Thursday, 19 June 2025

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர்


கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர்
(சான்றுகளுடன்)

கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்பதற்கான சான்றுகள் வருமாறு...
-----------------
முதல் படம்,

14 மார்ச் 2014 தினமணி
டாக்டர் கிருஷ்ணசாமி சாதிச் சான்று விவகாரம்:
உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைப்பு
by Venkatesan

புதியதமிழகம் கட்சி நிறுவனரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமியின் சாதிச் சான்று தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது டாக்டர் கிருஷ்ணசாமி சமர்ப்பித்த சாதிச் சான்று போலியானது என நெல்லை மாவட்டம் கொடியங்குளத்தைச் சேர்ந்த குமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜி எம் அக்பர் அலி அண்மையில் விசாரித்தார்.
கிருஷ்ணசாமியின் தந்தை கொண்டா ரெட்டி சமூகத்தையும் தாய் அருந்ததியர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.
ஆனால் வேட்பு மனுவில் தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவர் என கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.
-------------
அடுத்த படம்,

Mallar Advocates Association (MAA)
No.138, Thambu Chetty street,
Chennai 600001.

நாள்: 06.09.2017

அனுப்புநர்,
பெ.இராமராஜ் வழக்குரைஞர்
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை 104
தொ.எண். 9176067906

பத்திரிக்கையாளர் சந்திப்பு

உயர்திரு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். எமது வழக்குரைஞர் சங்கம் சார்பில் வருகின்ற வியாழன் (07.09.2017) அன்று காலை 11 மணியளவில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவுள்ளோம்.

சந்திப்பின் நோக்கங்கள்:
1.ஆளும் பா.ஜ.க அரசின் மக்கள்விரோதத் திட்டங்களுக்கு ஆதரவளித்து தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து வரும் டாக்டர் கிருஷ்ணசாமியைக் கண்டிப்பது.
2. தேவேந்திர குல வேளாளர் சாதியில் பிறக்காமல் பொய்யான சாதிச்சான்றிதழ் பெற்று அப்பாவி மக்களை ஏமாற்றும் டாக்டர் கிருஷ்ணசாமியின் போக்கை அம்பலப்படுத்துவது.
3. நீட் தேர்வுமுறையில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனிதாவின் மரணத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதோடு தொடர்ந்து மக்கள் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் டாக்டர் கிருஷ்ண சாமியிடமிருந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயக் கொடியாகிய சிவப்பு பச்சைக் கொடியை மக்களை அணிதிரட்டுவதற்கான அறைகூவல் விடுப்பது.

இதர முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் சந்திப்பு நடைபெற உள்ளதால் தங்களது பிரதிநிதிகளை அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் அன்புள்ள,
பெ.இராமராஜ்
---------------
மேற்கண்ட இரண்டு போக கிருஷ்ணசாமி குடும்பம் பற்றி விரிவாக கூறுகிறது தற்போதைய செய்தி ஒன்று:-

டாக்டர் திரு. கிருஷ்ணசாமியின் “தேவேந்திரகுலத்தான்” என்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு

(ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம்)

பொருள்:
டாக்டர்.கே.கிருஷ்ணசாமி மோசடி செய்து “தேவேந்திரகுலத்தான்” என்று பெற்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய விண்ணப்பம்.

பார்வை:
கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் 09-1-1998 அன்று டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்ட நிரந்தர சாதிச் சான்றிதழ் எண் 1063899,
SL.NO. .10 / 98

ஐயா,
டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு தேவேந்திரகுலத்தான் என்ற சாதிச் சான்றிதழை கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட்டுள்ளது.

இது தவறானது, இது ஏமாற்றிப் பெற்ற சதான்றிதழாகும் அவர் தனது செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி “தேவேந்திரகுலத்தான்” என்ற போலியான சாதிச்சான்றிதழை ஏமாற்றிப் பெற்றுள்ளார்.

எனவே மோசடிமூலம் பெறப்பட்ட அவரது சாதிச் சான்றிதழை G.O.Ms(2D) 108,dated 12th September 2007இன்படி ரத்து செய்ய வேண்டும்.

டாக்டர்.கே.கிருஷ்ணசாமி திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை தாலுகாவின் கீழ் வரும் அவரது சொந்த கிராமத்தில் இருந்து தனது சாதிச் சான்றிதழைப் பெறுவதற்குப் பதிலாக அவர் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் தேவேந்திரகுலத்தான் என்ற போலியான சாதிச் சான்றிதழை நிலையான சான்றிதழாகப் பெற்றுள்ளார்.

டாக்டர்.கே.கிருஷ்ணசாமி பிறந்த சொந்த கிராம நிர்வாக அலுவலரால் முறையாக விசாரிக்கப்பட்டு நிலையான சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இது வருவாய்த் துறையின் ஆணை எண். Go.Ms.No.781 dtd 2nd May 1988 –என்பதற்கு எதிரானதாகும்.

திரு.கிருஷ்ணசாமிக்கு 09-01-1998 அன்று நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அச்சான்றிதழில் அவரது முகவரி "கே கிருஷ்ணசாமி த/பெ கருப்பசாமி,
சங்கீதா மருத்துவமனை,
பாலக்காடு மெயின்ரோடு,
குனியமுத்தூர்"
என உள்ளது.
இச்சான்றிதழ் குனியமுத்தூர் கிராமநிர்வாக அலுவலரால் அவர்பிறந்த ஊர் உள்ள ,உடுமலைப்பேட்டைத் தாலுகாவில் நேரடியாக விசாரிக்கப்படாமல் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் விசாரிக்கப்படாமல் வழங்கப்பட்ட்டுள்ளது.
இது மேற்படி வருவாய்த்துறையின் ஆணைக்கு எதிரானதாகும் திரு.கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் என்ற தனது போலியான சாதிச்சான்றிதழை வைத்துக்கொண்டு இரண்டு முறை ஓட்ப்பிடாரம் SC தொகுதியில் MLA ஆகி உள்ளார் இதன் மூலம் உண்மையான தேவேந்திரகுலமக்கள் இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தோம்.

