Monday 28 February 2022

குற்றாலம் தீண்டாமை பொய்க்கதை


 

குற்றாலம் தீண்டாமை பொய்க்கதை 


 1838 இல் வெளிவந்த புத்தகம் குற்றாலம் பற்றி விரிவாக விளக்குகிறது. 

அதன் தலைப்பு The tinnevelly mission of the  church missionary society என்பதாகும்.

 அதில் 1835 காலகட்டத்தில் குற்றாலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து முழுநிலவு அன்று பல ஆயிரம் மக்கள் வருவதாகவும்

 ஆகஸ்ட் மாத பௌர்ணமி அன்று 50,000 க்கும் அதிகமானோர் வந்திருந்தனர் என்றும் 

அவ்வாறு புனித நீராட வருவோருக்கு குளிக்கும்போது மோதிரமாக கட்டிக்கொள்ள அருகம்புற்களை பிராமணர்கள் விற்றதாகவும் பதிவுசெய்துள்ளது.


 குற்றாலத்தில் பிராமணர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியதாகவும் அருவியில் குளிக்க தீண்டாமை நிலவியதாகவும் அதை ஆஷ் துரை நீக்கியதாகவும் ஒரு பொய்க்கதை பரப்பப்பட்டு வருகிறது.


 இது பொய்யென்று இச்சான்று மூலம் நிறுவமுடியும்.


தகவலுக்கு நன்றி: கார்வேந்தன் அழகையா


 மேலும் அன்று குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்திலேயே இல்லை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த செங்கோட்டை மற்றும் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆஷ்துரை உத்தரவு செல்லாது.

 பின்னர் செங்கோட்டை மக்கள் குமரி மக்களுடன் இணைந்து எஸ்.எஸ். கரையாளர் தலைமையில் போராடி தமிழகத்துடன் இணைந்தது வரலாறு.

 

 குற்றாலத்தில் தீண்டாமை இருந்த எந்த ஆதாரத்தையும் யாரும் காட்டியதாகத் தெரியவில்லை. இந்த புரளியை கிளப்பியது குற்றாலம் பகுதியில் வாழும் வந்தேறி சக்கிலியர்கள்.


 இவர்கள் செய்துவரும் அட்டூழியம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். அதிலும் திருநெல்வேலியின் பெருமையான பூலித்தேவரின் தளபதி ஒண்டிவீரன் என்றும் பொய்க்கதை பரப்பி வருகின்றனர்.


 ஆங்கிலேய அடிமைகளால் ஏற்கனவே வாஞ்சிநாதனுக்கு எதிராகக் பரப்பப்படும் புனைவுகளில் மற்றொன்று கர்ப்பிணி பெண்ணை அக்கராகாரம் வழியாக செல்லவிடாமல் தடுத்ததை ஆஷ்துரை தட்டிக்கேட்ட புனைவுக்கதை.

 இதற்கும் எந்த சான்றும் இல்லை. ஆங்கிலேயர் எங்கேயுமே சாதிக்கொடுமைகளைத் தடுத்த வரலாறு இல்லை.

 அதோடு இது பற்றி மேலும் விளக்கி ஏற்கனவே இரண்டொரு பகுதிகளில் சான்றுகளுடன் எழுதியுள்ளேன்.

செங்கோட்டை அக்கரகாரம் செங்கோட்டை - தென்காசி முக்கிய சாலைக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிறது என்றும் அதில் கோவிலுக்கு செல்லும் பாதைகளில் உள்ள தடைகற்கள் தீண்டாமை நோக்கத்துடன் இல்லை என்றும் அவை வண்டிகளைத் தடுக்க போடப்பட்டிருப்பதையும் விளக்கியுள்ளேன்.


 வந்தேறிகள் திரித்து பொருள்கூறும் வாஞ்சிநாதன் கடிதம் பற்றிய எனது பதிவையும் இங்கே குறிப்பிடலாம்.

Friday 25 February 2022

தமிழ்தேசியப் பார்வையில் இப்போர்

தமிழ்தேசியப் பார்வையில் இப்போர்

 இரு நாடுகளுக்கு இடையே போர் என்றால் ஒன்று எந்தப் பக்கம் என்று அறிவிக்க வேண்டும் அல்லது நடுநிலை என்று அறிவிக்க வேண்டும்.

