இப்ப உலக அழகியே வந்தாலும் நீ ஆம்பளத் திமிரைக் காட்ட முடியாது!"
 அவன் துணிகளை சுற்றிக்கொண்டு ஜட்டியோடு ஓடிப்போய் காரில் ஏறியபோது பார்க்க வேடிக்கையாக இருந்தது.
 இதுக்குத்தானாடா இவ்வளவு அலையுறீங்க?!
 "கட்டிளம் காளை கரை கண்ட முதலை இவனையே ஈசியா முடிச்சிட்டேன் அவன் எம்மாத்திரம்?!"
 அடுத்த முறை கோவிலுக்குப் போனேன்!
அவன் பார்க்கவேண்டும் என்று டைட் சுடிதார் போட்டுக் கொண்டு துப்பட்டா போடாமல் மார்பை நன்றாக ஏற்றி காட்டும் ப்ரா போட்டு இருந்தேன்.
 அவன் கோபுரத்தைப் பார்த்து பயபக்தியாக சாமி கும்பிட்டபடி கோவிலுக்குள் வந்தான்.
  பாட்டியை கோவிலுக்குள் கொண்டு செல்ல வீல்சேர் கேட்டேன்.
 அவனும் கொண்டு வந்தான்.
அவனையே அடித்துத் தின்பது போல பார்த்தேன்.
அவனும் இதைக் கவனித்தான்.
அவன் பார்வையில் சிறு அதிர்ச்சி தெரிந்தது.
 பாட்டியை இருவரும் கைத்தாங்கலாக அதில் உட்கார வைக்கும் போது அவன் கையை தொட்டேன்.
 அவன் கையை இழுத்துக் கொண்டான்.
 வேண்டுமென்றே நன்றாக குனிந்து என் மார்பைக் காட்டினேன்.
 அவன் பார்த்த மறுநொடி பார்வையை வலுக்கட்டாயமாகத் திருப்பி கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.
 எனக்கு பூமி அதிர்ந்தது.
 அப்படியே அவன் மீது பாய்ந்து கழுத்தைக் கடித்து துப்பிவிடலாம் போல அப்படி ஒரு ஆத்திரம்.
 அவன் அங்கிருந்து ஓடியே போய்விட்டான்.
 என்னால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.
 உலகில் சிறந்த அழகி நான்!
நானே வலியப்போய் தொட்டு என் மார்பகத்தைக் காட்டும் அளவுக்கு இறங்கி வந்திருக்கிறேன்.
ஒரு எடுபிடி நாய் அதை அலட்சியம் செய்வதா?!
இந்த பூமியில் என் பெண்மைக்கு மயங்காத ஒரு ஆண் இருக்கிறானா?!
 என்னால் அவனை ஆட்டுவிக்க முடியாதா?!
  எனக்கு பணியாதவன் உலகத்தில் இருக்கவே கூடாது என்று முடிவு எடுத்தேன்!
 என் காரை பார்க்கிங் செய்ய அவனிடம் கொடுத்தேன்!
 அவன் அதை பார்க் செய்துவிட்டு சாவியைக் கொடுத்தான்.
 வழக்கமாக அவனுக்கு 500 ரூபாய் கொடுப்பேன்.
 கடுகடுவென்று இருக்கும் அவன் முகத்தில் சின்னதாக ஒரு சிரிப்பு தோன்றும்! 
 ஒரு 500 ரூபாய்த் தாளை விட என் மார்பழகு கீழிறங்கிவிட்டேனா?!
ஆத்திரத்தில் இந்த முறை நூறு ரூபாயை வீசினேன்.
 அவன் முகம் சுருங்கி போனது!
 எனக்கு ஆனந்தம்!
  நான் கோபத்துடன் "உனக்குல்லாம் இது போதும்!" என்று சொன்னேன்!
 ஆனால் என் எதிர்பார்ப்புக்கு மாறாக அவன் அதற்கு வருத்தப்படாமல் "சரிங்க மேடம்" என்று சொல்லி பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்!
 எனக்கு அவனை கஷ்டப்படுத்தி பார்க்கவேண்டும் என்ற ஆசை பிறந்தது.
 சரி இவன் என்னிடம் பணம் வாங்கியதை லஞ்சம் வாங்கியதாக புகார் கொடுத்து இவனை அடித்து உதைத்து பழி வாங்கலாம் என்று திட்டம் தீட்டினேன்.
என்னோடு அவ்வப்போது புரண்டு எழும் ஒரு கலெக்டர் இதற்கு சரியாக இருப்பான்.
 அருகில் இருக்கும் காவல் நிலையம் போய் நேராக சேரில் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு அந்த கலெக்டருக்கு போன் செய்தேன்.
 உடனடியாக பரபரப்பான அவன்!  இடம் பொருள் ஏவல் பார்க்காமல் என்னை கொஞ்ச ஆரம்பித்தான்!  
 "உடனே உன்ன பாக்கணும் போல இருக்கு! அப்பாயின்மென்ட் கேட்டு எத்தனை மாசம் ஆச்சு! என் சொர்க்கமே உன்னோட பின்பக்கம் தானே இருக்கு?! எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை!"  என்று கெஞ்ச ஆரம்பித்தான்.
  நான் "அதை அப்புறம் பார்ப்போம்! இங்கே ஒரு பெரிய விஷயம்! போலீஸ் ஸ்டேஷன் வந்து இருக்கேன்! ஒருத்தன் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கணும்! அவனை சாகுற அளவுக்கு அடிக்கணும்!" என்று சொன்னேன்.
 உடனே அவன் இன்ஸ்பெக்டர் இடம் போனை கொடுக்க சொன்னான்.
  இன்ஸ்பெக்டர் பேசிவிட்டு என்னிடம் தந்தார்.
 அப்போது "பெரிய கம்ப்ளயின்ட் எதாவது குடு! உங்கிட்ட வாலாட்டின அவன் நாளைக்கு உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேப்பான்!"
 "சரி சீக்கிரம் ஆகணும்! அவன் கதை முடிஞ்தும் நீ கேட்டத தரேன்!"  என்று சொன்னதும் அந்த நரகலுக்கு அலையும் பன்றி ஏக குஷியாகிவிட்டான். 
 அந்த இன்ஸ்பெக்டர் ஒரு கம்ப்ளைன்ட் எழுதி தரச் சொன்னான் நகை பணம் காணாமல் போனதாக.
 நான் அதற்கு "அதெல்லாம் என்னால முடியாது! எனக்கு அவ்வளவு டைம் இல்லை! நீங்க உடனே போங்க! நான் அப்புறமா எழுதி தரேன்" என்று சொன்னேன்.
 உடனே கோவிலுக்கு போன போலீஸ்காரர்கள் அவனைத் தூக்கிவந்தார்கள்.
 அவனிடம் விசாரித்தார்கள் அவன் எதுவுமே தெரியாது என்று சொன்னான் வெறுமனே கன்னத்தில் மட்டும்தான் அடித்தார்கள்.
 எனக்கு அவனை நன்றாக போட்டு அடிக்க வேண்டும்!
 அவன் ஒட்டுத்துணி இல்லாமல் என் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும்.
 நான் கலெக்டருக்கு போன் செய்து "என்னடா டேய்! உன் பவர் இவ்வளவுதானா?! ஒரு போலீஸ் அதிகாரி அவன் வைப்பாட்டிக்கு டிபார்ட்மென்ட் காரையே குடுத்து சஸ்பென்ட் ஆயிருக்கான். நீயும் இருக்கியே கலெக்டர்னு!  அஞ்சு நிமிஷத்துல உன்னால பெட்ல மட்டும் தான் ஒரு வேலையை முடிக்க முடியுமா!" என்று கேட்டேன்.
 உடனே அவன் "வேற என்ன பண்ண சொல்ற?" என்று கேட்டான்.
 "இவனை நல்லா அடிக்கணும்! இவன் செத்தாலும் பரவாயில்லை!" என்றேன்.
 அதற்கு கலெக்டர் "உனக்கென்ன பைத்தியம் முத்திடுச்சா?! அவன் என்ன பண்ணினான்?! தவறா எதும் நடந்துகிட்டானா?! சொல்லு வேற கேஸ் போடலாம்" என்று கேட்டான்.
 அதற்கு நான் "அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது! அவன் உன்ன விட பெரிய ஆம்பள!  நீ பொட்டன்னு நிரூபிக்கிறான்! நீ அவனை இல்லாம பண்ணினா ஒன்ன ஆம்பளன்னு ஒத்துக்கிறேன்" என்று சூடேற்றினேன்.
 "அப்ப நீ உடனே கிளம்பி வா! நேர்ல பேசிப்போம்" என்று கலெக்டர் அவனை சாகடிப்பதில் அக்கறை கட்டாமல் என்னை அனுபவிப்பதிலேயே குறியாக இருந்தான். 
 "இப்பவே வந்து நீ குனியணும்! கலெக்டர் ஆபீசிலயே உன்னை செய்வேன்! என்னால ஆசை தாங்க முடியல" என்று புலம்பினான்.
உடனே "நீ வேலைக்காக மாட்ட!" என்று சொல்லி போனை கட் பண்ணி ப்ளாக் பண்ணிவிட்டேன்.
 எனது வைப்பாட்டன்களில் பெரிய கை அமைச்சர் ஒருவன்.
 பார்க்க அட்ட கருப்புன்னாலும் பெரிய தடி உள்ளவன்.
 என் வாய்வித்தைக்கு அவர் தடி அடிமை!
  மூச்சை அடக்கி அடித்தொண்டை வரை விட்டு சொட்டு விடாமல் இறக்கி அதை அப்படியே குடிக்க என்னால் மட்டும்தான் முடியும்.
 அதற்காகவே அவன் ஒரு வாரம் கையை வைத்துக்கொண்டு சும்மா இருப்பான்.
 விரதம் இருந்து கொண்டு வந்து மொத்தமாக கெட்டியாக வாயில் இறக்குவான்.
 அதன் பிறகு ப்யூஸ் போன பல்ப் மாதிரி கிடப்பான்.
 பிறந்தமேனியாக குலுக்கி குலுக்கி ஆடச் சொல்வான்!
 அடுத்த ரவுன்ட் எல்லாம் நடக்காது அரைமணி நேரத்திலேயே மட்டையாகி விடுவான்!
 அந்த கழுதை மகனுக்கு போனை போட்டேன்.
 அவன் மறுபக்கம் கலெக்டரை விட குஷியாகிவிட்டான்.
 சந்தோசத்தில் குதிக்கிறேன் என்று சொன்னான்.
  அவனை செல்லம் கலந்த கோபத்துடன் "டேய் நாயே! என்னடா என்ன எல்லாம் மறந்துட்டியா?! புதுசா எவளும் கிடைச்சிட்டாளா?! அந்த மலையாளத்தி தானே?! ஒரேடியா அங்கேயே போய்டு! இங்க வந்த அவ்வளவுதான்! அப்புறம் உன்கிட்ட ஸ்டாக் இருக்காது! கொட்டையோட உறிஞ்சி எடுத்துடுவேன்!" என்று சொன்னேன்.
 அவன் கெக்கபெக்க வென்று சிரிச்சுக்கிட்டே "எப்பவும் உன் நினைப்பாவே இருக்குடீ! சுகர் ஊசி போடும் போது அந்த மருந்து தொட்ட பஞ்சை தேய்க்கும் போதெல்லாம் ஒன் நினைப்புதான். டக்குனு நட்டுக்கும். இன்னைக்கு நைட்டு வரியா?! நாம எப்பவும் பண்றத விட சூப்பரா பண்ணலாம். எனக்கு ஒரு புது யோசனை கிடைச்சிருக்கு. அதை உன்கிட்ட தான் செஞ்சு பாக்கணும். நீதான் தாங்குவே!"

