Monday, 20 October 2025

தமிழருக்குத் தனிநாடு தேவையென்ற ஆதித்தனார் 1965 இல் ஆதித்தனார் தமிழ்நாடு தனிநாடு ஆவதன் அவசியம் பற்றி எழுதும் போது டெல்லி அதுவரை அதாவது 1947 லிருந்து 18 ஆண்டுகளாக தமிழகத்தைச் சுரண்டிய தொகை ரூ.2460 கோடி என்று கணக்கிட்டுக் கூறியுள்ளார். மத்திய அரசு வாங்கும் வரி வடக்கே போய் அதன் பங்கு வடக்கிலேயே பெரும்பகுதி செலவாகிவிடுகிறது. எனவே இது அல்ல பேரரசர்களுக்கு பயந்து குறுநில மன்னர்கள் கட்டும் கப்பம் போன்றது என்றும் கூறியுள்ளார். இதில் ஆச்சரியமான விடயம் ரூபாய்த் தாள்கள் பற்றி அவர் கூறிய கருத்து. அதாவது தமிழ்நாட்டில் எவ்வளவு காகித ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளனவோ அதே அளவு மதிப்புள்ள பொருட்களை டெல்லி சுரண்டி விட்டு அதற்குப் பதில் வெறும் காகிதத்தை ரூபாய் நோட்டாக தந்து ஏமாற்றிவிட்டதாக கூறுகிறார். 1965 இல் 2460 கோடி மிகப்பெரிய தொகை!இதற்குப் பிறகு இதே நிலை நீடித்தால் ஆண்டுக்கு 120 கோடி நாம் நஷ்டக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். அப்போதே ஆண்டுக்கு 2500 பேர் தற்கொலை செய்துகொள்வதைக் கவலையோடு குறிப்பிட்டு அதற்கு காரணம் வறுமை என்கிறார். மத்திய அரசு திட்டமிட்டு மக்கட்தொகை குறைப்பு நடவடிக்கைகளை தமிழகத்தில் புகுத்தி தமிழர் எண்ணிக்கையை இன்று பெருமளவு குறைத்துவிட்டது. ஆனால் வடவர்களோ பல மடங்கு பெருகிவிட்டனர். இதை அன்றே எதிர்த்த ஆதித்தனார் மக்கட்தொகை குறைப்பு என்பது செருப்பு அளவுக்கு காலை வெட்டுவது என்றாகும் என கூறியுள்ளார். அன்று தமிழ்நாட்டை விட சிறிய 106 நாடுகள் உலகத்தில் உள்ள போது தமிழ்நாடு ஏன் தனிநாடு ஆக முடியாது என்று கேட்கிறார். அந்த 105 நாடுகளின் பட்டியலையும் மக்கட்தொகையையும் கூட பட்டியலிட்டார். தமிழருக்கு தனி அரசு இருந்திருந்தால் 5கோடி தமிழர்களை 35 லட்சம் சிங்களவர்கள் ஏளனமாக நினைப்பார்களா?! கள்ளத்தோணி என்று கூறி விரட்டி அடிப்பார்களா என்று கேட்கிறார். தமிழகமும் ஈழமும் ஒன்றாக இணைய வேண்டும் என்று 1942 இலேயே 'தமிழ் ராஜ்யம்' எனும் நூல் எழுதி அதில் தமிழர் வாழும் பகுதிகளை குறித்து வரைபடம் வெளியிட்டார் ஆதித்தனார். அவரது வார்த்தைகளில் கூறினால்..."தமிழ் மக்கள் சிதறுண்டு கிடக்கும் நிலை நீங்கி ஒரே நாடாக ஒரே கொடையின் கீழ் தமிழ் இனம் வாழ வேண்டும்! பாண்டிச்சேரியிலும் ஈழத்திலும் சென்னை ராஜ்யத்திலும் சிதறுண்டு தனித்தனியாக வாழ்வதால் தமிழ் இனம் வலுவற்று கிடக்கிறது! இந்தப் பகுதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சுதந்திர தமிழ்நாடு அமைத்துக் கொண்டு வல்லரசாக திகழ வேண்டும் என்பது தமிழ் இனத்தின் நியாயமான ஆசை! தமிழகத்தில் இருக்கிற 500 லட்சம் தமிழர்களும் இலங்கையில் இருக்கின்ற 35 இலட்சம் தமிழர்களும் ஒன்று சேர வேண்டும்! இந்திய தேசத்தை துண்டு போடுவது துரோகம் என்பதாக சொல்பவர்கள் தமிழ்நாடு துண்டுபட்டு கிடக்கிறதே அது தமிழர்களுக்கு செய்த துரோகம் இல்லையா?! பீர்மேடு, தேவிகுளம், நெய்யாற்றின் கரை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டில் இருந்து பிரிக்கப்பட்டு மலையாளிகள் கையில் சிக்கி கிடக்கின்றனவே!? வட எல்லையில் வேங்கடம் வரையில் உள்ள தமிழ் பகுதிகள் ஆந்திராவில் ஆட்சியில் கிடைக்கின்றனவே?! பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்கள் டெல்லியின் கண்காணிப்பில் இருக்கின்றனவே?! 18 மைல் அகலம் உள்ள ஒரு சிறிய நீர்ப்பகுதிக்கு அப்பால் வட இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அதுவும் தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான்! அது தாயகத்தில் இருந்து பிரித்து கிடக்கிறதே?! இந்தப் பகுதிகள் எல்லாம் தமிழ்நாட்டுடன் சேர வேண்டாமா?! ஆகையால் தமிழ்நாடு ஒன்று சேர வேண்டும் என்று சொல்வது துரோகம் ஆகாது! " என்று தெளிவாகவே எழுதியிருக்கிறார். "தமிழ்நாடு வறண்ட நாடு ஆகையால் அது சுதந்திர நாடாக இருக்க தகுதியற்றது" என்று சட்டமன்ற உறுப்பினர் குழந்தை அம்மாள் ஒரு முறை பேசினார். "தமிழ்நாட்டில் நீர் வளம் நிலவலம் இல்லை" என்று தினமணி பத்திரிக்கை தலையங்கம் எழுதியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆதித்தனார் "தமிழ்நாட்டில் பாலாறு போன்ற ஆறுகளில் தண்ணீர் ஓடாமல் இருப்பதற்கு காரணம் மைசூர் நாட்டில் அணை கட்டி தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்வதே. இப்போது தமிழ்நாடு டெல்லியின் கீழ் இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது. தமிழ்நாடு டெல்லியின் படியில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடு ஆனால் தண்ணீர் விடும்படி உரிமையுடன் கேட்க முடியும்.ஏனென்றால் சுதந்திர நாடுகளுக்கு தண்ணீர் உரிமை உண்டு. மேலும் மலையாளத்தில் ஓடுகின்ற சோலை ஆறு பரம்பிக்குளம் ஆகிய ஆறுகளின் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு பயன்படுத்த செய்யும் பணியை சுதந்திர தமிழர்கள் செய்ய முடியும்.