Saturday 29 June 2024

ஸ்டாம்ப் சைஸ் கோவணம் இந்த கப்

 


ஸ்டாம்ப் சைஸ் கோவணம்

 

 இதுவரை நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஹிந்தியா சாதித்ததை இங்கே பாருங்கள்.

கீ....ழே 58 வது இடம்!

 தென்னாப்பிரிக்கா எவ்வளவோ மேல்!

விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாத ஹிந்தியா இந்த கிரிக்கெட் என்கிற கேலிக்கூத்தில் வென்றது ஒரு ஸ்டாம்ப் ஐ வைத்து நிர்வாணத்தை மறைக்கும் முயற்சி!

 இந்த எழவிலும் 18 ஆண்டு தோல்விக்கு பிறகு வெற்றி!

இனியாவது சோம்பேறிகளின் பொழுதுபோக்கான கிரிக்கெட் பார்ட்டியில் கொட்டும் பணத்தை உண்மையான ஆரோக்கியமான விளையாட்டுக்கு கொடுத்தால் உலக அரங்கில் மானம் மிஞ்சும்! 

 ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் அரங்கில் பாரத மாதா பல நாடுகளால் மானபங்கம் அடைவதை ஹிந்தியர்கள் இனியாவது தடுப்பார்களா?! 

 இல்லை நடிகர் கோலியை நினைத்துக் கொண்டு கண்மூடி கவுந்து படுத்து விடுவார்களா?! 

 

Thursday 27 June 2024

தமிழ்தேசியப் பார்வையில் ரயில் திரைப்படம்

தமிழ்தேசியப் பார்வையில் ரயில் திரைப்படம்

தேனி முக்குலத்து சொந்தங்களே!
 ரயில் திரைப்படம் உங்களைக் கேவலப் படுத்துவதை  அறிவீர்களா?!
நீங்கள் அழுக்கு பிடித்த குடிகார கபோதியாம்!
உங்கள் மனைவி வடயிந்தியனை வளைக்கப் பார்ப்பாளாம்!
ஒரு அப்பாவி வடயிந்தியனை கொன்றுவிட்டு பணத்தை திருடுவீர்களாம்!
ஒரு தேனி தெலுங்கன் இப்படி படம் எடுத்திருக்கிறான்!
இதைக் கேட்க நேரமில்லையா உங்களுக்கு?! 

 தேனி தமிழர்களே! காலம் காலமாக நம் உப்பைத் தின்றுவிட்டு நம் மீதே விசத்தைக் கக்கும் இந்த வந்தேறிகளைக் கண்டிக்க மாட்டீர்களா?!

 ரயில் படத்தின் கதை இதுதான். தேனியில் பல வடயிந்தியர்கள் தமிழர்களால் கசக்கிப் பிழிந்து வேலைவாங்கப் படுகிறார்கள். ஊர் நடுவில் ஒரு வீட்டில் தனியாக ஒரு வடயிந்தியன் வசிக்கிறான்.
 அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு குடிகாரனின் மனைவி இருக்கிறாள்.
 அந்த குடிகாரன் அழுக்குப் பிடித்த ஆண்மையற்ற வலிமையற்ற வெறிபிடித்த ஆள்.
அவன் தமிழன் என்பதைக் காட்ட கழுத்தில் எப்போதும் ஒரு முருகன் டாலர்.
 அவன் முக்குலம் என்பதைக் காட்ட அவன் அரிவாளுடன் நாங்கள்லாம் வீரப் பரம்பரை என்று போதையில் நாயிடம் பேசுவதாக ஒரு காட்சி.
 குடிகாரனின் நண்பன் இன்னொரு குடிகாரன் அவன் தமிழ் வாத்தியார் பையன்.
 இனம், சாதி, மொழி மூன்றையும் கேவலப் படுத்தி உள்ளனர்.
 அடுத்து வடயிந்தியனைக் காட்டும் விதம் அப்படியே நேர்மாறாக இருக்கிறது.
 அவன் காஷ்மீர் ஆப்பிள் போல இருப்பதாக பெண்கள் பேசிக் கொள்கிறார்கள். சுத்தமானவனாக, கலை ரசனை உள்ளவனாக, நல்லவனாக, பலசாலியாக இருக்கிறான்.
 வடக்கன் தன் மனைவியுடன் பேசுவது அந்த குடிகாரனுக்கு பிடிக்கவில்லை.
 அதிலும் அந்த மனைவியே கொஞ்சம் சலனப்பட்டாலும் வடயிந்தியன் கண்ணியமாக நடந்து கொள்வது போல ஒரு காட்சி வருகிறது.
 யாரோ அந்த வடக்கனைக் கொன்றுவிட்டு அவன் சம்பாதித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
ஊரே கூடி அழுது அந்த வடக்கன் உடலை சகல மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்கிறது. 
 இதைச் செய்த்து தன் கணவன் தான் என்று மனைவி கண்டறிந்து உண்மையை வெளிக் கொண்டு வருகிறாள்.

 இது பற்றிய விரிவான விமர்சனம் கீழே

 

என் பார்வையில் ரயில் திரைப்படம்
பதிவு: இராஜா திருமுருகன் சு.செந்தில் குமரன்

வஞ்சக - வன்ம - விஷமச் சரக்கு 'ரயில்'

முன் குறிப்பு :

உண்மையில் நான் இதை எழுதித் தொலைக்க வேண்டாம் என்றே நினைத்தேன் . சொல்லப் போனால் ஆரம்பத்தில் இந்தப் படம் பற்றி எழுதவே வேண்டாம் என்று நினைத்தேன் . காரணம் சம்மந்தப்பட்ட பலரும் பழகியவர்கள் . தவிர திரைக்கதையிலோ இயக்கத்திலோ வெகு ஜன மக்களைக் கவரும் எந்த விசயமும் இல்லாத - கருத்தியல் நேர்மையோ ஆழமோ இல்லாத இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வந்தது தெரியாமல் கடந்து போகும் என்பதை, சென்ற திங்கள் அன்று இந்தப் படத்தைப் பார்த்தபோதே நான் முடிவு செய்துவிட்டேன் .
எனவே தான் படம் பார்த்து விட்டு நண்பர்கள் யாரையும் சந்திக்காமல் நழுவினேன் . நான் நினைத்ததுதான் நடந்தது ஆனால் கூலிக்கு மாரடிப்பது போல நட்புக்கு மாரடிக்கும் பலர் தப்புக்குத் தப்படிக்கும் கணக்காக இந்தப் படத்தை கொண்டாடிக் குதித்து குலவை போடுவதாக நினைத்துக் கூக்குரலும் கூச்சலும் இடுவதை பார்க்கப் பார்க்க, என் முடிவு மாறியது.
அதுவும் ஒருவர் இன்னொரு மகேந்திரன் கிடைத்து விட்டார் என்று ஒருவர் எழுதி இருந்தார் . உண்மையில் மகேந்திரன் உயிரோடு இருந்திருந்தால் அப்படி எழுதியவர் மேல் (படம் எடுத்தவர் மேல் அல்ல) மான நஷ்ட வழக்குப் போட்டிருப்பார் .
பல வருடங்களுக்கு முன்பே செத்துப் போன மகேந்திரனைத் தோண்டி எடுத்து தூக்கில் போடுவது போல ... இது எப்பேர்ப்பட்ட அநியாயம் . 
இல்லாத பிரம்ம ஹத்தி தோஷம் பிடிப்பதாகச் சொல்கிறார்களே... மாறாக 'இதய சுத்தி தோஷம்' என்று ஏதாவது ஒன்று இருந்து இவர்களை எல்லாம் அது பி(பீ)டி(டை)க்கக் கூடாதா என்று கூடத் தோன்றியது .
இந்த மண்ணுக்கு எதிராக இந்த மண்ணில் ஒரு படம் வந்தால் உடனே அப்படி எடுப்பவர்களைக் கொண்டாடி சரியனவர்களுக்குக் கூட கிடைக்காத அங்கீகாரங்களையும் பாராட்டுகளையும் கூட அவர்களுக்குத் தர , ஒரு கூட்டம் எப்படி நாக்கை முட்டிக்கால் வரை தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கிறது என்பதற்கு இதெல்லாம் உதாரணம்.
உண்மையில் நண்பர்கள் தவறான ஒரு விஷயத்தை செய்யும்போது அவர்களுக்கு சொம்படிப்பது அல்ல நட்பு.
உரிமையோடு அதைக் கண்டிப்பதுதான் நல்ல நட்பு .
சரி.. நாமாச்சும் அந்த வேலையை செய்வோம் என்பதற்குதான் இந்தப் பதிவு.

தேனி மாவட்ட கிராமம் ஒன்று .
அங்கே உள்ள பல வேலையிடங்களில் வட இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களை தமிழ் முதலாளிகள் ரின் சோப் ஆலா எல்லாம் போட்டு கும்மிக் கசக்கிப் பிழிகிறார்கள். அங்கே வேலை செய்யும் ஒரு வட இந்தியத் தொழிலாளி (பர்வேஸ் மெஹ்ரு), புத்தன், ஏசு, காந்தி, சினிமா எம்ஜியார் ஆகியோரின் அடர்த்தியான கலவையாக இருக்கிறான் .
 அதோடு எஸ் பி பால சுப்பிரமணியம் , ரவி வர்மா இவர்களை வேறு கொஞ்சம் தனக்குள் ஆங்காங்கே தூவி வைத்து இருக்கிறான். கிராமத்தில் நடுவில் முற்றமும் மூன்று புறம் வீடுகளும் உள்ள ஒரு கட்டுமானத்தில் ஒரு வீட்டில் அவன் தனியாக குடியிருக்கிறான், மனைவி, மகள், அப்பா ,அம்மா வட நாட்டில் . அவன் இருக்கும் வீட்டின் மறுபுறம் ஒரு மண்ணின் மைந்தனான தமிழ்க் குடும்பம். மனைவி நல்லவள் (வைரமாலா). ஆனால் கணவன் (குங்கும ராஜ்) ஒழுங்காக சேவ் செய்யாத, தலை கூட சீவாத பார்க்கப் பிச்சைக்காரன் போல எப்போதும் இருக்கும் - கழுத்தில் முருகன் டாலர் போட்ட - ஒரு சதா சர்வகாலக் குடிகாரன். மாமனாரிடம் சண்டை போட்டுக் கொண்டு , தெருவெல்லாம் சுற்றிக் கொண்டு இருப்பான். அதனால் அந்தத் தம்பதிக்குக் குழந்தை இல்லை. ஆனால் வடக்கனுக்கு மனைவி , மகள், அம்மா, அப்பா எல்லாம் வட நாட்டில். (ஒரு காட்சியில் ஒரு பெண்மணி ஒரு பெரிய புல்லுக்கட்டை தூக்கி விடச் சொல்லி அழைக்க, அந்தக் குடிகாரக் கணவனால் முடியாது . ஆனால் அந்த வட இந்திய நபர் ஜஸ்ட் லைக் தூக்கி விடுவான்) . குடிகாரனின் மனைவி வட இந்திய நபரிடம் அன்போடு பழகுகிறாள் . அவனும் தீதி (அக்கா) என்று அழைத்துப் பாசத்தோடு பழகுகிறான். குடிகாரக் கணவனுக்கு அது பிடிக்காத நிலையில் (புல்லுக்கட்டு மல்லுக்கட்டு மட்டுமின்றி இரவில் மனைவியை சமாதானப் படுத்தி அவன் சுகிக்கப் போகும்போது, வட இந்திய இளைஞன் கதவைத் தட்டி அவளை அழைத்து, "என் மனைவி வீடியோ காலில் இருக்கா.. பேசுங்க ''என்று அவளிடம் சொல்வது உட்படப் பல காரணங்கள்.)
ஒரு நிலையில் அவனது குடிகார சில்லுண்டி நண்பன் ஒருவன் , "பேசாம அவன ஒச்சம் பண்ணிடுவோம் ( ஊனப்படுத்துதல்) என்கிறான் .
கணவனும் அது பற்றி யோசிக்கும் நிலையில் ,, வட இந்திய இளைஞன் ஒரு பையை 'தீதி'யிடம் கொடுத்து விட்டுப் போக, போனவன் பிணமாகிறான். வட இந்தியாவில் இருந்து வரும் அவனது குடும்பம் , அவன் சம்பாத்தித்து வைத்திருந்த ஐந்து லட்சம் பணம் எங்கே? என்கிறது .
மன சாட்சியுள்ள மனைவிக்கு, தனது கணவன் மேல் சந்தேகம் . நடந்தது என்ன என்பதே வடக்கன் என்று பெயரில் எடுக்கப்பட்டு பின்னர் ரயில் என்று பெயர் மாறிய இந்தப் படம்.

வெளியூரில் வேலைக்குப் போகிறவன் எல்லாம் அனாதையாகத்தான் சாவான் என்ற வருத்தம் போக்க, அந்த வட இந்திய இளைஞனுக்கு ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்து போஸ்டர் ஒட்டி , பல்லக்குப் பாடை செய்து அடக்கம் செய்வது, ஒரு வட இந்திய இளைஞனுக்கு தமிழ் நாட்டில் தென் மாவட்ட கிராம வழக்கப்படி சடங்குகள் நடப்பது என்று... அந்தப் பகுதி படத்தின் இமயம் .
தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பெரும் பணக்கார வட இந்தியர்கள் நிலம், இடம் வாங்கிப் போட்டு தொழில்களை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறார்கள். அது பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் காசுக்காகவும் கமிஷனுக்ககவும் எல்லாவற்றையும் அவனிடம் தூக்கிக் கொடுத்து விட்டு, வயிற்றுப் பாட்டுக்குப் பிழைக்க வரும் ஏழை வடஇந்தியர் மேல் கோபப்படுவது நியாயமா என்று படம் கேட்கும் கேள்வி அந்த இமயத்தின் சிகரம்.
பஞ்சம் பிழைக்கப் போறது கால கால விஷயம் தானே என்பது உட்பட, துபாய் வாழ் தமிழர் தன் உணர்வுகளைக் கூறுவது அந்த சிகரத்தின் மேல் உள்ள பூ மரம் (அதற்காக மனுசனாப் பொறந்த எல்லாருமே ஏ ஏ ஏ .. இந்த பூமிக்கு வந்தேறிதான் சார்ர்ர்ர்ரர்ர்ர்ர் என்று நெஞ்சை நக்குவது எல்லாம் அபத்தம் . ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு வருவதுதான் வந்தேறி. மனுஷன் வேறு கிரகத்தில் இருந்தா பூமிக்கு வர்றான்? அவனை உருவாகும் அம்மா அப்பாவும் பூலோகவாசிகள் தானே?)
மற்றபடி இதை திரைப்படமாக ஆக்கி இருப்பவர் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்தான். நடிக நடிகையர் தேர்வும் அவற்றில் பலரின் நடிப்பும் அடுத்த சிறப்பு. ரமேஷ் வைத்யாவின் பாடல் வரிகள் அற்புதம். இது போன்ற ஓரிரு விசயங்களைத் தவிர இந்தப் படம் முழுக்க கொட்டிக் கிடப்பது இன்டல்லக்சுவல் அர்ரகன்ஸ் எனப்படும் அறிவார்ந்த ஆணவமும் தமிழ் இனம், மொழி அடையாளங்களுக்கு எதிரான வன்மமும், துவேஷமும்தான்.

வட இந்தியத் தொழிலாளிகளை தமிழ் நாட்டு முதலாளிகள் கசக்கிப் பிழிகிறார்களாம்.
சாதாரணத் தமிழர்கள் குடிபோதையில் குலைந்து வேலையில் கவனம் செலுத்தாமல் போக, அறிவார்ந்த தமிழ் ஊழியர்கள் உரிய சம்பளம் கேட்க, உரிமைகள் பேச, இரண்டு தரப்பிலும் கொஞ்சம் சோம்பேறித்தனம் ஏற, தன் உழைப்பின் மதிப்பு தெரியாமல் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு வந்த வட இந்தியர்களை லாபத்துக்கு ஆசைப்பட்டு வேலைக்கு வைத்த தமிழக சிறு முதலாளிகள்... இன்று அந்த வடக்கத்தியரின் பிடிக்குள் போய் விட்டார்கள். வட இந்திய ஆட்கள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. அவர்கள் சொன்னபடிதான் முதலாளிகள் ஆட வேண்டி இருக்கிறது. இன்று வட இந்தியத் தொழிலாளர்கள்தான் தமிழ் நாட்டில் முதலாளிகளையும் வாடிக்கையாளர்களையும் கசக்காமல் பிழிகிறார்கள். ஆனால் இது பற்றி இந்தப் படம் துளி கூடப் பேசவில்லை .

