Wednesday 26 May 2021

கட்டாயத் தீவிரவாதம்

கட்டாயத் தீவிரவாதம்

இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் புலிகள் தீவிரவாதிகள் என்றுதான் இந்தி திரைப்படங்கள் காட்டும்.
இவர்களுக்கு நாம் ஆயுதம் தூக்கியே ஆகவேண்டும். அப்போதுதான் ஜனநாயக வழியில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லாமல் தீவிரவாத முத்திரை குத்தி ஒரேடியாக கொன்றொழித்துவிட்டு அடுத்தடுத்த இனங்களைத் தின்று செரிக்கும் வேலையைப் பார்க்க முடியும்.
அதற்குத்தான் நமது எல்லா உரிமைகளையும் பறித்து அளவுக்கதிகமாகச் சுரண்டி நம் பொறுமையைச் சோதிக்கிறார்கள்.

நாமும் விட்டோமா என்றால் இல்லை. செத்தாலும் ஆயுதம் தூக்கமாட்டோம் மிதிக்கும் கால்களுக்கு முத்தம்தான் கொடுப்போம் என்று எருமைமாட்டுப் பொறுமையுடன் அகிம்சை பேசிக்கொண்டு இருக்கிறோம்.

தற்போதைய பிரச்சனைக்கு வருவோம். இந்திய உளவுத்துறை இதுவரை உருப்படியாக எதையுமே கிழித்ததில்லை. அந்த தாழ்வு மனப்பான்மையைப் போக்க திரையில் வீரசாகசம் புரிகிறார்கள். அப்படியான ஒரு கற்பனை காவியம்தான் பேமிலி மேன்.
போலியான நாட்டுக்கு ஒரு கற்பனையான கதாநாயகன்தானே வாய்ப்பான்!
உலக ஆதிக்கத்தை இழந்த பிரிட்டன் உலகத்தையே காப்பாற்றும் ஜேம்ஸ் பாண்ட்டை உருவாக்கியது போல
வியட்நாமிடம் மண்ணைக் கவ்விய அமெரிக்கா அவமானத்தை மறக்க ரேம்போ படங்களை எடுத்துத் தள்ளியதுபோல
ஹிந்தியர்கள் திரையில் பாகிஸ்தானைப் பந்தாடிக் கொண்டிருந்தனர்.
ராஜீவ் காந்தியின் ஈழம் மீதான நடவடிக்கை படுதோல்வியில் முடிந்து ஹிந்தியா அடைந்த அவமானம் அதன் வரலாற்றில் மறைக்க முடியாத கறை. 2009 இல் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்து வஞ்சம் தீர்த்த பிறகும் ஆற்றமுடியாமல் அலைகிறார்கள். தற்போது இலங்கைக்கு எதிரான (உப்புசப்பில்லாத) தீர்மானம் ஐநாவில் நிறைவேறியிருப்பதும் ராஜீவ் கொலைவழக்கில் சிறையில் இருந்து விடுதலை செய்ய (வெளிப்பார்வைக்கு) மாநில அரசு முயல்வதும் ஹிந்தியர்களுக்கு ஆத்திரத்தை மூட்டியிருக்கிறது.

போதாக்குறைக்கு கொரோனா பேரிடரில் பல்லிளித்துவிட்ட ஹிந்திய அரச கட்டமைப்புக்கு மூவர்ண மேற்பூச்சு பூசியாகவேண்டிய கட்டாயம்.
எனவே ஹிந்தியர்களை திசைமாற்ற அவர்களின் பொதுவான எதிரியான தமிழர்களை சீண்டுகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஓரளவு பலனும் கிடைத்துள்ளது.

ஆனால் உண்மையில் ஹிந்தியருக்கு அறிவேயில்லை என்றுதான் கூறவேண்டும்.
ஏன் வலிக்க வலிக்க பெரிய பெரிய பொன்முட்டைகளை இடும் வாத்தை அறுக்க நினைக்கிறார்கள் என்று புரியவில்லை.

தமிழர்கள்தான் அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்தது போல ஹிந்தியாவின் சுரண்டலுக்கு ஒத்துழைக்கிறார்களே!

பிறகென்னன அதே வழியில் போய் அவர்களை மெல்ல நிதானமாகத் தின்று செரிக்க வேண்டியதுதானே?!