 "அப்படியா என்ன யோசனை?!" னு ஒண்ணும் தெரியாத பொண்ணு மாதிரி கேட்டேன்!
 "நாலாவது ஓட்டை" என்றான்.
"அது என்ன நாலாவது?!"
"எங்களுக்கு ரெண்டும் ஒண்ணா சேரும் உங்களுக்கு ரெண்டும் தனித்தனி வழி இல்லையா?! 
 உனக்கு நேர்ல புரியவைக்கிறேன்"
  "டேய் பொறம்போக்கு! நா டாக்டர்டா! நீ எத பத்தி பேசுறனு எனக்கு தெரியும்!"
"நீ வாயேன் அதுக்கு மெத்தடு இருக்கு! இத மட்டும் நீ பண்ண விட்டா நீ எத்தனை கோடி கேட்டாலும் தருவேன்! சொத்து மொத்தத்தையும் எழுதி தரேன்" என்று சொன்னான்.
 படுபாவி! ஊசி துவாரத்தில் கடப்பாரையை நுழைக்க பார்க்கிறான்.
 "நா சொல்றத கேளு மொதல்ல! எனக்கு ஒருத்தனை பழி வாங்கணும்" 
 "யாருன்னு சொல்லு எனக்கு மேல இருக்குறவனா இருந்தாலும் அவன செஞ்சிருவேன்" 
 என்று உறுதியாகச் சொன்னான்.
 விபரங்களைச் சொல்லி முடித்தேன்.
 "உடனே டீம் பார்ம் பண்ணி அனுப்ப சொல்றேன்! காக்கில இதுக்குனே 4,5 வெறிநாய்ங்க இருக்கானுக! நீ நிம்மதியா இரு நாளைக்கு அவன் இருக்க மாட்டான்! அவன் சாவு கொடூரமா இருக்கும்! கேக்குறவன் ஈரக்கொலை நடுங்கும்" என்றுவிட்டு போனை வைத்தான்.
என் மனக்கண் முன்னே நாளைக்கு நான் தரையில் கவட்டையில் ரத்தம் வழிய கிடப்பது தெரிந்தது.
 இரண்டு மணிநேரத்தில் எனக்கு ஒரு வீடியோ வந்தது.
 நான்கைந்து தடிமாடுகள் அவனைப் போட்டு அடித்து அவன் கதறும் வீடியோ!
 மறுபடி மறுபடி அதைப் பார்த்தேன்.
எனக்கு அப்போதும் அடங்கவில்லை.
உடம்பெல்லாம் பற்றிக்கொண்டு வந்தது.
 அமைச்சனுக்கு போனைப் போட்டேன் "நான் நேர்ல பாக்கணும்" என்றேன்.
 "அது மட்டும் முடியாதுடீ பட்டு! வீடியோ கால் பண்ண சொல்றேன்!"
 "உன்னால முடியுமா முடியாதா?! முடியாதுனா சொல்லு நா மேலிடம் போறேன்"
 "இங்க பாரு! அவங்கள்லாம் ஒரு பொம்மை! ஆட்சிய நடத்துறது நாங்கதான்! அதுலயும் மைனர் குஞ்சு வெறும் உதவாக்கரை! மைனர் பொண்ணுங்க கிட்ட வீரத்த காட்டத்தான் அவன் லாயக்கு! நீ மண்டி போட்டன்னா 5 செக்ன்ட் தாங்க மாட்டான்!"
 "அவன் எனக்கு அண்ணன் முறை தெரியும்ல?!"
"ஆமாம்மா நீங்க பெரிய பாசமலர்கள் அண்ணனுக்கு போதை ஊசியும் மைனர் பொண்ணுங்களையும் அனுப்புற அதிசயமான தங்கச்சி நீ! எனக்கு உன்னையும் தெரியும் உங்கொம்மாவையும் தெரியும்! நீங்க ரெண்டு பேரும் மைனர் குஞ்சுக்கு ஒரே முறைனும் தெரியும்!"
 "டேய்! நீ வரம்பு மீறி பேசுற! மரியாதையா நடந்துக்கோ! அவன் பால்டாயில் குடிச்சப்ப காப்பாத்துனது நாந்தான் தெரியுமா"
 "தெரியும்! அதுக்கு மருந்து னு ஒரு நடிகையோட பேரை மருந்துசீட்டுல எழுதிக் கொடுத்தன்னும் தெரியும்!  இங்க பாரு...! நீ மைனர் குஞ்சுக்கு பண்ண ஓவர் சப்ளைல அவன் ஐசியு வுக்கு போய் எமனையே கிட்ட பாத்துட்டு வந்துட்டான்! பெரிய தலை உன் மேல செம காண்டுல இருக்காரு! நீதான்னு தெரிஞ்சது அப்பறம் நடுரோட்டுல நாலுதுண்டா கிடப்ப"
 "என்னடா தடிப்பயலே! மெரட்டுறீயா?! எல்லாத்துக்கும் துணிஞ்சுதான் தொழில்ல எறங்கிருக்கேன். என் சாவு எப்பிடி வேணா இருக்கட்டும் ஆனா என் வாழ்வு செம்மையா இருக்கணும்!"
 "என்னடீ பஞ்ச் டயலாக்லாம் பேசுற! நீ எங்கிட்ட வந்த அன்னைக்கு எப்டி இருந்தனு நினைவு இருக்கா?! ரெய்டு மாட்டின ஒன்ன அப்டியே விட்ருந்தா இந்நேரம் பீச் பிராத்தல்ல கைக்கு அஞ்சு வாய்க்கு பத்து னு நின்னுட்ருப்ப  !"
" உன்னையும் பீச்ல குப்பையள்ள வைக்கட்டுமா?! நீங்க என்னை எதாவது பண்ணா மறுநொடி உங்க வீடியோல்லாம் நெட்ல ஏறிடும்! பொண்டாட்டி புள்ளைங்க முகத்துல கூட முழுக்க முடியாது! ரேவன்னா என்ன ஆனான்னு தெரியும்ல?!"
 "சரிடீ தேவ்டி... ச்சீ... தேவதை! ஏன் கோச்சுக்கிற!"
 "நா கோவிக்கலை! எப்பவும் போலத்தானே பேசிட்ருக்கோம்! என்னை என்ன உன் பொண்டாட்டினு நெனச்சியா?!"
 "அதானப் பாத்தேன்! சரி விஷயத்த ஆரம்பத்துலயே அமுக்க முடியிதா பாப்போம் இல்லைனா அடுத்தடுத்து வேலைகள் இருக்கும். நீ அவன் சாவுறத ஜாலியா பாரு! நா அப்பறம் பேசுறேன்!"
 வீடியோ கால் வந்தது! நான் சொன்னபடி அவனை பொது இடங்களுக்கு அழைத்து சென்று அடித்து கடைசியில் லாக்கப்பில் சித்திரவதை செய்து கொன்றார்கள்! இதுவே அவன் பெண்ணாகவும் நான் ஆணாகவும் இருந்திருந்தால் கூட இவ்வளவு கொடூரமாக செத்திருக்க மாட்டான்.
 எனக்கு முழு திருப்தி! என் கால் நடுவில் ஈரமே கசிய ஆரம்பித்து விட்டது!
 அவன் பிணத்தைப் பார்க்கப் போனேன்!
 ஜட்டி மட்டும் போட்டிருந்த அவன் உடல் முழுக்க முழுக்க காயங்களுடன் கிடந்தது.
 கால்களால் அவன் தலையை மிதித்து அசைத்துப் பார்த்தேன். 
 "சாவுடா நாயே! உன்னை மாதிரி எல்லாவனும் இருந்தா நாங்க எப்டிடா பொழைக்கிறது?!" என்று குனிந்து அவன் பிணத்திடம் கேட்டேன்.
 சுற்றியிருந்தவர்கள் என் மார்பை எட்டிப் பார்த்தார்கள்.
 "இவன அதிகமா அடிச்சது உங்கள்ல யாரு?" 
இதோ இவன்தான் என்று ஒருவனை கைகாட்டினார்கள்.
 அவனை மட்டும் அழைத்துக் கொண்டு பின்பக்கம் மறைவாகச் சென்றேன்.
 "உனக்கு ஒரு நிமிசம் டைம் என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ!" என்றேன்.
 அவன் என்னைக் கசக்கிப் பிழிந்தான்.
ஒரு நிமிடம் கழிந்ததும் அவனைத் தள்ளிவிட்டேன்.
 "மேடம் உங்களுக்காக எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கேன்! இன்னும் ஒரு நிமிசம் நிக்கி மேடம்" என்றான்.
 "உனக்கு என்னைத் தெரியுமா?!"
"ஆமா மேடம்! போலீசுக்கு வந்த புதுசுல ஆர்டர்லியா உங்க வீட்டுவேலைக்கு வந்தேன்! உங்க ஜட்டியையெல்லாம் துவைச்சிருக்கேன்.
 அதுல படிஞ்சிருக்குற ஈரம் அதுல வர்ற காபி வாசனை இப்பவும் நினைவிருக்கு!"
 "சரி வா!" என்று நின்றுகொண்டே காலை விரித்தேன்!
 விரல்களில் காபி வாசனை எடுத்து முகர்ந்து பிறகு சுவைத்தான் !
ஒரு நிமிடத்தில் அவனைத் தள்ளிவிட்டு விறுவிறுவென்று வந்துவிட்டேன்.
 தடிமாடு அமைச்சனுக்கு போன் பண்ணினேன்.
 "சாரிடீ பட்டு! மேட்டர் வைரல் ஆயிடுச்சுடீ!"
"பெரிய பிரச்சனை ஆகாதே! இதெல்லாம் வழக்கமா நடக்குறதுதானே?!"
 "இந்த பையன் ஊருல நல்ல  பேரை சம்பாதிச்சு வச்சிருக்கான்! இதை ஆக்சிடென்ட் னு முடிக்க முடியாது! போலீஸ்காரன் ஜாதிய சொல்லி இத ஜாதிப் பிரச்சனையா திருப்ப ட்ரை பண்றோம்! செத்தவனோட ஜாதிக்காரன் ஒரு ரவுடி இருக்கான்! அவனைப் புடிச்சிட்டா கச்சிதமா முடிச்சிரலாம்! அதுவும் நடக்கலைனா அவங்க அம்மாவ விலைக்கு வாங்கி முடிச்சிரலாம்"
 "பெத்த அம்மா எப்பிடி சம்மதிப்பாங்க?!"
"எந்த காலத்துல இருக்க?! காச விட்டெறிஞ்சா எதையும் வாங்கலாம்! இல்லைனா அரசாங்க வேலை! நிலம்! வீடு னு எதையாவது விட்டெறிவோம்! அவங்க வரிப்பணம் தானே! நமக்கு என்ன?!"
"அவங்க ஒத்துக்கலைனா?!"
"30 வருசம் கோர்ட்டு கேசுனு அலையவேண்டியதான்!"
 "சமாளிச்சிருவியா மாடு?!"
"இது ஒரு ரெண்டு நாள் போகும்னு நெனைக்கிறேன்!
எத்தனையோ பேரை அடிச்சி கொன்னாச்சு! அதுபோல இதுவும் ஒண்ணு! நீ அதுவரை தலைமறைவா இரு!" 
 போனை கட் செய்தேன்.
 கலெக்டருக்கு போன் செய்தேன்.
"கொஞ்சநாள் தங்க ஒரு இடம் வேணும்" என்றேன்.
"நீ உடனே புறப்பட்டு நம்ம இடத்துக்கு வந்துடு!மத்ததை அப்பறம் பேசிக்கலாம்!" என்றான்.

 அங்கே போனபோது தனியாக உக்கார்ந்து சரக்கு போட்டுகொண்டு இருந்தான்.
 நான் போனதும் என் மேல் பாய்ந்து மேய ஆரம்பித்தான்.
நான் அவனைத் தள்ளிவிட்டு "பொறுக்கி ராஸ்கல்! நீயல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கல?!" என்று கேட்டுவிட்டு சிரித்தேன்.
 அவனும் வாய் விட்டு சிரித்தான்.
  சிறிது நேரத்தில் நாங்கள் இயற்கைக்கு மாறான முறையில் இணைந்திருந்தோம்! அவனுக்கு சுகம்! எனக்கு வலி! திருப்தியாக வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டான்!
 "என்னடா இவ்வளவு அவசரம்!"
"அவ காலை 5 மணி ட்ரெயின்ல வர்றா!"
"உன் பொண்டாட்டிய தான் நீ கொன்னுட்டியே?!"
"இது கொழுந்தியா!"
"அட நாயே!"
 அரசாங்க கெஸ்ட் ஹவுசில் ராஜ உபச்சாரத்துடன் தலைமறைவாக இருந்தேன்!

 இரண்டு நாள் கழித்து தடிமாடு கூப்பிட்டது.
"என்னாச்சு மாடு?!"
"அத ஏன் கேக்குற! நெனச்சத விட பெரிய இஷ்யூ ஆயிடுச்சு! 5 பேரையும் உள்ள தள்ளியாச்சு!
அவங்க பேமிலியை போராட்டம் பண்ண சொல்லிருக்கோம்! அஞ்சுபேருக்கும் பணம் செட்டில்மென்ட் பண்ணிட்டேன்! கொஞ்சநாள் கழிச்சு ப்ரமோசன் போடுவோம்! ஆனா உன்னைப் பத்தி மீடியாவுல கசிஞ்சிருச்சு! 
 இன்னொரு பொண்ணு தற்கொலை பண்ணி செத்துபோன சமரபவம் இப்ப நடந்திருக்கு அத வைரல் பண்ணி இத அமுக்க பாக்குறோம்! அவங்க குடும்பம் வழிக்கு வந்துட்டாங்க! கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்கேன்! பாத்து பண்ணுடி!"
 "என் செல்ல மாடுல்ல! உடனே வா! வந்து என்ன கிழிச்சு போடு! எல்லாத்தையும் என்ட்ட வசூல் பண்ணிக்கோ!"
 போனை வைத்தேன்!
 வலி தெரியாத மாத்திரைகளைத் தயாராக வைத்துக்கொண்டேன்!
  எனக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்! 
நான் நடக்கும்போது வழியில் மிதிபட்டு சாகும் எறும்பு போன்றவன்தான் செத்தவன்!
 என்னைப் போன்றவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது!
 காலங்காலமாக ஆள்பவர்களை ஆட்டுவிப்பவர்கள் நாங்கள்.
 இன்னொரு ரகசியம்! என் அப்பா ஓடிப்போகவில்லை! அப்படி ஒருவர் இல்லவேயில்லை! என் உண்மையான அப்பா பெரும் ஆளும் வர்க்கத்தின் முக்கியத் தலைவர்!
 அவருக்குத்தான் பிறந்தேன் என்று உறுதியாகத் தெரியாத நிலையிலேயே எனக்கு இவ்வளவு பலம் என்றால் அவருடைய உண்மையான வாரிசுகளின் பலம் எத்தனை மடங்கு இருக்கும்?!
 அவர்களும் பலரைக் கொன்றுள்ளனர் செத்தவர்களின் பெயர் கூட வெளிவந்திருக்காது! 
 நான் ஏன் அவனைக் கொன்றேன்!? ஏன் இப்போது மரணவலி அனுபவிக்கப் போகிறேன்!? இதற்கு  விடை அற்ப பொதுமக்களுக்குப் புரியாது! 
 

