Sunday 2 June 2024

அறிவுத் திருட்டு அல்லது பெண் ஏன் அடிமையானாள்

அறிவுத் திருட்டு அல்லது பெண் ஏன் அடிமையானாள் 

பதிவின் சுருக்கம்:-
 ஈவேரா எழுதிய பெண்ணுரிமைப் புத்தகம் நோபல் பரிசு பெற்ற புத்தகத்தின் அப்பட்டமான காப்பி.
 
 பொதுவுடைமை கருத்தியல் உலகம் முழுவதும் பரவத் தொடங்குகிறது. அதில் முக்கியமாகப் பெண்களின் பங்கு இருக்கிறது.
 அன்று காலனியவாத நாடுகள் இதை எதிர்கொள்ள இந்த வர்க்கப் போராட்டத்தை பாலினப் போராட்டமாகக் குழப்ப பெண் விடுதலை என்று ஆரம்பித்தார்கள்.
George Orwell, Bertrand Russell, Denis Healey, Stephen Spender, Guy Burgess போன்ற எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தத்துவ மேதைகள் என சமூகத்தில் பிரபலமானவர்களை விலைக்கு வாங்கி பெண்களைத் தூண்டிவிட்டு ஆண்களுக்கு எதிராக தனித்து தற்குறித்தனமாக இயங்கவைக்கும் கருத்துகளைப் பரப்பினர்.
 இதை எவ்வாறு செய்தோம் என்று பிரிட்டன் உளவுத்துறை (MI6) காலம்கடந்து விட்டதாக எண்ணி தற்போது வெளியிட்டுள்ளது.
 இதில் Bertrand Russell என்பவர் புரட்சிகர சிந்தனையாளராக தம்மைக் காட்டிக்கொண்டு எழுதிய புத்தகம் Marriage and Morals. இது எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தியதால் ஏகாதிபத்திய அரசுகள் இதற்கு நோபல் கிடைக்க வழிசெய்தன.
 இதை அப்படியே நகலெடுத்து 'பெண் ஏன் அடிமையானாள்' என்று ஈவேரா எழுதியுள்ளார்.
 இரண்டு நூல்களிலும் இருக்கும் தலைப்புக்கள் கூட ஒத்துப் போகின்றன.
1)கற்பு - Sexual ethic 
2)காதல் - Romantic Love 
3)விபச்சாரம் - Prostituition 
4) கல்யாண விடுதலை - Divorce 
5) ஆண்மை அழிய வேண்டும் - Fatherhood dominion and Fatherhood Unknown.
 மேலும் Eugenics, Psychology தொடர்பான அறிவியல் தலைப்புக்களை மொழிபெயர்க்க இயலாமல் அவற்றை தவிர்த்துவிட்டார்.
 அரிஸ்ட்டாட்டில், பிளாட்டோ  என வரும் இடங்களில் வள்ளுவரையும், குறளையும் திணித்து இருக்கிறார்.
 இன்னமும் வேடிக்கை என்னவென்றால் வீரமணி இந்த நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் ஈவேரா சிந்தனைகள் ரஸ்ஸல் சிந்தனையுடன் ஒத்துப்போவதாக எழுதியிருப்பது தான்.

Кришна Кумар (முனைவர். கிருஷ்ணா) அவர்களின் முழுமையான பதிவு:-

'பெண் ஏன் அடிமையானாள்' எனும் முழு 'யுனெஸ்கோ' பித்தலாட்டம். 