தமிழர்களை ஆயுதம் தூக்க ஊக்கப்படுத்துவது ஹிந்தியாவுக்கு நல்லதல்லவே!

மிருகக்காட்சி சாலையில் சிவனே என்று இருக்கும் ஒரு காட்டுப் புலியை வைத்து நன்றாக சம்பாதிப்பவன் அதைக் காட்டில் கொண்டுவிட்டு அதன்பிறகு தேடி வேட்டையாடிக் கொன்று வீரத்தை நிரூபிப்பேன் என்று முடிவெடுப்பது போல இருக்கிறது.

இப்போது நாங்கள் ஆயுதம் தூக்கினால் ஹிந்தியா தாங்காது!
அதிலும் தீவிரவாதிகளாக மாறிவிட்டால் உலகமே தாங்காது!

ஆகவே ஹிந்தியர்களே! படம் எடுப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! நிஜத்தில் நீங்கள் செய்வதையே தொடர்ந்து செய்யுங்கள் கட்டாயம் நாங்கள் தோற்றுவிடுவோம்!

இன்னும் இருபது ஆண்டுகளில் தொகுதிக்கு ஒரு ஊர், ஊருக்கு ஒரு பகுதி, பகுதிக்கு ஒரு தெரு, தெருவுக்கு ஒரு வீடு, வீட்டுக்கு ஒரு நபர் தமிழரல்லாதவராக இருப்பார்.

அப்போது நாங்கள் ஆயுதம் தூக்கித்தான் ஆகவேண்டும்! அப்போது உங்கள் அழித்தொழிக்கும் திட்டத்தை தொடங்கினால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்!

இப்போதே சீண்டி வெண்ணை திரண்டுவரும் நேரத்தில் தாழியை ஏன் உடைக்கிறீர்கள்?!

இப்போது நாங்கள் ஆயுதம் தூக்கினால் உங்களுக்குத் தோல்வியும் எங்களுக்கு விடுதலையும் உறுதி என்பது உங்கள் மரமண்டைக்குத் ஏறவில்லையா?

Monday 17 May 2021

எங்கே எதில் விட்டோம்

எங்கே எதில் விட்டோம்?

நமது வரலாற்றில் நமது வாழ்விட பரவலையும் நமது உயரிய பண்பாட்டையும் பல்துறை அறிவையும் நாம் உருவாக்கிய நூல்களையும் நாம் கட்டியெழுப்பிய பேரரசுகளையும் பேணிய உலகத் தொடர்பினையும் கணக்கில் கொண்டு பார்த்தோமேயானால் ( பழமையை விட்டுவிட்டாலும்) நாம் இன்று  அரேபியர்களை போல ரசியர்களைப் போல சீனர்களைப் போல ஈரானியர்கள் போல ஸ்பானியர்களைப் போல இந்தியர்களைப் போல ஏறத்தாழ கால்வாசி கண்டம் பரவலாக வாழ்ந்திருக்க வேண்டும்.
ரஷ்யா சீனா ஹிந்தியா போன்ற ஒரே நாடாக அல்லது ஈரானியர் அரேபியர் ஸ்பானியர் போல பல நாடுகளைக் கொண்டும் இன்று நாம் மிகப்பெரிய வலிமை பொருந்திய இனமாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் எங்கே எப்படி சறுக்கினோம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. மிகவும் பிற்பாடு தோன்றிய பெங்காலி, மலாய் போன்றோர் கூட ஒரு நாடும் அதுதாண்டி குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஆதிக்கமும் பெற்று விளங்குகின்றனர்.
பஞ்சாபி கூட தனிநாடு கேட்டு போராடி தோற்றாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பெரிய நிலப்பரப்பில் வலிமையான ஆதிக்கம் பெற்றுள்ளனர். உலகையே அடிமைப்படுத்திய ஐரோப்பிய இனங்கள் மக்கட்தொகையும் பெருகி உலகில் ஆங்காங்கே குடியமர்ந்து பெரும் வளத்துடன் வாழ்கின்றனர்.

எல்லாம் இருந்தும் சிறியதாக சுருங்கி போன பழமையான இனங்கள் நாமும் ஜெர்மானியரும் மட்டுமே!
இதில் ஜெர்மானியர் தனக்கென்று ஒரு நாடு வைத்துள்ளார்கள்.
உலக ஆதிக்கத்திற்கு இரண்டு முறை முயன்று தோல்வி அடைந்துள்ளனர்.

