Thursday 15 August 2024

தமிழர்நாடு அமைந்திருந்தால் பாலஸ்தீன இனப் படுகொலை நடக்குமா

தமிழர்நாடு அமைந்திருந்தால் பாலஸ்தீன இனப் படுகொலை நடக்குமா?!

 இத்தனை கோடி அரேபியர் சுற்றி இருக்கின்றனர்.
இரண்டாம் கட்ட ஆதரவாக 
இத்தனை கோடி இசுலாமியர் இருக்கின்றனர்.
இவர்களிடம் நாடுகளும் பணமும் ராணுவமும் இருக்கிறது.
உலக மக்களின் பார்வைக்கு ஐம்பது ஆண்டுகளாக கொண்டு சென்று பிரச்சாரமும் செய்யப்பட்டுள்ளது.
அதிலும் இந்த இணைய யுகத்தில் உலகமே பார்க்க அரபு இசுலாமியர் மீது இனப் படுகொலை நடக்கிறது என்றால்  தமிழகம் தாண்டி ஆதரவு கிடைக்காத ஈழத்தமிழர் எம்மாத்திரம்?!
 இந்த உலகில் நியாயத்தை நிலைநாட்ட யாருமே இல்லையா?!
 இதுவே தமிழரிடம் நாடும் ராணுவமும் இருந்தால் இது நடக்குமா?!
 அமையவிருக்கும் தமிழர்நாட்டின் முதல் சர்வதேசக் கொள்கை எங்கும் இனத்தின் பெயரால் படுகொலை நடக்க விடமாட்டோம் என்பதாக இருக்குமே?!
 நாம் உலக நாடுகளை உடைத்து இனவழி நாடுகள் உருவாகி அவற்றைத் திரட்டி தனிக் கூட்டமைப்பு உருவாக்கி இப்படியான இனப் படுகொலை நடக்கும் முன்பே தடுத்திருப்போமே?!

No comments:

Post a Comment