Sunday 31 December 2023

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்

 999 ஆண்டுகளுக்கு முன் அதாவது கி.பி.1025 ஆம் ஆண்டு சோழர்கள் தமிழகத்தில் இருந்து 3000 கி.மீ  கடலில் பயணித்து ஸ்ரீவிஜயம் அரசின் (தற்போது இந்தோனேசியா) தென்முனையில் படையை இறக்கிப் போர்தொடுத்தனர்.

 யானைகளை ஏற்றிக்கொண்டு 150 கப்பல்கள்  நடுக்கடலில் நேர்கோட்டில் சென்ற இதுவே முதல் "பெருங்கடல் கடந்த படையெடுப்பு" ஆகும்.
 
 கங்கை, இமயம், இலங்கை, மலேசியா, இந்தோனேசியா என பரவிய சோழப் பேரரசு  கி.பி. 1035 இல் அதன் உச்சநிலையை அடைந்தது.

 இதுவே உலகின் முதல் " பெருங்கடல் கடந்த பேரரசு" ஆகும்.

 500 க்கும் 1000 க்கும் கண்ட வடுக வந்தேறிகளிடம் கையேந்தி நிற்கும் நமது இன்றைய நிலையை நினைத்தால் கூட அவ்வளவு கவலையில்லை.

 ஆனால் அன்று அந்த நிலையில் இருந்து இந்த நிலைக்கு வீழ்ந்து விட்டோமே என்று நினைக்கும்போது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது.

 

Friday 29 December 2023

இசக்கி தாத்தா

இசக்கி தாத்தா

  அது தொல்லைபேசிகள் இல்லாத காலம்.
மாரியம்மாளும் உலகம்மாளும் அக்கா தங்கைகள்.
 அக்கா மாரியம்மாள் ஆலங்குளத்திலும் தங்கை உலகம்மாள் கோவில்குளத்திலும் வாழ்க்கைப்பட்டு இருந்தனர்.
 மாரியம்மாளுக்கு நான்கு குழந்தைகள் உலகம்மாளுக்கு குழந்தைகள் இல்லை.
 இருவரது இருப்பிடமும் 8 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.
 பகலில் ஓரிரு பேருந்துகள் உண்டு.
 உலகம்மாள் மாரியம்மாள் வீட்டுக்கு அடிக்கடி போய் இரண்டொரு நாட்கள் இருந்து விட்டு வருவது வழக்கம்.
 பேருந்து இருந்தால் பேருந்திலும் பேருந்து இல்லை என்றால் கால்நடையாகவும் போய் வருவாள்.

 ஒரு நாள் மாலை உலகம்மாள் கால்நடையாக கிளம்பினாள் வயல்வெளிகள் வழியாகவும் ஆற்றங்கரை ஓரமாகவும் மண்பாதை உண்டு அன்று உலகம்மாள் பாதி தூரம் வந்த போது மழை பொழிந்து பயணத்தை தடை செய்தது.
 ஒரு சிறிய கோவிலில் மழைக்கு ஒதுங்கி விட்டாள்.
 மழை நின்று கிளம்பும்பொழுது இருட்டிவிட்டது.
 ஆற்றங்கரை மேட்டில் சுற்றிலும் புதர்கள் வழியே செல்லும் மண் பாதையில் ஆள் நடமாட்டம் இல்லை.
 அவள் பயத்துடன் வேகவேகமாக சென்று கொண்டிருந்தாள்.
 அன்று தேய்பிறை நிலா வெளிச்சமும் மிகக் குறைவு.
 பாதி வழியில் கவனித்தால் அவள் வழி மாறி வந்துவிட்டாள்.

 பாதை இரண்டாகப் பிரியும் இரண்டு இடங்கள் அடுத்தடுத்து ஒரே போல இருக்கும்.
 இருட்டில் தவறான பாதையில் வந்துவிட்டதை அவள் உணர்ந்தாள்.
 அவளை பயம் தொற்றிக் கொண்டது.
 புதர் நடுவே ஒரு சிறிய இசக்கியம்மன் கோவில் உண்டு.
அங்கே தீ வெளிச்சம் தெரிந்தது.
 அதன் அருகே சென்றாள். அங்கே நிமிர்ந்த நெஞ்சுடன் 60, 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் பெரிய தடியுடன் நெருப்பு மூட்டி அதனருகே நின்று கொண்டிருந்தார்.
உடலில் போர்த்திய கருப்பு போர்வை, நெற்றியில் பெரிய பட்டை,  நரைத்த முறுக்கு மீசை, பெரிய தோல் செருப்பு.
இவளை கண்டதும் வெளியே வந்து "என்ன தாயி?! இந்நேரம் இந்த பக்கம்?!" என்று கேட்டார்.
 உலகம்மாள் "மழைல வழிதவறி வந்துட்டேன்!  ஆலங்குளத்துக்கு எப்படி போகணும்?!" என்று கேட்டாள்.
 அந்த முதியவர் தடியை எடுத்துக்கொண்டு தோல் செருப்பு சத்தத்துடன் கம்பீரமாக நடந்து வந்தார்.
 சிறிது தூரம் அந்த பெண் வந்த வழியிலேயே கூட்டிவந்து குறுக்காக செல்லும் ஒரு ஒற்றையடி பாதையை காண்பித்தார்.
 "இந்த வழியா போ தாயி! கொஞ்ச தொலவுல நீ தவறவிட்ட பாதைய பிடிச்சிரலாம்" என்று சொன்னார்.
 உலகம்மாள் சரி என்று கூறிவிட்டு அந்தப் பாதையில் நடந்து ஆலங்குளம் பாதையைப் பிடித்தாள்.
 அப்போது வேகமாக காற்றடித்தது நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டது.
 அவளை பயம் தொற்றிக் கொண்டது.
 அவள் திரும்பி பார்த்தாள்.
 ஆனால் அங்கே அவள் வந்த ஒற்றையடிப் பாதை இல்லை. 
 அங்கிருந்து எட்டிப் பார்த்தாள்.
 கோவில் இருந்த இடத்தில் புதர்களுக்கு மேலே நெருப்பு வெளிச்சம் தெரியவில்லை.

 அவள் பயத்துடன் விறுவிறுவென நடந்து அக்கா மாரியம்மாள் வீட்டை அடைந்தாள்.
 நடந்த அனைத்தையும் கூறினாள்.
 தன் குலதெய்வமான சுடலைமாடன் தான் நேரில் வந்து உதவியதாக அவள் கூறினாள்.
 அதற்கு  மாரியம்மாள் "அவரு இசக்கி தாத்தா! அந்த கோவில்ல தங்கி இருக்காரு! பகல்ல பூசாரியா இருப்பாரு!  பக்கத்துல  இருக்க தோப்புகளுக்கு அவர்தான் காவலாளி!" என்று கூறினாள்.

 ஓரிரு மாதங்கள் கழித்து உலகம்மாள் இசக்கி தாத்தாவை சந்தையில் வைத்து பார்த்தாள்.
 அவரிடம் போய் "தாத்தா நல்லா இருக்கீங்களா?! நல்லவேள அன்னைக்கு நீங்க என்ன கடவுளா வந்து காப்பாத்துனீங்க?! வீட்டுக்கு வாங்களேன் ஒரு வாய் சாப்டுட்டு போலாம்" என்று கூப்பிட்டாள்.
 அந்த தாத்தா கண்களை சுருக்கி பார்த்துவிட்டு "யாரு தாயி நீ?! ஆள் அடையாளம் தெரியலையே?! வேற யாரோனு என்கிட்ட பேசிட்டு இருக்க"  என்று சொல்லிவிட்டு புலம்பியபடி போய்விட்டார்.
அன்று பார்த்தபோது இந்த முதியவர் கம்பீரமாக இருந்தார். தற்போது பார்க்கும் போது அப்படி இல்லையே என்று நினைத்தாள்.

 சில நாட்கள் கழித்து உலகம்மாள் மாரியம்மாளிடம் இதை கூறினாள். அதற்கு மாரியம்மா அவளிடம் "அதுவா இசக்கி தாத்தா வயசாயி போனதால எதுவும் நெனவு இருக்காது! காலையில் நடந்ததை சாயங்காலம் மறந்துடுவாரு!  பகலைல அடங்கி ஒடுங்கி இருப்பாரு!  பொழுது சாஞ்சதும் கோயில்ல நடை சாத்தி சாமி கும்புட்டுட்டு திர்நீறு பூசிக்கிடுவாரு! உடனே சாமி அவர் உடம்புக்குள்ள வந்துடும்! ஒடம்ப உலுக்கிக்கிட்டு நெஞ்ச நிமித்திக்கிட்டு வெறைப்பா ஆயிடுவாரு!"   என்று கூறினாள்.

 சில நாட்கள் கழித்து உலகம்மாள் மாரியம்மாள் வீட்டுக்கு வந்திருந்த போது மாலை நேரத்தில் இசக்கி தாத்தா இறந்து விட்டதாக தகவல் சொன்னார்கள்.
 மாரியம்மாள் உலகம்மாளை வீட்டுக்கு போக சொல்லிவிட்டு தான் இழவு வீட்டுக்கு கிளம்பினாள். உலகம்மாளும் வீட்டிற்கு வந்து விட்டாள்.
 மறுநாள் காலை இசக்கி தாத்தா இறுதி சடங்கில் கலந்துகொள்ள அவள் நினைத்திருந்தாள் ஆனால் அவளது கணவன் தொழில் விசயமாக ஊருக்குக் கிளம்பியதால் அவளால் போக முடியவில்லை.
 அன்று மாலையே மாரியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை என்று உலகம்மாளை வரச் சொல்லி தகவல் வந்தது.

  உலகம்மாள் உடனே கிளம்பி கால்நடையாக சென்றாள். அப்பொழுதும் மழை பெய்தது. சிறிது நேரம் ஒதுங்கி நின்றவள் இருட்டத் தொடங்கியதும் நனைந்துகொண்டே ஆலங்குளம் நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தாள்.
 அப்போது பாதை இரண்டாகப் பிரியும் இடத்தில் இசக்கி தாத்தா நனைந்துகொண்டு கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.

 அதை பார்த்த உலகம்மாள் பயத்தில் வெலவெலத்துப் போய் விட்டாள்.
 இசக்கி தாத்தா அவளை அழைத்து "என்ன தாயி?! இருட்டிப் போச்சு இப்போ எங்க போற?! என்று கேட்டார்.
 "ஆலங்குளம் போறேன்! எல்லாம் இந்த மழையால வந்தது" என்று நடுங்கியபடி கூறினாள்.
 "சரி தாயி போ !" என்று கூறி இசக்கி தாத்தா அவளுக்கு காவலாக பின்தொடர்ந்து ஆலங்குளம் எல்லை வரை வந்து விட்டுவிட்டுப் போனார்.

 இதையும் மாரியம்மாளிடம் உலகம்மாள் கூறினாள். அதற்கு மாரியம்மாள் "இசக்கி தாத்தா எறந்த சேதி கேட்டு எல்லாரும் போனமா.. அப்ப உள்ள கட்டில்ல செத்து கிடந்த அவரு காணாம போய்ட்டாரு னு அவங்க வீட்ல சொன்னாங்க! எல்லாரும் தேடினாங்க கடைசில கோவில்ல எப்பவும் போல இருந்தார்"  என்று கூறினாள்.
  சில நாட்கள் கழித்து உண்மை வெளிவந்தது.

  இசக்கி தாத்தா சொத்துக்கு ஆசைப்பட்டு அவரது மூத்த மகனும் மருமகளும் திட்டமிட்டு அவருக்கு மோரில் விஷம் கலந்து கொடுத்தனர்.
அதைக் குடித்துவிட்டு படுத்த இசக்கி தாத்தா அசைவில்லாமல் படுத்திருந்தார்.
  அவர் எப்படியும் இறந்து விடுவார் என்கிற நம்பிக்கையில் அவர் இறந்துவிட்டார் என்ற தகவலை ஊருக்குள் கூறிவிட்டனர்.
  ஆனால் அவர் இறக்காமல் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.
 எனவே அவர்கள் தலையணையை வைத்து முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயற்சித்தனர்.
 ஆனால் தாத்தா அவர்களை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்து வீட்டின் பின்பக்கமாக ஓடி வாய்க்கால் பக்கம் போய்விட்டார்.
  அங்கே சேரும் சகதியுமான வாய்க்கால் தண்ணீரை வயிறு முட்ட குடித்துவிட்டு வயிறு அமுங்கும்படி குப்புறப் படுத்து தொண்டையில் கைவிட்டு வயிற்றில் இருந்த எல்லாவற்றையும் வாந்தி எடுத்துவிட்டு தனக்குத் தெரிந்த விஷமுறிப்பு மூலிகைகளை வாயில் பறித்து போட்டுக் கொண்டு கோவிலுக்கு ஓடிவந்து படுத்துவிட்டார்.
 அப்படியே நடந்தவற்றையும் மறந்து விட்டார்.

 அவர் வாய்க்கால் பக்கம் வந்தபோது பார்த்த ஒரு சிறுவன் மூலம் பிற்பாடு அனைவருக்கும் உண்மை தெரிந்தது.

Thursday 28 December 2023

தேமுதிக நாயுடு கட்சி

தே.மு.தி.க நாயுடு கட்சி

தேமுதிக தெலுங்கருக்கான கட்சியா?
 தமிழருக்கான கட்சியா?

 தேமுதிக சார்பில் 2014 மக்களவை தேர்தலில் 14 தொகுதிகளில் 9 எம்.பி வேட்பாளர்கள் நாயுடுகள்.

 2011 சட்டமன்ற தேர்தலில் 42 இல் 20 தொகுதி வேட்பாளர்கள் நாயுடுகள்.

 2016 இல் தே.மு.தி.க வில், விஜயகாந்த் அவர்களின் மைத்துனர் சுதீஷ் அவர்கள்தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுதான் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்தது.
 அதாவது இவர்கள்தான் அக்கட்சியின் அதிகார மையம்

 அக்குழுவில் இருந்தவர்கள் :
1) சுதீஷ் நாயுடு(தெலுங்கர் )
2) பொருளாளர் இளங்கோவன் நாயுடு (தெலுங்கர் )
3) சந்திரகுமார் நாயுடு(தெலுங்கர்)
4) பார்த்தசாரதி நாயுடு(தெலுங்கர்)
5) வெங்கடேஷ் நாயுடு(தெலுங்கர்)
6) பேராசிரியர் ரவீந்திரன் ரெட்டி (தெலுங்கர்)
7) மோகன்ராஜ் வன்னியர் (தமிழர்)

இதுமட்டுமில்லை விஜயகாந்திடம் அவரது கட்சி MLA மூன்று பேர் அடிவாங்கியுள்ளனர்.
மோகன் ராஜ் எம்.எல்.ஏ.,
பாஸ்கரன் எம்.எல்.ஏ.,
பார்த்திபன் எம்.எல்.ஏ.,
 மூவரும் தமிழர் (வன்னியர்) ஆவர்.

ஆரம்ப காலம் முதலே அவர் அப்படித்தான்.
அவர் தயாரித்து நடித்த வல்லரசு திரைப்படத்தில் ராமதாசு உருவம் போல் ஒப்பனை செய்யப்பட்ட சாதி சங்கத் தலைவரை உதைத்து ரத்தம் சிந்த வைத்து ஜாதி சங்க எதிர்ப்பு வசனம் பேசி அதே வல்லரசு படத்தை தெலுங்கில் கமிஷ்னர் நரசிம்ம நாயுடு  என்று பெயர் வைத்தவர் விஜயகாந்த்.

 
நன்றி: வசந்தன் ரகுந்தன்
நன்றி: அச்சமில்லை 

Tuesday 26 December 2023

பண்ணையார்களைக் காத்த தெலுங்கர்

பண்ணையார்களைக் காத்த தெலுங்கர்

 1950 இல் குமாரசாமி ராஜா (தெலுங்கு ராஜூ) ஆட்சியில் வாட்டக்குடி இரணியன் (அகமுடையார்), சாம்பவனோடை சிவராமன் (அகமுடையார்) போன்ற 5 முக்கியமான கம்யூனிஸ்ட் போராளிகளை போலீஸ் சுட்டுக் கொன்றது.
மஜூம்தார் காட்டிய வழியில் இவர்கள் நடத்திய "பண்ணையார் அழித்தொழிப்பு" நடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவரப் பட்டது .
 அவர்கள் இருந்திருந்தால் கீழவெண்மணி படுகொலை நடந்திருக்காது.
 அழித்தொழிப்பு கம்யூனிஸ்டுகள் மறைந்து வந்தேறி கால்நக்கி கம்யூனிஸ்டுகள் தோன்றியிருக்கவும் மாட்டார்கள்.

Friday 22 December 2023

ஆற்காடு நவாபு விநாயகர் கோவிலுக்கு அளித்த தானம்

சென்னைக்கு அருகில் உள்ள ஆற்காட்டை தலைநகராகக் கொண்ட இஸ்லாமியர்களான நவாப்புகள், கர்நாடக பகுதிகளை, 1690 முதல் 1801 வரை ஆண்டனர். நவாப்புகளில் பலர் மத அடையாளங்களைக் கடந்த மனிதநேயர்களாக இருந்துள்ளனர்.
அவர்கள், அனைத்து மதத்தினரின் வழிபாட்டு உரிமைகளையும் மதித்ததுடன், அரசின் சார்பில் வழிபாட்டு சடங்குகளுக்கு உதவிகளையும் செய்தனர்.
அந்த வகையில், திருநெல்வேலி குறவர் தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நித்திய அபிேஷகம், நைவேத்தியம் செய்ய லாலுகான் சாய்பு, தான அறக்கட்டளை நிறுவியதும், அசாது வால சாய்பு, இஸ்மாலி ராவுத்தர் ஆகியோர், குற்றாலநாதர் கோவிலுக்கு நித்திய பூஜைக்காக தானமளித்த செய்திகள், ஏற்கனவே கிடைத்த செப்பேடுகள் வாயிலாக தெரியவந்தன.
இந்நிலையில், ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் கிடைத்துள்ள செப்பு பட்டயங்கள், 1774ல் வெட்டப்பட்டுள்ளன.
அதில், ராச மானியார் அசாது நவாப்பு என்பவருக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, கோவிலின் அருகில் உள்ள கிராம மக்கள், கோவில்களுக்கு தானம் அளித்துள்ளனர்.
அதாவது, ஆயிரத்தெண் விநாயகர் கோவிலின் பூஜைக்கும், மாறமங்கலத்தில் உள்ள சந்திரசேகர சுவாமி கோவிலின் திருப்பணிக்கும் தானியங்களையும், நிலத்தையும் தானமளித்து, அதற்கான தர்மக்கட்டளையை நிறுவியுள்ளனர்.
அதாவது, அரசுக்கு சேர வேண்டிய வரியின் ஒரு பகுதியை, ஆட்சியாளரின் பெயரில், கோவிலுக்கு வழங்க, முஸ்லிம் ஆட்சியாளர்கள் முன்வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

22.12.2023 தினமலர் செய்தி 

Friday 15 December 2023

துணைநகர வணிகம்

துணைநகர வணிகம்

 ஒரு புதுமாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்து வேலையை விட்டுவிட்டு உள்ளூரில் ஒரு வேலைக்கு சென்றபோது அங்கே அந்த முதலாளி ஏறத்தாழ திவால் ஆகி இருந்தார்.
 வங்கியிலும் கந்துவட்டியிலும் வாங்கிய கடன் அவர் கழுத்தை நெறித்தது.  
 அவர் முதலீடு செய்திருந்த கார்ப்பரேட் நிறுவனம் அவர் ரத்தத்தை உறிஞ்சி துப்பிவிட்டது!
 அவர் வீடு, நகைகள் எல்லாம் கரைந்துவிட்டது!
 மீதமிருந்த அந்த நிறுவனத்தின் பொருட்களை திரும்ப ஒப்படைத்து கணக்கு முடிக்கத்தான் அவன் வந்திருந்தான்.

 அவனுக்கு வணிகம் பற்றி எதுவும் தெரியாது.
ஆனால் அவன் தன் முதலாளி இழந்த எல்லாவற்றையும் மீட்டு அந்த பெரிய நிறுவனத்தை பழிவாங்குவான் என்று அப்போது யாருக்கும் தெரியாது.

 கதையை முதலில் இருந்து தொடங்குவோம்! 
அது ஒரு பெருநகரம்! அதற்கும் 25 கி.மீ தொலைவில் இருந்த மாநில எல்லைக்கும் இடையில் ஒரு துணைநகரம் இருந்தது.
இந்த துணைநகரம்தான் கதைக்களம்!

 ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனம்! நாடு முழுவதும் ஏன் அண்டைநாடுகள் வரை கோலோச்சும் நிறுவனம்!
நூறாண்டு கடந்த வெள்ளைக்கார நிறுவனம்! தொலைக் காட்சியில் வரும் விளம்பரங்களில் பாதி அதன் தயாரிப்புகள்தான்.

 அந்த துணைநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு அந்நிறுவனப் பொருட்கள் (வாங்கி வைத்து விற்பனை செய்யும்) விநியோக உரிமையை அந்த துணைநகரத்தின் வியாபாரி ஒருவர் பெருமுயற்சி செய்து வாங்கினார்.

