Thursday, 28 August 2025

அடகுக்கடை விளம்பரம்

 அடகுக்கடை விளம்பரம்

 அவன் பீரோவைத் திறந்து எதையோ அவசரமாகத் தேடிக் கொண்டிருந்தான்.
 அவள் பின்னாள் வந்து நின்று "நா என்ன தேடுறேன்?" என்று கேட்டாள்.
 அவன் அரைநொடி மௌனத்திற்குப் பிறகு "ஒண்ணுமில்ல! அது வந்து..." என்று இழுக்க 
 அவள் அருகே வந்து பீரோவுக்குள் கைவிட்டு ஒரு பத்திரத்தை எடுத்து காட்டி "இதை தானே தேடுறேன்?"
 அவன் தலைகுனிந்து நின்றான்.
 "என் பேர்ல இருக்குறதே இந்த வீடு ஒண்ணுதான்! அதுவும் நா கஷ்டப்பபட்டு கட்டினது! ஈயெம்மை கூட முடியல! அப்படி என்ன அவசரம் எனக்கு?!"
 "லோன் கிடைக்கல தங்கம்! கடைசி நேரத்துல ரிஜெக்ட் ஆயிருச்சு!" என்ற படி அவள் கழுத்தைப் பார்த்தான்
 ரெட்டை வடம் மயில் வில்லை பொறித்த தங்க சங்கிலி ஜன்னல் வழியே வந்த சூரிய ஒளிக் கீற்று பட்டு மின்னிக் கொண்டிருந்தது.
 "என் ப்ரென்டு சரவணா கிட்ட கேக்கலாம்ல?!"
"அவன் ஒரு வாரமாவது டைம் கேக்குறான்!"
 "ஒரு வாரம் கழிச்சு பணம் போட முடியாதா?!"
"இல்ல இன்னைக்கே போட்டாகணும்! இல்லைனா உன் தொழில் அவ்வளவுதான்! நீ வாக்கு வேற குடுத்துட்ட!"
அவள் அமைதியாக நின்றாள்!
 "ஒரு வாரம் இதை நம்ம காசி மாமா கிட்ட வச்சி பணம் வாங்கி சமாளிச்சு அப்பறம் கண்டிப்பா மீட்டுடலாம்"
 "சரி! என் இஷ்டம்!" என்று சொல்லிவிட்டு டக்கென்று திரும்பி சென்றாள்.
 அவன் உடைகளை உடுத்திக் கொண்டு பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளிய வந்து வாசலில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தான்!
 "மாமா...! ரொம்ப அவசரம்தான் ஆனா வட்டி ரொம்ப  அதிகமா இருக்கே! ஒரு வாரத்துல மீட்டுருவேன்! கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க மாமா!"
 அவள் வாசல் பக்கம் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்!
 அவன் உறைந்து போய் வாசல் திண்டு மேல் உட்கார்ந்தான்!
 தலையை பிடித்துக் கொண்டான்.
 
 "செல்வீ....!" அவள் உள்ளே இருந்து கூப்பிட்டாள்!
அவன் சற்றே கலங்கியிருந்த கண்களை துடைத்து விட்டு உள்ளே வந்தான்! 
"என்ன தங்கம்?!"
 கையில் ஒரு பெட்டியைக் கொடுத்தாள்!
திறந்து பார்த்தான்! அதில் அந்த ரெட்டைவட சங்கிலி இருந்தது.
 அவள் கழுத்தைப் பார்த்தான்.
மெல்லிய நூல் போன்ற தாலி சங்கிலி மட்டும் கிடந்தது.
 "உன் கிட்ட கேட்ருக்கலாமே?! நீ இருக்கும்போது நான் கண்டவங்க கிட்ட  கெஞ்சுறேன்?!" என்று கொஞ்சம் கோபமாக கேட்டாள்.
 "எங்கிட்ட இருக்கிறதே இது மட்டும்தானே?! அடுத்த மாசம் எங்க வீட்டுல கல்யாணம் வருது! நா பிறந்த வீட்டுல இப்டி வெறுங்கழுத்தா போய் நின்னா உன்ன பத்தி என்ன நினைப்பாங்க?!"
 அவள் கழுத்தை தடவிப் பார்த்தான்.
அவள் அவனுடைய இரு கைகளையும் பிடித்து விரல்களைக் கோர்த்து மாலை போல கழுத்தில் போட்டுக்கொண்டாள்! மார்பில் உரசிக் கிடந்த கைகளைப் பிடித்து மார்போடு அழுத்தியபடி அவன் கண்களை ஊடுறுவிப் பார்த்து சொன்னாள்  "நான் தான் உன்னோட உண்மையான தங்கம்!".
 அப்படியே இழுத்து கண்ணோடு கண் ஒற்றினான்.
 அவள் கன்னத்தில் வழிந்த நீரில் இரண்டு கண்ணீர் கலந்திருந்தது. 

