சாதிய கட்டப் பஞ்சாயத்து
தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் போலீஸ் வாகனத்துல் சிறுவன் கடத்தல் வழக்கில் உற்று நோக்கினால்..
சம்பந்தப்பட்ட காதல் ஜோடியில் பெண் குடும்பம் நாயுடு சமூகத்தைச் சேர்த்தவர்கள்.
பையன் வன்னியர் என்று சொல்கிறார்கள்.
இவர்களது காதல் திருமணத்தை ஏற்காக பெண்ணின் தந்தை வனராஜா நாயுடு தன் சமூகத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் தாதாவைத் தொடர்புகொள்கிறார்.
இந்த மகேஸ்வரி காவல்துறையில் அதிகாரியாக இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்.
ஆனாலும் பல போலீஸ் உயரதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்பைத் தொடர்பைப் பேணுகிறவர்.
போலீஸ் அதிகாரிகள் ஆதரவுடன் கொடைக்கானலில் அடுக்கம் பகுதியில் வடயிந்தியர் ஒருவருக்கு சொந்தமாகன பெரிய எஸ்டேட்ட ஒன்றை இந்த பெண் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்.
இவருக்கு மிக நெருக்கமானவர் ஏடிஜிபி ஜெயராம்.
இவர் கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நபர்.
வனராஜா தரப்பு மகேஸ்வரியிடம் காதல் ஜோடியைப் பிரித்து தம் சாதிய கௌரவத்தைக் காப்பாற்ற ஒரு கோடி ரூபாய் வரை பேரம் பேசியுள்ளது!
இவர்கள் ஏடிஜிபி ஜெயராம் மூலம் அந்தப் பகுதியில் செல்வாக்குள்ள எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி யை அணுகுகிறார்கள்.
சாதிமறுப்புத் திருமணம் செய்யும் காதல்ஜோடிகளைப் பிடித்து கட்டப் பஞ்சாயத்து செய்யும் அனுபவம் உள்ள (பறையர் சமூகத்தைச் சேர்ந்த) ஜெகன்மூர்த்தி கும்பல் களத்தில் இறங்குகிறது.
ஏடிஜிபி யின் அரசு வாகனத்திலேயே மகேஸ்வரி மற்றும் ஜெகன்மூர்த்தியின் ஆட்கள் காதல்ஜோடி தங்கியிருந்த வீட்டுக்குப் போகிறார்கள்.
அங்கே அவர்கள் இல்லை அதனால் மாப்பிள்ளை பையனின் தம்பியை கடத்திக் கொண்டு போய் அவர்களது குடும்பத்தை மிரட்ட தொடங்குகின்றனர்.
ஆனால் விசயம் வெளியே தெரிந்து பிரச்சனை பெரிதாக ஆக அந்த பையனை இறக்கிவிட்டு தப்பிவிட்டனர்.
இதையடுத்து நேர்மையான ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் மகேஸ்வரி குழு கைது செய்யப்படுகிறது.
பூவை மூர்த்தி கைதுக்கு பயந்து தலைமறைவாகிறார்.
அவர் முன்ஜாமின் கேட்டு போட்ட மனு நீதிபதி வேல்முருகன் பார்வைக்கு வருகிறது.
இந்த நேர்மையான நீதிபதிதான் ஜெகன் மூர்த்தியை நேரில் வரச் சொல்லியும் ஏடிஜிபி யை கைது செய்யவும் உத்தரவிடுகிறார்.
இருவரையும் கடுமையாக எச்சரித்து விசாரணைக்கு அனுப்பிவைக்கிறார்.
No comments:
Post a Comment