காலனிய கைக்கூலிகளின் எதிர்ப்புரட்சி -வழமையான வரலாறு. கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக தமிழர்களுக்கு பெண் உரிமை, பெண் விடுதலை, பெண்ணியம் குறித்தான விழிப்புணர்வை திரு ஈ வெ ராமசாமி அவர்கள் தான் ஏற்படுத்தியதாக, தொடர்ந்து ஊடகங்கள்,  அரசியல்வாதிகள், அரசு செய்திக் குறிப்புகள், பள்ளிக் குழந்தைகளின் பாட புத்தகங்கள் மற்றும் அரசு பாட நூல் நிறுவனங்கள் வழியாக மக்கள் மனதில் தொடரந்து திணிப்பதை உணரலாம். பல்லாயிரம் கோடி நிதியுடன் இயங்கும் திராவிட அரசியல் நிறுவனங்களும், திராவிட அரசியல் கட்சிகளும் ஆண்டு தோறும் 'பெண்ணிய போராளி விருது, பெண் சாதனையாளர் விருது' என்றெல்லாம் திரு ஈ வெ ராமசாமி பெயரிலும், சர்ச்சைக்குரிய அவரது கடைசி மனைவி மணியம்மை பெயரிலும் வழங்குவதையும் அறியலாம்.
குறிப்பாக, திராவிட அரசியல் கட்சிகளின்,  நிறுவனங்களின், அக்கட்சி தலைவர்களின் குடும்பங்களின் ஊது குழல்களாக இருக்கும் பல பெண்களும் ஆண்டு தோறும் இவ்விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப் படுகின்றனர்.
மேலும் அவர்கள் அதற்கு முன்னரும், அதற்கு பின்னர் மிக வீரியமாகவும் மேற்சொன்ன அரசியலுக்கும், அவர்கள் குடும்பங்களுக்கும் விசுவாசமாக இருப்பதோடு, பெண்மை, பெண் விடுதலை, பெண்ணியம் போன்றவற்றை உலகுக்கு கண்டுபிடித்து உணர்த்தியதே திரு ஈ வெ ராமசாமி அவர்கள்தான் என்பார்கள்.
மிக குறிப்பாக, இப்படியான விருதுகளை பெற்றவர்கள் திராவிடத்தாரின் ஆங்கிலத்தில் வரும் lapdog எனும் பதம் போல, செல்ல வளர்ப்பு நாய்களாக மாறி திராவிட அரசியலுக்கு எதிரான தமிழர்களை பிராண்டி குதறுவதும் உண்டு. தமிழகத்தில் பெண்ணிய அரிதாரம் பூசி, அவதாரம் எடுத்து பவனி வரும் இப்படிப்பட்ட பெண்களை கணக்கில் எடுத்து பார்த்தால் திரு ஈவெ ராமசாமி அவர்களின் 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற நூல்தான் தங்களுக்கு அறிவூட்டி, செறிவூட்டி தங்களை பெண்கள் என்றே உணர வைத்ததாக பக்கம் பக்கமாக பேசியும் எழுதியும் வருவார்கள். அப்படிப்பட்ட திரு ஈவெ ராமசாமி அவர்களின் 'பெண் ஏன் அடிமையானாள்' நூல் குறித்து இளந்தலைமுறை தமிழர்கள் அறிந்து கொள்வது மிக அவசியம்.
நிற்க. முதல் உலகப்போருக்கு பிந்தைய காலத்தில் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவின் பல பகுதிகளிலும் ஐரோப்பியர்களின் காலனிய ஆதிக்கத்திற்கு எதிராக பூர்வ குடிகளின் கிளர்ச்சி வலுப்பெற்ற அதே சமகாலத்தில், (மறுபுறம்) புரட்சிகர இடதுசாரி தத்துவம் உலகெங்கும் வலுப்பெற துவங்கியது. பல நிலப்பரப்புக்களில் காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான உள்ளூர் இளைஞர்களின் சிந்தனையை தூண்டியதே இடதுசாரி