Wednesday 14 August 2024

இந்தியா உடைவது ஏன் தேவை

இந்தியா உடைவது ஏன் தேவை?!

 குழந்தையிலேயே பள்ளிகளில் மூளைச்சலவை செய்யப்பட்டு "இந்தியா ஒற்றை நாடு" என்று நம்ப வைக்கப்பட்டு போலி தேசபக்தி ஊட்டப்பட்ட அப்பாவி இளைஞர்கள் ஒரு நிமிடம் இதைப் படியுங்கள்!
 இன்று நமக்கு இருப்பது இரண்டே வழிதான்!
ஒன்று இந்தியா என்கிற பெயரும் அமைப்பும் வாழ வேண்டும்
அல்லது அந்த அமைப்பில் சிக்கியுள்ள 140 கோடி மக்கள் வாழ வேண்டும்!
 இதில் நாம் எந்த வழியைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்?!
 இந்தியா என்கிற அமைப்பு நீடித்தால் அதன் பலன் சில லட்சம் எண்ணிக்கையுள்ள உயர்தட்டு ஹிந்தியர்களுக்கு மட்டுமே கிடைக்கும்! 
 இந்த அமைப்பை உடைத்து அதில் இருக்கும் இனங்களுக்கு நாடுகளை கொடுத்துவிட்டால் அந்த மாபெரும் அதிகாரப் பகிர்வு கோடிக்கணக்கான மக்களுக்கு அனைத்து வகையிலும் பலனளிக்கும்!
 வறுமை ஒழியும்! கல்வி கிடைக்கும்! பொருளாதாரம் மேம்படும்! வாழ்க்கைத் தரம் உயரும்! 
 ஆங்கிலேயர் காலத்தில் கூட இந்திய மன்னர்கள் ஆண்ட சமஸ்தானங்களில் காந்தி எந்த போராட்டமும் செய்யவில்லை!
 அன்று சமஸ்தானங்களுக்கு கிடைத்த அதிகாரப் பகிர்வு தரப்படும் என்றுதான் எல்லா இனங்களும் போராடியது!
 ஆனால் 1947 இல் அமைந்த இந்திய அரசமைப்பு அப்படியே ஆங்கிலேய சுரண்டல் அமைப்பின் நகலாக இருக்கிறது!
 அன்று தரப்பட்ட சில அதிகாரங்கள் கூட ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு விட்டன!
 நம் முன்னோர்கள் கனவு கண்ட இந்தியா இது இல்லை!
 அன்று நாம் எதிர்பார்த்து போல நமக்கு நாடு (அதாவது state) கிடைத்தது ஆனால் நாட்டுக்குரிய எந்த அதிகாரமும் இல்லாத நிர்வாகம் தரப்பட்டுள்ளது!
நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்!
 தமிழகத்தின் பார்வையில் பார்த்தால் மேலே ஹிந்திய மேல்தட்டு வர்க்கம் அது அப்பாவி ஹிந்திய மக்களை ஒன்று திரட்டி தென்னகத்தை ஒடுக்க அதை எதிர்க்காத தென்னைத்தார் இழப்பை ஈடுகட்ட தமிழகத்தை ஒடுக்குகின்றனர். தமிழக மக்கள் ஹிந்திய பொதுமக்களை விட மூன்று மடங்கு ஒடுக்குதலுக்கு ஆளாகின்றனர்.
 இது எல்லாமே இந்தியா என்கிற பெயரால் நடக்கிறது!
 இதன் மூலம் பெறப்படும் கொழுத்த லாபம் ஹிந்திய மேல்தட்டு வர்க்கத்தின் கருப்புப் பண சேமிப்பில் குவிகிறது.
 தமிழகத்தின் உள்ளேயும் ஒரு இந்திய சுரண்டல் அமைப்பு உள்ளது.
 இதில் மேல்தட்டு அதிகார வர்க்கம் கீழ்த்தட்டு பெரும்பான்மை மக்களை ஒடுக்கிறது. சாதி பேதமில்லாமல் தமிழக அடித்தட்டு மக்கள் நான்கு மடங்கு ஒடுக்கப் படுகின்றனர். இதற்குக் காரணம் இந்திய அமைப்பு மேல இருப்பதுதான்.
 இதற்கு வர்ணாசிரமம், பார்ப்பனீயம் என்று வெவ்வேறு பெயர் வைத்து திசைதிருப்பு கின்றனர்.
 உண்மையான ஆரியம் இன்றைய இந்திய அரசமைப்புதான்!
 இந்தியா என்கிற அமைப்பை உடைத்து மொழி அடிப்படையில் நாடுகளை அமைத்து அம்மொழி பேசும் இனங்களுக்கு தன்னாட்டை ஆளும் உரிமையையும் கொடுத்துவிட்டால் சில மோதல்கள் எழுந்தாலும் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்துவிடும்! 95% இந்திய குடிமக்களுக்கு நன்மையே நடக்கும்!
 இந்தியாவை உடைக்காமல் திருத்திவிடலாம் என்பது கனவிலும் நடக்காது!
 இது ஒரு தானியங்கி அமைப்பு (automatic system) போன்றது!
 மனிதர்கள் மாறினாலும் அமைப்பு மாறாது!
 இந்தியா கையெழுத்து இட்டுள்ள சர்வதேச ஒப்பந்தங்கள் படி தன் குடிமக்களுக்கு பிரிந்துபோகும் உரிமை தரவேண்டும்!
 ஆனால் அதை மீறி பிரிவினைவாத தடுப்பு சட்டம் போட்டு நமக்கு பிரிவினை பேசும் உரிமையை முதலிலேயே பறித்துவிட்டனர்.
 கைக்கெட்டும் தூரத்தில் ஈழத் தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்பட்டு கடைசியில் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டபோது கூட நம்மால் சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாமல் நின்றோம்!
 பாராட்ட ஒரு காரணமும் இல்லாமல் இந்த நாட்டைப் போற்றிப் பாடு என்றால் எப்படி முடியும்?! 
 ஆண்டுக்கு ஒருநாள் கூடி கொடியேற்றி கையில் ஒரு இனிப்பை தந்துவிட்டால் தேசப்பற்று ஆகிவிடுமா?!
மீதி 364 நாட்களில் ஏன் இந்த உணர்ச்சி காணப்படுவதில்லை!?
ஏனென்றால் இது உண்மையான உணர்ச்சி இல்லை!
 தமிழின இளைஞர்களே சிந்திப்பீர்!
உங்களுக்கு இந்தியா என்கிற பெயர் வேண்டுமா?! அல்லது இந்திய குடிமக்கள் நலம்பெற வேண்டுமா?!
 இந்தத் துணைக்கண்டத்தில் மூத்த இனமான தமிழினம் இந்தியாவை உடைத்து இந்திய மக்களை காப்பாற்ற முதல் அடி எடுத்துவைக்கட்டும்!
 இன்று இந்தியன் என்று அதிக உணர்ச்சி காட்டுபவனை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள் அவன்தான் இதன் பலனை அனுபவிப்பவன்! 
 அவனைத்தான் நாம் எதிர்க்க வேண்டும்! 
அனைவருக்கும் "மீண்டும் அடிமைப்பட்ட நாள்" ஆறுதல்கள்! 

எழட்டும் தமிழினம்!
உடையட்டும் ஹிந்தியா!
மீளட்டும் துணைக்கண்ட இனங்கள்!
அமைப்போம் தனித் தமிழர்நாடு!

No comments:

Post a Comment