 

 

Friday, 8 August 2025

வடவரில் முஸ்லிம் எவ்வளவு

வடவரில் முஸ்லிம் எவ்வளவு

தமிழகத்தில் இருக்கும் ஹிந்தியரில் முக்கால்வாசிப் பேர் சரியான நிறுவனப் பணிகளில் முறைப்படி பணிபுரிபவர்கள் அல்லர்.
 இவர்களில் கணிசமானோர் முஸ்லிம்கள்! 

 இருக்கும் புள்ளிவிபரங்களை அலசுவோம்
 திருப்பூர், சென்னை போன்ற நகரங்களில் முறைப்படி வேலைக்கு அமர்த்தப்பட்ட வடவர்களின் புள்ளிவிபரம் த.நா. தொழிலாளர் நலத்துறையிடம் உள்ளது.
 அவர்களது எண்ணிக்கையில் முஸ்லிம் எண்ணிக்கையை கண்டறிய அவர்களது பூர்வீக மாநிலத்தில் எத்தனை சதவீதம் முஸ்லிம்கள் என்று தெரிந்தால் கணிக்கலாம்!

 உதாரணமாக மேற்கு வங்கத்தில் ஏறத்தாழ 27% முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
 அங்கிருந்து இருந்து 100 பேர் தமிழகம் வந்தால் அதில் 27 பேர் முஸ்லிம் இருப்பார்கள் என்று கொள்கிறோம்.

அப்படி கணக்கிட்டால்

ஒரிசா 286500
முஸ்லிம் (2.17%) 6217

பீகார் 247016 
முஸ்லிம் (16.87%) 41671

ஜார்கண்ட் 190518 
முஸ்லிம் (14.53%) 27681

மே.வங்கம் 184960 
முஸ்லிம் (27.01%) 49940

அஸ்ஸாம் 92105 
முஸ்லிம் (14.22%) 13097

உ.பி 89462
முஸ்லிம் (19.26%) 17230

மொத்தம் 906745
முஸ்லிம் மொத்தம் 155836
அதாவது 17%  

 இந்த சரியான புள்ளிவிபரப்படியே 9 லட்சம் பேர்!
 அதில் முஸ்லிம்கள் ஒன்றரை லட்சம் பேர்!
ஆனால் உண்மை இதைவிட பல மடங்கு அதிகம்! பெ.மணியரசன் அவர்களது புள்ளிவிபரப்படி தமிழக மக்கட்தொகை அதிகரிப்பையும் குழந்தை பிறப்பு விகிதத்தையும் வைத்து பார்த்தால் ஒரு கோடி பேர் (தமிழகத்தில் பிறக்காத மக்கள்) நுழைந்திருக்கின்றனர்.

 இதிலும் முஸ்லிம்கள் (இருக்கவேண்டிய) 17% ஐ விட மிக மிக அதிகம்!

 பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வடயிந்தியா முழுக்க முஸ்லிம்களுக்கு எதிராக பொதுமக்கள் இயங்குகிறார்கள்! 
 வடக்கே ஒரு முஸ்லிம் பிறப்பிலிருந்து இறப்பு வரை பல தடைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது!
 ஏற்கனவே இந்திய அளவில் sc மக்களை விட முஸ்லிம் மக்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர்!
 இதனால் குற்றச் செயல்களிலும் அவர்களே அதிகமாக உள்ளனர்!
 வடக்கே பொதுமக்கள் முஸ்லிம்களை தீண்டத்தகாதவராக பார்க்கின்றனர்! 
 ஆரம்ப கல்விக் கூடங்களில் ஆசிரியர்கள் பாகுபாடு!
 கல்லூரிகளில் சீனியர் மாணவர்கள் இழிவுபடுத்துவது!
அரசு நிறுவனங்களில் வேலை கிடைக்காமை!
 தொழில் செய்வோர் சக இந்து போட்டியாளர்களை எதிர்கொள்ள முடியாமை!
 அரசியலில் சரியான தலைவர்கள் இல்லாமை!
 தினசரி வாழ்க்கையில் ஹிந்துத்துவ ரவுடிகளை எதிர்கொள்வது!
 அரசு அதிகாரிகள் போலீஸ் என எல்லா அதிகாரிகளும் முஸ்லிம்கள் மீது வெறுப்பை கொட்டுவது! 
 ஊடகங்கள் தீவிரவாத முத்திரை குத்துவது!