 குடிக்கப் போனாலும் குளிச்சு முடிச்சு தலை சீவி பவுடர் அடிச்சிட்டுப் போவான் நம்ம ஆளு. வரும்போதுதான் தூசியும் தும்புமாக வருவான் ஆனால் இந்தப் படத்தின் நாயகனை எப்போதுமே ஏதோ பன்றி கூட பக்கத்தில் வரப் பயப்படும் அளவுக்குக் கேவலமான தோற்றத்தோடு காட்ட வேண்டிய அவசியம் என்ன ?
மாறாக இன்னும் பான் பராக் பரட்டைத் தலை என்ற நிலையில் பல வட இந்தியத் தொழிலாளர்கள் இருக்க, இந்தப் படத்தில் வரும் அந்த வட இந்திய நபர் மட்டும், ' தங்கத் துகள் மேலே விழுந்தால் கூட தட்டி விட்டுவிட்டுதான் போவான்யா..' என்ற அளவுக்கு சுத்தத்திலும் சுத்தமாக மாசு மருவில்லாத மன்னவன் போலவே படம் முழுக்க இருக்கிறான். தவிர பாடுகிறான் . ஓவியம் வரைகிறான் . ப்ப்ப்பப்ப்ப்பப்பா.. ஏதோ வட இந்திய ஆவிகள் உள்ளே புகுந்து கூடிக் கும்மியடித்து எழுதி இருக்குமோ என்று சந்தேகமே படாமல் நம்பும் அளவுக்கு கதையும் காட்சிகளுமாகப் போகிறது படம்.
இதுல அவன் காஷ்மீர் ஆப்பிள் கணக்கா இருக்கான் என்று வசனம் வேறு. தேனி மாவட்டத்தில் எந்த கிராமத்தில், நடுவில் சதுர முற்றம் கொண்ட - ஒன்றை ஒன்று பார்த்த மாதிரி இருக்கும் வீடுகளில்- குடும்பம் இருக்கும் வீடுகளில் - யாரோ ஒரு வட இந்திய இளைஞனுக்கு தனியாக வசிக்க வீடு கொடுக்கிறார்கள் என்று யாராவது சொன்னால் பஹூத் அச்சாவாக இருக்கும் . ஆச்சா?

கணவன் குடித்து விட்டு மனைவியை அடிப்பானாம். உடனே இந்த வட இந்திய இளைஞன் கணவனை அடித்துத் தள்ளி வீழ்த்துவானாம். மறுநாள் வழக்கம் போல நகருமாம் . தேனி மாவட்டக் காரய்ங்களே .. ஹலோ.. ஹலோ.. 

படத்தின் ஒரு காட்சி ரொம்ப அயோக்கியத் தனமானது . வட இந்திய இளைஞன் குடிகாரனின் மனைவியை தீதி என்று அழைப்பான். அவளுக்கு மொழி புரியாது .( புரிந்தாலும் தாய் மொழியில் பேசும்போது கிடைக்கும் உணர்வைத் தராது. தமிழில் கெட்ட வார்த்தை பேசப் பிடிக்காமல் வேறு வழி இல்லாத சூழலில் ஆங்கிலத்தில் பேசும் வழக்கம் இருக்கே.. அப்படி)
ஒரு காட்சியில் அவள் வீடெங்கும் தீபம் ஏற்றி பட்டுப் புடவை கட்டி அழகாக இருப்பாள். அவளை வட இந்தியன் வைத்த கண் வாங்காமல் பார்ப்பான். அவள் ஒரு நிமிடம் 'சிலிர்ப்பான' உணர்வுக்குப் போய், ' என்ன அப்படிப் பாக்கிற?' என்று கேட்பாள் "அழகு" என்று அவன் சொல்லி விட்டு.. சட்டென்று காலில் விழுந்து ஆசிர்வாதம் பண்ணுங்க என்பான் .
அவள் துடிதுடித்துப் போய் 'நிதானத்துக்கு' வந்து ஆசீர்வாதம் செய்வாள். அதன் பிறகுதான் படத்தில் 'அவன் என் தம்பி' என்றே சொல்வாள்.
இந்தக் காட்சியின் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? புரியவில்லை எனில் புல்லுக் கட்டு காட்சியை இணைத்துப் பார்த்தால் புரியும் .
அதாவது அவள் கூட ஒரு நொடி இந்த மன்மதனைப் பார்த்து சலனப்பட்டு விட்டாளாம். 
ஆனால் அந்த வட இந்திய இளைஞன் உத்தம புத்திரனாம். சத்திய சந்தனாம் . 
அதாவது அவளை உணர்வு பூர்வமாக அக்காவாக ஆக்குவதே அந்த வட இந்திய அண்ணல் தானாம். தக்காளி காலி.

ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது ? பாவம் பார்த்து வட இந்திய ஆட்களுக்கு சகோதர பாசத்தோடு உதவும் பெண்களை வட இந்திய இளைஞர்கள் ஏமாற்றும் சம்பவங்கள் எத்தனை . இதே சென்னையில் அபார்ட்மென்ட் காவலாளியாக வந்த ஒரு வட இந்திய இளைஞன் மேல் பிள்ளை இல்லாத ஒரு முதியோர் குடும்பம் பாசம் காட்ட, அதை சாக்காக வைத்து அந்த இளைஞன் சலுகைகள் பெற்று , இன்னொரு பக்கம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வைரக் கடத்தல் செய்யும் கூட்டத்தில் ஒருவனாக இருக்க, போலீஸ் பிடிக்க, அந்தக் குடும்பமே போலீசிடம் சிக்கி அல்லல் பட்டதுதானே வரலாறு.
எத்தனை கொலை கொள்ளைக் கடத்தல், பாலியல் வன் சம்பவங்கள், வட இந்திய ஆட்களால் நடக்கிறது?
இதே தமிழ் நாட்டில் ஒரு போலீஸ் அதிகாரியை ஒரு வடக்கத்திக் கும்பல் நிறுத்தி கிண்டல் செய்து கலாய்த்து அடித்து அனுப்பிய வீடியோ வைரல் ஆனது எல்லோருக்கும் தெரியும் .
ஆனால் இந்தப் படம் எடுத்த யாருக்குமே தெரியவில்லை, செலக்டிவ் அம்னீஷியாவா? இல்லை செல்ஃபிஷ் அம்னீஷியா?
 ஒரு கதை அல்லது கற்பனை என்பது உண்மையாக இல்லாமல் இருக்கலாம். அது படைப்பாளியின் உரிமை . ஆனால் உண்மைக்குப் புறம்பாக உண்மைக்கு துரோகம் செய்யும்படி இருக்கலாமா?

தேனி மாவட்டத்தில் உள்ள மக்களில் ஒரு சமுதாய மக்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். இன்னொரு சமுதாய மக்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் . இந்தப் படத்தை எழுதி இயக்கிய பாஸ்கர் சக்தி தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர் . எனவே அதே மண்ணைச் சேர்ந்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் மீதான வன்மம், வஞ்சம், குரோதம் படம் முழுக்க பாம்பு விஷம் போல துப்பப்பட்டு இருக்கிறது .

குடிகார நாயகன் அழுக்குக்கே உமட்டும் அளவுக்கு அழுக்காக இருப்பான் . ஆனால் அவன் கழுத்தில் உள்ள முருகன் படம் போட்ட சதுர வடிவ பெரிய டாலர் மட்டும் எப்போதும் பளிச்சென்று சுத்தமாக இருக்கும் . அவன் குட்டிக்கரணம் அடித்தாலும் அது கழுத்துக்கு நடுவிலேயே படம் பார்க்கும் எல்லோருக்கும் தெரியும்படியாக இருக்கும். அந்த முருகன் டாலர் எல்லா ஷாட்களிலும் நாயகன் கழுத்தில் நட்ட நடுவாட்டமாய் பளிச் என்று தெரிய வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் முக்கியமான டைரக்ஷன் வேலையாகவே இருந்திருக்கிறது.
(''யப்பா... அந்த முருகன் டாலர் நல்லா தெரியுதா? நேரா வை. நடுவால வை. பளிச்சுன்னு துடைச்சு கொடு. பத்தலன்னா ஒரு 5 கே வி லைட்டைப் போடு. ஒகே ஷாட் போலாம்)
எப்போதும் குடித்து விட்டு எக்குத்தப்பாகப் பேசிக் கொண்டு இருக்கும் அந்த நண்பன் கதாபாத்திரத்திடம் ஒரு காட்சியில் ஒரு பெண் "உங்கப்பா தமிழ் ஆசிரியர் ன்னு எனக்கு தெரியும்பா . அதுக்காக இப்படி எல்லாம் பேசாதப்பா " என்கிறது . அங்கே தமிழ் ஆசிரியர் மகன் என்ற அடையாளம் எதற்கு? உடனே அந்தக் குடிகார நண்பன், '' நான் குடிகாரன் தான் ஆனா.. என்று நீட்டி முழக்கும்படி ஒரு சப்பைக்கட்டு வசனம் . இப்படி பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலையை ஆங்காங்கே செய்து இருக்கிறார்கள். 

 நாயகனும் அந்த நண்பனும் எப்போது பார்த்தாலும் "நாங்க எல்லாம் வீரப்பரம்பரைல்ல.. அரிவாள எடுத்தா கீழ வைக்க மாட்டோம் "என்று நாயைப் பார்த்து எல்லாம் வசனம் பேசுகிறார்கள். எனில் அவர்கள் எந்த சமூகம் என்று மறைமுகமாக சொல்லப்படுகிறார்கள்? அப்போ அந்த நாய் யாருக்கான குறியீடு? 

 வடக்கத்தியர்கள் இங்கு வந்து உழைக்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டு இளைஞர்கள் -- தமிழ் மற்றும் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட பல சமூக இளைஞர்கள் உட்பட - எல்லாப் பயல்களும் குடித்து விட்டு வீணாப் போறாங்க என்று சொல்லலாம் . அது நேர்மை .ஆனால் வடக்கத்தி இளைஞன் சம்பாதித்த பணத்தை இவன் மொத்தமாகத் திருடிக் கொண்டதோடு அவனைக் கொலை செய்யவும் முயன்றான் என்று சொல்வது என்ன நியாயம்? இந்தப் படத்தை பார்க்கும் வட இந்தியர்கள் நாளை என்ன நினைப்பார்கள். 'பாருங்க . ஒரு ' தமிழர் ' எடுத்த படத்திலேயே என்ன சொல்றாங்க பாருங்க என்று கேட்பார்களா இல்லையா? அப்போது இந்தப் படத்தின் பின்னால் உள்ள நோக்கம் என்ன?

 இந்தக் கதையை அப்படியே மாற்றி யோசிப்போம் . தேனிக்கு பதிலாக ஒரு வட இந்தியக் கிராமம் . குடிகார வட இந்தியன் . அவனது நல்ல பொண்டாட்டி. பிழைக்கப் போன தமிழ் இளைஞன் . அவனுக்கு அந்த வீடு வாடகைக்கு கிடைக்குமா? புல்லுக்கட்டு சீன் முடிந்த பிறகு தமிழனால் அந்த ஊரில் நடமாட முடியுமா? வடக்கத்திய மனைவியை அடிக்கும் வடகத்திக் குடிகாரனை தமிழ் இளைஞன் வீழ்த்திய அடுத்த சம்பவமாக ஊரே ஒன்று சேர்ந்து தமிழ் இளைஞனை அடித்தே கொல்வார்கள். அதுதானே நடக்கும். எனில் இந்தப் படம் யாருக்குக் குடை பிடிக்க ?

''இருக்கட்டுங்க .... நீங்க சொல்ற மாதிரியே இருக்கட்டும் . வட நாட்டில் இருந்து இங்கு வந்து பிழைக்கும் தொழிலாளிகளை ஆதரித்து ஒரு படம் இருக்கக் கூடாதா ? எடுக்கக் கூடாதா? அது என்ன அவ்வளவு பெரிய குத்தமாய்யா?' என்று யாராவது கேட்கலாம் .

காலகாலமாக தமிழர்கள் மட்டும் கடல் கடந்து போகவில்லையா என்ற ரீதியில் இந்தப் படம் கூட ஒரு கேள்வி கேட்கிறது . தப்பில்லை . இல்லாதவன் பிழைக்க வரட்டும் . தப்பில்லை. ஆனால் அப்படி வருபவர்கள் இயல்பாக இல்லாமல் ரயில் ரயிலாக முழுக்கக் கொண்டு வந்து கொட்டப்படுகிறார்களே .. இந்த மண்ணுக்குள் திணிக்கப்படுகிறார்களே அது ஏன் ? அப்படி வந்தவன் பாத் ரூம் போய் வருவதற்குள் அவனுக்கு ஆதார் கார்டும் ரேஷன் கார்டும் கொடுக்கப்படுகிறதே .. அதுவும் பேரை மாற்றி தமிழ்ப் பெயர் வைக்கப்பட்டு அவை எல்லாம் உடனடியாகக் கிடைக்கிறதே . அது எப்படி?

இந்த மண்ணின் மக்களின் மொழியைக் கற்காதவனுக்கு.. கற்க முடியாது என்று ஆணவமாகச் சொல்பவனுக்கு அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பதவிகள் வழங்கப்படுகிறதே அது எதற்காக ?

மற்ற மாநிலங்களில் நாடுகளில் பிழைக்கப் போன நம்மவர்களுக்கு இதெல்லாம் கிடைக்கவில்லையே ஏன்? மண்ணைத் திருத்தி பொன்னாக்கி பல நாடுகளை நம்மவர்கள் முன்னேற்றும் வரையில் பொறுத்திருந்து, பிறகு தமிழர்களின் சொத்துக்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டு அவனை அடித்து விரட்டவும் கொல்லவும் செய்தார்களே .. ஏன்?
இன்னும் ஆந்திராவில் செம்மரம் வெட்டும் தெலுங்கு முதலாளிகளை காப்பாற்ற அந்தத் தெலுங்கு போலீஸ்.... மரம் வெட்டக் கூலி வேலைக்குப் போகும் தமிழர்களை குற்றவாளி என்று சொல்லி சுட்டுக் கொன்று கணக்கு முடிக்கிறதே. 

ரயில் என்று படம் எடுத்தவர்களுக்கு துயில் என்ற பெயரில் அதைப் படமாக எடுக்கும் நேர்மை இருக்கா?
தமிழர்கள் எந்த மாநிலத்தில் நாட்டில் எந்தக் காலத்தில் இப்படி மண்ணை ஆக்கிரமிக்கக் கொண்டு போய் திணிக்கப்பட்டான்? எந்த மாநிலத்தில் எந்த நாதாரி அவனுக்கு உடனே ஆதார் கார்டு ரேஷன் கார்டு எல்லாம் வாங்கிக் கொடுத்தான் ? 
அந்த மாநில மொழி தெரியாத தமிழனுக்கு யார் அங்கே முக்கியமான மக்களோடு புழங்கும் வேலைகளை உடனடியாகக் கொடுத்தார்கள்?
அப்படி இருக்க ஒரு பிரச்னையை நடுநிலமையாக நேர்மையாக சொல்ல வேண்டிய புல்லுக் கட்டைத் தூக்கும் தெம்பு இல்லாமல் திராணி இல்லாமல் சுய நல வன்ம விஷம போதையில் மல்லாந்து விட்டு, இப்படி படத்தை கேடு கெட்ட படத்தை எடுப்பது என்ன நியாயம் ?

பின் குறிப்பு:-
படத்தின் இயக்குனர் பாஸ்கர் சக்தியை சுமார் இருபது வருடங்களாக தனிப்பட்ட வகையில் அறிவேன் , தயாரிப்பாளர் வேடியப்பனும் பழகியவரே . கடந்த ஒரு வாரமாக இந்தப் படத்தைக் கொண்டாடி சமூக வலைதளங்களில் எழுதும் பலரில் எனக்குத் தெரிந்தவர்கள் பழகியவர்கள் நெருங்கிய நண்பர்கள் உண்டு . ஆனாலும் நண்பர்கள் என்பதற்காக அவர்களின் தவறை நியாயப்படுத்துவதோ மூடி மறைப்பதோ எப்போதும் என் வேலை அல்ல. அதே போல என்னைப் அவமதித்தவர்கள் என்றால் கூட அவர்களின் படைப்பு நன்றாக இருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூச்சம் இல்லாமல் கொண்டாட நான் தவறியதே இல்லை. எனக்கு சுயநலம் தெரியவில்லை. வன்மம் வரவில்லை .
இது எனது பலமா? பலவீனமா? இல்லை முட்டாள்தனமா ? அதைக் காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டேன் .
பதிவு: Raja Thirumurugan Su Senthil Kumaran

