சீமானை சோதிக்காதீர்கள்
சீமான் ஸ்டைல் அரசியலை புரிந்து கொள்ள முயல்வோம்!
சீமானிடம் இருப்பதெல்லாம் கொள்கைதான்!
ஆனால் கொள்கையை வைத்தே பணபலமும் அதிகார வலுவும் கிளப்ப முடியாத சூறாவளியை அவரால் கிளப்ப முடியும்!
அவருக்கு எப்போது தேவையோ அப்போது ஊடகத்தையும் மக்களின் கவனத்தையும் தன் மீது திருப்ப முடியும்!
ஒரு தளபதி சூழ்நிலைக்கு தகுந்தபடி கனரக ஆயுதங்களை களத்தில் இறக்குவது போல அண்ணன் கொள்கைகளில் மாற்றம் அல்லது தீவிரம் என்று நிலைப்பாடு எடுப்பார்!
இப்படித்தான் பாஜக வின் அடிப்படையைத் தகர்த்த 'முப்பாட்டன் முருகன்' நிலைப்பாடு!
இப்படித்தான் புயலைக் கிளப்பிய 'ராஜீவ் காந்தியை கொன்றோம்' என்ற நிலைப்பாடு!
இப்படித்தான் 'ஆடு மாடு மேய்த்தல் அரசுவேலை' நிலைப்பாடு!
இப்படித்தான் 15 ஆண்டுகள் காத்திருந்து அடித்த 'ஈ.வே.ரா பிம்பம்' மீதான அடி!
இப்படித்தான் கள் இறக்கும் போராட்டம்!
இப்படித்தான் மாடு, மலை, தண்ணீர் மாநாடு!
கொள்கை மட்டுமல்ல சில வார்த்தைகளைப் போட்டு அதிர்வை கிளப்புவதும் உண்டு!
இப்படித்தான் 'ஆமைக்கறி'...!
இப்படித்தான் 'ஏகே74'..!
இப்படித்தான் 'டேய் ஸ்டாலின்'..!
இப்படித்தான் 'சாத்தானின் பிள்ளைகள்'..!
இப்படித்தான் 'எம்ஜிஆர் சனியன்'...!
இப்படித்தான் 'டீவிக்க...! தலைவிதி'...!"
இப்படித்தான் 'அண்ணனை முறைச்சா அடிப்பேன்'..!
இனி வரும் காலங்களிலும் அண்ணாயிசம், எம்ஜியாரிசம், திருமாயிசம், அம்பேத்கரிசம் என எல்லா இசங்களும் நொறுக்கப்படும்!
அண்ணனிடம் இருப்பதெல்லாம் உடலும் அறிவும் தான்!
அதாவது மக்களைப் பற்றிய ஆழமான புரிதலும் மணிக்கணக்காக பேசும் திறனும் சுற்றுப்பயணத்திலேயே இருக்கும் கடின உழைப்பும் கொள்கைகளின் பலம் பற்றிய புரிதலும்தான்!
அதனால்தான் உயிர் போகும் அளவு ரிஸ்க் எடுக்கும் கதாநாயகன் போல 'தனித்து' என்கிற தற்கொலை முடிவில் உறுதியாக இருக்கிறார்!
ஏனென்றால் அதுதான் அவரது அடையாளம்!
அதுதான் அவர் அரசியலின் உயிர்நாடி!
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக கவலைக்கிடமான நிலையில் இருந்தபோது யாராவது எடப்பாடி பழனிச்சாமியிடம் திமுகவுடன் கூட்டணி அமைக்க கோரினார்களா?!
இரு கட்சிகளும் இணைந்தால் தமிழகத்தை யாராலும் அசைக்க முடியாதே?!
ஏன் அது மட்டும் நடக்கவே நடக்காது?!
ஏனென்றால் அதுதான் அவர்களின் அடையாளம்!
சீமானின் அடையாளமும் அத்தகையதே!