 அந்த நிறுவனத்தின் பொருட்கள் சந்தையில் தினசரி வீட்டு உபயோகப் பொருட்களில் 40% அளவுக்கு புழக்கத்தில் இருந்தது.
 கடை ஒன்று நடத்தி 30 ஆண்டுகாலம் ஏற்படுத்திய சேமிப்பை இதில் முதலீடு செய்தார். வியாபாரிகள் பலரும் அந்த நிறுவனம் பற்றி எச்சரித்தனர். இருந்தாலும் அவர் நம்பிக்கையுடன் இதில் இறங்கினார்.

 முதல்கட்டமாக 30 லட்சம் கொடுத்து பொருட்கள் வாங்கினார். மாதம் ஒரு கோடிக்கு மேல் புரளும். அதன் 4% அதாவது நான்கு லட்சம் லாபமாக நிற்கும் என்பது அந்த நிறுவனம் அளித்த வாக்குறுதி.

ஊருக்கு சற்று வெளியே மூன்று பெரிய அறைகள் உள்ள தகரம் வேய்ந்த கிட்டங்கி வாடகைக்கு எடுத்தார். இரண்டு சின்னயானை வண்டிகள், நான்கு பைக் வண்டிகள், ஒரு எக்செல் வண்டி தவணையில் வாங்கினார்.

 கல்லூரி செல்லமுடியாத ஓரளவு ஆங்கிலம் தெரிந்த இளைஞர்கள் 4 பேர் பெரிய கடைகள் முதல் பெட்டி கடைகள் வரை பைக்கில் சென்று கைபேசியில் ஆர்டர் எடுப்பார்கள். 
கணினிக்கு  ஒரு ஆள்! பொருட்களை எடுத்து வைத்து கடை வாரியாக பெட்டியிட நான்கு படித்த பெண்கள். வண்டிகளுக்கு இரண்டு ஓட்டுநர்கள். வரவு செலவு பார்க்க ஒருவர் உதவிக்கு சிலர் என மொத்தம் 15 பேர் வரை வேலைவாய்ப்பு பெற்றனர். இதுபோக வாரம் இருமுறை பாதி லாரி அளவு 10 லட்சம் வரை பெறுமானமுள்ள பொருட்கள் வரவழைக்கப்பட்டு இறக்கி அடுக்கப்படும்.

 மொத்தம் 300 கடைகள், 350 வகையான பொருட்கள், அவற்றில் ஒரு நாளைக்கு தோராயமாக 50 என்று ஒவ்வொரு வாரமும் கடைகள் சப்ளை செய்யப்படும். 

 அந்நிறுவனம் கெட்டுப்போகாத பொருட்கள் தயாரித்து விற்கும். சோப், ஷாம்பு, க்ரீம், பற்பசை, கழுவும் திரவங்கள், தேயிலை, காபி, வாசனை திரவியம், பவுடர் ஆகியன அடங்கும்.

 முன்பு ஒரு நகரத்தில் எது எவ்வளவு எப்போது விற்கும் எது விற்காது போன்ற விபரங்கள் இப்படி விநியோகஸ்தர் கூறித்தான் நிறுவனத்திற்கு தெரியும். எதையாவது அழுத்தி விற்கவேண்டும் என்றால் அதற்கு நிறுவன பிரதிநிதி வருவார். விளம்பரம், சலுகை, இலவசம் என செய்து தள்ளிவிடுவார்கள். 

 சரக்குகள் தொழிற்சாலையில் உற்பத்தி ஆகி அங்கிருந்து மைய  கிடங்கு அங்கிருந்து கிட்டங்கி  அங்கிருந்து பெரிய கடை அங்கிருந்து சிறிய கடை அங்கிருந்து வாடிக்கையாளர் என்று போகும்.
அதாவது மனிதர்கள் வணிகம் செய்தனர். 

 தொடுதிரை கைபேசி வந்தபிறகு எல்லாம் மாறிவிட்டது. ஒரு பெட்டிக்கடை என்னென்ன பொருட்கள் வாங்குகிறது என்பது வரை தரவுகள் மென்பொருளில் சேகரிக்கப்பட்டு செயற்கை மூளை அதைப் பதிந்து வைத்துக்கொள்ளும். 


 மனிதர்கள் இல்லாமலேயே நிறுவன மென்பொருள் கடைகளை வகைப்படுத்தி ஆர்டர்களைக் கண்கானித்து மனிதர்களுக்கு கட்டளை இடும்.
 ஒரு பெட்டிக்கடையில் 10 பொருட்கள் விற்றால் அடுத்தமுறை 11 பொருட்கள் விற்கச் சொல்லும். கடைகளுக்கு இலக்கு நிர்ணயித்து அதைத் தாண்டினால் சலுகை என்று முடிவு செய்யும்.

 வணிகத்திற்கு மனிதர்கள் தேவையில்லாமல் போனார்கள். முன்பெல்லாம் விநியோகஸ்தர்கள் அனுபவம் வியாபாரத்திற்கு தேவையாக இருந்தது இப்போது அந்த அனுபவம் மென்பொருள் வசம் இருக்கும்.

 காலையில் கைபேசியுடன் ஒரு புதிதாக வேலைக்கு வந்த பையன் கிளம்பினாலும் அதுவே வழிகாட்டி அதுவே ஆர்டர் கேட்கச் செய்து அதுவே புதிய பொருளைப் பரிந்துரைத்து அதுவே பில் ரெடி செய்து அனுப்பிவிடும். போட்டிப் பொருட்களையும் விசாரித்து தெரிந்துகொள்ளும்.

 பொருட்களுக்கு விநியோகஸ்தர் விலை வைக்கமுடியாது. பில்லைப் பார்த்து பொருட்களை எடுத்து சரிபார்த்து பெட்டியிட வேண்டும்.
 வாகனங்களில் ஏற்றி மறுநாள் கடைகளுக்கு சப்ளை செய்து வசூல் செய்து வரவு செலவு பார்க்கவேண்டும். சிறுசிறு கடைகள் வரை சப்ளை செய்ய அந்நிறுவனம் கட்டாயப் படுத்தியது. இதனால் வண்டிக்கான செலவு அதிகரித்தது. 

 100 ரூபாய் பொருள் அனுப்பினால் 50 ரூ வசூல் 50 ரூ பற்று என்று நிற்கும். இப்படி முதலீட்டில் ஒரு பகுதி பற்று என்று வெளியே நிற்கும். பொருள் போய்ச் சேர்வது மட்டுமே நிறுவனத்தின் கவலை பணம் வசூலிப்பது விநியோகஸ்தர் பாடு. கடைசியில் கணக்கு பார்த்தால் 1% அல்லது 1.5% சதவீதமே லாபம் நிற்கும். கடைக்காரருக்கு 8% அதுபோக விநியோகஸ்தர் கடனும் தரவேண்டும். உடனடி பணம் அளித்தால் 2% தள்ளுபடி தரவேண்டும்.

 இப்படியாக தினசரி இலக்கை முடித்து மாத இறுதியில் நிறுவனம் நிர்ணயித்த இலக்கை நெருங்க வேண்டும். அதை அடைந்துவிட்டால் 2% லாபம் நிறுவனம் தரும்.

 ஆரம்பத்தில் ராஜாவாக இருந்த விநியோகஸ்தர்கள் இப்போது வேலைக்காரர்கள் ஆயிருந்தனர்.
 அவர்களுக்கு இலக்கை அடைந்து 2% வாங்குவதைத் தவிர வேறு வழி இல்லை. நிறுவன பிரதிநிதி தன் பங்குக்கு அழுத்தம் கொடுப்பார். இலக்கை அடையாவிட்டால் ஒரே இரவில் கூட விநியோக உரிமை பறிக்கப்படலாம்.

 அந்த நிறுவனத்தில் ஒரேயொரு நல்ல கொள்கை இருந்தது. விற்காத பொருட்களை அதன் ஆயுட்காலம் முடிந்துவிட்டால் திருப்பிக் கொடுத்து அசலை வாங்கிக்கொள்ளலாம்.
 ஆனால் இதையும் கெடுக்க பிரதிநிதிகள் இலக்கை அடைய விற்காத பொருட்களை விற்றதாக காட்டச் சொல்வர். இந்த படித்த ஏமாற்றுக்கார பிரதிநிதிகளை நம்பி அந்த முதலாளி மோசம் போனார். 

 இதுபோக அருகில் இருக்கும் பெருநகரத்தில் பெரிய கடைகளில் இந்நிறுவன சரக்கு வாங்கி இந்த துணைநகரத்தில் வந்து விற்கும் சிலர் இருந்தனர். இவர்கள் சிறு திருடர்கள்.
 ஒரு கடை ஒரு சோப்பு வாங்கும் என்ற நம்பிக்கையில் விநியோகஸ்தர் சோப்புகளை வாங்கி அது கிடைக்க அதிகம் விற்காத இன்னொரு சோப்பை வாங்க கட்டாயப் படுத்தப்பட்டு அதையும் வாங்கி கடைக்கு போனால் அந்த சோப்பு ஏற்கனவே அந்த சிறுதிருடன் மூலம் அங்கே வந்திருக்கும். 
 கடைக்காரர் ஒரு முறை அவனிடம், ஒருமுறை விநியோகஸ்தரிடம் என வாங்கி இருவரிடமும் பாக்கி வைத்து கடன் பெற்றுக் கொள்வார். 

 அந்த முதலாளி இதைக் கூட சமாளித்துவிட்டார்.

 ஆனால் ஒரு விநியோகஸ்தர் எல்லைக்குள் இன்னொரு விநியோகஸ்தர் வந்து சப்ளை செய்வதும் நடந்தது. நிறுவன மேலிடத்தில் புகாரளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படமாட்டாது. இதனால் இந்த புதிய விநியோகஸ்தர் மிகவும் திணறினார். 

 அப்போதும் பிரதிநிகள் தவறான யோசனை கொடுத்தனர். அத்துமீறும் விநியோகஸ்தர் எல்லைக்குள் ஒரு பெரிய கடைக்கு குறைந்த விலைக்கு சப்ளை செய்து இதை ஈடுகட்டுமாறு கூறினர். இரவில் திருட்டுத்தனமாக ஒரு வண்டி சரக்குகள் குறைந்த விலைக்கு எல்லை தாண்டி அந்த பெரிய கடைக்குள் சென்று இறக்கப்பட்டன. 

 இதையெல்லாம் விட ஒவ்வொரு கடைக்காரருக்கும் கைபேசியில் அந்நிறுவன (சலுகைகளை அறிந்து ஆர்டர் போடும் வகையில்) செயலியை கொண்டுசேர்த்தனர்.
 இப்போது கடைக்காரர் பொருட்களை சலுகை விலை, இலவச இணைப்பு போன்ற வசதிகளைப் பார்த்து எந்நேரமும் ஆர்டர் செய்வார். விற்க சிரமமான பொருட்களைத் தள்ளிவிடுவது மேலும் சிரமமானது.

 இப்படியாக உள்ளே முதலீடு செய்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது. இதைவிட்டு விட்டு ஓட்டல் தொடங்கலாம் என்ற முடிவை எடுத்தபோது காலம் கடந்துவிட்டது.

 இந்த நிலையில் அந்த புதியவன் வந்தான். அப்போது அந்த விநியோகஸ்தர் திவாலாகும் நிலையில் இருப்பது வெளியே தெரியாது. அதனால் வேலையாட்கள் விட்டுச் செல்லாமல் இருந்தனர். 30 லட்சம் புழங்க வேண்டிய இடத்தில் 7 லட்சம் அதுவும் மிகவும் கடினப்பட்டு புழங்கிக் கொண்டிருந்தது.
 அவன் வந்தவுடனே அவன் தன் உறவினன் என்பதால் முதலாளி தன் நிலையை அவனிடம் மட்டும் கூறினார். 

 அவன் முதலில் ஒரு மாதம் உன்னிப்பாக கவனித்தான். பிறகு களத்தில் இறங்கினான்.பெரிய கடைகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை விட்டுவிடச் சொல்லிவிட்டான்.
 விற்காத பொருட்களை கணக்கெடுத்தான்.
ஒவ்வொரு கடைக்காரராக அழைத்து வந்து காட்டி அசல் விலைக்கு முடிந்தவரை பொருட்களைத் தள்ளிவிட்டான். விற்றதாகக் காட்டப்பட்ட மீதி பொருட்களை மென்பொருளுக்கு உள்ளே கொண்டுவர அதை விற்ற கடைக்காரர்கள் திருப்பித் தந்தது போல காட்டி நிறுவன மென்பொருளின் இருப்பிற்குள் கொண்டுவந்து அவற்றை திரும்ப ஒப்படைத்து அசலை வாங்கினான்.
 இப்படியாக பொருட்கள் காலியாகி அந்த பணம் கைக்கு வந்தது.
 வாகனங்களையும் ஆட்களையும் பாதியாகக் குறைத்தான்.
 கடைக்காரர்கள் வைத்திருக்கும் பாக்கியை வசூலிக்க திறமையான ஒரு பையனை நியமித்தான். 
 
 இப்படி ஒவ்வொரு ரூபாயும் முதலாளிக்கு கிடைக்கும்படி செய்தான். இப்போது முதலாளியின் கடன் கொஞ்சம் குறைந்தது. கணக்கு முடித்து பணத்தை வாங்க பிரதிநிதி உதவவில்லை. நிறுவனமும் அலைக்கழித்தது. அவனுக்கு அந்த நிறுவனத்தின் மீது கோபத்தை வரவழைத்தது.
 எல்லைக்குள் வந்து விற்றவனுக்கே விநியோக உரிமையை அளித்தது அவனுக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது. 

 கட்டிடத்தையும் வாகனங்களையும் அந்த புதிய அராஜக விநியோகஸ்தரிடரிமே விற்றுவிட்டு வேலையாட்களும் அங்கேயே வேலைக்கு சேர்ந்துகொள்ள முதலாளி முடிவு செய்துவிட்டார்.
 பூர்வீக வீட்டை விற்று மீதி கடனைக் கொடுக்க அவர் நினைத்தார்.
அப்போதும் அவருக்கு 8 லட்சம் வரை கடன் இருக்கும்.
  
 அவனால் இதைப் பொறுக்க முடியவில்லை. நிறுவனத்தின் இலக்கை நியாயமாக எட்ட முடியாமல் விநியோகஸ்தரை ஏமாற்றி போலி விற்பனையைக் காட்டிய பிரதிநிதி, அடுத்தவன் எல்லைக்குள் அத்துமீறி சப்ளை செய்து அவனை விரட்டி அந்த பகுதியைக் கைப்பற்றும் இன்னொரு விநியோகஸ்தன், இதை கண்டுகொள்ளாமல் லாபவெறியில் இயங்கும் நிறுவனம் என அனைவரையும் பழிவாங்க அவன் முடிவெடுத்தான்.

 முதலாளியிடம் தன் திட்டத்தைக் கூறினான். அவனுக்கு வழிகாட்டி அந்த சிறுதிருடன். முதலில் அந்த சிறுதிருடனைப் பிடித்து உதைத்து அவனிடம் அருகில் இருக்கும் பெருநகரத்தின் பெரிய கடையின் விபரங்களைக் கேட்டறிந்தான். அந்த பெரிய கடை மொத்தமாக பெரிய அளவில் பொருட்களை வாங்குவதால் பெரிய சலுகை கிடைக்கும். அவர்களால் விநியோகஸ்தரை விட குறைந்த விலைக்கு தரமுடியும். ஆனால் சில கிடைக்காத அல்லது ஸ்பெசலான பொருட்கள் விநியோகஸ்தரிடம் மட்டுமே கிடைக்கும். இதுதான் வித்தியாசம்.

 அந்த பெரிய கடைக்கு தன் முதலாளியை அழைத்துச் சென்றான். அங்கே ஒரு ஊரின் கடைவீதியில் இருக்கும் அத்தனை கடைகளுக்கும் தேவையான அத்தனை பொருட்களும் மொத்தமாகக் கிடைக்கும்.
 தங்கள் கிட்டங்கியைக் கடையாக மாற்றி மொத்த வியாபாரம் செய்யப் போவதாகவும் கடனாகப் பொருள் கொடுத்தால் விற்க விற்க காசு தருவதாகவும் கூறி உதவி கேட்டனர்.
 இரண்டு நாட்கள் கழித்து வரச் சொன்ன அந்த பெரிய கடைக்காரர் அந்த துணைநகரத்தில் அவருக்கு இருந்த மரியாதையை விசாரித்து அறிந்துகொண்டு முதல்கட்டமாக 5 லட்ச ரூபாய்க்கு சரக்கு தரத் தயாராக இருந்தார்.

 அவன் வேகமாக விற்கும் பொருட்களை வாங்கினான்.
 அந்நிறுவன சரக்குகள் கடைவாரியாக எது விற்கும் என்பது அவனுக்கு மென்பொருள் புண்ணியத்தில் தெரியும் அதுமட்டுமின்றி அந்நிறுவனத்திற்கு போட்டியான பொருட்களையும் (கடைக்காரர்களிடமும் ஆர்டர் எடுக்கும் பையன்களிடமும்) விசாரித்து வைத்திருந்தான். 
அந்த பொருட்களை வாங்கி கிட்டங்கியில் வைத்தான்.
 கிட்டங்கியை கடை போன்று காட்டிக்கொள்ள பெயர்பலகை மாட்டினான்.

 துணைநகரத்தி்ல் பெரிய கடைகள் பத்துதான்.
 அவற்றில் போய் அனைத்து நிறுவன பொருட்களையும் ஆர்டர் எடுத்தான்.
 ஒரு நாளைக்கு இரண்டு கடை என்று அவன் சப்ளை செய்தான். ஒவ்வொருவரிடமும் நயமாகப் பேசி முடிந்த அளவு 'பணம் கொடுத்த பிறகே பொருள் ஒப்படைப்பது' என்ற முறையில் வியாபாரம் செய்தான்.
 விநியோகஸ்தரை விட குறைவான விலை என்பதால் முக்கிய கடைகள் அவனிடமே பொருள் வாங்குவதாக வாக்களித்தனர்.
  ஒரு வாரத்திற்குள் 4 லட்சம் திருப்பிக் கொடுத்து அடுத்த கட்டமாக பத்துலட்ச ரூபாய் சரக்கு வாங்கி வந்தான்.
 
 இப்போது அராஜக விநியோகஸ்தன் பதறிக்கொண்டு நிறுவனத்தில் புகாரளித்தான்.
 கடைகளுக்கு இவர்கள் சப்ளை செய்கிறார்கள் என்று.
 பிரதிநிதி ஓடோடி வந்தான். "நீங்கள் எங்கள் நிறுவன பொருட்களை வாங்கி விற்பது எங்கள் விதிமுறைக்கு புறம்பானது" என்றான். 
  "ஆனால் பொதுவான விதிமுறைப்படி அது தவறில்லையே! ஒரு கடை வேறொரு கடையில் மொத்தமாக பொருள் வாங்கக்கூடாது என்றோ இன்னொரு கடைக்கு பொருட்கள் விற்கக் கூடாது என்றோ சட்டமில்லையே?" இவன் திருப்பிக் கேட்டான். "எந்த கடை இன்னொரு கடைக்கு டோர் டெலிவரி செய்கிறது?" பிரதிநிதி வாக்குவாதம் செய்ய அவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான்.
 பிரதிநிதி கைகளை நெறித்தபடி அந்த விநியோகஸ்தன் முன்னால் போய் நின்றான். 
" இங்கே இத்தனை கட்டுமானம் செய்து ஆட்களைப் போட்டு  வரி கட்டி விற்பதற்கு கடினமான பொருட்களில் முதல் முடக்கி ஒவ்வொரு சந்துக்குள்ளும் வண்டியை ஓட்டி நான் வியாபாரம் நடத்துகிறேன். அவன் ஒரு பழைய நோட்டில் ஆர்டர் எழுதி மறுநாள் கொடுத்துவிடுகிறான். இலக்கு இல்லை. தேவையற்ற அழுத்தம் இல்லை. மெதுவாக விற்கும் பொருட்களில் முதல் முடக்கமில்லை. எல்லா நிறுவன பொருட்களும் கிடைக்கும். வாசல் வரை சப்ளை வேறு, இனி நான் எப்படி இங்கே பெரிய கடைகளுக்கு பொருட்களை விற்பேன்?!" என்று பொருமினான்.

அவர்களது கிட்டங்கி அந்த துணைநகரத்தில் இருந்து பெருநகரை நோக்கி செல்லும் சாலையிலேயே அமைந்திருந்தது வசதியாக இருந்தது. இதனால் அந்த துணைநகரத்தின் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பெருநகரம் சென்று பொருட்கள் வாங்கும் சிறு வியாபாரிகள் அதே விலைக்கு இவன் கடையிலேயே வாங்கினர். அதாவது பெருநகரத்தில் இருக்கும் அந்த பெரிய கடையின் ஒரு கிளை துணைநகரக்கு அருகே வந்துவிட்டதாகவே இதைக் கொள்ளலாம். பழைய முறைப்படி இவன் விலை வைக்க முடிந்தது. பெரிய கடைகள் மூலம் சிறிய கடைகளுக்கு பொருள் போய்ச் சேர்ந்தது.