மேலும் ஆறு மட்டுமே ஒரு நாட்டின் வளத்தை நிச்சயிப்பதாக சொல்ல முடியாது!" என்று எழுதியிருக்கிறார். மேலும் காவிரி ஆறு பற்றி அவர் எழுதும்போது "காவிரி ஆற்றின் ஒரு கிளை கன்னடர் நாடு வழியாக அதாவது மைசூர் மாநிலத்தின் வழியாக ஓடி வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். காவிரி ஆற்றுத் தண்ணீர் முழுவதும் மைசூரில் இருந்து வருகிறது என்று சிலர் சொல்வது மிகைப்படுத்தி கூறுவது ஆகும்.இதை காட்டி தமிழ்நாடு தனிநாடாக இயங்க முடியாது என்று சொல்வது நியாயமான காரணம் ஆகாது. பிரம்மபுத்திரா என்ற ஆறு இந்தியா, சீனா வழியாக 5000 மைல் ஓடி பின்னர் பாகிஸ்தானில் ஓடுகிறது. இதைப் போலவே ஐரோப்பாவில் டானியூப் என்ற நதி 6 நாடுகளை தொடுகிறது. பொதுவாக பார்த்தால் உலகில் ஆறுகளின் காரணமாக நாடுகளிடையே சண்டை சச்சரவு ஏற்படுவதில்லை. அதற்கு விதிகள் இருக்கின்றன. விதிகளை மீறினால் ஐக்கிய நாடுகள் அவையிலும் உலக நாடுகளின் நீதிமன்றத்திலும் தீர்த்துக் கொள்ளலாம். ஆகவே தமிழ்நாடு தனி நாடாக இயங்கினால் காவிரி ஆற்று தண்ணீரை இழந்து விடுவோம் என்பது வீண் புரளி. தண்ணீரை இழக்க மாட்டோம் என்பதோடு இழந்திருக்கும் தண்ணீர் உரிமைகளை மீண்டும் பெறுவோம்".அன்றும் சிறுபான்மை என்கிற சொல் அரசியலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது இதை ஆதித்த நாள் வேறு பார்வையில் பார்க்கிறார். "இலங்கையில் 65 லட்சம் சிங்களவர்களும் 35 லட்சம் தமிழர்களும் வாழ்கிறார்கள். சிங்களவர் பெரும்பான்மையாக சட்டசபை க்கு வருகிறார்கள் அதனால் சிங்களவர் ஆதிக்கத்தில் ஆட்சி அமைய நேரிடுகிறது. தாய்த் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும் நான்கரை கோடி பேர் இருக்கின்றனர். ஆனால் 38 கோடி பேர் தமிழர் அல்லாத பிறமொழியினர் பெரும்பான்மையாக ஆட்சியில் இருக்கின்றனர்.டெல்லி பாராளுமன்றத்தில் 40 பேர் தமிழர்கள் என்றால் 460 பேர் தமிழர் அல்லாதவர்கள் இருக்கின்றனர். தமிழர் சிறுபான்மை என்றாவதால் எல்லாத் தொல்லைகளும் உண்டாகின்றன. தமிழர்கள் தனியாக பிரிந்தால் மட்டுமே தமிழர்கள் பெரும்பான்மை என்ற நிலையை அடைய முடியும்! பலர் சொல்வது போல கன்னடர்கள் தெலுங்கர்கள் மலையாளிகள் உடன் தமிழர் சேர்ந்து திராவிடம் என்ற அமைப்பை ஏற்படுத்தினாலும் நான்கரை கோடி பேர் தமிழர்கள் இருப்பர் ஆனால் 10 கோடி பேர் தமிழர் அல்லாதவர்கள் இருப்பர். அப்போதும் சிறுபான்மையாகத் தான் தமிழர்கள் இருப்பார்கள். தொல்லைகள் நீடிக்க தான் செய்யும்.சிறுபான்மை நிலை ஒழிந்தால் இனம் வாழும் என்பதற்கு எடுத்துக்காட்டாக யூதர்களின் வரலாற்றை சொல்லலாம். பல நாடுகளில் யூதர்கள் சிறுபான்மையாக இருந்தார்கள் எல்லா நாடுகளிலும் அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு அளவு கிடையாது எல்லா நாடுகளாலும் யூதர்கள் விரட்டப்பட்டு கடைசியில் சிதறிக்கிடந்த 8 லட்சம் யூதர்கள் 1948 ஆம் ஆண்டு அரேபிய பாலைவனத்தில் ஒன்று சேர்ந்து இஸ்ரேல் என்ற சுதந்திர தனி நாட்டை அமைத்தார்கள் அதன்பிறகு அவர்களுடைய தொல்லைகள் நீங்கின. தமிழ்நாடு அதை விட 30 மடங்கு பெரியது" என்று எழுதும்போது ஈழத் தமிழர் துயரத்தையும் எழுதியுள்ளார்."1958 ஏப்ரல் மே மாதங்களில் தமிழர்களில் இலங்கையில் சிங்கள வெறியர்களின் கொலை கொள்ளை தீ வைத்தல் சூறையாடுதல் முதலிய கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள் 100 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் தமிழர்கள் வீடுகள் பொருட்கள் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சேதமாக்கப்பட்டன பஞ்சாப் படுகொலை விட இது 10 மடங்கு பயங்கரமானது என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். 1961 பிப்ரவரி முதல் இலங்கையில் தமிழர்கள் ராணுவ ஆட்சியின் கீழ் சிக்கி சொல்ல முடியாத கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர் அண்மை காலம் வரை தமிழ் தலைவர்கள் சிறையில் இருந்தனர் இன்று தமிழுக்கு அங்கு எவ்வித உரிமையும் இல்லை தமிழர் வாழ் பகுதிகளில் சிங்களவர்களை கொடியேற்றி தமிழர்களின் தனித்தன்மையை அளிக்க சிங்கள அரசு முனைகிறது" மேலும் அவர் தமிழின விடுதலை பற்றி கூறுகையில் "5கோடி தமிழ் மக்கள் ஓர் இனம் என்பதை உணர்ந்து தமது அடிமை தளையை அறுத்து எறிவது என்று வீறிட்டு எழுந்தால் அதை எதிர்த்து உலகமே திரண்டாலும் தடுக்க முடியாது! டெல்லி அரசாங்கத்தாலும் முடியாது! அந்த அரசாங்கத்திற்கு உடந்தையாக இருக்கிற 38 கோடி வடவர்களாலும் முடியாது ! 30 லட்சம் அயர்லாந்து மக்களின் சுதந்திர போராட்டத்தை தடுப்பதற்கு அவர்களைப் போல் 15 மடங்கு அதிக எண்ணிக்கை உள்ள ஆங்கிலேயர்களால் முடியாமல் போய்விட்டது!" என்று கூறுகிறார். ஆதித்தனார் தனிநாடு கொள்கையுடன் 'தமிழ் ராஜ்ய கூட்டணி' அமைத்து அண்ணாதுரைக்கு முன்பே காங்கிரசை தேர்தலில் வென்றார். ஆனால் மத்திய அரசு ஆளுநரை வைத்து விளையாடி அவரை நியாயப்படி முதலமைச்சர் ஆவதைத் தடுத்தது என்பது வரலாறு! நன்றி: ஆதித்தனார் எழுதிய 'தமிழப் பேரரசு' நூல்

