Monday 31 October 2022

மாநில அதிகாரம் தேசியத்தின் துருப்புச்சீட்டு


மாநில அதிகாரம் தேசியத்தின் துருப்புச்சீட்டு

 முதலில் நாம் பேசுவது தேசியமா? 
நாம் தற்போது தமிழ்தேசியம் பேசுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்!  உண்மையில் தேசியம் என்றால் என்ன என்கிற புரிதல் நம்மிடம் இல்லை. 
 தேயம் என்கிற தூய்மையான தமிழ்ச் சொல்லுக்கு "குறிப்பிட்ட மொழி பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பு" என்று பொருள் (வேற்றினத்தார் வாழ்விடங்கள் "மொழிபெயர் தேஎம்" என்று இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது).

 தற்போதைய தமிழ்நாடு (மாநிலம்) மட்டும்தான் நமது தேசம் என்பது தவறு!
(ஆதித்தனார் சிந்தனைப்படி) அண்டை மூன்று மாநிலங்களிடம் இழந்தவை, புதுச்சேரி மற்றும் ஈழம் ஆகியவற்றை சேர்த்தே இனி தேசியம் பேசவேண்டும்.
 தமிழ்தேயம் தற்போதைய தமிழ்நாடு மாநிலத்தைப் போல் ஒன்றரை பங்கு வரும் (தமிழ்நாடு பரப்பளவு ஏறத்தாழ 1,30,000 ச.கி.மீ; தமிழ் தேச பரப்பளவு ஏறத்தாழ 2,20,000 ச.கீ.மி ஆகும்). தமிழ்தேயம் உலகில் கால்வாசியை ஆண்ட இங்கிலாந்து தேசத்தை விடப் பெரியது. ஏறத்தாழ தற்போதைய ஜெர்மனி பரப்பளவு வரும். 

 நமது மாநிலத்திற்கு தமிழ்'நாடு' என்று நாம் பெயர் வைத்திருக்கிறோம். நாடு என்பது நிர்வாக அடிப்படையிலானது. அதாவது ராணுவ வேலி போடப்பட்ட நிலப்பரப்பு 'நாடு' என்றாகும்.
ஒரு நாட்டில் பல தேசங்கள் இருக்கலாம் (இந்தியாவைப் போல). ஒரு தேசத்தில்  பல நாடுகளும் இருக்கலாம் (பழங்காலத்தில் தமிழ்தேயத்தில் பல நாடுகள் இருந்தன; இருந்தாலும் தமிழ்தேயம் எது என்கிற புரிதலும் சங்ககாலத்தில் இருந்தே நம்மிடம் இருந்து வந்துள்ளது). தமிழ்நாடு என்பது நில நிர்வாகம் மற்றும் காவல்படை கொண்ட நிர்வாக அமைப்பு ஆகும். இது 'நாடு' எனும் சொல்லுக்கு முழுமையான தகுதியற்றது. 

 (தமிழ்நாடு தாண்டிய) தமிழ்தேயம் தற்போதும் இருக்கிறது. ஆனால் இலங்கை, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் கீழ் உள்ளது. ஒரு தேசம் அந்நிய ஆட்சியில் எவ்வளவு காலம் இருந்தாலும் அது சுரண்டப்படலாம் ஆனால் சுருங்காது (எ.கா: பிரிட்டிஷ் இந்தியா).
 அதுவே அந்நிய குடியேற்றம் நடந்தால் சுருங்கி வலுவிழந்து அழிந்துவிடும் (எ.கா: அமெரிக்கா). தமிழ் தேசமானது அந்நிய குடியேற்றங்களால் எல்லைகளை இழந்து சுருங்கிக்கொண்டும் வலுவிழந்தும் வருகிறது.

 தேசியம் என்பது தேசத்தை (ஒற்றை) நாடாக்கி தன்வலுவில் ஆளும் கொள்கை ஆகும்.
தமிழ்தேசத்தை தனிநாடாக அமைக்க வேண்டும் என்பதால் அந்த அமையவுள்ள நாட்டை "தனித் தமிழர்நாடு" என்று அழைக்கிறோம்.  
தேசம் எவ்வளவு பெரியது என்று தெரியாமல் தேசியம் பேசுவது அறிவுடைமை ஆகாது.

 எப்போதுமே தேசத்தை நாடாக்குவது இனத்திற்கு பெரிய நன்மையில் முடியும்.
வளர்ந்து நிற்கும் ஐரோப்பிய நாடுகள் சான்று.
ஐரோப்பிய இனங்கள் தமது தேயத்தை நாடு ஆக்கி தத்தம் தாய்மொழியில் நிர்வாகம் செய்கின்றன.

 ஒரு இனம் தனது மண்ணின் மைந்தனை ஆட்சியில் அமரவைத்து தனது மொழியால் நிர்வாகத்தைக் கட்டமைத்து தன்னைத் தானே ஆளும்போது வெளிப் பிரச்சனைகளை எளிதாக எதிர்கொள்ளமுடியும் என்பதுடன் உச்சபட்ச தலைமையிலிருந்து கடைக்கோடி குடிமகன் வரையிலான இடைவெளியானது மிகவும் குறையும்.
தலைமை தவறானால் நீக்குவதும் எளிதாக இருக்கும்.

 மிகப்பெரிய போராட்டமான ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி ஒரு வாரம் கழித்துதான் இந்தி சேனல்களில் ஒரு வரிச் செய்தியே வருகிறது. பத்து நாட்களாக லட்சக் கணக்கில் திரண்டு போராடினால்தான் மத்திய அமைச்சர் நமக்கு பத்து நிமிடம் ஒதுக்கிறார்.
 100 உயிர் போனால்தான் இந்தியா முழுக்க அந்த பிரச்சனை கவனம் பெறுகிறது. 

 சமீபத்தில் பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு நடத்திய மிக நீண்ட போராட்டம் பற்றி நாம் அறிவோம். 
 வடமேற்கு இந்தியா முழுவதும் எல்லையற்ற ஆதிக்கம் செலுத்தும் பஞ்சாபியருக்கே இந்நிலை என்றால் கடைக்கோடியில் இருக்கும் நம் நிலை என்ன?
நம்மால் டெல்லியை முற்றுகை இடுவதை நினைத்துப் பார்க்க முடியுமா? 
தொலைவு, மொழி, அரச்கட்டமைப்பு என நமக்கும் உச்ச அதிகாரத்திற்கும் இவ்வளவு இடைவெளி நியாயம்தானா?!
 இதுவே நமது உச்ச அதிகாரம் சென்னை என்றால்? நம்மால் நினைத்ததை சாதிக்க முடியும்தானே?! 

 தற்போது தமிழ் உணர்வுடன் பேசினாலே தேசத் துரோகி என்றழைக்கும் போக்கும் இன்று உள்ளது.
 தேசப்பிதா என்றழைக்கப்படும் காந்தியடிகள்தான் மொழிவாரியாக காங்கிரஸ் கட்சியை பிரித்துக் கட்டமைத்து மொழிவழி மாநிலங்களை அமைக்க முதல் வித்திட்டவர். அக்காலத்தில் மொழிவழி இனங்களுக்கான உரிமைகள் அளிப்பது பற்றிய வாக்குறுதிகள் எதுவும் இந்தியா விடுதலையான பிறகு நிறைவேற்றப்படவில்லை. சுருக்கமாகக் கூறினால் அன்று ஆங்கிலேயர் சமஸ்தானங்களுக்கு அளித்த உரிமைகள் கூட இன்று மாநிலங்களுக்கு நடுவணரசு அளிக்கவில்லை (புதுக்கோட்டை சமஸ்தானம் அம்மஞ்சல்லி எனும் தனி காசு வைத்திருந்தது).

 தற்போதைய இந்தியா என்பது தமிழர்களின் ஒட்டுமொத்த குரலைக் கூட (தமிழ்நாடு அனைத்துக் கட்சித் தீர்மானம்) மதிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு சர்வாதிகாரம் பெற்று விளங்குகிறது.

 அதாவது நம் முன்னோர்கள் கேட்ட (கூட்டரசு) இந்தியா வேறு!
 இன்று இருக்கும் (ஏகாதிபத்திய) இந்தியா வேறு!