Wednesday 26 June 2024

இனக் காவல்

 இனக் காவல்

 அன்று ஒப்பந்தத் தொழிலாளி முருகேசனை அந்த ஹிந்திக்கார மேலாளர் பலர் முன்னிலையில் அவமானப் படுத்தினார்.
 தலை கவிழ்ந்தபடி சக தொழிலாளி கிருஷ்ணனிடம் வந்தார்.
 "நீ சொன்னதுதான் சரி! நாம நம்ம நாட்டுக்கே திரும்பிரலாம்!"
"என்ன முருகேசா! இப்ப என்ன நடந்துபோச்சுனு உன் முடிவ மாத்திட்ட?!"
"நம்ம நாட்டுல விடுதலைப் போராட்டம் நடக்குது! தலைவர் எல்லா தமிழர்களையும் நாடுதிரும்ப சொன்னாரு! நாம போயிரலாம்னு நீதானே கூப்ட்ட?!"
"ஆமா! நீ என்னமோ இங்க வந்து மூணு தலைமுறை ஆச்சு! இங்க இருக்குற மக்கள் நல்லவங்க! குடும்பம் குட்டியோட எப்படி போறதுனு சொன்ன?!"
"ஆமாப்பா! ஆனா இந்த மேனேஜர் மாதிரி சிலர் இருக்காங்க! இனவெறி! வெளியாள் எவனும் இங்க வந்து பொழைக்க கூடாதுனு நெனைக்கிறான்! பாத்தீல்ல?! நமக்கு அளவுக்கதிகமா வேல குடுக்குறான்! எவ்வளவு செஞ்சாலும் குற கண்டுபிடிச்சு அவமானப் படுத்துறான்!"
"சரி நாம போகலாம்! நீதான் என்ன இங்க கூட்டிட்டு வந்த! இப்ப நா ஒன்ன அங்க கூட்டிட்டு போறேன்!"
-----------------------
 அன்று மீண்டும் முருகேசன் அவமானப்பட்டான்! இனத்தைச் சொல்லியே திட்டினான் மேனேஜர்!
வீட்டுக்கு வந்த முருகேசன் குடும்பத்தோட காலி செய்ய வேண்டிய ஏற்பாடுகளை ஆரம்பித்தான்!
 அப்போது அங்கே கிருஷ்ணன் வந்தான்!
"நடந்ததெல்லாம் கேள்விப் பட்டேன்! இதை இப்டியே விடக்கூடாது!"
"நம்மளால என்ன பண்ணமுடியும் கிருஸ்ணா?!"
"நீ வா! நாம ஒருத்தர பாத்துட்டு வரலாம்!"
"யாரு?!"
"அவர பாத்தா நம்ம பிரச்சனை தீரும்"
-----------------------
இருவரும் அருகில் இருந்த மைய நகரத்தில் கடைக்கோடியில் அந்த நெரிசலான சந்துக்குள் நுழைந்தனர்!
 அங்கே ஒட்டுக் குடுத்தனங்கள் பல இருந்தன!
ஆங்காங்கே தமிழ் வார்த்தைகள் கேட்டன!
ஒரு இடத்தில் ஒரு பெரியவர் வாசலில் நின்று கொண்டிருக்க ஒரு ஹிந்திக்கார முதலாளி அவரை வாடகை பாக்கி கேட்டி திட்டிக்கொண்டிருந்தார்.
கூட்டம் வழியை அடைத்தபடி நின்றுகொண்டிருந்தது.
"வழிவிடுங்க நாங்க போகணும்" என்று முருகேசன் இந்தியில் சொல்ல கிருஷ்ணன் அவனை சைகையால் தடுத்தான்.
"என்ன கிருஷ்ணா நாம யார பாக்கணும்?"
"அதோ அந்த பெரியவரைத் தான்"
"என்னடா நீ! இவரா நம்ம பிரச்சனைய தீத்து வைக்க போறாரு?"
"ஆமா! கொஞ்சம் பொறுமையா இரு!"
வீட்டுக்காரர் கத்திவிட்டு போனதும் கூட்டம் கலைந்தது.
இருவரும் அந்த பெரியவரிடம் போனார்கள்.
"ஐயா! வணக்கம்!" என்று கும்பிட்டு விட்டு முட்டியை முறுக்கி தளர்த்தினான்.
பெரியவர் கண்ணில் மின்னல் வெட்டி மறைந்தது.
"வாங்க உறவே! உள்ள வாங்க!"
அவர்கள் வீட்டிற்குள் நுழைய அவரது மனைவி "ஊரானுக்கே ஓடுங்க! வீடுன்னு ஒன்னு எதுக்கு?" என்று முணுமுணுத்தபடி பாத்திரங்களை உருட்டினார்.
"வாங்க நாம வெளிய போய் பேசுவோம்!" என்று அழைத்து வந்த பெரியவர் தெருமுனையில் தேநீர் கடைக்கு வந்து தேநீர் சொல்லிவிட்டு அருகே பூட்டியிருந்த கடையின் நடையில் அமர்ந்தனர்.
நடந்தவற்றை சுருக்கமாக கிருஷ்ணன் கூறினான்.
பெரியவர் முகம் மாறியது.
"சரி தம்பி நீங்க போங்க நாங்க பாத்துக்குறோம்!" என்று உறுதியான குரலில் கூறினார்.
கிருஷ்ணனும் முருகேசனும் கையிலிருந்த சிறிதளவு பணத்தைக் கொடுத்தனர். 
அதில் கொஞ்சம் மட்டும் எடுத்துக்கொண்டு "வழிச்செலவுக்கு" என்று கூறி பையில் போட்டுக்கொண்டார்.
திரும்பி வரும்போது முருகேசன் யோசித்தபடி வந்தான்.
 பெரிய மனிதர்கள் வாழும் பகுதில் பெரிய  பங்களா வீட்டிலிருந்து பருமனான காரில் வந்து இறங்கும் ஆறடி உயர காட்டான் அந்த மேலாளர்!
 நகருக்கு வெளியே ஒட்டுக் குடுத்தனத்தில் வாடகை பாக்கி வைத்திருக்கும் ஒரு பெரியவர்! 
 இது அவர்கள் நாடு! நாமோ பிழைக்க வந்தவர்கள்!  பணமும் வாங்கவில்லை! எப்படி இது நடக்கும்?!
----------------------
3 நாட்களாக அந்த மேனேஜர் வரவில்லை! நான்காவது நாள் வந்த அவர் முன்பு போல இல்லை! 
அடியோடு மாறிவிட்டார் என்று கூறமுடியாவிட்டாலும் ஓரளவு நியாயமாக நடந்துகொண்டார்.
 அவரது மகளுக்கு சிறிய விபத்து நடந்ததாகவும் அப்போது ஒரு தமிழர் உதவியதாகவும் அவர் யாரிடமோ கூறியதாக முருகேசன் கேள்விப் பட்டான்.
அதனால் இவர் திருந்திவிட்டார் என்று நினைத்துக் கொண்டான்.
------------------------
அன்று பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த ஒரு சிறுவன் மீது குறுக்கும் மறுக்குமாக வந்துகொண்டிருந்த ஒரு வாகனம் மோதி கீழ தள்ளிவிட்டு பறந்தது.
 பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ஒரு தமிழன் அவனைத் தூக்கி வண்டியில் வைத்துக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தார்.
தகவலறிந்து அவனது தந்தை ஓடி வந்தார்.
சிறுவனுக்கு உடலெங்கும் சிராய்ப்பு காலில் சிறிய முறிவு. 
அவர் அந்த தமிழனுக்கு இந்தியில் "நன்றி" என்று கூறினார்.
அதில் ஒரு அலட்சியம் தெரிந்தது.
அந்த இளைஞன் அவரது கண்களை நேருக்கு நேர் பார்த்தான் "நன்றியெல்லாம் வேண்டாம்! உங்கள் ஊழியர்களை பாரபட்சம் இல்லாமல் நடத்துங்கள்! பையன் பத்திரம்" என்று இந்தியில் கூறிவிட்டு திரும்பி வேகமாக நடந்தான்!
----------
 அந்த பெரியவர் பணத்தை பையில் போட்டதும் சிறிது தூரம் பயணம் செய்தார். ஒரு சாதாரண வீடு அங்கே ஒருவரைப் பார்த்து விசயத்தைச் சொன்னார்.
 விபரங்களைக் கேட்ட அவர் "சரி நம் இயக்க உறுப்பினர்கள் இதைப் பார்த்துக் கொள்வார்கள்! சிறிது காலம் கழித்து இந்த உதவியைப் பெற்றவர்கள் வேறு இடத்தில் நம் மக்களுக்கு உதவி தேவைப்படும்போது துணிந்து செய்யவேண்டும் என்று கூறிவிடுங்கள்"
 "சரி! தலைவரைக் கேட்டதாகச் சொல்லுங்கள்!" என்று கூறிவிட்டு விடைபெறும்போது 
"உங்களுக்கு கடன் பிரச்சனை இருப்பதாக கேள்விப் பட்டோம்" என்று அவர் ஏதோ கூறவர பெரியவர் தடுத்து "அது என் தனிப்பட்ட பிரச்சனை இனப் பிரச்சனை அல்ல" என்று கூறிவிட்டு விடைபெற்றார்.
-------------

"

Sunday 23 June 2024

கல்கி எழுதிய மதுவிலக்கு சிறுகதை

கல்கி எழுதிய மதுவிலக்கு சிறுகதை

மதுவின் தீங்குகளை மிக எளிமையாக புரியவைக்கும் சிறுகதை இது!
அன்றும் கள், பீர், சாராயம் ஆகியவை ஆறாக ஓடின!
1920 களின் இறுதியில் மதுவிலக்கு காங்கிரஸ் கொண்டிருந்த முதன்மைக் கொள்கைகளில் ஒன்றாக இருந்தது! 
கல்கி அவர்களும் மதுவிலக்கு நோக்கம் கொண்ட பல படைப்புகளை எழுதியுள்ளார்.
ராஜாஜி யுடன் இணைந்து மதுவிலக்கு பத்திரிகை நடத்தியுள்ளார்.
சரி கதைக்கு வருவோம்!

 கோவிந்தனும் வீரப்பனும்

கோவிந்தனும் வீரப்பனும் அண்டை வீட்டுக்காரர்கள். வாழ்க்கை நிலைமையில் ஏறக்குறைய இருவரும் ஒத்திருந்தார்கள். 
கோவிந்தனுக்குப் பருத்தி ஆலையில் வேலை. வாரம் ஆறரை ரூபாய் சம்பளம்.
 வீரப்பனுக்கு ரயில்வே ஒர்க் ஷாப்பில் வேலை; அவனுக்கும் வாரம் ஏழு ரூபாய் சம்பளம்.
 மனைவியும் இரண்டு குழந்தைகளும் கோவிந்தனுக்கு உண்டு. வீரப்பனுக்கும் அப்படியே. 

கோவிந்தன் வாரத்திற்கு முக்கால் ரூபாய் வாடகை கொடுத்து ஐந்தாறு குடித்தனங்கள் உள்ள வீட்டில் ஒரு சின்ன அறையில் குடியிருந்தான். 
வீரப்பன் இதே மாதிரி அடுத்த வீட்டில் குடியிருந்தான்.
 ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் இருந்தது. 
வீரப்பன் ஒர்க் ஷாப்பிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஒரு சாராயக்கடை உண்டு. 
அவன் அந்தக் கடை வழியாகத்தான் வீட்டுக்கு வருவது வழக்கம். 
இந்தச் சிறு வித்தியாசத்தினால் அவர்களுடைய வாழ்க்கை முறையில் நேர்ந்த பெரும் வேற்றுமையைச் சொல்கிறேன் கேளுங்கள்.

சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு கோவிந்தனுக்கு ஆலையில் சம்பளம் கொடுத்தார்கள்.
 ரூபாய் ஆறரையையும் அவன் வாங்கிப் பத்திரமாய் முடி போட்டுக் கொண்டு குறுக்கு வழியாய் வீடு வந்து சேர்ந்தான். 
அவன் மனைவி சுந்தரமும், மகன் நடராஜனும் சந்தோஷத்துடன் அவன் வரவை எதிர்பார்த்திருந்தார்கள்.
 நடராஜன் திம், திம் என்று குதித்துக்கொண்டு, ''அப்பா! சமுத்திரம் பார்க்கப் போகவேண்டும். சமுத்திரம் பார்க்கப் போக வேண்டும்!'' என்று கூச்சலிட்டான். 
பிறகு கோவிந்தனும் அவன் மனைவியும் உட்கார்ந்து கணக்குப் பார்த்தார்கள்.
 பின்வருமாறு செலவு ஜாபிதா போட்டார்கள்.
ரூ. அ. பை.
வீட்டு வாடகை 0 12 0
அரிசி 1 8 0
பருப்பு, உப்பு, புளி
சாமான்கள் 1 8 0
மோரும், நெய்யும் 0 8 0
எண்ணெய் 0 4 0
கறிகாய் முதலிய
சில்லறைச் செலவுகள் 0 8 0
மொத்தம் 4 0 0
[அதாவது கல்கி காலத்தில் ரூபாய், அணா, பைசா என்று கணக்கிடுவர். அரிசி 1 8 0 என்பது ஒரு ரூபாய் எட்டணா, மொத்தம் 4 0 0 என்பது 4 ரூபாய்!]

வழக்கமாக சேவிங்ஸ் பாங்கியில் போட்டு வந்த முக்கால் ரூபாயையும் சேர்த்து ரூ. 4-12-0 தனியாக எடுத்து வைத்தார்கள். பாக்கிச் செலவு செய்வதற்கு ரூ.1-12-0 கையில் இருந்தது.
[அதாவது 16 அணா சேர்ந்தால் 1 ரூபாய் ஆகும்]

''சரி, சமுத்திரக் கரைக்குப் போகலாம், புறப்படு!'' என்றான் கோவிந்தன். 
சுந்தரம் மகனுக்கு சட்டையும் குல்லாவும் போட்டு நெற்றியில் பொட்டு வைத்தாள். 
தானும் முகங்கழுவிக் கண்ணாடி பார்த்துக் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டாள். 
பிறகு கைக்குழந்தைக்குக் கம்பளிச் சட்டை போட்டு இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு கிளம்பினாள்.
 வழியில் கோவிந்தன் காலணாவிற்குப் பெப்பர்மெண்டு வாங்கி மகனுக்குக் கொடுத்தான்.
 கடற்கரையில் காற்று வாங்கப் பெரிய பெரிய மனிதர்களெல்லாரும் வந்திருந்தார்கள். 
ஆனால், பெரிய மனிதர், சின்ன மனிதர் எல்லாருக்கும் ஒரே காற்றுத்தான் அடித்தது.
 கோவிந்தனும் சுந்தரமும் அலையோரத்தில் உட்கார்ந்து ஆனந்தமாய் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். 
மோட்டாரில் வந்தவர்களைவிட இவர்கள் அனுபவித்த இன்பந்தான் அதிகமென்று சொல்லலாம். 
நடராஜன் துள்ளிக் குதித்து விளையாடினான். 
அலை மோதிக் கொண்டு வரும்போது கரைக்கு ஓடுவதும், அலை திரும்பிச் செல்லும்போது அதைப்பிடிக்க ஓடுவதும் அவனுக்கு அற்புதமான விளையாட்டா யிருந்தது.
 இந்த சமயத்தில் தூரத்தில் பட்டாணிக் கடலை, முறுக்கு விற்பவன் போய்க் கொண்டிருந்தான்.
 நடராஜன் ஓடிச்சென்று அவனை அழைத்து வந்தான். 
அரையணா வுக்கு முறுக்கும் முக்காலணாவுக்குக் கடலையும் வாங்கினார்கள். 
நடராஜனுக்குத் தலைகால் தெரியவில்லை. 
திரும்பி வீடுபோய்ச் சேரும் வரையில் தனக்குக் கிடைத்த பங்கைத் தின்று கொண்டிருந்தான். பொழுது போனதும் அவர்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள். 
மத்தியானமே சமைத்து வைத்திருந்த சாப்பாடு தயாராயிருந்தது. 
எல்லாரும் சாப்பிட்டுவிட்டுக் கவலையின்றித் தூங்கினார்கள். 
கடற்கரைக்குப் போய் வந்ததற்காக கோவிந்தனுக்கு உண்டான செலவு ஒன்றரை அணாதான். 
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்ததும் இன்றைக்கு என்ன செய்யலாமென்று யோசித்தார்கள். 
பீபில்ஸ் பார்க்குக்குப் போக வேண்டுமென்று தீர்மானமாயிற்று.
 சுந்தரம் அவசரம் அவசரமாய்ச் சமையல் செய்தாள். 
கோவிந்தன் மார்க்கட்டுக்குப்போய்க் கறிகாய் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு வேஷ்டி சட்டைகளுக்குச் சவுக்காரம் போட்டுத் துவைத்தான்.
 பிறகு குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
 நடராஜன் வீட்டுக் கணக்குகளைப் போட்டான்.
 எவ்வளவோ அவசரப்படுத்தியும் கிளம்புவதற்கு மணி ஒன்றாகி விட்டது. 
சுந்தரம் சிற்றுண்டிக்காக கொஞ்சம் அப்பம் செய்து ஒரு பொட்டணத்தில் கட்டி எடுத்துக் கொண்டாள்.
 புரசவாக்கம் வரையில் அவர்கள் நடந்து சென்று அங்கிருந்து டிராம் வண்டியில் போனார்கள்.
 மாலை நான்கு மணி வரையில் பீபிள்ஸ் பார்க்கைச் சுற்றிச் சுற்றி வேடிக்கை பார்த்தார்கள்.
 நடராஜனுக்குக் குரங்குகளை விட்டுப் பிரிந்து வருவதற்கு மனமே இல்லை. 
மூர்மார்க்கெட்டில் ஊதல் வாங்கித் தருவதாய்ச் சொன்னதின் மேல்தான் அவன் வந்தான். 
இதுவரை டிராம் சத்தம் ஒன்றரை அணாவும், பீபிள்ஸ் பார்க் டிக்கட் மூன்றணாவும் ஆக நாலரை அணா செலவாயிருந்தது. 
மூர் மார்க்கட்டில் அவர்கள் பின்வருமாறு சாமான்கள் வாங்கினார்கள். 