Sunday, 29 June 2025

நீளும் காவல்கொலை பட்டியல்

நீளும் காவல்கொலை பட்டியல்  

  RTI மூலம் பெறப்பட்ட தகவல் படி 2022 லிருந்து 2025 ஜூன் வரை  24 பேர் காவலில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
 அதில் குறிபிடத் தகுந்தவை

ஜனவரி 2021 
 21 வயது சூர்யா எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் கொலை

ஆகஸ்ட் 2021 
 சத்யவாணன் தஞ்சாவூர் காவல்நிலையத்தில் கொலை

ஆகஸ்ட் 2021  
தடிவீரன் திருநெல்வேலி கொலை 

மேற்கண்ட மூவரும் பட்டியல் சாதியினர் 

 2021 டிசம்பர் மணிகண்டன் என்ற இளைஞர் ராமநாதபுரம் காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்ட சில மணிநேரங்களில் கொலை

 ஐனவரி 2022
டெய்லர் பிரபாகரன் துன்புறுத்தி கொலை 

 ஏப்ரல் 2022
சென்னை 25 வயது விக்னேஷ் கொலை

 பெரும் அதிர்வலைக்குப் பிறகு விக்னேஷ் குடும்பத்திற்கு 10 லட்சம் அறிவித்து 'இனி ஒரு காவல் கொலை கூட நடக்காது' என்று முதல்வர் அறிவித்த ஒரு மாதத்திற்குள்  3 காவல் கொலைகள்

மே 2022
திருவண்ணாமலை குறவர் தங்கமணி படுகொலை 

ஜூன் 2022 
 கொடுங்கையூர் 30 வயது ராஜசேகர் கொலை 

ஜூன் 2022 
 நாகப்பட்டினம் சைக்கிள் கடை சிவசுப்பிரமணியம் கொலை

 இதைவிட மோசமானது 

ஜனவரி 2023 
செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளி 17 வயது சிறுவன் கோகுல்ஸ்ரீ கொடூரமான சித்திரவதை செய்து கொலை 

 ஏப்ரல் 2023
 ஜெய்பீம் படப்பாணியில் ஏழை சமையல்காரர் ராஜா மனைவி கண் முன்னே துன்புறுத்தி கொலை 

மார்ச் 2024 
2014 ல் நடந்த அண்ணா நகர் இளைஞர் கொலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் உட்பட 8 கொலைகார போலீசுக்கு பதவி உயர்வு 
மதுரை நீதிமன்றம் கண்டனம்

 ஜூலை 2024
 12 நாட்களில் அடுத்தடுத்து 4 காவல்கொலைகள்  மதுரை கார்த்திக், விழுப்புரம் ராஜா, சென்னை சாந்த குமார்,  விருதுநகர் ஜெயக்குமார்


ஜூன் 2025 
 காவல் நிலையத்தில் இளைஞர் அஜித் குமார் கொலை

 இதை விமர்சிக்க அதிமுக வுக்கு தகுதி இல்லை.
 எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும் கிட்டத்தட்ட 100 காவல் மரணங்கள் நடந்துள்ளன.
 2018 இல் மட்டுமே 78 காவல்கொலைகள் நடந்துள்ளன.
 ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை அதில் குறிப்பிடத் தக்கது
 
 ஒரே ஒரு ஆறுதல் 1993 இல் நடந்த ஒரு காவல்கொலை வழக்கு (மேல அலங்காரத்தட்டு வின்சென்ட்) நிறைவு பெற்று 25 ஆண்டுகள் கழித்து 8 போலீசாருக்கு தண்டனை கிடைத்தது.
 இதுவே தமிழக வரலாற்றில்  இறுதித் தீர்ப்பு வரை சென்ற ஒரே காவல்கொலை வழக்கு ஆகும்.
 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் நடந்துகொண்டு இருக்கின்றன அல்லது கைவிடப்பட்டன.

 பாஜக வுக்கும் இதைக் கண்டிக்கத் தகுதி இல்லை.
 உத்தர பிரதேசம் இல் 2020-2022 இல் ஏறத்தாழ 4,400 காவல்கொலை நடந்துள்ளது. தமிழகத்தைப் போல 3.5 மடங்கு மக்கட்தொகை கொண்ட உ.பி யில் சதவீத அடிப்படையில் இது மிக அதிகம்!

Thursday, 26 June 2025

அம்பேத்கர் கூறியதைத் திரிக்க வேண்டாம்

 அம்பேத்கர் கூறியதைத் திரிக்க வேண்டாம்

 அம்பேத்கர் கூறியதாக நமக்கு சொல்லப்படுவது 
"கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்!"
 ஆனால் இது திரிக்கப்பட்டது!
அதாவது "educate! organise! agitate!" என்று அவர் கூறவில்லை!
 "educate! agitate and organise" என்பதே அவர் கூறியது.
அதாவது "கற்பி! (சிந்தனையைத்) தூண்டிவிடு! ஒன்றிணை!" என்பதே இதன் பொருள்! 
 அவரது நோக்கம் ஒன்றிணைவது தான் தூண்டிவிடுவது (agitate) அல்ல! 

 [ “Dr Babasaheb Ambedkar Writings and Speeches” Vol-17, Part-3, Pages – 273 & 276

The All India Depressed Classes Conference was held at Nagpur from 18th to 20th July 1942. Dr Ambedkar addressing the Conference on 20th July 1942 as under:-
 “My final words of advice to you is Educate, Agitate and Organise; have faith in yourselves and never lose hope. 
I shall always be with you as I know you will be with me.
 For ours is a battle, not for Wealth or for Power.
 It is a battle for Freedom!
It is a battle for the Reclamation of Human Personality which has been suppressed and mutilated by the Hindu social system”.]

மார்க்ஸ் கூறியதும் திரிக்கப்படுகிறது "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!" என்று அவர் கூறவில்லை "உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!" என்றுதான் அவர் கூறினார்.

 தேவர் கூறியதும் திரிக்கப்படுகிறது 
"தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்" என்று அவர் கூறவில்லை!
"தேசியம் உடல் தெய்வீகம் உயிர்" என்றுதான் கூறினார்.

மாடு என்பது சொத்து

மாடு என்பது சொத்து 

 மாடு எனும் சொல் செல்வம் அல்லது சொத்து எனும் பொருள் தரும்.
 இந்த சொத்து பொன்னாக இருக்கலாம் அல்லது அசையாத சொத்தான இடம், நிலம், வீடு ஆகியனவாகவும் இருக்கலாம்.

 உதாரணமாக "மாடை" என்பது தங்கத்தை குறிப்பாக தங்க நாணயத்தைக் குறிக்கும் சொல்.
 "மாடு" எனும் சொல்லுக்கு சூடாமணி நிகண்டு பொன் என்று பொருள் தருகிறது.
 
 மாடி, மாடம், மாடவீதி போன்றவை இன்றும் கட்டிடம் சார்ந்த சொற்கள்.
 
 பிற்பாடு கம்பராமாயணம் தான் மாடு என்பதை எருது என்ற பொருளில் தருகிறது.

 அகராதி நிகண்டும் சீதனம் எனும் பொருள் தருகிறது.

 கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை 
 எனும் குறளில் உண்மையான செல்வம் கல்வியே மற்றவை (நிலையான) சொத்துகள் இல்லை என்றே கூறப்பட்டுள்ளது.

 குறளில் வரும் மாடு எனும் சொல் கால்நடையை நேரடியாக் குறிக்காது ஆனால் அது ஆகு பெயராகி பிற்பாடு கால்நடைகளைக் குறித்தது.

 இந்த குறளைப் பயன்படுத்தி கால்நடைகளின் முக்கியத்துவத்தைப் புரியவைக்க முயற்சிப்பவரை இது கால்நடையைக் குறிக்காது என்று இழிவு செய்வது மூடத்தனம்! 

  கால்நடை என்பதும் ஒரு மாடு (சொத்து) தான்! 

 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.’ (குறள் எண் 560) 
 ஒரு நாட்டில் காவல் (பாதுகாப்புத்துறை) சரியாக செயல்படாவிட்டால் முதலில் பாதிக்கப்படுவது கால்நடைகள் மூலம் வரும் வருமானம் என்று கால்நடைகளின் முக்கியத்துவம் குறித்தும் வள்ளுவர் கூறுகிறார்.
இதிலும் கல்வியையும் கால்நடைகளையும் ஒப்பிடுகிறார்!

 ஆடு மாடுகள் காப்போம்! 

Wednesday, 25 June 2025

யார்தான் ஆரியர்

யார்தான் ஆரியர்?
19.03.2017

ரொம்ப யோசிக்கவேண்டாம்
விடை அருகிலேயே உள்ளது.
இன்றும் கைபர்(khyber) போலன் (bolan) கணவாய்களின் அந்தப்பக்கம் வாழும் இனம் எது?

பெர்சிய மொழி பேசும் ஈரானிய இனம்தான்!

ஈரான் மக்கள் தம்மைத்தாமே ஏரியா (Aryia) என்றே இன்றும் அழைத்துக் கொள்கின்றனர்.

ஈரானிய மொழியில் ஏர்யன்(aryia) என்றால் உயர்ந்த அல்லது மாண்புள்ள என்றவாறு பொருள்படும்

இரான் (iran) என்ற சொல்லே ஏர்யன் என்ற சொல்லின் திரிபு என்கிறார்கள் (etymology of iran - Wikipedia). 

  இந்த ஏரியன் என்ற சொல்லைத்தான் ஆர்ய என்ற சொல்லுடன் திரித்து ஆங்கிலேயர் தமது அரசியலுக்காகப் பயன்படுத்தினர்.

(ஆங்கிலேயர் Aryan என்பதை ஏர்யன் என்றே உச்சரிப்பர்.
இது அரையர் என்ற தமிழ்ச்சொல்லுடனும் ஒத்துப்போகிறது.
தமிழகத்தில் அரிய என்று தொடங்கும் ஊர்களும் உண்டு.
அரியநாடு திருப்பதிக்கு அப்பால் அருவா என்றும்
அதற்கும் வடக்கே ஆரிய என்றும் திரிந்ததாக செந்தமிழ் பேரகராதி யில் பாவாணர் கூறுகிறார்)

ஆங்கிலேயர் கூறியபடி ஆரியர் கைபர் போலன் கணவாய் வழியே வந்தனர்.
இன்றும் ஈரானியப் பேரினமே கைபர் போலனுக்கு அந்தப் பக்கம் வாழ்கிறது.

இன்றும் கைபருக்கு அந்தப்பக்கம் ஈரானிய மூலமொழியான பெர்சிய மொழி.
போலனுக்கு அந்தப்பக்கம் பஷ்த்தோ எனும் ஈரானிய கிளைமொழி.
(பார்க்க: படத்தில் சிவப்புக்குறி)

(வேதகால)சமஸ்கிருதம் உட்பட அனைத்து வடஹிந்திய மொழிகளும் indo-aryan பிரிவின் கீழ் உள்ளன.
இந்த இந்தோ-ஆரியன் பிரிவே indo-iranian என்ற பிரிவின் கீழேதான் வருகிறது.
என்றால், ஆரியம் என்றாலே அது ஈரானுக்கு அடங்கியதுதான்.
அவற்றில் சமஸ்கிருதமும் உண்டு.

ஆரிய படையெடுப்பு என்பது 2600 ஆண்டுகள் முன்பு பாரசீக மன்னன் சைருஸ் (cyrus) இந்தியா மீது படையெடுத்து சிந்து நதிவரை கைப்பற்றியதைக் குறிக்கலாம்.
அல்லது அவருக்கு முன் ஈரானிய பழங்குடிகள் சிறிய அளவில் படையெடுத்திருக்கலாம்.

ஈரானியர் மட்டுமன்றி கிரேக்கத்திலிருந்து அலெக்சாண்டரும் தனது அரசாட்சியை ஹிந்தியா வரை பரப்புகிறார்.
இவர்களைப் பின்பற்றி பலரும் அடுத்தடுத்து மேற்கு ஹிந்தியாவை படையெடுத்து ஹிந்தியாவிற்குள் முன்னேறுகிறார்கள்.