 துணைநகரின் பெரிய கடைகள் விநியோகஸ்தர் வழியே பொருட்களை வாங்குவது மிகவும் குறைந்து போனது சிறிது காலத்தில் அந்த அராஜக விநியோகஸ்தன் நஷ்டத்துடன் இந்த எல்லையை விட்டுவிட்டு தன் எல்லைக்குள் போய்விட்டான். அருகிலுள்ள வேறொரு விநியோகஸ்தருக்கு இந்த எல்லையை சேர்க்க நிறுவனம் முயல அவர்கள் இந்த விநியோகஸ்தன் பின்வாங்கிய கதை அறிந்து மறுத்துவிட்டனர். அது மாநில எல்லை என்பதால் அருகே வேறு விநியோகஸ்தரும் இல்லை. 

 இப்போது நிறுவனம் அந்த துணைநகரத்தில் வேறு புதிய விநியோகஸ்தரை பிடிக்க முயன்றது. இவரின் நிலைகண்டு எவரும் அதற்குத் தயாராக இல்லை. 
 இப்போது அந்த நிறுவனம் இறங்கி வந்து அவரிடம் மண்டல பிரதிநிதியை அனுப்பி பேசியது. உங்களுக்கே விநியோக உரிமை தருகிறோம். மேற்கொண்டு அரை பைசா வட்டியில் 30 லட்சம் கடனும் தந்து சரக்கும் தருகிறோம். ஒரு வாரம் கழித்து சரக்குக்கு பணம் போட்டால் போதும் எந்த வகையிலும் அழுத்தம் இருக்காது என்று கெஞ்சியது.

 முதலாளி அவனிடம் கேட்டார் அவன் முடியாது என்று கூறிவிட்டான்.  இப்படியாக சில ஆண்டுகள் அந்தப் பகுதியில் பாதி விற்பனையை இழந்தது அந்த நிறுவனம். அதை அந்த முதலாளி அடைந்தார். அதன் பிறகு ஒரு பெரும்பணக்காரர் விநியோக உரிமை வாங்கினார். அவர் இந்த மோதல் போக்கைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

 இப்போது முதலாளி கடனை அடைத்து பிள்ளைகளை ஆளாக்கி வீடும் கட்டிவிட்டதால் இந்த தொழிலை அவனிடமே ஒப்படைப்பதாக சொன்னார்.
அவனுக்கு ஏனோ இந்த தொழிலை தொடர விருப்பம் இல்லை. புதிய விநியோகஸ்தரும் வேலைக்கு அழைத்தார் அங்கும் அவன் செல்லவில்லை.

  ஒருநாள் அந்நிறுவன அதிகாரிகள் அவன் வீடு தேடி வந்தனர். 
"நீங்கள் எங்கள் நிறுவனத்தில் பிரதிநிதியாக சேரமுடியுமா?" என்று கேட்டனர். 

அதற்கும் அவன் மறுத்துவிட்டான்.
கட்டுப்பாட்டுக்குள் சிக்குண்டு வாழ்வது அவனுக்குப் பிடிக்கவில்லை.

 அவன் அந்த பெருநகர கடை முதலாளியிடம் போய் சேர்ந்துகொண்டான்
 
 
 

Wednesday 13 December 2023

நாயக்கர்களை சேதுபதிகள் துவைத்து காயப்போட்ட வரலாறு

 நாயக்கர்களை சேதுபதிகள் துவைத்து காயப்போட்ட வரலாறு 

 ஒரு மனநலம் பாதித்த மறவர் (?) ஒரு பேட்டியில் 'நாயக்கர்கள் மறவர்களுக்கு பிச்சை போட்ட அரசுரிமையே சேது சீமை' என்றும் 'சேதுபதிகள் மதுரை நாயக்க மன்னர்களை கடவுளாக நினைத்தனர்' என்றும் உளறியுள்ளார்.

 ஆனால் உண்மை வரலாறு வேறாக இருக்கிறது!

 அதாவது ராஜராஜ சோழனின் பேரன் காலத்தில் சோழர்கள் கன்னட சாளுக்கியருடன் கலந்து மக்கள் ஆதரவு இழந்து பலவீனமான பிறகு அவர்களை வீழ்த்தி பாண்டியர் (இன்றைய கேரளா, பாதி கர்நாடகா, பாதி ஆந்திரா,  பாதி இலங்கை வரை கைப்பற்றி) பேரரசாக எழுந்தனர்.

 பிறகு இரண்டு பாண்டிய வாரிசுகளுக்கு இடையே மோதல் வெடித்து உள்நாட்டு போர் நடக்கிறது. இப்படி உள்நாட்டு போர் மற்றும் குழப்பத்தால் சிதைந்து கிடந்த பாண்டிய பேரரசின் மீது டெல்லி சுல்தானிய பேரரசு (துருக்கியர்) படையெடுத்து மதுரை வரை கைப்பற்றுகிறது.
 (இந்த படையெடுப்பில் பாதிக்கப்பட்ட தெலுங்கர்கள் கொங்குநாட்டில் தஞ்சமடைந்து வாழ்கின்றனர்)
  இப்போது டெல்லி அரசின் சார்பாக மதுரையைப் பிடித்த தளபதி (அரேபியர்) டெல்லி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு மதுரையை தனி சுல்தானியமாக (தனிநாடாக) அறிவிக்கிறார். 43 ஆண்டுகள் மதுரை சுல்தான்கள் என்கிற பெயரில் இவர்கள் பாதி தமிழகத்தை ஆள்கின்றனர். 

 தென்தமிழகம் அப்போதும் பாண்டியரின் கீழ் இருக்கிறது. சுல்தான்களும் பாண்டியரும் மோதிக் கொண்டு இருந்த சமயம் கர்நாடக ஆந்திர எல்லையில் (டெல்லி சுல்தானிய முன்னாள் தளபதிகளான) ஹரிஹரன் மற்றும் புக்கர் (கன்னடர்) விஜயநகர பேரரசை நிறுவி மதுரை மீது படையெடுத்து  சுல்தான்களை ஒழித்து மதுரையைப் பிடிக்கின்றனர்.

 இப்போது மதுரையை மீட்க வந்த பாண்டியர்களை அரியநாத முதலியார் எனும் தமிழர் தலைமையில் படைகளை அனுப்பி முறியடிக்கின்றனர்.
 கன்னடர்கள் தமிழகத்தில் தமது நிர்வாகிகளாக (நாயக்கர்களாக) தெலுங்கரை நியமிக்கின்றனர்.
 பிறகு டெல்லி சுல்தானியத்தில் இருந்து பிரிந்த தென்னக சுல்தானிய அரசுகள் கூட்டு சேர்ந்து விஜயநகர பேரரசை வீழ்த்துகின்றன. 

 இதனால் விஜயநகரத்துக்கு அடங்கியிருந்த தமிழக நாயக்கர்கள் (தெலுங்கர்) தனிநாடாக ஆனார்கள்.
 இந்த நேரத்தில் பெரிய அளவில் தெலுங்கர்கள் தமிழகத்தில் குடியேறுகின்றனர். 

 மதுரையை மீட்க முடியவில்லை என்றாலும் தெற்கே பாண்டியர் ஆட்சி தொடர்கிறது.
 ஏற்கனவே தொடர்ச்சியான போர்களால் பலவீனமாக இருந்த பாண்டியர் காலப் போக்கில் வலுகுன்றி நாயக்கர்கள் கை ஓங்குகிறது. சிறிது சிறிதாக பாண்டிய நாடும் நாயக்கர் ஆட்சியின் கீழ் வருகிறது.
 நாயக்க மன்னர் பாண்டிய நாட்டை 72 சிறுசிறு துண்டுகளாக (பாளையங்களாக) பிரித்து அதில் முக்கால்வாசி பாளையங்களில் தெலுங்கரையும்  கால்வாசிப் பாளையங்களில் மறவர்களை நிர்வாகிகளாக நியமிக்கின்றனர். 
 இதுவே பாளையக்கார முறை.
 ஆனால் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் மட்டும் மிக குறுகிய காலத்தில் தனியரசு ஆயினர்.
 அதாவது தமிழகத்தில் நாயக்கர் காலம் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் கி.பி.1529 இல் தொடங்குகிறது.
 அவரது மகன் காலத்திலேயே சேதுபதிகள் தனியரசு ஆகிவிட்டனர். 
 இந்த சேதுநாட்டிற்கும் மதுரை நாயக்க அரசிற்கும் (ஆங்கிலேயர் ஆட்சியைப் பிடிக்கும் வரை) தொடர்ந்து மோதல் நடந்துகொண்டே இருந்தது.
அதில் 5 பெரிய போர்கள் அடங்கும்.
1) கி.பி 1635
திருமலை நாயக்கர் - இரண்டாம் சடையக்க தேவர்
2) கி.பி 1667
சொக்கநாத நாயக்கர் - ரகுநாத தேவர் (திருமலை ரகுநாத சேதுபதி)
3) கி.பி 1682
சொக்கநாத நயக்கர் - கிழவன் சேதுபதி
4) கி.பி 1686
மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர் - கிழவன் சேதுபதி
5) கி.பி 1702
ராணி மங்கம்மாள் ( தளவாய் நரசப்பையா) - கிழவன் சேதுபதி.
இந்த ஐந்து போர்களில் கி.பி 1635 ஆம் ஆண்டு நடந்த முதல் போரில் மட்டும் திருமலை நாயக்கர் தளபதி ராமப்பய்யன் வெற்றி பெறுகிறார். அதுவும் பெருத்த சேதம் அடைந்து கடைசியில் போர்த்துகீசியர் காலில் விழுந்து உடன்படிக்கை செய்து கொண்டு பல நவீன ஆயுதம் கொண்டு கடல் வழி நிலம் வழி என இரண்டு விதமான தாக்குதல் நடத்தி வெற்றி பெறுகிறார்.
 ஆனால் அடுத்து நடந்த நான்கு போர்களிலும் சேதுபதி மன்னர்களே வெற்றி வாகை சூடினர்.
 இது போக முகலாயர், மராத்தியர், மைசூர், ஆற்காடு நவாப், ஆங்கிலேயர் என தொடர்ச்சியான பல போர்களால் நாயக்கர் அரசுகள் வலுகுன்றி கி.பி. 1700 களில் பல சிறிய பாளையங்களாக சிதறியது. அப்போது தென் மாவட்ட மறவர்களும் தனது பாளையங்களை தனியரசாக ஆக்கிக் கொண்டனர். 
 இந்த சிதறிய தமிழ்நாட்டில் தெலுங்கு பாளையங்கள் மொத்தமாக ஆங்கிலேயருக்கு அடிபணிய சேதுபதிகளும் மறவர் பாளையங்களும் எதிர்த்து நின்று போராடி இறுதியில் தோற்றன.
( ஆங்கிலேயர் பாளையக்கார முறையை ஒழித்து இவர்களை ஜமீன்களாக்கி நிலத்தை சொந்தமாக எழுதிக்கொடுத்து ஜமீன்தாரி முறையைக் கொண்டுவருகின்றனர். இப்படித்தான் தமிழக நிலவுடைமை தெலுங்கர் கைக்கு போனது. இந்த தெலுங்கு ஜமீன் வகையறா போட்ட குட்டிதான் திராவிடமும் நீதிக் கட்சியும்)

 நாயக்கர் மறவர் தொடர்ச்சியாக மோதிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. மைசூர் படையெடுப்பு மற்றும் ஆங்கிலேயர் படையெடுப்பு போன்ற சில சோதனையான காலகட்டங்களில் நாயக்கர் மறவர் இணைந்து செயல்பட்டுள்ளனர்.
 மற்றபடி ஆண்ட பரம்பரையான நாயக்கர் களுக்கு மறவர்கள்தான் அடியாட்கள் என்பது வந்தேறிகள் தம் சுய இன்பத்திற்காக உருட்டிய திரிப்பு! 
 
 

Monday 11 December 2023

அண்ணாதுரை to கருணாநிதி

அண்ணாதுரை to கருணாநிதி

அண்ணாதுரை பட்டப் படிப்பு முடித்து நீதிக் கட்சியில் 1935 இல் சேர்ந்தார். அதன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக இருந்தார்.  1937 இல் ஈ.வே.ரா வுடன் இணைந்து செயல்பட்டு அவரது குடியரசு இதழின் ஆசிரியர் ஆனார். பின் ஈ.வே.ரா வுக்கு போட்டியாக 1942 இல் திராவிட நாடு என்ற பத்திரிக்கை தொடங்கினார். 1944 இல்  தி.க உருவானபோதும் ஈ.வே.ரா வுடன் இருந்தார்.
1949 இல் ஈ.வே.ரா தனது வளர்ப்பு மகள் மணியம்மை யை திருமணம் செய்து தி.க இயக்கத்தையும் அதன் ஐந்து லட்ச ரூபாய் பெறுமான சொத்தையும் அவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.
ஈ.வே.ரா வுக்கு பிறகு தலைமைக்கு வர அடுத்த நிலையில் காத்திருருந்த அண்ணாதுரை இதை எதிர்த்தார் ( தனது 14 ஆண்டு உழைப்பை இரண்டு ஆண்டுகளில் குறுக்கு வழியில் ஒரு பெண் பறிப்பதை அவர் எதிர்த்தது நியாயமே).
தன் ஆதரவாளர்களுடன் வேலைநிறுத்தம் போன்று செய்தார்.
அப்போது அவரோடு நின்ற 32 பேரில் கருணாநிதி இல்லை.

சான்று :-

"தமது திருமண விஷயமாயும் இயக்க விஷயமாயும் கொண்டுள்ள ஏற்பாட்டை ரத்து செய்யாதவரை ஒத்துழைக்க முடியா தென்பதையும் தெரிவித்து விடவேண்டுமெனத் தீர்மானிக்கப் பட்டது.

கூட்டத்திற் கலந்து கையொப்பமிட்டவர்கள்..

அரசு,
காஞ்சி மணிமொழியார்,
மா. இளஞ்செழியன்
வேணு
மணி
தங்கராசு
பாலசுந்தரம்
வி. சங்கரநாராயணன்
பா. கோவிந்தராசன்
பாண்டியன்
முத்துசாமி
திராவிடமணி
கோவிந்தசாமி
தேவசகாயம்
பெரியசாமி
அங்கமுத்து
ஜெயராமன்
கன்னியப்பன்
தருமன்,
மதுரை ராசன்
பெருமாள்
சுப்பராயலு
பக்தவச்சலம்
எஸ். ராமன்
கா. சொக்கலிங்கம்
கண்ணபிரான்
பால்ராஜ்
சங்கரன்
கணேசன்
சுந்தரமூர்த்தி
நடராசன்,
ம.சு. முத்து,

– அண்ணாதுரை
(திராவிட நாடு – 03.07.1949)

பிறகு அண்ணா தனது ஆதரவாளர்களுடன் வெளியேறுகிறார். அப்போது வேலைநிறுத்தம் செய்த 32 பேரில் 4 பேர் மட்டுமே (அரசு, மணிமொழியார், நடராசன், முத்து) அவருடன் வெளியே வருகின்றனர்.

பாரதிதாசன் ஆதரவுடன் புதிய ஆதரவாளர்களைத் திரட்டி பொத்தாம்பாளையம் பழனிச்சாமி என்பவர் செலவில் 28 பேருடன் முதல் கட்சிக் கூட்டம் நடத்துகிறார்.
கடைசியாகச் சேர்ந்த 28 ஆவது நபர் கருணாநிதி.
27 ஆவதாக சேர்ந்த அன்பழகனுடன் சேர்ந்து இவர்களுக்குப் பின்னால்1953 இல் திமுக வுக்கு வந்த எம்ஜிஆர் ஆதரவுடன் கட்சியைக் கைப்பற்றுகிறார்.

சான்று படம் காண்க:-
தி.மு.க முதல்கூட்ட சுவரொட்டி (18.09.1949)

அதாவது 32 ஆண்டுகள் உழைத்து 1967 இல் அண்ணாதுரை ஆட்சியைப் பிடிக்கிறார். அவர் 1969 இல் இறந்தவுடன் அவரோடு தி.க வில் இருந்து வெளியே வந்த 4 பேர் சேர்த்து தி.மு.க தொடங்கிய 27 பேரை ஓரங்கட்டி வெறும் பத்து ஆண்டு உழைப்பில் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றியுள்ளார் கருணாநிதி.
ஈ.வே.ரா போல பண வசதியோ, காமராசர், தேவர் போல தியாக வாழ்க்கையோ, அண்ணாதுரை போன்ற கல்வியறிவோ பேச்சாற்றலோ, எம்ஜிஆர் போன்று வசீகரத் தோற்றமோ அல்லது பெரும்பான்மை ஜாதி அடையாளமோ இல்லாமல் இதைச் சாதித்தது மிகப் பெரும் வியப்பு!

இன்று தி.மு.க கருணாநிதி யின் குடும்ப சொத்து ஆகிவிட்டது!


Saturday 9 December 2023

மைன்ட் வாய்ஸ்

மைன்ட் வாய்ஸ்

"டேய் பஞ்சப் பரதேசி நாய்களா?! 
உங்களால எங்கள என்னடா பண்ண முடியும்?
மிஞ்சி போனா ஓட்டு போட மாட்டீங்க! 
அவ்ளதானே?! 
மூணு தலமொறயா கொள்ளயடிச்சு நூறு தலமொறைக்கு சொத்துபத்து சேத்துட்டோம்! 
 எங்க கட்சி அடிமைகள் கூட இப்ப அம்பானி ஆயிட்டானுக!
 அடுத்த தேர்தல்ல ஜெயிக்கலன்னா பத்து வருசம் ரெஸ்ட் எடுத்துட்டு வருவோம்!
 அப்ப பணத்த விட்டெறிஞ்சா நாய் மாதிரி வந்து ஓட்டு போடப் போறீங்க! 
இதுதானே வழக்கமா நடக்கும்! 
 எங்களுக்காக ஒழைச்சு சாவுறதுதான் பொதுமக்களுக்கும் அடிமட்ட தொண்டனுக்கும் தலையெழுத்து!
 அதுக்கு தானடா உங்க ஆத்தா ஒங்கள பெத்து போட்ருக்கா!
என்னடா ரோசம் வருதா?!
 வரட்டும்! இப்படித்தான் எல்லாத்தயும் உருவுன பிறகு எங்க தாத்தன பாத்து உங்க தாத்தன் கோப பட்டான்! எங்க அப்பன பாத்து உங்க அப்பன் கோவப் பட்டான்! என்னத்த கிழிச்சிட்டீங்க?!
 இனிமே நீங்க ஓட்டுப் போடலன்னாலும் போங்கடா!
 எங்கள ஒண்ணும் புடுங்க முடியாது. 
 இந்த ஆட்சில பத்து மடங்கு டார்கெட் வச்சு பாதிய முடிச்சிட்டோம்! 
 தேர்தலுக்குள்ள உங்க கோமணத்த கூட உறுவீருவோம்! 
அப்பறம் தலைமை, மாவட்டம், வட்டம் வர அமெரிக்காவுல செட்டில் ஆகிடுவோம்!
 என் மகன் மட்டுமில்ல அவனோட கொள்ளுப் பேரன் அவனோட எள்ளுப் பேரன் வரைக்கும் பைவ் ஸ்டார் ஓட்டல்ல பாரின் பிகரோட போட்டோ போடுவான்!
 வயித்துல அடிச்சிகிட்டு கமென்ட்ல கலாய்ச்சுட்டு கம்முனு படுங்கடா!
ஓவர் கோவம் ஒடம்புக்கு ஆகாது எளிய மக்களே! 
விடிஞ்சா பொழப்ப பாக்க போகணும்ல?! 
பசிக்கும்ல?! புள்ள குட்டியோட கஞ்சிக்கில்லாம சாவ போறீங்களா?! 
நாங்கள்லாம் ராட்சசங்கடா! 
எங்களோட மோதி உங்களால ஜெயிக்க முடியுமா?!
ரொம்ப கத்துனீங்கனா நெத்தில  பொட்டு வச்சிருவோம்!
 தோட்டா பொட்டு"