நாமோ இன்று உலகின் ஏதோ ஒரு மூலையில் எந்த அதிகாரமும் இல்லாமல் சுருங்கி ஒடுங்கிப்போய் கிடக்கிறோம். தனிநாடு போராட்டத்திலும் பெரிய இழப்பைச் சந்தித்துவிட்டோம். இனி பிழைத்திருப்போமா என்ற சந்தேகம் வரும் வகையில் எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கிறோம்.
இத்தனைக்கும் இப்போதும் உலகில் பேசப்படும் மொழிகளில் மக்கட்தொகை அடிப்படையில் 23வது மொழி நமது.
  இதற்கு காரணம் என்னவென்று யோசித்துக்கொண்டே சற்றே திரும்பிப் பார்த்தால் முந்தாநாள் தோன்றிய தெலுங்கு இனம் குறுகிய காலத்தில் இந்திய துணைக்கண்டத்தில் கால்வாசி நிலத்தில் நம்மிலும் அதிகமான மக்கட்தொகையை அடைந்து அளவுக்கதிகமான ஆதிக்கம் செலுத்தும் நிலையில் விளங்குகிறது.

நியாயப்படி விந்திய மலைக்கு தெற்கே மாலைத்தீவு வரை தமிழர் நிலம் இருந்திருக்க வேண்டும்.

உலக இனங்கள் ஆக்கிரமித்து குடியேறிக்கொண்டு இருந்தபோது நாம் இருந்த நிலத்தையும் கண்டவர் குடிவர விட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தோம். என்றாலும் இத்தனை பெரிய சறுக்கல் ஏற்புடையது அல்ல.

ஆக்கிரமிக்காத இனம் ஆக்கிரமிப்புக்கு ஆளாகும் என்பதை நாம் புரிந்து கொள்ளவில்லை. இதை பரந்த மனம் என்பதா? முட்டாள்த்தனம் என்பதா?

இன்றுவரை நாம் திருந்தவில்லை. பழமையைப் பேசுவதோடு சரி! இனத்தின் எதிர்காலம் பற்றி கடுகளவு கூட சிந்திப்பதில்லை!

Sunday 16 May 2021

பாலஸ்தீனர் செய்யவேண்டியது

பாலஸ்தீனர் செய்யவேண்டியது

பாலஸ்தீனர்களும் ஈழத்தமிழர்களும் ஒரே தவறைத் தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஒரு நாட்டின் ஒரு பகுதியை மட்டும் தனிநாடாக ஆக்குவதற்கு போராடினால் அதை போன்ற முட்டாள்தனம் வரலாற்றில் வேறில்லை.

ஒரு இனம் தன் இனத்தின் பெயரிலேயே தன் தாய்நிலத்தை முழுவதுமாக தனிநாடாக கோரினால்தான் அது விடுதலை அடைய அதிக வாய்ப்பிருக்கிறது.
ஈழத்தமிழர்கள் தமிழர்நாட்டின் ஒரு பகுதியான ஈழத்தை மட்டும் தனிநாடக்க முயற்சித்ததால் தோல்வியை சந்தித்தனர்.

அதேபோலத்தான் பாலஸ்தீனர்களின் தமது இனமான அரபு என்கிற பெயரால் அரேபியர்களுடன் ஒன்றிணைந்து முழு அரபு நாட்டை அமைக்கவோ அல்லது குறைந்தபட்சம் அருகிலிருக்கும் ஏதாவது ஒரு அரபு நாட்டின் பகுதியாக தன்னை இணைத்துக் கொள்ளவோ போராடி இருந்தால் இந்நேரம் விடுதலை அடைந்து இருப்பார்கள்.

தனது இனம் அருகிலேயே பலம்வாய்ந்த நிலையில் இருக்கும்பொழுது அவர்களை விட்டுவிட்டு தாம் வாழும் மிக சிறிய பகுதியை மட்டும் தனிநாடாகக் கோருவது சுயநலம் மட்டுமின்றி மிகப்பெரிய இனத்துரோகம் ஆகும் என்பது என் கருத்து.

பாலஸ்தீனம் ஈழம் இரண்டுமே பழமையான பெயர்கள்தான். ஆனால் அவை இடத்தை குறிக்கும் பெயர்கள் இனத்தை குறிப்பவை அல்ல.