கோவிந்தனுக்குப் பித்தளை டிபன்பாக்ஸ் 0 11 0
சுந்தரத்திற்கு ஒரு தந்தச் சீப்பு 0 2 6 
நடராஜனுக்கு ஒரு ஊதலும் பெல்ட்டும் 0 3 0 
குழந்தைக்கு ஒரு ரப்பர் பொம்மை 0 2 6

சாயங்காலம் 5 மணிக்கு அவர்கள் வீடுபோய்ச் சேர்ந்தார்கள். 
போகும்போது டிராம் சத்தமும் சேர்ந்து ரூ. 1-9-0 செலவாயிற்று. 
நேற்று ஒன்றரை அணா செலவாயிற்று. 
ஆக ரூ. 1-10-6 போக பாக்கி இருந்த ஒன்றரை அணாவை ஒரு சிமிழில் போட்டு வைத்தார்கள். 
சுந்தரத்துக்குச் சேலை வாங்குவதற்காக இந்த மாதிரி ஏற்கனவே ரூ.2-8-0 வரையில் சேர்ந்திருந்தது.
 மறுநாள் திங்கட்கிழமை காலையில் சுந்தரம் புதிய தந்தச் சீப்பினால் தலையை வாரி முடித்து, நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டாள்.
 சந்தோஷமாய்ப் பேசிக் கொண்டு சுறுசுறுப்பாக வீட்டுக் காரியங் களைச் செய்தாள். 
ஏழரை மணிக்குள் கோவிந்தனுக்குச் சோறு போட்டு, மத்தியானத்திற்கும் பலகாரம் பண்ணிக் கொடுத்தாள்.
 கோவிந்தன் ஸ்நானம் செய்து, சுத்தமான வேஷ்டியும் சட்டையும் அணிந்து, புதிய டிபன்பாக்ஸை கையில் எடுத்துக் கொண்டு உற்சாகத்துடன் ஆலைக்குப் புறப்பட்டான். 
நடராஜன் இடுப்பில் புதிய பெல்டு போட்டு அதில் ஊதலைத் தொங்கவிட்டுக் கொண்டு குதூகலத்துடன் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பினான்.
 குழந்தை கையில் ரப்பர் பொம்மையை வைத்துக் கொண்டு ஆனந்தமாய் விளையாடிக் கொண்டிருந்தது.

 இனி அடுத்த வீட்டில் வீரப்பனுடைய குடும்பத்தார் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமையை எப்படிக் கழித்தார்களென்று பார்ப்போம். 
சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு வீரப்பனுக்கு ஏழு ரூபாய் கிடைத்தது. 
அவன் அதை வாங்கி அலட்சியமாய்த் தன் கந்தல் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான். 
வழியில் பீர் கடையைக் கண்டதும் ஒரு நிமிஷம் நின்று தயங்கினான். 
அப்போது உள்ளிருந்து ஒருவன், ''அண்ணே! ஏன் நிற்கிறாய்? வா!'' என்றான். 
வீரப்பன் கடைக்குள் நுழைந்தான். 
முதலில் ஒரு சீசா குடித்து விட்டுக் கிளம்பி விடலாமென்று நினைத்தான். 
ஆனால் தடுத்துக் கொண்டான்.
 ஒரு ரூபாய் கொடுத்துச் சில்லறை கேட்டான். 
சில்லறை கொடுக்கச் சற்று நேரமாயிற்று. 
இதற்குள் சில சிநேகிதர்கள் வந்தார்கள். 
அவர்கள் குடிக்கும் போது தான் மட்டும் சும்மாயிருக்கக் கூடாதென்று இன்னொரு சீசா கேட்டான். 
அதையும் குடித்த பிறகு, ''இன்று இரண்டு சீசா பீர் குடித்தாகிவிட்டது. நாளைக்கு வரக்கூடாது. ஆகையால் சாராயக் கடையில் ஒரு திராம் வாங்கிக் குடித்து விடலாம்'' என்று யோசித்து அப்படியே சாராயக்கடைக்குப் போனான். 
ஒரு திராம் வாங்கிக் குடித்து விட்டுப் பிறகு இன்னொரு அரை திராம் போடச் சொன்னான்.
 கடைக்காரன் கொடுத்த சில்லறையில் ஒரு அரைக்கால் ரூபாய் செல்லாப்பணம். 
வீரப்பனுக்கு போதை நன்றாக ஏறியிருந்தபடியால் அது தெரியவில்லை.
 கடைக்காரன் கொடுத்த சில்லறையை எடுத்துச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். 
அவற்றில் நல்ல இரண்டனா ஒன்று சட்டைப் பையில் விழாமல் தரையில் விழுந்தது. 
அதை அவன் கவனிக்கவில்லை. 
ஆகவே சாயங்காலம் ஆறு மணிக்கு நல்ல பணம் ரூ. 5-12-0ம் செல்லாப் பணம் இரண்டணாவும் எடுத்துக்கொண்டு அவன் வீடு போய்ச் சேர்ந்தான்.
 வீட்டில் அரிசி, பருப்பு சாமான் ஒன்றும் கிடையாது.
 அன்று காலைச் சாப்பாட்டுக்கே நாகம்மாள் அரிசி கடன் வாங்கிச் சமைத்திருந்தாள். 
எனவே மிகுந்த எரிச்சலுடன் அவள் வீரப்பன் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தாள். 
வந்ததும் சண்டை பிடிக்கத் தொடங்கினாள். 
வீரப்பன் தன்னிடமிருந்த பணத்தை அவள் முகத்தில் வீசி எறிந்து விட்டுத் தானும் கூச்சல் போட்டான்.
 இதைக் கண்டு அவர்களுடைய மகன் ராமன் ஏழு வயதுப் பையன், பயந்து வாசல் புறம் ஓடிப் போனான். 
நாகம்மாள் அதற்குப் பிறகு கடைக்குப் போய் சாமான் வாங்கிக் கொண்டு வந்து சமையல் செய்தாள்.
 சாப்பிட்டு முடிய இரவு பத்து மணியாயிற்று. 
அப்புறம் அரைமணிநேரம் அவர்கள் காட்டுப் பூனைகள் போல் சண்டை போட்டுக் கொண்டிருந்து பிறகு தூங்கிப் போனார்கள். 
மறுநாள் காலையில் கறிகாய் வாங்கி வருவதற்ககாக வீரப்பன் பணம் கேட்டான்.
 நாகம்மாள் செல்லாப் பணம் இரண்டணாவைக் கொண்டு வந்து கொடுத்தாள். 
வீரப்பன் உடனே சண்டை பிடிக்கத் தொடங்கினான்.
 முதல்நாள் இரவு கடை சாமான் வாங்கியபோது நாகம்மாள் ஏமாந்து செல்லாப் பணம் வாங்கி வந்திருக்க வேண்டும் என்று சென்னான்.
 ''குடிவெறியில் நீதான் வாங்கிக் கொண்டு வந்தாய்'' என்றாள் நாகம்மாள். 
இந்தச் சண்டையின் போது ராமன் நடுவில் வந்து ''நோட்டு, பென்சில் வேண்டும்'' என்றான். 
அவனுக்கு ஒரு அறை கிடைத்தது. 
நாகம்மாள் போட்டிக்குக் கைக் குழந்தையை அடித்தாள். ஏக ரகளையாயிற்று. 
வீரப்பனுக்கு வேஷ்டி துவைக்க நேரங் கிடைக்கவில்லை. 
இத்தனை தொந்தரவுகளுக் கிடையில் நாகம்மாள் சமைத்தபடியால் குழம்புக்கு உப்புப் போட மறந்து போனாள். 
சாப்பிடும்போது வீரப்பன் குழம்புச் சட்டியைத் தூக்கி நாகம்மாள் மேல் எறிந்தான். 
அது குழந்தைமீது விழுந்தது. 
மறுபடியும் ரணகளந்தான்.
 இன்று பீர்க் கடைக்குப் போகவேண்டாமென்று முதல்நாள் வீரப்பன் தீர்மானித்திருந்தான். 
ஆனால் மாலை மூன்று மணி ஆனதும் இந்தத் தொல்லைகளையெல்லாம் மறந்து சற்று நேரம் ''குஷி''யாக இருந்து வரலாமென்று தோன்றிற்று.
 ஆகவே முழு ரூபாய் ஒன்றை எடுத்துக் கொண்டு சாராயக் கடையைத் தேடிச் சென்றான்.
 சாராயக்கடையில் பன்னிரண்டணா தொலைந்தது.
 அடுத்த சந்தில் சூதாடும் இடம் ஒன்று உண்டு.
 வீரப்பன் அங்கே போனான். 
பாக்கி நாலாணாவையும் அங்கே தொலைத்தான்.
 இருட்டிய பிறகு வீட்டுக்குக் கிளம்பினான். 
வழியில் குடி மயக்கத்தில் விளக்குக் கம்பத்தில் முட்டிக் கொண்டான். 
ஒரு புருவம் விளாங்காய் அளவுக்கு வீங்கிப் போயிற்று. 
வீட்டுக்குப் போனதும் படுத்துக் தூங்கிப் போனான்.
 நாகம்மாள் சாயங்கால மெல்லாம் ஒரு மூலையில் படுத்து அழுது கொண்டிருந்தாள். 
இரவு சமைக்கவில்லை.
 ராமன் மற்றப் பிள்ளைகளுடன் தெருவிலும் சாக்கடையிலும் விளையாடிவிட்டு இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தான். 
நாகம்மாள் மத்தியானம் மீதியிருந்த சோற்றை அவனுக்குப் போட்டுத் தானும் சாப்பிட்டாள்.
 வீரப்பனை எழுப்பிச் சோறு போடவில்லை.
 திங்கட்கிழமை காலையில் வீரப்பனுக்குத் தலை நோவு பலமாயிருந்தது. புருவம் வீங்கி ஒரு கண் மூடிப்போயிற்று. 
முணுமுணுத்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான்.
 நாகம்மாள் மெதுவாகத்தான் எழுந்திருந்தாள்.
 முதல்நாள் அழுது அழுது இப்பொழுது அவள் முகம் பார்க்க முடியாதபடி கோரமாயிருந்தது. 
தலைமயிர் ஒரே பரட்டை. முனகிக் கொண்டே குழம்பும் சோறும் செய்தாள். 
வீரப்பன் அவசர அவசரமாய் அரை வயிற்றுக்குச் சாப்பிட்டு விட்டு மத்தியானச் சோற்றுக்காகச் சண்டை போட்டு இரண்டணா எடுத்துக் கொண்டு அழுக்குச் சட்டையும் கந்தல் வேஷ்டியுமாக ஓடினான்.
 ராமனுக்கு அன்று காலை இரண்டு மூன்று தடவை அடி விழுந்திருந்தது. 
கணக்குப் போடவில்லை ஆகையால் பள்ளிக் கூடத்துக்கும் போய் அடிபட வேண்டுமேயென்று அவன் கண்ணைக் கசக்கிக் கொண்டே பள்ளிக்கூடம் சென்றான். 
கைக்குழந்தையைக் கவனிப்பார் யாருமில்லை. 
அது ஒரு மூலையில் படுத்து அழுது கொண்டிருந்தது.

 வீரப்பனைப் போன்ற எத்தனையோ ஏழைத் தொழிலாளிகளின் வாழ்க்கை கள்ளு, பீர், சாராயக் கடைகளினால் பாழாகி வருகின்றது.

 அந்தக் கடைகளைத் தொலைக்க நீங்கள் என்ன உதவி செய்யப் போகிறீர்கள்?

[இந்த 2024 இல் அதாவது சரியாக நூறு ஆண்டுகள் கழித்து இன்றும் நிலைமை மாறவில்லை!]

Thursday 20 June 2024

திராவிடமும் சாராயமும்

திராவிடமும் சாராயமும்

“ஒரு மனிதனைப் பார்த்து நீ உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும் நீ மது அருந்தக்கூடாது என்று சொல்வதற்கும்என்ன பேதம் என்று கேட்கின்றேன்.”
(விடுதலை 18.03.1971)

 சாகும் தருவாயில் ஈவேரா எழுதிய வார்த்தைகள் இவை.
 ஆரம்பத்திலேயே அதாவது 1937ல் ஒரு பரிசோதனை முயற்சியாக சேலம் ஜில்லாவில் மட்டும் ராஜாஜியால் மதுவிலக்கு அமல்படுத்தப் பட்டபோதே இந்த நிலைப்பாட்டில் இருந்துள்ளார் ஈவேரா.

”சேலம் ஜில்லாவில் உள்ள தொழிலாளிகள்,
குடிப்பழக்கமுள்ள ஏழை முதல் பணக்காரர் வரையுள்ள குடிகாரர்கள் ஆகியவர்கள் கண்டிப்பாய் வேறு ஜில்லாக்களுக்கு குடி போய்விடுவார்கள்
அல்லது அந்த ஜில்லா எல்லைக்கே குடி வந்து விடுவார்கள்.
இந்த இரண்டும் செய்ய இயலாதவர்கள் குடி கிடைக்கும் புண்ணிய சேத்திரங்களுக்கு அடிக்கடி யாத்திரை புறப்பட்டு பொருளாதாரத்தில் நசிந்து போவார்கள்."
"கனம் ஆச்சாரியாருக்கு தனது ஜில்லாக் கிழவிகளிடம் பெயர் வாங்க வேண்டும் என்ற பைத்தியமே இந்த யோசனையற்ற காரியத்திற்கு காரணமாகும்.”
" மதுவிலக்கு அப்பாவி உழைக்கும் மக்களுக்குத்தானே அல்லாது ஆங்கிலேயர்களுக்கு அல்ல.
ஆகவே, மதுபான விசயமாய் வெள்ளையருக்கு அளிக்கும் சலுகை இந்தியர்களுக்கு அடியோடு கூடாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது.” 
(குடி அரசு 03.10.1937)

”தலைசிறந்த நாகரிக மக்கள் நாட்டில் மது அருந்துவது மற்றவர்கள் கவனிப்பே இல்லாத சர்வ சாதாரண அவசிய செய்கையாக வழக்கமிருந்து வருகிறது.
நமது நாட்டு ஜனநாயக ஓட்டு முறை, தேர்தல் முறை இருந்து வருகிற கூடாத காரியத்தை விட மது அருந்துவதும் அதன் பயனும் கேடான காரியமா என்று கேட்கிறேன்.”
”மது அருந்துவது உணவைப் போல் மனித ஜீவ சுபாவம், மனித உரிமை என்றும் கூறலாம்.
வேத புராண தர்மங்களைப் பார்த்தால் விளங்கும்.
மது விலக்கு என்பது கொடுங்கோலாட்சியின் கொடுங்கோண்மையே ஆகும்.
பார்ப்பனர்கள் மாடு அறுக்கக் கூடாது, மாடு தின்னக் கூடாது என்று கூறுவதற்கும் அரசாங்கம் மது அருந்தக் கூடாது, யோக்கியமான மது உற்பத்தி வியாபாரம் கூடாது என்பதற்கும் என்ன பேதம் என்று கேட்கிறேன்.”
(விடுதலை 09.11.1968)

’’மது அருந்துபவர்கள் எல்லோரும் யோக்கிய பொறுப்பற்றவர்கள் என்றும் மது அருந்தாதவர்கள் எல்லோரும் யோக்கிய பொறுப்புடையவர்கள் என்றும் கருதிவிடக்கூடாது. 
மனிதத்தன்மைக்கு மது அருந்துவது இழுக்கு என்று கருதக்கூடாது....
குடிப்பழக்கமில்லாதவர்களில் எத்தனை யோக்கியமற்றவர்கள், கைசுத்தமற்றவர்கள், சமுதாயத்திற்குக் கேடானவர்கள் இருக்கிறார்கள்?!
இவர்களைவிட மது அருந்துபவர்கள் கேடர்கள் அல்ல. "
”பார்ப்பான் எப்படி சாதி ஒழிக்கப்படக்கூடாது என்று/சட்டம் செய்து கொண்டானோ அது போல் போலீசாரும், அயோக்கியரும் பிழைக்க ஒரு வழி கொடுக்கலாம் என்று மதுவை தடை செய்து சட்டம் செய்து கொண்டான்.
அதை ஒரு சிபாரிசாகத் தான் கொள்ளவேண்டும்” 
’’மது கீழ்ஜாதியார் என்பவர்களே பெரிதும் அருந்துவதால் அது குற்றம் குறை சொல்லத்தக்கதாக ஆகிவிட்டது."
“நான் கீழ் ஜாதி என்பதை எப்படி ஒப்புக் கொள்வதில்லையோ அப்படித்தான் குடிகாரன் குற்றவாளி என்பதையும் மனைவி தவிர மற்ற பெண்களுடன் காதல் நடத்துபவன் குற்றவாளி என்பதையும் ஒப்புக்கொள்வதில்லை"
(விடுதலை 16.02.1969)

“இன்றைய மதுவிலக்கு ஒரு விஷ நோய் பரவல் போன்ற பலன் தருகின்றது. 
அது தொற்று நோய் போலவும் கேடு செய்கின்றது.
கடுகளவு உலகறிவு உள்ளவர் எவரும் மதுவிலக்கை ஆதரிக்கமாட்டார்கள் என்பது எனது கருத்து, முடிந்த முடிவு.
இதை யார் சொல்கிறார் என்றால் மதுவிலக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு இணையற்ற ஈடற்ற பிரச்சாரகர் என்று காந்தியாலும், இராஜாஜியாலும் பட்டம் பெற்று தனது நிலத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தவன் ஆகிய இராமசாமி (நான்) சொல்கிறேன்."
“மது விலக்கு என்பது ஒரு அதிகார ஆணவமே ஒழிய மனிதத் தன்மை சேர்ந்ததல்ல என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க தயார்.” 
(விடுதலை 18.3.1971)

 ஆனால் ஈவேரா தென்னை மரங்களை வெட்டினார் என்பது மட்டுமே திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்யப் படுகிறது

(இதுவரை 25.07.2015 அன்றைய பதிவு) 

 ஈவேரா காட்டிய வழிப்படி 1949 லிருந்து 25 ஆண்டுகள் மதுவிலக்கு நடவடிக்கை மூலம் குடியை மறந்திருந்த தமிழர்களை 1971 உல் அரசாங்க சாராயக் கடைகள் திறந்து குடிக்க வைத்தார் கருணாநிதி!

