தமிழகத்தில் மாவீரர் சுவடுகள்.
ஒஐஒஐஒஐஒஐஒஐஒஐஒஐஒஐ
கொளத்தூர் அருகே புலியூர் என்ற ஊர் உள்ளது. கும்பாரப்பட்டி என்ற ஊர் 3 ஆண்டுகளில் 2000புலிகள் பயிற்சி எடுத்த இடம். பிறகு அந்த ஊர்மக்கள் புலிகள் மேல்கொண்ட அன்பால் ஊரின் பெயரையே புலியூர் என்று பெயர்மாற்றிவிட்டனர். இப்பகுதியில் பொறுப்பாக இருந்த புலித்தளபதி பொன்னம்மான் அவர்களின் நினைவு நிழற்கூடம் அமைப்பு சாராத பொதுமக்களால் கட்டப்பட்டு உள்ளது.
1987ல் பொன்னம்மான் மாவீரர் ஆனபோது இந்த ஊரிலிருந்து 5000பேர் கொண்ட ஊர்வலம் இங்கிருந்து புறப்பட்டது.
மேட்டூர் வனப்பகுதியில் கேப்டன் ராய் அவர்களின் நினைவிடம் உள்ளது.
(படங்கள் கிடைக்கவில்லை).
1990ல் யாழ் பலாலி சமரின்போது காயமடைந்த ராய் அவர்கள் சிகிச்சைக்காகத் தமிழகம் அழைத்துவரப்பட்டு பலன் கிடைக்காமல் மாவீரர் ஆனவர்.
இந்த நினைவிடம் இங்கே பயிற்சி எடுத்த புலிகளால் நிறுவப்பட்டு பிறகு அப்பகுதி மக்களால் பேணப்பட்டு வந்தது. தற்போது இது வனத்துறையின் கீழ் யாரும் செல்லமுடியாத பகுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
அரியலூர் மாவட்டம், குமிழியம் சிற்றூரில் பொதுமக்கள் நிழற்குடை ஒன்றை அமைத்து அதற்கு லெப்.கேணல்.திலீபனின் நினைவு நிழற்குடை என்று பெயரிட்டுள்ளனர்.
(மாநில அளவில் பெயரெடுத்த தியாகி திலீபன் கபடிக் குழுகூட வைத்துள்ளனர்)
தனு அக்காவுக்கு நினைவுக்கொட்டகை கூட தமிழகத்தில் உள்ளது. ஆனால், அது எங்கே இருக்கிறது என்ற விபரம் தெரியவில்லை.
தலைவர் பிரபாகரன் பெயரிலும் தனிப்பட்ட மக்கள் மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு சொந்தமான கட்டிடங்களும்,கூடங்களும், வாகனங்களும், விற்பனையகங்களும் பற்பல உள்ளன.
மற்றபடி தமிழ்ச்செல்வன், பால்ராஜ், ஆன்டன் பாலசிங்கம், ஈழத்திற்காக தீக்குளித்த தமிழகத்தார் பெயர்களிலும் பல்வேறு நினைவுச்சின்னங்கள் உள்ளன.
மேலும் தகவலறிந்தோர் கருத்திடவும்.
அதை பதிவில் சேர்க்கிறேன்.
( ஈழப்போரில் தமிழகம்
https://m.facebook.com/photo.php?fbid=392315390872120&id=100002809860739&set=a.108935022543493.9865.10000280986073&refid=13
புலிகள்-இயக்கத்தில் தமிழக-
இளைஞர்கள்.
http://vaettoli.blogspot.com.es/2014/07/blog-post_16.html?m=1 )
Wednesday 26 November 2014
தமிழகத்தில் மாவீரர் சுவடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment