Friday 26 May 2023

நடிக்கிறேன்

நடிக்கிறேன்

 அன்று ஒரு அவசர அழைப்பு உடனடியாக பிறந்த ஊர் விரைந்தேன். 
 அங்கே ஒரு நாடகம்!
என் உயிர்நண்பன் குடிப் பழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் ஒரு நாடகம் நடத்தினான். 
 பிற நாடகங்கள் போல இல்லாமல் இதன் கதை வித்தியாசமானது. அதாவது அளவாகக் குடித்தாலும் அழிவு நிச்சயம் என்பது கதையின் மையக் கரு. நான் போக தாமதமாகிவிட்டது. பல காட்சிகள் நடந்து முடிந்துவிட்டன. அதாவது அளவாகக் குடிக்கும் ஒருவனுடன் சக குடிகாரர்கள் ஒரு அற்ப விசயத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக சண்டை போடுகின்றனர். அவன் அமைதியாகப் போக விரும்பினாலும் அவர்களின் போதை அதை அனுமதிக்கவில்லை. அந்த ஒருவனை சூழ்ந்து அடித்து தள்ளிவிட அவன் கீழ விழ தலையில் அடிபடுகிறது. இதன் விளைவாக அவன் இறந்துவிடுகிறான். அவன் மனைவியும் மகனும் அனாதையாக நிற்கின்றனர். இதுதான் கதை. நான் சென்றபோது அவனை பிணக்கோலத்தில் சிதையில் கிடத்தினர். அவன் பிணமாக நடித்துக் கொண்டிருந்தான். என்னை அழச் சொன்னார்கள். என்னால் முடியவில்லை. எப்படி அழுகை வரும்?! அவன் என்ன உண்மையாகவா செத்துவிட்டான்?! இருந்தாலும் அவன் நன்றாக நடித்தான். மூச்சு கூட விடவில்லை. சரி நாடகம் முடிவை நெருங்கிவிட்டது. இதோ எழுந்துகொள்வான். நாங்கள் எப்போதும் போல காலாற நடந்து பேசிக் கொண்டே வெகுதூரம் செல்வோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நாடகம் முடியவில்லை. சிதைக்கு தீ மூட்டினார்கள். அவன் அசையவேயில்லை. அவன் உடலில் நெருப்பு பற்றியது. அவன் எரிந்து சாம்பலாகப் போனான். ஆம் அவன் நடித்து முடித்துவிட்டான். இனி நான் தான் நடிக்க வேண்டும். நான் எப்போதும் போல் இருப்பதாக நடிக்க வேண்டும். நல்ல மனநலத்துடன் இருப்பதாக நடிக்கவேண்டும். அவன் எனக்கு முக்கியமில்லை என்பது போல நடிக்க வேண்டும். 
 வாருங்கள்! அனைவரும் நடிப்போம்! 
அரசாங்கம் விற்கும் சாராயம் எந்த ஆபத்தும் இல்லாதது என்பது போல நடிப்போம்!
நம்மைச் சுற்றி இளம் வயதுப் பிணங்களையும் விதவைகளையும் வைத்துக்கொண்டு எதுவுமே நடக்காதது போல நாம் நடிப்போம்!

Tuesday 23 May 2023

டெல்லி எவ்வளவு தூரம்?

டெல்லி எவ்வளவு தூரம்?

 உண்மையில் உச்ச அதிகார மையமான டெல்லி நமக்கு எவ்வளவு தூரம் என்பது நமக்குப் புரியவில்லை.
 விமானத்தில் போன கதையைக் கூறுகிறேன் கேளுங்கள்.
1) செங்கோட்டை - திருவனந்தபுரம் ஏர்போர்ட் காரில் (பஸ் எனில் செங்கோட்டை - தென்காசி போய் திருவனந்தபுரம் பஸ் பிடிக்க வேண்டும். பின் ஏர்போர்ட் செல்ல வேண்டும்)

