Tuesday 9 July 2024

வேட்டொலி 10

வேட்டொலி 10

  தமிழ்தேசிய இணையம் வேட்டொலி தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
இதுவரை 1505 பதிவுகள் எழுதப் பட்டுள்ளன!
இதுவரை மொத்தமாக 3,90,827  பார்வைகள் கிடைத்துள்ளன.
சென்ற மாதம் 5584 பார்வைகள் பெற்றுள்ளது வேட்டொலி.
 பிரபலமாக ஆகாவிட்டாலும் இதில் எழுதப்பட்டுள்ள தீவிர கருத்துகளுக்கு இன்றுவரை முடக்கப்படாமல் இயங்கி வருவதே பெரிய சாதனை என்று கருதுகிறேன்.
 முன்பெல்லாம் பதிவுகளை தேடினால் கூகுள் காட்டும் தற்போது கூகுள் வேட்டொலியை காட்டுவதில்லை.
 விரைவில் முடக்கப்படலாம்!
முடக்கப்பட்டாலும் கவலை இல்லை!
உண்மையான புரட்சிக்கு தடைதான் அங்கீகாரம்!
எழுத்து எந்த வடிவத்தில் எழுதப்பட்டது என்பது முக்கியம் இல்லை!
 அதைப் படித்தவர் மனதில் அது எவ்வளவு ஆழமாகப் பதிந்தது என்பதுதான் முக்கியம்!
 வேட்டொலி அவ்வாறானது என்று நினைக்கிறேன்!
 வேட்டொலி ஏற்படுத்தும் தாக்கம் தேவையான நேரத்தில் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு இனத்தைக் காக்கும் என்று நம்புகிறேன்!
  தமிழ்தேசியர் பலரும் கவனம் செலுத்தாத தமிழ்தேசிய விழுமியங்களில் வேட்டொலி பங்களித்துள்ளது.
அதாவது "ஈழம் தமிழகம் ஒரே நாடு", "இழந்த எல்லை மீட்பு",  "இனத்தில் பார்ப்பனர் மீளிணைப்பு", "புலிகள் வழியில் தனிநாடு" மற்றும் "அகன்ற தமிழர்நாடு" போன்றவை!
 இவற்றில் "மண்மீட்பு" மற்றும் "அகன்ற தமிழர்நாடு" போன்ற நிலம் சார்ந்த சிந்தனைகள் 290 பக்க "தனித் தமிழர்நாடு" புத்தகமாக வெளிவந்துள்ளது!
 vaettoli blogspot இல் பெரும்பான்மை எனது எழுத்துகள் என்பதில் பெருமை கொள்கிறேன்!
 "தனித் தமிழர்நாடு" வரைபடத்தை உருவாக்கியவன் என்று என்னை பிறர் அடையாளம் காண விரும்புகிறேன்.
 சில பதிவுகள் தன்னார்வ தமிழ்தேசியரால் குரலாக்கம் செய்யப்பட்டு பொருத்தமான படங்களுடன் காணொளிகளாக ஆக்கப்பட்டு வெளிவந்துள்ளன. 
 அவ்வாறு வேட்டொலிப் பதிவுகள் உலகத் தமிழ்தேசியரால் வெவ்வேறு வடிவங்களில் சேமிக்கப்படவும் படியெடுக்கப்படவும் வேண்டுகிறேன்!
2012 லிருந்து உடன் பயணிக்கும் முகநூல் உறவுகளுக்கு மிக்க நன்றி! 
இன விடுதலை நோக்கிய பயணம் மிக நெடியது! 
தொடர்ந்து இயங்குவோம்!

ஒரே நாடு!
ஒரே எல்லைக்கோடு!
அமைப்போம் தமிழர்நாடு!
 
 

No comments:

Post a Comment