 இன்றைய ரஷ்ய உக்ரைன் போர்ச் சூழலில் யாருக்கு ஆதரவு என்று கேட்டால்...

 தமிழர் படையெழுப்பி தாய்மண்ணை மீட்டு தனிநாடு ஆனதாக அறிவிப்பர். இதற்கு விடுதலை அறிவிப்பு என்று பெயர்.  

 தமிழர்நாடு விடுதலையை அறிவிப்பதற்கு முன் என்றால்....
தமிழர்நாட்டு விடுதலைக்கு எந்த பக்கம் ஆதரவாக உள்ளதோ அதற்கு ஆதரவு. அது எவ்வளவு மோசமான நாடாக இருந்தாலும் சரி.

 தமிழர்நாடு விடுதலையை அறிவித்த பிறகு என்றால்....
எந்த பக்கம் தேசிய இனம் ஒடுக்கப்படுகிறதோ அதற்கு ஆதரவு.

 நாம் இன்னும் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கவில்லை.

 எனவே நாம் தேசியவாதி என்கிற  நிலையில் மட்டும் நின்று நடுநிலையாக இந்த பிரச்சனையை நோக்கினால் 2014 இல் ரஷ்ய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் க்ரிமியா வை ரஷ்யா கைப்பற்றி இணைத்துக்கொண்டது சரி. ஆனால் தற்போது உக்ரேனின் எல்லையில் உள்ள சிறுசிறு ரஷ்ய பகுதிகள் தாண்டி உக்ரேனிய இனம் வாழும் உக்ரைன் நிலப்பரப்பை ஆக்கிரமித்தால் அது தவறு.

 

Thursday 24 February 2022

ரஷ்யாஆஆஆஆ

ரஷ்யாஆஆஆஆ....

 அது எப்டிங் சாமி?!
 முழு ஐரோப்பா அதோட அமெரிக்கா னு பெரிய பெரிய அரக்கனுகள தனியாளா இந்த ரஷ்யாக்காரனுக சமாளிக்கிறானுக ?!

 இத்தனைக்கும் அந்த நாட்டு வளங்கள் குறைவு!  
 (உலக வரைபடத்துல இத்தா பெரிசு தெரிஞ்சாலும் உண்மைல அவ்வளவு பெரிசு கிடையாது! அதுலயும் பாதிக்கு மேல பனிப்பிரதேசம்!)

 சோவியத் யூனியன் உடைஞ்சப்ப கூட்டணி (அடிமை) நாடுகளும் பிச்சிக்கிட்டு போயிடுச்சு! 

பொருளாதாரமும் பெரிசா கிடையாது!
(உலகில் ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு அதனால் வணிகமும் நடப்பதில்லை.
ரஷ்ய நாணய மதிப்பு இந்திய ரூபாயை விடக் குறைவு, ரஷ்ய பெண்கள் வடயிந்தியா வந்து விபச்சாரம் செய்து சம்பாதிக்கிறார்கள்!
 கன்னட பிரசாத் காலத்தில் தமிழகத்திலும் பரவலாக நடந்தது!)

 உலகப் போர்ல எந்த நாட்டையும் விட அதிகமான உயிர்பலி!
(உள்நாட்டுப் போர்லயும்தான்!)

 கியூபா மாதிரி நாடுகள் ஆதரவு கூட இல்லை, ஏன்னா கம்யூனிசத்தையும் விட்டுட்டானுக! 

 மக்களுக்கு எதிரான சர்வாதிகார அரசு என்றும் கூறுகிறார்கள்!

 இத்தனைக்கும் உக்ரேன் பிரச்சனை ரஷ்யாவின் உள்நாட்டு பிரச்சனை கிடையாது! வல்லரசுகளுக்கு இடையேயான போட்டிதான்!

அப்பறமும் எப்டிங்கையா ஈடுகொடுக்குறாங்க ?!

 எப்டின்னா எல்லா துறையிலும் பின்தங்கினாலும் ராணுவத் துறையை மட்டும் கண்ணும் கருத்துமா பாத்துக்கிறானுக!