2) ஒரு மணிநேரம் விமான நிலையத்தின் உள்ளே செலவாகும் பிறகு மினி பஸ் மூலம் விமானம் அருகே கொண்டு செல்வார்கள்
3) திருவ.-டெல்லி 3:00 -3:30 மணிநேரம் பயணம்
4) டெல்லி வி. நிலையத்தில் 1 மணிநேரம்
5) அங்கிருந்து வி.நிலையத்திற்கான பிரத்யேக மெட்ரோ ஸ்டேஷனுக்கு பஸ்
6) அங்கே வரிசையில் நின்று டோக்கன் வாங்கி மெட்ரோ பிடித்து மெயின் மெட்ரோ
7) பின் அங்கே வரிசையில் நின்று டிக்கட் வாங்கி டெல்லியில் எங்கே போகவேண்டுமோ அங்கே மெட்ரோவில் போக வேண்டும்
8) மைய நகரில் நமக்கெங்கே இடம் அங்கிருந்து ஆட்டோ, டாக்சி அல்லது ஓலா, ஊபர் மூலம் அந்த இடத்திற்கு செல்லலாம்.
 அல்லது பஸ் பிடித்தால் 2,3 பஸ்கள் மாற வேண்டும்.
 அதாவது அதிகாலை கிளம்பினால் இரவாகிவிடும்.
 (இதுவே நீங்கள் மும்பை என்றால் காலையில் விமானம் ஏறி டெல்லியில் ஆபிஸ் போய்விட்டு சாயங்காலம் விமானம் ஏறி வீட்டுக்கு வந்துவிடலாம்.
 இப்படி சீசன் பிளைட் டிக்கெட் வாங்கி டெய்லி ட்யூடி பார்க்கும் மேல்தட்டு வர்க்கம் உண்டு)

இதே ரயில் பயணம் என்றால் (3 மாதம் முன்பே டிக்கெட் எடுக்க வேண்டும் அல்லது தக்கலில் காசைக் கொட்ட வேண்டும்)

 1) செங்கோட்டை - தென்காசி பஸ் 
2) தென்காசி - திலி
3) திலி பழைய பே. நி - ஜங்ஷன் நடை 
4) ரயிலில் ஏறி முழுமையான 2 நாட்கள் (48 மணிநேரம்) ரயிலில் வாழ வேண்டும்.
5) நிஜாமுதீன் ஸ்டேஷனில் இறங்கி வெளியே நடந்து வந்து பஸ் ஸ்டான்ட் (ISBT) க்கு பஸ் பிடிக்க வேண்டும்
(ரயில் தாமதமானால் ஆட்டோ).
அதாவது இரண்டரை நாள் ஆகும்.
பெரும்பாலான டெல்லி தமிழர் பயண அமைப்பு இதுவே!
(டெல்லியில் 8 லட்சம் தமிழர்கள் இருக்கின்றனர்.
ஆர்.கே.புரம் எனும் தமிழர் பகுதி உண்டு. கரோல் பாக் எனும் இடம் உண்டு).
 

இதில் வயதானவர் அல்லது நோயாளி அதுவும் லக்கேஜுடன் மொழியும் தெரியாமல் சென்றால் என்ன கதி என்று யோசித்துப் பாருங்கள்.

டெல்லி எவ்வளவு தூரம்?

டெல்லி எவ்வளவு தூரம்?

 உண்மையில் உச்ச அதிகார மையமான டெல்லி நமக்கு எவ்வளவு தூரம் என்பது நமக்குப் புரியவில்லை.
 விமானத்தில் போன கதையைக் கூறுகிறேன் கேளுங்கள்.
1) செங்கோட்டை - திருவனந்தபுரம் ஏர்போர்ட் காரில் (பஸ் எனில் செங்கோட்டை - தென்காசி போய் திருவனந்தபுரம் பஸ் பிடிக்க வேண்டும். பின் ஏர்போர்ட் செல்ல வேண்டும்)