ஹிந்தியாவின் முதல் ஆரிய அரசு ஆர்யாவர்த்த (Aryavarta) எனப்படும் அரசு இது கைபர் போலன் கணவாய்களுக்கு சற்று தள்ளி இன்றைய ராஜஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உருவாகிறது (அதாவது சிந்து சமவெளி).

அதாவது ஈரானிய இனம் தன் தாய்நிலத்தைத் தாண்டி சிந்து சமவெளிக்கு வருகிறது.
நாளடைவில் அது தாய்நிலத்திலிருந்து துண்டிக்கப்பட்டு அருகாமை பூர்வகுடிகளுடன் (தமிழர்களுடன்) கலந்து தனி இனமாக உருவாகிறது.

பிறகு தனக்கென தனி அரசையும் நிறுவிக்கொள்கிறது.
தாய்நிலத்தின் மொழி மற்றும் பழக்கவழக்கங்களைத் தழுவி தனக்கென தனி கலப்பு மொழியையும் தனி சமயத்தையும் அது ஏற்படுத்திக்கொள்கிறது.
(பாவாணர் கூற்றுப்படி சமஸ்கிருதத்தில் 5ல்2 பங்கு தமிழ்)

தம் மொழியில் உயர்ந்த சொல்லான ஏரியரைத் தழுவி ஆரியர் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்கிறது.
ஆரியவர்த்த என்று தனது அரசாட்சிக்கு பெயரிடுகிறது.
பின்னர் நாளடைவில் அரசாட்சி வீழ்ந்து பூர்வகுடிகளுடன் கலந்து கரைந்துவிடுகிறது.

இவர்கள் கலவையாக உருவாக்கியதே இன்றைய அடிப்படை ஹிந்து மதம்.

ஈரானிய மொழிச்சொல்லான ஹிந்த், ஹிந்தூ, ஹிந்துஸ் போன்ற சொற்களே ஹிந்து என்பதன் வேர்ச்சொல்.
இவர்கள் தமிழ்க் கடவுளரை எடுத்துக்கொண்டு புதிய சமயத்தை உருவாக்கி வேதங்களை எழுதியுள்ளனர்.
இது காலப்போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்தது.
இதுவே இன்றைய ஹிந்து மதத்தின் அடிப்படை.

இதேபோல தமிழிலிருந்து வேர்ச்சொற்களை எடுத்து இவர்கள் உருவாக்கிய மொழியே சமஸ்கிருதம்.
இது காலப்போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்தது.
இதுவே வடயிந்திய மொழிகளுக்கு அடிப்படை.

மேலே சொன்னது ஈரானியர் ஏற்படுத்திய தாக்கம் மட்டுமே.

இதே போல கிரேக்கர், சகர்கள் (ஈரானியர்), பார்தியர்(ஈரானியர்), குஷாணர் (சீனர்), ஹூனர் (துருக்கிய மங்கோலியர்), அராபியர், முகலாயர் (துருக்கிய மங்கோலியர்) என வடக்கிலிருந்து பலரும் வரிசையாக மேற்கிலிருந்து படையெடுத்து கைப்பற்றி ஆட்சி செய்து தமது மொழி, மத, கலாச்சார அடையாளங்களைக் கலந்துவிட்டு காணாமல் போயினர்.

(வடக்கை ஆண்ட ஒரு சில மன்னர்கள் தெற்கு வரை முன்னேறினர்.
ஆனால் தமிழகத்தை என்றுமே கைப்பற்றியதில்லை)

 வடக்கே இமயமலை, தெற்கே விந்தியமலை வரை இந்த இனகலப்பு அதிகம் நடந்து நடந்து வடயிந்திய இனமே கலப்பினமாக மாறிவிடுகிறது.
 இதனால்தான் மரபணு படி தற்போதைய இந்தியாவின் வடயிந்தியருக்கும் தென்னிந்தியருக்கும் சம்பந்தமில்லை என்றே ஆய்வுகள் சொல்கின்றன.

பிறகு கடந்த 500 ஆண்டுகளாக ஐரோப்பியரின் கடல்வழி படையெடுப்பு நடந்தாலும் இனக்கலப்பு தவிர மற்ற தாக்கங்கள் இருந்தன.

ஆக வரலாற்றில் ஆரியர் ஏற்படுத்திய தாக்கம் மிக மிக சிறிய அளவிலானது.
ஆரியர் சிந்து சமவெளியை படையெடுத்து கைப்பற்றியதாகத் தோன்றவில்லை.
இயல்பான குடியேற்றம்தான் நடந்திருக்கவேண்டும்.
(சிங்களவர் இலங்கையில் குடியேறியதுபோல)

ஆரியர் என்பார் பழங்கால ஈரானியரே!

பிராமணரெல்லாம் ஆரியர் வம்சாவழிகள் என்பதே எந்த அடிப்படையும் இல்லாத கருத்து.

அதிலும் தமிழ்ப் பார்ப்பனர்?????

வாய்ப்பேயில்லை.

(பார்ப்பனர்கள் சோழர் காலம் வரை தமிழில் வழிபாடு செய்தனர்.
தாய்லாந்து வரை தமிழிலேயே சைவத்தைப் பரப்பினர்.
சமஸ்கிருதம் அவர்கள் மீது பிறகுதான் திணிக்கப்பட்து.
ஆனாலும் அவர்கள் தமிழை விட்டுக்கொடுத்ததே இல்லை).

ஐரோப்பியர் தமது ஆட்சியை நியாயப்படுத்த "நாங்கள் ஆரியர், ஏற்கனவே நாங்கள் ஆண்டோம், பிராமணர் எங்கள் இனம்" என்று மேக்ஸ்முல்லர் மூலம் கதைகட்டிவிட்டனர்.

 "ஆரியரை எதிர்த்தோர் திராவிடர், அவர்கள் வழிவந்தோரே தென்னிந்தியர்" என்று கால்டுவெல் மூலம் கதைகட்டி பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தினர்.

ஆரிய கருத்தியல் ஹிட்லர் போன்ற மனிதனை உருவாக்கும் என்றோ
திராவிடக் கருத்தியல் கருணாநிதி போன்ற மனிதனை உருவாக்கும் என்றோ அவர்கள் நினைக்கவில்லை.
இதே போலவே சமஸ்கிருத ஹிந்து சமயத்தை உருவாக்கிய ஆரியரும் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று யூகித்திருக்க வாய்ப்பில்லை.

இன்று நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கு என்றோ ஒழிந்துபோன ஆரியரை இழுப்பதும்,
ஆரியருக்கு தொடர்பே இல்லாத பார்ப்பன சமூகத்தின் மீது சாதிய வன்மத்தைக் கொட்டுவதும் எந்த வகையில் தீர்வாகும்?

தென்னிந்தியர் மீதான வெறுப்பின் மீது கட்டமைந்த வடயிந்திய ஆதிக்கமே நடைமுறை ஆரியம் என்று கொள்க.

   தமிழர் மீதான வெறுப்பின் மீது கட்டமைந்த தென்னிந்திய கூட்டு ஆதிக்கமே நடைமுறை திராவிடம் எனக்கொள்க

மேலே கூறிய கதை(?) நம்பும்படியாக இல்லையா!

கீழே உள்ள கதையைப் படிக்கவும்.

ஆரியர்கள் கைபர் போலன் வழியே ஆடுமாடு ஓட்டிக்கொண்டு வந்தார்கள்.
பெரிய அரசாங்கம் நடத்திய தமிழர்களை ஏமாற்றி பதவிகளில் அமர்ந்தனர்.
அவர்கள் சிவப்பாக இருந்தார்கள்.
அதனால் தமிழர்கள் அவர்கள் அழகில் மயங்கிவிட்டனர்.
அவர்கள் சமஸ்கிருதம் பேசினார்கள்.
அதிலே மந்திரம் எழுதி இதுதான் கடவுளுக்குப் புரியும் என்றனர். உடனே எல்லாரும் ஒத்துக்கொண்டனர்.
மனுதர்மம் என்ற நூல் எழுதினார்கள்.
அதில் சாதியை படைத்தனர்.
அதைப் படித்துவிட்டு எல்லாரும் உடனே சாதி படிநிலையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அடிமையாகிவிட்டனர்.
பிறகு அவர்கள் பூணூலைப் போட்டுக்கொண்டு பூசாரி ஆகி அனைவரையும் சாதியாகப் பிரித்து தொடர்ந்து இன்றுவரை ஆள்கிறார்கள்.
 இன்றும் சிவப்பாக இருக்கிறார்கள்.

இரண்டில் எதை நம்புவீர்கள்?!

திரைப்படத்தில் வாஞ்சிநாதன் வரும் காட்சிகள்

திரைப்படத்தில் வாஞ்சிநாதன் வரும் காட்சிகள்

 திரைப்படமாக வெளிவந்த ம.பொ.சி யின் படைப்பான "கப்பலோட்டிய தமிழன்" படத்தில் "செங்கோட்டை வாஞ்சிநாதன்" வ.உ.சி க்கு நேர்ந்த கொடுமைக்காக பழிவாங்க ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றதை காட்டியிருப்பார்.
 இதில் கலவரத்தை அடக்க ஆஷ் நேரடியாக தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபடுவதையும் காட்டியிருப்பார்.
 வ.உ.சிதம்பரம் பிள்ளை தனது சுயசரிதையில் ஆஷ் மரணத்தை ஒரு காவலர் வந்து தன்னிடம் சொன்னதாகவும் அதைக் கேட்டு தான் மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டிருப்பார்.
 ஆனால் படத்தில் ஒரு டாக்டர் சொல்வது போல வருகிறது.
 அதேபோல வ.உ.சி தண்டிக்கப்பட்ட வழக்கில் பாரதியார் விசாரிக்கப்படவில்லை ஆனாலும் விசாரிக்கப்பட்டதாக காட்சி வைத்திருப்பார்.
 இதில் பாரதியாராக நடித்தவரும் செங்கோட்டையைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பையா அவர்கள்தான்! 