Friday 8 December 2023

வடக்கில் ஒரு தமிழன்

வடக்கில் ஒரு தமிழன் 

 அது ஒரு பெரிய ஆலை! அங்கே ஒரே நேரத்தில் ஒரு குஜராத்தியனும் ஒரு தமிழனும் வேலையில் சேர்ந்தனர். அந்த தமிழன் இரண்டு ஆண்டுகள் கழித்து வேறொரு நிறுவனத்தில் நிரந்தரமான  வேலை கிடைத்து போய்விட்டான். போகும்போது அந்த குஜராத்தி தோழனுக்கு தனக்கு தெரிந்த சில தொழில்நுட்பங்களை சொல்லிக் கொடுத்துவிட்டு போனான். காலம் உருண்டோடி பத்து ஆண்டுகள் கழித்து அதே இடத்திற்கு தமிழன் வந்தான். குஜராத்தியன் அங்கேயே நிரந்தரமாகி பொறுப்பில் இருந்தான். இருவரும் நண்பர்களாகவே தொடர்ந்தனர். அங்கே ஒரு பிரச்சனை ஒரு பீகாரி வடிவில் வந்திருந்தது. அந்த திறமையான தந்திரமான பீகாரி அனைவரையும் பின்னுக்குத் தள்ளி இப்போது குஜராத்தியை விழுங்கும் இடத்திற்கு வந்துவிட்டான். 
அந்த ஆலை ஒரு நிமிடம் நின்றாலும் பல லட்சம் நஷ்டம் ஆகும் அளவுக்கு பரபரப்பாக இயங்கும் இடம்.  தினம் தினம் கத்தி மேல் நடப்பது போல இருக்கும். பத்து ஆண்டு அனுபவம் இருந்தாலும் ஆறுமாத பயிற்சிக்குப் பின்தான் ஆலையை 8 மணிநேரம் நிர்வகிக்கும் அந்த பணியைக் கையாள முடியும்.
இம்மூவரின் வேலை என்பது நிர்வாகத்தின் திட்டப்படி ஒப்பந்த தொழிலாளர்களை வேலைவாங்குவது.
 குஜராத்தி நல்ல திறமையானவன் ஆனால் பணிந்து நடக்கத் தெரியாதவன். நிர்வாகம் தொழிலாளர் இண்டையும் சமமாக பார்ப்பவன். பீகாரி நிர்வாகத்தை கடவுளாகவும் தொழிலாளரை புழுக்களாகவும் எண்ணுபவன். தமிழன் இதற்கு நேர்மாறு. தொழிலாளரை மேலாகவும் நிர்வாகத்தை கீழாகவும் எண்ணுபவன். இதனால் தமிழன் தலைமையில் அத்தியாவசிய வேலைகள் மட்டும் நடக்கும். குஜராத்தி அத்தியாவசிய வேலைகளை முடித்து மேற்கொண்டு சில பணிகளை முடித்துவிடுவான். பீகாரி பேய் போல வேலை வாங்குவான். நாய் போல தானும் வேலை செய்வான். இப்படி ஒரு கொடூர கொத்தடிமையைத் தான் நிர்வாகம் தேடிக்கொண்டு இருந்தது. அதனால் அவனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டது. 
 குஜராத்தியன் தமிழனை எச்சரித்தான். சுருக்கமாகச் சொன்னால் 'இங்கே தொழிலாளியை எவ்வளவு வேலை வாங்குகிறோம்' என்பதை விட 'எவ்வளவு கசக்கி பிழிகிறோம்' என்பதுதான் முக்கியம். அந்த தமிழனுக்கு வந்த முதல்நாளே இது புரிந்துவிட்டது. இருந்தும் அவன் தொழிலாளர்களைக் கனிவுடன் நடத்தினான். தான் வழங்கும் பணிச்சுமையே மிக அதிகம் என்பது அவன் கருத்து. தினமும் செத்துப் பிழைக்கும் தொழிலாளிகள் அவன் பணிநேரத்தில் சற்று மூச்சுவாங்க முடிந்தது. நிர்வாகம் அவன் மேல் தீமழை பொழிய பாட்டாளிகள் பாச மழை பொழிந்தனர். சரிக்கு சரி அமர்ந்து உண்ணும் தமிழனுக்கு வீட்டில் இருந்து உணவு கொண்டுவந்து அளித்தனர். தமிழன் ஒரு வேலையைச் சொல்லக் கூட வேண்டாம் மனதில் நினைத்தால் போதும் அந்த வேலை நடந்துவிடும். சில மாதங்கள் கழித்து பீகாரிக்கு நெருக்கமான ஒரு சொந்தக்கார பையன் அங்கே தொழிலாளியாக வந்தான். பீகாரியைப் போல இவனும் வசதி படைத்தவன்தான். சும்மா கொஞ்ச நாள் சுற்றுலா மாதிரி வேலைக்கு வந்தான். இவன் பீகாரியின் கையாள் என்று அனைவரும் சொன்னார்கள். அவன் தமிழன் தலைமையின் கீழும் வேலை செய்தான். தமிழன் எந்த பாகுபாடும் காட்டாமல் அவனுக்கு தொழில் கற்றுக் கொடுத்தான். ஒருநாள் அந்த பீகாரியின் கையாள் தான் வேலையை விட்டுவிட்டு ஊருக்கே போகவுள்ளதாக தமிழனிடம் கூறினான். இப்படியாக ஒரு ஆண்டு கழிந்தது. தன் மூன்று ஆண்டு உழைப்பினாலும் தந்திரத்தாலும் குஜராத்திக்கும் தமிழனுக்கும் பல ஆப்புகள் வைத்து நிர்வாகத்தின் பார்வையில் பீகாரி உயர்ந்து நின்றான். நிர்வாகம் தமிழனைக் கண்டாலே எரிச்சல் அடைந்தது. குஜராத்தி தமிழனிடம் பீகாரிக்கு பதவி உயர்வு கிடைக்கப் போவதாகவும் அவன் மேலே வந்துவிட்டால் நம்மையும் தொழிலாளர்களையும் காப்பாற்ற யாருமில்லை என்றும் கூறினான். தமிழன் சிரித்தான். "இது ஒன்றும் சினிமா இல்லை! நீ ஒன்றும் ஹீரோ இல்லை! கடைசி நேரத்தில் ஜெயித்துவிட்டு சிரிப்பதற்கு" என்று குஜராத்தி கோபப்பட்டான். குஜராத்தி சொன்னபடி நடந்தது. பீகாரி பதவி உயர்ந்தான். தமிழன் சம்பளம் அதிகரிக்கப் படாத காரணத்தால் ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு கிளம்பினான். இனம், மதம், ஜாதி, பிறப்பிடம் என பல்வேறு பின்னணியில் இருந்து வந்த அந்த தொழிலாளர்கள் அன்று கலங்கி நின்றனர். அந்த தமிழனை விரும்பாத தொழிலாளிகள் கூட அப்போது அவனுக்காக வருந்தினர். வழியனுப்ப வந்த குஜராத்தியன் தன் சொற்படி நடக்காமைக்கு தமிழனைக் கடிந்து கொண்டாலும் கனத்த இதயத்துடன் விடை கொடுத்தான். அப்போது தமிழன் "கூடிய விரைவில் நீ எனக்கு அழைப்பாய். நான் திரும்ப வருவேன்" என்றான்.
 வேறு வேலை தேடிப் பார்த்து கிடைக்கா விட்டால் இதே சம்பளத்திற்கு நிர்வாகத்திடம் கெஞ்சி மீண்டும் வருவானாக இருக்கும் என்று குசராத்தி நினைத்துக் கொண்டான்.
 ஒரு வாரம் கழிந்தது. தரமான பளபளப்பான மேலாளர் உடையில் பீகாரி ரத்த காட்டேரி போல வலம் வந்தான். வெந்நீர் போன்று இருக்கும் தேநீர் கூட இனி கிடையாது என்று உத்தரவிட்டான். திறமை, பணம், அதிகாரம் என எல்லாம் வாய்த்த அவனை யாரும் எதிர்க்கத் துணியவில்லை. தன் உறவினன் என்றும் பாராமல் தனது கையாளிடமும் கடுமையாக நடந்துகொண்டான். அந்த பையனுக்கு தமிழன் நினைவு வந்தது. தொழிலாளர்கள் பீகாரி மேல் உச்சகட்ட கோபத்தில் இருந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அன்று ஆலையை நிறுத்தி பராமரிப்பு வேலை நடக்கும் நாள். ஆலையின் கழிவுகளை பெரிய குழியில் இருந்து இயந்திரத்தின் மூலம் அள்ளி வண்டியில் ஏற்றி அனுப்பும் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பீகாரியும் அவனது உறவினனும் வாக்குவாதம் செய்யத் தொடங்கினர். தினமும் பலரிடம் வாக்குவாதம் நடத்துவது பீகாரிக்கு வழக்கம். தொழிலாளர்களால் சாக்குபோக்கு சொல்லி சில நிமிடங்கள் வாக்குவாதம் செய்து மேலதிகாரியைக் கடுப்பாக்க முடியுமே தவிர வேறெதுவும் செய்ய முடியாது. அனைவரும் இது வழக்கம்தானே என்று எண்ணி அசட்டையாக இருந்தபோது அந்த பையன் பீகாரியை கன்னத்தில் அறைந்து வயிற்றில் மிதித்து அந்த கழிவுக் குழிக்குள் தள்ளிவிட்டான். இடுப்பளவு கழிவுநீரில் எண்ணெய், கிரீஸ், தூசி, மண் என முழுவதுமாக நனைந்து எழுந்து நின்ற பீகாரியைப் பார்த்து சுற்றி நின்ற அனைவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிரித்தனர். அவனைத் தூக்கவோ மாற்று உடை கொடுக்கவோ யாரும் முன்வரவில்லை. கடைசியில் மேலே வந்து துணிக்கு போடும் சோப்பு கடன் வாங்கி கழிவறையில் அரையும் குறையுமாகக் குளித்து பணிப் பேருந்தில் 'வேலை செய்யும் நேரத்தில் உடுத்தும்' அழுக்கான தொழிலாளர் சீருடையில் கிரீஸ் துர்நாற்றத்துடன் வீடு திரும்பிய பீகாரி வாழ்நாள் முழுவதும் அந்த நாளை மறந்திருக்க மாட்டான். அவனது உறவினன் நிர்வாகத்திடம் "போங்கடா நீங்களும் உங்க வேலையும்" என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டான். மறுநாள் பீகாரி சோர்ந்த நிலையில் வந்தான். தொழிலாளர்கள் கைகொட்டி சிரித்தனர். அவன் மனைவி, அவன் சொந்த பந்தம், சொந்த ஊர் என எல்லாருக்கும் இந்த விடயம் தெரிந்துவிட்டது. நிர்வாகம் எவ்வளவோ தேற்றியும் அவன் ராஜினாமா செய்துவிட்டு தொங்கிய தலையுடன் வெளியேறினான். நிர்வாகத்தால் தகுதியான ஆளில்லாமல் சமாளிக்க முடியாது. தமிழனை திரும்ப அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனாலும் இறங்கிப் போய் பேச மனமில்லாமல் குஜராத்தியனை வைத்து அழைத்தனர். குஜராத்தி தமிழனை அழைத்தான். அவன் பேசிவிட்டு நிர்வாகத்தை இணைத்து பேச்சுவார்த்தை நடந்தது. மூன்று நிமிட அலைபேசிப் பேச்சு முடிந்தது.  மறுநாள் பதவி உயர்வுடன் சம்பள அதிகரிப்புடன் பளபளக்கும் மேலாளர் உடையில் வந்து இருக்கையில் அமர்ந்தான் தமிழன். பீகாரி மூன்று ஆண்டுகள் முக்கி முக்கி செத்து செத்து அடைந்த அனைத்தையும் மூன்று நிமிடங்களில் அடைந்தான் அந்த தமிழன். தொழிலாளர்கள் மகிழ்ந்தனர். மேலாளர்களுக்கு மட்டுமே செல்லும் தேநீர் வண்டி அன்று முதல் தொழிலாளர் களுக்காக நின்றது. 

Monday 4 December 2023

கோயிலுக்கு இஸ்லாமியர் தானம்

கோயிலுக்கு இஸ்லாமியர் தானம் 

 நெல்லையப்பர் கோயில் உள்ள கிபி 1751 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சொத்து பட்டயம் ஒன்றில் லாலுகான்சவான் சாயுபு என்பவர் நெல்லை பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் நித்ய பூஜைக்கு தானம் வழங்கிய செய்தி குறிக்கப்பட்டுள்ளது.
 அதுபோல் குற்றாலநாதர் சுவாமி கோயிலுக்கு கிபி 1848 ஆம் ஆண்டு நித்திய பூஜை மற்றும் நெல்லை காந்தியம்மன் சிறுகால பூஜைக்கான கட்டளைக்கு அசாதுவால சாயுவும் இசுமாலிராவுத்தரும் வேறு சிலரும் சேர்ந்து தான பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

செய்தி: தினகரன் (04.12.2023)
தலைப்பு: குற்றாலம் கோயிலில் செப்பு பட்டயங்கள் கண்டுபிடிப்பு

 ஏற்கனவே தென்காசியை சேர்ந்த அகமதுபேட்டை (ஆமது பேட்டை) முஸ்லீம்கள் குற்றால நாதர் நித்திய பூசைக்கு மகமைப் பணம் கொடுக்க (கி.பி. 1788ல்) இணங்கி எழுதிய பட்டயம் ஒன்று பற்றி ஏற்கனவே பதிவிட்டுந்தேன்.

Monday 27 November 2023

துவாரகா குழப்பம்

துவாரகா குழப்பம்

 இத்தனை ஆண்டுகள் கழித்து ஏன் துவாரகா வரவேண்டும்?
ஏனென்றால் இப்போதுதான் போலி முகம் மற்றும் முக அசைவுகள் செய்யும் தொழில்நுட்பம் வந்துள்ளது.
 ஆனால் அதையும் சரியாகச் செய்யவில்லை.
வேறொரு முகத்தில் கண், மூக்கு, வாய் ஒட்டப்பட்டது போல உள்ளது.
அவரது பேச்சை முழுமையாகக் கேட்டேன்!
தலைவர் பேசுவது போலவே பேசுகிறார்.
மிகவும் பொதுப்படையாக பேசியுள்ளார்.
 எந்த நபரையும் இயக்கத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை!
 சமகால அரசியல் சூழல் அல்லது அடுத்த கட்ட நகர்வு என எதுவும் பேசவில்லை!
 இனப் படுகொலை பற்றி கூட விவரித்து பேசவில்லை!
 உலக நாடுகள் இலங்கைக்கு உதவின ஆனால் போர் முடிந்த பிறகு இலங்கை அரசும் உலக நாடுகளும் வாக்களித்தபடி நடக்கவில்லை ஈழத் தமிழர் பிரச்சனைகள் தீரவில்லை என்று கூறியுள்ளார்.
 ஈழத் தமிழர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் வலியுறுத்தி யுள்ளார்.
 பொருளாதாரம் உள்ளவர்களும் புலம்பெயர் தமிழர்களும் வறுமையில் தவிக்கும் ஈழ மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.
 தமிழகத்திற்கு நன்றி கூறியுள்ளார்!
சிங்களவருக்கு ஈழத் தமிழர்கள் எப்போதும் எதிரியில்லை என்றும் ஈழப் போராட்டத்தை புரிந்துகொள்ளுமாறும் கூறியுள்ளார்.
 தலைவர் இருப்பது பற்றி எதுவும் கூறவில்லை! 
 
 குழப்பம் நீடிக்கிறது!

Sunday 19 November 2023

கிரிக்கெட் கார்ப்பரேட்

கிரிக்கெட் கார்ப்பரேட்

 இந்த உலகக் கோப்பை போன்ற பிரபல கிரிக்கெட் போட்டித் தொடர்களை நடத்துவது international cricket council அதாவது ICC.
 அன்று உலக மக்களைச் சுரண்டி பணம் கொழுத்துப் போன ஆங்கிலேயர்கள் அதை எங்கே செலவு செய்வது என்று தெரியாமல் திரிந்தபோது ஒரு வரப் பிரசாதமாக வந்தது கிரிக்கெட்.
 கிரிக்கெட் என்பது வெள்ளைக்காரர்கள் அரை அம்மணமாக கடற்கரையில் சூரியக் குளியல் போடும்போது பொழுதுபோக்குக்காக விளையாடுவது.
 அப்படி கி.பி. 1900 களில் இல் ஆஸ்திரேலிய கடற்கரையில் அம்மணமாக ஆடிக்கொண்டிருந்தான் ஒரு ஆங்கிலேய வெள்ளைக்காரன். 
 இவனது பொழுதுபோக்கு அவ்வப்போது டூர் போய் இங்கிலாந்திலும் தென்னாப்பிரிக்காவிலும் இருந்த இவனது அங்காளி பங்காளி ஆங்கிலேய வெள்ளைக் காரர்களுடன்  கடற்கரையில் குத்தாட்டம் போடுவது.
 அப்போது இவர்களுக்கு ஒரு யோசனை வந்தது. கி.பி.1900 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் இல் கிரிக்கெட் விளையாடப்பட்டது. இதில் பிரெஞ்சுப் பேரரசும் ஆங்கிலப் பேரரசும் மோதின. ஒரே ஒரு மேட்ச் தான் நடந்தது. இதெல்லாம் ஒரு விளையாட்டா என்று காறித் துப்பி வெளியே அனுப்பிவிட்டது ஒலிம்பிக் நிர்வாகம். எனவே இவர்கள் ஒலிம்பிக் போல நடத்த ஆசைப் பட்டனர்.
 இந்த யோசனையில் இம்மூன்று நண்பர் குழுவும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று இடங்களில் கிளப்களை ஆரம்பித்தனர்.
  இந்த மூன்று கிரிக்கெட் கிளப்களும் 1907 இல் ஜாலியாக டூர் அடித்து இணைந்து ஆட்டம் போட்டு அப்படி உருவானது தான் இந்த ICC.
 இப்படி ஆங்கிலேயர் ஆண்ட 6 நாடுகளில் பணம் கொழுத்த வெள்ளைக்கார கூட்டம் ஒவ்வொரு கிளப்களைத் தொடங்கி இதில் இணைந்தனர்.
 இரவில் கடற்கரையில் ஆண்களும் பெண்களுமாக கூடி விடியவிடிய உல்லாசலாக இருந்துவிட்டு பகலில் சூரியக் குளியல் எடுக்கும்போது சும்மா பந்தைத் தட்டி விளையாடுவதுதான் கிரிக்கெட்.
வெயில் நன்றாக உடலில் படும் மேல்வலியாமல் இருக்கும். பெரிதாக ரூல்ஸ் கூட கிடையாது.
கி.பி.1721 இல் இந்தியாவில் முதல் கிரிக்கெட் போட்டி குஜராத் கடற்கரை (கம்பாத்) இல் ஆங்கிலேயருக்கு இடையே நடந்தது.
 காலப் போக்கில் ஆங்கிலேய அடிவருடிகளான ஜமீன்தார்களும் வியாபாரிகளும் இதில் இணைந்தனர். பந்து பொறுக்கிப் போட்டு கடைசி பேட்ஸ்மேனாக ஒப்புக்கு சப்பானியாக ஆகி முதல் இந்தியர் (சி.கே.நாயுடு) கேப்டன் பதவிக்கு வரவே 1932 ஆம் ஆண்டு ஆகிவிட்டது. 
 ஆங்கிலப் பேரரசு வீழ்ந்த பிறகும் அது ஆண்ட நாடுகளில் இந்த கிரிக்கெட் கும்மாள கூட்டணி தொடர்ந்தது. ஆனால் இந்தியாவில் இதற்கு எதிர்ப்பு உருவாகி ஆரோக்கியமான விளையாட்டான ஹாக்கி வளர்ச்சி பெற்றது.
 இதை முறியடிக்க 1975 இல் இவர்கள் உலகக் கோப்பை எனும் தொடரை ஆரம்பித்தனர்.
 இதுவும் இங்கிலாந்தில் தான் நடந்தது.
 இதில் ஆங்கிலேயர் மற்றும் அவர்கள் அடக்கியாண்ட 8 நாடுகள் (Australia, England, India, New Zealand, Pakistan , the West Indies, Sri Lanka and East Africa ) கலந்துகொண்டன.
 (ஆனால் பாருங்கள் 2019 இல் தான் இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்கிறது! அதுவும் மிகவும் கடினப்பட்டு மயிரிழையில்! இது செட்டிங் இல்லை என்று நம்ப வேண்டுமாம்!)
 இன்றும் கிரிக்கெட் என்பது 3 கிளப் களின் பண விளையாட்டு.
 இங்கிலாந்தின் ECB, ஆஸ்திரேலியாவின் CA, இந்தியாவின் BCCI.
12 நிரந்தர உறுப்பினர்கள் 90 க்கும் மேற்பட்ட தற்காலிக உறுப்பினர்கள் இருந்தாலும் எல்லாரும் ஒப்புக்கு சப்பானிதான். இந்த 3 லும் ஏறத்தாழ முக்கால்வாசி வருமானம் bcci மூலம் வருகிறது. ஆனால் bcci க்கு கால்வாசி நிதிதான் ஒதுக்கப்படுகிறது.
 இது தமிழகத்தை மத்திய அரசு சுரண்டும் அதே மாடல்! 

 2014 இல்  ICC இன் மொத்த வருமானம் 250 கோடி டாலர். இதில் bcci இன் பங்கு 57 கோடி டாலர் அதாவது 22.8%. 
 சில ஆண்டுகளுக்கு முன் பிறருக்கும் அதிக பங்கிட்டு bcci க்கு கிடைப்பதை 11% ஆக குறைத்தனர். ஆனால் bcci விடவில்லை. அது மட்டுமின்றி இந்திய அரசின் முழு ஆதரவுடன் புது பாலிசி கொண்டு வரப்பட்டு இந்த ஆண்டு 40% கிரிக்கெட் வருமானம் bcci வசம் வந்துவிடும்.
  இதன் மூலம் 2024-2027 இல் bcci ஆண்டுக்கு 60 கோடி டாலர் சம்பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதாவது ஆண்டுக்கு ஏறத்தாழ 5000 கோடி ரூபாய்.

