Sunday, 14 December 2025

செங்கோட்டை சபிக்

 செங்கோட்டை சபிக் 

 செங்கோட்டை யில் கன்னட கொடியுடன் வலம் வந்த வண்டியை மறித்து கொடியை அகற்ற வைத்த நாம் தமிழர் மூத்த நிர்வாகி அண்ணன் முகமது சபிக் அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டார்.

 தென்காசி பொறுப்பாளர் வின்சென்ட் அவர்கள் பிணை எடுக்க ஆவன செய்துள்ளார்.
 இவ்வழக்கில் மேலும் சேர்க்கப்பட்டவர்கள் செங்கோட்டை பகுதி நிர்வாகிகள் காமராசு மற்றும் ஜெயசெல்வன் ஆகியோர் ஆவர்.
 (அதாவது ஒரு இசுலாமியர், ஒரு தேவேந்திரர், ஒரு கிறித்தவ நாடார்) 
 
 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் செங்கோட்டை பகுதி  பொறுப்பாளர்கள் மற்றும் கடையநல்லூர் நிர்வாகிகள் என 8 பேர் அண்ணன் சபிக் அவர்களது இல்லம் சென்று சிறிதளவு நிதி உதவி செய்துவிட்டு நாளை மறுநாள் பிணை கிடைத்துவிடும் என்று தைரியம் சொல்லிவிட்டு வந்தோம்.
 பிணையும் கிடைத்துவிட்டது.
 
 பி.கு: சமூக வலைகளில் இச்செய்தி பரவியதே கைதுக்கு காரணம் என்பதால் இச்செய்தி ஒரு வாரம் தாமதமாக பகிரப்படுகிறது 

 


 

No comments:

Post a Comment