Sunday, 22 June 2025

அன்றைய காதல்

அன்றைய காதல்  

 அந்த பெரிய வீட்டில் அந்த பகுதியில் அதிகம் வாழும் ஒரு சமூகத்தின் பெரியவர்கள் கூடியிருந்தார்கள்.
 வீட்டின் பின்புறம் இருந்த வெற்றிடத்தில் அசைவ உணவு ஆக்கிக் கொண்டிருந்தது அங்கு வீசிய நறுமணத்திலிருந்து தெரிந்தது.
 நாலு பேர் நாலு விதமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
 வீட்டின் பின்பக்கம் பெண்கள் புறணி பேசிக் கொண்டிருந்தார்கள்.
 அந்த வீட்டின் பெரியவர் கூடத்தில் நடுவே அமர்ந்திருந்தார் அவரை சுற்றி பெரியவர்கள் அமர்ந்து அறிவுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
  அவர் அவற்றையெல்லாம் கேட்டு உள்வாங்கியது போல மௌனமாக தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
 அப்போது பின் கட்டில் இருந்து அவரின் மனைவி கூடத்தின் வாசலுக்கு வந்து "என்னங்க..!" என்று அழைத்தார்.
  இவரும் போனார்.
 "என்னங்க அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்! இவ தான் வார்த்தையை விட்டிருக்கா! அதனாலதான் மாப்பிள்ளை கையை நீட்டிட்டார்!
 அவர் ஏடாகூடமான ஆள்!
 நீங்க கொஞ்சம் பொறுமையா பேசுங்க!" என்று கூறினார்.
  பெரியவர் கோபத்துடன் "அதுக்குன்னு இப்படி போட்டு அடிக்கலாமா?" என்று கேட்கவும் அங்கே வந்த இவர்களது இளைய மகன் "அவன் இன்னைக்கு வரட்டும்! ஒழுங்கா மன்னிப்பு கேட்கலைனா இங்கேயே அவனை வகுந்திடுவேன்" என்று கூறினான்!
 அந்த அம்மாளோ "கூறுகெட்டவனே! உனக்கு ஒன்னும் தெரியாது! நீ பேசாம இரு! அவர ஒரு வார்த்தை கூட நீ பேசக்கூடாது! மீறி வாயத் தொறந்தே இனி வீட்டுக்குள்ள வரக்கூடாது" என்று சொன்னாள்.
 இதையெல்லாம் அங்கே ஓரமாக அமர்ந்திருந்த பெண் கேட்டுக் கொண்டிருந்தாள்.
 அந்த இளைஞன் அவளருகே போனான் "அக்கா அவன் உனக்கு சரிப்பட மாட்டான்! அவன் வந்ததும் நறுக்குனு நாலு வார்த்தை கேட்டுட்டு தாலிய கழட்டி எறிஞ்சிடு! எதாவது பண்ணுனான்னா நா பாத்துக்கிடுறேன்" என்று கூறிவிட்டு விறுவிறுவென்று வெளியே போனான்.
 அவள் எதுவும் பேசாமல் வாயை இருக்க மூடியபடி தலையை குனிந்தபடி உட்கார்ந்திருந்தாள்.
 அவளது தோழி ஒருத்தி பக்கத்தில் இருந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
 அவளுடைய அம்மா அருகே போனாள்.
 "ஏம்மா அத்துவிடுறதுன்னே முடிவு பண்ணிட்டியா கடைசிய ஒரு தடவ யோசிச்சு பாரேன்!" என்று கூறினாள்.
 அந்த பெண் எதுவும் பேசவில்லை!
"சரிம்மா! கோவம் மட்டும் படாத! மீதிய அப்பா பாத்துக்குவாரு!"
 இப்போது கூடத்துக்கு வந்த பெரியவர் அங்கிருந்த பெரியோர்களைப் பார்த்து "அவங்க வீட்டிலிருந்து யார்லாம் வாராங்கன்னு தெரியல! அவங்க கொஞ்சம் ஏறுமாறா பேசினாலும் நீங்க பொறுமையா பேசுங்க! பொண்ணு பிள்ள விசயம்! அத்துவிடுறதுனாலும் முடிஞ்ச அளவு சுமூகமா முடிக்க பாருங்க!" என்று சொன்னார்.
"சரிப்பா! அன்னைக்கு அவங்க வீட்டுக்கு சமாதானம்  பேசப் போனப்ப என்ன பேச்சு பேசுனாங்க! பரவால்லப்பா! எங்களுக்கு என்ன?! முடிவு உன்னோடது தான்! நாங்க ஒரு ஆதரவுக்காக தான் வந்தோம்! நீ பேசு! நாங்க இடைல எதுவும் பேசலை!" என்று சொன்னார்கள்.
 தூரத்தில் மோட்டார் பைக் வரும் சத்தம் கேட்டது.
 அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த அந்தப் பெண் பரபரத்தாள்!
 எழுந்து வாசலைப் பார்த்தாள்.
 ஆம் அது அவன்தான்!
 அந்த பெண் பின்வாங்கி ஓரமாக நின்றுகொண்டாள்.
 அவன் ஒற்றை ஆளாக வந்திருந்தான்!
நிதானமாக குடித்து இருந்தான்!
 அதனால் அதிகம் தள்ளாடாமல் நடந்தான்!
 சுற்றி இருந்தவர்களை பார்த்துக் கொண்டே அவர்களையெல்லாம் கடந்து நடுக்கூடத்திற்கு போனான்.
 நட்ட நடு கூடத்தில் நின்று கொண்டு அவள் பெயரைச் சொல்லி அழைத்தான்.
"சாந்தி! ஏ.. சாந்தி!" 
அந்தப் பெண் மெதுவாக மறுபடியும் எட்டிப் பார்த்தாள்.
 அவளைப் பார்த்தவுடன் அவன் உதடுகளில் ஒரு குறுநகை தென்பட்டது.
 "வா! நம்ம வீட்டுக்கு போலாம்" என்று சொன்னான்.
 அந்தப் பெண் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.
 "என் சந்தனமில்ல! வா வீட்டுக்கு போலாம்! வா! வா! வா!" என்று அவன் வலது கையை அவளை நோக்கி நீட்டினான்.
 அந்தப் பெண் மெதுவாக நடந்து வந்து அவனுடைய கையில் தன்னுடைய கையை வைத்தாள்.
 அவன் திரும்பி புறப்பட எத்தனித்தான்.
 அவள் நகரவில்லை!
 அவன் திரும்பி அவளைப் பார்த்தான்!
அவள் அவளுடைய தந்தையை ஏறிட்டு பார்த்தாள்!
 அவருடைய தந்தையோ சரி போ என்பது போல் தலையை ஆட்டி விட்டு தலையை குனிந்து கொண்டார்.
 அவன் அத்தனை பேர் முன்னிலையிலும் அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வாசல் வரை கொண்டு போய் நிறுத்தி வண்டியில் ஏறி அதை உதைத்து உறுமவிட்டான்.
 அவள் அதை ரசித்தபடி நின்றுகொண்டிருந்தாள்!
"ஏறுடி!" என்றான்!
 அவள் அவனுடைய தோளில் கைவைத்து ஏறி நெருக்கமாக உட்கார்ந்து கொண்டாள்.
எதிரே நான்கு நண்பர்களோடு நின்றுகொண்டிருந்த அவளது தம்பி முகத்தில் ஈயாடவில்லை!
 பைக் சத்தம் தூரமாகச் சென்று மறைந்தது.
 அங்கே இருந்த எல்லோரும் எதிர்பார்த்தது நடக்காதது போல கோபமாக அந்த பெரியவரை பார்த்தார்கள்.
 அந்த பெரியவர் கால்களை லேசாக ஆட்டிக்கொண்டே "சரி! வந்தது வந்துட்டீங்க! எல்லாரும் சாப்பிட்டு போங்க! ஏம்மா எலைய போடு" என்றபடி அங்கிருந்து எழுந்து விறுவிறுவென்று பின்பக்கம் போய்விட்டார்.

அரசியலில் முருகன் சீமான் முதல் பாஜக வரை

அரசியலில் முருகன்
 சீமான் முதல் பாஜக வரை

 2015 இல் சீமான் வீரத் தமிழர் முன்னணி எனும் பாசறையைத் தோற்றுவித்து முப்பாட்டன் முருகன் என்று முருக வழிபாட்டை தமிழ்தேசிய விழாவாக ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கிறார்.

 திருமுருகப் பெருவிழா எனும் பெயரிட்டு நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த விழாக்கள்

2016 திருப்பரங்குன்றம்
2017 திருத்தணி
2018 திருச்செந்தூர்
2019 கோவை 
2020 சுவாமி மலை 
2021 திருப்போரூர்
(இவற்றில் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டு 2021 தைப் பூசம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது)

2022 லிருந்து தொகுதி வாரியாக விழா நடக்கிறது.

2025 இல் திருச்செந்தூர் குடமுழுக்கு தமிழில் நடக்க மாபெரும் பொதுக்கூட்டம்!
 அதன் விளைவாக குடமுழுக்கு தமிழிலும் நடக்கும் என்று அறிவிப்பு! 

 இதெல்லாம் முடிந்த பிறகு இன்று பாஜக நடத்தும் "முருகன் மாநாடு" நடக்கிறது.

Friday, 20 June 2025

சாதிய கட்டப் பஞ்சாயத்து

 சாதிய கட்டப் பஞ்சாயத்து 

 தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் போலீஸ் வாகனத்துல் சிறுவன் கடத்தல் வழக்கில் உற்று நோக்கினால்.. 

 சம்பந்தப்பட்ட காதல் ஜோடியில் பெண் குடும்பம் நாயுடு சமூகத்தைச் சேர்த்தவர்கள்.
 பையன் வன்னியர் என்று சொல்கிறார்கள்.
இவர்களது காதல் திருமணத்தை ஏற்காக பெண்ணின் தந்தை வனராஜா நாயுடு தன் சமூகத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் தாதாவைத் தொடர்புகொள்கிறார்.
 இந்த மகேஸ்வரி காவல்துறையில் அதிகாரியாக இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர். 
 ஆனாலும் பல போலீஸ் உயரதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்பைத் தொடர்பைப் பேணுகிறவர்.
 போலீஸ் அதிகாரிகள் ஆதரவுடன் கொடைக்கானலில் அடுக்கம் பகுதியில் வடயிந்தியர் ஒருவருக்கு சொந்தமாகன பெரிய எஸ்டேட்ட ஒன்றை இந்த பெண் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்.
 இவருக்கு மிக நெருக்கமானவர் ஏடிஜிபி ஜெயராம்.
 இவர் கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நபர்.
 வனராஜா தரப்பு மகேஸ்வரியிடம் காதல் ஜோடியைப் பிரித்து தம் சாதிய கௌரவத்தைக் காப்பாற்ற ஒரு கோடி ரூபாய் வரை பேரம் பேசியுள்ளது!
 இவர்கள் ஏடிஜிபி ஜெயராம் மூலம் அந்தப் பகுதியில் செல்வாக்குள்ள எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி யை அணுகுகிறார்கள்.
 சாதிமறுப்புத் திருமணம் செய்யும் காதல்ஜோடிகளைப் பிடித்து கட்டப் பஞ்சாயத்து செய்யும் அனுபவம் உள்ள (பறையர் சமூகத்தைச் சேர்ந்த) ஜெகன்மூர்த்தி கும்பல் களத்தில் இறங்குகிறது.
 ஏடிஜிபி யின் அரசு வாகனத்திலேயே மகேஸ்வரி மற்றும் ஜெகன்மூர்த்தியின் ஆட்கள் காதல்ஜோடி தங்கியிருந்த வீட்டுக்குப் போகிறார்கள்.
 அங்கே அவர்கள் இல்லை அதனால் மாப்பிள்ளை பையனின் தம்பியை கடத்திக் கொண்டு போய் அவர்களது குடும்பத்தை மிரட்ட தொடங்குகின்றனர்.
 ஆனால் விசயம் வெளியே தெரிந்து பிரச்சனை பெரிதாக ஆக அந்த பையனை இறக்கிவிட்டு தப்பிவிட்டனர்.
 இதையடுத்து நேர்மையான ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் மகேஸ்வரி குழு கைது செய்யப்படுகிறது.
 பூவை மூர்த்தி கைதுக்கு பயந்து தலைமறைவாகிறார். 
 அவர் முன்ஜாமின் கேட்டு போட்ட மனு நீதிபதி வேல்முருகன் பார்வைக்கு வருகிறது.
 இந்த நேர்மையான நீதிபதிதான் ஜெகன் மூர்த்தியை நேரில் வரச் சொல்லியும் ஏடிஜிபி யை கைது செய்யவும் உத்தரவிடுகிறார்.
 இருவரையும் கடுமையாக எச்சரித்து விசாரணைக்கு அனுப்பிவைக்கிறார்.
 
 
 

Thursday, 19 June 2025

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர்


கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர்
(சான்றுகளுடன்)

கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்பதற்கான சான்றுகள் வருமாறு...
-----------------
முதல் படம்,

14 மார்ச் 2014 தினமணி
டாக்டர் கிருஷ்ணசாமி சாதிச் சான்று விவகாரம்:
உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைப்பு
by Venkatesan

புதியதமிழகம் கட்சி நிறுவனரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமியின் சாதிச் சான்று தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது டாக்டர் கிருஷ்ணசாமி சமர்ப்பித்த சாதிச் சான்று போலியானது என நெல்லை மாவட்டம் கொடியங்குளத்தைச் சேர்ந்த குமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜி எம் அக்பர் அலி அண்மையில் விசாரித்தார்.
கிருஷ்ணசாமியின் தந்தை கொண்டா ரெட்டி சமூகத்தையும் தாய் அருந்ததியர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.
ஆனால் வேட்பு மனுவில் தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவர் என கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.
-------------
அடுத்த படம்,

Mallar Advocates Association (MAA)
No.138, Thambu Chetty street,
Chennai 600001.

நாள்: 06.09.2017

அனுப்புநர்,
பெ.இராமராஜ் வழக்குரைஞர்
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை 104
தொ.எண். 9176067906

பத்திரிக்கையாளர் சந்திப்பு

உயர்திரு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். எமது வழக்குரைஞர் சங்கம் சார்பில் வருகின்ற வியாழன் (07.09.2017) அன்று காலை 11 மணியளவில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவுள்ளோம்.

சந்திப்பின் நோக்கங்கள்:
1.ஆளும் பா.ஜ.க அரசின் மக்கள்விரோதத் திட்டங்களுக்கு ஆதரவளித்து தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து வரும் டாக்டர் கிருஷ்ணசாமியைக் கண்டிப்பது.
2. தேவேந்திர குல வேளாளர் சாதியில் பிறக்காமல் பொய்யான சாதிச்சான்றிதழ் பெற்று அப்பாவி மக்களை ஏமாற்றும் டாக்டர் கிருஷ்ணசாமியின் போக்கை அம்பலப்படுத்துவது.
3. நீட் தேர்வுமுறையில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனிதாவின் மரணத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதோடு தொடர்ந்து மக்கள் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் டாக்டர் கிருஷ்ண சாமியிடமிருந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயக் கொடியாகிய சிவப்பு பச்சைக் கொடியை மக்களை அணிதிரட்டுவதற்கான அறைகூவல் விடுப்பது.

இதர முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் சந்திப்பு நடைபெற உள்ளதால் தங்களது பிரதிநிதிகளை அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் அன்புள்ள,
பெ.இராமராஜ்
---------------
மேற்கண்ட இரண்டு போக கிருஷ்ணசாமி குடும்பம் பற்றி விரிவாக கூறுகிறது தற்போதைய செய்தி ஒன்று:-

டாக்டர் திரு. கிருஷ்ணசாமியின் “தேவேந்திரகுலத்தான்” என்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு

(ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம்)

பொருள்:
டாக்டர்.கே.கிருஷ்ணசாமி மோசடி செய்து “தேவேந்திரகுலத்தான்” என்று பெற்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய விண்ணப்பம்.

பார்வை:
கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் 09-1-1998 அன்று டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்ட நிரந்தர சாதிச் சான்றிதழ் எண் 1063899,
SL.NO. .10 / 98

ஐயா,
டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு தேவேந்திரகுலத்தான் என்ற சாதிச் சான்றிதழை கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட்டுள்ளது.