முன்பு 23% தற்போது 40% என்பது icc தனது பணத்தில் bcci க்கு கொடுப்பது.
உண்மையில் icc க்கு bcci சம்பாதித்து கொடுப்பது ஏறத்தாழ 70%.
 ஆம்! கிரிக்கெட்டில் இந்தியர்கள் கொட்டும் பணம் இங்கிலாந்துக்கு சென்று அதில் 3 இல் 1 பங்குதான் 2023 வரை திரும்பி வந்துள்ளது.
 இனிதான் அது 2 ல் 1 பங்கு ஆகவுள்ளது.
(மீதி பணம் பிற நாடுகளில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பயன்படுத்தப் படுகிறதாம்).
 அதாவது இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் எந்த பெரிய பங்களிப்பும் செய்யாமல் நல்ல லாபம் பார்க்கின்றனர்.
 கிரிக்கெட் பிரபலமாகாத நாடுகளில் இந்தியர் பணத்தில் அது விளையாடப்படும்.
 ஆக இந்த சூதாட்டத்தில் முழுக்க நஷ்டம் இந்திய ரசிகர்களுக்கு மட்டுமே!

 2007 இல் 16, 2011 இல் 14, தற்போது 10 நாடுகளைச் சேர்ந்த அணிகள் மட்டுமே ODI உலக கோப்பை விளையாடி உள்ளன. 
 உலக வல்லரசுகள் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக அல்ல பொழுதுபோக்காக கூட மதிப்பதில்லை.
 இதை ஊக்குவிப்பதும் ஒலிம்பிக் அளவு எண்ணுவதும் முட்டாள்த்தனம்.
 
 2028 ஒலிம்பிக் இல் கிரிக்கெட் சேர்க்கப்படும் என்று கூறுகிறார்கள்.  இது ஒவ்வொரு முறையும் கூறப்படுவதுதான்.
  
தகவல்களுக்கு நன்றி: wikipedia & Dhruv Rathee

 

 

 

Sunday 12 November 2023

தான்சானியா தந்த பாடம்

 தான்சானியா தந்த பாடம்

 zanzibar புரட்சி பற்றி தமக்கு அதிகம் தெரியாது. கி.பி.1698 இல் ஓமன் நாட்டு அரேபியர் தெற்கே கடலில் பயணித்து ஆப்பிரிக்கா கண்டத்தை ஒட்டி சில தீவுகளில் குடியேறி தமது ஆளுமையை நிறுவினர். 
 இவர்களது அரசாட்சி ஆப்பிரிக்க நிலத்திற்கு உள்ளேயும் பரவியது. சில தலைமுறைகள் கழித்து கி.பி. 1856 இல் வாரிசுரிமைப் போரில் ஓமன் தனியரசாகவும் அதன் ஆப்பிரிக்க காலணி தனியரசாகவும் ஆனது. 
 இந்த அரேபிய வந்தேறிகள் ஐரோப்பியர் ஏகாதிபத்திய காலத்தில் அவர்களுக்கு பணிந்து அரசு நடத்தினர். ஐரோப்பிய காலனிய ஆதிக்கம் முடிவுக்கு வந்தபோது தமது விசுவாசிகளான அவர்களிடமே  அந்த தீவுகளின் அரசாட்சியை கொடுத்துச் சென்றனர்.
 இதை மண்ணின் மைந்தர்களான ஆப்பிரிக்கர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
 1963 இல் அரேபியர் மக்களாட்சி அறிவித்து தேர்தல் நடத்தி அதிலும் தாங்களே வெற்றிபெற்றனர்.
 ஆப்பிரிக்கர்கள் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. மொத்தமாகச் சேர்ந்து அரேபியர்களை அடித்து துரத்தினர்.
 இப்படியாக 250 ஆண்டுகள் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்திய அரேபியர்களிடம் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர்.
 தீவுகள் தான்சானியாவுடன் இணைந்தன.
 தாய்நிலமான ஓமனுக்கு ஓடியது அரச குடும்பம். 
அங்கே அரசர் தவிர பிறருக்கு அடைக்கலம் கிடைத்தது. அந்த வந்தேறி அரபு அரசர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்தார். 

"அடிமை முறையை சட்டமியற்றி முடிவுகட்டிய நல்லவர்கள்" என்றோ "30 தலைமுறைகளாக இங்கேயே வாழ்கிறார்கள் அவர்கள் நம்மவர்" என்றோ "ஜனநாயக முறைப்படி அரசைக்  கைப்பற்றினார்கள்" என்றோ தான்சானியர் நியாயம் பேசிக்கொண்டு இருக்கவில்லை.
 
தகவலுக்கு நன்றி: கார்த்திகேயன் மதுரை

Friday 20 October 2023

எல்லாமே திட்டமிட்ட நாடகங்கள்

எல்லாமே திட்டமிட்ட நாடகங்கள் 

 அரசியல் ஆன்மீகம் சினிமா எதுவானாலும் பித்தலாட்ட முறை ஒன்றுதான்!
 பணம் கொடுத்து இவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட "தீவிர பற்றாளர்கள்" மற்றும் அவர்கள் செய்கிற கிறுக்குத்தனங்கள் இவர்களுக்கு விளம்பரம்!
 கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தருவதே இவர்களுக்கு வருமானம்!
 வெளித் தோற்றமோ ஏதோ பெருவாரியான மக்கள் கண்மூடித் தனமாக இவர்களை பின்பற்றுவதாக காட்டப்படுகிறது! 
உண்மையோ வேறு! 
 பணம் கொடுக்கப்பட்டு "பேய் விரட்டும் பாதிரியார் வீடியோக்கள்" போன்ற திட்டமிட்ட நாடகங்கள் நடத்தப் படுகின்றன.
 இதில் பங்கேற்கும் ரசிகர்கள் / பக்தர்கள் / தொண்டர்கள் அனைவருமே போலிகள்!
 இதைப் பார்த்து உண்மையிலேயே அப்படி மாறுபவர்கள் மிகவும் குறைவு!
 சிலரைத் தவிர பெரும்பான்மையான மக்கள் இவர்களை வெறுக்கின்றனர்.
நம்மை சுற்றி இருப்பவர்களில் அப்படி எத்தனை பேர் என்று கணக்குப் போடுங்கள் உண்மை புரியும்!
 உங்களுக்குத் தெரிந்தவர்களில் எத்தனை பேர் தீவிர விஜய் ரசிகர்? தீவிர பங்காரு பக்தர்? தீவிர திமுக தொண்டர்? என்று யோசியுங்கள். மிகச் சிலரே இருப்பார்கள்.
 அத்தனை பெரிய மார்க்கெட் இல்லாத இவர்களால் இத்தனை பெரிய வருமானத்தை கொடுக்க முடியுமா?! 
 ஒரு நடிகர் காட்டும் வசூல், அரசியல் கட்சிகள் காட்டும் தேர்தல் முடிவுகள் மற்றும் சாமியார்கள் காட்டும் அறக்கட்டளை சொத்து எல்லாமே மக்களின் மூலமாக வந்ததாக காட்டப்படுகிறது. 
 உண்மை அது இல்லை!
எல்லாமே கருப்பு பணம்!
 நாமோ மக்களை குறைசொல்லிக் கொண்டு இருக்கிறோம்! 
 மக்கள் நல்ல சினிமாவை மட்டுமே விரும்புகின்றனர்.
நல்ல அரசியல்வாதிக்கு தான் ஓட்டு போடுகின்றனர்.
சாமியார்களை நம்புவதும் இல்லை.
 இங்கே கண்ணால் காண்பதெல்லாம் பொய்! 
எல்லாமே திட்டமிட்ட நாடகங்கள் !


 
 

Friday 6 October 2023

ஓய்வெடுங்கள் ஒரிசா பாலு ஐயா

ஓய்வெடுங்கள் ஒரிசா பாலு ஐயா!

 வரலாறு ஒரு சக்கரம் போன்றது. தமிழர் வரலாறு ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை (இமயம் வரை) ஆதிக்கம் செலுத்துவதாக சுழலும் (அப்படியே ஜெர்மனி போல).
 கரிகாலன் இமயத்தைக் குடைந்த ஆயிரம் ஆண்டு கழித்து ராஜேந்திரன் இமயம் வரை ஆண்டான். அதிலிருந்து ஆயிரம் ஆண்டு ஆகி தற்காலம் தமிழர்கள் அந்த எழுச்சிக்கு தயாராக இருந்தோம்.

 இதற்கு ஆரம்ப அடிப்படை  தேவையான கருத்தியல் சிந்தனைகள் தோன்றியிருந்தன.
 தனிநாடு, அகன்ற தமிழர்நாடு, குமரிக் கண்டம் போன்ற நிலம் சார்ந்த சிந்தனையும் நம்மிடம் வந்துவிட்டது. 

மாநில அதிகாரம், இந்திய அரசியலில் ஆதிக்கம், ஈழம், புலிகள், வீரப்பன், ஆயுதக் குழுக்கள், மும்பை முதல் மலேசியா வரை நிழலுலக ஆதிக்கம், உலகளாவிய குடியேற்றம், பொருளாதார பெருக்கம்,  மொழி வளர்ச்சி என நாம் 1980 - 2000 காலவாக்கில் ஏறத்தாழ பாதி வெற்றி அடைந்திருந்தோம்.

 நியாயப்படி நாம்  இந்நேரம் ஈழம் அடைந்து அவ்வழியே தமிழகத்தை ஆயுதப் புரட்சி மூலம் விடுதலை செய்து எல்லைகளை விரிவாக்கி சிங்களத்திற்கு பதிலடி கொடுத்து நம் தாய்நிலத்தில் ராணுவ பலத்துடன் தன்னாட்சியுடன் இருந்திருக்க வேண்டும்.
 இதன் விளைவாக தேசிய இனங்கள் எழுச்சி பெற்று அடுத்த கால் நூற்றாண்டில் (சோவியத் போல) இந்தியா உடைந்து தென்னிந்திய இனங்களின் நாடுகள் கூட்டாட்சி உருவாகி அதன் ஆதிக்கம் இமயம் வரை பாகிஸ்தான் வரை பரவியிருக்க வேண்டும் (ஐரோப்பிய யூனியன், நேட்டோ போல).

 ஆனால் இது எல்லாமே மண் கோட்டை போல இடிந்துவிழுந்தது. காரணம் வடுக சதி, அதன் நீட்சியான வந்தேறிகள், அதன் மையமான கருணாநிதி குடும்பம்.
 கருணாநிதி என்கிற கொடூர நரி வரலாற்று சுழற்சியையே நிறுத்தி விட்டான் என்றால் அது மிகையில்லை. 
 தமிழக முதலமைச்சர் பதவியை கைப்பற்றாமல் விட்டதன் விளைவு இன்று எல்லாவற்றையும் இழந்து ஈழம் அழிந்து, மக்கட்தொகை குறைந்து, வாழ வக்கில்லாமல், தண்ணீருக்கு பிச்சை எடுத்து உதை வாங்கும் நிலையில் நிற்கிறோம்.

 ஆயுதம் ஏந்திய அத்தனை பேரும் கொல்லப்பட்டு தமிழுக்காக தமிழருக்காக உழைத்தவர்கள் நாதியில்லாமல் நல்ல சாவு கூட வாய்க்காமல் அழிந்து போய்விட்டார்கள்.

 கால சுழற்சி படி நாம் வல்லரசாக இருந்து ஒரிசா பாலு ஐயாவை கடலில் இறக்கி குமரிக் கண்டத்தை மீட்டு உலக கடற்கரை நகரங்கள் நமதே என்று நிறுவி இருந்திருக்க வேண்டும்.

 எதுவுமே நடக்காமல் போய்விட்டது!
இன்று தமிழினம் மிகவும் பரிதாப நிலையில் தற்கொலை செய்யப்போகும் ஒருவன் போல சோர்ந்து நிற்கிறது.

கடல் ஆய்வுகள் மட்டுமல்லாது உலகத் தமிழரை ஒருங்கிணைக்க தன் சக்திக்கு மீறி உழைத்த பாலு ஐயா போய்விட்டார்!

இனி நாம் என்ன செய்யப் போகிறோம்?!

  

Saturday 23 September 2023

கன்னட பொதுமக்களே

கன்னட பொதுமக்களே!
 ஒரு குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது அதைத் தாயிடமிருந்து பிடுங்குவது போன்ற செயல் கர்நாடகாவில் நடக்கிறது!
 காவிரி தாய் என்றால் நாம் இருவருமே பிள்ளைகள், நம் இருவருக்கும் பசி தீர்ந்துகொள்ள சம உரிமை உள்ளது!
 இந்த உரிமையில்  நம்மில் யார் மூத்தவன் இளையவன் என்கிற பேச்சுக்கே இடமில்லை. 
 ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவிடாமல் தடுப்பது இனப்படுகொலை ஆகும்! 
 இந்த படுபாதகத்தைச் செய்யாதீர்கள்! 
அரசியல்வாதிகள் மீது பழியை போட்டுவிட்டு நீங்கள் காரணமில்லை என்பது போல நடந்துகொள்ளாதீர்கள்!
 கர்நாடகாவில்  உபரியாகத் தண்ணீரைத் தேக்கி அதை பன்னாட்டு நிறுவனங்கள் உறிஞ்சிக் கொள்கின்றன.
 தண்ணீர் வராத தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை நடக்கிறது.
 இந்த அரசியல் சதியைப் புரிந்துகொள்ளுங்கள்!
"ஆறு தோன்றும் இடம் எங்களுடையது அதனால் ஆறு எங்களுக்கு சொந்தம்" என்பது உலகில் யாருமே சொல்லாத கூற்று!
இதை அறிவுள்ள எவருமே ஏற்க மாட்டார்கள்!
 நியாயமான அளவு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மனசாட்சியுள்ள கன்னடர்கள் குறைந்த பட்சம் இணையத்திலாவது குரல் எழுப்புங்கள்!
 காவிரி விடயத்தில் கன்னட அமைப்புகள் நடத்தும் முழு அடைப்புக்கும் போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுக்காதீர்கள்!
 கர்நாடகத்தின் இந்த மனிதத்தன்மை அற்ற அரசியல் தொடர்ந்தால் ஒவ்வொரு கன்னடரும் கொலைவெறி பிடித்தவர் என்கிற பொது பிம்பத்தை உருவாக்கும்! 
 கடைசி கட்டத்திற்கு வந்துவிட்ட காவிரிப் பிரச்சனை விரைவில் இனமோதலில் முடியவுள்ளது!
அதனால் நமக்கு லாபம் இல்லை! நஷ்டம் மட்டுமே!
 நம்மை மோதவிட்டு லாபம் பார்ப்பவர்கள் பணக்காரர்களும் அரசியல்வாதிகளும்!
 கன்னடர் தமிழர் கலவரம் வெடித்து இரு தரப்பிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு பல நூறு உயிர்கள் போனபிறகு தவறு உணர்ந்து கண்ணீர் விடுவதை விட இப்போதே சமாதானம் செய்துகொள்வது சிறந்தது!
 "மற்ற விடயத்தில் கன்னடர்களாகிய நாங்கள் நல்லவர்கள்தான் ஆனால் காவிரியை மட்டும் கொடுக்கமாட்டோம்" என்பது ஒரு ஒருவனுக்கு விருந்து வைத்துவிட்டு கழுத்தை நெறித்துக்கொண்டு நிற்பது போன்றது!
  நாங்கள் பிச்சை கேட்கவில்லை! 
எங்கள் உரிமையைத் தான் கேட்கிறோம்! 
 மனசாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள்! 
 
 

Tuesday 19 September 2023

இனப்படுகொலை மற்றும் செம்மொழி மாநாடு

இனப்படுகொலை மற்றும் செம்மொழி மாநாடு 

 2010 இல் கருணாநிதி இனப்படுகொலை பழியிலிருந்து தப்பிக்க செம்மொழி மாநாடு நடத்தினார். 
 ஆனால் தொல்காப்பியம் தமிழை செம்மொழி (அதாவது செந்தமிழ்) என்று குறித்துள்ளது.
 தமிழகம் வந்த ஐரோப்பிய அறிஞர்களும் அவ்வாறு குறித்துள்ளனர்.

   'செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு' என்றும் 'இயற்சொல் தாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு' என்றும் தொல்காப்பிய காலத்திலேயே குறிக்கப்பட்டுள்ளது.

 அதாவது தமிழ் என்பது (பேச்சு, எழுத்து என அனைத்துக்கும்) பொதுவான சொல். செந்தமிழ் என்பது இலக்கணத்தோடு முறையாக எழுதப்படுவது (அதாவது standard ஆனது). பேச்சு தமிழ் இதிலிருந்து மாறுபடும் (இன்றும் கூட பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் வேறுபாடு இருப்பது போல).

 இதேபோல பதினெட்டாம் நூற்றாண்டிலேயே கால்டுவெல் போன்ற மேலைநாட்டினர் தமிழின் செம்மையையும் பழமையையும் பற்றி  குறித்துள்ளனர்.
  முக்கிய சான்று கி.பி.1880 களில் வெளிவந்த Johnson's new universal cyclopedia கலைக் களஞ்சியத்தில் "classical tamil differs from collquial tamil" என்று கூறப்பட்டுள்ளது.

 ஆக கருணாநிதி தான் தமிழை செம்மொழி ஆக்கினார் என்பது பொய்ப் பிரச்சாரம்.

 ஜப்பானிய தமிழ் ஆய்வாளரான நெபுரு கரோஷிமா அவர்கள் செம்மொழி மாநாடு தகுதி வாய்ந்த அறிஞர்கள் இல்லாமல் அரசியல் காரணங்களுக்காக அவசர அவசரமாக நடத்தப்பட்டதாக கூறியிருக்கிறார்.

 வந்தேறிகள் தமிழ் இனத்தை வீழ்த்த தமிழ் மொழியை பயன்படுத்துகின்றனர்.
 தமிழர்கள் இன உணர்வு கொள்ளாமல் மொழி உணர்வு கொண்டு மொழியை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துமாறு வந்தேறிகள் தொடர்ந்து நம்மை மடையமாற்றிக் கொண்டு வருகின்றனர்.

(மேற்கண்ட தகவல்களுக்கு நன்றி: தென்காசி சுப்பிரமணியன்)

    2004 இல் ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருக்கும்போதுதான் தமிழை  செம்மொழி என்று இந்திய அரசு அங்கீகரித்தது.
 2008 இல் தெலுங்கு மற்றும் கன்னடம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. அதற்கு கருணாநிதி முக்கிய காரணம்.
 2009 இல் ஈழம் அழிந்து இனப் படுகொலை நடந்தபோது இந்திய அரசை கவிழ்க்கும் வலு இருந்தும் கருணாநிதி அதைச் செய்யவில்லை.
 கருணாநிதி தெலுங்கர் என்கிற உண்மையும் அப்போது வெளிவந்தது. இந்த விமர்சனத்தில் இருந்து தப்பவே அவர் 2010 இல் செம்மொழி மாநாடு நடத்தினார்.
 ஆனால் தமிழர்கள் ஏமாறவில்லை.

 

Monday 11 September 2023

சிதம்பரம் பிள்ளையும் பள்ளரும்

சிதம்பரம் பிள்ளையும் பள்ளரும்

கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார் அவர்கள் தமது சுயசரிதையில் இரண்டு பள்ளர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

 வ.உ.சி அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த வேதநாயகம் என்கிற பள்ளரை ஆங்கிலேயர் வழக்கு போட்டு அலைக்கழித்தபோது அவருக்காக வாதாடி வழக்குகள் அனைத்தில் இருந்தும் விடுவித்தார்.
 
[முடிமனில் என்னுடை முன்னோர் நாள் முதல்
அடிமை புரியும் அறிவினைக் கொண்ட
வேத நாயகம் எனும் மேம்படு பள்ளனை
ஏத மில்லாமலே எண்ணிலா வழக்கில்
அமிழ்த்தினர் போலிஸார்;
அனைத்தினும் திருப்பினேன்]

(இதில் 'அடிமையாக இருக்கும் அறிவினைக் கொண்டவர்' என்று பொருள் கொண்டால் அடுத்த வரியில் 'மேம்படு பள்ளர்' என்பதுடன் பொருந்தாது.
'அடிமை வேலை செய்தாலும் அறிவார்ந்தவர்' என்று பொருள் கொள்க)

 அதேபோல வ.உ.சி அவர்கள் சிவ பக்தியில் சிறந்த 'தேசிகன்' என்ற பள்ளர் குடிச் சிறுவனை தனது வீட்டில் வளர்த்து வந்தார். 
 பார்வையற்ற அச்சிறுவனுக்கு வ.உ.சி ஐயாவின் மனைவி கைகளால் உணவூட்டி பராமரித்துள்ளார்.
 ஆனால் அவரது சுற்றத்தார் அச்சிறுவனை சாதிய ரீதியில் தாழ்த்திப் பேசியுள்ளனர். இதனால் அச்சிறுவன் தன்னை கைவிடுமாறு வேண்டியுள்ளார்.
பிள்ளை அவர்கள் தம் மனைவியிடம் இது பற்றி ஆலோசித்துள்ளார்.