 இன்னைக்கும் ராணுவம் தொடர்பான எல்லா விசயங்கள்லயும் ரஷ்யாதான் முதலிடம்!

 ஜப்பான்ல போட்ட குண்ட விட 1000 மடங்கு வலிமையான அணுகுண்டு வச்சிருக்கானுக!
 அதுவும் எந்த மன்னனை எதிர்த்து புரட்சி செஞ்சாங்களோ அதே ஸார் மன்னர்கள் பேர்லயே (Dzar bomba)! 

 படைதான் இனத்தின் பலம்! 

 ராணுவம் இல்லாத இனம் அனாதை இனம் - ஹிட்லர்

Monday 21 February 2022

மொழி மொழி என்று சிந்தித்தது போதும்

மொழி மொழி என்று சிந்தித்தது போதும்

 தாய்மொழி நாளான இன்று மொழிப்பற்றினால் இனத்தையே பலியிட்ட தமிழினத்திற்கு ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
 இந்த தாய்மொழி நாள் வங்கதேசத்தவர்கள் தமது மொழிக்காக உயிர்நீத்த நாளாகும்.
 வெறும் ஏழு பேர் இறந்த இந்த தினத்தை உலகமே தாய்மொழி நாளாக கொண்டாடுகிறது என்றால் அவர்களுக்கு சில ஆண்டுகள் முன்பே மொழிக்காக நூற்றுக்கணக்கில் உயிர்நீத்த தமிழினம் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று சிந்தியுங்கள்.
 ஏனென்றால் வங்காளிகளிடம் தனி நாடு இருக்கிறது. நம்மிடம் மொழிப்பற்று மட்டுமே இருக்கிறது.

 இனம் என்பது மனிதன் நாடோடியாக வாழ்ந்தபோதே தமக்குள் கூட்டு சேர்ந்து தற்காப்பு அடிப்படையில் உருவாக்கிக் கொண்ட குழுவை அடிப்படையாகக் கொண்டது.
 நாடோடி வாழ்க்கை முடிந்து நிலையாக மனிதன் வாழத் தொடங்கியதும் இயற்கையான எல்லைகளுக்கு மத்தியில் நிலையாக வாழும் மக்கள் பொதுவான மொழியை உருவாக்கிக்கொண்டனர்.
 இனம் என்பது மொழி என்பதை விட பழமையான கட்டமைப்பு!
அந்தக் கட்டமைப்பில் மொழி என்பது ஒரு மேம்படுத்தப்பட்ட அம்சம் மட்டுமே!

 இந்த உலகம் ஒரு போர்க்களம் என்றால் நாம் இனமாகத் திரண்டு போரிட்டால் மட்டுமே தப்பிப் பிழைக்க முடியும்.
 என்றால் நம் கையில் இருக்கவேண்டிய வாள் இனப்பற்று. மொழிப்பற்று என்பது கேடயம் போன்றதுதான்.
நாம் இரண்டு கைகளிலும் கேடயத்தை எடுத்துக் கொண்டு போவதால் மட்டுமே தொடர்ந்து தோல்வியை தழுவிக் கொண்டு இருக்கிறோம்.
தலை போனாலும் பரவாயில்லை எதிரிகளை வெல்வதுதான் முக்கியம் என்று இனி இரண்டு கைகளிலும் வாளுடன் போருக்குச் செல்வோம்.
 இந்த வீரமே நம் முன்னோர் நமக்குக் காட்டிய வழி!
நம் முன்னோர்கள் வீரத்துடன் இருந்ததால்தான் நம் இனம் அழியாமல் இன்றுவரை நிலைத்து நிற்கிறது!
 நாம் கோழைத்தனமாக இருப்பதினால் நமது இனம் அழிவை சந்தித்து வருகிறது!

பிறப்பு அடிப்படையிலான இனம் என்பதே (மனிதர் மத்தியில்) நமது முதலும் இறுதியுமான அடையாளம்!
சாதி மதம் போன்றவை மிகவும் பிற்காலத்தில் தோன்றிய கோமாளித்தனமான தேவையற்ற வடிவங்கள்!