ஒரு நொடி ஆகாது... 'மக்களாவது மண்ணாவது' என்று தூக்கியெறிந்து விட்டு அதிமுக வுடன் கூட்டணி போட்டு பதவி பணம் அதிகாரம் என கைப்பற்றி தன் குடும்பத்தையும் கட்சியின் மேல்மட்டத்தையும் வளப்படுத்தி கொள்ள ஒரு நொடி ஆகாது!
அதன்பிறகும் கூட 50 ஆண்டுகள் அரசியல் செய்ய முடியும்!
விசிக போல மானங்கெட்டு போகாமல் பாமக போல கௌரவமாக அமர்ந்து மிதமான அரசியல் செய்ய முடியும்!
தமிழர் அல்லாதோருக்கு எதிராக சிவசேனா பாணி கலவர அரசியலைச் செய்ய முடியும்!
அல்லது 'கன்னட ரக்சின வேதிகே' போல அரசியலுக்கு வெளியே இருந்தே கூட அரசியலை ஆட்டுவிக்க முடியும்!
ஆனால் அண்ணனோ 'தலைகீழாகத்தான் குதிப்பேன்' என்கிறார்!
எங்கள் இலக்கு ஆழமானது!
முத்து எடுக்க தலைகுப்புற விழுந்து மூச்சை அடக்கித்தான் ஆக வேண்டும்.
அண்ணன் இந்த இறுமாப்பாலேயே எல்லா ஆதரவையும் இழந்துவிட்டார்!
இன்று அண்ணனுக்கு ஆதரவாக இருப்பது மாற்றத்தை விரும்பும் தம்பிகள்! அவர்கள் திரட்டும் சிறிய அளவு நிதி! அதைவிட அண்ணனின் சர்வாதிகாரத்தை சகித்துக் கொள்ளும் தம்பிகளின் அசாத்திய பொறுமை!
எதிர்கட்சி ஆட்களையும் பாராமுகம் காட்டும் மக்களையும் மண்ணையும் மரத்தையும் கூட மரியாதையாக பேசும் அண்ணன் தம்பிகளை மட்டும்தான் 'இருந்தா இருடா பிசிறு! இல்லாட்டி போய்ட்டே இரு!' என்று எடுத்தெறிந்து பேசுவார்!
அண்ணன் தவறு செய்யும் போது கேள்வி கேட்கும் உரிமை இருந்தாலும் நாங்கள் பலமுறை மௌனமாகவே கடந்து செல்கிறோம்!
அண்ணனின் இந்த அலட்சிய போக்கு பல முறை எங்களை காயப்படுத்தி இருக்கிறது!
கரூர் சம்பவத்திற்கு பிறகு அவரது சர்வாதிகாரம் இல்லாவிட்டால் நாங்களும் அப்படியான ஒரு கும்பலாகத்தான் ஆகியிருப்போம் என்று மனதைத் தேற்றிக் கொள்கிறோம்!
மாடுகளைத் திரட்டி மாநாடும் ஊர்வலமும் நடத்தியபோது கூட சிறு கீறல் இல்லை என்றால் அதுதான் சீமான் உருவாக்கிய கட்டுப்பாடு!
என்ன செய்வது அண்ணனை எங்களால் கைவிட முடியாதே?!
ஆம்! உங்கள் குருட்டு கண்களுக்கு தெரிகிறதா?!
சீமானுக்கும் 60 வயதாகிவிட்டது!
தம்பிகளும் இளமைக் காலத்தை தொலைத்துவிட்டு 40களில் அதாவது முதுமைக்கு வந்துவிட்டனர்!
தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் நல்ல அரசியல்வாதிக்கு மரணவலி கொடுக்கின்றனர்.
இப்படித்தான் வ.உ.சி!
இப்படித்தான் பாரதியார்!
இப்படித்தான் ஜீவானந்தம்!
இப்படித்தான் மபொசி!