[சிவப் பொருள் உணர்ந்த தேசிகன் ஒருவனென்
தவப் பயனால் இலம் தங்கப் பெற்றேன்.
ஊனக் கண்ணினை ஒழித்தவன் நின்றதால்
தானக் குறையினை தவிர்த்திட ஊட்டினள்
குலத்தில் அன்னோன் குறைந்தவன் என்றென்
தலத்தினில் உள்ளோர் சாற்றினர் குற்றம்
கேட்டதும் அவ்வுரை கிழவோன் தன்னை
ஓட்டிடக் கருதி யான் உரமில்லாமையால்
அவளிடத் துரைத்திட அடுக்களை சென்றேன்]

(இதில் அச்சிறுவனைக் 'கிழவோன்' என்று உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார்)

 அவர் மனைவியோ சாதி ஏற்றத்தாழ்வு கற்பனை தானே அன்றி உண்மை அல்ல என்றும் அதிலும் துறவி போன்ற இச்சிறுவன் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்றும் சுற்றத்தார் பற்றி கவலைப்படாமல் அவனுக்கு தொடர்ந்து பணிவிடை செய்வோம் என்றும் கூறியுள்ளார். 

[எல்லாம் உணர்ந்த என்னுயிர் நாத!
எல்லாம் கடவுளா யிருக்க வேண்டும்
உருவம் முதலிய ஒன்றினும் பேதம்
மருவுதலிலாமை மலை போல் கண்டும்,
கற்பனை யாகக் காணும் குலத்தின்
சொற்பிழை கொளலெனச் சொல்லிய தூய!
துறந்தவர் தமையும் தொடருமோ குலம் இவண்
இறந்த அம் மொழியினை ஏற்றிடா தொழிப்போம்
ஒன்றிடா தமர்த்தி ஊழியம் புரிந்திடின்
பிழையெனார் உலக பேதமை உணர்ந்தோர்]

 'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படத்திலும் இக்காட்சிகள் வரும்.

 ஐயா அவர்களை முழுமையாக அறிந்துகொள்வது நம் கடமை!

Thursday 17 August 2023

தாய்ன் மணிக்கொடி

தாய்ன் மணிக்கொடி 

இவர்தான் நடிகர் அர்ஜுனின் தந்தை எஸ்.பி.சர்ஜா.
 கன்னட திரையுலகில் 20 ஆண்டுகாலம் பிரபலமான நடிகராக இருந்தார்.
 இவரது மகனான அர்ஜுன் (சர்ஜா) தமிழகத்தில் பிரபலமான நடிகராக இருந்தார்.
 எஸ்.பி.சர்ஜா வின் இரண்டு பேரன்களும் கர்நாடக சினிமாவில் நடிகர்களாக உள்ளனர்.

  தமிழ் திரையுலகில் வேற்றினத்தார் ஆதிக்கம் என்பது தமிழ் இன உணர்வை மழுங்கடித்ததில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
 அதில் மிக முக்கியமானவை தெலுங்கர் விஜயகாந்த் மற்றும் கன்னடர் அர்ஜுன் ஆகியோரின் திரைப்படங்கள்.
 
  நம் அருகிலேயே ஈழத் தமிழர் மிகப்பெரிய ஆயுதப் போராட்டம் நடத்தி இலங்கைத் தீவின் 30% நிலப்பரப்பை தமது ராணுவ ஆட்சியின் கீழ் கொண்டுவந்து உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தனர்.
  ஆனால் நாமோ இது எதுவும் தெரியாமல் இந்தியர் என்கிற மாயையில் மூழ்கடிக்கப்பட்டு பாகிஸ்தான் சதிகளிலிருந்து இந்தியாவை காப்பாற்றுவது பற்றி பாடம் படித்துக் கொண்டிருந்தோம்.

 பாகிஸ்தான் தீவிரவாதிகளை  ஒழித்தது போக கேப்டன் பிரபாகரன் மற்றும் ஜெய்ஹிந்த் போன்ற படங்களில் தமிழினக் காவலர் வீரப்பன் படையை அழிப்பது பற்றியும் பாடம் எடுத்துத்தனர்.
 
  கன்னடர்கள் காவிரிக் கலவரத்தில் தமிழர்களைக் கொன்று தமிழ்ப் பெண்களின் தாலிகளை அறுத்தபோது ஜெய்ஹிந்த் படம் எடுத்து நம்மை தாயின் மணிக்கொடி பாட வைத்தவர் நடிகர் அர்ஜுன்.

 இவர் தமிழ்நாட்டு பிரச்சனைக்கு போராட வரமுடியாது என்று வெளிப்படையாக அறிவித்தவர்.
 
 சர்ஜா என்கிற சாதி பட்டத்தை இவர் போட்டுக் கொண்டிருந்தால் அல்லது நாயுடு என்கிற பட்டத்தை விஜயகாந்த் போட்டுக் கொண்டிருந்தால் நமக்கு அவர்கள் வேற்றினத்தார் என்கிற அடையாளம் தெரிந்து இருக்கும்.
 இவர்கள் நம்மைப் போலவே நடித்து நாக்குப்பூச்சி தெரிக்க இந்தியா இந்தியா என்று 20 வருடங்கள் கத்தி ஒரு தலைமுறையையே முட்டாளாக்கி உள்ளனர்.

Wednesday 16 August 2023

திமுக மேடையில் அஜித் தைரியமாக பேசினாரா

திமுக மேடையில் அஜித் தைரியமாக பேசினாரா 

 பலரும் நடிகர் அஜித் கருணாநிதியைப் பார்த்து நடிகர்களை அரசியல்வாதிகள் மிரட்டுவதாகவும் அது தவறு என்றும் தைரியமாகப் பேசியதாக கூறுகிறார்கள்.
 அந்த முழு வீடியோவை அஜித் ரசிகர் ஒருவர் கைபேசியில் எடுத்திருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அதைப் பதிவிட்டு  இருந்தார்.
 அதில் கருணாநிதியை வானத்தில் தூக்கி வைத்து புகழ்ந்து விட்டு நடிகர்களை போராட்டங்களில் கலந்துகொள்ள சிலர் கட்டாயப் படுத்துவதாகவும் அதற்காக நடிகர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறும் கெஞ்சுகிறார்.

 அதைப் பார்த்தால் நடிகர் அஜித் காவிரி பிரச்சனை, ஈழத் தமிழர் போன்ற பிரச்சனைகளுக்கு சினிமாவில் இருக்கும் தமிழ் உணர்வாளர்கள் நடிகர்களை அழைத்து போராட்டம் நடத்துவதைத் தடுக்கும் நோக்கில் பேசியிருப்பது புரிகிறது.
 அவ்வாறு சிலர் தொந்தரவு செய்வதைத் தடுக்குமாறும் உரிய பாதுகாப்பு வழங்குமாறும் கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கிறார் என்றுதான் புரிகிறது.
 இதற்குத்தான் ரஜினி கைதட்டினார்.
 இந்த கேள்வி கருணாநிதியை நோக்கி நேரடியாக எழுப்பப்பட்டதாக தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

 கருணாநிதி சினிமாவுக்கு நிறைய சலுகைகளை வாரி வழங்கி  தமது குடும்பத்தினரின் சினிமா, டிவி, அரசியல் ஆகியவற்றிற்கு திரைப் பிரபலங்களை பயன்படுத்துபவர்.
 ஆனால் அஜித் கேள்வி எழுப்பியது அவரைப் பற்றி அல்ல.

  நடிகர் அஜித்தின் இந்த நிலைப்பாடு அவரது தனிப்பட்ட விருப்பம். 
 போராட்டங்களில் கலந்து கொள்ள முடியாது என்று அவர் பலமுறை கூறியிருக்கிறார்.
 அவரது பெயரால் ரசிகர் மன்றங்கள் இருப்பதையும் கூட அவர் ஆதரிக்கவில்லை.

 அவர் விரும்பாத ஒரு பிம்பத்தை அவர் மீது கட்டமைப்பது தவறு.

வீரப்பனை காட்டிக்கொடுத்த மாவோயிஸ்ட்

வீரப்பனை காட்டிக்கொடுத்த மாவோயிஸ்ட்

 வீரப்பனைப் பிடிப்பதில் தமிழக காவல்துறை மாவோயிஸ்ட் என்று அறியப்படும் நக்சலைட் ஆயுதப் போராளி ஒருவரை அழைத்து வந்து வீரப்பன் குழுவுக்கு  வெடிகுண்டு பயிற்சி அளிப்பதாகக் கூறி ஏமாற்றி மயக்கம் ஏற்படும் குண்டை வெடிக்க வைத்து உயிருடன் பிடித்துள்ளனர்.
 இப்போதும் அந்த நபர் முழுநேர மாவோயிஸ்ட் மக்கள் படை போராளியாக இருக்கிறாராம்!
 அதாவது தேசத் துரோகி என்று இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி தமிழக காவல்துறையுடன் கைகோர்த்து தமிழ்தேசிய சக்தியாகத் திகழ்ந்த வீரப்பனாரை வீழ்த்தியுள்ளார்.

 தகவலுக்கு நன்றி: சிவா என்கிற சிவசுப்பிரமணியன் அவர்களது ராவணா யூட்யூப் சேனல் பேட்டி 
 

Tuesday 15 August 2023

சக் தே இந்தியா

சக் தே இந்தியா

 ஹிந்தியில் மிகச்சிறந்த தேச பக்தி படம் 'சக் தே இந்தியா'.
 அதுவரை முழுக்க விளையாட்டை மையமான வைத்து  எந்த திரைப்படமும் வந்ததில்லை. இந்த படம் வந்த உடனேயே கிரிக்கெட் மாயையை உடைக்க முற்பட்டது.
 இதில் கேட்பாரற்றுக் கிடக்கும் மகளிர் ஹாக்கி அணியை மேம்படுத்தி கோப்பை வெல்ல வைப்பார் அதன் கோச்சாக வரும் ஷாருக் கான்.
மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் முதல் காட்சி இளம் வீராங்கனைகள் வரிசையாக நிற்பார்கள். சாருக் கான் வருவார். ஒவ்வொருவரும் ஒரு அடி முன்வந்து அறிமுகப்படுத்திக் கொள்ளும் காட்சி வரும். ஒவ்வொருவரும் neha from gujarat மாதிரி தனது பெயரையும் தனது மாநிலத்தின் பெயரையும் கூறுவார்கள்.  அப்பொழுது அவர் நீங்கள் எல்லோரும் இந்தியர்கள் எனவே நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறேன் என்று கூறுமாறு பணிப்பார்.
 உடனே அவரவர் தமது பெயரையும் தான் இந்தியாவில் இருந்து வருவதாகவும் முழு வேகத்துடன் கூறுவார்கள். 
பிறகு அந்த வீராங்கனைகள் தத்தமது இனத்துடன் தங்குவதை தடுப்பார்.
அதாவது  இரண்டு தமிழ்நாட்டு வீராங்கனைகள் ஒரே அறையில் தங்கியிருந்தால் அவர்களை பிரித்து வெவ்வேறு மாநில வீராங்கனைகளுடன் அறையில் தங்கும்படி செய்வார்.
 இதனால் வேற்றுமைகள் மறைந்து அவர்கள் இந்தியர் என்ற உணர்வுடன் விளையாடி கோப்பையை வெல்வதாக படம் செல்லும்.

  ஆக தேசிய இனங்களின் தனித்தன்மையை அழித்து புதிதான (போலியான) இந்தியா என்கிற அடையாளத்தின் கீழ் இணைப்பதன் மூலமே இந்த நாடு வெற்றி பெறும் என்பது ஆளும் வர்க்கத்தின் மனநிலை.
 தேசிய இனங்களின் தனித்தன்மையை பேணுவது அவர்கள் மொழியை கலாச்சாரத்தை பாதுகாப்பது இதெல்லாம் தேச பக்திக்கு எதிரான சிந்தனை என்பது தான் இந்தியாவை ஆளும் வர்க்கத்தின் உறுதியான நிலைப்பாடு .

நீங்கள் தமிழன் என்றால் உங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் உரிமைகளையும் இந்தியா காவு கேட்கிறது  என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்!

  அதையெல்லாம் விட்டுக் கொடுக்க நீங்கள் தயாராக இருந்தால் தாராளமாக இந்தியன் என்று கூறிக் கொள்ளலாம்!

தமிழனாகவும் இருப்பேன் இந்தியனாகவும் இருப்பேன் என்பது கடுகளவும் சாத்தியமில்லை.

  இரண்டுமே நேர் எதிரானது!
இரண்டில் ஏதோ ஒன்று தான் உங்கள் அடையாளம்!

ஆனால் விபரம் தெரியும் முன்பே குழந்தைகளை சுதந்திர தினம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மூளைச்சலவை செய்து அவர்களை இந்தியர் என்று நம்ப வைத்து தேசபக்தியின் பெயரால் அவர்களது மொழியையும் இனத்தையும் வளத்தையும் தியாகம் செய்யச்சொல்லி கேட்கிறது இந்திய தேசம்!

  இப்படி தேசிய இனங்களின் தனித்தன்மையை விட்டுக்கொடுக்கச் சொல்வதில் இந்திய தேசியம், இந்துத்துவம், இஸ்லாமியம், தலித்தியம்,  கம்யூனிசம், திராவிடம் என அனைவருமே கைகோர்ப்பார்கள் !

 இந்த இந்திய தேசிய சிந்தனை வலிந்து திணிக்கபடுவதற்கும் ஒரு கன்னிப் பெண் கற்பழிக்கப்படுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை!

Monday 7 August 2023

சாத்தானின் ஆசான்

சாத்தானின் ஆசான்

ஊரடித்து உலையில் போட்டு 
ஊனுண்டு உடல் கொழுத்து 
பல உடல் புணர்ந்து
பலர் குடல் சரித்து
கால்களை நக்கி
கழிவுகள் அள்ளி
உயர்பதவி பெற்று 
உயிர்ப்புடன் உலவிய
சாத்தானின் ஆசான்!
செத்தவன் ஆனான்!
செத்தும் கெடுக்கிறான்
செதுக்கிய சிலை கேட்டு!
இவனீன்ற மகன்
இன்னொரு சாத்தான்!
அவனீன்ற மகன் 
அதனினும் சாத்தான்!
கடைசி வாரிசும்
கன்னிப் பித்தன்!
இனத்தை பலிகொடுத்து
பணத்தை வாரியெடுத்து
வாழும் ஒரு குடும்பம்
வீழும் நாள் என்றோ?!

#சாத்தான்_செத்தொழிந்த_நாள்

Sunday 6 August 2023

புலிகளும் பழனி பாபாவும்

புலிகளும் பழனி பாபாவும் 

  புலிகள் உட்பட ஈழப் போராளி இயக்கங்கள் தமிழகத்திற்கு அடைக்கலம் தேடி வந்த போது அவர்களை ஆதரித்தவர்களில் பழனி பாபாவும் ஒருவர் (இவர் தமிழரசன் அவர்களுக்கும் ஆதரவளித்து வந்தார்).
 ஐந்து ஆண்டுகள் புலிகளுக்கு அனைத்து வகையிலும் உதவி வந்த பாபா ஈழத்திற்கு சுற்றுப்பயணம் செய்து அங்கே தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்து வந்தார்.
 இந்த நிலையில் அவருடைய பாஸ்போர்ட்டை இந்திய அரசு முடக்குகிறது.

 இஸ்ரேலின் வழிகாட்டுதலின் பெயரில் ஈழத்தில் இஸ்லாமியரை தனியாக பிரித்தெடுக்கும் வேலையை சிங்களவர்கள் செய்கிறார்கள்.
புலிகளுக்கு நிதி தருவதில் விருப்பம் இல்லாத சில இஸ்லாமியர்களையும் இரவில் தனியாக மாட்டும் அப்பாவி இசுலாமியர்களையும் படுகொலை செய்து புலிகள் மீது பழியைப் போடுகின்றனர்.
 புலிகளில் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களை அவர்களின் குடும்பத்தை மிரட்டுவதன் மூலம் அவர்களை திரும்பி வரச் செய்கின்றனர். திரும்பி வராதோரின் குடும்பங்கள் இலங்கை ராணுவத்தால் சீரழிக்கப்பட்டன.
 ஊர்க்காவல் படை என்கிற பெயரில் இஸ்லாமியரில் சில பொறுக்கிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து இஸ்லாமியர் அல்லாத தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த ஏவி விடுகின்றனர்.  அவர்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்கின்றனர். ஊர்க்காவல் படைக்கு எதிராக புலிகள் எடுத்த நடவடிக்கைகள் இஸ்லாமியருக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.
 புலிகள் போல உடைய அணிந்து முழுக்க இலங்கை ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் இருந்த காத்தான்குடி பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தி இஸ்லாமியர்களை கொன்று அந்த பழியையும் புலிகள் மீது போடுகின்றனர்.

  இந்த நிலையில் பழனி பாபாவை இலங்கை அரசே நேரடியாக தமிழகம் சென்று அழைத்து வந்து சிறிமாவோவின் கணவரே தனிப்பட்ட முறையில் அவரை கூட்டிச்சென்று இஸ்லாமியர்களை புலிகள் கொன்று வருவதாக கூறி கலவரம் நடந்த இடங்களைக் காட்டுகிறார்.
 இசுலாமிய மக்களை மிரட்டி பாபாவிடம் பொய் சாட்சி கூற வைக்கிறார்.
 சில இஸ்லாமிய தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களையும் பழனி பாபாவிடம் புலிகள் பற்றி தவறாக கூறவைக்கிறார்.
 பழனி பாபா இதை நம்பி விடுகிறார்.
 பிறகு தமிழகத்திற்கு வந்து புலிகளுக்கு எதிராக பேசுகிறார்.
 ஈழத்திற்கு இந்திய அமைதிப் படை சென்றபோதும் அதை ஆதரிக்கிறார்.
 இதைத்தான் தற்போது இஸ்லாமிய மதவெறியர்கள் பரப்பி வருகின்றனர்.

ஆனால் இதன் பிறகு பாமக உடன் பாபா நெருக்கமாகிறார். பா.ம.க தலைவர் ராமதாஸ் புலிகள் பற்றி எடுத்துக் கூறுகிறார்.பா.ம. கட்சி ஈழம் மற்றும் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் பொழுது பழனிபாபா ஈழத்திற்கு முழு ஆதரவு தருவதாகவும் புலிகளை எதிர்ப்பதாகவும் கூறி பாமகவின் ஈழ ஆதரவு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கிறார். அப்போது திண்டுக்கல் லில் பேசிய பேச்சுதான் இது.
ஈழத்து இசுலாமியர் தனி ஈழம் அமைய ஆதரவளிக்க வேண்டும் என்றும் பேசுகிறார்.
 புலிகளுடன் இருக்கும் பங்காளி சண்டையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.

 இதன் பிறகும் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபொழுது எந்த தலைவருமே புலிகளுக்கு ஆதரவாக பேசவில்லை.
 ஆனால் பழனி பாபா ராஜீவ் காந்தி தன்னுடைய இடுப்பில் வைத்திருந்த பாதுகாப்பு குண்டு வெடித்துதான் இறந்தார் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து புலிகளை காப்பாற்ற முயற்சி செய்கிறார். 

 புலிகளுடன் முரண்பட்டாலும் பழனி பாபா அவர்கள் ஈழம் அமைய வேண்டும் என்பதில் இறுதி வரைக்கும் உறுதியாக இருக்கிறார்.

Wednesday 19 July 2023

புறந்தூய்மை

புறந்தூய்மை

 ஏற்றத்தாழ்வை ஒழிக்க ஒரு புதுமையான வழி சொல்லவா?

 தாராளமாக தண்ணீர் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்துவிட்டால் போதும்!

 அனைவரும் நன்கு குளித்து துவைத்த ஆடைகள் போட்டுக்கொண்டாலே ஏற்றத்தாழ்வு ஒழிந்துவிடும் என்பது என் கருத்து.

 இத்தோடு சோப்பு போடும் பழக்கத்தைக் கைவிட்டாலே வியர்வை துர்நாற்றம் பெருமளவு குறைந்துவிடும். 

 சோப்பு இல்லாமல் எப்படி குளிக்க வேண்டும் என்றால் நன்றாக தலை முதல் கால் வரை நனைத்துவிட்டு இரண்டொரு நிமிடம் ஊறவிடுங்கள் (இந்த நேரத்தை பல் துலக்க பயன்படுத்தலாம்) . பிறகு உடல் முழுவதும்  கைகளாலால் முடிந்தவரை தேய்த்தபடி தண்ணீர் ஊற்றவேண்டும். பிறகு உடல் முழுவதும் அரை நிமிடம் தொடர்ந்து நனையும்படி தலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும். பூந்தூரல் (shower) இருப்பது மிகவும் உதவும். இப்போது பாதி வேலை முடிந்தது (வாரம் ஒரு முறை சோப்பு போட்டு குளிக்கலாம்).