தமிழருக்குத் தனிநாடு தேவையென்ற ஆதித்தனார்

 1965 இல் ஆதித்தனார் தமிழ்நாடு தனிநாடு ஆவதன் அவசியம் பற்றி எழுதும் போது டெல்லி அதுவரை அதாவது 1947 லிருந்து 18 ஆண்டுகளாக தமிழகத்தைச் சுரண்டிய தொகை ரூ.2460 கோடி என்று கணக்கிட்டுக் கூறியுள்ளார்.
 மத்திய அரசு வாங்கும் வரி வடக்கே போய் அதன் பங்கு வடக்கிலேயே பெரும்பகுதி செலவாகிவிடுகிறது.
 எனவே இது அல்ல பேரரசர்களுக்கு பயந்து குறுநில மன்னர்கள் கட்டும் கப்பம் போன்றது என்றும் கூறியுள்ளார்.
 இதில் ஆச்சரியமான விடயம் ரூபாய்த் தாள்கள் பற்றி அவர் கூறிய கருத்து.
 அதாவது தமிழ்நாட்டில் எவ்வளவு காகித ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளனவோ அதே அளவு மதிப்புள்ள பொருட்களை டெல்லி சுரண்டி விட்டு அதற்குப் பதில் வெறும் காகிதத்தை ரூபாய் நோட்டாக தந்து ஏமாற்றிவிட்டதாக கூறுகிறார். 
 1965 இல் 2460 கோடி மிகப்பெரிய தொகை!
இதற்குப் பிறகு இதே நிலை நீடித்தால் ஆண்டுக்கு 120 கோடி நாம் நஷ்டக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். 
 அப்போதே ஆண்டுக்கு 2500 பேர் தற்கொலை செய்துகொள்வதைக் கவலையோடு குறிப்பிட்டு அதற்கு காரணம் வறுமை என்கிறார்.  
 மத்திய அரசு திட்டமிட்டு மக்கட்தொகை குறைப்பு நடவடிக்கைகளை தமிழகத்தில் புகுத்தி தமிழர் எண்ணிக்கையை இன்று பெருமளவு குறைத்துவிட்டது.
 ஆனால் வடவர்களோ பல மடங்கு பெருகிவிட்டனர். 
 இதை அன்றே எதிர்த்த ஆதித்தனார் மக்கட்தொகை குறைப்பு என்பது செருப்பு அளவுக்கு காலை வெட்டுவது என்றாகும் என கூறியுள்ளார்.
 அன்று தமிழ்நாட்டை விட சிறிய 106 நாடுகள் உலகத்தில் உள்ள போது தமிழ்நாடு ஏன் தனிநாடு ஆக முடியாது என்று கேட்கிறார். அந்த 105 நாடுகளின் பட்டியலையும் மக்கட்தொகையையும் கூட பட்டியலிட்டார்.
 தமிழருக்கு தனி அரசு இருந்திருந்தால் 5கோடி தமிழர்களை 35 லட்சம் சிங்களவர்கள் ஏளனமாக நினைப்பார்களா?! கள்ளத்தோணி என்று கூறி விரட்டி அடிப்பார்களா என்று கேட்கிறார்.
 தமிழகமும் ஈழமும் ஒன்றாக இணைய வேண்டும் என்று 1942 இலேயே 'தமிழ் ராஜ்யம்' எனும் நூல் எழுதி அதில் தமிழர் வாழும் பகுதிகளை குறித்து வரைபடம் வெளியிட்டார் ஆதித்தனார்.
 அவரது வார்த்தைகளில் கூறினால்...
"தமிழ் மக்கள் சிதறுண்டு கிடக்கும் நிலை நீங்கி ஒரே நாடாக ஒரே கொடையின் கீழ் தமிழ் இனம் வாழ வேண்டும்!
 பாண்டிச்சேரியிலும் ஈழத்திலும் சென்னை ராஜ்யத்திலும் சிதறுண்டு தனித்தனியாக வாழ்வதால் தமிழ் இனம் வலுவற்று கிடக்கிறது!
 இந்தப் பகுதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சுதந்திர தமிழ்நாடு அமைத்துக் கொண்டு வல்லரசாக திகழ வேண்டும் என்பது தமிழ் இனத்தின் நியாயமான ஆசை!
 தமிழகத்தில் இருக்கிற 500 லட்சம் தமிழர்களும் இலங்கையில் இருக்கின்ற 35 இலட்சம் தமிழர்களும் ஒன்று சேர வேண்டும்!
 இந்திய தேசத்தை துண்டு போடுவது துரோகம் என்பதாக சொல்பவர்கள் தமிழ்நாடு துண்டுபட்டு கிடக்கிறதே அது தமிழர்களுக்கு செய்த துரோகம் இல்லையா?! 
  பீர்மேடு, தேவிகுளம், நெய்யாற்றின் கரை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டில் இருந்து பிரிக்கப்பட்டு மலையாளிகள் கையில் சிக்கி கிடக்கின்றனவே!?
  வட எல்லையில் வேங்கடம் வரையில் உள்ள தமிழ் பகுதிகள் ஆந்திராவில் ஆட்சியில் கிடைக்கின்றனவே?!
 பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்கள் டெல்லியின் கண்காணிப்பில் இருக்கின்றனவே?!
 18 மைல் அகலம் உள்ள ஒரு சிறிய நீர்ப்பகுதிக்கு அப்பால் வட இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். 
அதுவும் தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான்!
 அது தாயகத்தில் இருந்து பிரித்து கிடக்கிறதே?!
 இந்தப் பகுதிகள் எல்லாம் தமிழ்நாட்டுடன் சேர வேண்டாமா?!
 ஆகையால் தமிழ்நாடு ஒன்று சேர வேண்டும் என்று சொல்வது துரோகம் ஆகாது! " என்று தெளிவாகவே எழுதியிருக்கிறார்.

 "தமிழ்நாடு வறண்ட நாடு ஆகையால் அது சுதந்திர நாடாக இருக்க தகுதியற்றது" என்று சட்டமன்ற உறுப்பினர் குழந்தை அம்மாள் ஒரு முறை பேசினார்.
 "தமிழ்நாட்டில் நீர் வளம் நிலவலம் இல்லை" என்று தினமணி பத்திரிக்கை தலையங்கம் எழுதியது.
 இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆதித்தனார் "தமிழ்நாட்டில் பாலாறு போன்ற ஆறுகளில் தண்ணீர் ஓடாமல் இருப்பதற்கு காரணம் மைசூர் நாட்டில் அணை கட்டி தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்வதே.
 இப்போது தமிழ்நாடு டெல்லியின் கீழ் இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது.
 தமிழ்நாடு டெல்லியின் படியில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடு ஆனால் தண்ணீர் விடும்படி உரிமையுடன் கேட்க முடியும்.
ஏனென்றால் சுதந்திர நாடுகளுக்கு தண்ணீர் உரிமை உண்டு. 
மேலும் மலையாளத்தில் ஓடுகின்ற சோலை ஆறு பரம்பிக்குளம் ஆகிய ஆறுகளின் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு பயன்படுத்த செய்யும் பணியை சுதந்திர தமிழர்கள் செய்ய முடியும்.
மேலும் ஆறு மட்டுமே ஒரு நாட்டின் வளத்தை நிச்சயிப்பதாக சொல்ல முடியாது!" என்று எழுதியிருக்கிறார்.
 மேலும் காவிரி ஆறு பற்றி அவர் எழுதும்போது "காவிரி ஆற்றின் ஒரு கிளை கன்னடர் நாடு வழியாக அதாவது மைசூர் மாநிலத்தின் வழியாக ஓடி வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.
 காவிரி ஆற்றுத் தண்ணீர் முழுவதும் மைசூரில் இருந்து வருகிறது என்று சிலர் சொல்வது மிகைப்படுத்தி கூறுவது ஆகும்.
இதை காட்டி தமிழ்நாடு தனிநாடாக இயங்க முடியாது என்று சொல்வது நியாயமான காரணம் ஆகாது. பிரம்மபுத்திரா என்ற ஆறு இந்தியா, சீனா வழியாக 5000 மைல் ஓடி பின்னர் பாகிஸ்தானில் ஓடுகிறது. இதைப் போலவே ஐரோப்பாவில் டானியூப் என்ற நதி 6 நாடுகளை தொடுகிறது.
 பொதுவாக பார்த்தால் உலகில் ஆறுகளின் காரணமாக நாடுகளிடையே சண்டை சச்சரவு ஏற்படுவதில்லை.
 அதற்கு விதிகள் இருக்கின்றன.
 விதிகளை மீறினால் ஐக்கிய நாடுகள் அவையிலும் உலக நாடுகளின் நீதிமன்றத்திலும் தீர்த்துக் கொள்ளலாம்.
 ஆகவே தமிழ்நாடு தனி நாடாக இயங்கினால் காவிரி ஆற்று தண்ணீரை இழந்து விடுவோம் என்பது வீண் புரளி. தண்ணீரை இழக்க மாட்டோம் என்பதோடு இழந்திருக்கும் தண்ணீர் உரிமைகளை மீண்டும் பெறுவோம்".

