முருகனும் இசுலாமியரும்
தமிழ் புலவர் அருணகிரி நாதர் முருகனை ‘சூர்க்கொன்ற ராவுத்தனே’ என்றும் ‘மாமயிலேறும் ராவுத்தனே’ என்று புகழ்கிறார்.
அதாவது தமிழின வணிகர்கள் அரேபியா வழியாக குதிரை இறக்குமதி செய்து விற்றபோது ராவுத்தர் எனும் பெயர் பெற்றனர். அதன் பிறகுதான் இசுலாமைத் தழுவினர்.
மீரா கண்ணு எனும் ஆசுகவி புலவர் மிகச் சிறந்த முருக பக்தராக இருந்துள்ளார்.
அவரது கடனை முருகனே அடைத்ததாக திருச்செந்தூர் தல புராணம் கூறுகிறது.
1930 களில் உறையூர் காதர் பாட்ஷா என்பவர் முருகன் மீது பல பாடல்கள் பாடியுள்ளார்.
"சுருளிமலை மீது மேவும் சீலா.." எனும் பாடல் மிகவும் புகழ்பெற்றது
புதுச்சேரியில் 1970களில் முகம்மது கௌஸ் எனும் இசுலாமியர் முருகன் கோவிலே கட்டியுள்ளார்.
இன்றும் அவரது குடும்பம்தான் கோவிலை நிர்வகித்து வருகிறது.
முருகனை இசுலாமியர் வழிபடுவது அதிசயமோ அரிதானதோ இல்லை!
முப்பாட்டன் முருகன் அனைவருக்கும் ஆனவன்!
No comments:
Post a Comment