எனவே, இனத்தின் பெயரால் ஒரு இனம் மொத்தமாக ஓரணியில் திரண்டு தனது மொத்த தாய்நிலத்தையும் ஒரே நாடாக கோருவதை தமிழ் தேசியம் வலியுறுத்துகிறது.

அந்தவகையில் அரபு நாடுகள் அனைத்துமே ஒன்றிணைந்து ஒரே நாடாக செயல்படுவது தான் சரியாக இருக்கும். அரேபிய இனத்தின் மொத்த மக்கட்தொகை ஏறத்தாழ 30 கோடி என்றாலும் அரேபிய தாய்நிலம் அந்த மக்கட்தொகைக்கு தாராளம் என்று கூறும் வகையில் மிகப் மிகப்பெரியது. ஒரே மொழி என்கிறபோது எத்தனை கோடி என்றாலும் நாட்டு நிர்வாகத்தில் பிரச்சனை வராது (ஏற்கனவே அரபு லீக் இருக்கிறதுதான். அதில் இணைந்திருக்கும் 22 நாடுகளில் பாலஸ்தீனமும் ஒரு உறுப்பினர்தான். ஆனாலும் இந்த அமைப்பு பெயருக்குதான் இருக்கிறது. அதிலும் நியாயமே இல்லாமல் சோமாலியாவும் ஒரு உறுப்பினர்).

தற்போது பாலஸ்தீன பிரச்சனைக்கு என்ன தீர்வு என்றால் பாலஸ்தீனம் வரலாற்றில் சிரியாவுடன் அதிகம் தொடர்பில் இருந்திருக்கிறது என்றாலும் தற்போது ஜோர்டான் நாட்டுக்கு அருகில் இருக்கிறது.
(முற்காலத்தில் இந்த மொத்த நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள் அரேபியர்கள் கிடையாது என்றாலும் அரேபியர்களின் முன்னோர்கள் அந்த நிலப்பரப்பில் வாழ்ந்திருக்கிறார்கள். மூதாதை இனம் இன்று இல்லையென்ற நிலையில் அரேபியர் அந்த நிலத்தை சொந்தம் கொண்டாடுவதில் தவறில்லை.
கடவுள் ஏற்கனவே இருந்தவர்களை விரட்டிவிட்டுத்தான் யூதர்களைக் குடிவைத்ததாக அவர்களின் புனிதநூல் கூறுகிறது. நான் ஏற்கனவே கூறியபடி யூதர் ஒரு தனியினம் கிடையாது. யூத மதத்தைத் தழுவிய பல்வேறு இனத்தவர்களே இன்று யூதர்). எனவே ஜோர்டான் நாட்டின் ஒரு பகுதியாக (தற்போதைய இசுரேல் நிலப்பரப்பையும் சேர்த்து) தம்மை சேர்த்துக் கொள்ளுமாறு பாலஸ்தீனர்கள் போராட வேண்டும் (காசா பகுதியை அருகிலிருக்கும் எகிப்துடன் சேர்க்கலாம்). அரபு தேசியத்தை மட்டும் முன்னெடுக்க வேண்டும். முழு அரபுநாடு என்கிற கோட்பாட்டை முன்வைத்து அரேபியர்களை ஓரணியில் திரட்ட வேண்டும். இனத்துடன் மதத்தை அதாவது இசுலாமியர், கிறித்தவர், யூதர் என்று குழப்பிக்கொள்ளக்கூடாது. யூதரில் அராபியர் தவிர்த்து அனைவரையும் விரட்டவேண்டும். அரேபிய நாடுகள் யூனியன் அமைத்துக்கொண்டு ஒற்றை நாடு போல பொதுவான ராணுவம், இறையாண்மை, பணம் மற்றும் அலுவல் மொழி கொண்டு செயல்பட வேண்டும். தமக்குத் தொடர்பில்லாத சோமாலியாவை விட்டுவிடவும் வேண்டும்.

படம்: அரபு மொழி பேசப்படும் நிலப்பரப்பு

Friday 14 May 2021

நோன்பு கட்டாயமா?

நோன்பு கட்டாயமா?