அன்றும் சிறுபான்மை என்கிற சொல் அரசியலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது இதை ஆதித்த நாள் வேறு பார்வையில் பார்க்கிறார்.
 "இலங்கையில் 65 லட்சம் சிங்களவர்களும் 35 லட்சம் தமிழர்களும் வாழ்கிறார்கள்.
 சிங்களவர் பெரும்பான்மையாக சட்டசபை க்கு வருகிறார்கள் அதனால் சிங்களவர் ஆதிக்கத்தில் ஆட்சி அமைய நேரிடுகிறது.
 தாய்த் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும் நான்கரை கோடி பேர் இருக்கின்றனர். ஆனால் 38 கோடி பேர் தமிழர் அல்லாத பிறமொழியினர் பெரும்பான்மையாக ஆட்சியில் இருக்கின்றனர்.
டெல்லி பாராளுமன்றத்தில் 40 பேர் தமிழர்கள் என்றால் 460 பேர் தமிழர் அல்லாதவர்கள் இருக்கின்றனர்.
 தமிழர் சிறுபான்மை என்றாவதால் எல்லாத் தொல்லைகளும் உண்டாகின்றன.
  தமிழர்கள் தனியாக பிரிந்தால் மட்டுமே தமிழர்கள் பெரும்பான்மை என்ற நிலையை அடைய முடியும்!
 பலர் சொல்வது போல கன்னடர்கள் தெலுங்கர்கள் மலையாளிகள் உடன் தமிழர் சேர்ந்து திராவிடம் என்ற அமைப்பை ஏற்படுத்தினாலும் நான்கரை கோடி பேர் தமிழர்கள் இருப்பர் ஆனால் 10 கோடி பேர் தமிழர் அல்லாதவர்கள் இருப்பர்.
 அப்போதும் சிறுபான்மையாகத் தான் தமிழர்கள் இருப்பார்கள். தொல்லைகள் நீடிக்க தான் செய்யும்.
சிறுபான்மை நிலை ஒழிந்தால் இனம் வாழும் என்பதற்கு எடுத்துக்காட்டாக யூதர்களின் வரலாற்றை சொல்லலாம்.
 பல நாடுகளில் யூதர்கள் சிறுபான்மையாக இருந்தார்கள் எல்லா நாடுகளிலும் அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு அளவு கிடையாது எல்லா நாடுகளாலும் யூதர்கள் விரட்டப்பட்டு கடைசியில் சிதறிக்கிடந்த 8 லட்சம் யூதர்கள் 1948 ஆம் ஆண்டு அரேபிய பாலைவனத்தில் ஒன்று சேர்ந்து இஸ்ரேல் என்ற சுதந்திர தனி நாட்டை அமைத்தார்கள் அதன்பிறகு அவர்களுடைய தொல்லைகள் நீங்கின.
 தமிழ்நாடு அதை விட 30 மடங்கு பெரியது" 
 என்று எழுதும்போது ஈழத் தமிழர் துயரத்தையும் எழுதியுள்ளார்.
"1958 ஏப்ரல் மே மாதங்களில் தமிழர்களில் இலங்கையில் சிங்கள வெறியர்களின் கொலை கொள்ளை தீ வைத்தல் சூறையாடுதல் முதலிய கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள் 100 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் தமிழர்கள் வீடுகள் பொருட்கள் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சேதமாக்கப்பட்டன பஞ்சாப் படுகொலை விட இது 10 மடங்கு பயங்கரமானது என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். 1961 பிப்ரவரி முதல் இலங்கையில் தமிழர்கள் ராணுவ ஆட்சியின் கீழ் சிக்கி சொல்ல முடியாத கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர் அண்மை காலம் வரை தமிழ் தலைவர்கள் சிறையில் இருந்தனர் இன்று தமிழுக்கு அங்கு எவ்வித உரிமையும் இல்லை தமிழர் வாழ் பகுதிகளில் சிங்களவர்களை கொடியேற்றி தமிழர்களின் தனித்தன்மையை அளிக்க சிங்கள அரசு முனைகிறது" 
 மேலும் அவர் தமிழின விடுதலை பற்றி கூறுகையில்
 "5கோடி தமிழ் மக்கள் ஓர் இனம் என்பதை உணர்ந்து தமது அடிமை தளையை அறுத்து எறிவது என்று வீறிட்டு எழுந்தால் அதை எதிர்த்து உலகமே திரண்டாலும் தடுக்க முடியாது! டெல்லி அரசாங்கத்தாலும் முடியாது! அந்த அரசாங்கத்திற்கு உடந்தையாக இருக்கிற 38 கோடி வடவர்களாலும் முடியாது ! 30 லட்சம் அயர்லாந்து மக்களின் சுதந்திர போராட்டத்தை தடுப்பதற்கு அவர்களைப் போல் 15 மடங்கு அதிக எண்ணிக்கை உள்ள ஆங்கிலேயர்களால் முடியாமல் போய்விட்டது!" என்று கூறுகிறார்.
 ஆதித்தனார் தனிநாடு கொள்கையுடன் 'தமிழ் ராஜ்ய கூட்டணி' அமைத்து அண்ணாதுரைக்கு முன்பே காங்கிரசை தேர்தலில் வென்றார்.
 ஆனால் மத்திய அரசு ஆளுநரை வைத்து விளையாடி அவரை நியாயப்படி முதலமைச்சர் ஆவதைத் தடுத்தது என்பது வரலாறு! 
நன்றி: ஆதித்தனார் எழுதிய 'தமிழப் பேரரசு' நூல் 

Saturday, 18 October 2025

வீரப்பனியம்

வீரப்பனியம்

 வீரப்பன் மறைந்து போனாலும் அவர் காட்டிய வழிமுறை மக்கள் மனதில் இருந்து மறையாது!
 படிப்பறிவு, பணபலம் என எதுவும் இல்லாத ஒரு சாதாரண காட்டு கிராமத்து மனிதன் தன் சொந்த பலத்தைத் திரட்டி அரசாங்கத்தை திருப்பி அடிக்க முடியும் என்று காட்டியவர் வீரப்பனார்!
 எந்த இயக்கமும் கட்சியும் அரசியலும் சித்தாந்தமும் இல்லாமலே கூட தனிமனிதனாகவே ஒரு அரசை ஆட்டிப் படைக்க முடியும் என்று காட்டியவர்! 
  தன் உடல், அறிவு, திறமை மட்டும் கொண்டு தனது குடும்பம், ஊர், நண்பர்கள், உறவினர்கள், சாதி, இனம் என படிப்படியாக மக்களை தனக்கு ஆதரவாகத் திரட்டி அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து அதிகார வர்க்கத்திற்கு வலிக்குமாறு திருப்பி அடித்த தனிமனித தத்துவம் தான் வீரப்பனியம்!
 தனியாள்ப் படை என மக்களையும் காட்டையும் காத்துநின்ற வீரப்பனாரை ஈன்ற இனம் என்பதில் பெருமை கொள்வோம்! 
 

Friday, 17 October 2025

சீமானை சோதிக்காதீர்கள்

 சீமானை சோதிக்காதீர்கள்

 சீமான் ஸ்டைல் அரசியலை புரிந்து கொள்ள முயல்வோம்!
சீமானிடம் இருப்பதெல்லாம் கொள்கைதான்! 
ஆனால் கொள்கையை வைத்தே பணபலமும் அதிகார வலுவும் கிளப்ப முடியாத சூறாவளியை அவரால் கிளப்ப முடியும்!
 அவருக்கு எப்போது தேவையோ அப்போது ஊடகத்தையும் மக்களின் கவனத்தையும் தன் மீது திருப்ப முடியும்!

 ஒரு தளபதி சூழ்நிலைக்கு தகுந்தபடி கனரக ஆயுதங்களை களத்தில் இறக்குவது போல அண்ணன் கொள்கைகளில் மாற்றம் அல்லது தீவிரம் என்று நிலைப்பாடு எடுப்பார்!
 இப்படித்தான் பாஜக வின் அடிப்படையைத் தகர்த்த 'முப்பாட்டன் முருகன்' நிலைப்பாடு!
 இப்படித்தான் புயலைக் கிளப்பிய 'ராஜீவ் காந்தியை கொன்றோம்' என்ற நிலைப்பாடு!
 இப்படித்தான் 'ஆடு மாடு மேய்த்தல் அரசுவேலை' நிலைப்பாடு!
 இப்படித்தான் 15 ஆண்டுகள் காத்திருந்து அடித்த 'ஈ.வே.ரா பிம்பம்' மீதான அடி!
இப்படித்தான் கள் இறக்கும் போராட்டம்! 
இப்படித்தான் மாடு, மலை, தண்ணீர் மாநாடு!

 கொள்கை மட்டுமல்ல சில வார்த்தைகளைப் போட்டு அதிர்வை கிளப்புவதும் உண்டு! 
இப்படித்தான் 'ஆமைக்கறி'...!
இப்படித்தான் 'ஏகே74'..!
இப்படித்தான் 'டேய் ஸ்டாலின்'..!
 இப்படித்தான் 'சாத்தானின் பிள்ளைகள்'..!
 இப்படித்தான் 'எம்ஜிஆர் சனியன்'...!
இப்படித்தான் 'டீவிக்க...! தலைவிதி'...!"
இப்படித்தான் 'அண்ணனை முறைச்சா அடிப்பேன்'..!

 இனி வரும் காலங்களிலும் அண்ணாயிசம், எம்ஜியாரிசம், திருமாயிசம், அம்பேத்கரிசம் என எல்லா இசங்களும் நொறுக்கப்படும்! 

 அண்ணனிடம் இருப்பதெல்லாம் உடலும் அறிவும் தான்!
அதாவது மக்களைப் பற்றிய ஆழமான புரிதலும் மணிக்கணக்காக பேசும் திறனும் சுற்றுப்பயணத்திலேயே இருக்கும் கடின உழைப்பும் கொள்கைகளின் பலம் பற்றிய புரிதலும்தான்!
 அதனால்தான் உயிர் போகும் அளவு ரிஸ்க் எடுக்கும் கதாநாயகன் போல 'தனித்து' என்கிற தற்கொலை முடிவில் உறுதியாக இருக்கிறார்!
 ஏனென்றால் அதுதான் அவரது அடையாளம்! 
அதுதான் அவர் அரசியலின் உயிர்நாடி!
 ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக கவலைக்கிடமான நிலையில் இருந்தபோது யாராவது எடப்பாடி பழனிச்சாமியிடம் திமுகவுடன் கூட்டணி அமைக்க கோரினார்களா?!
இரு கட்சிகளும் இணைந்தால் தமிழகத்தை யாராலும் அசைக்க முடியாதே?! 
 ஏன் அது மட்டும் நடக்கவே நடக்காது?!
ஏனென்றால் அதுதான் அவர்களின் அடையாளம்! 
சீமானின் அடையாளமும் அத்தகையதே! 