 இன்று வந்தேறிகளின் ஊடுருவலுக்கு மத்தியில் நம்மை நாம் அடையாளம் கண்டுகொள்ள மட்டுமே சாதி அடையாளத்தை கையில் எடுக்கிறோம்! 
நமது தாய்நிலம் அமைந்த பிறகு நாம் சாதியை தூக்கி எறிந்துவிட்டு நமது இனத்தின் பெயரால் நம்மை அடையாளப்படுத்திக் கொள்வோம்!

 "தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்" என்கிற வந்தேறிகளின் மூளைச்சலவை இனி எடுபடாது போகட்டும்!
 இனம் வாழ்ந்தால் மட்டுமே அதன் மொழி வாழும்!

அப்படி மொழி அழிந்தாலும் பரவாயில்லை இனம் அழியக்கூடாது!

 மொழி என்பது ஊடகம் மட்டுமல்லாது உணர்ச்சி, அறிவு, கல்வி என பலவற்றிற்கும் அடிப்படையானது.
ஆனால் இனம் என்பது மக்களை, அவர்களின் இருப்பை, அவர்களின் உயிரை அடிப்படையாகக் கொண்டது.

 எனவே இன்றிலிருந்து நீங்கள் மொழிப்பற்றை ஒத்திவைத்துவிட்டு அழிந்து வரும் நமது இனத்தை பற்றி கடுகளவேனும் சிந்திக்கவாவது தொடங்குங்கள்!

 மொழி மொழி என்று தமிழை வைத்து தமிழரை அழிக்கும் வந்தேறிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்!

  இனம் பற்றிய எனது சிந்தனை என்னவென்றால்,
 இனம் என்றால் மக்கள்!
 மக்கள் என்றால் உயிர்!
 உயிர் என்றால் உணவு, உறைவிடம்!
உணவு, உறைவிடம் என்றால் மண்!

ஆக மண்தான் இனத்தின் உயிர்!

 தாய் மண்ணை விட்டு வெளியேறுவது கேவலம்!
ஆனால் இன்று நாம் உலகம் முழுவதும் பரவி வாழ்வதாக பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.
 நாம் ஒன்றும் உலகம் முழுவதும் ஆளச் சென்றவர்கள் இல்லை!
 வணிகத்திற்காகவோ சுற்றுலாவிற்காகவோ வேலைவாய்ப்பிற்காகவோ சிறிது காலம் சென்றால் கூட பரவாயில்லை!
 ஆனால் தாய் மண்ணில் இருந்து வெளியேறி வேர் அறுந்து தானும் தொலைந்து தன் சந்ததியையும் தொலைப்பது பிறந்த இனத்திற்கு செய்யும் பெரிய துரோகம் ஆகும்!
  
 ஆகவே இனத்தைக் காக்க மண்பற்று கொள்ளுங்கள்!
 நம் தாய்மண்ணை மீட்டால் மட்டுமே இனம் தொடர்ந்து வாழ முடியும்!

 இந்திய ஏகாதிபத்தியத்தில் இருந்தும் வந்தேறிகளின் ஆதிக்கத்திலிருந்தும் சிங்களப் பேரினவாதத்தில் இருந்தும் தமிழர்கள் தம்மை விடுவித்துக் கொள்வது முதல் தேவையாகும்!
இந்த போராட்டத்தில் நம்மால் மொழியின் வளர்ச்சியை கவனிக்க முடியாது போனாலும் பரவாயில்லை!
நமது பழமையான சான்றுகள் அழிந்து போனாலும் பரவாயில்லை!

  நாம் நமது முன்னோர் காட்டிய வீரப்பாதையில் புலிகள் வழியில் நமது தமிழர் நாட்டை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவோம்!

  நமது கட்டுப்பாட்டில் தாய்மண்ணின் பெரும்பகுதியைக் கொண்டுவந்து உலகம் ஏற்காவிட்டாலும் தனிநாட்டை அறிவிப்போம்!
 இதனை செய்து விட்டால் நமது மொழி தானே வளரும்!
 நமது இனம் தானே வாழும்! 
நம் மக்கட்தொகையும் கட்டுப்பாட்டு நிலமும் பெருகும்!
நமது பழமையான சான்றுகளை எளிதாக நம்மால் வெளிக்கொணர முடியும்!
 அப்படி சான்றுகள் இல்லை என்றாலும் போலியாக உருவாக்கிக் கொள்ளவும் முடியும்!