இப்படித்தான் பாரதிதாசன்!
இப்படித்தான் நல்லகண்ணு!
இப்படித்தான் தமிழரசன்!
இப்படித்தான் கலியபெருமாள்!
இப்படித்தான் நம்மாழ்வார்!
தமிழக வாக்காள பெருமக்களுக்கு ஏதோ தாம் பெரிய சிவபெருமான் என்றும் ஓட்டுக் கேட்டு நிற்பவன் தன் பக்தன் என்றும் எண்ணிக்கொண்டு உயிர் போகும் அளவு சோதிக்கின்றனர்.
அவன் உங்களை காப்பாற்றத்தான் உங்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறான் மக்களே!
இதுவே சீமான் ஒரு வந்தேறியாக இருந்திருக்க வேண்டுமே?!
அன்று வைகோவுக்கும் விஜயகாந்துக்கும் இன்று கமலஹாசனுக்கும் விஜய்க்கும் அளித்த ஆதரவைக் கூட சீமானுக்கு அளிக்கவில்லை இந்த கேடுகெட்ட தமிழினம்!
வடவரில் கொஞ்சம் அறிவுள்ள டெல்லி மக்கள் ஓரிரு ஆண்டுகளிலேயே பாஜக- காங்கிரஸ் இரண்டும் ஒன்றே என்று அறிந்து கேஜரிவால் கைகளில் ஆட்சியைக் கொடுத்து இன்று பஞ்சாபை அவர்கள் வென்று நல்லாட்சி நடத்தவில்லையா?!
ஒன்றில்லை ரெண்டில்லை 16 ஆண்டுகள் சீமானை சோதித்துவிட்டீர்கள்!
வேறொரு இனமென்றால் இந்நேரம் சீமானை வைத்து தனிநாடே வாங்கியிருக்கும்!
1971 இல் ஒரு 16 வயது சிறுவனை 13 ஆண்டுகள் சோதித்த ஈழத் தமிழினம் 1983 இல் அவரை தலைவனாக ஏற்றுக்கொண்டது!
சீமானும் அப்படியானவரே!
அவர் பாதையில் சறுக்கி இருக்கலாம் ஆனால் தடம் மாறவில்லை!
ஆனால் தமிழகத்தில் ஆண்கள் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் பெண்கள் ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும் ஓட்டு விபச்சாரம் செய்வதே அரசியல் என்று நினைக்கின்றனர்!
பலமுறை 'ஒருவேளை கருணாநிதியும் ஜெயலலிதாவும் கூட ஆரம்பத்தில் மக்களுக்கு நல்லது செய்ய வந்து இவர்களின் புத்தி தெரிந்து கெட்டவர்களாக மாறிவிட்டார்களோ!' என்று எண்ணத் தோன்றுகிறது!
நான் சீமானாக இருந்திருந்தால் இந்நேரம் ஒரு கருணாநிதியாக மாறியிருப்பேன்!
சீமான் சமரசம் செய்யாமல் இருப்பதால் தான் இங்கே தமிழ்தேசியம் உயிரோடு இருக்கிறது!
இல்லையென்றால் அவர் இடத்தில் வைகோ இருந்திருப்பார்!
அந்த பிழைப்பு பிழைக்க எங்களுக்கு மனம் வரவில்லை!
ஆனால் சமரசம் செய்து கொண்டவர்களை புத்திசாலிகள் என்று கருதும் சிலர் உண்டு
அந்த வகையில் 'இப்படி இருந்தால் வெல்ல முடியாது!
இது திமுகவுக்கே சாதகமாக முடியும்!'
என்றெல்லாம் 'நடைமுறை' யில் நின்று பேசும் அதிமேதாவிகள் நிதானமாக சிந்திக்கவும்!
முதலில் ஒரு சிந்தனை வலுவாக நிற்காமல் அது நடைமுறையை மாற்ற முடியாது!