 
 ஒரு நொடி ஆகாது...  'மக்களாவது மண்ணாவது' என்று தூக்கியெறிந்து விட்டு அதிமுக வுடன் கூட்டணி போட்டு பதவி பணம் அதிகாரம் என கைப்பற்றி தன் குடும்பத்தையும் கட்சியின் மேல்மட்டத்தையும் வளப்படுத்தி கொள்ள ஒரு நொடி ஆகாது!
 அதன்பிறகும் கூட 50 ஆண்டுகள் அரசியல் செய்ய முடியும்!
 விசிக போல மானங்கெட்டு போகாமல் பாமக போல கௌரவமாக அமர்ந்து மிதமான அரசியல் செய்ய முடியும்!
 தமிழர் அல்லாதோருக்கு எதிராக சிவசேனா பாணி கலவர அரசியலைச் செய்ய முடியும்! 
 அல்லது 'கன்னட ரக்சின வேதிகே' போல அரசியலுக்கு வெளியே இருந்தே கூட அரசியலை ஆட்டுவிக்க முடியும்! 
 ஆனால் அண்ணனோ 'தலைகீழாகத்தான் குதிப்பேன்' என்கிறார்!
 எங்கள் இலக்கு ஆழமானது!
  முத்து எடுக்க தலைகுப்புற விழுந்து மூச்சை அடக்கித்தான் ஆக வேண்டும்.

 அண்ணன் இந்த இறுமாப்பாலேயே எல்லா ஆதரவையும் இழந்துவிட்டார்!
இன்று அண்ணனுக்கு ஆதரவாக இருப்பது மாற்றத்தை விரும்பும் தம்பிகள்! அவர்கள் திரட்டும் சிறிய அளவு நிதி! அதைவிட அண்ணனின் சர்வாதிகாரத்தை சகித்துக் கொள்ளும் தம்பிகளின் அசாத்திய பொறுமை! 
 எதிர்கட்சி ஆட்களையும் பாராமுகம் காட்டும் மக்களையும் மண்ணையும் மரத்தையும் கூட மரியாதையாக பேசும் அண்ணன் தம்பிகளை மட்டும்தான் 'இருந்தா இருடா பிசிறு! இல்லாட்டி போய்ட்டே இரு!' என்று எடுத்தெறிந்து பேசுவார்!
 அண்ணன் தவறு செய்யும் போது கேள்வி கேட்கும் உரிமை இருந்தாலும் நாங்கள் பலமுறை மௌனமாகவே கடந்து செல்கிறோம்!
அண்ணனின் இந்த அலட்சிய போக்கு பல முறை எங்களை காயப்படுத்தி இருக்கிறது! 
 கரூர் சம்பவத்திற்கு பிறகு அவரது சர்வாதிகாரம் இல்லாவிட்டால் நாங்களும் அப்படியான ஒரு கும்பலாகத்தான் ஆகியிருப்போம் என்று மனதைத் தேற்றிக் கொள்கிறோம்!
 மாடுகளைத் திரட்டி மாநாடும் ஊர்வலமும் நடத்தியபோது கூட சிறு கீறல் இல்லை என்றால் அதுதான் சீமான் உருவாக்கிய கட்டுப்பாடு!

 என்ன செய்வது அண்ணனை எங்களால் கைவிட முடியாதே?!
 ஆம்! உங்கள் குருட்டு கண்களுக்கு தெரிகிறதா?!
சீமானுக்கும் 60 வயதாகிவிட்டது! 
தம்பிகளும் இளமைக் காலத்தை தொலைத்துவிட்டு 40களில் அதாவது முதுமைக்கு வந்துவிட்டனர்! 
 தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் நல்ல அரசியல்வாதிக்கு மரணவலி கொடுக்கின்றனர்.
இப்படித்தான் வ.உ.சி!
இப்படித்தான் பாரதியார்!
இப்படித்தான் ஜீவானந்தம்!
இப்படித்தான் மபொசி!
இப்படித்தான் பாரதிதாசன்!
இப்படித்தான் நல்லகண்ணு! 
இப்படித்தான் தமிழரசன்! 
இப்படித்தான் கலியபெருமாள்! 
இப்படித்தான் நம்மாழ்வார்!

 தமிழக வாக்காள பெருமக்களுக்கு ஏதோ தாம் பெரிய சிவபெருமான் என்றும் ஓட்டுக் கேட்டு நிற்பவன் தன் பக்தன் என்றும் எண்ணிக்கொண்டு உயிர் போகும் அளவு சோதிக்கின்றனர்.
 அவன் உங்களை காப்பாற்றத்தான் உங்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறான் மக்களே!
 இதுவே சீமான் ஒரு வந்தேறியாக இருந்திருக்க வேண்டுமே?! 
 அன்று வைகோவுக்கும் விஜயகாந்துக்கும் இன்று கமலஹாசனுக்கும் விஜய்க்கும் அளித்த ஆதரவைக் கூட சீமானுக்கு அளிக்கவில்லை இந்த கேடுகெட்ட தமிழினம்! 
 வடவரில் கொஞ்சம் அறிவுள்ள டெல்லி மக்கள் ஓரிரு ஆண்டுகளிலேயே பாஜக- காங்கிரஸ் இரண்டும் ஒன்றே என்று அறிந்து கேஜரிவால் கைகளில் ஆட்சியைக் கொடுத்து இன்று பஞ்சாபை அவர்கள் வென்று நல்லாட்சி நடத்தவில்லையா?!
 ஒன்றில்லை ரெண்டில்லை 16 ஆண்டுகள் சீமானை சோதித்துவிட்டீர்கள்! 
வேறொரு இனமென்றால் இந்நேரம் சீமானை வைத்து தனிநாடே வாங்கியிருக்கும்!
 1971 இல் ஒரு 16 வயது சிறுவனை 13 ஆண்டுகள் சோதித்த ஈழத் தமிழினம் 1983 இல் அவரை தலைவனாக ஏற்றுக்கொண்டது!
சீமானும் அப்படியானவரே!
அவர் பாதையில் சறுக்கி இருக்கலாம் ஆனால் தடம் மாறவில்லை! 
 ஆனால் தமிழகத்தில் ஆண்கள் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் பெண்கள் ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும் ஓட்டு விபச்சாரம் செய்வதே அரசியல் என்று நினைக்கின்றனர்!
 பலமுறை 'ஒருவேளை கருணாநிதியும் ஜெயலலிதாவும் கூட ஆரம்பத்தில் மக்களுக்கு நல்லது செய்ய வந்து இவர்களின் புத்தி தெரிந்து கெட்டவர்களாக மாறிவிட்டார்களோ!' என்று எண்ணத் தோன்றுகிறது!
 நான் சீமானாக இருந்திருந்தால் இந்நேரம் ஒரு கருணாநிதியாக மாறியிருப்பேன்!
  சீமான் சமரசம் செய்யாமல் இருப்பதால் தான் இங்கே தமிழ்தேசியம் உயிரோடு இருக்கிறது!
 இல்லையென்றால் அவர் இடத்தில் வைகோ இருந்திருப்பார்!
 அந்த பிழைப்பு பிழைக்க எங்களுக்கு மனம் வரவில்லை!
ஆனால் சமரசம் செய்து கொண்டவர்களை புத்திசாலிகள் என்று கருதும் சிலர் உண்டு
அந்த வகையில் 'இப்படி இருந்தால் வெல்ல முடியாது!
இது திமுகவுக்கே சாதகமாக முடியும்!'
என்றெல்லாம் 'நடைமுறை' யில் நின்று பேசும் அதிமேதாவிகள்  நிதானமாக சிந்திக்கவும்!
 முதலில் ஒரு சிந்தனை வலுவாக நிற்காமல் அது நடைமுறையை மாற்ற முடியாது!
 அசாத்திய கனவுகள்தான் சாத்தியக் கூறுகளை மாற்றி அமைத்து நடைமுறையாக மாறுகின்றன!
 மன்னராட்சி காலத்தில் மக்களாட்சியே பெரும் கனவுதான்! 
 சரி சித்தாந்தங்களை விடுவோம்! எளிமையாக புரியும்படி சொல்கிறேன்!
 நீங்கள் சொல்வது போல திமுக அத்தனை பெரிய அரக்கன் என்றால் ஏன் மேற்குவங்க கம்யூனிஸ்ட்கள் போல தொடர்ந்து 30 ஆண்டுகள் வெல்ல முடிவதில்லை! 
அடுத்த பெரிய கட்சி அதிமுக என்றால் ஏன் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் கூட ஆட்சியில் இல்லை?! 
 ஒரு தேர்தலில் அமோக வெற்றி அடுத்த தேர்தலில் படுதோல்வி என்று மாறி மாறி சந்திக்கிறார்களே அது யாரால்?! 
 என்னதான் பெரிய கட்சி, என்னதான் தொண்டர் பலம், என்னதான் கட்டமைப்பு, என்னதான் பணபலம் இருந்தாலும் சூழ்நிலை பொறுத்து தன் வாக்கை மாற்றிப்போடும் மக்களை விலைக்கு வாங்க முடியாது!
 திமுக வின் வாக்கு வங்கி அப்படியே இருக்கும்!
அதிமுக வின் வாக்குவங்கியும் அப்படியே இருக்கும்!
இருபுறமும் சாராத மக்கள்தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றனர்.
 இவர்கள் நாம் தமிழர் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு இருக்கின்றனர்.
 இவர்களே சீமான் வாங்கிய 35 லட்சம் வாக்கு!
இவர்கள் நினைத்தால் அடுத்த தேர்தலிலேயே நாம் தமிழர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்!
 சீமானின் இலக்கு இவர்கள்தான்! 
சீமான் முன்வைக்கும் பெருங்கனவு மாநில ஆட்சி அதிகாரத்திற்கும் அப்பாற்பட்டது!
 அவர் 10 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்து முழு சர்வாதிகாரியாக நடந்தால்தான் அவர் விரும்பும் மாற்றத்தில் கால்வாசியையாவது கொண்டுவர முடியும்!
 அத்தகைய மனிதனை கேவலம் அதிமுக வுடன் கூட்டணி வைக்கவில்லை என்று கரித்து கொட்டுவது எத்தனை பெரிய மூடத்தனம்!
 கட்சியே பிழைக்காது சின்னமே கிடைக்காது என்ற நிலையில் கூட உறுதியாக இருந்து அங்கீகாரத்தையும் சின்னத்தையும் பெற்றுவிட்டோம்!
  தனித்து தன் கால்களில் தன்மானத்தோடு நிற்கும் எங்களை குறைசொல்லும் நீங்கள் யார்?!
கூட்டத்தோடு கோவிந்தா போடுவது போல எல்லாரும் எவனுக்கு வாக்களிக்கிறானோ அவனுக்கே வாக்களித்துவிட்டு ஏதோ முதலமைச்சரை தான் ஒருவனே கைப்பிடித்து அரியாசனத்தில் அமர்த்தியது போல ஒரு திமிரோடு திரிபவர்கள்!
  சிலர் ஒருமுறை நாதக வுக்கு வாக்கு போட்டு அவர்கள் தோற்றதும் ஏதோ தன் அப்பன் தந்த சொத்து வீணாகிவிட்டது போல புலம்பல்!
 நாதக சின்னத்தில் நோகாமல் ஒரு ஓட்டு குத்திய உங்களுக்கே அது வெல்லாத போது இவ்வளவு கோபம் வருகிறதே!
 உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இறைக்கும் நாதக தம்பிகளுக்கு எப்படி இருக்கும்?!
 குடும்ப மானம் வரை குதறப்பட்ட அண்ணனுக்கு எப்படி இருக்கும்?!  