இவர் தனது மகன் திரு.சியாம், மகள் திருமதி. சங்கீதா, இவர்களுக்கு தேவேந்திரகுலத்தான் என்று போலிச் சான்றிதழ் பெறுவதன் மூலமாக ஒட்டப்பிடாரம் MLA தொகுதி மற்றும் தென்காசி MP தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட வைக்க விரும்புகிறார்.
இச்செயல் உண்மையான தேவேந்திரகுல மக்கள் அங்கே போட்டியிடும் வாய்ப்பை இழக்கச் செய்வதாகும்.
ஏனெனில் திரு.கிருஷ்ணசாமி அருந்ததியர்(மாதாரி,சக்கிலியர்) சாதி இவரது மனைவி கேரளா OBC சாதி.
இவ்விருவரும் தேவேந்திரகுலமல்ல.
எனவே அவரது மகனும் மகளும் தேவேந்திர குலமல்ல..

மேலும் திரு. கிருஷ்ணசாமி தேவேந்திரகுல சாதி அல்ல.  ஏனெனில் அவரது தாயார் திருமதி தாமரை தாழ்த்தப்பட்ட அருந்ததியர் (சக்கிலியன்-12,மாதாரி சாதி)
மற்றும் கிருஷ்ணசாமியைப் பெற்ற தந்தை கருப்பக்குடும்பன் அல்ல,
கருப்பக்குடும்பன் அவரது காப்பாளர் மட்டுமே.

திரு.கருப்பக்குடும்பன் அவரது தாயார் தாமரைக்கு இரண்டாவது கணவர் ஆவார்.
திரு. கிருஷ்ணசாமி 8 வயது மற்றும் அவரது சகோதரி பாக்கியம் 6 வயது இருக்கும்போது தமது தாயார் தாமரையுடன் மசக்கவுண்டன் புதூரிலுள்ள திரு.கருப்பக்குடும்பன் வீட்டிற்கு வந்து அவருடன் சேர்ந்துள்ளார்.
அதற்குப் பின்னர் கருப்பக் குடும்பனுக்கும் தாமரைக்கும் தங்கம் என்ற ஒரு பெண் பிறந்துள்ளது.

இவ்வாறு இருக்கும்போது எப்படி கிருஷ்ணசாமி தன்னை கருப்பக்குடும்பனின் மகன் என்று கூறமுடியும்?

அரசின் விஜிலென்ஸ் குழுதான் அவரைப் பெற்ற தந்தை எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.
திரு. கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் அல்லது குடும்பன் சாதியைச் சார்ந்தவர் அல்ல.

எனவே, தாசில்தார் கோயம்புத்தூர் தெற்கு அவர்கள் டாக்டர் திரு.கிருஷ்ணசாமிக்கு தேவேந்திரகுலத்தான் என்று வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்.

அத்தோடு டாகடர் கிருஷ்ணசாமியின் மகள். திருமதி.கே.சங்கீதா மற்றும் அவரது மகன் திரு. சியாம் இவர்களுக்கும் தேவேந்திரகுலத்தான் என்று போலியாகச் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பின் அவைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.

ஆதி திராவிடர் மற்றும் Tribal நலத்துறை GO.MS.No.106 நாள் 15-10-12 ஆணைப்படி,
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமது விஜிலன்ஸ் குழுமூலம் இவ்வாறு போலியாகச் சான்றிதழ் பெற்ற டாகடர் கிருஷ்ணசாமியின் மீது நடவடிக்கை எடுத்து எமது சாதியை காப்பாற்றுவது கடமை.

திருநெல்வேலி,15-8-2017.

அனுப்பப்படும் நகல்கள்:
(1). Principal Secretary to Govt State of Tamil Nad ,
Revenue Department, Secretariat, Fort St George.
Chennai -600009,
(2). Principal Secretary to Govt State

தேதி: 15-8 -2017
அனுப்புநர்,
S. சிவ ஜெயப்பிரகாஷ், A.D.S.P. (ப.நி),
செல் எண்: 9442219159
செயலாளர்: மள்ளர் பாரதம் சங்கம் (பதிவு எண் .85 / 2013)
செயலாளர்: அகிய இந்திய குடும்பர் சத்திரிய மகாசபாவின் தமிழ்நாட்டுக் கிளை,
தலைமை அலுவலகம்: வாரணாசி,
உத்தரப்பிரதேசம்.
Regd. எண் .1894 (882/1910),
ஆசிரியர்: மள்ளர் பாரதம்.

முகவரி:
எண்:C-32/86H,
ஆசாத்தெரு,
மனகாவலம் பிள்ளை நகர்,
பாளையங்கோட்டை & அஞ்சல்,
திருநெல்வேலி மாவட்டம்,
தமிழ்நாடு - 627 002.