 ஆனால் 'கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக' ஆசைப்பட்ட கதையாக இந்திய ஏகாதிபத்தியத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள மிச்ச சொச்ச மாநில உரிமைகளை கூட தக்கவைக்க முடியாத தமிழர்கள் 'உலகின் பழமையான இனம்' என்று தம்மை நிறுவி உலகையே ஆள துடிப்பது முட்டாள்தனம்!
 
 நாம் நமக்கான அரசை நிறுவிவிட்டால் நம்முடைய மொழியையும் வரலாறையும் சிறப்பாக பாதுகாப்பதுடன் உலகின் பார்வைக்கு கொண்டுசெல்லவும் முடியும்.

 தனிநாடு அமையாமல் ஒவ்வொரு தமிழனும் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இழந்தாலும் தமிழின் பழமையையும் பெருமையையும் அருகில் இருக்கும் மாலைத்தீவுக்கு கூட கொண்டு சேர்க்க முடியாது!

இதுவே நாம் வல்லரசாகி விட்டால் நாம் வேண்டாம் என்று சொன்னாலும் உலகம் நம்மை பற்றி ஆராயும்.
நமது பழமையையும் பெருமையையும் உலகம் முழுவதும் இருக்கும் தன்னார்வ ஆராய்ச்சியாளர்கள் வெளிக் கொணர்வார்கள்.

 இஸ்ரேல் வரலாறு நமக்கு தெரிய காரணம் என்ன?
 அமெரிக்க வரலாறும் ரசிய வரலாறும் நமக்கு தெரிந்திருக்கிறதே அது எப்படி?
பழைய வல்லரசுகளான ஜெர்மானிய வரலாறும் என்றோ முடிந்து போன ரோம பேரரசின் வரலாறும் கூட நமக்கு தெரிந்திருக்கிறதே!
 காரணம் என்ன?
 நமது முன்னோர்கள் நிறுவிய பேரரசுகள் பற்றி உலகிற்கே தெரிந்திருக்கிறதே அதே காரணம்தான்.

 ஆக நாம் இந்த உலகில் நமக்கான மதிப்பையும் மரியாதையையும் பெறுவதற்கு ஒரே வழி நமக்கான நாட்டை நாம் நமது சொந்த பலத்தால் நிறுவி தன்னுரிமையுடன் அதனை ஆண்டு வல்லரசாக உருவாக்குவது மட்டுமே!

 மொழி அழிந்தாலும் மீட்டுக்கொள்ள முடியும்!
 நிலம் அழிந்தாலும் கடலில் இறங்கி நமது குமரிக்கண்ட சான்றுகளை வெளிக்கொணர முடியும்!

 நமது அரசு உலகம் முழுவதும் தூதரகங்களை பரப்பினால் உலகம் முழுவதும் கொடுக்கல் வாங்கல் செய்தால் நம்மை பற்றி இந்த உலகிற்கு தெரியும்.

 அதை விடுத்து மணிக்கணக்கில் தொண்டை கிழிய நமது பழம் பெருமையை பேசுவதாலும் கைவலிக்க நமது பழைய பெருமைகளை எழுதுவதாலும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை.
 தமிழர்கள் தலைக்கு நான்கு புத்தகங்கள் போட்டாலும் எந்தப் பயனும் இல்லை!

 நம் முன்னோர்களின் சாதனைகள் நமக்கு வழிகாட்டவே!
அதைக்காட்டி புகழ்பிச்சை வாங்க அல்ல!

 வரலாற்றில் அதாவது இறந்த காலத்தில் வாழ்வதைக் கைவிடுங்கள்!

 அப்படியே ஒருவேளை நம்மிடம் இருக்கும் அத்தனையையும் இழந்து நாம் தான் இந்த உலகின் பழமையான குடி என்று நாம் நிறுவி விட்டாலும் அதனால் நமக்கு கிடைக்கப்போவது என்ன?!
 அப்படி கிடைத்தாலும் இனம் அழிந்த பிறகு பயன்தருமா?

 இனத்தைப் பற்றி பேசாமல் மொழிப்பற்றை வந்தேறிகள் தொடர்ந்து வலியுறுத்த காரணம் அவர்களும் நமது மொழியை பேசி நம்மை ஏமாற்றுவதற்கு மட்டுமே!