 'நடைமுறை' நாயகர்களே! 
 அப்படியே யோசித்தாலும் எடப்பாடியார் என்ன பெரிய தமிழ்தேசிய நடவடிக்கை செய்தார்?!
 ஜெயலலிதா வை சீமான் ஆதரித்த போது அதிமுக தலைமை எத்தனை உறுதியான நிலைப்பாட்டுடன் இருந்தது?!
 மத்திய அரசு நடுநடுங்கும் படி செயல்பட்டாரே?!
 எடப்பாடியின் நான்காண்டு ஆட்சி அத்தகையதா?!
 சீமான் ஏன் அவருடன் சேரவேண்டும்?! 
 மராத்தான் ஓட தகுதியும் வலுவும் பொறுமையும் உள்ள ஒருவன் ஏன் ஸ்லோசைக்கிள் ஓட்டுபவனுடன் இணைய வேண்டும்?!
 உங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பிடிக்கும் என்றால் ஆதரியுங்கள் ஆனால் அதுதான் தமிழ்தேசியம் என்றும் அதுதான் நடைமுறைச் சாத்தியம் என்றும் நாம் தமிழர் தம்பிகளுக்கு வகுப்பு எடுக்க வேண்டாம்!
 டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், நீட் 7.5% இடவொதுக்கீடு, தமிழ்நாடு நாள் அறிவிப்பு என எடப்பாடியாரின் தமிழ்தேசிய நடவடிக்கைகள் என்று நீங்கள் தரும் பட்டியலை விட கொஞ்சம் பெரிய பட்டியல் திமுக விடமும் உள்ளது!
 முதன்மைக் கொள்கை என்ன?!
தமிழினத்தின் தலையாய பிரச்சனைகளான காவிரி நதிநீர் மற்றும் முல்லைப் பெரியாறு நீர் பங்கீடு, மீனவர் தாக்குதல், கல்வி மத்திய அரசு பட்டியலில் இருப்பது அதனால் நீட் ,வரிக்கொள்ளை, சாராய விற்பனை, மலைகள் அழிப்பு என ஒவ்வொரு தமிழனின் மூச்சையும் ரத்தத்தையும் பாதிக்கும் பிரச்சனைகளுக்கு அதிமுக முன்வைக்கும் தீர்வு என்ன?
 மாநிலம் அதிகாரம் தாண்டிய நடவடிக்கை என்ன?! 
 'திமுக வை விட பரவாயில்லை' என்பதைத் தவிர அதிமுக வின் தகுதி என்ன?!
 அப்படியே பார்த்தாலும் திமுக, அதிமுக வை விட நாதக பரவாயில்லை என்று எங்கள் பக்கம்தானே வரவேண்டும்! 
 நீங்கள் ஏற்காவிட்டாலும் எங்கள் தகுதி தமிழ்நாட்டை ஆள்வதற்கும் மேலானது! இந்திய இனங்களுக்கே முன்மாதிரி கட்சி நாங்கள்!
 எங்கள் இலக்கு மிகப் பெரியது!
'வெற்றி அல்லது வீர மரணம்' என்று கூட இல்லை 'வீர மரணம் அல்லது வெற்றி' என்கிற நிலைப்பாடு தான் தம்பிகளின் நிலைப்பாடு!
 சீமான் இதிலிருந்து பின்வாங்கினாலும் தம்பிகள் பின்வாங்க விடமாட்டார்கள்! 
 அத்தனை உறுதியும் பொறுமையும் இல்லாதவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி எதிரிக் கட்சிகளிடமே தஞ்சம் புகுந்துவிட்டனர்.
 இதில் அதிமுக விடம் தஞ்சமடைந்தவர்கள் மட்டும் புனிதமாகி விடுவார்களா?! 
 திராவிடம் இரட்டைத் தலை பாம்பு ! திமுக அதிமுக இரண்டிற்கும் தலைகள் வேறு வேறாக தெரியலாம் ஆனால் உடல் ஒன்றுதான்!
 இங்கே இருப்பவன் அங்கே போவான்! 
அங்கே இருப்பவன் இங்கே வருவான்! 
அங்கிருந்து பணம் இங்கு வரும்!
 இங்கிருந்து ஒப்பந்தங்கள் அங்கு போகும்! 
 இவன் துப்பாக்கிச்சூடு நடத்துவான் அவன் தண்டனை வழங்காமல் பதவியுயர்வு வழங்குவான்! 
 இவன் நீட் கொண்டுவர கையெழுத்து போடுவான்!  அவன் அதை நடைமுறைப் படுத்துவான்! 
 இவன் சாராயம் தயாரிப்பான் அவன் அதை விற்பான்! 
 தமிழகத்தின் அத்தனை பிரச்சனைகளிலும் இருவரும் பங்காளிகள்! 
 இவர்களிடமா நாங்கள் மண்டியிட வேண்டும்?! 

 ஆதித்தனார் முதல் தவாக வேல்முருகன் வரை செய்து தோற்ற ஒரு அரசியல் நகர்வையே சீமானையும் செய்யச் சொன்னால் எப்படி செய்வார்?!
 திருந்த வேண்டியது மக்கள் தான்!
நாம் தமிழர் ஆட்சியில் அமராத ஒவ்வொரு நாளும் தமிழினத்துக்கு இழப்புதான்! 

 ஒன்று சீமானின் நல்லாட்சி அல்லது பீகார் போலக் கூட இல்லை சோமாலியா போல ஆகும் தமிழ்நாடு!
 