 மது ஒழிப்பை பரப்புரை செய்து 1991ல் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, கருணாநிதியின் "மலிவுவிலை மதுக்கடைகளை" (மிடாஸ்) மூடும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டுத் தன் ஆட்சியைத் தொடங்கினார். 2003 இல் அவரே டாஸ்மாக் என்று மீண்டும் அரசாங்க சாராயத்தைக் கொண்டுவந்தார்.
 சசி பெருமாள் சாராயத்தை ஒழிக்க போராடி உயிரிழந்தபோது ஜெயலலிதா டாஸ்மாக் இல் போலீஸ் பாதுகாப்பு போட்டு சாராயம் விற்றார்.

 இவற்றை மிஞ்சும் வகையில் ஸ்டாலின் ஆட்சியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 'கள்ளச் சாராய மரணங்கள்' மீண்டும் நிகழத் தொடங்கின.  
2023 இல் மரக்காணம் கள்ள சாராயம் அருந்தி 14 பேர் சாவு!
தற்போது 40 பேர் கள்ளக்குறிச்சி பகுதியில் சாவு!
இவர்களுக்கு மக்களின் வரிப்பணம் நபருக்கு பத்து லட்சம் நிவாரணமாக அறிவிக்கப் பட்டுள்ளது!
 சாதிக் பாட்சா போன்றோர் மூலம் போதைப்பொருள் வியாபாரமும் கொடிகட்டி பறக்கிறது.

 ஆக திராவிட விஷச்செடி யின் நீர் ஆதாரம் சாராயம்தான்!
 சாராய வருமானம் இல்லாமல் அரசு நடக்காது என்பதும் பொய்!
அரசு நினைத்தால் முடியும்!
மதுவுக்கு பதில் பால் பொருளாதாரத்தை கொண்டுவர முடியும்!
 கொரோனா காலகட்டத்தில் சாராயம் முற்றாக தடைபட்டபோது குடிகாரர்கள் எவரும் சாகவில்லை பைத்தியம் ஆகவில்லை சட்ட ஒழுங்கு பிரச்சனை கூட வரவில்லை!
ஆனால் மது குடித்தவன் தன் மூன்று மகள்களைக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது!

 மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருந்தால் மட்டுமே தாங்கள் ஆளமுடியும் என்பதாலேயே திராவிடம் உயிரைக் கொடுத்தாவது மதுவைத் திணிக்கும்! 

Saturday 15 June 2024

தமிழருக்கான பரந்த நிலப்பரப்பு

தமிழருக்கான பரந்த நிலப்பரப்பு

20.06.2013 அன்றைய பதிவு
 நன்றாக ஆராய்ந்து சிந்தித்து தனிநாடு மட்டுமே நிரந்தரத் தீர்வு என்று நான் முடிவு செய்தபோது எழுதிய முதல் பதிவு

**தமிழருக்கான பரந்த நிலப்பரப்பு**
(பின்னூட்டங்கள் வரை முழுமையாகப் படியுங்கள்)

1)ஆக்கிரமிக்கப்பட்ட தமிழகம்:

1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின்  போது தமிழரின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் மீறி திராவிடத்தின் பேராதரவுடன் தமிழரிடமிருந்து அண்டை மாநிலங்களால் பிடுங்கப்பட்ப் பகுதி.

2)தமிழீழம்:

2009ல் சிங்களத்தால் இந்தியா மற்றும் 32நாடுகளின் படைவலிமையால் அபகரிக்கப்பட்ட பகுதி.

3)தமிழ்நாடு:

1956க்குப் பிறகு பிடுங்கப்பட்ட பகுதிகளில் சிறுபகுதியை மீட்டு இன்று 'தமிழ்நாடு ' என்னும் பெயரால் நீண்டகாலம் தமிழரல்லாதோரால் ஆளப்பட்டுவரும் பகுதி.

4)அந்தமான்-நிகோபர் தீவுகள்:

1947ல் இந்தியப் போலி விடுதலையின்போது பூர்வீகத் தமிழரைவிட அதிக அளவில் வங்காளியரைக் குடியேற்றி இன்று அவர்கள் மூலம் தமிழர் ஒடுக்கப்பட்டுவரும் அந்தமான்-நிகோபர் 532தீவுகள்.

இவையே இன்றைய தமிழர் பெரும்பான்மைப் பூர்வீக நிலப்பகுதி ஆகும்.

இது மிகத்துல்லியமானதென்று கூறிவிடமுடியாது, ஆனால் இதில் மிகச்சிறிய திருத்தங்களே ஏற்படும் என்று உறுதிகொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, இதில் திருவனந்தபுரம் சேர்க்கப்படவில்லை; ஆனால், திருவனந்தபுரம் தமிழர் பெரும்பான்மைப் பூர்விக மண்ணே ஆகும்.

தமிழ்க் குடியரசு கோரிக்கை:

தனிநாடு கோரும் அத்தனைத் தகுதியும் நமக்கு உள்ளது.
புரியும்படி கூறினால் தமிழருக்குத் தனிநாடு கோரும் தகுதி இல்லையென்றால் இவ்வுலகில்  எந்த மக்களுக்கும் அத்தகுதி இல்லை.
அத்தகுதிகளாவன,

*வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு அதில் நீண்ட நெடிய இனவரலாறு மற்றும் வரலாற்றுச் சான்றுகள்.
*தனித்தன்மையான மொழி, கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டுமுறைகள்.
*திருமணச் சடங்குகள், ஈமக்கடன்கள், பழமொழிகள்,சொலவடைகள்,செவிவழிக் கதைகள்.
*பண்டைய நிர்வாகமுறை, நகர்க்கட்டமைப்பு, பண்டிகைகள், கேளிக்கைகள்.
*உடற்கூறு,தோற்றம், உறவுமுறைகள்,சமூகக்கட்டமைப்பு.
*தொழில்முறைகள் ஆபரணங்கள் மற்றும் உடையமைப்பு
*தனித்தன்மையுடைய இசை, கலை, நடனம், இலக்கியம், காப்பியங்கள்.
*தற்காப்புக் கலைகள், பாரம்பரிய மருத்துவம், உடல் மற்றும் மனவளக்கலைகள்.
*கணித,வானியல்,அறிவியல், அரசாட்சி, இல்லறம் பற்றிய பண்டைய ஆராய்ச்சி நூல்கள்
*கனிசமான எண்ணிக்கை.
*சுற்றிலும் கலாச்சார, மொழி, தோற்ற ஒற்றுமைகொண்ட வேற்றின மக்கள்

ஈழம்:

ஒரு முன்னோட்டம்;
ஒட்டு மொத்தத் தமிழருக்கும் ஒரு முக்கியமான பாடம்;
ஈழ மக்கள் அடக்குமுறைக்கு அடிபணியாது போராடிவரும் வீரமறவர்கள்.தமிழினத்தின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் நம் முன்னே வாழும் முன்மாதிரிகள்.
தமிழினம் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவது, வல்லாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம், அழிவுகளைத் தாங்கியபடி முன்னகரும் விடாமுயற்சி, சரியானத் தலைவனைத் தேர்ந்தெடுப்பது அவன் பின்னிற்பது, உலகம் முழுவதும் பரவிய தமது சொந்தங்களை ஒன்று திரட்டுவது,உலகையே வியக்கவைக்கும் சாதனைகள் மற்றும் தாய்மொழித் தமிழ் மீதான பற்று ஆகியவற்றை நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசான்கள்.
ஆயிரம் இன்னல்கள், பிரிவினைகளை மீறி இனவுணர்வுடன் உறுதியாக தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் ஈழமக்களிடம் உலகத் தமிழர் கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம் உள்ளது.
ஈழத்தில் நடந்த அத்தனையும் தமிழ்நாட்டிலும் நடந்தே தீரும்.
இது உறுதி. 

மறைக்கப்பட்ட அந்தமான்-நிகோபர் தீவுகள்:

இதுவும் தமிழரிடமிருந்து மறைக்கப்பட்ட பிடுங்கப்பட்ட பூர்வீக மண் ஆகும்;
இத்தீவில் வாழும் தமிழரில் பெரும்பாலானோர் ஆங்கில ஆட்சியிலும் அதன்பிறகும் குடியேறியவர்கள்.ஆனால், அங்கேயே வாழுந்துவரும் தமிழரும் உண்டு, தவிர அத்தீவுகளின் ஆதிவாசிக்குடிகள் மொழி மற்றும்உடற்கூறு ரீதியில் தமிழினத்தவர் என்பது நிறுவப்பட்டுள்ளது.
இன்று தமிழரை விஞ்சுமளவுக்கு வங்காளியர் குடியேற்றப்பட்டு, இந்தி திணிக்கப்பட்டு தமிழும் தமிழரும் கிட்டத் தட்ட அடிமையாக ஆக்கப்பட்டுவிட்டனர்.
ஆனாலும், தம் சுயமுயற்சியால் தமிழையும் தமிழ்மக்களையும் ஒருங்கிணைத்து ஓரளவு பலமான நிலையில் தமிழர் தம் இருப்பைத் தக்கவைத்துள்ளனர்.

தற்போதைய தமிழ்நாடு:

தமிழரின் பூர்வீக நிலப்பரப்பில் ஓரளவுத் தமிழரின் கட்டுப்பாட்டில் 
உள்ள நிலப்பகுதி ஆகும்;
தமிழரல்லாதோர் பற்றித் துல்லியமான விபரங்கள் இல்லை. இதற்குக் காரணம் 400, 500 வருடங்களாக தமிழரோடு தமிழராக வாழ்ந்து வரும் வேற்றினத்தவர் கலந்து வாழ்ந்துவருவதே ஆகும்.இவர்களைத் தமிழராக ஒத்துக்கொள்வது இயலாத ஒன்றாகும்.
இவர்கள் பல வருடங்களாகத் தாய்நிலத்தின் தொடர்பற்றுப் போனதால் தாய்மொழியை வேகமாக மறந்துவருகின்றனர்.  வியாபார நிமித்தமாக இந்தோனேசியா, கம்போடியா தாய்லாந்து போன்ற தெற்காசிய தீவுகளுக்கும் நாடுகளுக்கும், நமீபியா, அங்கோலா, ட்ரினாட் டொபகோ, சூரினாம், கயானா போன்ற ஆப்பிரிக்க தென்னமெரிக்க நாடுகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் 1000 வருடங்களுக்குமுன் குடிபெயர்ந்த தமிழர்கள் தாய்நிலத் தொடர்பறுந்துத் தாய்மொழியையே மறந்து தம் இன அடையாளத்தை இழந்து நாடோடிகளாகவும் ஏதிலிகளாவும் அரைகுறை வாழ்வு வாழ்ந்துவரும் நாதியற்றத் தமிழர்களாக உள்ளனர்.
அவர்களையும் தாய்நிலத்தில் குடியேற்றவோ  அல்லது அவர்கள் வாழும் நாட்டில் சமவுரிமை பெற்றுக் கொடுக்கவோ வேண்டிய தலையாயக் கடைமையும் தமிழருக்கு உள்ளது. அவர்கள் எப்படி தமிழர்களாக என்றும் ஏற்கப்படுவார்களோ அதேபோல தமிழ்மண்ணில் வாழும் வேறுமொழியினரைத் தமிழராக ஏற்பது இயலாத ஒன்று.
அதற்காக ஏற்கப்படாததின் பொருள் ஒதுக்கப்படுவது என்று கொள்ளக்கூடாது. பிறமொழி பேசும் மக்களில் பலர் தமிழ்வழிக் கல்வி கற்கின்றனர். தாயிடமும் உறவினரிடமும் தாய்மொழியிலும் தந்தையிடமும் உடன்பிறந்தவரிடமும் தமிழிலும் பேசும் வேற்றினத்தவரும் உள்ளனர்.
அவர்களுக்கு தமிழினம் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
தமிழராகத் தன்னை முன்னிறுத்தும் இத்தகைய பிறமொழியினருக்கு தமிழருக்குச் சமமான மதிப்பும் உரிமையும் வழங்கும் கடைமை தமிழருக்கு உள்ளது.
தாய்மொழியை மறந்தாலும் சாதிய விழுமியங்கள், கலாச்சாரம், வழிபாட்டுமுறை, இறுதிச் சடங்குகள், திருமணமுறை என தமது அடையாளங்களை அவர்கள் துறந்துவிடவில்லை.
தவிர,தாய்நிலத்தோடு தொடர்பிலுள்ள பிறமொழியினர்  இன்றும்
 தமிழ்மண்ணில் தொடர்ந்து குடிபுகுந்து வருகின்றனர்.
தமிழர்நிலத்தில் உள்ள பிறமொழியினரில் இவர்கள் எண்ணிக்கையே இன்று அதிகமாகும்.தவிர இது கூடிக் கொண்டே போகிறது. 
வேற்றுமொழியினர் ஒருவேளை வேறொரு தமிழர்த் தொடர்பில்லாத நாட்டில் குடியேறினால் இரண்டு தலைமுறைகளுக்குப்பிறகு அவர்கள் தம்மைத் தமிழராக முன்னிறுத்த முடியுமா? 
முடியாதுதானே.
தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழ் கலாச்சாரத்தின்  தாக்கம் ஏற்பட்டுள்ளது அவ்வளவே. வேற்றினத்தவர் மத்தியில் வாழும் தமிழர் மீது வன்முறையும் கலவரமும் ஏவப்பட்டபோதும் தமிழர் தம்மிடையே வாழும் பிறமொழியினரைத் தமக்கே உரிய மாண்போடு கையாண்டு
 வந்துள்ளனர்.இது அனைவரும் அறிந்த உண்மை.அதேபோல் நாளை அமையப்போகும் தமிழ்க் குடியரசிலும் பிறமொழியினர் சமவுரிமை பெற்று வாழ்வர் என்பது உறுதி. 
ஒரே இனம் மட்டும் உள்ள ஒரு நாடு கிடையாது என்பதே உண்மை.
தமிழகத்தில் எப்படியும் 65% சதவீதத்திற்குக் குறையாமல் தமிழர் உள்ளனர்.
ஆனால், பெரும்பான்மைப் பூர்விக நிலத்திலேயே வேற்றினத்தவரால் ஆளப்பட்டு வருகின்றனர்.

அன்று ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழகம்:

1956 ல் இழந்த இப்பகுதியில் இன்று தமிழரே தம்மை வந்தேறிகளாகக் கருதும் அளவுக்கு அடிமைப்பட்டுள்ளனர்.
தமிழரின் பெரும்பான்மைப் பூர்விக நிலப்பகுதி அன்றைய தமிழ்மக்களின் அரசியல் அறியாமையால் பிடுங்கொள்ளப்பட்டது.
வளமான இப்பகுதி மற்ற மாநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோதே தமிழர் எண்ணிக்கை பெரும்பாலான இடங்களில் 50% இருந்தது. அந்நியர் கைக்குப் போன பிறகு இன்னும் குறைந்துவிட்டது.
எந்த உரிமையும் கிடைக்காமல்  தமது பூர்வீக மண்ணிலேயே சிறுபான்மையாக்கப்பட்டு இனரீதியான பிரச்சனைகளுக்கும் தாக்குதலுக்கும் கலவரங்களுக்கும் முகம் கொடுத்துவருகின்றனர்;
வழக்கம் போல அனைத்துத் தமிழருக்கும் இவர்கள் போய்க் குடியேறியதாகவே காட்டப்பட்டு உள்ளது.
மபொசி , மார்சல் நேசமணி போன்ற தலைவர்களின் அரும்பெரும் முயற்சியாலும் போராட்டங்களினாலும் சென்னை,திருத்தணி, செங்கோட்டை மற்றும் கன்னியாகுமரி உள்ளடக்கிய இன்றைய தமிழகத்தின் 15% பகுதி மீட்கப்பட்டது அல்லது காக்கப்பட்டது;
இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் தமிழர்கள் சில இடங்களில் நாற்பது சதவீதமும் சில இடங்களில் தொண்ணூறு சதவீதம் வரையிலும் கூட இருக்கின்றனர்; 
( இடுக்கிமாவட்டத்தில் 95% தமிழர் இருக்கின்றனர்.
தமிழ்க் குடியரசின் வடபகுதி அதாவது, இன்று ஆந்திராவுடன் இணைக்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் தமிழர் 35% முதல் 70% வரை உள்ளனர்)
 அதாவது, தமிழரின் நிலத்தில் வேற்றினத்தவர் குடியேறி குடியேறி தமிழரைவிட அதிகம் பெருகிவிட்டனர்;
ஆனால் இவையனைத்தும் தமிழரின் பூர்வீக மண் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன;(அதுவும் பல தடைகளை மீறி தமிழார்வலரின் தனிமனித முயற்சியாலும் தியாகத்தாலும்    மட்டுமே பெரும்பாலும் வெளிக்கொணரப்பட்டவை)
எனவே இந்த மண்ணை நாம் கோருவதில்  தவறில்லை;
தடயங்களின் அடிப்படையில் நாம் முழுஇந்தியாவையும் கோரலாம்தான்; ஆனால் தமிழரின் தற்போதைய எண்ணிக்கையை கருத்தில் கொள்வதும் அவசியம் ஆகும்;
அதேபோல எண்ணிக்கைபடி தமிழர்  மியான்மர்(பர்மா), மலேசியா, சிங்கப்பூர், டென்மார்க், இலங்கை மற்றும் பல நாடுகளில் சிலபகுதிகளில் அப்பகுதி பூர்விக குடிகளைவிட அதிகம் வாழ்கின்றனர்;
அவை தமிழரின் பூர்வீக மண் இல்லை; எனவே அவற்றை நாம் கோரவியலாது.
ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழ்நாடு பற்றி நாம் அறியவேண்டியது நிறைய உள்ளது; 