 இருந்தும் விடுதலைக்கு பிறகு நம்முடைய முன்னோர் போராடி  நமது இனத்தின் தாய்நிலத்தில் 65% நிலப்பரப்பை பகுதியளவு நிர்வாகம் செய்யவாவது வழிவகுத்தனர்.
 இதுவே இன்றைய தமிழ்நாடு மாநில அதிகாரம்.
 அதையும் திராவிடம் என்கிற பெயரில் சதிசெய்து வேற்றினத்தார் கைப்பற்றிக் கொண்டுள்ளனர். 
 "தமிழ் வளர்ச்சிதான் இன வளர்ச்சி" என்றும் "சாதியை ஒழிப்பதே இனத்தை ஒருங்கிணைக்கும்" என்றும்  நம்மை மூளைச் சலவை செய்து தமது (வேற்று) மொழியையும் தமது (வேற்றின) சாதி அடையாளத்தையும் மறைத்துக்கொண்டு தமிழராக நடித்து நம் தலைமேல் ஏறி உட்கார்ந்துகொண்டு இனத்தையும் மண்ணையும் அழிக்கும் வேலையைச் செய்துகொண்டுள்ளனர். இவர்கள் தமிழில் பேசுவதால் சாதியை வைத்தே அடையாளம் காண முடியும் எனும் நிலையில் இனவுணர்வு கொண்டோரை "சாதியை ஆராயும் வெறியன்" என்றழைக்கும் போக்கு இவர்களிடம் உள்ளது. 

 அண்டை மாநிலங்கள் தமது மண்ணையும் மக்களையும் காப்பதில் குறியாக இருக்கும்போது இங்கே திராவிடம் அதைச் செய்வதில்லை. இதனால் நமது ஆற்று மணலும் மலையும் கொள்ளை போகிறது. ஒரு மலையாளிக்கு பக்கத்தில் ஒரு ஆற்றில் மணல் அள்ளுவதை விட காவிரியில் வந்து மணல் அள்ளுவது கடினமில்லை. பணம் செலவளித்து தமிழக எல்லையில் வந்து குப்பை கொட்டுகிறார்கள். ஏனென்றால் இயற்கை வளங்களைக் காக்க அம்மாநிலங்களில் கடுமையான சட்டங்கள் உள்ளன. 
தற்போது கேரளாவில் அதானி துறைமுகம் அமைக்க  தமிழக மலைகளைக் குடைந்து கணக்கு வழக்கில்லாமல் கொண்டு செல்கிறார்கள். 
ஏன் கேரளாவில் மலைகளே இல்லையா?!
 அந்த எல்லைப் பகுதிகளில் பாஜக வேகமாக வளர்ந்துவருகிறது ஏனென்றால் பின்னணியில் அதானி இருக்கிறார்!
 காவிரிப் பிரச்சனையும் இதே பின்னணிதான் அளவுக்கதிகமாக கர்நாடகா தண்ணீர் சேர்த்துவைத்து அதை தொழிற்சாலைகளுக்குத் தருகிறது. தமிழகத்தில் தண்ணீர் இல்லாத ஆற்றில் மணல் அள்ளுகிறார்கள். மொத்த தமிழகமும் ஆந்திராவிடம் அரிசி வாங்குகிறது என்றால் அது மிகையில்லை. இதனால் திராவிட கட்சிகளுக்கு அண்டை மாநில பணக்காரர்கள் நிதியுதவி செய்கின்றனர். இப்படி தமிழக அரசியல்வாதிகளுக்கு நல்ல வருமானம் வருகிறது என்பதால் அவர்கள் மதம், சாதி என்று மக்களை மடைமாற்றியே காலம் கழிக்கின்றனர். இந்த நாடகத்திற்கு பாஜக உடந்தையாக போலிச் சண்டை போடுகிறது. ஆந்திராவில் சுங்கச்சாவடியில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டபோது மக்களை மடைமாற்ற கோவை கார் சிலிண்டர் வெடித்த விபத்தை பெரிதாக்கி தீவிரவாதம் மதவாதம் என்று திராவிட மற்றும் இந்துத்துவ அரசியல்வாதிகள் அரசியல் செய்தது சிறந்த எடுத்துக்காட்டு.
 
  வேலைவாய்ப்பு பறிப்பும் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. காங்கிரஸோ அல்லது பாஜகவோ ஆளும் மாநிலங்கள் அனைத்தும் தமது மண்ணின் மைந்தருக்கே வேலை என்று சட்டம் போட்டுள்ளன. தற்போது ஓசூரில் டாடா நிறுவனத்திற்கு தனி ரயிலில் 800 பெண்கள் வந்து இறங்கியபோது எழுந்த எதிர்ப்புக்கு அந்த நிர்வாகம் கூறிய காரணம் இங்கு 'மண்ணின் மைந்தருக்கு வேலை' என்று சட்டம் இல்லை என்பதே! 
 பிற மாநிலங்களில் நமக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. நமது மாநில அரசு வேலைவாய்ப்பும் நமது மாநிலத்தினுள் மத்திய அரசு வேலைகளும் முழுக்க வடவர் கைக்குப் போகிறது.
 
 மத்திய அரசு பழைய ஆங்கிலேய அரசை விட மோசமாக மாநில வருவாயைக் கொள்ளையடிக்கிறது (ஒரு ரூபாய் வாங்கிவிட்டு 30 பைசா கொடுக்கிறது). அத்துடன் வடவரையும் இந்தியையும் முழுமூச்சாகத் திணிக்கிறது.
கல்வி அதிகாரம் மாநில வரம்பிலிருந்து எமர்ஜென்சி காலத்தில் பறிக்கப்பட்டது இன்றுவரை தொடர்கிறது. இதன் விளைவே நீட் தேர்வு மற்றும் மாணவர் மரணங்கள். உயர்கல்வி மாணவர் சேர்க்கையும் இவ்வாறே தமிழரல்லாதவர் கைக்குப் போகிறது.
 தப்பித் தவறி வாய்ப்பு கிடைத்து வெளிமாநிலங்களில் உயர்கல்வி படிக்கப்போன தமிழக மாணவர்கள் 10 பேர் வரை மர்மமாக இறந்துள்ளனர். 

 காங்கிரசை விட பாஜக அரசு மாநிலங்களை நசுக்குவதிலும் இந்தி, இந்தியரைத் திணிப்பதிலும் வெளிப்படையாக மிகத் தீவிரமாக இருக்கிறது.
 நமது மூல குடியான குறவர் பழங்குடி இடவொதுக்கீடு கிடைக்காமல் தாழ்த்தப்பட்ட (SC) ஒதுக்கீட்டில் இருக்க மத்திய அரசு ஆதரவினால் மராத்திய வந்தேறிகளான நாடோடி நரிக்காரர்கள் பழங்குடி இடவொதுக்கீடு (ST) பெற்றுவிட்டனர். இதைக் கண்டித்து ஆறுநாள் உண்ணாவிரதம் இருந்த இரணியன் அவர்களை நிற்கவைத்து பேசி அனுப்பினார் தி.மு.க தலைவர். தமிழர்களை நசுக்குவதில் இருவரும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இது நல்லவொரு சான்று.

 மோடி அரசு தமிழக நிதியை தராமல் இழுத்தடிப்பதுடன் தமிழக மீனவரை ஐந்துமுறை சுட்டுள்ளது.
 இது 'வாயைத் திறந்தால் தமிழர்கள் மீது இனப்படுகொலை நடத்தப்படும்' என்கிற முன்னெச்சரிக்கையே!

 எல்லாம் புரிந்தும் நம்மால் எதுவுமே செய்யமுடியவில்லை. ஏனென்றால் நம் மாநில அதிகாரத்தில் இருக்கும் வேற்றினத்தார் நம்மைத் தொடர்ந்து திசைதிருப்பி குழப்புவதை திட்டமிட்டு அட்டவணை போட்டு செய்கின்றனர். சாதி, மதம், திரைப்படம், சாராயம், பாலியல் என பலவாறான திசைதிருப்பல்கள் நடக்கின்றன.

 தப்பித் தவறி ஒரு தமிழர் (அவரும் அதிகார அடிவருடிதான்) ஆட்சிக்கு வந்தபோதுதான் இந்த தமிழ்நாடு நாள் அறிவிப்பும் வந்தது. இதையும் குழப்ப திராவிட கட்சியினர் தவறவில்லை. ம.பொ.சி அவர்கள் போராடி "மதராஸ் மாகாணம்" என்று இருந்ததை  "தமிழ்நாடு" என்று பெயர்மாற்றம் செய்யவைத்தார்.  அதை அறிவித்தது மட்டுமே அதிகாரத்தில் இருந்த அண்ணாதுரை. அப்படி அறிவித்தபோதும் ம.பொ.சி க்கே நன்றி தெரிவித்துள்ளார். ஆனால்  தமிழ்நாடு என்று பெயரிட்டதே அண்ணாதுரைதான் என்றும் அந்த அறிவிப்பு வந்த நாளைக் கொண்டாடவேண்டும் என்று திராவிடவாதிகள் குழப்பி வருகின்றனர்.
 ஏற்கனவே தமிழ்ப் புத்தாண்டை இவ்வாறே குழப்பியுள்ளனர்.