 இனத்தின் கடைசி வாய்ப்பு சீமான்! 
மங்குனி மக்களே! சீக்கிரமாகத் திருந்தித் தொலையுங்கள்! 
 ஒரு முதலாளி, பரம்பரைத் திருடன் என்று தெரிந்த ஒருவனை வேலைக்கு வைப்பாரா அல்லது நல்லவனா கெட்டவனா என்று தெரியாத ஒரு புது ஆளை வேலைக்கு வைப்பாரா?! 
 அப்படி திமுக அதிமுக ஊழல் கட்சிகள் என்று தெரிந்த பின்னும் அவர்களுக்கே வாக்களிக்காமல் சீமான் திருடனா இல்லையா என்று வாய்ப்பு வழங்கி முடிவு செய்யலாமே?! 
 பிற இனங்கள் நல்லாட்சியே கொடுத்தாலும் தொடர்ந்து ஒருவனை அதிகாரத்தில் நீடிக்கவிடுவதில்லை இதைவிட நல்லவன் ஒருவன் இருப்பானோ என்று புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவர்.
 காட்டாட்சி வழங்கி அதிமுக கேடுகெட்ட ஆட்சி வழங்கிய திமுக இவர்களையே மாறி மாறி தேர்ந்தெடுப்பது ஏன்?!
 தமிழர்கள் என்ன இவர்களுக்கு அடிமை சாசனம் கையெழுத்திட்டு வழங்கியுள்ளோமா?!

 இந்த தேர்தலில் தோல்வி என்றால் சீமான் தாங்கிக்கொள்வாரா தெரியாது ஆனால் அடுத்த தேர்தலிலும் தோல்வி என்றால் சீமானால் சத்தியமாகத் தாங்க முடியாது! 

 ஒரு தலைவன் உயிரோடு இருக்கும்போது ஏறெடுத்து கூட பார்க்காமல் அவன் செத்த பிறகு சாமியாக்கி கும்பிடுவது தான் நமக்கு வழக்கம்!
 இந்த முறையும் அதுதான் உங்கள் முடிவா?! 

 சீமான் ஸ்டைலில் சொல்கிறேன்!
மக்களே! காதல் வந்தால் சொல்லி அனுப்புங்கள்!
உயிரோடு இருந்தால் சீமான் வருவான்! 
 
 
 
 

Tuesday, 14 October 2025

உதயநிதி செய்யும் கருணாநிதித்தனம்

உதயநிதி செய்யும் கருணாநிதித்தனம்

 உதயநிதியின் நெருக்கம் கிடைத்த பிறகு வாழை படம் வெளியாகிறது! 
 மறுநாளே தேவேந்திரர் அதிகம் வாழும் பகுதிகளில் மாரி செல்வராஜ் படம் போட்டு அவரது ரசிகர் மன்றம் என்கிற பெயரில் ப்ளக்ஸ் வைக்கப்பட்டது! 
 அந்த பதாகையில் அப்பகுதியின் பெயர் இல்லை! அந்த ஊரைச் சேர்ந்த யாருடைய புகைப்படமும் இல்லை !
 அதாவது தமிழகம் முழுக்க பொத்தாம்பொதுவாக ஒரு பதாகை அடித்து வைக்கப்பட்டது!
 இதை வைத்தவர்கள் திமுக தொண்டர்கள் என்பதைச் சொல்லவேண்டியது இல்லை!
 அதாவது "இவர்தான் உங்கள் அடையாளம்! பிதுக்கப்பட்ட இவரை எப்படி தூக்கிவிட்டோம் பார்" என்று சொல்லாமல் சொல்கிறார்களாம்!
 ஆனால் வாழை படத்தில் சோ.தர்மன் படைப்பை ஆட்டையைப் போட்டு வழக்கம்போல தாழ்வு மனப்பான்மையை புகுத்தி கதறியிருந்தார் மா.செ!
 படமும் வெற்றியடைய வில்லை! 
 நொடிக்கு ரூ.9000 வருமானம் வரும் உதயநிதிக்கு  இது ஒரு பொருட்டா?!
 இப்போது தேவேந்திர குலத்தைச் சேர்ந்த கதாநாயகனை வைத்து அடுத்த படம் வருகிறது! 
 ஒருபக்கம் திராவிடத்தை தாங்கி நிற்கும் திமுக அதாவது கருணாநிதி குடும்பம்! 
 மறுபக்கம் அதை எதிர்த்து நிற்கும் தமிழ்தேசியத்தை தாங்கி நிற்கும் தேவேந்திர சமூகம்! 
 ரஞ்சித்தை வைத்து ஏவிய தலித்திய பாச்சா இவர்களிடம் பலிக்கவில்லை! 
 தற்போது நெல்லை கவின் ஆணவக் கொலை நடந்த போது அதை சாதி மோதலாக மாற்ற ஏவப்பட்ட கிருஷ்ணசாமி ரெட்டியார் மகனையும் இச்சமூகம் இனம் கண்டுகொண்டனர்!
 அத்தனை சமூகங்களையும் ஏதோ ஒரு வகையில் விலைக்கு வாங்கிவிட்ட திமுக தேவேந்திரரை பணிய வைக்க முடியாமல் திணறுகிறது!
 திமுக நடத்திய தாமிரபரணி படுகொலையில் பாதிக்கப்பட்ட பின்னணி கொண்ட மாரி செல்வராஜை விலைக்கு வாங்கியது! 
 திருநெல்வேலி வெள்ளம் வந்தபோது உதயநிதி சூட்டிங்குக்கு உதவியாக இருந்த மாரி செல்வராஜ் டீம் போனது!
 மாரி என்னவோ தேவேந்திரர் களுக்கெல்லாம் பிரதிநிதி போலவும் அவர் வந்து வெள்ளத்தையே வற்றவைத்து விட்டது போலவும் ஊடகங்கள் ஊதின! 
  இதில் எதுவுமே தேவேந்திர சமூகத்திடம் எடுபடவில்லை!  
 இம்முறை மீண்டும் மா.செ தேவேந்திரர் நாடார் மோதலை மையமாக வைத்து படம் எடுப்பதாக சொல்கிறார்கள்.
 ஒரு தேவேந்திர குடும்பத்துக்கும் ஒரு நாடார் குடும்பத்துக்கும் வயல்வெளியில் வந்த வரப்பு தகராறு இரு சமூக மோதலாக மாறி பல்வேறு பரிணாமங்களை அடைந்து பல உயிர்கள் பலியாயின.
 இதில் முதல் கொலையும் இரண்டாவது கொலையும் தேவேந்திர சமூகம் தான் செய்தது! 
 இதைச் செய்த பசுபதி பாண்டியன் கொல்லப்பட்ட பிறகு இது முடிவுக்கு வந்தது!
 இறுதி கொலை பசுபதி பாண்டியன் வீட்டில் ஸ்லீப்பர் செல்லாக இருந்த ஒரு தேவேந்திர பெண் பசுபதி விசுவாசிகளால் கொல்லப்பட்டது! 
 ஸ்டெர்லைட் பிரச்சனையை மடைமாற்ற உருவாக்கப்பட்ட மோதல்தான் இது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
 கிட்டத்தட்ட நடந்து முடிந்துவிட்ட ஒரு பிரச்சனையை மறுபடி கிளறவுள்ளனர்.
 தேவேந்திரருக்கு ஒரு தலைமை உருவாகாமல் தடுத்துவிட்ட திராவிடம் தன் முயற்சியில் சற்றும் சளைக்காமல் வடக்கு போல தெற்கையும் இரண்டாக பிளந்து நடுவில் அமர முயன்றுகொண்டே இருக்கிறது!
 தேவேந்திர மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.
 மற்ற அனைத்து சமூகங்களும் கவனமாக இருக்க வேண்டும்! 
 
 

Monday, 6 October 2025

நெரிசல் மரணங்கள் நெஞ்சில் எழும் கேள்விகள்

நெரிசல் மரணங்கள் நெஞ்சில் எழும் கேள்விகள்

 சென்றமுறை விஜய் வேண்டுமென்றே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் பீக் அவரில் மெதுவாக ரோட் ஷோ நடத்தியது அவரது கூட்டத்தை அதிகமாக்கும் நோக்கம் இருப்பதை காட்டுகிறதே?! 

 மனசாட்சி இல்லாமல் 7 மணிநேரம் தாமதமாக வந்துள்ளாரே?! 
தனக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு போதுமான உணவு தண்ணீர் இருக்கைகள் போன்றவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரியவில்லையே?! 

 தன்னைப் பார்த்துவிட்டால் மக்கள் கலைந்து சென்றுவிடுவார்கள் என்று வாகன ஜன்னல்களை மூடிய படி பயணித்து ரசிகர்களை தொடர்ந்து வரும்படி செய்ததாகச் சொல்கிறார்களே?!