 பிறகு துவைத்த காய்ந்த துண்டு மூலம் அழுத்தி துவட்டிக் கொண்டால் மீதி வேலை முடிந்தது.
 இந்த துண்டை அப்படியே துவைக்கப் போட்டுவிட வேண்டும். 

 இப்படி செய்யும்போது சென்ட், பவுடர், மேக்கப் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். தலையில் எண்ணெய் தேய்ப்பது கூட தேவைப்படாது.
தோலும் முடியும் வலுப்படும். அதிகம் வியர்க்காது. அதிகம் குளிராது. முகமும் தலைமுடியும் பொலிவாக இருக்கும்.

 இப்போது துவைப்பது எப்படி என்று பார்ப்போம்.
 இரண்டு வாளி வைத்துக் கொள்ளவும். 
 ஒரு வாளியில் தண்ணீரில் துணிகளைப் போட்டு கொஞ்சம் சோப்பு பொடி போட்டு சில மணிநேரம் ஊறவைக்கவும். இன்னொரு வாளியில் நல்ல தண்ணீர் வைத்துக் கொள்ளவும். முதல் வாளித் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு நிமிடம் தண்ணீரை வடிய விடவும். இப்போது இரண்டாவது வாளியில் போடவும். துணியில் இருக்கும் சோப்பு அழுக்கோடு வெளிவந்து நல்ல தண்ணீரில் கலக்கும் இதற்கு ஒரு 5 நிமிடம் ஆகலாம். இப்போதும் இந்த துணிகளை ஒரு நிமிடம் தண்ணீர் வடியும்படி வைக்கவும். இன்னொரு வாளியில் (நன்கு அலசிவிட்டு) அதில் நல்ல தண்ணீர் பிடித்துக் கொள்ளவும். தண்ணீர் வடிந்த துணிகளை அதில் போட்டு பின் ஒவ்வொன்றாக எடுத்து பிழிந்து காயப்போடவும். வெயில் நேரடியாகப் படாமல் ஆனால் சூரிய வெளிச்சம் படும் இடத்தில் காயப்போடுவது சிறந்தது.
 இந்த எளிமையாக முறையில் 3 வாளித் தண்ணீரில் அரை வாளித் துணிகளை துவைக்கலாம்.

 தூய்மையாகத் தோற்றம் அளிப்பது தாழ்வு மனப்பான்மை வராமல் செய்யும்.

 நாளை எப்படி பல் விளக்கினால் ஏற்றத்தாழ்வு ஒழியும் என்று பார்ப்போம்.

 
 
 
 

Friday 14 July 2023

கிருஷ்ணசாமி பற்றி சுருக்கமாக

கிருஷ்ணசாமி பற்றி சுருக்கமாக

 1997 இல் பசுபதி பாண்டியன் ஒடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக கருணாநிதியால் அடையாளம் காட்டப்பட்டார்..

 1995 தூத்துக்குடி சாதிக் கலவரத்தில் முன்னின்று போராடினார்.
 அது ஜெயலலிதா அரசால் கொடியன்குளம் சம்பவத்தில் முடிந்தது.
1996 தேர்தலில் நின்று வென்றார் 

 1999 மாஞ்சோலை தேயிலைப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். 
அது  கருணாநிதி அரசால் தாமிரபரணி படுகொலையில் முடிந்தது.

  2001 தேர்தலில் திமுக வுடன் கூட்டணி வைத்தார்.

 2011 தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி வைத்தார்.

2014 இல் மீண்டும் திமுக வுடன் கூட்டணி வைத்தார்

2019 இல் பாஜக வின் கூட்டணியில் இணைந்தார்.

 

Wednesday 12 July 2023

சாதியே இனம்

சாதியே இனம்

 தேசிய வாதத்தின் தாயகம் ஐரோப்பா என்று கூறுவர். ஆனால் உலகத்தில் தமிழர்கள்தான் மொழிவழி அமைந்த இன தேசியத்தை முதன்முதலில் எழுதியவர்கள்.
 உலகிலேயே முதன்முதலில் மொழியின் பெயரால் இனத்தையும் தேசத்தை குறிப்பிட்டு எழுதியதும் மொழியின் பெயரால் அரசுகளின் கூட்டணி அமைத்ததும் தமிழர்தான்.
  அந்த வகையில் தேசியத்திற்கான முதல் வரையறையை எடுத்துக் கொடுத்தது தமிழ் இலக்கியம் தான். 
 நாம் நெடுங்காலமாக வெற்றியை ஈட்டி வல்லரசாக திகழ்ந்து வந்தோம்.
 பிறகு நமது வீழ்ச்சி இனக்கலப்பினாலும் ஒற்றுமை இன்மையினாலும் வந்தேறிகளின் சதியினாலும் தொடங்கியது. 
 ஆம், கிமு வில் இருந்து கிபி 13 ஆம் நூற்றாண்டு வரை வல்லரசாக வீற்றிருந்த காலங்களில் பொறாமை கொண்டு நம் மீது எத்தனையோ பேரரசுகள் சிற்றரசுகள் தாக்குதல் நடத்தின. மத ரீதியான குழப்பங்கள் ஏற்படுத்தி நம்மை சிதைக்கவும் முயன்றன. பல நெடுங்காலம் நமது இனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இறுதியில் வெற்றியடைந்து நாம் வீழ்த்தப்பட்டோம். 
 வீழ்ந்தும் 800 ஆண்டுகளில் எத்தனையோ முறை எழ முயன்றோம். இன்று வரை வெற்றி அடைய முடியவில்லை என்றாலும் இன்று நம்மிடம் மிக உறுதியான இனவெழுச்சி ஏற்பட்டுள்ளது.
 நமது இளைஞர்களின் இனரீதியான எழுச்சி என்பது தமிழகத்திலே பக்கம் பக்கமாக எழுதிய எழுத்தாளர்களால் வந்தது இல்லை. வீதி வீதியாக பேசிய இயக்கங்களால் வந்ததில்லை. இது இனப்பற்றை மட்டுமே முதல் தகுதியாகக் கொண்ட ஒரு தலைவன் தனது ராணுவ சிந்தனையின் மூலம் ஈழத்தில் இனரீதியான படைகட்டி தாய் நிலத்தை மீட்டு வரிசையாகப் புரிந்த சாதனைகளினால் ஏற்பட்டது. ஆம், உலக வல்லரசுகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து அந்த தலைவனை வீழ்த்திய போதும் இறுதி நொடி வரை அவருடைய உறுதியான நிலைப்பாடு இன்று உலகத் தமிழர்கள் மனத்தில் விடுதலைத் தீயை மூட்டி இன்று இளைஞர்கள் தமிழ் தேசியத்தின் மீது விருப்பம் கொண்டு சாதி, மொழி, மதம், நாடு என அனைத்தையும் கடந்து இனமாக திரண்டு நிற்க காரணம்.
 இன்றைய சூழலில் பழைய கருத்தியல்வாதிகள் தங்களுக்குள் மோதிக் கொள்வதுடன் ஒருவரை ஒருவர் 'குடி தேசியம்' என்றும் 'மாநில தேசியம்' என்றும் 'வரட்டு வாதம்' என்றும் தூற்றிக்கொண்டு தற்கால இளைஞர்களை குழப்புகின்றனர்.
 சாதி இல்லாமல் வந்தேறிகளை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை.

 உலகில் புரட்சி செய்த மக்கள் தங்களுடைய இன, மத, ஜாதி அடையாளங்களை ஒழித்து விட்டு ஒன்று சேரவில்லை.
 உலகம் போற்றும் புரட்சியாளர்கள் தங்கள் குடிப்பெயருடனும் மொழி அடையாளத்துடனும் மத அடையாளத்துடனும் இருந்தார்கள்.
 தன்னுடைய உண்மையான எந்த அடையாளத்தையும் மறைக்காமல்தான் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி புரட்சி செய்தனர்.

 தமிழகத்தில் (இன)தேசியத்தை 'மொழித் தேசியம்' என்றாக்கி 'தமிழ் பேசுபவர் எல்லாம் தமிழர்' என்ற மாயையை உருவாக்கி தமிழை நன்கு கற்ற பிற வந்தேறி இனங்கள் தமிழை வைத்தே தமிழரை வீழ்த்தி தமிழர் தலையில் அமர்ந்து சுரண்டி கொழுப்பது பல ஆண்டுகளாக நடக்கிறது.

  இந்த வேளையில் நாம் மொழியை மட்டும் வைத்துக்கொண்டு நம்மை அடையாளப்படுத்தினால் இச்சதியை வீழ்த்த முடியாது.
 அதே நேரத்தில் இனத்திற்கான எந்தவித ஆவணச் சான்றும் நம்மிடம் இல்லை.
 பிற மாநிலங்களில் ஆவணங்களில் தாய்மொழி இன்னது என்று சான்றிதழ்களில் இருக்கும். அதை தமிழகத்தில் திராவிடம் நீக்கிவிட்டது.
 அதனால் தான் நாம் இனத்தின் உட்பிரிவான சாதியை இன அடையாளமாக கொண்டு 'முதலில் சாதிய சமத்துவம் பிறகு சாதி ஒழிப்பு' என்கிற திட்டத்துடன் குடிவழி இனத்தேசியத்தை முன்னெடுத்து வருகிறோம்.

 எந்த ஒரு தோல்வி அடைந்த குருவும் வெற்றியடையும் சீடனை பார்த்து பொறாமை கொள்வது இயல்பு.
 நடைமுறைச் சூழல் புரியாமல் கருத்தியலில் ஊறிப்போன பழைய தலைவர்கள் இதை சாதிய எழுச்சியாக பார்ப்பதும் பழைய திராவிட சதிகாரர்கள் பேசிய அதே சினிமா வசனங்களை இவர்களும் பேசுவதும் எங்களுக்கு வருத்தமாக இருந்தாலும் எங்களை இது பாதிக்கப் போவதில்லை.
 எங்களது குடி அடையாளத்துடன் எங்கள் குடி எங்கள் பின்னே வருகிறதா இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல் நாங்கள் தமிழ் தேசியத்தின் கொள்கைகளை ஏற்று இந்த உலகம் ஏற்கனவே சாதித்த நடைமுறை வழியில் நாங்களும் செல்ல முற்பட்டு உள்ளோம். அடையாளத்திற்காக குடியை முன்வைக்கிறோமே தவிர 'சுய சாதி ஆதிக்கத்தை' நிறுவ அல்ல.
 கருத்தியலில் ஊறிப் போய்விட்ட பெரியவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல விரும்பவில்லை. தர்க்க ரீதியான விவாதத்தில் அவர்களுடன் சரிக்கு சரியாக மோத எங்களால் முடியும் இருந்தாலும் அவர்களை நாங்கள் எதிரிகளாக கருதவில்லை.
 ஆனாலும் எங்களை ஒத்த இளைஞர்களுக்கும் எங்களையும் விட சிறிய வயதினரான இளைஞர்களுக்கும் அவர்களையும் விட இளைய சிறுவர்களுக்கும் நாங்கள் விளக்கம் கண்டிப்பாக அளிக்க விரும்புகிறோம்.

  சில உதாரணங்களை பார்ப்போம்.

  புலிகள் இயக்கம் எழுந்த பொழுது அதிலே அனைத்து சாதி, மத, பிரதேச தமிழர்களும் இணைந்தார்கள். பிறகு ஒரு காலகட்டத்தில் அவர்கள் மீது மத ரீதியான பிளவு ஏற்படுத்தப்பட்டபோது புலிகளிடம் எங்களிலும் பலர் அந்த சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று காட்ட தரவுகள் இல்லை.
 இன்றும் புலிகளிலே எந்த ஜாதியினர் எந்த மதத்தினர் எவ்வளவு என்கிற தரவு கிடையாது. புலிகள் அத்தனை பேரையும் வெறும் தமிழர்களாக மட்டுமே பார்த்தார்கள். அதனால் அவர்கள் மீது சாதி ரீதியான மத ரீதியான பிரதேச ரீதியான விமர்சனங்கள் வைக்கப்பட்ட போது அவர்களால் அதை எதிர் கொள்ள முடியவில்லை.

 ஈழத்தை விட தமிழகத்தில் சிக்கல் அதிகம். எல்லா இடங்களிலும் மூலைக்கு மூலை வந்தேறிகள் புகுந்துள்ளனர். இவர்களே சாதிய மோதலை உருவாக்கி நடுவில் அமர்ந்து இனம் கடந்த சித்தாந்தம் (திராவிடம், மதவாதம், இந்தியம், தலித்தியம், பொதுவுடைமை, மனித நேயம்) பேசி பலன் பெறுகின்றனர். 
 இவர்களைப் பிரித்தறியவும் வேண்டும்.  அதே நேரத்தில் சாதிய பிளவுகள் மறைய வேண்டும். அதே நேரத்தில் தத்துவமும் வேண்டும். 
 இதற்காக சாதி அடையாளத்துடன் சாதிய சமத்துவம் பேசும் தமிழ்த் தேசியவாதிகள் தேவைப்படுகிறார்கள். 

 உதாரணத்திற்கு தற்போதைய பிரச்சனையான மேல் பாதி கோவில் பிரச்சனை எடுத்துக் கொள்வோம். இதிலே வன்னியர் பறையர் மோதல் ஏற்பட்டபோது வன்னியர் என்கிற பெயரை தாங்கிய ஒருவரும் பறையர் என்கிற பெயரை தாங்கிய ஒருவரும் கூட்டாக சேர்ந்து சமாதானம் ஏற்படுத்த முயன்ற போது தான் அந்தப் பிரச்சனை (அரசாங்கம் சதி செய்த போதும்) மக்கள் மத்தியில் பிளவுகளையோ கலவரங்களையோ தூண்டாமல் நீர்த்துப் போனது.

  சாதியப் பட்டதை பின்னால் போட்டுக் கொண்டு போட்டுக் கொண்டு புரட்சி செய்ய முடியாது என்பது உலகின் நடைமுறைக்கு ஒத்து வராத கூற்று.

 தமிழர்கள் தங்கள் குடிப்பட்டத்தை போட்டுக்கொண்டு குடி அடையாளத்துடன் தேசியம் பேசுவது மட்டுமே மொழித்தேசியம் என்று இத்தனை நாள் தமிழர்களை ஏமாற்றி வந்த வந்தேறிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

 இப்படி குடி அடையாளத்துடன் தேசியம் பேசும் எந்த தலைவரும் சாதிவெறி பிடித்தவர் என்றோ பிற சாதி மீது வன்மம் கொண்டவர் என்றோ பெரும்பாலும் இருப்பதில்லை.

  சில சாதியவாதிகள் கூட இந்த அரசியலின் பலம் அறிந்து தமது பிழைப்புக்காகவேணும் தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பது போல பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விட்டனர். ஆனால் அந்த புத்திசாலித்தனம் கூட இல்லாம தத்துவப் பெரியவர்கள் பழைய வரட்டு போக்கிலேயே இருக்கிறார்கள்.

 ஆக இங்கே குடிவழி தமிழ் தேசியம் தான் தற்போது ஒரே வழி. இது நாங்கள் விரும்பி உருவாக்கியது அல்ல காலம் கட்டாயப்படுத்தும் வழிமுறை.

 தமிழர்கள் கைக்கு அதிகாரம் வந்த பிறகு (அது மாநில அரசாக இருந்தாலும் அல்லது தனி நாடு அமைத்த ராணுவ அரசாக இருந்தாலும்) நாங்கள் சாதிகளை நீக்கி இனம் என்கிற ஆவணங்களை கொண்டு வந்து இனரீதியான சான்றுகள் அனைவருக்கும் கிடைக்கப் பெற்ற பிறகு சாதியும் சாதிய பட்டங்களும் இல்லாமல் போய் தமிழர் என்கிற ஒற்றை அடையாளத்துடன் வருங்காலங்களில் வாழ்வோம்.

 அதுவரை வந்தேறிகளின் சதியை முறியடிக்க,
 நடைமுறையை கருத்தில் கொண்டு,
தமிழ் சாதிகளில் எந்த சாதியும் இழிவானது இல்லை என்பதை ஏற்றுக் கொண்டு,
 சக தமிழ் குடிகளின் மீது பாசம் கொண்டு,
 அனைவரும் தமது குடி அடையாளத்துடன்,
 மத அடையாளத்துடன்,
 பிரதேச அடையாளத்துடன்,
 பாலின அடையாளத்துடன்,
தமது எந்த ஒரு அடையாளம் மறைப்பும் இல்லாமல்
 தமிழராக ஒன்று சேர்ந்து தமிழ் தேசியத்தை வெல்வோம்!

  இயல்பான இனப்பற்றுடன் இனத்திற்காக உழைக்க முன்வருபவனிடம் 
"நீ போய் ஜாதியை ஒழித்து விட்டு வா"
"மதத்தை ஒழித்து விட்டு வா"
"உன்னுடைய பழக்க வழக்கங்களை ஒழித்துவிட்டு வா"
"தூய தமிழில் பேசிக்கொண்டு வா"
"கருத்தியல் ரீதியில் தெளிந்து விட்டு வா"
என்று விரட்டி விடுவது இந்த இனத்தின் பெரிய கேடாக இருக்கிறது.

 அண்டை இனங்களிடம் நாம் பாடம் கற்க ஏராளம் உள்ளது.
 அண்டை இனங்கள் நம்மை விட பெரிய அளவில் சாதிய ஏற்றத்தாழ்வு  உள்ளவர்கள்.
அவர்கள் இன்று சாதிய அடையாளத்துடனே இனமாக திரண்டு தங்கள் தாய்நிலங்களில் தங்களது இன உரிமைகளையும் தத்தமது குடிக்கான உரிமைகளையும் மீட்டு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர்.
 இவர்களில் யாருமே அதிமேதாவிகள் அல்ல.
 இன்று நாம் தப்பி பிழைக்க வேண்டும் என்றால் இயல்பான இனப்பற்று இருக்கும் நமது மக்களை இயல்பான வழியில் ஒன்று திரட்டி கூட்டான முயற்சியின் மூலம் வேற்றின ஆதிக்கத்தைத் தடுத்து வாழ்ந்துகொள்ள முடியும்.

 தலைவர் பிரபாகரன் "ஒவ்வொரு தமிழனும் தமிழனாக தனது இயல்பான சிறிய பங்களிப்பை செய்து விட்டால் எனக்கு அவசியம் இருக்காது" என்று கூறியது போல நாம் செயல்பட வேண்டும்.

 தமிழர்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட பழைய சாதிய பகை உணர்வை மறந்து இன்று ஒன்று திரண்டு வெற்றிப் பாதையை நோக்கி செல்லும் இதே 'குடி வழி தமிழ் தேசியத்தை' தொடர வேண்டும்!

 இதுவும் கூட எளிதானது அல்ல!
 தமிழ் சாதிகளில் ஒன்று ஓரணியில் திரண்ட போது கூட திராவிடம் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளது.
 ஆகவே ஒரு சாதி தனியாக திரண்டு விடக்கூடாது என்பதில் கூட வந்தேறிகள் கவனமாக இருக்கிறார்கள். 

 அண்ணன் சீமான் சொல்வது போல "கன்னியாகுமரியில் பெரும்பான்மையாக வாழும் நாடார் சாதியினரை இரண்டு மதங்களாக பிரித்துள்ளனர், அதற்கு அடுத்த திருநெல்வேலி மாவட்டத்தை மதமாக பிரிக்காமல் 3 ஜாதிகளாக பிரித்துள்ளனர்" 

 அப்படி ஒரே மதத்தில் ஒரே ஜாதியாக திரண்டு இருக்கின்ற தமிழர்களை கூட இவர்கள் மொழித் தேசியம் என்றும் இடதுசாரி வலது சாரி என்றும் பல்வேறு வகையில் பிரித்து கருத்தில் ரீதியில் குழப்புகின்றனர்.

  இன்று தமிழ்ச் சாதிகளில் பெரும்பான்மையான சாதிகளில் இளைஞர்கள் தமிழ் தேசியத்தின் பக்கம் கணிசமாக வந்துவிட்டனர்.
 பழைய வந்தேறி அரசுகளால் தாழ்த்தப்பட்ட சில சாதிகள் தமிழ் தேசியத்தின் பக்கம் வருவதற்கு தயங்கிக் கொண்டிருக்கின்றன.
 அவர்களை 'நாம் தாழ்ந்தவர்கள்' என்ற உளவியலில் இருந்து விடுபட்டு தமிழ்க் குடியாக தமிழர்களாக தமிழ் தேசியத்தில் இணைவதும் கூடிய சீக்கிரம் நடக்க இருக்கிறது.
 அப்படி தமிழ்தேசியத்தின் பக்கம் அத்தனை சாதி இளைஞர்களும் வந்துவிட்டாலே தமிழினம் பாதி வெற்றியை அடைந்து விட்ட தாக அர்த்தம்.