பெறுநர்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
கோயம்புத்தூர் மாவட்டம்,
ஸ்டேட் பாங்க் சாலை,
கோபாலபுரம்,
கோயம்புத்தூர் -641018
-----------
மேற்கண்ட மூன்றும் பள்ளர் பெருமக்களே கொடுத்த புகார் ஆகும்.
சில பள்ளர் உடன்பிறப்புகள் அவரது வளர்ப்புத் தந்தையை உண்மையான தந்தை என்று நம்பி அவருக்கு ஆதவாக செயல்படுகின்றனர்.
இவர் பூர்வீகம் கோவை காமராசர் வீதி (கோவை புரூக்பீட்ஸ் அருகே இருக்கும் அருந்ததியர் வசிக்கும் பகுதி).
இவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர் என்பது அங்கே போய் விசாரித்தால் தெரியும்.
--------
இவரது அரசியல் நுழைவே மக்களைக் காவுகொடுத்த தாமிரபரணிப் படுகொலை மூலம் நடந்தது.
1999ல் மாஞ்சோலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பணியாற்றிய கிருஷ்ணசாமி,
அவர்கள் பிரச்சனை முடிந்து வேலைக்குத் திரும்பிய பிறகு நான்கைந்து நாட்கள் கழித்து எங்களை மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டனர் என்று பொய்யாக பேட்டி கொடுக்க,
ஏற்கனவே அதிருப்தியில் இருந்த நிர்வாகம் உடன்படுக்கையை ரத்து செய்து வேலையை நிறுத்தியது.
அடுத்த நடந்த திருநெல்வேலி பேரணியின்போது தி.மு.க முன்பே திட்டமிட்டு தாமிரபரணி ஆற்று நீரை அதிகமாகத் திறந்து வைத்து போராடிய மக்கள் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்தி  ஆற்றில் தள்ளியதால் விக்னேஷ் எனும் ஒரு வயது குழந்தை உட்பட 17 பேர் (பெரும்பாலும் பள்ளர்) இறந்தனர். 500 பேர் வரை காயமடைந்தனர்.

அந்த சூடு ஆறுவதற்குள்ளே 2001 ல் திமுகவுடன் கூட்டணி வைத்து பத்து எம்.எல்.ஏ. சீட்
வாங்கியவர்தான் இந்த கிருஷ்ணசாமி.

இவருக்காக உயிரைவிட்ட எவரையும் இவர் நினைவுகூர்ந்ததோ மரியாதை செலுத்தியதோ ஒருபோதும் கிடையாது
-------------
இது போக இவர் ஹிந்துத்வா கையாள் என்பதற்கும் இரண்டு சான்றுகள் உண்டு.

குமுதம் 16.1.1998
'என் குரு சங்கராச்சாரியார்தான்' என்று கிருஷ்ணசாமி அளித்த பேட்டிக்கான அட்டைப்பட விளம்பரம்.

இது இவரது ஆரம்பகால இந்துத்துவ சார்புக்கு சான்று ஆகும்.
மேலும், நேற்று அனிதா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும்
அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும்
அதை விசாரிக்க முதல்வரையும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்திக்கவுள்ளதாகவும் பேட்டி கொடுத்தார்.
நேற்று மாலை 7மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக சென்று இரவு டெல்லியில் (மிக உயர்தர ஆடம்பரமான) ஹோட்டல் ஷெரட்டனில் தங்கிவிட்டு
இன்று (06.09.2017) காலை 11மணிக்கு எந்த (அப்பாயின்ட்மென்ட்) முன் அனுமதியும் இல்லாமல் நேரடியாக பிரதமருக்கு அடுத்தநிலையில் உள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து அனிதா மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க மனு கொடுத்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.

எந்த பதவியிலும் இல்லாத ஒருவரால் நினைத்த மாத்திரத்தில் உயர்மட்ட பா.ஜ.க அமைச்சரை சந்திக்க முடிகிறதென்றால் அவர் அந்த கட்சிக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருக்கவேண்டும் என்று யூகிக்கமுடிகிறது.

மேலும் நீட் தேர்வினை ஆதரிக்கும் இவர் எண்ணூற்றி சொச்சம் மதிப்பெண் மட்டுமே எடுத்த தனது மகளுக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் கெஞ்சி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான இட
ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் இடமும் வாங்கிக்கொடுத்தவர் ஆவார்.
இதனை பாலா பாரதி (கன்னடர்) அம்பலப்படுத்தியுள்ளார்.

இவர் தற்போது மத்திய அரசிடம் எதிர்பார்ப்பது தனது மகளுக்காக திருவனந்தபுரத்தில் கட்டிவரும் மிகப் பிரம்மாண்டமான மருத்துவமனைக்கு எந்த தடங்கலும் வரக்கூடாது என்பதுதான்.

எங்கெங்கு நோக்கினும் உருமறைப்பு வந்தேறிகள் !

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்)
06.09.2017

Saturday, 14 June 2025

முருகனும் இசுலாமியரும்

முருகனும் இசுலாமியரும்

தமிழ் புலவர் அருணகிரி நாதர் முருகனை ‘சூர்க்கொன்ற ராவுத்தனே’ என்றும் ‘மாமயிலேறும் ராவுத்தனே’ என்று புகழ்கிறார்.
 அதாவது தமிழின வணிகர்கள் அரேபியா வழியாக குதிரை இறக்குமதி செய்து விற்றபோது ராவுத்தர் எனும் பெயர் பெற்றனர். அதன் பிறகுதான் இசுலாமைத் தழுவினர்.

 மீரா கண்ணு எனும் ஆசுகவி புலவர் மிகச் சிறந்த முருக பக்தராக இருந்துள்ளார்.
 அவரது கடனை முருகனே அடைத்ததாக திருச்செந்தூர் தல புராணம் கூறுகிறது.

 1930 களில் உறையூர் காதர் பாட்ஷா என்பவர் முருகன் மீது பல பாடல்கள் பாடியுள்ளார்.
 "சுருளிமலை மீது மேவும் சீலா.."  எனும் பாடல் மிகவும் புகழ்பெற்றது

 புதுச்சேரியில் 1970களில் முகம்மது கௌஸ் எனும் இசுலாமியர் முருகன் கோவிலே கட்டியுள்ளார்.
 இன்றும் அவரது குடும்பம்தான் கோவிலை நிர்வகித்து வருகிறது.