 கூட்டத்தில் 30 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது கூட தெரியாமல் அல்லது கவலைப்படாமல் உடனடியாக பிளைட் ஏறியது எப்படி?! அப்போது களத்தில் ஒரு நிர்வாகி கூடவா இல்லை?! 

 இந்தமுறை பேசும்போது நிறைய உளறல் மற்றும் பதற்றம்.  இப்படி நடக்கவுள்ளதை விஜய் ஏற்கனவே அறிந்திருந்தாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறதே?!

 சம்பவம் தெரிந்த பிறகும் களத்திற்கு கிளம்பி வராதது மற்றும் நிர்வாகிகளை அனுப்பாதது சந்தேகம் வரவைக்கிறதே?!

 நாளை காலையாவது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து களத்துக்கு வந்து தனது தரப்பு நியாயத்தை சொல்வாரா? அப்படி சொல்லவில்லை என்றால் சந்தேகம் அதிகமாகுமே?!
 
  சென்ற கூட்டங்களில் கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை தெரிந்திருந்தும் ஏன் குறுகலான இடத்தை ஒதுக்கியது அரசு?! 

 சவுக்கு சங்கர் 'வீபரீதம் நடக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது' என்று முன்பே கூறியிருந்ததை இங்கே பொருத்திப் பார்க்கலாமா?!

 டேக் டைவர்ஸன் திட்டம் என ஏற்கனவே விஜய் கூட்டத்தை அலைக்களிக்கும் ப்ளானை செந்தில் பாலாஜி வைத்திருந்ததாக முன்பே கூறிய பத்திரிக்கை செய்தியும் இங்கே கவனத்தில் வருகிறதே?! 

 ஏற்கனவே எடப்பாடியார் கூட்டங்களில் பலமுறை ஆம்புலன்சை விட்டு நெருக்கடி ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது. அது இம்மாதிரி மரணங்களை ஏற்படுத்தவா எனும் சத்தேகம் எழுகிறதே?!

 சரியாக நெரிசல் ஏற்பட்ட நேரம் மின்தடை ஏற்பட்டதும் சந்தேகம் வரச் செய்கிறதே?!

 கும்பமேளா நெரிசல் மரணங்களுக்கு பாஜக அரசு பொறுப்பு என்று கூறிய உதயநிதி இப்போது அதுபோலக் கூறுவாரா?!
 மக்கட்பணி செய்யாமல் துணை முதலமைச்சர் துபாயில் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?! 

 மக்கள் பணத்தில் இருந்து 10 லட்சம் வாரிக் கொடுப்பது சரியா?! 
 கள்ளச் சாராயத்திற்கும் சினிமா மோகத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம்?!

 ஏற்கனவே பதாகை வைக்கையில் ஒரு ரசிகர் இறந்த போது விஜய் ஆறுதலோ நிவாரணமோ வழங்கவில்லை! இப்போதாவது ஏதாவது வழங்குவாரா?!

 சினிமா மோகத்தில் நடிகரை நேரில் பார்க்க காட்டும் அளவுக்கதிகமான ஆர்வம் இன்று 40 உயிர்களை காவு வாங்கும் அளவுக்கு போய்விட்டதே?! இனியாவது மக்கள் திருந்துவார்களா?!
 
 நெரிசல் ஏற்படும் என்று தெரிந்தும் அல்லது கணிக்கத் தவறியும் குழந்தைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்களை என்னவென்று சொல்வது?!

  காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள் போல 8 மணிநேரம் அங்கேயே தவம் கிடந்தது என்ன மாதிரியான மனநிலை?!
 
 விஜயை பார்க்க வேண்டும் என்று மரங்களிலும் மொட்டை மாடிகளிலும் குரங்குகள் போல ஏறி நிற்பது. விஜய் மீது பாய்ந்து குதற தயாராக இருப்பது போன்ற செயல்களும் உயிருக்கு ஆபத்து விளைவிக்குமே?! 
 
 சில உயிர்கள் போனால்தான் நாம் ஒரு விடயத்தைப் பற்றி பேசவே செய்வோமா?!

28.09.2025

Sunday, 5 October 2025

ரசிகர்களைப் புறந்தள்ளுவோம்

ரசிகர்களைப் புறந்தள்ளுவோம்

 உங்களுக்கு இது வினோதமாக இருக்கலாம்!
 ஆனாலும் ரசிக கூட்டத்தை மேய்க்க விஜய் போல நடந்தால்தான் முடியும்! 
 விஜய்க்கு உண்மையிலேயே இறந்தவர்கள் மீது இரக்கம் இருக்கலாம்!  
 அவர் மனசாட்சி உறுத்திக் கொண்டிருக்கலாம்!  உடனடியாக கிளம்பி இறந்த உடல்களைப் பார்க்க கால்கள் துடிக்கலாம்!
 இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து கண்ணீரைத் துடைக்க அவர் கைகள் துடிக்கலாம்! 
 ஆனாலும் அனைத்து உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு மனசாட்சி இல்லாதது போல அவர் காட்டிக் கொள்ள வேண்டும்!
 அப்போது தான் தீவிர ரசிகர்களைத் தக்கவைக்க முடியும்!
 ரசிக கூட்டம் என்று வந்துவிட்டாலே இங்கே தலைவனுக்கான வரையறை தலைகீழ்!
 அதாவது இங்கே தலைவன் என்பவன் தொண்டனுக்காக துரும்பைக்கூட அசைக்கக் கூடாது!
 தப்பித் தவறி கூட நல்லது செய்யக்கூடாது!
 ரசிகனிடமிருந்து எல்லாவற்றையும் உருவி எடுப்பவனாக மட்டுமே இருக்க வேண்டும்!
 அப்படி ஒருவனைத்தான் இந்த ரசிக கூட்டம் விரும்பும்!

 இதுவே விஜய் இறந்தவர்களுக்காக ஒரு துளி கண்ணீர் சிந்தியிருந்தாலும் இந்த கூட்டம் அவரை விட்டுவிட்டு வேறு ஒருவனை தேடும்!

 இந்த கொடூரமான தற்கொலை மனநிலைதான் அன்று அந்த கூட்டத்தில் அனைவருக்கும் இருந்திருக்கும்!
 இவர்களுக்கு நல்லவர்கள் தம்மைப் பார்த்து பதறுவதில் அலாதி இன்பம்!

 இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அதற்கு பதில் கிடையாது!
 ஆனால் இது நடக்கிறது! உலகம் முழுவதும் நடக்கிறது! 

 சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டவர்கள் பிறர் தம்மை ஏறெடுத்துப் பார்க்க அல்லது ஒரு நொடி திரும்பிப் பார்க்க இப்படியான கேவலமான கொடூரமான செயல்களை செய்வார்கள்!
 தாழ்வு மனப்பான்மையின் உச்ச வடிவம்தான் ரசிக மனநிலை! 

 இதை தடுக்க நாம் என்ன செய்வது! 
 இவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடையாமல் இருந்தாலே போதும்!
  கடந்து சென்றுவிட்டாலே போதும்!
பொதுமக்கள் இவர்கள் மீது குறைந்தபட்ச மனிதநேயம் கூட காட்டாமல் புறக்கணித்தால் இந்த கூட்டம் ஒழியும்!

 வட இந்தியரில் பொதுவாக சமூக அக்கறை கிடையாது! அதனாலேயே இத்தகைய கொடூரமான கோமாளிகள் அங்கே உருவாகவில்லை! 
 
 விஜய் முகத்தைப் பார்க்க கூட்டத்தில் முண்டியடித்து நசுக்கப்பட்டு வியர்வையில் நனைந்து பல மணிநேரம் அடக்கி வைத்திருந்த சிறுநீரும் மலமும் வெளிவந்து கேவலமாக இறந்து கிடந்தவர்கள் மீது எனக்கு எந்த இரக்கமும் ஏற்படவில்லை! 
 ஏனென்றால் அவர்கள் சாக வேண்டியவர்கள் தான்!

 ஆனால் பாதிப்பட்டோரில் வேறு காரணங்களுக்காக அந்த கூட்டத்தில் போய் சிக்கியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்! 

 இனி இப்படியொரு நிகழ்வு நடக்காமல் இருக்க இந்ந ரசிகவெறி கும்பல் அதிகாரத்தை நோக்கி நகர்வதை தடுப்போம்!
 
 இவர்கள் நண்பனோ உறவினரோ எவராயிருந்தாலும் மனிதநேயம் உள்ளவர்கள் புறக்கணிப்போம்! 

 ( 1 ம் தேதியே எழுதிய பதிவு)