 இன்று தமிழ்நாடு நாள் அரசு விழாவாகக் கொண்டாடுகிறோம் என்றால் அது முழு வெற்றியல்ல!
 ஒரு வீடு கட்ட நிலம் வாங்கியதைப் போன்றதுதான்.   நிலத்தை வேலியிட்டு, அடித்தளம் இட்டு, சுவர் எழுப்பி, கூரை அமைத்து, வீடு கட்டி முடித்தால்தான் முழு வெற்றி.
அதாவது முழு தமிழ்தேயத்தையும் தனிநாடு ஆக்கி உலகில் மற்ற இனங்கள் போல நாம் தன்மானத்துடன் வாழவேண்டும் என்பதே தமிழ்தேசியத்தின் இலக்கு!

 பிற நாடுகளைப் போல நியாயமாக  அமைந்திருக்க வேண்டிய "தமிழர் நாடு" வரைபடம் இங்கே தரப்பட்டுள்ளது.
இதற்கான சான்றுகளும் "தனித் தமிழர்நாடு" எனும் நூலாக 2021 இல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தற்கால நிலையைக் கருத்தில் கொள்ளாமல் இலக்கியம், கல்வெட்டு, ஆவணங்கள் அடிப்படையில் பூர்வீக தாய்நிலம் வரையப்பட்டுள்ளது. 
 நெல்லூர், திருப்பதி, பெங்களூர், மைசூர், பாலக்காடு, இடுக்கி, திருவனந்தபுரம், அனுராதபுரம், கதிர்காமம் என (தமிழக மற்றும் ஈழ வரைபடத்தில் இடம்பெறாத) நமக்குச் சொந்தமான பெரும் நிலப்பரப்பை சான்றுகளுடன் உரிமை கோரும் நூலாக உள்ளது  (நம் தேசததில் 65% தான் தற்போதைய தமிழகம்).

 மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது (வரலாற்றை கருத்தில் கொள்ளாமல்)  தமிழர் பெரும்பான்மை அடிப்படையில் கோரப்பட்ட "தமிழ்நாடு" வரைபடமும் தரப்பட்டுள்ளது.
 இதிலும் தமிழருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பல பகுதிகள் அண்டை மாநிலங்களிடம் பறிபோய்விட்டதை அறியலாம் (இதனால் நமக்கு ஏறத்தாழ ஐம்பது தேர்தல் தொகுதிகளும் அதற்கான பதவிகளும் கிடைக்காமல் போயின).

 உலகில் தமிழர்கள் பத்து கோடிப் பேர் இருக்கிறோம்.
இத்தனை பெரிய இனத்திற்கு மாநில உரிமைகள் போதவே போதாது என்றாலும் நம்மிடம் இருக்கின்ற ஒரே துருப்புச் சீட்டு நமது மாநில அதிகாரம் மட்டுமே!

 இந்த அதிகாரமும் தமிழர் கையில் இல்லாததால்  வேலி இல்லாமல் திறத்துகிடக்கும் தமிழகம் வந்தேறிகளின் வேட்டைக்காடாக இருக்கிறது. அதிலும் தற்போது வடவர் குடியேற்றம் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
 நிலைபெற்ற ராணுவப் படை முகாமைக் கூட அப்புறப்படுத்தி விடலாம். ஆனால் வேற்றினத்தார் ஒரு குடும்பம் குடியேறினாலும் நம்மால் எதுவும் செய்யமுடியாது. அவர்களை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
 தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றரை கோடி வடயிந்தியர் குடிவந்துள்ளனர் என்கிறார் பெ.மணியரசன் அவர்கள்.
 
 ஆகவே இருக்கின்ற மாநில அதிகாரத்தை தமிழர் கைப்பற்ற வேண்டும். குடியேற்றத்தைத் தடுக்கவேண்டும். புதிய வந்தேறிகளை வெளியேற்ற வேண்டும். பழைய வந்தேறிகள் திராவிட ஆட்சியின் பயனாக அடைந்த அனைத்தையும் பறிமுதல் செய்து தமிழருக்கு வழங்க வேண்டும். ஜனநாயக வழியில் நாம் நமது மாநிலத்திற்குள் எல்லா மட்டத்திலும் நமது இனத்தின் ஆதிக்கத்தை உறுதிசெய்ய வேண்டும். மாநிலத்தினுள் மத்திய மற்றும் மாநில வேலைவாய்ப்புகளை தமிழருக்கே வழங்கவேண்டும். மாநில இடவொதுக்கீடு ST, BC, MBC, SC என்று பொதுவாக இல்லாமல் அந்த அந்த சாதியின் பெயரிலேயே அந்த அந்த சாதிகளின் சதவீதத்திற்கு ஏற்ப இடவொதுக்கீடு வழங்கப்பட வேண்டும். பெயருக்குப் பின்னால் குடிப்பட்டம் சேர்த்துக்கொள்ள வலியுறுத்த வேண்டும் (வேலைவாய்ப்பிலும் உயர்கல்வியிலும் வடவர் ஊடுறுவல் அவர்களது குடிப் பெயர்களை வைத்தே கண்டறியப்பட்டது). 

மத்திய அரசின் வரிக் கொள்ளையை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி இலிருந்து தமிழ்நாடு விலக வேண்டும். முடியாத பட்சத்தில் மாநில வருவாயைக் கணக்கில் காட்டாமல் கையாள வேண்டும். நம் இனத்தில் பெரும் பணக்காரர்களை உருவாக்க வேண்டும்.
தங்கம் கடத்தி முத்தூட், ஆலுக்காஸ் போன்ற நிறுவனங்களை கேரளா உருவாக்கியது போல் கடற்கரையைத் தாரைவார்த்து அதானியை குஜராத் உருவாக்கியது போல் நாமும் செய்ய வேண்டும்.
 அதாவது பிற மாநிலங்கள் போல செயல்பட வேண்டும்.

 நமது இனமான ஈழத்தமிழர் குடியுரிமை பெறவேண்டும். எம்.ஜி.ஆர் காலத்தில் புலிகளுக்கு உதவியது போல ஈழப் போராளிகளை மீண்டும்  உருவாக்க வேண்டும். 
 இழந்த எல்லைப் பகுதிகளை ஜனநாயக வழியில் அதாவது வழக்கு போடுதல், எல்லைக்கு இருபுறமும் ஆர்ப்பாட்டம், மாநிலம் தழுவிய போராட்டம், எல்லைப் பகுதி மாநில அலுவலகங்கள் முற்றுகை, பெரும் தொகையில் எல்லைதாண்டுதல், கொடுக்கல் வாங்கல் முறிப்பு, வேற்றினத்தார் வெளியேற்றம், வேற்றின நிறுவனங்கள் மூடல், அண்டைமாநில பொருட்களுக்குத் தடை, எல்லைப் பகுதிகளை வரைபடத்தில் சேர்த்தல் மற்றும் குடும்ப அட்டை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மீட்க முயல வேண்டும்.
 வீரப்பன் போன்ற போராளிகளை உருவாக்கி அண்டை மாநிலத்தினுள் தமிழரைக் காக்கவும் வேண்டும்.

 ஜனநாயக வழியில் நாம் வெற்றி பெற வாய்ப்பு குறைவு. அப்படி ஜனநாயக போராட்டம் தோல்வியில் முடிந்தால் தமிழர் மீது அடக்குமுறை மேலும் இறுக்கமானால் செண்பக ராமன் மற்றும் அவரது சீடர் நேதாஜி வழியில் பிரபாகரன், தமிழரசன், வீரப்பன் போல ஆயுதம் தூக்கி நம் தேசத்தை நாமே விடுதலை செய்யவும் தயாராக வேண்டும். 

இந்த தமிழ்நாடு நாளில் இருப்பதை காப்பதுடன் இழந்ததை மீட்கும் உறுதி மொழி எடுப்போம்!

இனி உண்மையான தமிழ்தேசியம் பேசுவோம்!
தனித் தமிழர்நாடு அமைப்போம்! 

 நன்றி!

Sunday 30 October 2022

ஆலயம் நுழைந்த பார்ப்பனர் மூவர்

ஆலயம் நுழைந்த பார்ப்பனர் மூவர்

 வைத்தியநாத ஐயர் செய்த ஆலய நுழைவு பற்றியும் ஆலய நுழைவை சட்டமாக்கிய இராஜாஜி பற்றியும் மீண்டும் பேசுகிறோம்.
 அத்தோடு எம்.சி. ராஜா அவர்கள் ஆலய நுழைவு வேண்டி தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பே தமிழகத்தில் முதன்முதலாக 1933 இல் ஆலய நுழைவு தீர்மானம் (The Hindu Temple Entry Disabilities Removal Bill) கொண்டுவந்த சி.எஸ்.ரங்க ஐயர் பற்றியும் பேசுவோம். 
 நீதிக் கட்சி ஜே.எஸ்.கண்ணப்பர் ஆலய நுழைவு முயற்சி (1927) எனும் கட்டுக்கதையை புறந்தள்ளுவோம்.
 