 ஒழிப்பதற்கு எத்தனையோ முயற்சி செய்தும் குளறுபடி செய்தும் தமிழினத்திடம் சாதிதான் எஞ்சி நிற்கிறது. கடைசி வாய்ப்பாக சாதியைப் பயன்படுத்தி இனத்தைக் காப்பாற்றுவோம்! 

 தமிழ் இனமே ஒரு சாதி!
இனத்திற்காக உழைப்பவர் உயர்ந்த சாதி!
தயங்கி நிற்பவர் தாழ்ந்த சாதி! 

 

Saturday 8 July 2023

கற்பனையில் கொல்லப்பட்ட நந்தனார்

கற்பனையில் கொல்லப்பட்ட நந்தனார்

 நந்தனார் பற்றிய முதல் குறிப்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் பாடியது.
 அதில் ‘செம்மையே! திருநாளைப் போவார் அடியாருக்கும் அடியேன்’ என்று மட்டும் வருகிறது.
 அதாவது சிவ பக்தி உள்ளவர்களுக்கு நான் அடிபணிகிறேன் என்று பல சிவ பக்தர்களைக் குறிப்பிடும்போது 'நாளைப் போவார்' என்று அறியப்பட்ட ஒரு சிவ பக்தரைக் குறிக்கிறார்.
 இதில் அவர் இயற்பெயரோ ஊரோ சாதியோ செயல்களோ எதுவுமே குறிக்கப்படவில்லை.

 அதன் பிறகு 200 ஆண்டுகள் கழித்து பத்தாம் நூற்றாண்டில் 'நம்பியாண்டார் நம்பி' மேற்கண்ட குறிப்பை தம் கற்பனையால் கொஞ்சம் விரித்து எழுதுகிறார்.

 'நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்
போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலை போய்
மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்
மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே'
 எனது பார்வையில் இதன் பொருள்,
"தில்லை நடராஜர் அருள் பெற்ற நாளைப் போவான் என்பவன், வெளியே இருந்த தொண்டன், தன் அசுத்தம் நீங்கி, தில்லை அந்தணர்களும் வணங்கும் முனிவன் ஆனான்" என்கிறார். இவருடைய ஊர் ஆதனூர் என்றும் குறிக்கிறார்.  

  இதில் வரும் புன்புலை என்கிற சொல்லே எல்லா குழப்பத்திற்கும் காரணம்.
 புன் மற்றும் புலை இரண்டுமே அசுத்தமான எனும் பொருளும் தரும். எனவே 'புன்புலை போய்'  என்பதன் பொருள்  'பாவ அசுத்தம் நீங்கி' என்று என்று நான் கொள்கிறேன். ஒருவர் அசுத்தமானவர் என்கிற எண்ணம் பார்த்தவுடன் வருகிறது என்றால் அது தொழுநோய் போன்ற நோயாளிகள் மீதுதான் வரும். அத்தகையோரை 'செய்த பாவத்தின் பலன்' என்று மக்கள் தூற்றுவது உண்டு. எனவே நோய்த் தொற்று கொண்ட ஒருவர் சிவனைச் சரண்டைந்து கோவிலுக்குள் போகாமல் வெளியே இருந்து வணங்கி வந்துள்ளார் என்று கொள்ளலாம். அவர் காண்போரிடம் நம்பிக்கையுடன் தான் குணம் பெற்று கோவிலுக்குள் 'நாளைப் போவேன்' என்று நெடுங்காலம் கூறியதால் அவருக்கு 'நாளைப் போவார்' சாமி என்று பெயர் வந்திருக்கலாம். அவர் நாள்தோறும் தில்லை அந்தணர் ஓதுவதைக் கேட்டு மனப்பாடம் செய்து தானும் வெளியே ஓதியிருக்கலாம். திடீரென்று அந்த நோய் நீங்கப் பெற்று நன்கு ஓதும் திறத்தால் தில்லை அந்தணரை விட உயரிய அடியார் நிலையை அடைந்துள்ளார். 
 எனது பார்வையில் 'நம்பியாண்டார் நம்பி' கூறவந்த கருத்து இதுவே! 
 இதுவும் அவருடைய ஊகமாகவோ அல்லது கற்பனையாகவோ இருக்க வேண்டும்.


 மேலும் இந்த புலை எனும் சொல் புலையரைக் குறிக்காது.  ஏனென்றால் புலையர் பற்றி இழிவாக தமிழ் இலக்கியத்தில் இல்லை. உயர்வாகவே குறிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தொழில்களும் செய்துள்ளனர்.

 நம்பியாண்டார் நம்பி காலத்திற்குப் பிறகு 200 ஆண்டுகள் கழித்து பனிரெண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் மேற்கண்டவற்றை தம் கற்பனையால் மேலும் விரிவாக்குகிறார்.

 'நாளைப் போவார்' சேக்கிழாரால் 'நந்தன்' என்று பெயர்பெறுகிறார். இதில் "புன்புலை" என்ற சொல் சேக்கிழாரால் தவறாகப் பொருள் உணரப்பட்டு அவர் புலையர் என்று எழுதுகிறார் (சங்க காலத்தில் புலை, புலையர் இரண்டும் வெவ்வேறு பொருள் வழங்கி வந்துள்ளது. வள்ளுவர் கூட புலை வினைஞர் என்றுதான் கூளியுள்ளார்). 
 தான் புலையர் என்பதால் கோவிலுக்குள் வரத் தயங்கிய நந்தனாரின் கனவில் இறைவன் தோன்றி தீயில் இறங்கி உடலைத் துறந்து தன்னை அடையச் சொன்னதாகவும் அதேபோல தில்லை அந்தணர் கனவிலும் சொன்னதாகவும் அவ்வாறே நந்தன் வந்து தீயில் இறங்கி அந்தண வடிவெடுத்து இறைவனை அடைந்ததாகவும்  எழுதுகிறார். 

 அதாவது உண்மையான திருநாளைப் போவாருக்கும் சேக்கிழார் உருவாக்கிய நந்தனுக்கும் குறைந்தது 350 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது.

புலையர் கீழ்ச்சாதி என்று கூறவரும் அதே சேக்கிழார் புலையர் பற்றி கூறுவதில் கூட இழிவாக எதுவும் இல்லை. 
அன்றைய புலைப்பாடி எப்படி இருந்தது என்று சேக்கிழார் கூறுகிறார்,
 ஊருக்கு வெளியே வயல்வெளிகள் அருகே திறந்தவெளி நிலம்,
 சமூக ஒற்றுமையுடன் வாழ்கின்ற உழும் தொழில் செய்யும் உழவர்கள்,
 வைக்கோல் கூரை வேயப் பெற்ற சிறிய குடிசைகள்,
 அவற்றின் மீது சுரைக்காய் கொடிகள், 
வாசல் முன்பு கிழித்து காயத் தொங்கவிடப்பட்ட தோல் பட்டைகள், 
குஞ்சுகளுடன் மேயும் கோழிகள், 
நாய்களின் குட்டிகளைக் கவர்ந்து விளையாடும் இரும்பு சலங்கை அணிந்த சிறுவர்கள், 
உழத்தியர் (பெண் உழவர்கள்) தோலாலான தொட்டிலில் குழந்தைகளை உறங்குவித்தல், 
வஞ்சி மர நிழலடியில் புதைக்கப்பட்ட பானைகளில் கோழிகள் முட்டையுடன் அடைகாத்தல், 
தோல் வார்கள் கட்டிய பறைகள் தொங்குகின்ற மாமரங்கள், 
வங்குள்ள தென்னை மரங்கள் அவற்றினுள் ஈன்ற குட்டிகளுடன் உறங்கும் தாய் நாய்கள், 
இரவில் காவல் காக்கும் சாமக் கடைஞர்கள் அவர்களைக் கூவி அழைக்கும் சேவல்கள்,
 காஞ்சிமரத்தின் நிழலில் நெல் குத்தியபடி புலை மகளிரின் பாடுதல்,
(விசேச நாட்களில்) அருவிக் கரை சென்று நெற்கதிர்களையும் குவளை மலர்களையும் கூந்தலிற் செருகிய புலைச்சிகள் பறையொலிக்கு ஏற்ப கள்ளுண்டு ஆடுதல், (சங்க காலத்தில் இருந்து பெண்கள் கள் குடித்ததும் விற்றதும் சர்வ சாதாரணம்).

 இப்படியான புலைப்பாடியில் காவல் காக்கும் கடைஞர் இருந்த பகுதியில் நந்தன் வாழ்கிறார்.  இவருக்கு அரசு ஒதுக்கிய புன்செய் நிலம் இருந்தது (பறைத்துடவை - அதாவது பறையடித்து ஏலம் விட்டு கொடுக்கப்படும் நிலம்) அதன் உணவு உரிமை அதாவது குத்தகைக்கு விட்டு (இன்று பணம் பெறுவது போல அன்று) விளைச்சலில் ஒரு பகுதி பெறுவது அவருக்குக் கிடைத்தது. இவர் வெட்டிய மாடுகளில் இருந்து கிடைக்கும் தோல், நரம்புகள் மற்றும் பசு வயிற்றில் கிடைக்கும் ஒரு வகை வாசனைத் திரவியம் போன்றவற்றை கோவிலுக்குக் கொடையளித்து வந்துள்ளார். 
 நந்தன் விவசாயம் செய்தாரா?! அல்லது புலைப்பாடியில் கடைஞர் பகுதியில் இருந்ததால் பயிர் காவல் புரிந்தாரா? அல்லது மாடு வெட்டும் தொழில் செய்தாரா என்பது தெரியவில்லை. 
 மேற்கண்ட எதுவும் இழிவானதாகவும் தெரியவில்லை.

  நந்தன் தன் பிறப்பு தாழ்ந்தது என்று எதன் காரணமாக எண்ணினார் என்பது விளக்கப்படவில்லை. உயிர்க் கொலையும் சைவ மதத்தில் கண்டிக்கப்பட வில்லை. சேக்கிழாரே சிவன் சிவனடியார் வேடத்தில் வந்து கன்றுக் கறி கேட்டதாக எழுதியுள்ளார். 

 சேக்கிழாருக்கு 800 ஆண்டுகள் கழித்து கோபாலகிருஷ்ண பாரதியார் கி.பி.1850 களில் நந்தன் சரித்திரம் எழுதுகிறார். இதில் நந்தன் ஒரு பிராமண ஜமீன்தாரிடம் வதை படுவதாக எழுதுகிறார்.  அதன் பிறகு அயோத்தி தாசர் தனது பௌத்த கற்பனைகளைக் கலந்து எழுதுகிறார். நந்தன் சிற்றரசன் என்றும் அவர் பௌத்தர் என்பதால் கோவிலில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அரசர் நுழையும் சிறப்பு வாசல் தான் தற்போது நந்தன் வாசல் என்றும் எழுதுகிறார்.  அதன் பிறகு திராவிட எழுத்தாளர்கள் நந்தனை சிதம்பரம் தீட்சிதர்கள் எரித்து கொன்றுவிட்டதாக எழுதினர்.
 பிறகு 1942 இல் நந்தன் ஒரு தீண்டத்தகாத பறையன் என்று உருவகித்து திரைப்படம் ஒன்றும் வந்தது. 

 இப்படி ஆளாளுக்கு 'நாளைப் போவார்' மீது தமது கற்பனைகளைத் திணித்துள்ளனர்.

 எவருடைய கற்பனையிலோ உதித்து இறந்த நந்தனின் கொலைப் பழியை இன்று வரை உயிருடன் இருக்கும் தீட்சிதர்கள் சுமக்கிறார்கள்.

 சீதை தீக்குளித்து உயிருடன் வந்தாள் என்றும் கண்ணகி ஆணைப்படி தீ மதுரையை எரித்தது என்றும் நாம் புராணம் படித்திருக்கிறோம்.
  அது போல ஒரு கற்பனை கதைதான் நந்தன் தீயில் விழுந்து ஆதி அந்தணரான பிரம்மன் உருவில் எழுந்து சிவனை அடைந்தார் என்பதும்.

 

Friday 7 July 2023

அம்பேத்கரின் பின்புலம்

அம்பேத்கரின் பின்புலம்

 எல்லோரும் நினைப்பது போல அம்பேத்கர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் கிடையாது. அம்பேத்கரின் அப்பா ஒரு ராணுவ மேஜர். 
அவரது பெயர் ராம்ஜி சக்பால்.
இவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் 1865 முதல் 1893 வரை பணிபுரிந்துள்ளார். 1880 களில் ஆங்கிலேயர் ராணுவத்தில் சாதிய அடிப்படையில் பார்த்தால் அதிகமாக இருந்தவர்கள் மகர்கள். பிற்பாடு பாம்பே மாகாண ராணுவத்தில் 25% மகர்களே இருந்தனர்.
அதிலும் குறிப்பாக ரத்னகிரி பகுதி மகர்கள். அன்றைய ரத்னகிரி மகர்களில் ஆறில் ஒருவர் ராணுவத்தில் இருந்தார். இவர்களில் ஒருவர்தான் அம்பேத்கர் அப்பா. அவர் 27 ஆண்டுகள் ராணுவத்தில் இருந்து பின் பணி ஓய்வு பெறும்போது சுபேதார் ஆக பதவி வகித்தவர். அதாவது இன்றைய மேஜர் அல்லது கேப்டன் போன்ற உயர்பதவி. அதாவது அடிநிலையில் இருந்து (சிப்பாய்) ஏழாவது படிநிலை (சுபேதார்). இவர் அவரை விட உயரதிகாரி ஒருவரின் மகளை மணமுடித்தார். அம்பேத்கருக்கு 18 வயது இருந்தபோதே அவரது சிறிய கிராமத்தில் 106 பேர் ராணுவப் பணியில் இருந்தனர். அன்று ராணுவத்தில் இருந்தவர்களுக்கு மில் தொழிலாளி போன்ற சம்பளம் இருந்தாலும் அவர்களது குடும்பத்துக்கு இலவச தங்குமிடம், இலவச மருத்துவம், குறைந்த விலையில் உணவு மற்றும் உடை, ஓய்வூதியம் ஆகியன உண்டு. இதைவிட முக்கியம் குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கப்பட்டது. சமூகத்தில் மரியாதையும் இருந்தது. ராணுவம் நடத்திய பள்ளிகளில் படித்த ராணுவ வீரர்கள் ஆசிரியர்களாகவும் பணியாற்றினர். அப்படி அம்பேத்கரின் அப்பா ஒரு சிறிய பள்ளிக்கு தலைமை ஆசிரியராகவும் இருந்துள்ளார். இவரது அனைத்து பிள்ளைகளுக்கும் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா முழுவதும் எதிர்ப்பை அடக்கிய பிறகு ராணுவத்தில் ஆட்குறைப்பு செய்தது பிரிட்டிஷ் அரசு. அப்படி ராம்ஜி வேலையை விட்டபோது அம்பேத்கர் கைக்குழந்தை. வேலையை இழந்த பிறகு ராணுவப் பள்ளிகளில் தமது குழந்தைளுக்கு  இடம் கேட்டு ராணுவ ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது (இப்படியாக அம்பேத்கர் சேர்ந்த பள்ளியில் தீண்டாமையை எதிர்கொள்கிறார். அதனால் பள்ளியிலேயே இவருடைய ஆசிரியர் அம்பேத்கர் (பிராமணர்) என்பவர் தன் பெயரைச் சேர்த்து எழுதி அட்மிசன் போட்டார். அம்பேத்கர் ஊர் அம்படாவே என்பது, இதுவே அவரது பெயரானது என்போரும் உண்டு. ஆனால் அம்பேத்கரின் உடன்பிறந்தோர் சக்பால் என்றே இன்று வரை பெயர்வைத்துள்ளனர்).
1895 இல் இந்த ராணுவ ஓய்வூதியர் சங்கம் கோபால்பாபா வாலங்கர் எனும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தலைமையில் 'தவறுகள் நீக்கும் ஆரியர் அல்லாதார் சங்கம்' (Non Aryan assosiation for removal of wrongs)' எனும் பெயரில் ஒரு இயக்கம் தொடங்கி மீண்டும் மகர்களை ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள கோரிக்கை மனு வைக்கிறது. இந்த மனுவில் உயர் சாதியினர் வெளியில் இருந்த வந்து தங்களை அடிமைப் படுத்தியதாக எழுதப்பட்டுள்ளது. இது அன்று ஆங்கிலேயர் கொண்டுவந்த பிரித்தாளும் தத்துவமான ஆரியர் - திராவிடர் கொள்கையை அடியொற்றி உள்ளது. 

 இந்த கோரிக்கை அப்போது நிறைவேறவில்லை ஆனாலும் 20 ஆண்டுகள் கழித்து 1914 இல் முதலாம் உலகப் போர் தொடங்கியதும் ராணுவ ஆளெடுப்பு தொடங்கியது. மகர்கள் மீண்டும் வேலை பெற்றனர். அப்படியாக 1917 இல் '111 மகர்கள்' எனும் படையணி மீண்டும் உருவானது.  இது 1919 இல் '71 பஞ்சாபிகள்' என்ற படையணியுடன் இணைக்கப்பட்டு உலகப் போர் முடிந்த பிறகு அதுவும் 1922 இல் கலைக்கப்பட்டது. 

 அதன் பிறகு 1939 இல் இரண்டாம் உலகப் போர் தொடங்குகிறது. இப்போது மீண்டும் ராணுவத்திற்கு ஆளெடுப்பு நடக்கிறது. இந்தியர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் (நேதாஜி- காந்தி முரண்பாடு). ஆங்கிலேயரை ஒடுக்கப்பட்டோரின் மீட்பர்களாகப் போற்றி வந்த அம்பேத்கர் ஆங்கிலேயரிடம் பேரம் பேசுகிறார். 1941 இல் பிரிட்டிஷ் ராணுவ ஆலோகர் பதவி பெறுகிறார் (Defence Advisory Committee of the Viceroy's Executive Council). உலகப் போரில் ஆங்கிலேயருக்கு உதவ தமது சாதியினரை மீண்டும் ராணுவத்திற்கு அழைக்கிறார். மகர்கள் மீண்டும் ராணுவத்தில் சேருகிறார்கள். இவ்வாறாக அம்பேத்கர் முயற்சியால் மகர் படையணி மீண்டும் உருவாகிறது. இவர்கள் ஆங்கிலேயரின் நம்பகமான படையணியாக இருந்ததால் நவீன வலுவான ஆயுதங்கள்  இவர்களிடம் மட்டுமே வழங்கப்பட்டன.   (1956 இல் மூன்று படையணிகள் இணைக்கப்பட்டு இன்று பல்வேறு சாதியினர் இருந்தாலும்) இன்று வரை மகர் எனும் பெயரில் அப்படையணி இருக்கிறது. எப்போதும் 'சாதியை ஒழிக்க வேண்டும்' என்று கூறி வந்த அம்பேத்கர் கடைசி வரை தன் சாதிப் பெயரால் ஒரு அரசாங்க ராணுவ படையணி இருப்பதைப் பற்றி பேசவே இல்லை. அதைக் கலைக்கவோ அல்லது பெயர் மாற்றவோ கூட கடைசி வரை நினைக்கவில்லை. அவர் கடைசியாக புத்த மதத்தின் புதிய பிரிவிற்கு மாறிய போது அவருடன் மாறியதும் அவரது சாதியினரே! இன்று அந்த புத்தமதப் பிரிவில் இருப்போர் 90% மகர் சாதியினரே!

 ஆங்கிலேயர் ஆயுத நாட்டாமையைத் தொடங்கியபோது இங்கே பெரும் சவாலாக இருந்தது மராத்திய பேரரசு. அது பிராமணர்களால் ஆளப்பட்டது. அதில் தீண்டாமை நிலவியது. எனவே ஆங்கிலேயர் அப்படி தீண்டப்படாத சமூகங்களை தமது ராணுவத்தில் சேர்த்து மராத்திய பேரரசை முறியடிக்கின்றனர். அப்படி ஆங்கிலேய விசுவாசிகளாக மாறிப் போன மகர் சமுதாயம் பல சலுகைகளைப் பெறுகிறது.
 அப்படி முழுக்க ஆங்கிலேயருக்கு ஆதரவான சமூகத்தில்
 முழுக்க ஆங்கிலேயருக்கு ஆதரவான வட்டாரத்தில்
முழுக்க ஆங்கிலேயருக்கு ஆதரவான குடும்பத்தில்
பிறந்த அம்பேத்கரை ஆங்கிலேயர் தமது அரசியலுக்காக வளர்த்து எடுத்தனர் எனலாம்.

 அப்படி வளர்ந்த அம்பேத்கர் ஆங்கிலேயருக்கும் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகும் அவர்களுக்கும் என ஆள்பவர்களுக்கு ஆதரவாக இருந்தார்.

 அவரது பௌத்த மதமாற்றம் கூட பூச்சாண்டி காட்டத்தான். பௌத்தர்களை இந்து என்று சட்டம் எழுதியதே அவர்தான். இது மகர்களுக்கு தனி அடையாளம் உருவாக்க செய்யப்பட்டது எனலாம்.

 அம்பேத்கர் ஒரு தனிமனிதர் இல்லை!
 ஒரு சாதியின் அரசியல் நகர்வின் அடையாளம்!