 முருகனை இசுலாமியர் வழிபடுவது அதிசயமோ அரிதானதோ இல்லை!
முப்பாட்டன் முருகன் அனைவருக்கும் ஆனவன்! 
 

Wednesday, 11 June 2025

ஒரே அடியில்...

 ஒரே அடியில்...

 வீராவும் செல்வமும் ஒரு பெரிய குடோனில் வேலை செய்துவந்தனர்.
 அதில் வீரா கொஞ்சம் சீனியர்.
குண்டாக நீளமான முடியுடன் இருப்பான்.
 டியோ ஸ்கூட்டியில் வருவான்.
வாய்த்துடுக்கு அதிகம்!
 எவரையும் நொடிப் பொழுதில் கவுன்ட்டர் போட்டு காலி செய்துவிடுவான்!
 செல்வம் கொஞ்சம் சின்ன பையன்.
கருப்பாக ஒல்லியாக உயரமாக இருப்பான்.
 பழைய ct 100 வண்டியில் வருவான்!
ஆனால் அந்த பழைய வண்டியை திறமையாக ஓட்டுவான்! 
 எப்போதும் மொட்டைத் தலையுடன் இருப்பான்!
கேட்டால் பெற்றோர் வேண்டுதல் என்பான்.
 
 செல்வத்தைக் கண்டால் வீராவுக்கு கொண்டாட்டம் தான்!
வெளிப்படையாக ரேகிங் செய்வான்.
 குடோனில் வேலைபார்த்த பெண்கள் முன்னிலையில் செல்வத்தை கலாய்த்து தள்ளுவான்! 
 செல்வம் முதலில் அமைதியாக இருந்து பார்த்தான்.
 பிறகு சரிக்கு சரி பேசிப் பார்த்தான்.
வீராவின் நாக்கு வலிமைக்கு செல்வத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை!
 அங்கே வேலைசெய்யும் இளம்பெண்களும் செல்வத்தை கடந்துபோகும் போது நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள்.
 ஒருநாள் வீரா வண்டியை சர்வீஸ் விட்டிருந்தான்.
செல்வம் தான் அவனை கூட்டிவந்தான்.
 அன்று செல்வத்துக்கு பிறந்தநாள்.
வீரா அவனிடம் மதியம் பிரியாணியும் செவனப்பும் பீடாவும் வாங்கித்தர சொல்லி ஏறத்தாழ மிரட்டிக் கொண்டிருந்தான்!
 சரியென்று இருவரும் வெளியே வந்தனர்!
வெளியே மரத்தடியில் காற்றோட்டமாக பெண்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
 செல்வம் வண்டியில் ஏறி உதைத்து ஸ்டார்ட் செய்தான்.
வண்டியில் ஏறிய வீரா "டிரைவர் வண்டிய ஹோட்டலுக்கு விடு" என்றான்.
 உடனே பெரிய உறுமலுடன் வண்டியின் முன்சக்கரம் மேல தூக்கியது!
 அடுத்த நொடி புழுதிக்கு மத்தியில் செல்வம் வண்டியை திடமாக பிடித்தபடி தரையில் நின்றுகொண்டு இருந்தான்!
முன்விளக்கு வானத்தை நோக்கி இருக்கும்படி பைக் நட்டமாக நின்றுகொண்டு இருந்தது!
 வீரா கீழே மல்லாக்க விழுந்து கிடந்தான்! 
 பெண்கள் விழுந்து விழுந்து  சிரித்து கொண்டிருந்தனர்! 
 