Tuesday 25 October 2022

Liberation Tigers of Tamilian Nation

Liberation Tigers of Tamilian Nation

புலிகள் தமிழகம் வரவேண்டும்!
தமிழர்நாட்டு விடுதலைப் புலிகள் (LTTN) என்று பெயர் மாற்றிக்கொள்ள வேண்டும்!
 உலகத் தமிழர் அனைவரையும் திரட்டி முழுத் தமிழர்நாட்டையும் மீட்கவேண்டும்!
 புலிகள் வழியில் தனித் தமிழர்நாடு விடுதலை அடையவேண்டும்!


 

Friday 21 October 2022

ஐத்தாவது முறையாக மீனவரைச் சுட்ட ஹிந்தியர்

ஐத்தாவது முறையாக மீனவரைச் சுட்ட ஹிந்தியர்

 ஹிந்திய கடற்படை இதுவரை தமிழக மீனவரை ஐந்துமுறை சுட்டுள்ளனர்.
அந்த தேதிகள் வருமாறு,
02.08.2013 , 
30.03.2017, 
09.10.2017, 
13.11.2017,
21.10.2022.

 ஒவ்வொரு முறையும் இந்தி பேசச் சொல்லியோ அல்லது இந்தி புரியாததாலோ இந்த கொலைமுயற்சி நடக்கிறது.
 மத்திய அரசு ஹிந்தி திணிப்பு செய்வதும் தமிழர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் அதைத் தொடர்ந்து இவ்வாறான நிகழ்வுகளும் நடக்கின்றன.
 2013 இல் பாஜக எழுச்சி பெற்ற வேகத்திலும் 2017 இந்தி தினம் திணிப்பும் தற்போது இந்தி பயிற்றுமொழி என்கிற திணிப்பும் இத்தகைய சம்பவங்களுக்கு காரணம்.
 

 

 

Thursday 20 October 2022

கருணாநிதி இந்தியை எதிர்த்த லட்சணம்

கருணாநிதி இந்தியை எதிர்த்த லட்சணம்

 முரசொலி மாறன் (இயற்பெயர் வேறு) இறந்தபோது அந்த மத்திய அமைச்சர் பதவிக்கு திமுக வில் மூன்று பேர் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
 1) ஸ்டாலினைக் காப்பாற்ற தன் உயிரை விட்ட சிட்டி பாபு வின் மகன்,
2) இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் தீக்குளித்த அரங்கநாதனின் மகன்,

3) முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன்.

 தன் பேரனான தயாநிதிக்கே அந்த மத்திய அமைச்சர் பதவியை அளிக்கிறார் கருணாநிதி!

 மூத்தவர் இருக்க பேரனுக்கு பதவி ஏன் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் 
"தயாநிதிக்கு இந்தி தெரியும்" 

நன்றி: ராஜீவ்காந்தி பேச்சு 
நா.த.க வில் (ஒல்லியாக) இருந்தபோது பேசியது

Monday 17 October 2022

இந்தியை எதிர்த்த பார்ப்பனர்கள்

இந்தியை எதிர்த்த பார்ப்பனர்கள்

 நமது சமகாலத்தில் இந்தியை இந்தியர்கள் மத்தியில் எதிர்த்த மூன்று பார்ப்பனர்களைக் காட்டமுடியும்.

 இணைத்துள்ள காணொளியில் நான்கு நிகழ்ச்சிகள் உள்ளன.

 மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் R.மாதவனை அழைத்து  செயிப் அலிகான் மற்றும் ஷாருக்கான் ஆகிய முன்னணி கதாநாயகர்கள் R என்றால் என்னவென்று கேட்டு அதற்கு மாதவனை விளக்கம் அளிக்க விடாமல் அவர்களாக அர்த்தம் சொல்லிக்கொண்டிருக்க மாதவன் கோபம் ஆகிறார். அவர்கள் 'தமிழில் பேசுங்கள்' என்று கூற "போங்கடா கிறுக்கு கதாநாய்களா?" என்று திட்டுகிறார்
( 2010, 55 th film fare awards).

 இந்தியில் பேசிக்கொண்டிருந்த நவ்ஜோத் சிங் சித்துவிடம் இது எல்லாருக்கும் புரியாது எனவே ஆங்கிலத்தில் பேசும்படி கேட்க அதற்கு அவர் இந்திதான் எல்லாருக்கும் புரியும் என்று சொல்ல உடனே "நான் தமிழில் பேசினால் உனக்கு புரியுமாடா?" என்று சத்தம் போட ஆரம்பித்தார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்
(2013 ipl, sony channel).

 NDTV ஏற்பாடு செய்த இந்தியை ஆட்சிமொழி ஆக்குவது பற்றிய விவாதத்தில் சித்ராஜி என்பவர் இந்தியிலேயே பேச அதை எந்த மொழிக்காரரும் எதிர்க்காத சூழலில் எழுத்தாளர் ஞாநி சங்கரன் தமிழில் பதிலளித்துப் பேசி எதிர்க்கிறார். சித்ராஜி ஆங்கிலத்தில் பேச மறுக்க நெறியாளர் தான் மொழிபெயர்ப்பதாக சொல்கிறார். உடனே ஞாநி தமிழுக்கும் மொழிபெயர்ப்பாளர் கொடுங்கள் என்று குரல் கொடுக்கிறார்
(2014, ndtv, big fight over language).

 ஜல்லிக்கட்டு தடை தொடர்பான விவாதத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பாக்சிங் போன்ற போட்டிகளெல்லாம் நடக்கிறது எங்கள் பல ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று ஆங்கிலத்தில் கூறி பிறகு தமிழிலும் அதைக் கூறி நெறியாளரான zakka jacob என்பவரையும் 'நீயும் தமிழன்தானே' என்று கேட்டு தமிழில் பேச வைக்கிறார்
(2019, CNN news 18).

 வேறொரு இந்திய தொலைக்காட்சி விவாத்ததிலும் ஸ்ரீகாந்த் தமிழில் பாட்டுப்பாடி சல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்துள்ளார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்.

 பார்ப்பனர்கள் தமிழ் மொழி உணர்வுடனும் இன உணர்வுடனும் இப்போதும் எப்போதும் இருககின்றனர்.

 காணொளிகளுக்கு நன்றி: thug k thug (YouTube)

Sunday 16 October 2022

வழக்கமான சட்ட திரிப்புகளும் பதில்களும்

வழக்கமான சட்ட திரிப்புகளும் பதில்களும்

 ஆங்கிலேயர் பிராமண ஆதிக்கத்தை ஒழித்ததாக ஒரு பதிவு உலா வருகிறது அது பற்றி பார்ப்போம்.

 கீழே திரிக்கப்பட்ட பதிவை அப்படியே இட்டு அதில் இடையிடையே [ ] இந்த அடைப்புக் குறிக்குள் பதில் எழுதியுள்ளேன்.

அந்த பதிவு வருமாறு,

 ஆங்கிலேய அரசு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு ஆதரவாக இயற்றிய சட்டங்கள்
வியக்கவைக்கும் தினமணி கட்டுரை - 25.02.2007.
 பிரிட்டிஷார் Vs பிராமணர்கள்

[இப்படி ஒரு கட்டுரை தினமணியில் வரவே இல்லை]

பார்ப்பனர் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும், வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த, பிராமணர்களின் மனுதர்மச் சட்டத்தை, கிறிஸ்தவ பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல், சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், 1773 ஆம் ஆண்டு முதல் கிறிஸ்தவ பிரிட்டிஷ் அரசு,  பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.