இது தவறானது, இது ஏமாற்றிப் பெற்ற சதான்றிதழாகும் அவர் தனது செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி “தேவேந்திரகுலத்தான்” என்ற போலியான சாதிச்சான்றிதழை ஏமாற்றிப் பெற்றுள்ளார்.

எனவே மோசடிமூலம் பெறப்பட்ட அவரது சாதிச் சான்றிதழை G.O.Ms(2D) 108,dated 12th September 2007இன்படி ரத்து செய்ய வேண்டும்.

டாக்டர்.கே.கிருஷ்ணசாமி திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை தாலுகாவின் கீழ் வரும் அவரது சொந்த கிராமத்தில் இருந்து தனது சாதிச் சான்றிதழைப் பெறுவதற்குப் பதிலாக அவர் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் தேவேந்திரகுலத்தான் என்ற போலியான சாதிச் சான்றிதழை நிலையான சான்றிதழாகப் பெற்றுள்ளார்.

டாக்டர்.கே.கிருஷ்ணசாமி பிறந்த சொந்த கிராம நிர்வாக அலுவலரால் முறையாக விசாரிக்கப்பட்டு நிலையான சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இது வருவாய்த் துறையின் ஆணை எண். Go.Ms.No.781 dtd 2nd May 1988 –என்பதற்கு எதிரானதாகும்.

திரு.கிருஷ்ணசாமிக்கு 09-01-1998 அன்று நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அச்சான்றிதழில் அவரது முகவரி "கே கிருஷ்ணசாமி த/பெ கருப்பசாமி,
சங்கீதா மருத்துவமனை,
பாலக்காடு மெயின்ரோடு,
குனியமுத்தூர்"
என உள்ளது.
இச்சான்றிதழ் குனியமுத்தூர் கிராமநிர்வாக அலுவலரால் அவர்பிறந்த ஊர் உள்ள ,உடுமலைப்பேட்டைத் தாலுகாவில் நேரடியாக விசாரிக்கப்படாமல் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் விசாரிக்கப்படாமல் வழங்கப்பட்ட்டுள்ளது.
இது மேற்படி வருவாய்த்துறையின் ஆணைக்கு எதிரானதாகும் திரு.கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் என்ற தனது போலியான சாதிச்சான்றிதழை வைத்துக்கொண்டு இரண்டு முறை ஓட்ப்பிடாரம் SC தொகுதியில் MLA ஆகி உள்ளார் இதன் மூலம் உண்மையான தேவேந்திரகுலமக்கள் இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தோம்.

இவர் தனது மகன் திரு.சியாம், மகள் திருமதி. சங்கீதா, இவர்களுக்கு தேவேந்திரகுலத்தான் என்று போலிச் சான்றிதழ் பெறுவதன் மூலமாக ஒட்டப்பிடாரம் MLA தொகுதி மற்றும் தென்காசி MP தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட வைக்க விரும்புகிறார்.
இச்செயல் உண்மையான தேவேந்திரகுல மக்கள் அங்கே போட்டியிடும் வாய்ப்பை இழக்கச் செய்வதாகும்.
ஏனெனில் திரு.கிருஷ்ணசாமி அருந்ததியர்(மாதாரி,சக்கிலியர்) சாதி இவரது மனைவி கேரளா OBC சாதி.
இவ்விருவரும் தேவேந்திரகுலமல்ல.
எனவே அவரது மகனும் மகளும் தேவேந்திர குலமல்ல..

மேலும் திரு. கிருஷ்ணசாமி தேவேந்திரகுல சாதி அல்ல.  ஏனெனில் அவரது தாயார் திருமதி தாமரை தாழ்த்தப்பட்ட அருந்ததியர் (சக்கிலியன்-12,மாதாரி சாதி)
மற்றும் கிருஷ்ணசாமியைப் பெற்ற தந்தை கருப்பக்குடும்பன் அல்ல,
கருப்பக்குடும்பன் அவரது காப்பாளர் மட்டுமே.

திரு.கருப்பக்குடும்பன் அவரது தாயார் தாமரைக்கு இரண்டாவது கணவர் ஆவார்.
திரு. கிருஷ்ணசாமி 8 வயது மற்றும் அவரது சகோதரி பாக்கியம் 6 வயது இருக்கும்போது தமது தாயார் தாமரையுடன் மசக்கவுண்டன் புதூரிலுள்ள திரு.கருப்பக்குடும்பன் வீட்டிற்கு வந்து அவருடன் சேர்ந்துள்ளார்.
அதற்குப் பின்னர் கருப்பக் குடும்பனுக்கும் தாமரைக்கும் தங்கம் என்ற ஒரு பெண் பிறந்துள்ளது.

இவ்வாறு இருக்கும்போது எப்படி கிருஷ்ணசாமி தன்னை கருப்பக்குடும்பனின் மகன் என்று கூறமுடியும்?

அரசின் விஜிலென்ஸ் குழுதான் அவரைப் பெற்ற தந்தை எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.
திரு. கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் அல்லது குடும்பன் சாதியைச் சார்ந்தவர் அல்ல.

எனவே, தாசில்தார் கோயம்புத்தூர் தெற்கு அவர்கள் டாக்டர் திரு.கிருஷ்ணசாமிக்கு தேவேந்திரகுலத்தான் என்று வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்.

அத்தோடு டாகடர் கிருஷ்ணசாமியின் மகள். திருமதி.கே.சங்கீதா மற்றும் அவரது மகன் திரு. சியாம் இவர்களுக்கும் தேவேந்திரகுலத்தான் என்று போலியாகச் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பின் அவைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.

ஆதி திராவிடர் மற்றும் Tribal நலத்துறை GO.MS.No.106 நாள் 15-10-12 ஆணைப்படி,
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமது விஜிலன்ஸ் குழுமூலம் இவ்வாறு போலியாகச் சான்றிதழ் பெற்ற டாகடர் கிருஷ்ணசாமியின் மீது நடவடிக்கை எடுத்து எமது சாதியை காப்பாற்றுவது கடமை.

திருநெல்வேலி,15-8-2017.

அனுப்பப்படும் நகல்கள்:
(1). Principal Secretary to Govt State of Tamil Nad ,
Revenue Department, Secretariat, Fort St George.
Chennai -600009,
(2). Principal Secretary to Govt State

தேதி: 15-8 -2017
அனுப்புநர்,
S. சிவ ஜெயப்பிரகாஷ், A.D.S.P. (ப.நி),
செல் எண்: 9442219159
செயலாளர்: மள்ளர் பாரதம் சங்கம் (பதிவு எண் .85 / 2013)
செயலாளர்: அகிய இந்திய குடும்பர் சத்திரிய மகாசபாவின் தமிழ்நாட்டுக் கிளை,
தலைமை அலுவலகம்: வாரணாசி,
உத்தரப்பிரதேசம்.
Regd. எண் .1894 (882/1910),
ஆசிரியர்: மள்ளர் பாரதம்.

முகவரி:
எண்:C-32/86H,
ஆசாத்தெரு,
மனகாவலம் பிள்ளை நகர்,
பாளையங்கோட்டை & அஞ்சல்,
திருநெல்வேலி மாவட்டம்,
தமிழ்நாடு - 627 002.

பெறுநர்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
கோயம்புத்தூர் மாவட்டம்,
ஸ்டேட் பாங்க் சாலை,
கோபாலபுரம்,
கோயம்புத்தூர் -641018
-----------
மேற்கண்ட மூன்றும் பள்ளர் பெருமக்களே கொடுத்த புகார் ஆகும்.
சில பள்ளர் உடன்பிறப்புகள் அவரது வளர்ப்புத் தந்தையை உண்மையான தந்தை என்று நம்பி அவருக்கு ஆதவாக செயல்படுகின்றனர்.
இவர் பூர்வீகம் கோவை காமராசர் வீதி (கோவை புரூக்பீட்ஸ் அருகே இருக்கும் அருந்ததியர் வசிக்கும் பகுதி).
இவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர் என்பது அங்கே போய் விசாரித்தால் தெரியும்.
--------
இவரது அரசியல் நுழைவே மக்களைக் காவுகொடுத்த தாமிரபரணிப் படுகொலை மூலம் நடந்தது.
1999ல் மாஞ்சோலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பணியாற்றிய கிருஷ்ணசாமி,
அவர்கள் பிரச்சனை முடிந்து வேலைக்குத் திரும்பிய பிறகு நான்கைந்து நாட்கள் கழித்து எங்களை மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டனர் என்று பொய்யாக பேட்டி கொடுக்க,
ஏற்கனவே அதிருப்தியில் இருந்த நிர்வாகம் உடன்படுக்கையை ரத்து செய்து வேலையை நிறுத்தியது.
அடுத்த நடந்த திருநெல்வேலி பேரணியின்போது தி.மு.க முன்பே திட்டமிட்டு தாமிரபரணி ஆற்று நீரை அதிகமாகத் திறந்து வைத்து போராடிய மக்கள் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்தி  ஆற்றில் தள்ளியதால் விக்னேஷ் எனும் ஒரு வயது குழந்தை உட்பட 17 பேர் (பெரும்பாலும் பள்ளர்) இறந்தனர். 500 பேர் வரை காயமடைந்தனர்.

அந்த சூடு ஆறுவதற்குள்ளே 2001 ல் திமுகவுடன் கூட்டணி வைத்து பத்து எம்.எல்.ஏ. சீட்
வாங்கியவர்தான் இந்த கிருஷ்ணசாமி.

இவருக்காக உயிரைவிட்ட எவரையும் இவர் நினைவுகூர்ந்ததோ மரியாதை செலுத்தியதோ ஒருபோதும் கிடையாது
-------------
இது போக இவர் ஹிந்துத்வா கையாள் என்பதற்கும் இரண்டு சான்றுகள் உண்டு.

குமுதம் 16.1.1998
'என் குரு சங்கராச்சாரியார்தான்' என்று கிருஷ்ணசாமி அளித்த பேட்டிக்கான அட்டைப்பட விளம்பரம்.

இது இவரது ஆரம்பகால இந்துத்துவ சார்புக்கு சான்று ஆகும்.
மேலும், நேற்று அனிதா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும்
அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும்
அதை விசாரிக்க முதல்வரையும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்திக்கவுள்ளதாகவும் பேட்டி கொடுத்தார்.
நேற்று மாலை 7மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக சென்று இரவு டெல்லியில் (மிக உயர்தர ஆடம்பரமான) ஹோட்டல் ஷெரட்டனில் தங்கிவிட்டு
இன்று (06.09.2017) காலை 11மணிக்கு எந்த (அப்பாயின்ட்மென்ட்) முன் அனுமதியும் இல்லாமல் நேரடியாக பிரதமருக்கு அடுத்தநிலையில் உள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து அனிதா மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க மனு கொடுத்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.

எந்த பதவியிலும் இல்லாத ஒருவரால் நினைத்த மாத்திரத்தில் உயர்மட்ட பா.ஜ.க அமைச்சரை சந்திக்க முடிகிறதென்றால் அவர் அந்த கட்சிக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருக்கவேண்டும் என்று யூகிக்கமுடிகிறது.

மேலும் நீட் தேர்வினை ஆதரிக்கும் இவர் எண்ணூற்றி சொச்சம் மதிப்பெண் மட்டுமே எடுத்த தனது மகளுக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் கெஞ்சி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான இட
ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் இடமும் வாங்கிக்கொடுத்தவர் ஆவார்.
இதனை பாலா பாரதி (கன்னடர்) அம்பலப்படுத்தியுள்ளார்.

இவர் தற்போது மத்திய அரசிடம் எதிர்பார்ப்பது தனது மகளுக்காக திருவனந்தபுரத்தில் கட்டிவரும் மிகப் பிரம்மாண்டமான மருத்துவமனைக்கு எந்த தடங்கலும் வரக்கூடாது என்பதுதான்.

எங்கெங்கு நோக்கினும் உருமறைப்பு வந்தேறிகள் !

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்)
06.09.2017

Saturday, 14 June 2025

முருகனும் இசுலாமியரும்

முருகனும் இசுலாமியரும்

தமிழ் புலவர் அருணகிரி நாதர் முருகனை ‘சூர்க்கொன்ற ராவுத்தனே’ என்றும் ‘மாமயிலேறும் ராவுத்தனே’ என்று புகழ்கிறார்.
 அதாவது தமிழின வணிகர்கள் அரேபியா வழியாக குதிரை இறக்குமதி செய்து விற்றபோது ராவுத்தர் எனும் பெயர் பெற்றனர். அதன் பிறகுதான் இசுலாமைத் தழுவினர்.

 மீரா கண்ணு எனும் ஆசுகவி புலவர் மிகச் சிறந்த முருக பக்தராக இருந்துள்ளார்.
 அவரது கடனை முருகனே அடைத்ததாக திருச்செந்தூர் தல புராணம் கூறுகிறது.