இப்படி எல்லாவகையிலும் ஒடுக்கி ஒதுக்கி தள்ளப்பட்டு தமிழகம் வருகிறார்கள்!
 
  ஒரு காலத்தில் ஐரோப்பியர்கள் கடுமையான குற்றவாளிகளை (அவர்கள் வெள்ளையராக இருக்கும் பட்சத்தில் கொல்ல விருப்பமில்லாமல்) ஆஸ்திரேலியாவில் கொண்டுபோய் விட்டுவிடுவார்களாம்! 
 அதாவது உலகத்தை விட்டே ஒதுக்கிவைப்பது!
 அப்படித்தான் இங்கே வடக்கத்தி முஸ்லிம்கள் வந்து சேர்கின்றனர்.
 இவர்களுக்கு அடுத்து வந்துசேர்வது வடக்கத்தி sc மக்கள்!
 இப்படி வருகிற வடவரில் பெரும்பாலோர் பாஜக வுக்கு வாக்களிக்க மாட்டார்கள்! 
 அப்படி இருக்க இவர்களில் 6.5 லட்சம் பேரை ('சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்' மூலம்) தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கவுள்ளனர்.
 
 அதாவது வடவர் வருகையில் தமிழக பாஜக வுக்கு தேர்தலில் பெரிய லாபம் ஒன்றும் இல்லை! 

 இருந்தாலும் வருகின்ற சிலரில் தமக்கு வாக்களிப்பார்கள் என்கிற எச்சை புத்தியில் இதை ஆதரிக்கிறார்கள்! 

 திமுகவும் இதற்கு உடந்தை!
இத்தனை நாள் பிராமணரைக் காட்டி ஆரியம் திராவிடம் என்று ஓட்டியாயிற்று!
 இனி இவர்களைக் காட்டி வடவன்- தென்னிந்தியன் என்று ஓட்ட வேண்டியதுதான் அவர்கள் வேலை!

 நான் முன்பே கூறியதுபோல வடவர் போரினாலோ பஞ்சத்தாலோ அல்லது நல்ல வாய்ப்புகளை அடையவோ கூட இங்கே வருவதில்லை!
 அப்படி வேறுவழியில்லாமல் இங்கே வந்தால் அவர்களை அரவணைக்கலாம்! அதுவும் நிலமை சரியாகும் குறிப்பிட்ட காலம் வரை!
 ஆனால் வடவர்கள் இங்கே வருவது தமது அரசியலில் அடைந்த படுதோல்வியின் காரணமாகத்தான்!
 எல்லா வளங்களும் இருந்தும் தன் தாய்நிலத்தில் தன் இன ஆதிக்கவாதிகளை எதிர்க்கத் துப்பில்லாமல் இங்கே ஓடி வருகின்றனர்.

 இவர்களை தமிழகத்தில் இருக்கும் எல்லா இனத்து முதலாளிகளும் பயன்படுத்திக் கொள்கின்றனர்!
 இதனால் தமிழினத் தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர்!
 இதனால் மோதல் நிலை உருவாகிறது!
ஏற்கனவே பின்தங்கிய நிலையில் உள்ள வடவர்கள் இங்கே தமது குடும்ப-சமுதாய கண்கானிப்பும் இல்லாமல் சுதந்திரமாக திரிவதால் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அடிக்கடி நடக்கிறது!போலிஸ் மண்டையை உடைத்ததும் 9 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் நடந்தது!
 அப்படியே முதலாளிகளுக்கும் சரியான நிரந்தரமான தொழிலாளர்கள் இல்லாமல் எல்லா தொழில்களிலும் தரம் குறைகிறது!
 (தமிழினத் தொழிலாளிகள் திராவிட ஆட்சியில் குடிக்கு அடிமையாக்கப்பட்டு கிடப்பதும் ஒரு காரணம்!)

 ஆகவே இத்தகைய குடியேற்றத்தை தடுப்பதுதான் அனைவருக்குமே நல்லது! 
அரசு தடுக்காவிட்டால் பொதுமக்கள் தடுக்க வேண்டும்!
வடவரை எந்த இடத்திலும் சிறிதளவேனும் ஆதரிப்பது கூடாது!
நமக்குள் இருக்கும் மனிதநேயம் தடுத்தாலும் இதைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்! 
 
 அவரவர் மண்ணில் அந்தந்த மண்ணின் மைந்தர் தத்தமது தேசியவாத அரசியலை வளர்த்தெடுத்து தன்னிறைவு அடைவதே நிரந்தர தீர்வு!