[1773 ஒழுங்குமுறை சட்டம் பிரிட்டிஷ் அரசு கிழக்கிந்திய கம்பனிக்கு விதித்த கட்டுப்பாடுகள் தொடர்பானது, இது 'சட்டம் அனைவருக்கும் சமம்' என்கிற நோக்கமெல்லாம் கிடையாது.
1773 இந்து சட்டம் என்பது ஒன்று வந்தது. அது அன்றைய வங்காளத்தின் சில சாதியினருக்கு மட்டுமானது]

 சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை, 1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை, கிறிஸ்தவ வெள்ளையர்களால்  வழங்கப்பட்டது.
[1795 இல் எந்த சட்டமும் இயற்றப் படவில்லை] 

 1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை, கிறிஸ்தவ வெள்ளையரால்  வெளியிடப்பட்டது. 
[இதுவும் பொய் அப்படி எந்த சட்டமும் இயற்றப்படவில்லை]

 1813 ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம், கிறிஸ்தவ வெள்ளையரால்  கொண்டுவரப்பட்டது.
[1813 இல் பட்டயச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் கிழக்கிந்திய கம்பனி உரிமம் நீட்டிக்கப்பட்டது,  ஆங்கிலக் கல்விக்கு ஒரு லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது, கிறித்துவ மதம் பரப்ப அனுமதி அளிக்கப்பட்டது. இதுதான் கொத்தடிமை ஒழிப்பாம்! 
உண்மையில் 1843 இல் தான் அடிமை ஒழிப்பு சட்டம் வந்தது. அன்று வட இந்தியாவில் 8 ல் ஒருவர் அடிமை. தமிழகத்தில் 100 ல் 4 பேர் அடிமை. பெரும்பாலும் பண்ணை அடிமைகள் ]

 பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன்  கொல்லப்பட வேண்டும் என்ற பிராமணர்கள் மனுசாஸ்திர  சட்டம் (VII 374, 375), கிறிஸ்தவ வெள்ளையர்களால் நீக்கப்பட்டது.
 ஒரு பிராமணன்,  காம ஆசை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்து விட்டால், அது பிணம் போன்றதே ஆகும்.(பிராமணர்  மனுசாஸ்திர சட்டம் IX 178). இந்த மனுசாஸ்திர சட்டத்தையும், கிறிஸ்தவ வெள்ளையர்களே நீக்கினர். 
[இதில் ஆண்டு கூட இல்லை, எப்போதுமே வழக்கத்தில் இல்லாத மனு ஸ்மிருதி ஆங்கிலேயர் காலத்தில் மட்டும் பின்பற்றப் பட்டிருக்குமா என்ன?! 
இந்து சட்டம் 1773 இல் மனுஸ்மிருதி அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. அதில் பல்வேறு குழப்பங்கள் இருந்தன. (அதாவது கலாச்சாரம் தொடர்பான சட்டங்கள் ணாஸ்திரங்களை ஆராய்ந்து எழுதப்படன.  தண்டனை க்கான சட்டம் அல்ல) ஜோன்ஸ்  என்பவர் இந்தியர்களுக்கான சட்டத்தை இயற்ற மனு ஸ்மிருதியை ஆராய்ந்து 1794 இல் அதை மொழிபெயர்ப்பு செய்கிறார். அதுவரை மனு ஸ்மிருதி பற்றி யாருக்குமே தெரியாது. இப்படி பல்வேறு சாஸ்திரங்களை ஆராய்ந்து இந்துக்களுக்கான சட்டம் 1860 இல் வந்தது. மனு கூறும் சட்டத்தை நீக்குவதாக இதில் எங்கும் இல்லை] 

பிராமணன் தப்பு செய்தால் தண்டனை இல்லாமல் இருந்த நிலையில், பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை, 1817 ஆம் ஆண்டு கிறிஸ்தவ பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது
[இது வேடிக்கையாக இருக்கிறது. Murders Abroad Act 1817 என்பது பிரிட்டிஷ் பேரரசின் பல்வேறு பகுதிகளில் கொலைகளுக்கான பொதுத் தண்டனை பற்றியது]

  சூத்தரப் பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிவிடைகள் செய்ய 7 நாள்கள் கோவிலில்? இருக்க வேண்டும் என்ற கொடுமை, கிறிஸ்தவ பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது. 
[1819 இல் எந்த சட்டமும் இயற்றப்படவில்லை]

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த பிராமண இனவெறி மனு சாஸ்திர  சட்டத்தை, 1835 ஆம் ஆண்டு கிறிஸ்த்தவரான Lord மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.
[1835 இல் english education act ஆங்கில கல்வியைத் திணிக்க கொண்டுவந்த சட்டம் ஆகும்]

 சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டுக் கொலைசெய்ய  வேண்டும்! 1835-ல் கிறிஸ்தவ பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.
[மனம் போன போக்கில் எழுதப்பட்டுள்ளது. குழந்தையைக் கொல்ல எந்த வேதம் சொல்லும்?! 1835 இல் அப்படியான அரசாணை எதுவும் வெளிவரவில்லை]

 1835 ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை கிறிஸ்தவ வெள்ளையர்களால் கொண்டு வரப்பட்டது.
[இதுவும் கட்டுக்கதை]

1868 ஆம் ஆண்டு கிறிஸ்தவ பிரிட்டிஷ் அரசாங்கம், பிராமண மனுசாஸ்திர  சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது!
இவற்றின் மூலம் இந்துமக்களுக்கு கொடுமை இழைத்த பிராமணர் ஆதிக்க சட்டம் மாற்றப்பட்டது.
[1868 இல் Hindu law முழுமையான வடிவத்திற்கு வந்தது. அப்போது மனு உட்பட சாஸ்திரங்களைத் தழுவிய அதன் பழைய வடிவம் நீக்கப்பட்டது]
----------------

 அதாவது பார்ப்பன, சூத்திர என்கிற வார்த்தைகளைப் போட்டு எதாவது ஆண்டுகளை இடையில் சேர்த்து எதை எழுதினாலும் அப்படியே நம்பும் மனநிலையில் இருக்கிறோம்.

 திராவிட ஊதுகுழல்கள் இன்னமும் தமது குலதெய்வங்களான ஆங்கிலேயரை புனிதப்படுத்துவதை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
 
 சில ஆண்டுகள் முன் வந்த இப்பதிவு காணொளியாகவும் உலவுகிறது. மொழிகடந்து ஆங்கில கட்டுரையாகவும் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

 மேற்கண்ட பதிவு முழுக்கவே பொய்கள் நிரம்பியது.

 இதை ஒரு அறிவுள்ள வக்கீலோ, ஐ.ஏ.எஸ். தேர்வாளரோ கூடவா கடந்து வரவில்லை?! 

 ஒரு குற்றச்சாட்டு என்றாலும் அது நேர்மையாக இருக்க வேண்டும்.

 எதிரியாகவே இருந்தாலும் அவர் மீது வைக்கப்படும் நேர்மையற்ற குற்றச்சாட்டைத் தட்டிக் கேட்கவும் வேண்டும். 

Sunday 9 October 2022

தமிழ்நாட்டான் இராசராசன்

தமிழ்நாட்டான் இராசராசன்

புது சங்கி:- ராஜராஜ சோழன் காலத்தில் தமிழ்நாடே கிடையாது !

பழைய சங்கி:- சும்மா இருடா! வாங்குன வர போதும்!

தமிழன்:- அப்பவும் தமிழ்நாடு இருந்தது! இராசராசன் பெருமைகளைச் சொல்லும் (மெய்கீர்த்தி) அவனது ஆட்சிக்காலத்து கல்வெட்டில்  இராசராசனை தமிழ்நாடன் என்று கூறிய சான்று உள்ளது.

"..தண்டமிழ் நாடன் சண்ட பராக்கிரமன் திண்டிறற் கண்டன் செம்பியர் பெருமான் செந்திரு
மடந்தை மன் ஸரீராச ராசன்.."

இடம் : வீரட்டானேசுவரர் கோவில், திருக்கோயிலூர் வட்டம், கீழுர். 
கல்வெட்டு எண்: (No.863. S.I.I. Vol. VII.)

Saturday 8 October 2022

பார்ப்பனர் பற்றி நேர்மையாக விவாதிப்போம்

நேர்மையாக விவாதிப்போம்

நான் ஏன் பார்ப்பனர்களை வெறுக்கவேண்டும்?
ஒரே ஒரு உருப்படியான காரணத்தை கூறுங்கள்.

 அதாவது தமிழகத்திற்குள் தமிழ் பேசும் பார்ப்பன சாதிகள் அப்படி என்ன பாவம் செய்துவிட்டார்கள் என்று அவர்களை அனைவரும் வெறுக்கிறீர்கள்?
 நான் நன்றாக யோசித்து ஆராய்ந்து பார்த்துவிட்டேன் அவர்களை வெறுக்கும் அளவிற்கு அப்படி எதுவுமே அவர்கள் செய்யவில்லை.

 ஆரிய கடடுக்கதைகள், திராவிட பொய் பிரச்சாரங்கள், சில பார்ப்பனர்களின் திமிர் பேச்சுகள், புராண கட்டுக்கதைகள், பாஜக ஆதரவு என்று அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து விட்டேன்.
 பார்ப்பனர்களை குறிப்பிட்டு வெறுக்கும் அளவிற்கு ஒரு காரணம் கூட எனக்கு தென்படவில்லை.

 தமிழகத்தில் நடந்த பார்ப்பனிய கொடுமைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிடவும் (தமிழகத்திற்கு வெளியே நடந்த எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது).
தமிழகத்தில் நடந்த இரண்டு விடயங்களை ஏற்கனவே அலசிவிட்டோம்.