 1930 களில் உறையூர் காதர் பாட்ஷா என்பவர் முருகன் மீது பல பாடல்கள் பாடியுள்ளார்.
 "சுருளிமலை மீது மேவும் சீலா.."  எனும் பாடல் மிகவும் புகழ்பெற்றது

 புதுச்சேரியில் 1970களில் முகம்மது கௌஸ் எனும் இசுலாமியர் முருகன் கோவிலே கட்டியுள்ளார்.
 இன்றும் அவரது குடும்பம்தான் கோவிலை நிர்வகித்து வருகிறது.

 முருகனை இசுலாமியர் வழிபடுவது அதிசயமோ அரிதானதோ இல்லை!
முப்பாட்டன் முருகன் அனைவருக்கும் ஆனவன்! 
 

Wednesday, 11 June 2025

ஒரே அடியில்...

 ஒரே அடியில்...

 வீராவும் செல்வமும் ஒரு பெரிய குடோனில் வேலை செய்துவந்தனர்.
 அதில் வீரா கொஞ்சம் சீனியர்.
குண்டாக நீளமான முடியுடன் இருப்பான்.
 டியோ ஸ்கூட்டியில் வருவான்.
வாய்த்துடுக்கு அதிகம்!
 எவரையும் நொடிப் பொழுதில் கவுன்ட்டர் போட்டு காலி செய்துவிடுவான்!
 செல்வம் கொஞ்சம் சின்ன பையன்.
கருப்பாக ஒல்லியாக உயரமாக இருப்பான்.
 பழைய ct 100 வண்டியில் வருவான்!
ஆனால் அந்த பழைய வண்டியை திறமையாக ஓட்டுவான்! 
 எப்போதும் மொட்டைத் தலையுடன் இருப்பான்!
கேட்டால் பெற்றோர் வேண்டுதல் என்பான்.
 
 செல்வத்தைக் கண்டால் வீராவுக்கு கொண்டாட்டம் தான்!
வெளிப்படையாக ரேகிங் செய்வான்.
 குடோனில் வேலைபார்த்த பெண்கள் முன்னிலையில் செல்வத்தை கலாய்த்து தள்ளுவான்! 
 செல்வம் முதலில் அமைதியாக இருந்து பார்த்தான்.
 பிறகு சரிக்கு சரி பேசிப் பார்த்தான்.
வீராவின் நாக்கு வலிமைக்கு செல்வத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை!
 அங்கே வேலைசெய்யும் இளம்பெண்களும் செல்வத்தை கடந்துபோகும் போது நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள்.
 ஒருநாள் வீரா வண்டியை சர்வீஸ் விட்டிருந்தான்.
செல்வம் தான் அவனை கூட்டிவந்தான்.
 அன்று செல்வத்துக்கு பிறந்தநாள்.
வீரா அவனிடம் மதியம் பிரியாணியும் செவனப்பும் பீடாவும் வாங்கித்தர சொல்லி ஏறத்தாழ மிரட்டிக் கொண்டிருந்தான்!
 சரியென்று இருவரும் வெளியே வந்தனர்!
வெளியே மரத்தடியில் காற்றோட்டமாக பெண்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
 செல்வம் வண்டியில் ஏறி உதைத்து ஸ்டார்ட் செய்தான்.
வண்டியில் ஏறிய வீரா "டிரைவர் வண்டிய ஹோட்டலுக்கு விடு" என்றான்.
 உடனே பெரிய உறுமலுடன் வண்டியின் முன்சக்கரம் மேல தூக்கியது!
 அடுத்த நொடி புழுதிக்கு மத்தியில் செல்வம் வண்டியை திடமாக பிடித்தபடி தரையில் நின்றுகொண்டு இருந்தான்!
முன்விளக்கு வானத்தை நோக்கி இருக்கும்படி பைக் நட்டமாக நின்றுகொண்டு இருந்தது!
 வீரா கீழே மல்லாக்க விழுந்து கிடந்தான்! 
 பெண்கள் விழுந்து விழுந்து  சிரித்து கொண்டிருந்தனர்! 
 

Friday, 6 June 2025

ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிப்பு

ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிப்பு
நமக்கு எல்லா வசதிகளையும் செய்வது மாநில அரசு. மாநில அரசை விட அதிகம் வரி வாங்கும் மத்திய அரசு நமக்கு செய்வது ரயில், தபால், ராணுவ பாதுகாப்பு போன்றவை மட்டுமே!
மத்திய அரசு எப்படி தமிழகத்தைச் சுரண்டி கொழுக்கிறது என்பதை பலமுறை சான்றுகளுடன் பார்த்துள்ளோம்.
தற்போது மத்திய அரசால் நமக்கு ஓரளவு பலனளிக்கும் ரயில்வே பற்றி பார்ப்போம்.
கேரளாவுடன் ஒப்பிட்டால் தமிழகம் ரயில்வே வளர்ச்சியில் 20 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது.
இத்தனைக்கும் இவ்விரு மாநிலங்களும் ஒரே (தென்னக ரயில்வே) மண்டலத்தில் உள்ளன.
அதாவது மாநில எல்லைகள் வேறு ரயில்வே எல்லைகள் வேறு (காண்க: படம்)
இதில் தென்னக ரயில்வே மண்டலத்துக்கு ஒதுக்கப்படும் நிதியும் திட்டங்களும் கேரளாவுக்கு பலனளிக்கும் வகையில் செலவு செய்யப்படுகின்றன.
இது பற்றி 02.09.2022 இல் தினகரன் வெளியிட்ட செய்தி வருமாறு,
கேரளாவுக்கு அடிக்கும் ஜாக்பாட்!
ரயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிப்பு:
கிடப்பில் கிடக்கும் நீண்ட கால கோரிக்கைகள்
நாகர்கோவில்:
கேரளாவில் ரயில்வே துறை சம்பந்தமான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி, துவங்கி வைத்துள்ளார். மேலும் பல்வேறு புதிய ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளார்.
இதில் முக்கியமாக 750 கோடியில் 27 கி.மீ தூரம் உருவாக்கப்பட்ட குருப்பந்தாரா - கோட்டயம் - சிங்கவனம் புதிய ரயில் பாதை இரு வழி பாதை திட்டம்
மற்றும் 76 கோடியில் கொல்லம் - புனலூர் மின்மயமாக்கல் திட்டம் உள்ளிட்டவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இது தவிர எர்ணாகுளம் சந்திப்பு, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ள இருப்பு பாதை தடத்தில் எர்ணாகுளம் - கோட்டயம்- காயங்குளம் மார்க்கத்தில் புதிய மெமு ரயில் சேவையும் துவங்கப்பட்டுள்ளது.
கொல்லம் - புனலூர் மார்க்கத்தில் இயங்கி வந்த இரு ரயில்கள் மெமு ரயில் ஆக மாற்றம் செய்யும் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது.
கேரளாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டத்தில் கொல்லம் - புனலூர் மின்மயமாக்கல் திட்டம் முழுக்க முழுக்க தமிழகத்தில் உள்ள மதுரை கோட்டம் நிர்வகித்து வருகிறது.
கோட்டம் எதுவாக இருந்தாலும் கேரள மாநிலம் அதிகளவில் புதிய ரயில்களை பெறுகிறது.
ஆனால் தமிழகம் அந்தளவுக்கான ரயில்வே திட்டங்களை பெற முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டங்களும் அதை நிரூபிக்கும் வகையில் இருப்பதாக ரயில் பயணிகள் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அப்படியே தமிழகத்தில் புதிய ரயில்வே திட்டம் வந்தாலும் கூட, கேரள பயணிகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன்படும் விதத்தில் தான் இயக்கப்படுகிறது என்பதும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருவனந்தபுரம் - திருநெல்வேலி மெமு ரயில் சேவை இன்னும் கனவாகவே உள்ளது.
இந்த பகுதி மின்மயமாக்கல் 2014-ம் ஆண்டு நிறைவு பெற்று இதுவரை ரயில்வே துறையால் மெமு இயக்கப்படவில்லை.
நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கத்தில் இயங்கும் பழைய ரயில்கள் மாற்றம் செய்து விட்டு மெமு ரயில்களாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை தெற்கு ரயில்வே தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
இதே போல் சென்னை முதல் மதுரை வரை இருவழி பாதை பணிகள் முடிந்து 5 வருடங்கள் ஆகி விட்டது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதை இரு வழியாக மாற்றும் பணிகள் 80 சதமானம் முடிவு பெற்றுவிட்டன. ஆனாலும் இந்த பாதையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பதும் இன்னும் பரிசீலனை செய்யப்படாமல் உள்ளது.
சென்னையிலிருந்து செல்லும் ரயில்களான
தாம்பரம் - ஐதராபாத் சார்மினார்,
சென்னை- புதுடெல்லி ஜிடி எக்ஸ்பிரஸ்,
சென்னை - ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
போன்ற ரயில்களை மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையிலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
தமிழ்நாட்டில் சமீபத்தில் திண்டுக்கல் - பொள்ளாச்சி, திருவாரூர் - காரைக்குடி, மதுரை - தேனி ஆகிய பகுதிகள் அகல பாதையாக மாற்றம் செய்யப்பட்டு விட்டது. இதில் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் ரயில் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக ரயில் வசதி இல்லாத தேனி மாவட்ட மக்களுக்கு கூட தேனி - சென்னை புதிய ரயில் சேவையை தொடங்க வில்லை.
இவ்வாறு செய்வதை பார்க்கும் போது ரயில்வே துறையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்பதை நன்கு அறிய முடிகின்றது என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் செயலாளர் எட்வர்ட் ஜெனி கூறினார்.
கடந்த இருபது வருடங்களாக ஒவ்வொரு ரயில் பட்ஜெட்டில் தமிழகத்தை போல் எதிர்கட்சி எம்.பிக்கள் அதிகம் உள்ள கேரளா ஜொலித்தது.
பாரதிய ஜனதா ஆட்சியிலும் இது தொடர்ந்து கொண்டே வருகிறது.
ஆனால் தமிழ்நாடு ரயில்வே துறை வளர்ச்சியில் கேரளத்தை விட இருபது வருடம் பின் தங்கி காணப்படுகிறது.
இந்த நிலையை மாற்ற தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
4 செப்., 2022 

கண்ணுக்கு கண்

கண்ணுக்கு கண்!

 தமிழர் எல்லைப் பகுதி கர்நாடகத்துடன் சேர்க்கப்பட்ட காரணத்தால் தமிழகத்தில் ஒரு கன்னடர் இருக்கிறார் என்றால் எதிர்ப்பக்கம் கர்நாடகத்தில் இரண்டு தமிழர்கள் இருக்கின்றனர்!
கலவரம் வரும் சூழல் உருவாகி உள்ளது!
 அப்படியே தமிழருக்கு இரண்டு கண்கள் போகும் அதேநேரத்தில்  கன்னடருக்கு ஒரு கண் தான் போகும் என்றாலும் நாம் எதிர்த்து சண்டையிட வேண்டும்!
 1991 இல் கன்னடர் தமிழரை அடித்தபோது வீரப்பனார் திருப்பியடித்தார்!
 அவர் இருந்த வரை அடுத்த கலவரம் வரவில்லை!
 தமிழர்களான நமது ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒரு வீரப்பன் இருக்கிறான்! 
 நாம் இம்முறை நிமிர்ந்து நிற்போம்!
அடிக்கு அடி கொடுப்போம்! 
 துளு, குடகு, கொங்கணி என சிறுசிறு இனங்களையும் மராத்திய பேரினத்தையும் நம் அணியில் சேர்ப்போம்!
கன்னடர் கொட்டத்தை அடக்க நம்மால் முடியும்!
 இறுதி வெற்றி நமதே! 