பல நூறு வருடங்களாக வேற்றினத்தவர் தமிழர் எல்லைப்பகுதியில் தொடர்ந்து குடியேறியதும்;  தமிழர் அவர்களை ஆதரித்ததும், பின் தமது சொந்த மண்ணிலேயே தமிழர் சிறுபான்மையினராகும் அளவுக்கு வேற்றினத்தவர் குடிபுகுந்ததையும்; வேற்றினத்தவர் ஆட்சியில் (விசயநகர மற்றும் திராவிடக் கட்சிகளின் ஆட்சி) இவ்வகைக் குடியேற்றம் தமிழரின் பூர்விக நிலத்தின் மூலைமுடுக்குவரை ஒரு இடம் விடாமல் புகுத்தப்பட்டதும்; தமிழரின் பாரம்பரிய அடையாளங்கள் அழிக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் திரிக்கப்படுவதும் காலம்காலமாக தொடர்வதும்; வேற்றினத்தவர் ஆட்சியில்(நாய்க்கர் ஆட்சி) தமிழர் கூட்டம் கூட்டமாகத் தமது மண்ணைவிட்டு வெளியேற வேண்டிவந்ததும்(மும்பை மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு); 
  தமிழர் அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டதும்(இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா போன்ற இடங்களுக்கு வெள்ளையர்களால்) ; உலகம் முழுவதும் பரவியுள்ளத்தமிழரின் பிரச்சனைகள் மற்ற பகுதித் தமிழருக்குத் தெரியாமல் மறைக்கப்படுவதும்(ஈழப்பிரச்சனை, மலேசியத் தமிழர் பிரச்சனை, அந்தமான் நிகோபர் தமிழர் பிரச்சனை, மற்றும் உலகம் முழுவதும் இரண்டாந்தரக் குடிகளாக தமிழர் நடத்தப்படுவது);  தமிழரின் தகவல் தொடர்பு ஊடகங்கள்(தொலைக்காட்சி ,நாளிதழ்) வேற்றினத்தவர் பிடியிலேயே எப்போதும் இருப்பதும்; தமிழுணர்வு எழுச்சி பெறவிடாமல் தமிழரை ஆண்டாண்டு காலமாக வேற்றினத்தவரே(தமிழகத் திராவிட , ஈழத்தில் சிங்கள மற்றும் தீவுகளில் வங்காளிய ஆட்சி)  அடிமைப்படுத்தி வருவதும்; தமிழ்மொழி ஆராய்ச்சிக்குப்(தமிழக, ஈழ நிலம் மற்றும் கடல்  அகழ்வாராய்ச்சி) போதிய முயற்சிகள் எடுக்கப்படாததும், வெளிநாட்டினரால் வெளிக்கொண்டு வரப்பட்ட தமிழரின் வரலாறும் (சிந்து சமவெளி, குமரிக்கண்ட ஆராய்ச்சிகள்) ஆதாரங்களும் மறைக்கப்படுவதும் தடைவிதிக்கப்படுவதும்;  தமிழரின் பாரம்பரியம் ,கலாச்சாரம் ,பண்பாடு மற்றும் நாகரீகம் காணாமல் அடிக்கப்பட்டதும்;  தமிழுடன் பிற மொழிக்கலப்பும் எழுத்துருக்கலப்பும்  பிறமொழிக்கல்வியும் ஊக்குவிக்கப்படுவதும்; தமிழ்ப் பயிற்சிக்கூடங்கள் , பல்கலைக்கழகங்கள் போதிய அளவு இல்லாததும்;
ஆங்கில இந்தி மொழித்திணிப்பும்;
 தமிழ் கலைகள் , மருத்துவம் அறிவியல் தொடர்ந்து தமிழருக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளப்படுவதும்; தமிழ் ஓலைச்சுவடிகள் பொருள் அறிந்து அச்சேற்றுவதில் மந்தப்போக்கும், ஆதித்தமிழ் எழுத்துக்களும் வார்த்தைகளும் எண்களும் கைவிடப்படுவதும்; 
தமிழரின் உரிமைகள் அனைத்தும் தொடர்ந்து மறுக்கப்படுவதும், தமிழர் போராட்டங்கள்
 (1940களில் நேதாசி தலைமையில் விடுதலைப் போராட்டம், 1950களில் மண்மீட்பு, 1960களில் மொழிப் போராட்டம், 1957 முதல் 1978 வரையான ஈழ மலையக அறவழிப் போராட்டம், 1980 களிலிருந்து ஈழ ஆயுதப்போராட்டம், அதே காலத்தில் தமிழக விடுதலைக்கான தமிழரசன் தலைமையிலான ஆயுதப்போராட்டம், 1995க்குப் பிறகான நதிநீர்ப் போராட்டங்கள், 2006க்குப்பின்  மலேசியத் தமிழர் போராட்டம், தற்போதைய அணுவுலைப் போராட்டம், மாணவர்ப் போராட்டம், புலம்பெயர்த் தமிழர் ஈழப் போராட்டங்கள்)
 புறக்கணிக்கப்படுவதும்,ஒடுக்கப்படுவதும், மறக்கடிக்கப் படுவதும்;மறைக்கப்படுவதும்;
தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தமிழ்மண் மீட்கவும் போராடியத் தலைவர்கள் (மபொசி, பெருஞ்சித்திரனார், மார்சல் நேசமணி, தொண்டமான், தந்தை செல்வா, பொன்னம்பலம், தமிழரசன், வீரப்பன், சீதையின் மைந்தன்) காணாமல் அடிக்கப்பட்டு வேற்றினத் தலைவர்கள் ,மன்னர்கள் முன்னிறுத்தப்படுவதும், தமிழர் உயிர் மிகவும் மலிவாகக் கருதப்படுவதும், தமிழருக்கெதிரானக் கலவரங்கள்(கர்நாடகா, கேரளா,இலங்கை, மலேசியா மற்றும் ஆந்திரா) இனப்படுகொலைகள் ,இனக்கலப்பு(ஈழம், மலையகம், பர்மா, தமிழக மீனவர்) தொடர்கதையாகி வருவதும்,
பேரழிவை ஏற்படுத்தும் அணுவுலைகள் மற்றும் ஆலைகள் தமிழர் தலையில் கட்டப்படுவதும்;
முதலாளித்துவ ஏகாதிபத்திய சுரண்டல்களும்;
திரைப்படம், மது, மட்டைப் பந்து என தேவையே இல்லாத விடயங்கள்  மூளையில் புகுத்தப்பட்டு இளந்தலைமுறையினர் காயடிக்கப்படுவதும்;
 தமிழரை சாதி ரீதியாக மதரீதியாகப் பிரித்து அவர்களுக்குள் மோதல்கள் ஏற்படுவதும்;
சாதியுணர்வு அரசியலும், மறைந்த தலைவர்களுக்கும் தமிழினத் தலைவர்களுக்கு  சாதிரீதியான அடையாளங்கள் கொடுக்கப்படுவதும்; மனிதநேய அடிப்படையிலான உதவிகள் கூடத் தமிழருக்குக் கிடைக்காததும்(ஈழம், மலையகம், வெளிநாட்டுவாழ் தமிழருக்கு இந்தியத் தூதரகம்,தமிழக ஈழ ஏதிலிகள்); உலக மக்கள் தமிழருக்கு எதிராகத் திருப்பப்படுவதும்(இந்தியா உலகநாடுகளை புலிகளைத் தடைசெய்ய வைத்தது, இலங்கை லிபியஅதிபர் மூலம் இசுலாமிய நாடுகளை தமிழருக்கு எதிராகத் திருப்பியது, இந்திய மக்களிடம் தமிழரை மொழிவெறியர்களாகத் தீவிரவாதிகளாகக் காட்டுவது);
தமிழரின் அறிவும் திறமையும் சுரண்டப்படுவதும்; தமிழக நீர், மண்வளங்கள் சுரண்டப்படுவதும் நாம் அறிந்து வைக்கவேண்டிய நினைவில் கொள்ளவேண்டிய  இன்னும் இன்னும் எண்ணிலடங்கா பிரச்சனைகள் தமிழர்மீது திணிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்திலும் பெரும்பாலான பிரச்சனைகள் இனரீதியாகத் திணிக்கப்படுவது.
நம்மைச் சுற்றி வாழும் மக்களை விட நமது பிரச்னைகள் வேறுவிதமானவை.
இவற்றிற்கான தீர்வு தனிநாடு அமைவதே ஆகும்.
இந்தத் தீர்வு நாம் விரும்பும் ஒன்று இல்லை நம்மீது திணிக்கப்பட்ட ஒன்று.
நமக்கென்றொரு நாடும் வலிமையான படையும் இருந்தாலொழிய நாம் தப்பிப்பிழைப்பது நடவாத ஒன்று;
நாம் ஒரு முடிவிற்கு வராவிட்டால், நமது பிள்ளைகள் இன்னும் ஐந்தே தலைமுறைகளில் பிச்சைக்காரர்களாகவும்,கூலிகளாகவும், வேசிகளாகவும், நோஞ்சான்களாகவும், தெருவில் வாழ்க்கை நடத்தும் இழிநிலை மக்களாக இருப்பர்.
இருபது தலைமுறைக்குப் பிறகு அருங்காட்சியத்தில் நம் இனம் வாழ்ந்த தடையங்கள் மட்டும் கிடைக்கும். அழிந்த இனங்களின் பட்டியலில் நம் பெயர் இருக்கும்.

இதற்கு விடுதலை அடைந்த பல நாடுகளும் விடுதலைக்காக முழுமையாகப் போராடாமல் மடிந்த இனங்களும் உதாரணம்.
ஐந்துகோடி தமிழரின் குடிநீரை மறுக்கும் கொடுமை, தொடர்ச்சியான கொலைகள், கலவரங்கள், இனப்படுகொலை, அரசியல் அடக்குமுறை, மொழியுரிமை மறுப்பு போன்ற தலையாயப் பிரச்சனைகளில்கூடத் தமிழருக்கு மனிதநேய அடிப்படையில்கூட உதவாத இந்தியா உட்பட சுயநல சர்வதேச நாடுகள் நம்பிப் பலனில்லை இனி.
ஏற்கனவே நமது நிலத்தையும் விடுதலையையும் பெரும்பாலும் இழந்துவிட்ட நாம் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் நம் முன்னோர்களால் தள்ளபட்டுள்ளோம்;
இப்போதும் போராடவில்லை என்றால் வரலாற்றில் அழிந்த இனமாகக் கூட நம் பெயர்வராமல் மறைக்கப்படலாம்.
தமிழரே ! 
நம் சந்ததியின் எதிர்காலம் நம் கையில்.
நம்மைக் காக்க நம்மைத் தவிர இவ்வுலகில் யாருமில்லை.
ஈழமக்களைப் போலப் போராடி, குருதி சிந்தி, சாதனைகள் புரிந்து , இனவுணர்வுடன் நமக்கென்று தனிநாடு அமைக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
தமிழினத்தின் வீரத்தையும் பெருமையையும் அறியுங்கள்.
ஆனால், அந்த வீரமும் பெருமையும் இல்லாத இனமாகவே நாம் இருந்தாலும் இப்போது போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

"நமது பிரச்சனைகளை மற்றொரு தமிழரிடம் மட்டும் கூறுங்கள்"

தமிழரை மட்டும் ஒன்றிணையுங்கள்;
தமிழராக இணையுங்கள்;
தமிழினத்திற்குள் எந்த  வேறுபாடும் இருக்கவேகூடாது.
நல்லவர்களாக இருப்போமோ இல்லையோ வல்லவர்களாக இருப்போம்;
நமக்கென்று ஒரு நிலப்பரப்பு;
அதில் மலை,கடல், கனிமம், எண்ணெய், வேளாண்மை, வனங்கள், தீவுகள் என அத்தனை வளங்களும் உள்ளன.
உலகமே சுற்றிவளைத்துத் தனிமைப்படுத்தினாலும் நாம் தனித்தியங்க முடியும்;
நமக்கு வலிமையான வீரம் செறிந்த படையிருக்கும், நமக்குள் எந்த பாகுபாடும் இருக்காது;
சாதி,மதம் என அனைத்து பிரிவினைகளும் கலையப்பட்டிருக்கும்;
தமிழன்னைக்கு வான்முட்டும் கோவில்கள்;
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் பண்டையகாலத் தமிழர் வழிபாட்டுமுறை நாத்திகத்திற்கும் முன்னோடியாக பின்பற்றப்படும்;
ஏற்கனவே இருக்கும் வேற்றினத்தவரும் இனி குடியேறும் வேற்றினத்தவரும் தமக்கான உரிமைகள் பெற்றுப் பெருமையுடன் வாழ்வர்;
வேற்றினத்தவர் எவர் எங்கு அடக்குமுறைக்கு உட்பட்டாலும் அங்கே தமிழ்க் குடியரசின் குரல் ஓங்கி ஒலிக்கும்;
வேற்றின விடுதலைப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டால் தமிழ்க்குடியரசின் வேட்டுச் சத்தங்கள் அங்கே ஓங்கி ஒலிக்கும்;
வேற்றினத்தவருக்கே அப்படியென்றால் உலகின் ஒரு மூலையில் ஒரு தமிழனைச் சீண்டினால் என்ன நடக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?
தமிழர் உரிமைக்குக் குறுக்கே நிற்கும் அத்தனை ஆற்றல்களும் வேரோடு கலைந்தெறியப்படும்;
தமிழர் அனைவரும் நிமிர்ந்து நடக்கும் காலம் வரும்;
இன்று நம்மை எதிர்க்கும் அத்தனைபேரும் நாளை வல்லரசாக இருக்கும் நமது நாட்டுக்கு வந்து சம்பாதிக்கத் துடிப்பார்கள்;
உலக மக்கள் தமிழனாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குவார்கள்;

2009 ல் இந்த உலகமே தமது கண்களை விரித்து பார்த்திருக்க, உலகமாந்தர் அனைவரையும் சுற்றி பார்வையாளர்களாக அமர்ந்திருக்க, அவர்கள் மத்தியில் சிங்களவெறியர் தமிழினத்தை சீரழித்த பிறகும் நாம் மற்றவரை நம்புவோமானால் நம்மைப்போன்ற மடையர்கள் யாரும் இருக்கமுடியாது.

வாருங்கள். 
இவ்வுலகின் எத்தனை பெரிய சாலை என்றாலும் என்றோ ஒரு மனிதன் தனது கால்களால் அடியெடுத்து வைத்துத் துவக்கிய ஒற்றையடிப் பாதைதான்.
நமது சந்ததிக்கான முதல் அடியாக இதைப் பகிருங்கள்.
தனிநாடு ஒன்றே நம் வருங்காலத் தமிழ்ப்பிள்ளைகளுக்கு நாம் சேர்த்துவைக்கும் விலைமதிப்பில்லா சொத்து.
அதற்கான பயணத்தைத் தொடங்கி வையுங்கள்

Saturday 8 June 2024

2024 லும் 40 ல் 8 வந்தேறிகள்

2024 லும் 40 ல் 8 வந்தேறிகள்

1)துரை வைகோ நாயுடு 
2)  அருண் நேரு ரெட்டி 
3) சு வெங்கடேசன் நாயுடு 
4) வைத்திலிங்கம் ரெட்டி
5)கனிமொழி இசை வேளாளர்
6) கோபிநாத் நாயுடு
7) கலாநிதி வீராசாமி நாயுடு
8) தயாநிதி மாறன் இசை வேளாளர் 

பிற வெற்றியாளர் சாதி விபரம் வருமாறு:-

சசிகாந்த் செந்தில் பறையர் 
ஆ ராசா பறையர் 
திருமாவளவன் பறையர்
துரை ரவிக்குமார் பறையர் 
செல்வம் பறையர் 
கதிர் ஆனந்த் வன்னியர்
தரணி வேந்தன் வன்னியர் 
விஷ்ணு பிரசாத் வன்னியர் 
சுதா வன்னியர்
டி எம் செல்வகணபதி வன்னியர் 
ஜெகத்ரட்சகன் வன்னியர்
 அ மணி வன்னியர் 
மாதேஸ்வரன் கொங்கு வெள்ளாளர் 
ஜோதிமணி கொங்கு வெள்ளாளர் 
சுப்பராயன் கொங்கு வெள்ளாளர் 
கணபதி ராஜ்குமார் கொங்கு வேளாளர் 
பிரகாஷ் கொங்கு வெள்ளாளர் 
ஈஸ்வர சாமி கொங்கு வெள்ளாளர் 
நவாஸ் கனி இஸ்லாமியர்
(எந்த இசுலாமியர் என்று தெரியவில்லை)
 மலையரசன் பார்க்கவ உடையார் 
கார்த்தி சிதம்பரம் செட்டியார்
சி என் அண்ணாதுரை முதலியார் 
(எந்த முதலியார் என்று தெரியவில்லை)
சச்சிதானந்தம் மறவர் 
தங்க தமிழ்ச்செல்வன் கள்ளர் 
மாணிக்கம் தாகூர் கள்ளர்
டி ஆர் பாலு அகமுடையார் 
முரசொலி கள்ளர் 
தமிழச்சி தங்கபாண்டியன் மறவர் 
செல்வராஜ் தேவேந்திரர் 
ராணி தேவேந்திரர் 
ராபர்ட் ப்ரூஸ் நாடார்
விஜய் வசந்த் நாடார்

Thursday 6 June 2024

அண்ணாமலை vs சீமான் சவால்கள்

அண்ணாமலை vs சீமான்  சவால்கள்

2016 இல் பாமக தனித்து நின்று 5.3% வாக்குகளைப் பெற்றது.
2021 இல் அமமுக தனித்து நின்று 2.3% வாக்குகளைப் பெற்றது.
இந்த முறை இவை பாஜக வுடன் சேர்ந்து 11.1% என்றால் பாஜக 3.5% என்று பொருள்.
பாஜக தனித்து நின்றிருந்தாலும் 4% தாண்டியிருக்காது.
தனித்து நின்று தன்னை விட ஒரு வாக்கு அதிகமாக வாங்கிக்காட்ட சீமான் சவால் விட்டார்.
சீமான் 8% வாங்கியுள்ளார்!
 இந்த சவாலில் சீமான் வெற்றி பெற்றார் என்று சொல்லலாம்.