1)சமணர்களை திருஞானசம்பந்தர் படுகொலை செய்தார் என்கிற கட்டுக்கதை. பலமுறை நன்கு விவாதித்து ஆராய்ந்து அது பொய் என்று நிறுவப்பட்டுவிட்டது. 
(விரிவாக அறிய தேடுக :- சமணர் கழுவேற்றம் கற்பனை வேட்டொலி)

 2) சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சிவாச்சாரியாரைத் தமிழ் பாட விடவில்லை என்கிற குற்றச்சாட்டு. அதாவது கருவறையில் தமிழ் ஒலிக்க தடையாக இருப்பதாகக் கூறுவது.
 அதையும் ஆராய்ந்து பார்த்துவிட்டோம் சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் தமிழில்தான் வழிபாடு பூஜை என எல்லாவற்றையும் செய்கிறார்கள். அவர்கள் சிற்றம்பல மேடையில் ஏறி பாடுவதற்கு மட்டுமே தடையாக இருக்கிறார்கள். இது சாதிய பிரச்சனை மொழிவெறுப்பு என்று திரிக்கப்படுகிறது.
(மேலும் அறிய தேடுக :- தீட்சிதர்கள் தமிழ் நீசபாசை என்றனரா வேட்டொலி)

 மேற்கண்ட இரண்டிலும் பார்ப்பனர் குற்றமிழைத்தனர் என்றே வைத்துக்கொண்டாலும் அது ஒட்டுமொத்த தமிழர்களையும் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் இல்லை.

 கருவறையில் பிறரை நுழையவிடாமல் தடுப்பதை நான் வாழ்வாதார பிரச்சினையாகவே பார்க்கிறேன். ஒரு குறிப்பிட்ட சாதியினர் ஒரு குறிப்பிட்ட தொழிலை செய்யும்பொழுது வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவர் அந்த தொழிலை செய்ய முன்வரும்போது எதிர்ப்பு எழத்தான் செய்யும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீனவரல்லாத சாதியைச் சேர்ந்தவர் மீன் பிடிக்க வந்தால் எதிர்க்கவே செய்வார்கள்.  அதிலும் தீட்சிதர்கள் மற்ற பார்ப்பனர்களைப் போல் கிடையாது அவர்கள் முழுக்க முழுக்க சிதம்பரம் கோவிலை மட்டுமே நம்பி பிழைப்பவர்கள். சிதம்பரம் கோவிலை சுற்றி மட்டுமே வாழ்பவர்கள். அவர்களுடைய முழு வாழ்வாதாரமும் அந்த கோவிலை நம்பி மட்டுமே உள்ளது.

 இவை தவிர வேறு ஏதாவது உருப்படியான குற்றச்சாட்டு இருந்தால் கூறவும்.
 ஏற்கனவே பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதை மறுபடியும் கிளைப்பிள்ளை போல ஒப்பிக்க வேண்டாம். அவர் கூறினார் இவர் எழுதியுள்ளார் என்று ஒருவரது தனிப்பட்ட கருத்தை பதிவு செய்யக்கூடாது. தனிப்பட்ட அனுபவக் கதைகள் வேண்டாம். கிரிக்கெட் டீம் என்று தயவுசெய்து ஆரம்பிக்க வேண்டாம்.

 தமிழர்நாடு என்றுமே தனிநாடு. எனவே தமிழர்நிலத்துக்கு வெளியே நடத்த பிராமணீய கொடுமைகளுக்கு பார்ப்பனர் பொறுப்பாகமாட்டர்.

 தமிழர் நிலத்தில் பார்ப்பனர்கள் தமிழுக்கோ தமிழருக்கோ இழைத்த கொடுமைகள் எதாவது இருந்தால் கூறவும். அதாவது அதில் பார்ப்பனர் பெரும்பங்கு வகித்திருக்கவேண்டும். அது பெரும்பான்மைத் தமிழர்களை வெகுவாக பாதித்திருக்க வேண்டும்.
 (அதாவது ஈழத்தமிழருக்கு சிங்களவர் செய்த நேரடிக் கொடுமைகள் போல 
அல்லது தமிழகத் தமிழரை ஆதிக்கம் செய்யும் நிலவுடைமை பெற்ற வந்தேறித் தெலுங்கர் செய்துவரும் அடக்குமுறை போல 
அல்லது தமிழகத்திற்கு மத்திய அரசு செய்துவரும் உரிமை பறிப்புக் கொடுமைகள் போல
அல்லது குறைந்தபட்சம் தமிழர்களின் வணிகத்தை பறிக்கும் சேட்டுகளின் சட்டவிரோத செயல்பாடுகள் போல)

நினைவில் கொள்ளுங்கள்,
எங்கேயோ இருக்கும் கைபர் போலனில் தொடங்கும் ஆரிய கட்டுக்கதைகள் வேண்டாம்.
தமிழருக்குத் தொடர்பே இல்லாத மனுதர்மம் வேணனாம்.
ஆதரமற்ற திராவிட பொய்ப்பிரச்சாரங்கள் வேண்டாம்.
பாஜக ஆதரவு என்பதும் வேண்டாம். 
 (ஏனென்றால் அனைத்து சாதியிலும் பாஜக இந்துத்துவ ஆதரவாளர்கள் இருக்கின்றனர். அதில் பார்ப்பனர்களைக் குறிப்பிட்டு குற்றம் சாட்ட எதுவுமில்லை)
சு.சாமி போன்ற சிலரின் திமிர் பேச்சுகள் வேண்டாம்.

 தமிழர்கள் தெலுங்கரை, கன்னடரை, மலையாளிகளை, ஹிந்தியரை வெறுக்க பல காரணங்களை என்னால் கூறமுடியும்.
 தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பிரச்சனைகள் பல நூறு உள்ளன. அதில் எதிலாவது பார்ப்பனரின் பங்கு இருந்தால் கூறவும்.

நீங்கள் பார்ப்பனர்கள் தமிழினத்தின் எதிரிகள் என்று நிறுவமுடியாத பட்சத்தில் நீங்கள் பார்ப்பன வெறுப்பைக் கைவிடவேண்டும் என்று நான் கூறமாட்டேன்.
அதே நேரத்தில் பார்ப்பனர்கள் தமிழினத்தின் எதிரிகள் என்று நீங்கள் நிறுவிவிட்டால்  நான் 
அவர்களை வெறுக்கத் தயாராக இருக்கிறேன்.
08/07/2021 அன்று முகநூல் பதிவாக இட்டது 

Friday 7 October 2022

இசுலாமியர் பார்ப்பனர் மற்றும் வந்தேறிகள்

இசுலாமியர் பார்ப்பனர் மற்றும் வந்தேறிகள்

 எனது முதல் நோக்கம் இசுலாமியரையும் பார்ப்பனரையும் தமிழ்தேசியத்தில் மீளிணைத்தல்!

 இசுலாமியர், பார்ப்பனர் இவ்விருவர் மீதான பிறரின் வெறுப்பே இங்கு பிரதான அரசியல்.

 எனவே தான் இவ்விரு சமூகத்தையும் தமிழ்தேசியத்தில் இருந்து அந்நியப்படாமல் காக்க நினைக்கிறேன்.

 ஏனென்றால் தமிழகத்திற்கு இந்த வெறுப்பரசியல் தேவையற்றது. 
 தமிழகத்தில் ஒட்டுமொத்த இசுலாமியரையும் வெறுக்கும் வகையில் அவர்கள் எதுவுமே செய்யவில்லை!
 அதேபோல ஒட்டுமொத்த பார்ப்பனரையும் வெறுக்கும் வகையில் அவர்களும் ஒன்றுமே செய்யவில்லை.

நன்கு அலசி ஆராய்ந்து பார்த்து உறுதியாகக் கூறுகிறேன்.

 அப்படி இரு சமூகங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை நன்கு ஆராய்ந்தால் ஒன்று அது தமிழகத்திற்கு வெளியே நடந்திருக்கிறது அல்லது தமிழகத்தினுள் வேற்றினத்தவரால் நடந்திருக்கிறது அல்லது திரிக்கப்பட்ட பொய்யாக இருக்கிறது.

 பெரும்பான்மைத் தமிழர் பாதிக்கப்படும் ஒரு கேட்டை பார்ப்பனர் செய்ததாக திராவிடம் இன்று வரை நிறுவ முடியவில்லை. இந்துத்துவமும் அவ்வாறே! 