இறுதிக் கட்டத்தில் கன்னடர் தமிழர் மோதல்

இறுதிக் கட்டத்தில் கன்னடர் தமிழர் மோதல் 

 இதே நாம் தனிநாடாக வல்லரசாக இருந்திருந்தால் கன்னடர் தமது மொழி தமிழில் இருந்து வந்தது என்பதை ஒத்துக்கொண்டு இருப்பார்கள்!
 கன்னடம் தமிழில் இருந்து வரவில்லை என்று கன்னடர் சொல்வது ஒருவன் தனக்கு அப்பன் பெயரே தெரியாது என்று சொல்வதைப் போன்றதாகும்!
 கன்னடரை நாம் குறைத்து எடைபோடக் கூடாது!
நமக்கு அழிவு அவர்களால்தான் நடக்கப் போகிறது!
 இது 2000 ஆண்டுகள் தொடரும் பகை!
 அதாவது கரிகாலன் தந்தை காலத்தில் இந்திய துணைக்கண்டத்தை விழுங்கிவிட்டு எஞ்சியிருந்த தமிழகத்தை நோக்கி வந்த மௌரிய பேரரசை வழிநடத்தி வந்தது கர்நாடகப் பகுதி வடுகரே! 
 அன்று மூவேந்தர் கூட்டணிப்படை பெரும்பாடுபட்டு இப்படையெடுப்பை முறியடித்தது!  
 கர்நாடகத்தின் பாழி நகரில் இருந்த படைமையத்தை அழித்தே போர்முடிவுக்கு வந்தது.
 அப்போது கன்னடம் ஒரு தனிமொழியாகவே இல்லை திரிந்த மொழியாக இருந்தது!
 அதாவது கன்னடர் கன்னடராவதற்கு முன்பே நமக்கு எதிரிகளாகி விட்டனர்.
 அதன் பிறகும் கன்னடர் மூன்று முறை தமிழகத்தைப் புரட்டிப்போட்டு உள்ளனர்!
 வடதமிழகம் தவிர்த்து பாண்டிய நாடு வரை பிடித்த களப்பிரர் கன்னடரே! 
 விஜய நகர அரசாக தமிழகத்தைப் பிடித்ததும் கன்னடர்தான்!
 (கன்னடரால் நாயக்கர்களாக நியமிக்கப்பட்ட தெலுங்கர் பிறகு தனியரசுகளை நிறுவினர்.
 இந்த நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பெருமளவு ஆந்திராவிலிருந்து தெலுங்கர் குடியேறி நிலவுடைமை பெற்று தமிழகத்தில் வலுவாக நிலைபெற்றனர்)
 நாயக்கர் காலத்திலும் தென்தமிழக பாண்டிய சிற்றரசுகளை ஒழிக்க முடியாமல் திணறிய தெலுங்கு நாயக்கர்கள் வித்தலராயன் (அ) வெங்கலராசன் எனும் கன்னட தளபதியை அழைத்து வந்தே பாண்டிய வாரிசுகளை இல்லாதொழித்தனர்.
 இந்த படுகொலைக்கு பரிகாரமாக திருநெல்வேலியில் இவன் வெட்டியதே கன்னடியன் கால்வாய் எனும் மாபெரும் கால்வாய் என்று நம்பப்படுகிறது! 
 வித்தலராயன் பற்றி மறைத்து தாமே பாண்டியரை வென்றதாக நாயக்கர்கள் காட்டிக்கொண்டனர்!
 கன்னடியன் கால்வாய்க்கு வேறொரு கட்டுக்கதையை எழுதிவைத்தனர்! 

 தமிழரும் சளைத்தவர் இல்லை!
 இந்திய துணைக்கண்டத்தின் மையம் அதாவது கன்னோசி வரை வென்ற புலிகேசி தமிழகத்தில் பல்லவ நாட்டை நிர்மூலமாக்கிவிட்டு பாண்டிய நாடு வரை வந்து கொடி நாட்டிச் சென்றவன்!
 நமக்கு ராசராசன் போல கன்னடருக்கு புலிகேசி!
 பல்லவர் மீண்டெழுந்து பாண்டியருடன் கைகோர்த்து சாளுக்கிய அரசை வென்று தலைநகர் வாதாபியை அழித்து புலிகேசியின் கொட்டம் அடக்கினர். 
 ராசேந்திரன் படையெடுத்த காலத்தில் கன்னட நாட்டு பிராமணரையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்றதாக அந்த நாட்டு கல்வெட்டு கூறுகிறது!
 (சில ஆண்டுகளுக்கு முன் அன்னிகேரி எனுமிடத்தில் பல எலும்புக்கூடுகள் ஓரிடத்தில் கிடைத்த போது இந்த படுகொலை சோழர் செய்தது என்று கன்னடர் வதந்தி பரப்பினர்)
 மைசூர் அரசு திருமலை நாயக்கர் காலத்தில் தமிழகத்தின் மீது படையெடுத்து மதுரைக்கு மிக அருகேவரை முன்னேறி வந்தபோது ராமநாதபுரம் மறவர் படைகள் வந்துதான் அப்படையெடுப்பை திருப்பியடித்து புறப்பட்ட இடத்திற்கே தள்ளியது!
 இப்படி வரலாறு நெடுக தமிழரும் கன்னடரும் மோதிக்கொண்டே இருந்துள்ளனர்!
 தமிழக கன்னட எல்லையும் கூட இழுபறியிலேயே இருந்து வந்துள்ளது!
 அதாவது நம் எல்லையை அவர்கள் ஆக்கிரமிப்பதும் நாம் மீட்பதும் என!
 கர்நாடகத்திற்குள் ஏறத்தாழ அம்மாநில மத்தியில் உள்ள தமட்டக்கல் எனுமிடத்தில் 6 ஆம் நாற்றாண்டு தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது! 
 அதில் ஏழூர் சாத்தன் எனும் பெயருள்ளது.
 அப்போது அங்கே தமிழர் அரசாட்சி பரவியிருக்கவும் இல்லை! 
தமிழகத்தினுள் இத்தகைய பழமையான கன்னட சான்று எதுவும் கிடையாது!
 1956 இல் தமிழகத்திற்கு சேரவேண்டிய எல்லை மாவட்டங்களை எத்தனையோ சான்றுகள் இருந்தும் தமிழகத்திற்கு கிடைக்கவிடாமல் பறித்த கன்னடர் ஏற்கனவே இருந்த எல்லையைத் தாண்டி அன்றைய கோவை மாவட்ட ஒரு பகுதியையும் எடுத்துக் கொண்டனர்!
 திராவிட மாயையில் கிடந்த , கிடக்கும் தமிழர் இதை மீட்க முயலவே இல்லை!
 இதுவே நமது இன்றைய தோல்விக்குக் காரணம்!
 குடகு மொழி பேசும் கொடகர் பகுதியில் காவிரி உற்பத்தி ஆகிறது! 
 அவர்களையும் அடக்கி ஒடுக்கிவிட்ட கன்னடர் காவிரி நீரை மறித்து தேவையில்லாமல் தேக்கி தமது மாநில தொழிற்சாலைகளுக்கு வழங்கியும் தமிழகத்தில் அவர்களின் பங்காளிகளான திராவிட அரசுகள் நீரில்லாத ஆற்றில் மணலை அள்ளி விற்றும் மனிதத்தன்மை அற்ற அரசியல் செய்கின்றனர்!
 கேட்டால் கன்னடர்கள் நல்லவர்களாம் சில கன்னட வெறியர்கள் இப்படி அரசியல் செய்கின்றனராம்!
 எனவே நாம் இருவருமே சண்டை போடாமல் இருக்க வேண்டுமாம்!
 இதுவும் ஒரு திராவிடப் பிரச்சாரம்!
அடிப்பவனையும் அடிவாங்குபவனையும் ஒரே தரத்தில் வைப்பது!
 ஒரு உயிருக்கு தண்ணீரை மறுப்பது எவ்வளவு பெரிய பாவம் என்று விலங்குகளுக்கு கூட புரியுமே?!
 கன்னட இனத்தில் ஒருவருக்கு கூடவா இந்த அறிவும் இரக்கமும் இல்லை!
 கர்நாடக ஆறுகள் ஆண்டுக்கு ஆயிரம் டிஎம்சி கடலில் சென்று கலக்கின்றன. 
 ஆனால் தமிழகத்துக்கு வரும் 100 டிஎம்சி நீரை மறித்து அரசியல் செய்கின்றனர்.
 கேட்டால் கடலில் கலக்கும் 10 டிஎம்சி காவிரி நீரை சேமிக்கிறார்களாம்.
 கன்னடரோ உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டது இல்லை!
 அவர்கள் பணிந்தது வீரப்பனார் நீட்டிய துப்பாக்கிக்கு மட்டும்தான்!
 இன்றுவரை தமிழகத்தை ஒரு வெள்ள வடிகாலாக ஒரு சாக்கடையாகவே  பயன்படுத்துகின்றனர் கன்னடர்.
 இதனால் நெற்களஞ்சியமான டெல்டா விவசாயம் பெரும்பங்கு அழிந்துவிட்டது.
 மன்னார்குடி வரை நிலத்தடியில் கடல் நீர் புகுந்துவிட்டது.
 ஹிந்திய அரசு இதைத் தட்டிக்கேட்கவில்லை.
 ஹிந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இத்தனை ஆண்டுகால பகையிருந்த போதும் இப்போது வரை சிந்து நதியை மறிக்கவில்லை!
 தற்போது ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளனரே தவிர நடைமுறையில் எதுவும் செய்யவில்லை! 
 ஹிந்தியாவை நம்பி பல ஆண்டுகளாக போராடி அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தையும் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக பயன்படுத்துகிறது.
 பாகிஸ்தானுக்கு தண்ணீர் விடும் ஹிந்தியருக்கு ஒரு தமிழ்க் குழந்தை தண்ணீர் குடிப்பதில் உடன்பாடில்லை!
 ஹிந்தியர் ஆதரவுடன் காவிரி ஆணையத்திலேயே தீர்மானத்தை நிறைவேற்றி மேகதாது அணை கட்ட கன்னடர் தயாராகிவிட்டனர். 
 இந்த ஆணையம் சூழ்ச்சியாக டெல்டா கால்வாய்களைத் தூர்வார கடன் பெற்றுத்தருவதாக ஒரு அம்சத்தைச் சேர்த்து தமிழக அரசை ஆணைய கூட்டத்திற்கு வரவழைத்து மேகதாது கட்ட தீர்மானம் கொண்டுவந்து தமிழகமும் புதுச்சேரியும் எதிர்த்தும் கூட அத்தீர்மானம் நிறைவேறியுள்ளது.
 இதன் மூலம் வெளிநாட்டு கடனாக தமிழக அரசுக்கு கிடைக்கும் 1400 கோடியில் ஏறத்தாழ 40% திமுகவுக்கு கமிசன் கிடைக்கும்.
 இந்த பணத்திற்காக தீர்மானம் நிறைவேறும் என்று தெரிந்தும் பல ஆண்டுகள் செய்தது போல புறக்கணிப்பு செய்யாமல் கூட்டத்தில் கலந்துகொண்டு பிறகு வெளியே வந்து அயோக்கித்தனம் செய்துவிட்டார்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாடகமாடி பேட்டி கொடுக்கிறார்.
 அதாவது இன்னும் சில ஆண்டுகளில் சொட்டு நீர் கூட தமிழருக்கு கிடைக்காது.
 5கோடி தமிழர்களுக்கு தண்ணீர் இருக்காது!
 இது ஒரு வெளிப்படையான இனப்படுகொலை ஆகும்.
 இந்த இனப்படுகொலை குற்றவாளிகளைத் தான் அதுவும் அவர்கள் வெளிப்படையாக இனவெறுப்பு பேசிக் கொண்டிருந்த போது தான்  தமிழக முதலமைச்சரே நேரில் சென்று பிரச்சாரம் செய்து ஆட்சியில் அமர்த்தினார்.
 ஈழத்தில் ஹிந்தியாவும் சிங்கள அரசும் செய்த இனப்படுகொலைக்கு துணைநின்றது போலவே 
 தமிழகத்திலும் ஹிந்தியரும் கன்னடரும் செய்யவுள்ள நேரடி இனப்படுகொலைக்கு திமுக துணை நிற்கிறது.
 நியாயப்படி தமிழர்தான் கன்னடரை கொலைவெறி கொண்டு அடிக்க வேண்டும்.
 ஆனால் கன்னடர் தொடர்ந்து தமிழரை அடிப்பதும் கொல்வதும் நடக்கிறது.
1982 இல் கன்னடத் திணிப்பை எதிர்த்து போராடிய நான்கு கோலார் தமிழர்களை சுட்டுக் கொன்றதன் மூலம் தொடங்கியது கொலைத் தாண்டவம். 1991 இல் மிகப்பெரிய கலவரம் நடத்தி நூறு பேர் வரை கொன்று பல நூறு பேரை முடமாக்கி 2 லட்சம் தமிழரை அடித்து விரட்டிவிட்டனர் கன்னடர்.
 தொடர்ச்சியாக அவ்வப்போது தமிழரைத் தாக்கியே வந்துள்ளனர்.
 2016 இல் கூட தமிழர்களைக் குறிவைத்து கலவரம் நடந்தது.
 தற்போது நடந்த கிரிக்கெட் மோதல்களையும் இதில் சேர்க்கலாம்.
 இப்படி முழுவெறியுடன் இருக்கும் கன்னடர் மேகதாது அணையைக் கட்டிவிட்டால் தமிழர் அழிவுக்காலம் தொடங்கிவிடும்.
 நாம் குடகு மழைக்குப் போகும் மழை மேகங்களை தடுத்து செயற்கை முறையில் மழை பொழிய வைப்பதைத் தவிர வேறு வழியிருக்காது!
 அப்படிப் பொழிந்தாலும் அது அமில மழையாகவே இருக்கும்!
 திராவிடத்தை வீழ்த்தி இனப்பற்றுள்ள தமிழரை ஆட்சியில் அமர்த்தி மேகதாது அணையைத் தடுக்க வேண்டும்! 
 கன்னடர் கொட்டமடக்க இன்னொரு வீரப்பன் உருவாக வேண்டும்! 
 இந்த தேர்தலை விட்டால் மேகதாது கட்டப்படும்! தமிழகத்தில் நிரந்தர பஞ்சம் வரும்!
 நாம் இன்னொரு சோமாலியா ஆக வேண்டியதுதான்! 
 அதன்பிறகு எத்தனை வீரப்பன்கள் உருவானாலும் பலனில்லை!