 சீமானின் சவாலுக்கு அண்ணாமலை பதிலளிக்கும் பேட்டியில் (கூட்டணிக்கு ஒதுக்கியது போக) பாஜக போட்டியிடும் 23 இடங்களில் தாங்கள் வாங்குவது போல 50% வாக்குகளாவது நாதக வாங்கிக்காட்டுமாறு சவால் விட்டார்.

 இதில் சீமான் வெற்றி பெற்றாரா என்று பார்ப்போம்

திருவள்ளூர் 
நாதக- 8.50  பாஜக- 15.86  (வெற்றி)

வடசென்னை 
நாதக-  10.63 பாஜக- 12.52  (வெற்றி)

தென்சென்னை 
நாதக-   7.64 பாஜக- 26.44 (தோல்வி)

மத்திய சென்னை 
நாதக- 6.30   பாஜக- 23.16  (தோல்வி)

வேலூர் 
நாதக- 4.72  பாஜக- 31.25 (தோல்வி)

கிருஷ்ணகிரி 
நாதக- 9.18 பாஜக- 18.36 (வெற்றி)

திருவண்ணாமலை 
நாதக-  7.32  பாஜக- 13.67 (வெற்றி)

நாமக்கல் 
நாதக-  8.34 பாஜக-  9.13 (வெற்றி)

திருப்பூர் 
நாதக-  8.38 பாஜக- 16.22 (வெற்றி)

நீலகிரி 
நாதக- 5.77  பாஜக- 22.83  (தோல்வி)

கோயம்புத்தூர் 
நாதக-  6.02 பாஜக- 32.79 (தோல்வி)

பொள்ளாச்சி 
நாதக- 5.17  பாஜக- 19.84  (தோல்வி)

கரூர் 
நாதக- 7.73  பாஜக- 9.05  (வெற்றி)

பெரம்பலூர் 
நாதக- 10.02  பாஜக-  14.33 (வெற்றி)

சிதம்பரம் 
நாதக-  5.62 பாஜக- 14.44 (தோல்வி)

நாகப்பட்டினம் 
நாதக- 13.49  பாஜக- 10.5 (வெற்றி)

தஞ்சாவூர் 
நாதக- 11.69  பாஜக- 16.59 (வெற்றி)

சிவகங்கை 
நாதக- 15.51  பாஜக- 18.59  (வெற்றி)

மதுரை 
நாதக- 9.41  பாஜக- 22.38 (தோல்வி)

விருதுநகர் 
நாதக- 7.25 பாஜக- 15.66 (தோல்வி)

தென்காசி 
நாதக- 12.54 பாஜக-  20.10 (வெற்றி)

திருநெல்வேலி 
நாதக- 8.21 பாஜக- 31.54 (தோல்வி)

கன்னியாகுமரி 
நாதக- 5.12  பாஜக-  35.6 (தோல்வி)
 
மொத்தம் 12 வெற்றிகள் 11 தோல்விகள்.
இதன்படி மயிரிழையில் சீமான் வென்றார்.
மொத்தமாக 23 தொகுதிகளையும் பார்த்தால் சராசரியாக நாதக - 8.45  பாஜக 19.60.
இதன்படி அண்ணாமலை தனது சவாலில் மாபெரும் வெற்றி பெற்றார்.

 முதலில் கூறியது போல பாஜக பெற்ற 11.1% வாங்குகளில் பாஜக வின் பங்களிப்பு 4% தான் எனவே அண்ணாமலை அதில் 50% உரிமை கோருவது சரி இல்லை.
 ஆனாலும் 23 இல் 22 தொகுதிகளில் பாஜக நாதக வை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
 
 எனவே இவ்விருவரையும் ஒப்பிடுகையில் சீமான் ஒரு படி முன்னேறி இருக்கிறார்.
 
 ஆனாலும் நாதக வை விட இரு மடங்குக்கும் மேல் வாக்குகள் பெற்றிருப்பது கூட்டணிகளால் மட்டும் சாத்தியம் அல்ல.
தென்தமிழகத்தை உற்று நோக்கினால் இது புரியும்.
இது பாஜக வின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

 பாஜக வையும் அண்ணாமலையையும் குறைத்து எடை போடக்கூடாது என்பதை நாதக வினர் புரிந்துகொள்ள வேண்டும்.

Sunday 2 June 2024

விவேகானந்தர் நினைவு மண்டபம் rss உடன் திமுக

விவேகானந்தர் நினைவு மண்டபம் rss உடன் திமுக 

விவேகானந்தர் நினைவு மண்டபம்;
ஆர்.எஸ்.எஸ்.க்கு துணை நின்ற திமுக!
==================================
விவேகானந்தர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1963ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் எழுப்பிட ஆர்.எஸ்.எஸ். முயன்றது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு மற்றுமொரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏக்நாத் ரானடேவிடம் ஒப்படைக்கப்பட்டது. விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டுவதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். கிறிஸ்துவர்களின் எதிர்ப்பையும் , தமிழ்நாடு காங்கிரஸ் முதலமைச்சர் பக்தவத்சலம் , மத்திய அமைச்சர் ஹீமாயூன் கபீர் ஆகியோரின் எதிர்ப்பையும் கடுமையாகச் சந்தித்தது. பின்னர் காங்கிரஸ் மத்திய அமைச்சர் இலால் பகதூர் சாஸ்திரியை ரானடே சந்தித்து, ஆதரவைப் பெற்றுக் கொண்டதோடு 300 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தையும் பெற்று நேருவிடம் ஒப்படைத்தார். விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டுவதற்கு நேருவின் ஆசியும் கிடைத்தது. இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு அடங்கியது. காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கும்பல் கன்னியாகுமரியில் கால்பதிக்க வாய்ப்பை உருவாக்கித் தந்த பெருமை மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசையே சாரும். தமிழ்நாட்டில் ஆரியத்தை பகையாகக் கருதி பேசி வந்த திமுகவும் விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது பெரும் ஆச்சரியத்தை தருகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏக்நாத் ரானடே அண்ணாவை சந்தித்து ஆதரவு கேட்டதாக சஞ்சீவ் நய்யார் என்பவர் தமது "இசம்கிருதி" இணையப் பக்கத்தில் எழுதியுள்ளார். அது வருமாறு: 
ஸ்ரீ சிஎன் அண்ணாதுரை சுவாமி விவேகானந்தரின் சிறந்த அபிமானி. திரு.நெடுஞ்செழியனின் முயற்சியால் கல்வி அமைச்சர் அண்ணாதுரையை சந்தித்தேன். நாங்கள் சந்தித்தபோது அவர் சுவாமிஜியைப் பாராட்டிவிட்டு, “என்னிடமிருந்து உங்களுக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார். நான் சொன்னேன், “எங்களிடம் VRM க்காக ( விவேகானந்தர் நினைவு மண்டபம்) தமிழ்நாடு அரசு ஒன்றுபட்டு உள்ளது. எங்களிடம் ஏற்கனவே ஒரு தலைவர் இருக்கிறார். எங்களுக்கு துணைத் தலைவர் வேண்டும். நீங்கள் எங்கள் துணைத் தலைவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். 
அவர் ( அண்ணா) கூறியதாவது: 
நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், அதிக நேரம் டெல்லியில் தான் தங்குவேன். ஸ்ரீ நெடுஞ்செழியனை துணைத் தலைவராக்குங்கள்”. நான் ஒப்புக்கொண்டு, ஸ்ரீ அண்ணாதுரை எங்கள் பொதுக்குழுவில் உறுப்பினராக வேண்டும் என்று பரிந்துரைத்தேன். அவர் ஏற்றுக்கொண்டார். அண்ணாதுரையின் தொடர்பு காரணமாக திமுகவினர் அனைவரும் தங்கள் கையெழுத்தை பதிவு செய்தனர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1970 ஆம் ஆண்டில்தான் விவேகானந்தர் நினைவு சிலையும், மண்டபமும் திறக்கப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி. கிரி அவர்கள் திறந்து வைத்தார். அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். ஆரிய எதிர்ப்பில் அண்ணாவை மிஞ்சிய புலியாக உறுமும் கருணாநிதி கூட பூனையாகத் தான் இருந்துள்ளார். இது குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அது வருமாறு:
பதவியேற்பு விழாவுக்கு இன்னும் 15 நாட்கள் இருந்தது. ஸ்ரீ கருணாநிதி இதற்கு முன்பு பாறைக்கு சென்றதில்லை. அவர் சுற்றிச் சென்று எல்லாவற்றையும் நுணுக்கமாகப் பார்த்தபோது, அவர் தனது சக ஊழியர்கள் சிலரிடம், "எனது சொந்த மாநிலத்தில் உள்ள பாறையில் இவ்வளவு அற்புதமான விஷயம் வந்ததாக யாரும் என்னிடம் சொல்லாதது எப்படி?" என்று கேட்டார். விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டுவதற்கு காங்கிரஸ் ஆதரவு தந்ததில் நமக்கு வியப்பில்லை. ஆரியத்தை வெட்டி வீழ்த்த புறப்பட்ட திமுக தலைவர் அண்ணாவும், அவருக்குப் பின் வந்த கருணாநிதியும் ஆர்.எஸ்.எஸ்.சிற்கு ஆதரவு தந்தது தான் காலக்கொடுமை. எங்கள் ஜென்ம விரோதி, காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எசை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று அன்றே திமுக எதிர்த்து இருந்தால் மோடி இங்கே வந்து தியானம் செய்ய முடியுமா? மிதவாத ஆரியக் கொள்கை பேசும் காங்கிரசோடும், தீவிர ஆரியக் கொள்கை பேசும் பாரதீய ஜனதாவோடும் கூட்டணி வைத்து பதவி சுகம் அனுபவித்தவர்கள் திமுகவினர் என்பதை வரலாறு நமக்கு இன்றும் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. ஆரியமும், திராவிடமும் இன்று மட்டுமல்ல; அன்றும் கூட பிரிக்க முடியாத ஒரு கரு இரட்டையர்கள் என்பதை 1970ஆம் ஆண்டு விவேகானந்தர் நினைவு மண்டபம் திறப்பு விழா மெய்ப்பித்துள்ளது.
- கதிர் நிலவன்

அறிவுத் திருட்டு அல்லது பெண் ஏன் அடிமையானாள்

அறிவுத் திருட்டு அல்லது பெண் ஏன் அடிமையானாள் 

பதிவின் சுருக்கம்:-
 ஈவேரா எழுதிய பெண்ணுரிமைப் புத்தகம் நோபல் பரிசு பெற்ற புத்தகத்தின் அப்பட்டமான காப்பி.
 
 பொதுவுடைமை கருத்தியல் உலகம் முழுவதும் பரவத் தொடங்குகிறது. அதில் முக்கியமாகப் பெண்களின் பங்கு இருக்கிறது.
 அன்று காலனியவாத நாடுகள் இதை எதிர்கொள்ள இந்த வர்க்கப் போராட்டத்தை பாலினப் போராட்டமாகக் குழப்ப பெண் விடுதலை என்று ஆரம்பித்தார்கள்.
George Orwell, Bertrand Russell, Denis Healey, Stephen Spender, Guy Burgess போன்ற எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தத்துவ மேதைகள் என சமூகத்தில் பிரபலமானவர்களை விலைக்கு வாங்கி பெண்களைத் தூண்டிவிட்டு ஆண்களுக்கு எதிராக தனித்து தற்குறித்தனமாக இயங்கவைக்கும் கருத்துகளைப் பரப்பினர்.
 இதை எவ்வாறு செய்தோம் என்று பிரிட்டன் உளவுத்துறை (MI6) காலம்கடந்து விட்டதாக எண்ணி தற்போது வெளியிட்டுள்ளது.
 இதில் Bertrand Russell என்பவர் புரட்சிகர சிந்தனையாளராக தம்மைக் காட்டிக்கொண்டு எழுதிய புத்தகம் Marriage and Morals. இது எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தியதால் ஏகாதிபத்திய அரசுகள் இதற்கு நோபல் கிடைக்க வழிசெய்தன.
 இதை அப்படியே நகலெடுத்து 'பெண் ஏன் அடிமையானாள்' என்று ஈவேரா எழுதியுள்ளார்.
 இரண்டு நூல்களிலும் இருக்கும் தலைப்புக்கள் கூட ஒத்துப் போகின்றன.
1)கற்பு - Sexual ethic 
2)காதல் - Romantic Love 
3)விபச்சாரம் - Prostituition 
4) கல்யாண விடுதலை - Divorce 
5) ஆண்மை அழிய வேண்டும் - Fatherhood dominion and Fatherhood Unknown.
 மேலும் Eugenics, Psychology தொடர்பான அறிவியல் தலைப்புக்களை மொழிபெயர்க்க இயலாமல் அவற்றை தவிர்த்துவிட்டார்.
 அரிஸ்ட்டாட்டில், பிளாட்டோ  என வரும் இடங்களில் வள்ளுவரையும், குறளையும் திணித்து இருக்கிறார்.
 இன்னமும் வேடிக்கை என்னவென்றால் வீரமணி இந்த நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் ஈவேரா சிந்தனைகள் ரஸ்ஸல் சிந்தனையுடன் ஒத்துப்போவதாக எழுதியிருப்பது தான்.

Кришна Кумар (முனைவர். கிருஷ்ணா) அவர்களின் முழுமையான பதிவு:-

'பெண் ஏன் அடிமையானாள்' எனும் முழு 'யுனெஸ்கோ' பித்தலாட்டம். 