 நீங்கள் இசுலாமியரை வெறுத்தால் வேறுவழியே இல்லை அது பாஜக வுக்குத் தான் சாதகமாக முடியும். தமிழகத்தில் வடவர் ஆதிக்கமும் சமஸ்கிருத ஆதிக்கமும் பரவும். தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் குழம்பி தொலைந்து போகும்.
 [இந்தியன் என்கிற உணர்வும் அவ்வாறே, காங்கிரஸ் க்கு சாதகமாக முடியும் வடவர் ஆதிக்கமும் இந்தி ஆதிக்கமும் பரவும், தமிழ் மொழி அடையாளம் தொலைந்து போகும்]

 அதேபோல நீங்கள் பார்ப்பனரை எதிர்த்தால் வேறுவழியே இல்லை அது திமுக வுக்கு தான் சாதகமாக முடியும். ஈ.வே.ரா உங்கள் தலைவர் ஆவார். வந்தேறிகள் ஆதிக்கம் அதிகரிக்கும். தமிழ் இன அடையாளம் குழம்பி தொலைந்து போகும்.
 [ திமுக வை பிடிக்காது என்கிற ஒரே காரணத்தால்தான் அதிமுக வாழ்ந்துகொண்டு இருக்கிறது. அதுவும் அழியும் நிலையில் உள்ளது]

 நீங்கள் இந்தியனாக சிந்தித்தால் (தமிழகம் தவிர்த்த இந்தியாவில்) முஸ்லிம் படையெடுப்பு, பாகிஸ்தான் பிரச்சனை, மதமாற்றம், தீவிரவாதம் என்று அவர்களை வெறுக்க பல காரணங்கள் உண்டு அதேபோல அங்கே சாதிக்கொடுமை, தீண்டாமை, மதச் சுரண்டல், பதவி ஆதிக்கம் என பிராமணரை வெறுக்கப் பல காரணங்கள் உண்டு.

  உண்மையை ஆராய்ந்து தமிழனாக  நாம் தனிநாடு என்கிற அடிப்படையில் சிந்தித்தால் நாம் உண்மையில் வெறுக்க வேண்டியது தமிழகத்தில் இருக்கும் பழைய மற்றும் புதிய வந்தேறிகளை என்று புரியும்.

ஆம்! இவர்களே நமது அரசியல் பிரச்சனைகளை எதிர்கொள்ள விடாமல் பல்வேறு சதிகள் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றி நம் இனத்தை பலவீனமாக்கி அண்டை மாநிலங்களாலும் இந்திய அரசாங்கத்தாலும் இலங்கை அரசாலும்  நமக்கு வரும் முக்கியமான பிரச்சனைகளை எதிர்கொள்ள விடாமல் செய்கிறார்கள். தமிழரை இனமாகத் திரள விடாமல் தொடர்ந்து குழப்பி திசைதிருப்பியபடி இருக்கிறார்கள். நம்மைச் சுரண்டி கொழுத்தபடி நம்மை முழுக்க அழிக்கும் நோக்கத்துடன் இருக்கிறார்கள்.
 தமிழகத்தில் தமிழர் தவிர அனைவருமே இவ்வாறு தான் இருக்கிறார்கள்.
 ஏன் இருக்கமாட்டார்கள்? பாகிஸ்தான் முதல் இலங்கை வரை தமிழர் மீது வெறுப்புடன்தான் இருக்கின்றனர். தமிழர்கள் அத்தனை பேரும் இவர்களால் பன்னெடுங்காலமாக பாதிக்கப்பட்டு வருகிறோம்.

 அப்படி நீங்கள் வந்தேறிகளை வெறுத்தால் வேறுவழியே இல்லை அது நாம் தமிழர் கட்சிக்குத் தான் சாதகமாக முடியும். சீமான் முதலமைச்சர் ஆவார். (அவர் எப்படிப் பட்டவராக இருந்தாலும்) வந்தேறிகள் ஆதிக்கம் குறைந்து தமிழர் ஆதிக்கம் தலைதூக்கி நாம்  வலுவான மாநிலமாக அல்லது குறைந்த பட்சம் அண்டை மாநிலங்கள் போலவாவது பிரச்சனைகளை ஓரளவு சமாளிக்கும் வலிமை கிடைக்கும். அதை அஸ்திவாரமாக வைத்து நாம் வலுவான இனமாக மீண்டும் எழுச்சி பெற வாய்ப்பு கூட இருக்கிறது. 
 நமக்கு வேறு வழியும் தற்போதைக்கு இல்லை!

 இப்போது இதைச்செய்யவில்லை என்றால் நிலை இன்னும் மோசமாகும்! நாமும் பீகார் போல ஆகவேண்டியதுதான்! 
எனவே தமிழரே! தமிழ்தேசியத்தைக் கையிலெடுங்கள்! பார்ப்பனர், இசுலாமியரை காரணமில்லாமல் வெறுக்காதீர்கள்! தமிழராக இணைந்து எழுங்கள்! நமக்கு இனத்திற்கு வெளியே மத அடிப்படையிலோ, தேசப்பற்று அனிப்படையிலோ, மனிதநேய அடிப்படையிலோ  எந்த ஆதரவும் எப்போதும் கிடைக்கப்போவதில்லை! 
  நாம் கொத்தாக செத்து விழுந்தாலும் திரும்பிப்பார்க்க நாதி இல்லை! 2009 இனப்படுகொலை சான்று! 

அதேபோல..
 தமிழினப் பார்ப்பனரே! தமிழின இசுலாமியரே! நீங்களும் தமிழினமாக சிந்தியுங்கள்.
 தமிழகத்திற்கு வெளியே இருக்கும் பிராமணரோ அரபு நாடுவரை இருக்கும் முஸ்லிம்களோ உங்களை எப்போதும் ஏறெடுத்தும் பார்க்கப் போவது இல்லை! சக தமிழரை நம்புங்கள்! ஏனென்றால் தமிழ்ச் சமூகம் என்றுமே இசுலாமியரை வெறுத்ததில்லை! பார்ப்பனரை அறியாமையால் வெறுத்த காலமும் மாறிவிட்டது! (தமிழக பொதுமக்கள் பார்ப்பனரை வெறுத்ததே கிடையாது, பொறாமை கலந்த மரியாதையான பார்வையே உள்ளது)
 முதலில் நீங்கள் இரு துருவங்களாக ஒட்டாமல் இருக்காதீர்கள்! நீங்கள் நெருக்கமாகுங்கள்! நீங்கள் இருவரும் பிற தமிழருடன் மேலும் நெருக்கமாகுங்கள்!

 மருதுபாண்டியர் வாரிசு நாடுகடத்தப்பட்ட போது கப்பலில் உடன் சென்று தீவுச் சிறையில் மடிந்த ஜகந்நாத ஐயரும் சேக் உசேனும் போல நீங்கள் ஏன் இணைந்து ஓரினமாக செயலாற்ற முடியாது?!
 இன்று தமிழ்தேசியம் உங்களை ரத்த சொந்தமாக அரவணைத்துக் கொள்ள இரு கரம் விரித்து அழைக்கிறது.

 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இசுலாமியர் புது ரத்தம் பாய்ச்சவில்லையா?! அப்போது (இந்திய கிரிக்கெட் வீரர், பார்ப்பனர்) ஸ்ரீகாந்த் அகில இந்திய அளவில் குரல்கொடுக்கவில்லையா? 

மத்ததை ஒதுக்கி வைத்து தமிழராக வீறு கொண்டு எழுங்கள்!
உங்களைப் பார்த்து தமிழினமே பேரெழுச்சி கொள்ளும்! தமிழினத்தைத் திரட்டும் வலிமை உங்கள் இருவரிடம் இருக்கிறது!
இனமாகத் திரண்டு நிற்போம்! வருவது வரட்டும்!

நம் வலிமைக்கு முன் இந்தியா மட்டும் இல்லை இந்தியத் துணைக்கண்டமே கூட அடிபணிந்தே தீரும்! 

வரலாறு சான்று! 
 



 

Sunday 2 October 2022

ஆதித்த கரிகாலன் கொலையாளிகள் பற்றி கேள்விகள் மற்றும் பதில்கள்


ஆதித்த கரிகாலன் கொலையாளிகள் பற்றி கூறும் உடையார்குடி கல்வெட்டு பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள்

 கே:- ஆதித்த கரிகாலன் கொலையுண்ட ஆண்டு எது?
ப:- கி.பி.969

 கே:- உடையார்குடி கல்வெட்டு வெட்டப்பட்ட காலம்?
ப:- கி.பி. 987 அதாவது ஆதித்த கரிகாலன் இறந்து 18 ஆண்டுகள் கழித்து வெட்டப்பட்டது

 கே:- உடையார்குடி கல்வெட்டு இராசராச சோழனுடையதா?
ப:- இல்லை. அது ஊர்சபை நிர்வாகி வெட்டிய கல்வெட்டு. அதில் இராசராசனின் உத்தரவு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதில் கொலைகாரர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டது என்கிற விபரம் உள்ளது.