 வந்தேறிகளின் சதிக்கு ஆளாக வேண்டாம்!

 தமிழ் தெரியாத தமிழ் இனத்தவரும் தமிழரே!
 எத்தனை தலைமுறைகள் இங்கே வாழ்ந்தாலும் வேற்று இனத்தவர் வேற்றாரே!
2009 இனப்படுகொலை நடந்தபோது நமக்காக துடித்தவர்கள் யார் என்று எண்ணிப்பாருங்கள் இந்த உண்மை புரியும்!

 இனத்தைக் காக்க தனிநாடு நிறுவும் முயற்சியில் இனமே அழிந்தாலும் பரவாயில்லை!
 அப்படி இருக்கும்போது மொழி எல்லாம் ஒரு பொருட்டே இல்லை!

Tuesday 8 February 2022

பர்தா அணிய குரான் கூறவில்லை

பர்தா அணிய குரான் கூறவில்லை

குரான் பெண்கள் உடை பற்றி என்ன கூறியுள்ளது என்று பார்ப்போம்.

"நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக்கொள்ளுமாறு கூறுவீராக!
அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன்."
- குரான் 33:59,

மேலும் இருபத்து நான்காவது அத்தியாயத்தில்

  "இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக, அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.
மேலும், தாங்கள் மறைத்துவைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்.
மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்."
- குரான் 24:31

அதாவது பெண்கள் (சிறுமிகள் அல்ல) தங்கள் தலையில் தாழ்வான முக்காடு போட்டிருக்க வேண்டும்
(முகத்தை மறைக்கச் சொல்லவில்லை).
பார்வையைத் தாழ்த்தி தலைகுனிந்து நடக்கவேண்டும். மார்பின் மீது துணிபோட்டு மறைத்துக் கொள்ளவேண்டும். உடலின் கவர்ச்சியான பாகங்கள் வெளித்தெரியக் கூடாது. பெண்கள் அதிர்ந்து நடக்கக்கூடாது. வேற்று ஆடவருக்கு உடல் பகுதியைக் காட்டக்கூடாது.

அந்த காலத்து கட்டுப்பெட்டியான சிந்தனைதான் ஆனாலும் முழுக்க மூடிக்கொண்டு கருப்பு பேய் மாதிரி உலவவேண்டும் என்று குரான் கூறவில்லை.

தலைகுனிந்து வெட்கத்துடன் நிலம் அதிராமல் அன்னநடை நடப்பது அக்காலப் பெண்களின் இயல்பு. அவ்வாறு இருக்கவேண்டும் என்று கூறி உடலை வெளிக்காட்டாத நாகரீகமான உடை அத்துடன் முக்காடு, துப்பட்டா.

அவ்வளவுதான்.
அவ்வளவேதான்!

முக்காடு அந்நாட்டு வெயிலை கருத்தில்கொண்டு இருக்கலாம். அல்லது நபியின் மனைவிகளுக்கு மட்டுமானதாக இருக்கலாம்.
என்றால் இன்றைய சுடிதார், தாவணி, சேலை போன்ற உடைகள் இசுலாத் விதிப்படி சரிதான்.

இசுலாத்துக்கு குரான் மட்டும்தான் பிரதானம். ஹதீஸ் எனும் அதன் விளக்கவுரைகளோ அல்லது பிற்கால மத நூல்களோ என்ன கூறினாலும் அது குரானுடன் போட்டிபோட முடியாது.

முதலில் இசுலாமியர்கள் இசுலாத்தை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.

மதத்தின் பெயரைச் சொல்லி நடக்கப் பழகியவுடன் பெண்பிள்ளைகளை கறுப்புத்துணியால் மூடி காட்டேரி போல ஆக்கி அவர்கள் வாழ்க்கையை இருளில் தள்ளவேண்டாம்.

அனைவரும் ஒரே மாதிரி தோற்றத்தில் இருக்கவேண்டும் என்பதுதான் சீருடையின் நோக்கம். அதிலும் வந்து கருப்பு துணி காவித்துண்டு என மதத்தை நுழைப்பது சரியில்லை.