2) ஒரு மணிநேரம் விமான நிலையத்தின் உள்ளே செலவாகும் பிறகு மினி பஸ் மூலம் விமானம் அருகே கொண்டு செல்வார்கள்
3) திருவ.-டெல்லி 3:00 -3:30 மணிநேரம் பயணம்
4) டெல்லி வி. நிலையத்தில் 1 மணிநேரம்
5) அங்கிருந்து வி.நிலையத்திற்கான பிரத்யேக மெட்ரோ ஸ்டேஷனுக்கு பஸ்
6) அங்கே வரிசையில் நின்று டோக்கன் வாங்கி மெட்ரோ பிடித்து மெயின் மெட்ரோ
7) பின் அங்கே வரிசையில் நின்று டிக்கட் வாங்கி டெல்லியில் எங்கே போகவேண்டுமோ அங்கே மெட்ரோவில் போக வேண்டும்
8) மைய நகரில் நமக்கெங்கே இடம் அங்கிருந்து ஆட்டோ, டாக்சி அல்லது ஓலா, ஊபர் மூலம் அந்த இடத்திற்கு செல்லலாம்.
 அல்லது பஸ் பிடித்தால் 2,3 பஸ்கள் மாற வேண்டும்.
 அதாவது அதிகாலை கிளம்பினால் இரவாகிவிடும்.
 (இதுவே நீங்கள் மும்பை என்றால் காலையில் விமானம் ஏறி டெல்லியில் ஆபிஸ் போய்விட்டு சாயங்காலம் விமானம் ஏறி வீட்டுக்கு வந்துவிடலாம்.
 இப்படி சீசன் பிளைட் டிக்கெட் வாங்கி டெய்லி ட்யூடி பார்க்கும் மேல்தட்டு வர்க்கம் உண்டு)

இதே ரயில் பயணம் என்றால் (3 மாதம் முன்பே டிக்கெட் எடுக்க வேண்டும் அல்லது தக்கலில் காசைக் கொட்ட வேண்டும்)

 1) செங்கோட்டை - தென்காசி பஸ் 
2) தென்காசி - திலி
3) திலி பழைய பே. நி - ஜங்ஷன் நடை 
4) ரயிலில் ஏறி முழுமையான 2 நாட்கள் (48 மணிநேரம்) ரயிலில் வாழ வேண்டும்.
5) நிஜாமுதீன் ஸ்டேஷனில் இறங்கி வெளியே நடந்து வந்து பஸ் ஸ்டான்ட் (ISBT) க்கு பஸ் பிடிக்க வேண்டும்
(ரயில் தாமதமானால் ஆட்டோ).
அதாவது இரண்டரை நாள் ஆகும்.
பெரும்பாலான டெல்லி தமிழர் பயண அமைப்பு இதுவே!
(டெல்லியில் 8 லட்சம் தமிழர்கள் இருக்கின்றனர்.
ஆர்.கே.புரம் எனும் தமிழர் பகுதி உண்டு. கரோல் பாக் எனும் இடம் உண்டு).
 

இதில் வயதானவர் அல்லது நோயாளி அதுவும் லக்கேஜுடன் மொழியும் தெரியாமல் சென்றால் என்ன கதி என்று யோசித்துப் பாருங்கள்.

Friday 19 May 2023

நடக்கலாம்

நடக்கலாம்
 2009 இல் தமிழினம் 8 கோடி!
 30 ஆண்டு ஈழ இனமோதலில் பலியான தமிழர்கள் 5 லட்சம்!
 அதாவது 0.6%.
ஒரு நாள் வரலாம்!
புலிகள் வழியில் தமிழர்நாடு விடுதலை அடையலாம்.
 ஈழம் வரை அதன் எல்லை விரியலாம்!
 அது சிங்கள நாட்டின் மீதும் படையெடுக்கலாம்!
 புத்தர் கோவில்களும் சிலைகளும் இடிக்கப்படலாம்! 
 அப்போது சிங்களவர்கள் இதே போல ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டு 0.6% சிங்களர் படுகொலை செய்யப்படலாம்.
 உலகம் முழுவதும் சிங்களவர் அகதியாக ஓடவேண்டி வரலாம்.
 அப்போதும் உலகம் இதே போல வேடிக்கை பார்க்கலாம்!
 பாதி சிங்களவர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்படலாம்! 
 சிங்களவர் தாய்நிலம் பாதியாகச் சுருங்கலாம்!
 இனி எழவே முடியாது என்கிற நிலைக்கு சிங்கள இனம் தள்ளப்படலாம்! ஏனென்றால் வரலாறு எப்படி வேண்டும்மானாலும் மாறலாம்!
 எதுவும் நடக்கலாம்!

