Tuesday 21 May 2024

ஸ்டெர்லைட் கொன்ற ஈழத்தமிழர்

ஸ்டெர்லைட் கொன்ற ஈழத்தமிழர்

  இலங்கையில் இந்திய அமைதிப்படையால் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடிவந்த ஈழத்தமிழர் தூத்துக்குடியில் குடியேறிய பகுதி மில்லர்புரம்.
 இந்தப் பெயர் முதல் கரும்புலி கேப்டன் மில்லர் அவர்களின் பெயர் ஆகும்.
 இதில் சிலோன் காலனி எனும் பகுதி இப்போதும் முழுக்க ஈழத்தமிழர் வசிப்பது.
 இப்பகுதியைச் சேர்ந்த ஈழத்தமிழர் கந்தையா, இவரது மனைவி பெயர் செல்வமணி. இவர்களுக்கு ஜெகதீஸ்வரன் என்கிற மகன் உண்டு. ஜெகதீஸ்வரன் மனநலம் குன்றியவர். இதற்கு காரணம் நாசகார ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய சூழலியல் பாதிப்பு. தூத்துக்குடி மக்கள் படும் துயரம் கண்டு மனம் உருகிய கந்தையா ஸ்டெர்லைட்டை மூடியே தீருவது என்று சபதம் எடுக்கிறார். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான அனைத்து போராட்டங்களிலும் தீவிரமாக பங்கெடுத்தார் சாதாரண கூலித் தொழிலாளியான கந்தையா.
100 நாட்கள் அமைதியாகப் போராடி கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்த மக்கள் மீது அநியாயமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரைக் கொன்றது அன்றைய எடப்பாடி பழனிச்சாமி அரசு.
கந்தையா முன்னனியில் நின்ற போராளி அதனால் முதல் குண்டு அவர் நெஞ்சில் பாய்ந்தது. 
 அன்று இந்தி எதிர்ப்பில் முதல் குரல் ஈழத்தடிகள் எனும் ஈழத் தமிழர்.
தற்போது வரை தொடர்கிறது தமிழக-ஈழ போராட்ட கூட்டணி. 
 

No comments:

Post a Comment