Saturday 17 August 2024

புளித்துப்போன தலித் படங்கள்

புளித்துப்போன தலித் படங்கள்

 படம் எடுங்க பிதுக்கப்பட்ட இயக்குநர்களே!
 ஆனா உண்மைக்கு நெருக்கமா இருக்கணும்!
புலம்பெயர் தமிழர் பற்றி எடுக்கிறீர்கள்!
 அவர்களில் பெரும்பாலும் பட்டியல் சாதித் தமிழர்கள்தான்! 
 ஆனால் அவர்களுக்காக போராடியவர்கள் பெரும்பாலும் பட்டியல்சாதி கிடையாது!

 'காலா' புலம்பெயர் மும்பைத் தமிழர் பற்றிய படம் அதில் மராத்திய வெறியர்களை எதிர்கொண்டது உண்மையில் வரதராஜ "முதலியார்" தான்.

'கபாலி' மலேசியத் தமிழர் பற்றியது அங்கே ஆங்கிலேயர் காலத்தில் கூலி உயர்வு கேட்டு தமிழ்த் தொழிலாளர்களுக்காக போராடி மரண தண்டனை அடைந்தவர் மலேயா கணபதி "அகமுடையார்" தான்.

 தற்போது கோலார் தங்க வயல் பற்றிய 'தங்கலான்' படத்தில் நாயக்க, ஆங்கிலேய ஆட்சியில் பறையர்கள் நிலம் இழந்த வரலாறு பற்றி எடுக்கப்பட்டுள்ளது.
 இந்த பழி தமிழர்கள் மீதும் சோழர்கள் மீதும் போடப்படும். 
கோலார் தங்கவயல் அதாவது kgf இருட்டடிப்பு செய்யப்பட்ட பகுதி இல்லை. இந்தியாவில் முதன்முதலில் மின்சார வசதி வந்த பகுதியே கோலார்தான்.
 ஆங்கிலேயர் காலத்தில் தங்கம் எடுக்கப்பட்டு தொழிலாளர்கள் நல்லமுறையிலேயே நடத்தப்பட்டனர். கன்னடர் கைக்கு அதிகாரம் போகவும் அங்கே தங்கம் தீர்ந்துபோனது.
 அன்று நிர்கதியாக நின்ற 10,000 சுரங்கத் தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் வெளியேற்ற நடந்த முயற்சிகளைத் தடுத்து அவர்களுக்கு மாற்று தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தவர் சுரங்கத் தொழில்நுட்ப இயக்குநராக சென்று அங்கேயே இருந்த நடராஜன் ஐயர் எனும் "பார்ப்பனர்" தான். இதை கோலார்த் தமிழர் (கிறிஸ்துவ பறையர்) அறிஞர் குணா தமது புத்தகத்தில் கூறியுள்ளார். 

 புலம்பெயர் தமிழரில் இலங்கை மலையகத் தமிழர் பற்றி அடுத்த படம் வரும் என்று நினைக்கிறேன்.
 ஆனால் அங்கேயும் அம்மக்களை காத்து நின்றவர் கோதண்டராம நடேசையர் எனும் "பார்ப்பனர்" தான்.
அவருக்கடுத்து "தொண்டைமான்" தான்.

 தென்னாப்பிரிக்கத் தமிழர் பற்றி படம் எடுத்தால் காந்தி பற்றியும் அவரது வலக்கரமாக இருந்த வி.ர.செட்டியார் மற்றும் இடக்கரமாக இருந்த தம்பி நாயுடு பற்றித்தான் எடுக்கவேண்டும்.

 அவ்வளவு ஏன் கேரளாவிற்கு புலம்பெயர்ந்துள்ள மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டுடன் இணைய போராடியபோது ஆதரவாக நின்று கைது, வழக்கு, சிறை என்று பாடுபட்டவர்கள் மார்சல் நேசமணி உட்பட குமரி "நாடார்" சாதியினர்தான்.

 மேற்கண்ட யாருமே சாதி பார்த்து அரசியல் செய்யவில்லை! தமிழராகவும் தொழிலாளராகவும் நின்றே போராடினர்.

 இது போக நீலம் பூசப்பட்ட சில படங்களும் உண்டு.
முதலில் வந்த 'மெட்ராஸ்' படம் ஆம்ஸ்ட்ராங் பற்றியது போலத் தெரியவில்லை. அதில் சாதி வெளிப்படையாகச் சொல்லப்படவும் இல்லை!

டெல்டா ஜமீன்தார் ஆதிக்கத்தை பற்றிய படம் 'அசுரன்' உண்மையில் பண்ணையாரை பலியெடுத்தவர் அமல்ராஜ் "தேவேந்திரர்" தான் ஆனால் அவருக்கு முன்பே பண்ணையார்களை அழித்தொழிப்பு செய்த கம்யூனிஸ்டுகளான சாம்பவனோடை சிவராமன் உட்பட மூன்று "அகமுடையார்கள்" சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 
 அவர்களை அடியொற்றித்தான் கோபாலகிருஷ்ண நாயுடு வெட்டி வீழ்த்தப்பட்டார்.