அசாத்திய கனவுகள்தான் சாத்தியக் கூறுகளை மாற்றி அமைத்து நடைமுறையாக மாறுகின்றன!
மன்னராட்சி காலத்தில் மக்களாட்சியே பெரும் கனவுதான்!
சரி சித்தாந்தங்களை விடுவோம்! எளிமையாக புரியும்படி சொல்கிறேன்!
நீங்கள் சொல்வது போல திமுக அத்தனை பெரிய அரக்கன் என்றால் ஏன் மேற்குவங்க கம்யூனிஸ்ட்கள் போல தொடர்ந்து 30 ஆண்டுகள் வெல்ல முடிவதில்லை!
அடுத்த பெரிய கட்சி அதிமுக என்றால் ஏன் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் கூட ஆட்சியில் இல்லை?!
ஒரு தேர்தலில் அமோக வெற்றி அடுத்த தேர்தலில் படுதோல்வி என்று மாறி மாறி சந்திக்கிறார்களே அது யாரால்?!
என்னதான் பெரிய கட்சி, என்னதான் தொண்டர் பலம், என்னதான் கட்டமைப்பு, என்னதான் பணபலம் இருந்தாலும் சூழ்நிலை பொறுத்து தன் வாக்கை மாற்றிப்போடும் மக்களை விலைக்கு வாங்க முடியாது!
திமுக வின் வாக்கு வங்கி அப்படியே இருக்கும்!
அதிமுக வின் வாக்குவங்கியும் அப்படியே இருக்கும்!
இருபுறமும் சாராத மக்கள்தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றனர்.
இவர்கள் நாம் தமிழர் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு இருக்கின்றனர்.
இவர்களே சீமான் வாங்கிய 35 லட்சம் வாக்கு!
இவர்கள் நினைத்தால் அடுத்த தேர்தலிலேயே நாம் தமிழர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்!
சீமானின் இலக்கு இவர்கள்தான்!
சீமான் முன்வைக்கும் பெருங்கனவு மாநில ஆட்சி அதிகாரத்திற்கும் அப்பாற்பட்டது!
அவர் 10 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்து முழு சர்வாதிகாரியாக நடந்தால்தான் அவர் விரும்பும் மாற்றத்தில் கால்வாசியையாவது கொண்டுவர முடியும்!
அத்தகைய மனிதனை கேவலம் அதிமுக வுடன் கூட்டணி வைக்கவில்லை என்று கரித்து கொட்டுவது எத்தனை பெரிய மூடத்தனம்!
கட்சியே பிழைக்காது சின்னமே கிடைக்காது என்ற நிலையில் கூட உறுதியாக இருந்து அங்கீகாரத்தையும் சின்னத்தையும் பெற்றுவிட்டோம்!
தனித்து தன் கால்களில் தன்மானத்தோடு நிற்கும் எங்களை குறைசொல்லும் நீங்கள் யார்?!
கூட்டத்தோடு கோவிந்தா போடுவது போல எல்லாரும் எவனுக்கு வாக்களிக்கிறானோ அவனுக்கே வாக்களித்துவிட்டு ஏதோ முதலமைச்சரை தான் ஒருவனே கைப்பிடித்து அரியாசனத்தில் அமர்த்தியது போல ஒரு திமிரோடு திரிபவர்கள்!
சிலர் ஒருமுறை நாதக வுக்கு வாக்கு போட்டு அவர்கள் தோற்றதும் ஏதோ தன் அப்பன் தந்த சொத்து வீணாகிவிட்டது போல புலம்பல்!
நாதக சின்னத்தில் நோகாமல் ஒரு ஓட்டு குத்திய உங்களுக்கே அது வெல்லாத போது இவ்வளவு கோபம் வருகிறதே!
உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இறைக்கும் நாதக தம்பிகளுக்கு எப்படி இருக்கும்?!