கே: அந்த நிலத்தைக் கையகப்படுத்தியது எந்த மன்னன்?
ப:- உடையார்குடி கல்வெட்டு ராசராசன் ஆட்சிக்கு வந்த இரண்டாவது ஆண்டில் வெட்டப்பட்டது. எனவே இந்நிலத்தை கையகப்படுத்தியது அவருக்கு முன்னர் ஆண்ட உத்தம சோழனாக இருக்கலாம். அல்லது கொலை நடந்தபோது ஆட்சியிலிருந்த சுந்தர சோழனாகவும் இருக்கலாம். இராசராசன் அந்த நிலத்தை பயன்படுத்த அனுமதி மட்டும் வழங்கியிருக்கலாம். 

 கே:- கொலையாளிகள் பிடிபட்டனரா?
ப: பிடிபட்டதாக எந்த சான்றும் இதுவரை இல்லை.

கே:- கையகப்படுத்திய நிலம் யாருடையது?
ப:- கையகப்படுத்திய நிலம் கொலையாளிகளான மூன்று சகோதரர்களின் நான்காவது சகோதரன் மற்றும் பிற உறவினர்களின் உடைமை

 கே: ஏன் உறவினர்களைத் தண்டிக்கவேண்டும்?
ப: கொலையாளிகள் தப்பிய பிறகு அவர்களது உறவினர்களும் பயம் காரணமாகத் தப்பிவிட்டனர். பயன்பாடில்லாத அவர்களின் சொத்துக்களை ஊர்சபை மன்னனிடம் கேட்டு எடுத்துக்கொண்டது. 
 
கே: கொலையாளிகள் பார்ப்பனரா?
ப: ஆம். அவர்கள் பார்ப்பனச் சேரியில் வசித்தனர்.

 கே: கொலையாளிகள் பிடிபட்டிருந்தால் கொன்றிருப்பரா? அல்லது பிராமணர் என்று விட்டிருப்பரா?
ப: கொன்றிருப்பர். சாளுக்கிய கல்வெட்டு ராஜராஜ சோழனை பிராமணக் கொலையாளி என்றே கூறுகிறது. க.த.திருநாவுக்கரசு இக்கல்வெட்டைத் தவறாகப் புரிந்துகொண்டதால் தனது கட்டுரையில் கொலையாளிகளைப் பிடித்து மனுஸ்மிருதி படி அந்த பிராமணரைக் கொல்லாமல் விட்டதாக எழுதினார்.

கே: கொலைக்கான காரணம் என்ன? 
ப: வீரபாண்டியனைக் கொன்றதுடன் நிற்காமல் போர்நெறிகளை மீறி அவனது தலையை வெட்டி ஈட்டியில் குத்தி அரண்மனை மீது வைத்ததால் அந்த அவமானத்திற்கு பழி தீர்க்க ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தனர்.

கே: இந்தக் கொலைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த உத்தம சோழன் என்கிற மதுராந்தகன் இந்தக் கொலைக்கு காரணமா?
ப:- இல்லை. ராஜேந்திர சோழனின் இயற்பெயர் மதுராந்தகன். தன் அண்ணனைக் கொன்ற கொலையாளியின் பெயரை தன் மகனுக்கு ராசராசன் வைப்பாரா?! இந்த தவறான கருத்து நீலகண்ட சாஸ்திரி எழுதிய நூலில் இருந்தது. இந்த தவறான கருத்தின் அடிப்படையிலேயே பொன்னியின் செல்வன் புதினம் எழுதப்பட்டது. 

கே: கொலையாளிகள் சோழ அரசில் எந்த பதவியில் இருந்தனர்?
ப:- கொலையாளிகள் மூவர். முதலாமவர் சோமன். இவர் பட்டம் கல்வெட்டில் சிதைந்துவிட்டது. இரண்டாமவர் பஞ்சவன் பிரம்மாதிராஜன் எனும் பட்டம் கொண்ட ரவிதாசன் என்பவர். இந்த பஞ்சவன் பிரம்மாதிராயர் என்பது பாண்டிய அரசின் உயர்பதவியைக் குறிக்கும் பட்டம். மூன்றாமவர் இருமுடிச்சோழ பிரம்மாதிராஜன் எனும் பட்டம் கொண்ட பரமேஸ்வரன் என்பவர். இந்த இருமுடிச் சோழ பிரம்மாதிராயர் பட்டம் சோழ அரசின் உயர்பதவிப் பட்டம். 

கே: என்றால் இவர்களுக்குள்ள ஒப்புமை பிராமணர் என்பது மட்டும்தானே?
ப:- சோழர்கள் பிராமணருக்கு எதிராக எதையும் செய்ததாகத் தெரியவில்லை. இந்த கொலைக்குப் பிறகும் சோழர்கள் பிராமணர்களை நன்றாகவே நடத்தியுள்ளனர். பதவிகளும் அளித்துள்ளனர். சோழர்கள் தமது ஆட்சிக் காலத்தில் பாண்டியரை விடாது துரத்தினர். அவர்களது மணிமுடியையும் ஆரத்தையும் கைப்பற்ற இலங்கையை நிர்மூலமாக்கினர். ஆனாலும் பிற்பாடு பாண்டியர் எழுச்சி பெற்று சோழர்களை வீழ்த்தி பேரரசு கண்டனர். கொலைகாரர்களில் மூத்தவர் பாண்டிய அதிகாரியாக இருக்கவேண்டும் என்பது சோழர் வரலாற்றில் கரைகண்ட குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கணிப்பு. எனவே ஆதித்த கரிகாலன் கொலையைச் செய்தது பாண்டிய உயரதிகாரிகளான இரு சகோதரர்கள் மற்றும் அதற்கு உடந்தையான சோழ உயரதிகாரியான மூன்றாவது சகோதரன் என்று ஊகிக்கலாம். 
 ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இருவேறு அரசுகளில் உயர்பதவிகளில் இருந்தது வியப்பாகவும் குழப்பமாகவும் இருக்கிறது.

கே:- ஒரு சோழ உயரதிகாரி ஏன் இவ்வளவு பெரிய துரோகம் செய்யவேண்டும்? 
ப:- கொலையாளிகள் கடைசிவரை சிக்கவேயில்லை. கொலைக்கான காரணமும் கடைசி வரை தெரியவில்லை. உடையார்குடி கல்வெட்டு இன்று நிலத்தின் வரலாற்றைக் கூறி எழுதப்படும் பத்திரம் போன்றது. இதை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. 

கே: நீங்கள் கூறிய பதில்களுக்கான சான்று எது?
ப:- அனைவரும் உடையார்குடி கல்வெட்டு சோழ அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கல்வெட்டு  என்றே நினைத்தனர். குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள்தான் அதை மீண்டும் தெளிவாகப் படித்து 'உடையார்குடி கல்வெட்டு ஒரு மீள்பார்வை' எனும் கட்டுரை எழுதியுள்ளார். அதுவே நான் முன்வைக்கும் முக்கிய சான்று. இதுவரை இக்கட்டுரையை யாரும் மறுக்கவில்லை.

 கே:- என்றால் சோழர் வளர்ச்சி பொறுக்காத பிராமணர் சதி என்று கூறப்படுவது பொய்யா?
ப:- எனது தனிப்பட்ட கணிப்பு ஆதித்த கரிகாலனால் தனிப்பட்ட முறையில் பிராமண உயரதிகாரி சோமன் பாதிக்கப்படிருக்கலாம். அவர் தன் சகோதரன் ரவிதாசனுடன் பாண்டியரிடம் போய் சேர்ந்திருக்கலாம். எனவே இவர்கள் துரோகிகள் என்று அறிவிக்கப் பட்டிருக்கலாம். இவர்களின் இன்னொரு சகோதரனான பரமேஸ்வரன் சோழ அரசில் அண்ணன் விட்ட இடத்தை நிரப்பியிருக்கலாம். பாண்டியர் உதவி கொண்டு சோமன் சோழநாட்டில் ஊடுருவி ஆதித்த கரிகாலனை கொன்றிருக்கலாம். பரமேஸ்வரனால் அதைத் தடுக்க முடியாமல் போயிருக்கலாம். எனவே சோமன், ரவிதாசன் போன்ற துரோகிகளுடன் பரமேஸ்வரனும் துரோகி என்று சேர்க்கப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப் பட்டிருக்கலாம். கல்வெட்டில் மூவரும் துரோகிகள் என்றே குறிக்கப்பட்டுள்ளனர். ஆதித்த கரிகாலன் போர்வெறியுடன் நடந்துகொண்டதால் இந்த கொலை சோழ மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தாமல் போயிருக்கலாம். எல்லாமே யூகம்தான்.