காலனிய கைக்கூலிகளின் எதிர்ப்புரட்சி -வழமையான வரலாறு. கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக தமிழர்களுக்கு பெண் உரிமை, பெண் விடுதலை, பெண்ணியம் குறித்தான விழிப்புணர்வை திரு ஈ வெ ராமசாமி அவர்கள் தான் ஏற்படுத்தியதாக, தொடர்ந்து ஊடகங்கள்,  அரசியல்வாதிகள், அரசு செய்திக் குறிப்புகள், பள்ளிக் குழந்தைகளின் பாட புத்தகங்கள் மற்றும் அரசு பாட நூல் நிறுவனங்கள் வழியாக மக்கள் மனதில் தொடரந்து திணிப்பதை உணரலாம். பல்லாயிரம் கோடி நிதியுடன் இயங்கும் திராவிட அரசியல் நிறுவனங்களும், திராவிட அரசியல் கட்சிகளும் ஆண்டு தோறும் 'பெண்ணிய போராளி விருது, பெண் சாதனையாளர் விருது' என்றெல்லாம் திரு ஈ வெ ராமசாமி பெயரிலும், சர்ச்சைக்குரிய அவரது கடைசி மனைவி மணியம்மை பெயரிலும் வழங்குவதையும் அறியலாம்.
குறிப்பாக, திராவிட அரசியல் கட்சிகளின்,  நிறுவனங்களின், அக்கட்சி தலைவர்களின் குடும்பங்களின் ஊது குழல்களாக இருக்கும் பல பெண்களும் ஆண்டு தோறும் இவ்விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப் படுகின்றனர்.
மேலும் அவர்கள் அதற்கு முன்னரும், அதற்கு பின்னர் மிக வீரியமாகவும் மேற்சொன்ன அரசியலுக்கும், அவர்கள் குடும்பங்களுக்கும் விசுவாசமாக இருப்பதோடு, பெண்மை, பெண் விடுதலை, பெண்ணியம் போன்றவற்றை உலகுக்கு கண்டுபிடித்து உணர்த்தியதே திரு ஈ வெ ராமசாமி அவர்கள்தான் என்பார்கள்.
மிக குறிப்பாக, இப்படியான விருதுகளை பெற்றவர்கள் திராவிடத்தாரின் ஆங்கிலத்தில் வரும் lapdog எனும் பதம் போல, செல்ல வளர்ப்பு நாய்களாக மாறி திராவிட அரசியலுக்கு எதிரான தமிழர்களை பிராண்டி குதறுவதும் உண்டு. தமிழகத்தில் பெண்ணிய அரிதாரம் பூசி, அவதாரம் எடுத்து பவனி வரும் இப்படிப்பட்ட பெண்களை கணக்கில் எடுத்து பார்த்தால் திரு ஈவெ ராமசாமி அவர்களின் 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற நூல்தான் தங்களுக்கு அறிவூட்டி, செறிவூட்டி தங்களை பெண்கள் என்றே உணர வைத்ததாக பக்கம் பக்கமாக பேசியும் எழுதியும் வருவார்கள். அப்படிப்பட்ட திரு ஈவெ ராமசாமி அவர்களின் 'பெண் ஏன் அடிமையானாள்' நூல் குறித்து இளந்தலைமுறை தமிழர்கள் அறிந்து கொள்வது மிக அவசியம்.
நிற்க. முதல் உலகப்போருக்கு பிந்தைய காலத்தில் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவின் பல பகுதிகளிலும் ஐரோப்பியர்களின் காலனிய ஆதிக்கத்திற்கு எதிராக பூர்வ குடிகளின் கிளர்ச்சி வலுப்பெற்ற அதே சமகாலத்தில், (மறுபுறம்) புரட்சிகர இடதுசாரி தத்துவம் உலகெங்கும் வலுப்பெற துவங்கியது. பல நிலப்பரப்புக்களில் காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான உள்ளூர் இளைஞர்களின் சிந்தனையை தூண்டியதே இடதுசாரி தத்துவமாகத்தான் இருந்தது. அதே காலத்தில் ரஷ்யாவிலும், மற்றும் உலகெங்கும் புரட்சிகர செங்கொடி ஓங்கி உயரே பறக்க துவங்கியது. சோவியத் பள்ளியின் அரசியல் தாக்கமும் உலகை துளைத்து, காலனிய எதிர்ப்பு சிந்தனையை செறிவூட்டியது. அந்த 'புதிய அரசியல் சமநிலையின்மையை' சரிகட்ட காலனியவாதம் தனது ஆட்களை, தனது காலனியம் பரவியிருந்த பல்வேறு நிலப்பரப்புக்களில் இறக்கி, முடுக்கிவிட்டது. காலனிய வல்லாதிக்க நிறவெறி ஆங்கிலேயே அரசின் ரகசிய உளவு அமைப்பான MI6ம், அதன் வெளியுறவுத்துறை propaganda நிறுவனமான Information Research Department (IRD)ம் பல பிரபலங்களை ரகசியமாக பணியில் அமர்த்தி செங்கொடிக்கும், சோவியத்தை மையமாக வைத்து தூசி கிளப்பி பூமியின் நாற்புறத்தையும் சூறாவளியாய் தாக்கிய அதன் புரட்சிகர சித்தாந்தத்திற்கும் எதிரான வேலைப்பாடுகளை துவங்கியது. George Orwell, Bertrand Russell, Denis Healey, Stephen Spender, Guy Burgess போன்ற எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தத்துவ மேதைகள் என சமூகத்தில் பிரபலமாக பவனிவந்த பலரும் ஆங்கிலேய காலனிய நிறவெறி அரசின் Payroll'க்குள் வந்தார்கள். இந்த ரகசியங்களை காலாவதியான கோப்புக்கள் என்கிற முறையில் பிரித்தானிய உளவு நிறுவனமே சமீபத்தில் வெளியிட்டு இருந்தது அவர்கள் வெறும் பணத்திற்கு வீழ்ந்தார்களா அல்லது தங்களுக்குள் ஒளிந்திருந்த காலனிய ஆதிக்கவாத நிறவெறியை வாழவைக்க இணங்கினார்களா என்பதை விவாதிப்பதல்ல இக்கட்டுரையின் நோக்கம். இந்த லிஸ்டில் George Orwell'ம், Bertrand Russell'ம் மிக முக்கியமானவர்கள். இருவரும் தங்களை இடதுசாரிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டு, முழுநேரமும் இடதுசாரிகளை வீழ்த்தும் எதிர்ப்புரட்சி வேலையை செய்தவர்கள். இதில் George Orwellன் 'Animal Farm' பற்றி பலரும் அறிவீர்கள். சோசலிஸ்ட் வேடமிட்டு, உளவுபார்த்து சோவியத்துகளுடன் நெருக்கமாக இருந்த முக்கியமான தலைவர்கள் 38 பேரின் பெயர்களை MI6க்கு அவர் வழங்கியது 'Orwell's List' என்று இப்போதும் இழிவாக நையாண்டி செய்யப்படுகிறது அடுத்து, இந்த கட்டுரைக்கு மிக முக்கியமான நபரான 'Bertrand Russell'. இவரும் காலனிய நிறவெறி அரசின் மிக முக்கியமான உளவாளி. ஆசிய தொடர்பான அஜெண்டாவில் வேலை செய்தவர். இந்திய யூனியனின் விடுதலைக்கு முன்னர் இங்கே இருந்த பல தலைவர்களுடன் மிக நெருக்கமான நட்பு பாராட்டியவர். இந்திய யூனியன் உருவாக்கத்திற்கு பிறகும் ஆங்கிலேயே காலனிய அரசின் தாக்கம் இந்திய யூனியனில் இருக்குமாறு விடுதலை ஏற்பாட்டை செய்தவர். அவர் எழுதிய நூல் 'Marriage and Morals'. தன்னை ஒரு சோஷலிஸ்ட்டாக அடையாளப்படுத்திக்கொண்டு இடதுசாரி தத்துவத்தை வீழ்த்த Russell எடுத்த வழிதான் பெண் விடுதலை. அடிப்படையில், ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய உலகில் பெண்களுக்கு ஓட்டுரிமை கூட இல்லாத காலத்திலேயே, சமூகத்தின் சரி பாதியான பெண்களை மானுட சமூகத்தின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தாது அவர்களை வீட்டிற்குள் முடக்கி வைப்பது, மானுட சமூகத்தின் பாய்ச்சலை சரிபாதியாக குறைக்கிறது என்று சொல்லி லெனின் அவர்களை உற்பத்தியிலும், சமூக மற்றும் சோவியத் உருவாக்கத்திலும் பயன்படுத்த துவங்கிய காலம் அது. இப்போதும் ரஷ்ய தெருக்களில் லெனின் தவிர்த்து எங்கெல்லாம் தலைவர்கள் சிலைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் சமமாக பெண்களின் சிலைகளும் இருக்கும். இங்கே சில படங்கள் கமெண்டில். போருக்கு செல்லும் இளைஞன் கைகளில் துப்பாக்கி இருப்பதைப்போல, பெண்களின் தோள்களில் ராக்கெட் லாஞ்சர்கள் இருக்கும்; போருக்கு செல்ல அழைப்பு வந்திருக்கிறது என்பதை காதலிக்கு சொல்ல செல்லும் காதலனிடம் தனக்கும் வேறு ஒரு எல்லைக்கு செல்ல அழைப்பு வந்திருப்பதாக காட்டும் காதலி சிலைகள் ரஷ்ய பூங்காக்கள் தோறும் ஏராளம். இதுதான் கம்யூனிஸ்டுகளின் உண்மையான பெண் விடுதலை. ஆனால் அப்படிப்பட்ட இடதுசாரி தத்துவ எழுச்சியை தடுக்க, பெண்ணிய குதர்க்கவாதம் பேசி, அதை பிளவுபடுத்த முதலாளித்துவ காலனிய வல்லாதிக்கம் Bertrand Russellகளை பயன்படுத்தியது. அதற்கு கூலியாக ஐரோப்பிய காலனிய வல்லாதிக்கம் அவரின் இந்த நூலுக்கு நோபல் பரிசு கொடுத்து கவுரவித்தது. ஆணும் பெண்ணும் ஒன்றுபட்டு சமூக, வர்க்க, மற்றும் மானுட விடுதலை அடைவதை தடுக்க பெண் விடுதலை எனும் பெயரில் அவர்களை பிரித்து தடுத்து எதிர்ப்புரட்சி செய்தது காலனியவாதம். பெண்ணியம் எனும் பெயரில் பெண்களை நுகர்வோர் கலாச்சாரத்தின் பண்டமாக மாற்றி, அவர்களை வெறும் நுகர்வோர்களாக திரித்து, விளம்பர போதை ஏற்றி, சுதந்திரம் என்கிற பெயரில் முதலாளித்துவத்திற்கு அடிமையாக்கியது இப்படியான நூல்கள். காலனிய உளவாளி Bertrand Russell எழுதிய அந்த 'Marriage and Morals' என்கிற நூலின் அச்சு அசல் பிசகாத மொழிமாற்ற நூல்தான் 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற ஈவெ ராமசாமியின் நூல். பொருளடக்கம், உள்ளடக்கம் என யாவற்றையும் 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற அந்த நூலில் 100% மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். இப்படியாக, Bertrand Russell என்கிற காலனிய உளவாளி எழுதிய நூலை ஈவெரா எழுதியதாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் தமிழ் நாட்டில் விளம்பரம் செய்திருப்பது வழக்கமான திராவிட பித்தலாட்டம்தான்.


தங்களை பெண் விடுதலை சேம்பியன்கள் என சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் அறிவீலிகளுக்கு அது ஒரு மொழிமாற்ற என்கிற அடிப்படை அறிவு கூட கிடையாது. அந்த அடிப்படை அறிவு கூட இல்லாத இப்படியான சமூக கழிசடைகளை தமிழக இளையோர் பின்தொடர்ந்து சமூக விடுதலைக்கு துரோகம் இழைக்க கூடாது. அடுத்தவனின் சிந்தனையை திருடி அதில் தன் பெயரை எழுதும் கேவலத்தையும் தாண்டி.. அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற நூலில் ஒரு மிக இழிவான வேலையை செய்திருக்கிறார்கள். அந்த நூலின் முன்னுரையில் திரு வீரமணி அவர்கள் உலகின் முக்கியமான ஆளுமைகள் ஒரேபோல சிந்திப்பார்கள் என்பார்கள். அதைப்போல ஈவெராவும் பெட்ராண்ட் ரசலும் ஒரேபோல சிந்தித்து இருக்கிறார்கள் என்று எழுதி் இருக்கிறார். (படம் கமெண்ட்டில்) ஒரு நூலின் அத்துணை வரியையும் ஒரேபோல சிந்திப்பது உலக அதிசயமல்லவா? 'யுனெஸ்கோ விருது' பெற்றது போல் இந்த அதிசயத்திற்குமல்லவா 'கின்னஸ் விருது' பெற்றிருக்க வேண்டும்? இரண்டு நூல்களிலும் இருக்கும் தலைப்புக்களை பாருங்கள்: 1)கற்பு Vs Sexual ethic 2)காதல் Vs Romantic Love 3)விபச்சாரம் Vs Prostituition 4) கல்யாண விடுதலை Vs Divorce 5) ஆண்மை அழிய வேண்டும் Vs Fatherhood dominion and Fatherhood Unknown 6)கர்ப்பத்தடை Vs The Liberation of Women. மொத்தமாக 'பெண் ஏன் அடிமையானாள்'இல் 10 தலைப்புக்களும் அதன் கருத்துக்களும் மொழிமாற்றம் செய்யப்பட்டவை. Marriage and Moralsஇல் Eugenics, Psychology தொடர்பான அறிவியல் தலைப்புக்கள் வருகின்றன, அறிவியலை மொழிமாற்றம் செய்ய அறிவற்ற திராவிட அறிவிலிகள் அத்தலைப்புக்களை தவிர்த்து விட்டார்கள். இந்த நூலில் அரிஸ்ட்டாட்டில், பிளாட்டோ, கிறிஸ்டியன் பிலாசபி என வரும் இடங்களில் வள்ளுவரையும், குறளையும் திணித்து இருக்கிறார்கள். உலகில் இவ்வளவு கேவலமான, இழிவான வேலையை இவர்களை விட வேறு எவராலும் முடியாது. ஒரு நோபல் பரிசு பெற்ற நூலையே திருடி, அதில் தங்கள் பெயரை எழுதிக் கொள்கிறார்கள் என்றால் இவர்கள் எவ்வளவு இழிவானவர்கள் என்பது விளங்கும். அது மட்டுமல்ல, இவர்களின் செயலை பகுப்பாய்வு செய்யும்போது 'இழிவு' என்கிற வார்த்தையே எவ்வளவு வீரியமற்றதாக இருக்கிறது என்பதை உணரலாம். தமிழர் இனம் ஈன்றெடுத்த சமரசமற்ற போராளி 'தோழர் ஜீவா'. அவர் தனது நூலான 'ஈரோட்டுப்பாதை சரியா' என ஈவெ ராமசாமியின் சித்தாந்தங்கள், குதர்க்கவாதங்கள் குறித்து எழுதி இருப்பார். அந்த நூலின் அட்டைக்கு ஒரு மிகச் சிறந்த வர்ணத்தை தேர்ந்தெடுத்து இருப்பார். அது காலனியவாத ஆங்கிலேய அரசின் கொடியான 'யூனியன் ஜாக்' ஆகும். தோழர் ஜீவா எவ்வளவு நேர்த்தியாக திரு ஈவெ ராமசாமியை 'காலனியவாத கிழக்கிந்திய கம்பெனியின் கைக்கூலி' என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் அவர் உருவாக்கிவிட்டு சென்ற கம்யூனிச இயக்கங்களில் உடல் வளர்க்கும் சாதிய-இனவெறி போலிகள் இன்று அதே 'பெண் ஏன் அடிமையானாளுக்கு' செங்கொடி பாதுகாப்பு தருகிறார்கள். இந்த குறிப்பிட்ட நூல் திருட்டு குறித்து பல பக்கங்கள் ஆதாரங்களுடன் விளக்கலாம். ஆனால் மேலும் ஒரே ஒரு சுவாரசியமான தகவலை மட்டும் இங்கே பகிர வேண்டும். காலனிய வல்லாதிக்கத்தின் கைக்கூலிகளான ஆர்வெல் குறித்தும், ரபெட்ராண்ட் ரஸ்ஸல் குறித்தும் பத்தாண்டுகளுக்கு முன்பே பிராமணிய மருதையனின் 'வினவு' கட்டுரை வரைந்திருக்கிறது. ஆனால் அதை திருடி தனது பெயரில் வெளியிட்டுக்கொண்ட ஈவெரா குறித்து தெரிந்தும் மருதையன் வாய் திறக்கவில்லை. அதைத்தான் தென்னிந்திய பிராமணர்கள்தான் திராவிடர்கள் என்கிறது மனுஸ்மிரிதி. இனப்பற்று!

Saturday 1 June 2024

ஒரிசா பாண்டியன்

ஒரிசா பாண்டியன்

 ஒரிசா மாநிலத்திற்கு ஐஏஎஸ் பணிக்காக சென்ற வி.கே.பாண்டியன் எனும் மதுரைத் தமிழர் அங்கே சிறப்பாக செயல்படுகிறார். ஒடியர் ஒருவரை மணந்துகொண்டு அங்கேயே குடியேறிவிடுகிறார்.
 அவரது திறமையைப் பார்த்த ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவரை தனது ஆலோகராக செயலாளராக அமர்த்திக் கொண்டார். வி.கே.பி ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளத்தில் இணைந்துகொண்டார். கடைசியில் 'வி.கே.பாண்டியன் தன் அரசியல் வாரிசு' என்று அறிவிக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார் அந்த தமிழர்.
 இப்போது பாஜக இந்த தமிழரை எதிர்த்து இனவெறியைக் கக்கி வருகிறது.
 மோடி "உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகன்னாதர் கோவில் சாவி" தமிழ்நாட்டிற்கு போய்விட்டது" என்று பேசினார்.
 அமித் சா "ஒரு தமிழரையா நீங்கள் ஒரிசாவை அதிகாரம் செலுத்த அனுமதிக்கப் போகிறீர்கள்?" என்று நேரடியாக இனத்தைக் குறிப்பிட்டு பேசுகிறார்.
 ஆனால் வி.கே.பாண்டியன் மீது வேறு எந்த குற்றச்சாட்டையும் வைக்க முடியவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
 சரி இத்துடன் ஒரு மாநிலத்தில் இன்னொரு இனத்தவர் முதலமைச்சராக வந்த நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

 ஹரியானா வை வென்ற மோடி பாஜக அதன் முதலமைச்சராக பஞ்சாபியர் மனோகர் லால் கட்டர் என்பவரை நியமித்தது.
 அவர் ஹரியானாவில் பிறந்தவர் என்று சமாதானம் சொல்லலாமா?!

டெல்லியை அரவிந்த் கேஜரிவால் கைப்பற்றிய போது ஹரியானாவில் பிறந்த கேஜ்ரிவால் டெல்லியில் எப்படி முதல்வராகலாம் என்று பாஜக பேசவில்லை. ஹரியான்வி மொழி பேசும் பகுதியில்தான் டெல்லி அமைந்து இருக்கிறது என்று சமாதானம் சொல்வார்களா?!

மும்பையில் பிறந்த வசுந்தரா ராஜே வை ராஜஸ்தான் முதல்வராக பாஜக ஆக்கியதே?! அப்போது எப்படி அது நியாயம்?!

 இதே போல காங்கிரஸ் காலத்திலும் நடந்தபோது பாஜக இனத்தைக் குறிப்பிட்டு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லையே?!

 'ஒரிசா முதல்வர் ஒரு ஒடியராகத்தான் இருப்பார்' என்று பாண்டியன் வாக்குறுதி அறிவித்த பிறகும் பாஜக இனவெறி பிரச்சாரத்தைக் கைவிடவில்லை.

 தற்போது வி.கே.பாண்டியன் ஒரிசா பாணியில் இருக்கும் உணவை தமிழர் பாணியில் வாழையிலையில் கொட்டி சாப்பிடத் தெரியாமல் விழிப்பது போல சித்தரித்து விளம்பரம் வெளிவந்துள்ளது.
 
 தமிழர் என்று வரும்போது மட்டும் அவரை இந்துவாகவோ இந்தியராகவோ இவர்களால் பார்க்க முடியவில்லை.

 இதற்கு முன் சோனியாவை மட்டும்தான் இத்தாலிக்காரி என்று குறிப்பிட்டு பேசியுள்ளனர்.
 என்றால் நாம் தமிழர்நாடும் இத்தாலி போன்று தனிநாடு என்று புரிகிறதா?!

 இந்து என்றும் இந்தியர் என்றும் ஒருதலைக் காதலுடன் அலையும் சில தமிழர்கள் சிந்திப்பார்களா?!