Saturday 15 April 2017

பார்ப்பனர் ஏன் தமிழில் ஓதுவதில்லை?

பார்ப்பனர் ஏன் தமிழில் ஓதுவதில்லை?

சோழர் காலத்தில் தாய்லாந்து சென்ற சைவப் பார்ப்பனர் இன்றும் இருக்கிறார்கள்.

தமிழை மறந்துவிட்டாலும் இன்று வரை அவர்கள் மார்கழி மாதத்தில் திருவெம்பாவையை ஓதி வருகின்றனர்.
(1952ல் தமிழகத்திலிருந்து குழு சென்று மந்திரங்களை மீண்டும் கற்பித்துவிட்டு வந்தனர்)

தலைநகரான பேங்காக் நகரில் சைவ மதத்தவர் (மற்றும் இந்துக்கள்) கூடி திருவெம்பாவை ஓதி ஊஞ்சலாட்டு விழா நடத்துகிறார்கள்.
(தமிழகத்தில் கோவிலில் சிலைகளை ஊஞ்சலில் வைத்து ஆட்டும் சடங்கு உள்ளதே அதே போன்று)
நகரின் மத்தியில் பெரிய ஊஞ்சலும்  உள்ளது.

சோழர்காலம் வரை பார்ப்பானர் தமிழில்தான் ஓதி பூசை செய்துள்ளனர் என்பது இதிலிருந்து தெரிகிறதா?

தாய்லாந்து மன்னர் நடராஜர் சிலைக்கு முன்பாக யாகம் வளர்த்து அரண்மணைப் பெட்டகத்தில் பழைய தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் தேவாரம், திருவாசகம், திருப்பாவை என தமிழ் மந்திரங்களை ஓதி பார்ப்பனர்கள் முடிசூட்டிவிடுவர்.

இது தமிழ் மன்னர்கள் முடிசூட்டிக்கொண்ட முறை ஆகும்.
குறிப்பாக
"தோடுடைய செவியன்" என்று தொடங்கும் சம்பந்தர் பாடலும்
"பித்தா பிறை சூடி" என்று தொடங்கும் சுந்தரர் பாடலும் மனப்பாடமாக ஓதுகிறார்கள்.

சமஸ்கிருதத்தை வளர்த்ததும் திணித்ததும் வடுகரே!

  தமிழகத்தில் பூசை முறைகளில் சமஸ்கிருதத்தைப் புகுத்தி தமிழ்ப் பார்ப்பனர்கள் மீது சமஸ்கிருதம் திணிக்கப்பட்டது 500 ஆண்டுகள் முன்பு தெலுங்கர் ஆட்சியில்தான் நடந்தது.

ஆனாலும் பார்ப்பனர்கள் தமிழை விட்டுக்கொடுக்கவில்லை.
இன்றுவரை தமிழை அழியாமல் தாங்கும் சமூகம் பார்ப்பனர் சமூகம்.

பார்ப்பனர் வேறு
பிராமணர் வேறு

பார்ப்பனர் தமிழரே!

படம்: 1925ல் மன்னர் நடராசர் சிலை முன் முடிசூடலுக்காக அமர்ந்திருக்கும் காட்சி

நன்றி: தாய்லாந்தில் புதிய மன்னரும் - தமிழர்களின் வரலாற்று பெருமையும்! _indosri

No comments:

Post a Comment