தத்துவமாகத்தான் இருந்தது. அதே காலத்தில் ரஷ்யாவிலும், மற்றும் உலகெங்கும் புரட்சிகர செங்கொடி ஓங்கி உயரே பறக்க துவங்கியது. சோவியத் பள்ளியின் அரசியல் தாக்கமும் உலகை துளைத்து, காலனிய எதிர்ப்பு சிந்தனையை செறிவூட்டியது. அந்த 'புதிய அரசியல் சமநிலையின்மையை' சரிகட்ட காலனியவாதம் தனது ஆட்களை, தனது காலனியம் பரவியிருந்த பல்வேறு நிலப்பரப்புக்களில் இறக்கி, முடுக்கிவிட்டது. காலனிய வல்லாதிக்க நிறவெறி ஆங்கிலேயே அரசின் ரகசிய உளவு அமைப்பான MI6ம், அதன் வெளியுறவுத்துறை propaganda நிறுவனமான Information Research Department (IRD)ம் பல பிரபலங்களை ரகசியமாக பணியில் அமர்த்தி செங்கொடிக்கும், சோவியத்தை மையமாக வைத்து தூசி கிளப்பி பூமியின் நாற்புறத்தையும் சூறாவளியாய் தாக்கிய அதன் புரட்சிகர சித்தாந்தத்திற்கும் எதிரான வேலைப்பாடுகளை துவங்கியது. George Orwell, Bertrand Russell, Denis Healey, Stephen Spender, Guy Burgess போன்ற எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தத்துவ மேதைகள் என சமூகத்தில் பிரபலமாக பவனிவந்த பலரும் ஆங்கிலேய காலனிய நிறவெறி அரசின் Payroll'க்குள் வந்தார்கள். இந்த ரகசியங்களை காலாவதியான கோப்புக்கள் என்கிற முறையில் பிரித்தானிய உளவு நிறுவனமே சமீபத்தில் வெளியிட்டு இருந்தது அவர்கள் வெறும் பணத்திற்கு வீழ்ந்தார்களா அல்லது தங்களுக்குள் ஒளிந்திருந்த காலனிய ஆதிக்கவாத நிறவெறியை வாழவைக்க இணங்கினார்களா என்பதை விவாதிப்பதல்ல இக்கட்டுரையின் நோக்கம். இந்த லிஸ்டில் George Orwell'ம், Bertrand Russell'ம் மிக முக்கியமானவர்கள். இருவரும் தங்களை இடதுசாரிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டு, முழுநேரமும் இடதுசாரிகளை வீழ்த்தும் எதிர்ப்புரட்சி வேலையை செய்தவர்கள். இதில் George Orwellன் 'Animal Farm' பற்றி பலரும் அறிவீர்கள். சோசலிஸ்ட் வேடமிட்டு, உளவுபார்த்து சோவியத்துகளுடன் நெருக்கமாக இருந்த முக்கியமான தலைவர்கள் 38 பேரின் பெயர்களை MI6க்கு அவர் வழங்கியது 'Orwell's List' என்று இப்போதும் இழிவாக நையாண்டி செய்யப்படுகிறது அடுத்து, இந்த கட்டுரைக்கு மிக முக்கியமான நபரான 'Bertrand Russell'. இவரும் காலனிய நிறவெறி அரசின் மிக முக்கியமான உளவாளி. ஆசிய தொடர்பான அஜெண்டாவில் வேலை செய்தவர். இந்திய யூனியனின் விடுதலைக்கு முன்னர் இங்கே இருந்த பல தலைவர்களுடன் மிக நெருக்கமான நட்பு பாராட்டியவர். இந்திய யூனியன் உருவாக்கத்திற்கு பிறகும் ஆங்கிலேயே காலனிய அரசின் தாக்கம் இந்திய யூனியனில் இருக்குமாறு விடுதலை ஏற்பாட்டை செய்தவர். அவர் எழுதிய நூல் 'Marriage and Morals'. தன்னை ஒரு சோஷலிஸ்ட்டாக அடையாளப்படுத்திக்கொண்டு இடதுசாரி தத்துவத்தை வீழ்த்த Russell எடுத்த வழிதான் பெண் விடுதலை. அடிப்படையில், ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய உலகில் பெண்களுக்கு ஓட்டுரிமை கூட இல்லாத காலத்திலேயே, சமூகத்தின் சரி பாதியான பெண்களை மானுட சமூகத்தின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தாது அவர்களை வீட்டிற்குள் முடக்கி வைப்பது, மானுட சமூகத்தின் பாய்ச்சலை சரிபாதியாக குறைக்கிறது என்று சொல்லி லெனின் அவர்களை உற்பத்தியிலும், சமூக மற்றும் சோவியத் உருவாக்கத்திலும் பயன்படுத்த துவங்கிய காலம் அது. இப்போதும் ரஷ்ய தெருக்களில் லெனின் தவிர்த்து எங்கெல்லாம் தலைவர்கள் சிலைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் சமமாக பெண்களின் சிலைகளும் இருக்கும். இங்கே சில படங்கள் கமெண்டில். போருக்கு செல்லும் இளைஞன் கைகளில் துப்பாக்கி இருப்பதைப்போல, பெண்களின் தோள்களில் ராக்கெட் லாஞ்சர்கள் இருக்கும்; போருக்கு செல்ல அழைப்பு வந்திருக்கிறது என்பதை காதலிக்கு சொல்ல செல்லும் காதலனிடம் தனக்கும் வேறு ஒரு எல்லைக்கு செல்ல அழைப்பு வந்திருப்பதாக காட்டும் காதலி சிலைகள் ரஷ்ய பூங்காக்கள் தோறும் ஏராளம். இதுதான் கம்யூனிஸ்டுகளின் உண்மையான பெண் விடுதலை. ஆனால் அப்படிப்பட்ட இடதுசாரி தத்துவ எழுச்சியை தடுக்க, பெண்ணிய குதர்க்கவாதம் பேசி, அதை பிளவுபடுத்த முதலாளித்துவ காலனிய வல்லாதிக்கம் Bertrand Russellகளை பயன்படுத்தியது. அதற்கு கூலியாக ஐரோப்பிய காலனிய வல்லாதிக்கம் அவரின் இந்த நூலுக்கு நோபல் பரிசு கொடுத்து கவுரவித்தது. ஆணும் பெண்ணும் ஒன்றுபட்டு சமூக, வர்க்க, மற்றும் மானுட விடுதலை அடைவதை தடுக்க பெண் விடுதலை எனும் பெயரில் அவர்களை பிரித்து தடுத்து எதிர்ப்புரட்சி செய்தது காலனியவாதம். பெண்ணியம் எனும் பெயரில் பெண்களை நுகர்வோர் கலாச்சாரத்தின் பண்டமாக மாற்றி, அவர்களை வெறும் நுகர்வோர்களாக திரித்து, விளம்பர போதை ஏற்றி, சுதந்திரம் என்கிற பெயரில் முதலாளித்துவத்திற்கு அடிமையாக்கியது இப்படியான நூல்கள். காலனிய உளவாளி Bertrand Russell எழுதிய அந்த 'Marriage and Morals' என்கிற நூலின் அச்சு அசல் பிசகாத மொழிமாற்ற நூல்தான் 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற ஈவெ ராமசாமியின் நூல். பொருளடக்கம், உள்ளடக்கம் என யாவற்றையும் 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற அந்த நூலில் 100% மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். இப்படியாக, Bertrand Russell என்கிற காலனிய உளவாளி எழுதிய நூலை ஈவெரா எழுதியதாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் தமிழ் நாட்டில் விளம்பரம் செய்திருப்பது வழக்கமான திராவிட பித்தலாட்டம்தான்.