 'கர்ணன்' படம் கொடியன்குளம் தாக்குதலை மையப்படுத்தியது ஆனால் அப்போது போலீஸ் கன்னத்தில் கூட ஒரு அடி விழவில்லை ஆனால் போலிஸ் அதிகாரி தலையை வெட்டியதாக வருகிறது. அன்று கொடியன்குளம் கிராமத்தில் 100 பேருக்கு மேல் வெளிநாட்டில் இருந்தனர் ஆனால் ஊரையே தாண்டமுடியாத படி ஆதிக்க சாதியினர் செய்வதாக காட்டப்பட்டது.

'கேப்டன் மில்லர்' ஒரு ஈழப் போராளி பெயரில் என்னத்தையோ எடுத்து ஆங்கிலேயர் கால சாதி பாகுபாடு காட்டப்பட்டு தலித் மற்றும் இந்தியம் பிசைந்து வெளிவந்தது.

 'மாமன்னன்' பற்றி தனியே ஒரு பதிவு போட்டிருக்கிறேன். அரசியல் பதவி கிடைத்தாலும் அவமானப்படும் ஒரு தலைவர் சபாநாயகர் ஆவது பற்றிய கதை. உண்மையில் அது  "தெலுங்கு அருந்ததியர்" தனபால் சபாநாயகர் ஆனது பற்றியது.
 அவரை அவமானப் படுத்தியது திமுக தெலுங்கு அமைச்சர்கள் சபாநாயகர் ஆக்கியது "பிராமணர்" ஜெயலலிதா!

 "நெஞ்சுக்கு நீதி" பற்றியும் தனிப் பதிவு போட்டிருக்கிறேன். எப்படி தமிழகத்தில் நடக்காத அல்லது தமிழகத்தில் தமிழர்கள் செய்யாத கொடுமைகள் தமிழகத்தில் நடப்பதாக காட்டப்பட்டு தமிழர் மீது பழிபோட்டு எடுக்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக எழுதியுள்ளேன்.

 'அயலி' இணையத் தொடர் பெண் கல்வியை மறுக்கும் சமூகமாக நம்மைக் காட்டியது. இத்தனைக்கும் தமிழகத்தின் முதல் பெண் டாக்டர் அதில் வரும் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்.

 'ப்ளூ ஸ்டார்' முழுக்க கற்பனை கதை. ஹிந்திய கிரிக்கெட் அணியில் பிராமணர் ஆதிக்கம் பற்றி காட்ட முற்பட்டது. தமிழர்களுக்கும் அதில் இடம் இருந்ததில்லை. 100 ஆண்டு கிரிக்கெட் அணி வரலாற்றில் 3 (தமிழின) பார்ப்பனர் களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது.

 'சார்பட்டா பரம்பரை' என்பது அன்று சாதி மத பேதமில்லாமல் அமைப்பு ரீதியாக மோதிக்கொண்ட பாக்சிங் கிளப்புகள் பற்றியது ஆனால் சாதியை புகுத்தி எடுக்கப்பட்டது.
 
  இன்று "மெட்ராஸ் மொத்தமே தலித் மக்களான எங்களுக்கு தான் சொந்தம்" என ரஞ்சித் பேசுகிறார்.
 சென்னையை தெலுங்கரிடம் இருந்து மீட்டவர் ம.பொ.சி எனும் "கிராமணி நாடார்" அவரது தளபதி விநாயகம் "வன்னியர்". 

 இன்று 'சென்னையிசம்' பேசும் ரஞ்சித்தும் அவர் குறிப்பிடும் தலித் சமூகமும் அப்போது என்ன செய்துகொண்டு இருந்தனர்?!
 இவர்களது தலைவரான அம்பேத்கர் மொழிவழி மாநிலங்கள் கூடவே கூடாது என்று எதிர்த்துக் கொண்டிருந்தார்.
 
 அவ்வளவு ஏன்?! மாரி செல்வராஜ் நெல்லை வெள்ளத்தின் போது களத்திற்காவது சென்றாரே அதுபோல சென்னை வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்டவர்கள் இதே தலித் வரையறையில் வருபவர்கள்தான் அப்போது ரஞ்சித் எங்கே போனார்?!
 அதே சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டு ஒரு சிறிய அரசியல் வெற்றிடம் உருவானதும் அதைப் பிடிக்க தலித் தலித் என்று கூவும் ரஞ்சித் உண்மையில் தலித்தா?!

 கிறிஸ்தவப் பறையர்கள் சட்டப்படி  பட்டியல் சாதி வரையறையில் வரமாட்டார்களே?!

 இதில் பௌத்த அரசியல் வேறு! அம்பேத்கர்  பௌத்தம் திரும்ப அழைத்தபோது அவர் சமூகம் மட்டுமே பௌத்தம் தழுவியது! 
 அம்பேத்கர் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் என்பதையும் தன் சாதிக்கென இராணுவத்தில் தனி படையணி உருவாக்கியவர் என்பதையும் அவரது பௌத்த அரசியலும் அவர் சாதி தாண்டி எடுபடவில்லை என்பதையும் தனித் தனி பதிவுகளாக விரிவாக எழுதியுள்ளேன்.

 இப்படி எந்த விதத்திலும் லாஜிக் இல்லாத குழப்பவாதிகள் தான் இந்த நீலப்பட தலித் கும்பல்! 

No comments:

Post a Comment