குடும்ப மானம் வரை குதறப்பட்ட அண்ணனுக்கு எப்படி இருக்கும்?!
'நடைமுறை' நாயகர்களே!
அப்படியே யோசித்தாலும் எடப்பாடியார் என்ன பெரிய தமிழ்தேசிய நடவடிக்கை செய்தார்?!
ஜெயலலிதா வை சீமான் ஆதரித்த போது அதிமுக தலைமை எத்தனை உறுதியான நிலைப்பாட்டுடன் இருந்தது?!
மத்திய அரசு நடுநடுங்கும் படி செயல்பட்டாரே?!
எடப்பாடியின் நான்காண்டு ஆட்சி அத்தகையதா?!
சீமான் ஏன் அவருடன் சேரவேண்டும்?!
மராத்தான் ஓட தகுதியும் வலுவும் பொறுமையும் உள்ள ஒருவன் ஏன் ஸ்லோசைக்கிள் ஓட்டுபவனுடன் இணைய வேண்டும்?!
உங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பிடிக்கும் என்றால் ஆதரியுங்கள் ஆனால் அதுதான் தமிழ்தேசியம் என்றும் அதுதான் நடைமுறைச் சாத்தியம் என்றும் நாம் தமிழர் தம்பிகளுக்கு வகுப்பு எடுக்க வேண்டாம்!
டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், நீட் 7.5% இடவொதுக்கீடு, தமிழ்நாடு நாள் அறிவிப்பு என எடப்பாடியாரின் தமிழ்தேசிய நடவடிக்கைகள் என்று நீங்கள் தரும் பட்டியலை விட கொஞ்சம் பெரிய பட்டியல் திமுக விடமும் உள்ளது!
முதன்மைக் கொள்கை என்ன?!
தமிழினத்தின் தலையாய பிரச்சனைகளான காவிரி நதிநீர் மற்றும் முல்லைப் பெரியாறு நீர் பங்கீடு, மீனவர் தாக்குதல், கல்வி மத்திய அரசு பட்டியலில் இருப்பது அதனால் நீட் ,வரிக்கொள்ளை, சாராய விற்பனை, மலைகள் அழிப்பு என ஒவ்வொரு தமிழனின் மூச்சையும் ரத்தத்தையும் பாதிக்கும் பிரச்சனைகளுக்கு அதிமுக முன்வைக்கும் தீர்வு என்ன?
மாநிலம் அதிகாரம் தாண்டிய நடவடிக்கை என்ன?!
'திமுக வை விட பரவாயில்லை' என்பதைத் தவிர அதிமுக வின் தகுதி என்ன?!
அப்படியே பார்த்தாலும் திமுக, அதிமுக வை விட நாதக பரவாயில்லை என்று எங்கள் பக்கம்தானே வரவேண்டும்!
நீங்கள் ஏற்காவிட்டாலும் எங்கள் தகுதி தமிழ்நாட்டை ஆள்வதற்கும் மேலானது! இந்திய இனங்களுக்கே முன்மாதிரி கட்சி நாங்கள்!
எங்கள் இலக்கு மிகப் பெரியது!
'வெற்றி அல்லது வீர மரணம்' என்று கூட இல்லை 'வீர மரணம் அல்லது வெற்றி' என்கிற நிலைப்பாடு தான் தம்பிகளின் நிலைப்பாடு!
சீமான் இதிலிருந்து பின்வாங்கினாலும் தம்பிகள் பின்வாங்க விடமாட்டார்கள்!
அத்தனை உறுதியும் பொறுமையும் இல்லாதவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி எதிரிக் கட்சிகளிடமே தஞ்சம் புகுந்துவிட்டனர்.
இதில் அதிமுக விடம் தஞ்சமடைந்தவர்கள் மட்டும் புனிதமாகி விடுவார்களா?!