Tuesday 16 May 2023

தமிழ்த் தனியுலகு வேண்டும்!

தமிழ்த் தனியுலகு வேண்டும்!

தமிழர்நாடு தனிப்படை கொண்டு
தனியுலகு என்றே ஆதல் 
வேண்டும்

தமிழினம் மாந்தப் பேரினத்தில்
தனியினம் என்று பிரிதல் 
வேண்டும்

ஒரு தமிழன் விடாமல் தன்னாட்டில்
கரு முதல் கிழம் வரை வாழல்
வேண்டும்

வேறு இனங்கள் தமிழர்நாட்டில்
வேரறுந்து இல்லாமல் ஒழிதல் 
வேண்டும்

தமிழன் எல்லை தாண்டினால் 
தானே அவனுடல் நோதல் 
வேண்டும்

தானாக கால்கள் நடந்து
தாய் நாட்டிடம் மீளல்
வேண்டும்

எவரும் தமிழர்த் தன்னரசில்
எவ்வாறும் புகாத காவல்
வேண்டும்

எதுவும் இங்கே கிடைக்கும்
என்று உரைக்கும் சூழல்
வேண்டும்

சாதிமதம் மொழியினம் நாடு
ஆதித் தமிழென்றே கூறல்
வேண்டும்

அறிவியல் அரசியல் அழகியல்
அன்னைத் தமிழிலே ஓதல்
வேண்டும்

மதுவும் வெறியும் ஒழிந்து தலையில்
மண்பற்று பிடித்து ஆடல் 
வேண்டும்

எழும் இறந்த பிணம் நம் அறிவால்
ஈழம் மீள்பிறந்து வருதல்
வேண்டும்

முப்புறம் கடல் வடக்கே பெருஞ்சுவர்
முப்படை நடுவே நிற்றல்
வேண்டும்

தமிழர் ஆதிக்கம் தீபகற்பமும் தீவும்
தம்மகத்தே கொண்டு ஆளுதல்
வேண்டும்

எம்மின கொலைஞர் இரண்டகர் தலைமுறை
இம்மியும் எஞ்சாது சாதல்
வேண்டும்

இனப்படுகொலை இனியில்லை என்றே 
இரும்புத் தமிழர்நாடு இயம்பல் 
வேண்டும்

பழங்குடி சிறுபான்மை இனவுரிமை
வழங்கும் நம் கொள்கை இயற்றல்
வேண்டும்

மொழிவழி இனங்களுக்கு தனிநாடென்று
முழுப்புவி நிலமும் உடைதல் 
வேண்டும்

உலகை அழிக்கும் திறனுடன் தமிழர்
உலாவும் கதைகள் தோன்றல்
வேண்டும்

சேது மேடுறுத்தி இரு நிலம் ஒன்றாகி
ஏது பிரிவினை என்று வினவல்
வேண்டும்

இயற்கையைக் கொன்ற இனங்கள் வாடி
இறையென்று நம்மை மன்றல்
வேண்டும்

வையத் தலைமை தமிழரிடத்தில்
வைத்து நல்லறம் போற்றல்
வேண்டும்

சமரில் வென்றெடுத்து ஆழிமூழ்கி
குமரிக் கண்டம் ஆய்தல்
வேண்டும்

தமிழிளந் தலைமுறை அமைதி
தழைத்து சலிப்பு அடைதல்
வேண்டும்

ஆராய்ந்து புதுவுலகம் கண்டு நாம்
பெயர்ந்து குடியேறி நிலைத்தல்
வேண்டும்