Friday, 6 June 2025

ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிப்பு

ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிப்பு
நமக்கு எல்லா வசதிகளையும் செய்வது மாநில அரசு. மாநில அரசை விட அதிகம் வரி வாங்கும் மத்திய அரசு நமக்கு செய்வது ரயில், தபால், ராணுவ பாதுகாப்பு போன்றவை மட்டுமே!
மத்திய அரசு எப்படி தமிழகத்தைச் சுரண்டி கொழுக்கிறது என்பதை பலமுறை சான்றுகளுடன் பார்த்துள்ளோம்.
தற்போது மத்திய அரசால் நமக்கு ஓரளவு பலனளிக்கும் ரயில்வே பற்றி பார்ப்போம்.
கேரளாவுடன் ஒப்பிட்டால் தமிழகம் ரயில்வே வளர்ச்சியில் 20 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது.
இத்தனைக்கும் இவ்விரு மாநிலங்களும் ஒரே (தென்னக ரயில்வே) மண்டலத்தில் உள்ளன.
அதாவது மாநில எல்லைகள் வேறு ரயில்வே எல்லைகள் வேறு (காண்க: படம்)
இதில் தென்னக ரயில்வே மண்டலத்துக்கு ஒதுக்கப்படும் நிதியும் திட்டங்களும் கேரளாவுக்கு பலனளிக்கும் வகையில் செலவு செய்யப்படுகின்றன.
இது பற்றி 02.09.2022 இல் தினகரன் வெளியிட்ட செய்தி வருமாறு,
கேரளாவுக்கு அடிக்கும் ஜாக்பாட்!
ரயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிப்பு:
கிடப்பில் கிடக்கும் நீண்ட கால கோரிக்கைகள்
நாகர்கோவில்:
கேரளாவில் ரயில்வே துறை சம்பந்தமான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி, துவங்கி வைத்துள்ளார். மேலும் பல்வேறு புதிய ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளார்.
இதில் முக்கியமாக 750 கோடியில் 27 கி.மீ தூரம் உருவாக்கப்பட்ட குருப்பந்தாரா - கோட்டயம் - சிங்கவனம் புதிய ரயில் பாதை இரு வழி பாதை திட்டம்
மற்றும் 76 கோடியில் கொல்லம் - புனலூர் மின்மயமாக்கல் திட்டம் உள்ளிட்டவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இது தவிர எர்ணாகுளம் சந்திப்பு, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ள இருப்பு பாதை தடத்தில் எர்ணாகுளம் - கோட்டயம்- காயங்குளம் மார்க்கத்தில் புதிய மெமு ரயில் சேவையும் துவங்கப்பட்டுள்ளது.
கொல்லம் - புனலூர் மார்க்கத்தில் இயங்கி வந்த இரு ரயில்கள் மெமு ரயில் ஆக மாற்றம் செய்யும் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது.
கேரளாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டத்தில் கொல்லம் - புனலூர் மின்மயமாக்கல் திட்டம் முழுக்க முழுக்க தமிழகத்தில் உள்ள மதுரை கோட்டம் நிர்வகித்து வருகிறது.
கோட்டம் எதுவாக இருந்தாலும் கேரள மாநிலம் அதிகளவில் புதிய ரயில்களை பெறுகிறது.
ஆனால் தமிழகம் அந்தளவுக்கான ரயில்வே திட்டங்களை பெற முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டங்களும் அதை நிரூபிக்கும் வகையில் இருப்பதாக ரயில் பயணிகள் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அப்படியே தமிழகத்தில் புதிய ரயில்வே திட்டம் வந்தாலும் கூட, கேரள பயணிகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன்படும் விதத்தில் தான் இயக்கப்படுகிறது என்பதும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருவனந்தபுரம் - திருநெல்வேலி மெமு ரயில் சேவை இன்னும் கனவாகவே உள்ளது.
இந்த பகுதி மின்மயமாக்கல் 2014-ம் ஆண்டு நிறைவு பெற்று இதுவரை ரயில்வே துறையால் மெமு இயக்கப்படவில்லை.
நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கத்தில் இயங்கும் பழைய ரயில்கள் மாற்றம் செய்து விட்டு மெமு ரயில்களாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை தெற்கு ரயில்வே தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
இதே போல் சென்னை முதல் மதுரை வரை இருவழி பாதை பணிகள் முடிந்து 5 வருடங்கள் ஆகி விட்டது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதை இரு வழியாக மாற்றும் பணிகள் 80 சதமானம் முடிவு பெற்றுவிட்டன. ஆனாலும் இந்த பாதையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பதும் இன்னும் பரிசீலனை செய்யப்படாமல் உள்ளது.
சென்னையிலிருந்து செல்லும் ரயில்களான
தாம்பரம் - ஐதராபாத் சார்மினார்,
சென்னை- புதுடெல்லி ஜிடி எக்ஸ்பிரஸ்,
சென்னை - ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
போன்ற ரயில்களை மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையிலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
தமிழ்நாட்டில் சமீபத்தில் திண்டுக்கல் - பொள்ளாச்சி, திருவாரூர் - காரைக்குடி, மதுரை - தேனி ஆகிய பகுதிகள் அகல பாதையாக மாற்றம் செய்யப்பட்டு விட்டது. இதில் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் ரயில் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக ரயில் வசதி இல்லாத தேனி மாவட்ட மக்களுக்கு கூட தேனி - சென்னை புதிய ரயில் சேவையை தொடங்க வில்லை.
இவ்வாறு செய்வதை பார்க்கும் போது ரயில்வே துறையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்பதை நன்கு அறிய முடிகின்றது என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் செயலாளர் எட்வர்ட் ஜெனி கூறினார்.
கடந்த இருபது வருடங்களாக ஒவ்வொரு ரயில் பட்ஜெட்டில் தமிழகத்தை போல் எதிர்கட்சி எம்.பிக்கள் அதிகம் உள்ள கேரளா ஜொலித்தது.
பாரதிய ஜனதா ஆட்சியிலும் இது தொடர்ந்து கொண்டே வருகிறது.
ஆனால் தமிழ்நாடு ரயில்வே துறை வளர்ச்சியில் கேரளத்தை விட இருபது வருடம் பின் தங்கி காணப்படுகிறது.
இந்த நிலையை மாற்ற தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
4 செப்., 2022 

கண்ணுக்கு கண்

கண்ணுக்கு கண்!

 தமிழர் எல்லைப் பகுதி கர்நாடகத்துடன் சேர்க்கப்பட்ட காரணத்தால் தமிழகத்தில் ஒரு கன்னடர் இருக்கிறார் என்றால் எதிர்ப்பக்கம் கர்நாடகத்தில் இரண்டு தமிழர்கள் இருக்கின்றனர்!
கலவரம் வரும் சூழல் உருவாகி உள்ளது!
 அப்படியே தமிழருக்கு இரண்டு கண்கள் போகும் அதேநேரத்தில்  கன்னடருக்கு ஒரு கண் தான் போகும் என்றாலும் நாம் எதிர்த்து சண்டையிட வேண்டும்!
 1991 இல் கன்னடர் தமிழரை அடித்தபோது வீரப்பனார் திருப்பியடித்தார்!
 அவர் இருந்த வரை அடுத்த கலவரம் வரவில்லை!
 தமிழர்களான நமது ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒரு வீரப்பன் இருக்கிறான்! 
 நாம் இம்முறை நிமிர்ந்து நிற்போம்!
அடிக்கு அடி கொடுப்போம்! 
 துளு, குடகு, கொங்கணி என சிறுசிறு இனங்களையும் மராத்திய பேரினத்தையும் நம் அணியில் சேர்ப்போம்!
கன்னடர் கொட்டத்தை அடக்க நம்மால் முடியும்!
 இறுதி வெற்றி நமதே! 