திராவிடம் இரட்டைத் தலை பாம்பு ! திமுக அதிமுக இரண்டிற்கும் தலைகள் வேறு வேறாக தெரியலாம் ஆனால் உடல் ஒன்றுதான்!
இங்கே இருப்பவன் அங்கே போவான்!
அங்கே இருப்பவன் இங்கே வருவான்!
அங்கிருந்து பணம் இங்கு வரும்!
இங்கிருந்து ஒப்பந்தங்கள் அங்கு போகும்!
இவன் துப்பாக்கிச்சூடு நடத்துவான் அவன் தண்டனை வழங்காமல் பதவியுயர்வு வழங்குவான்!
இவன் நீட் கொண்டுவர கையெழுத்து போடுவான்! அவன் அதை நடைமுறைப் படுத்துவான்!
இவன் சாராயம் தயாரிப்பான் அவன் அதை விற்பான்!
தமிழகத்தின் அத்தனை பிரச்சனைகளிலும் இருவரும் பங்காளிகள்!
இவர்களிடமா நாங்கள் மண்டியிட வேண்டும்?!
ஆதித்தனார் முதல் தவாக வேல்முருகன் வரை செய்து தோற்ற ஒரு அரசியல் நகர்வையே சீமானையும் செய்யச் சொன்னால் எப்படி செய்வார்?!
திருந்த வேண்டியது மக்கள் தான்!
நாம் தமிழர் ஆட்சியில் அமராத ஒவ்வொரு நாளும் தமிழினத்துக்கு இழப்புதான்!
ஒன்று சீமானின் நல்லாட்சி அல்லது பீகார் போலக் கூட இல்லை சோமாலியா போல ஆகும் தமிழ்நாடு!
இனத்தின் கடைசி வாய்ப்பு சீமான்!
மங்குனி மக்களே! சீக்கிரமாகத் திருந்தித் தொலையுங்கள்!
ஒரு முதலாளி, பரம்பரைத் திருடன் என்று தெரிந்த ஒருவனை வேலைக்கு வைப்பாரா அல்லது நல்லவனா கெட்டவனா என்று தெரியாத ஒரு புது ஆளை வேலைக்கு வைப்பாரா?!
அப்படி திமுக அதிமுக ஊழல் கட்சிகள் என்று தெரிந்த பின்னும் அவர்களுக்கே வாக்களிக்காமல் சீமான் திருடனா இல்லையா என்று வாய்ப்பு வழங்கி முடிவு செய்யலாமே?!
பிற இனங்கள் நல்லாட்சியே கொடுத்தாலும் தொடர்ந்து ஒருவனை அதிகாரத்தில் நீடிக்கவிடுவதில்லை இதைவிட நல்லவன் ஒருவன் இருப்பானோ என்று புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவர்.
காட்டாட்சி வழங்கி அதிமுக கேடுகெட்ட ஆட்சி வழங்கிய திமுக இவர்களையே மாறி மாறி தேர்ந்தெடுப்பது ஏன்?!
தமிழர்கள் என்ன இவர்களுக்கு அடிமை சாசனம் கையெழுத்திட்டு வழங்கியுள்ளோமா?!
இந்த தேர்தலில் தோல்வி என்றால் சீமான் தாங்கிக்கொள்வாரா தெரியாது ஆனால் அடுத்த தேர்தலிலும் தோல்வி என்றால் சீமானால் சத்தியமாகத் தாங்க முடியாது!
ஒரு தலைவன் உயிரோடு இருக்கும்போது ஏறெடுத்து கூட பார்க்காமல் அவன் செத்த பிறகு சாமியாக்கி கும்பிடுவது தான் நமக்கு வழக்கம்!
இந்த முறையும் அதுதான் உங்கள் முடிவா?!
சீமான் ஸ்டைலில் சொல்கிறேன்!
மக்களே! காதல் வந்தால் சொல்லி அனுப்புங்கள்!
உயிரோடு இருந்தால் சீமான் வருவான்!
No comments:
Post a Comment