Friday 6 September 2024

பிள்ளையார் தத்துவம்

பிள்ளையார் தத்துவம் 

 இயற்கையின் எல்லா அம்சங்களும் சேர்ந்தது சதுர்த்தி பிள்ளையார்.
 களிமண் மற்றும் நீர் சேர்த்த உருவம் மண்ணும் நீரும் வந்துவிட்டன.
 அதில் அருகம்புல் மாலையிட்டு அரச மரத்தின் அடியில் வைக்கவேண்டும் இங்கே சிறிய பெரிய தாவரங்கள் வந்துவிட்டன.
அரிசி மாவு கோலமிட்டு சாணி பிடித்து அதில் அரளி பூ வைக்கவேண்டும் இங்கே உரமும் பூவும் வந்துவிட்டன.
 மனித உடல் யானைத் தலை எலி வாகனம் என சிறிய நடுத்தர பெரிய உயிர்கள் வந்துவிட்டன (பிள்ளையார் எறும்பு கூட உண்டு).
உடைந்த தந்தம் எழுத்தாணி ஆகி கல்வியின் முக்கியத்துவம் குறிக்கப்பட்டு விட்டது. அதனாலேயே பிள்ளையார் சுழியிட்டு எழுதத் தொடங்குகிறோம்.
 கையில் அரிசி மாவு பருப்பு வெள்ளம் சேர்ந்த கொழுக்கட்டை இதில் உணவும் சுவையும் வந்துவிட்டன 
இந்த உருவத்தை ஆற்றில் கரைக்கிறோம் இது எல்லாமே நீரில் இருந்து பிறந்து நீரிலேயே கரைந்து விட்டன எனவே நீர்நிலை தான் உயிர்நாடி எனும் தத்துவமும் இங்கே உணர்த்தப்பட்டு விட்டது.
 ஏற்கனவே நான் கூறியபடி யானைகளை போரில் பயன்படுத்தி அவை பல ஆயிரக் கணக்கில் இறந்தபோது அதைத் தடுக்க "யானை வாழ்ந்தால் தான் எலி வாழும்" சான்றோர் உருவாக்கிய தத்துவம் நாளடைவில் இப்படி வெறும் வழிபாடு ஆகி நிற்கிறது. 
 காடுகளையும் யானைகளையும் அழிக்கிறோம்!நீர்நிலைகளில் பிள்ளையாருடன் சேர்த்து கழிவுகளையும் கரைக்கிறோம்!
 அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டோம்! 

No comments:

Post a Comment