இறுதிக் கட்டத்தில் கன்னடர் தமிழர் மோதல்

இறுதிக் கட்டத்தில் கன்னடர் தமிழர் மோதல் 

 இதே நாம் தனிநாடாக வல்லரசாக இருந்திருந்தால் கன்னடர் தமது மொழி தமிழில் இருந்து வந்தது என்பதை ஒத்துக்கொண்டு இருப்பார்கள்!
 கன்னடம் தமிழில் இருந்து வரவில்லை என்று கன்னடர் சொல்வது ஒருவன் தனக்கு அப்பன் பெயரே தெரியாது என்று சொல்வதைப் போன்றதாகும்!
 கன்னடரை நாம் குறைத்து எடைபோடக் கூடாது!
நமக்கு அழிவு அவர்களால்தான் நடக்கப் போகிறது!
 இது 2000 ஆண்டுகள் தொடரும் பகை!
 அதாவது கரிகாலன் தந்தை காலத்தில் இந்திய துணைக்கண்டத்தை விழுங்கிவிட்டு எஞ்சியிருந்த தமிழகத்தை நோக்கி வந்த மௌரிய பேரரசை வழிநடத்தி வந்தது கர்நாடகப் பகுதி வடுகரே! 
 அன்று மூவேந்தர் கூட்டணிப்படை பெரும்பாடுபட்டு இப்படையெடுப்பை முறியடித்தது!  
 கர்நாடகத்தின் பாழி நகரில் இருந்த படைமையத்தை அழித்தே போர்முடிவுக்கு வந்தது.
 அப்போது கன்னடம் ஒரு தனிமொழியாகவே இல்லை திரிந்த மொழியாக இருந்தது!
 அதாவது கன்னடர் கன்னடராவதற்கு முன்பே நமக்கு எதிரிகளாகி விட்டனர்.
 அதன் பிறகும் கன்னடர் மூன்று முறை தமிழகத்தைப் புரட்டிப்போட்டு உள்ளனர்!
 வடதமிழகம் தவிர்த்து பாண்டிய நாடு வரை பிடித்த களப்பிரர் கன்னடரே! 
 விஜய நகர அரசாக தமிழகத்தைப் பிடித்ததும் கன்னடர்தான்!
 (கன்னடரால் நாயக்கர்களாக நியமிக்கப்பட்ட தெலுங்கர் பிறகு தனியரசுகளை நிறுவினர்.
 இந்த நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பெருமளவு ஆந்திராவிலிருந்து தெலுங்கர் குடியேறி நிலவுடைமை பெற்று தமிழகத்தில் வலுவாக நிலைபெற்றனர்)
 நாயக்கர் காலத்திலும் தென்தமிழக பாண்டிய சிற்றரசுகளை ஒழிக்க முடியாமல் திணறிய தெலுங்கு நாயக்கர்கள் வித்தலராயன் (அ) வெங்கலராசன் எனும் கன்னட தளபதியை அழைத்து வந்தே பாண்டிய வாரிசுகளை இல்லாதொழித்தனர்.
 இந்த படுகொலைக்கு பரிகாரமாக திருநெல்வேலியில் இவன் வெட்டியதே கன்னடியன் கால்வாய் எனும் மாபெரும் கால்வாய் என்று நம்பப்படுகிறது! 
 வித்தலராயன் பற்றி மறைத்து தாமே பாண்டியரை வென்றதாக நாயக்கர்கள் காட்டிக்கொண்டனர்!
 கன்னடியன் கால்வாய்க்கு வேறொரு கட்டுக்கதையை எழுதிவைத்தனர்! 

