Tuesday, 14 October 2025

உதயநிதி செய்யும் கருணாநிதித்தனம்

உதயநிதி செய்யும் கருணாநிதித்தனம்

 உதயநிதியின் நெருக்கம் கிடைத்த பிறகு வாழை படம் வெளியாகிறது! 
 மறுநாளே தேவேந்திரர் அதிகம் வாழும் பகுதிகளில் மாரி செல்வராஜ் படம் போட்டு அவரது ரசிகர் மன்றம் என்கிற பெயரில் ப்ளக்ஸ் வைக்கப்பட்டது! 
 அந்த பதாகையில் அப்பகுதியின் பெயர் இல்லை! அந்த ஊரைச் சேர்ந்த யாருடைய புகைப்படமும் இல்லை !
 அதாவது தமிழகம் முழுக்க பொத்தாம்பொதுவாக ஒரு பதாகை அடித்து வைக்கப்பட்டது!
 இதை வைத்தவர்கள் திமுக தொண்டர்கள் என்பதைச் சொல்லவேண்டியது இல்லை!
 அதாவது "இவர்தான் உங்கள் அடையாளம்! பிதுக்கப்பட்ட இவரை எப்படி தூக்கிவிட்டோம் பார்" என்று சொல்லாமல் சொல்கிறார்களாம்!
 ஆனால் வாழை படத்தில் சோ.தர்மன் படைப்பை ஆட்டையைப் போட்டு வழக்கம்போல தாழ்வு மனப்பான்மையை புகுத்தி கதறியிருந்தார் மா.செ!
 படமும் வெற்றியடைய வில்லை! 
 நொடிக்கு ரூ.9000 வருமானம் வரும் உதயநிதிக்கு  இது ஒரு பொருட்டா?!
 இப்போது தேவேந்திர குலத்தைச் சேர்ந்த கதாநாயகனை வைத்து அடுத்த படம் வருகிறது! 
 ஒருபக்கம் திராவிடத்தை தாங்கி நிற்கும் திமுக அதாவது கருணாநிதி குடும்பம்! 
 மறுபக்கம் அதை எதிர்த்து நிற்கும் தமிழ்தேசியத்தை தாங்கி நிற்கும் தேவேந்திர சமூகம்! 
 ரஞ்சித்தை வைத்து ஏவிய தலித்திய பாச்சா இவர்களிடம் பலிக்கவில்லை! 
 தற்போது நெல்லை கவின் ஆணவக் கொலை நடந்த போது அதை சாதி மோதலாக மாற்ற ஏவப்பட்ட கிருஷ்ணசாமி ரெட்டியார் மகனையும் இச்சமூகம் இனம் கண்டுகொண்டனர்!
 அத்தனை சமூகங்களையும் ஏதோ ஒரு வகையில் விலைக்கு வாங்கிவிட்ட திமுக தேவேந்திரரை பணிய வைக்க முடியாமல் திணறுகிறது!
 திமுக நடத்திய தாமிரபரணி படுகொலையில் பாதிக்கப்பட்ட பின்னணி கொண்ட மாரி செல்வராஜை விலைக்கு வாங்கியது! 
 திருநெல்வேலி வெள்ளம் வந்தபோது உதயநிதி சூட்டிங்குக்கு உதவியாக இருந்த மாரி செல்வராஜ் டீம் போனது!
 மாரி என்னவோ தேவேந்திரர் களுக்கெல்லாம் பிரதிநிதி போலவும் அவர் வந்து வெள்ளத்தையே வற்றவைத்து விட்டது போலவும் ஊடகங்கள் ஊதின! 
  இதில் எதுவுமே தேவேந்திர சமூகத்திடம் எடுபடவில்லை!  
 இம்முறை மீண்டும் மா.செ தேவேந்திரர் நாடார் மோதலை மையமாக வைத்து படம் எடுப்பதாக சொல்கிறார்கள்.
 ஒரு தேவேந்திர குடும்பத்துக்கும் ஒரு நாடார் குடும்பத்துக்கும் வயல்வெளியில் வந்த வரப்பு தகராறு இரு சமூக மோதலாக மாறி பல்வேறு பரிணாமங்களை அடைந்து பல உயிர்கள் பலியாயின.
 இதில் முதல் கொலையும் இரண்டாவது கொலையும் தேவேந்திர சமூகம் தான் செய்தது! 
 இதைச் செய்த பசுபதி பாண்டியன் கொல்லப்பட்ட பிறகு இது முடிவுக்கு வந்தது!
 இறுதி கொலை பசுபதி பாண்டியன் வீட்டில் ஸ்லீப்பர் செல்லாக இருந்த ஒரு தேவேந்திர பெண் பசுபதி விசுவாசிகளால் கொல்லப்பட்டது! 
 ஸ்டெர்லைட் பிரச்சனையை மடைமாற்ற உருவாக்கப்பட்ட மோதல்தான் இது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
 கிட்டத்தட்ட நடந்து முடிந்துவிட்ட ஒரு பிரச்சனையை மறுபடி கிளறவுள்ளனர்.
 தேவேந்திரருக்கு ஒரு தலைமை உருவாகாமல் தடுத்துவிட்ட திராவிடம் தன் முயற்சியில் சற்றும் சளைக்காமல் வடக்கு போல தெற்கையும் இரண்டாக பிளந்து நடுவில் அமர முயன்றுகொண்டே இருக்கிறது!
 தேவேந்திர மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.
 மற்ற அனைத்து சமூகங்களும் கவனமாக இருக்க வேண்டும்! 
 
 

No comments:

Post a Comment