தங்களை பெண் விடுதலை சேம்பியன்கள் என சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் அறிவீலிகளுக்கு அது ஒரு மொழிமாற்ற என்கிற அடிப்படை அறிவு கூட கிடையாது. அந்த அடிப்படை அறிவு கூட இல்லாத இப்படியான சமூக கழிசடைகளை தமிழக இளையோர் பின்தொடர்ந்து சமூக விடுதலைக்கு துரோகம் இழைக்க கூடாது. அடுத்தவனின் சிந்தனையை திருடி அதில் தன் பெயரை எழுதும் கேவலத்தையும் தாண்டி.. அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற நூலில் ஒரு மிக இழிவான வேலையை செய்திருக்கிறார்கள். அந்த நூலின் முன்னுரையில் திரு வீரமணி அவர்கள் உலகின் முக்கியமான ஆளுமைகள் ஒரேபோல சிந்திப்பார்கள் என்பார்கள். அதைப்போல ஈவெராவும் பெட்ராண்ட் ரசலும் ஒரேபோல சிந்தித்து இருக்கிறார்கள் என்று எழுதி் இருக்கிறார். (படம் கமெண்ட்டில்) ஒரு நூலின் அத்துணை வரியையும் ஒரேபோல சிந்திப்பது உலக அதிசயமல்லவா? 'யுனெஸ்கோ விருது' பெற்றது போல் இந்த அதிசயத்திற்குமல்லவா 'கின்னஸ் விருது' பெற்றிருக்க வேண்டும்? இரண்டு நூல்களிலும் இருக்கும் தலைப்புக்களை பாருங்கள்: 1)கற்பு Vs Sexual ethic 2)காதல் Vs Romantic Love 3)விபச்சாரம் Vs Prostituition 4) கல்யாண விடுதலை Vs Divorce 5) ஆண்மை அழிய வேண்டும் Vs Fatherhood dominion and Fatherhood Unknown 6)கர்ப்பத்தடை Vs The Liberation of Women. மொத்தமாக 'பெண் ஏன் அடிமையானாள்'இல் 10 தலைப்புக்களும் அதன் கருத்துக்களும் மொழிமாற்றம் செய்யப்பட்டவை. Marriage and Moralsஇல் Eugenics, Psychology தொடர்பான அறிவியல் தலைப்புக்கள் வருகின்றன, அறிவியலை மொழிமாற்றம் செய்ய அறிவற்ற திராவிட அறிவிலிகள் அத்தலைப்புக்களை தவிர்த்து விட்டார்கள். இந்த நூலில் அரிஸ்ட்டாட்டில், பிளாட்டோ, கிறிஸ்டியன் பிலாசபி என வரும் இடங்களில் வள்ளுவரையும், குறளையும் திணித்து இருக்கிறார்கள். உலகில் இவ்வளவு கேவலமான, இழிவான வேலையை இவர்களை விட வேறு எவராலும் முடியாது. ஒரு நோபல் பரிசு பெற்ற நூலையே திருடி, அதில் தங்கள் பெயரை எழுதிக் கொள்கிறார்கள் என்றால் இவர்கள் எவ்வளவு இழிவானவர்கள் என்பது விளங்கும். அது மட்டுமல்ல, இவர்களின் செயலை பகுப்பாய்வு செய்யும்போது 'இழிவு' என்கிற வார்த்தையே எவ்வளவு வீரியமற்றதாக இருக்கிறது என்பதை உணரலாம். தமிழர் இனம் ஈன்றெடுத்த சமரசமற்ற போராளி 'தோழர் ஜீவா'. அவர் தனது நூலான 'ஈரோட்டுப்பாதை சரியா' என ஈவெ ராமசாமியின் சித்தாந்தங்கள், குதர்க்கவாதங்கள் குறித்து எழுதி இருப்பார். அந்த நூலின் அட்டைக்கு ஒரு மிகச் சிறந்த வர்ணத்தை தேர்ந்தெடுத்து இருப்பார். அது காலனியவாத ஆங்கிலேய அரசின் கொடியான 'யூனியன் ஜாக்' ஆகும். தோழர் ஜீவா எவ்வளவு நேர்த்தியாக திரு ஈவெ ராமசாமியை 'காலனியவாத கிழக்கிந்திய கம்பெனியின் கைக்கூலி' என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் அவர் உருவாக்கிவிட்டு சென்ற கம்யூனிச இயக்கங்களில் உடல் வளர்க்கும் சாதிய-இனவெறி போலிகள் இன்று அதே 'பெண் ஏன் அடிமையானாளுக்கு' செங்கொடி பாதுகாப்பு தருகிறார்கள். இந்த குறிப்பிட்ட நூல் திருட்டு குறித்து பல பக்கங்கள் ஆதாரங்களுடன் விளக்கலாம். ஆனால் மேலும் ஒரே ஒரு சுவாரசியமான தகவலை மட்டும் இங்கே பகிர வேண்டும். காலனிய வல்லாதிக்கத்தின் கைக்கூலிகளான ஆர்வெல் குறித்தும், ரபெட்ராண்ட் ரஸ்ஸல் குறித்தும் பத்தாண்டுகளுக்கு முன்பே பிராமணிய மருதையனின் 'வினவு' கட்டுரை வரைந்திருக்கிறது. ஆனால் அதை திருடி தனது பெயரில் வெளியிட்டுக்கொண்ட ஈவெரா குறித்து தெரிந்தும் மருதையன் வாய் திறக்கவில்லை. அதைத்தான் தென்னிந்திய பிராமணர்கள்தான் திராவிடர்கள் என்கிறது மனுஸ்மிரிதி. இனப்பற்று!

No comments:

Post a Comment