 தமிழரும் சளைத்தவர் இல்லை!
 இந்திய துணைக்கண்டத்தின் மையம் அதாவது கன்னோசி வரை வென்ற புலிகேசி தமிழகத்தில் பல்லவ நாட்டை நிர்மூலமாக்கிவிட்டு பாண்டிய நாடு வரை வந்து கொடி நாட்டிச் சென்றவன்!
 நமக்கு ராசராசன் போல கன்னடருக்கு புலிகேசி!
 பல்லவர் மீண்டெழுந்து பாண்டியருடன் கைகோர்த்து சாளுக்கிய அரசை வென்று தலைநகர் வாதாபியை அழித்து புலிகேசியின் கொட்டம் அடக்கினர். 
 ராசேந்திரன் படையெடுத்த காலத்தில் கன்னட நாட்டு பிராமணரையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்றதாக அந்த நாட்டு கல்வெட்டு கூறுகிறது!
 (சில ஆண்டுகளுக்கு முன் அன்னிகேரி எனுமிடத்தில் பல எலும்புக்கூடுகள் ஓரிடத்தில் கிடைத்த போது இந்த படுகொலை சோழர் செய்தது என்று கன்னடர் வதந்தி பரப்பினர்)
 மைசூர் அரசு திருமலை நாயக்கர் காலத்தில் தமிழகத்தின் மீது படையெடுத்து மதுரைக்கு மிக அருகேவரை முன்னேறி வந்தபோது ராமநாதபுரம் மறவர் படைகள் வந்துதான் அப்படையெடுப்பை திருப்பியடித்து புறப்பட்ட இடத்திற்கே தள்ளியது!
 இப்படி வரலாறு நெடுக தமிழரும் கன்னடரும் மோதிக்கொண்டே இருந்துள்ளனர்!
 தமிழக கன்னட எல்லையும் கூட இழுபறியிலேயே இருந்து வந்துள்ளது!
 அதாவது நம் எல்லையை அவர்கள் ஆக்கிரமிப்பதும் நாம் மீட்பதும் என!
 கர்நாடகத்திற்குள் ஏறத்தாழ அம்மாநில மத்தியில் உள்ள தமட்டக்கல் எனுமிடத்தில் 6 ஆம் நாற்றாண்டு தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது! 
 அதில் ஏழூர் சாத்தன் எனும் பெயருள்ளது.
 அப்போது அங்கே தமிழர் அரசாட்சி பரவியிருக்கவும் இல்லை! 
தமிழகத்தினுள் இத்தகைய பழமையான கன்னட சான்று எதுவும் கிடையாது!
 1956 இல் தமிழகத்திற்கு சேரவேண்டிய எல்லை மாவட்டங்களை எத்தனையோ சான்றுகள் இருந்தும் தமிழகத்திற்கு கிடைக்கவிடாமல் பறித்த கன்னடர் ஏற்கனவே இருந்த எல்லையைத் தாண்டி அன்றைய கோவை மாவட்ட ஒரு பகுதியையும் எடுத்துக் கொண்டனர்!
 திராவிட மாயையில் கிடந்த , கிடக்கும் தமிழர் இதை மீட்க முயலவே இல்லை!
 இதுவே நமது இன்றைய தோல்விக்குக் காரணம்!
 குடகு மொழி பேசும் கொடகர் பகுதியில் காவிரி உற்பத்தி ஆகிறது! 
 அவர்களையும் அடக்கி ஒடுக்கிவிட்ட கன்னடர் காவிரி நீரை மறித்து தேவையில்லாமல் தேக்கி தமது மாநில தொழிற்சாலைகளுக்கு வழங்கியும் தமிழகத்தில் அவர்களின் பங்காளிகளான திராவிட அரசுகள் நீரில்லாத ஆற்றில் மணலை அள்ளி விற்றும் மனிதத்தன்மை அற்ற அரசியல் செய்கின்றனர்!
 கேட்டால் கன்னடர்கள் நல்லவர்களாம் சில கன்னட வெறியர்கள் இப்படி அரசியல் செய்கின்றனராம்!
 எனவே நாம் இருவருமே சண்டை போடாமல் இருக்க வேண்டுமாம்!
 இதுவும் ஒரு திராவிடப் பிரச்சாரம்!
அடிப்பவனையும் அடிவாங்குபவனையும் ஒரே தரத்தில் வைப்பது!
 ஒரு உயிருக்கு தண்ணீரை மறுப்பது எவ்வளவு பெரிய பாவம் என்று விலங்குகளுக்கு கூட புரியுமே?!
 கன்னட இனத்தில் ஒருவருக்கு கூடவா இந்த அறிவும் இரக்கமும் இல்லை!
 கர்நாடக ஆறுகள் ஆண்டுக்கு ஆயிரம் டிஎம்சி கடலில் சென்று கலக்கின்றன. 
 ஆனால் தமிழகத்துக்கு வரும் 100 டிஎம்சி நீரை மறித்து அரசியல் செய்கின்றனர்.
 கேட்டால் கடலில் கலக்கும் 10 டிஎம்சி காவிரி நீரை சேமிக்கிறார்களாம்.
 கன்னடரோ உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டது இல்லை!
 அவர்கள் பணிந்தது வீரப்பனார் நீட்டிய துப்பாக்கிக்கு மட்டும்தான்!
 இன்றுவரை தமிழகத்தை ஒரு வெள்ள வடிகாலாக ஒரு சாக்கடையாகவே  பயன்படுத்துகின்றனர் கன்னடர்.
 இதனால் நெற்களஞ்சியமான டெல்டா விவசாயம் பெரும்பங்கு அழிந்துவிட்டது.
 மன்னார்குடி வரை நிலத்தடியில் கடல் நீர் புகுந்துவிட்டது.
 ஹிந்திய அரசு இதைத் தட்டிக்கேட்கவில்லை.
 ஹிந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இத்தனை ஆண்டுகால பகையிருந்த போதும் இப்போது வரை சிந்து நதியை மறிக்கவில்லை!
 தற்போது ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளனரே தவிர நடைமுறையில் எதுவும் செய்யவில்லை! 
 ஹிந்தியாவை நம்பி பல ஆண்டுகளாக போராடி அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தையும் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக பயன்படுத்துகிறது.
 பாகிஸ்தானுக்கு தண்ணீர் விடும் ஹிந்தியருக்கு ஒரு தமிழ்க் குழந்தை தண்ணீர் குடிப்பதில் உடன்பாடில்லை!
 ஹிந்தியர் ஆதரவுடன் காவிரி ஆணையத்திலேயே தீர்மானத்தை நிறைவேற்றி மேகதாது அணை கட்ட கன்னடர் தயாராகிவிட்டனர். 
 இந்த ஆணையம் சூழ்ச்சியாக டெல்டா கால்வாய்களைத் தூர்வார கடன் பெற்றுத்தருவதாக ஒரு அம்சத்தைச் சேர்த்து தமிழக அரசை ஆணைய கூட்டத்திற்கு வரவழைத்து மேகதாது கட்ட தீர்மானம் கொண்டுவந்து தமிழகமும் புதுச்சேரியும் எதிர்த்தும் கூட அத்தீர்மானம் நிறைவேறியுள்ளது.
 இதன் மூலம் வெளிநாட்டு கடனாக தமிழக அரசுக்கு கிடைக்கும் 1400 கோடியில் ஏறத்தாழ 40% திமுகவுக்கு கமிசன் கிடைக்கும்.
 இந்த பணத்திற்காக தீர்மானம் நிறைவேறும் என்று தெரிந்தும் பல ஆண்டுகள் செய்தது போல புறக்கணிப்பு செய்யாமல் கூட்டத்தில் கலந்துகொண்டு பிறகு வெளியே வந்து அயோக்கித்தனம் செய்துவிட்டார்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாடகமாடி பேட்டி கொடுக்கிறார்.
 அதாவது இன்னும் சில ஆண்டுகளில் சொட்டு நீர் கூட தமிழருக்கு கிடைக்காது.
 5கோடி தமிழர்களுக்கு தண்ணீர் இருக்காது!
 இது ஒரு வெளிப்படையான இனப்படுகொலை ஆகும்.
 இந்த இனப்படுகொலை குற்றவாளிகளைத் தான் அதுவும் அவர்கள் வெளிப்படையாக இனவெறுப்பு பேசிக் கொண்டிருந்த போது தான்  தமிழக முதலமைச்சரே நேரில் சென்று பிரச்சாரம் செய்து ஆட்சியில் அமர்த்தினார்.
 ஈழத்தில் ஹிந்தியாவும் சிங்கள அரசும் செய்த இனப்படுகொலைக்கு துணைநின்றது போலவே 
 தமிழகத்திலும் ஹிந்தியரும் கன்னடரும் செய்யவுள்ள நேரடி இனப்படுகொலைக்கு திமுக துணை நிற்கிறது.
 நியாயப்படி தமிழர்தான் கன்னடரை கொலைவெறி கொண்டு அடிக்க வேண்டும்.
 ஆனால் கன்னடர் தொடர்ந்து தமிழரை அடிப்பதும் கொல்வதும் நடக்கிறது.
1982 இல் கன்னடத் திணிப்பை எதிர்த்து போராடிய நான்கு கோலார் தமிழர்களை சுட்டுக் கொன்றதன் மூலம் தொடங்கியது கொலைத் தாண்டவம். 1991 இல் மிகப்பெரிய கலவரம் நடத்தி நூறு பேர் வரை கொன்று பல நூறு பேரை முடமாக்கி 2 லட்சம் தமிழரை அடித்து விரட்டிவிட்டனர் கன்னடர்.
 தொடர்ச்சியாக அவ்வப்போது தமிழரைத் தாக்கியே வந்துள்ளனர்.
 2016 இல் கூட தமிழர்களைக் குறிவைத்து கலவரம் நடந்தது.
 தற்போது நடந்த கிரிக்கெட் மோதல்களையும் இதில் சேர்க்கலாம்.
 இப்படி முழுவெறியுடன் இருக்கும் கன்னடர் மேகதாது அணையைக் கட்டிவிட்டால் தமிழர் அழிவுக்காலம் தொடங்கிவிடும்.
 நாம் குடகு மழைக்குப் போகும் மழை மேகங்களை தடுத்து செயற்கை முறையில் மழை பொழிய வைப்பதைத் தவிர வேறு வழியிருக்காது!
 அப்படிப் பொழிந்தாலும் அது அமில மழையாகவே இருக்கும்!
 திராவிடத்தை வீழ்த்தி இனப்பற்றுள்ள தமிழரை ஆட்சியில் அமர்த்தி மேகதாது அணையைத் தடுக்க வேண்டும்! 
 கன்னடர் கொட்டமடக்க இன்னொரு வீரப்பன் உருவாக வேண்டும்! 
 இந்த தேர்தலை விட்டால் மேகதாது கட்டப்படும்! தமிழகத்தில் நிரந்தர பஞ்சம் வரும்!
 நாம் இன்னொரு சோமாலியா ஆக வேண்டியதுதான்! 
 அதன்பிறகு எத்தனை வீரப்பன்கள் உருவானாலும் பலனில்லை! 
 
 
 
 

Tuesday, 3 June 2025

செங்கிஸ்கான் கருணாநிதி

 செங்கிஸ்கான் கருணாநிதி

 ஈவேரா வசதி படைத்தவர்! ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்! நகர வாசி!
எம்.ஜி.ஆர் ஏழை என்றாலும் அழகும் உடல்வாகும் கொண்டவர்! 
ஜெயலலிதா கூட ஓரளவு பின்புலம் கொண்டவர்! அழகு வாய்க்கப் பெற்றவர்! நகர வாசி!
 பழனிச்சாமி கூட சமூக மற்றும் பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்! உடல்வாகு வாய்க்கப் பெற்றவர்! கல்வித் தகுதியும் உண்டு!
 ஆனால் கருணாநிதி அப்படி இல்லை!
 அழகு இல்லை! உடல்வாகு இல்லை! ஒரு கண் குறைபாடு! தகர குரல்!
 கிராமத்தில் பிறந்தவர்!
 ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்!
கல்வியறிவும் பெரிதாகக் கிடையாது!
 தனிமனிதனாக திருட்டு ரயில் ஏறி சென்னை வந்துள்ளார்! 
 இப்படிப்பட்ட ஒரு மனிதர் ஆசியாவிலேயே பணக்காரனாக உயர்ந்திருக்கிறார்!
 ஒரு இனத்தையே சுரண்டி அழித்து பெரிதாக எந்த தண்டனைக்கும் ஆளாகமல் 
3 மனைவிகள் பல துணைவிகள் என சுகபோகமாக 90 வயது வரை வாழ்ந்து
 எந்த தகுதியும் இல்லாத தன் வாரிசுகளை ஆதிக்க சக்தியாக ஆக்கிவிட்டு செத்திருக்கிறார்!
 இந்த மண்ணில் இன்னும் 30 ஆண்டுகளுக்கு அவருடைய தாக்கம் இருக்கும்!
 அவரை நினைக்கும்போது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது! 
 கருணாநிதி செங்கிஸ்கான் உடைய மறுபிறவி என்றே சொல்லலாம்! 
#HBDfatherOFcorruption