இசுலாமியர்கள் மீது திணிக்கப்படும் ஒரு பழக்கம்தான் இந்த ஒரு மாத நோன்பு.
ஆனால் இஸ்லாமிய கொள்கைப்படி இது இறை வழிபாடு என்கிற கணக்கில் வராது!
இசுலாமிய நோன்பு வைக்கும் முறை மக்கள் பசியை உணரவேண்டும் என்றோ இறைவனை நினைக்கவேண்டும் என்றோ உருவாக்கப்பட்டது இல்லை!
அரேபிய பாலைவனத்தில் வெயில் உச்சத்திற்கு செல்லும் மாதத்தில் பகலில் ஓய்வெடுத்துக்கொண்டு இரவில் இயங்குவது வழக்கம். அந்த வழக்கத்தை இசுலாம் சட்டமாக்கியது.
ரமளான் மாதம் பல்வேறு காலநிலையிலும் வருகிறதே என்று சிலர் கேட்கலாம்.
அரேபிய நாட்காட்டி படி ஒரு வருடத்திற்கு (29×6 மாதம் + 30×6 மாதம்) 354நாட்கள். மீதமாகும் 11 நாட்களை அவர்கள் 3 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாதமாக ஆக்கி சேர்த்துக் கொள்வார்கள். அதாவது அந்த வருடத்திற்கு 13 மாதங்கள் இருக்கும்.
நபிகள் நாயகம் தவறுதலாக இந்த 13-வது மாதம் வேண்டாம் என்று விட்டுவிட சொல்லிவிட்டார். இதனால் இஸ்லாமிய நாட்காட்டி காலநிலையுடன் பொருந்தாமல் சுழன்றுகொண்டிருக்கிறது. இதனால்தான் ரமலான் மாதம் வெவ்வேறு கால நிலைகளில் வருகிறது.
நோன்பு இருக்கும் பழக்கம் எல்லா மதங்களிலும் இருக்கிறது. அது உடலுக்கு நல்லது. ஆனால் பாலைவன சூழலுக்கு தொடர்பில்லாத மக்கள் அதிலும் உழைக்கும் வர்க்கம் பகல் முழுவதும் உண்ணாமல் உழைப்பது அதுவும் ஒரு மாதத்திற்கு தொடர்வது உடலுக்கு நல்லது இல்லை. ஓரிரு நாட்கள் இருக்கலாம். இடைவெளி விட்டு அடிக்கடி கூட இருக்கலாம். வாரம் இரண்டு நாட்கள் இருக்கலாம்.
நோன்பை இஸ்லாத் கடமை என்று கூறுகிறது கட்டாயம் என்று கூறவில்லை. இதை கடைபிடிப்பதால் இறையருள் கிடைக்கும் என்றோ தவறினால் தண்டனை என்றோ கூறப்படவில்லை.
நம் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தினர் இவர்கள் நாள் முழுவதும் உண்ணாமல் உழைப்பது மிகவும் கடினம். எனவே உடலுழைப்பு அதிகம் செலுத்துபவர்கள் இதனை விட்டுவிடலாம் என்பது என் கருத்து.
மதவாதிகளின் பேச்சை எப்போதுமே கேட்காதீர்கள். சளியை விழுங்கக் கூடாது என்று பிற்கால இசுலாமிய நூல்களில் கூறியதை உமிழ்நீரைக்கூட விழுங்கக் கூடாது என்று இஸ்லாமிய வெறியர்கள் மாற்றிவிட்டார்கள்.
மதத்தின் பெயரால் மக்களை வதைப்பதில் இவர்களுக்குத்தான் என்னே இன்பம்?!

நோன்பை இப்படித்தான் கடைபிடிக்க வேண்டும், இப்படித்தான் முறிக்கவேண்டும், இவரிவருக்கு விலக்கு என்று பிற்காலத்தில் வந்த இஸ்லாமிய நூல்கள் விளக்கம் கூறுகின்றன. அதில் கூட பசியை உணர்வதற்கு என்கிற சிந்தனை இல்லை.
ஆனால் குர்ஆன் நோன்பு பற்றி இரண்டு வசனங்களில் கூறி முடித்து விடுகிறது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
- குர்ஆன் 2:184

இதில் இறைவன் என்ற சொல் புரிந்துகொள்ள மொழிபெயர்ப்பாளரால் சேர்க்கப்பட்டது. உங்கள் முன்னோர் மீது கடமையாக்கப்பட்டது என்று வருகிறது. அதற்கு முன் இசுலாம் கிடையாது. என்றால் முன்னோரை கடைபிடிக்கவைத்தது எது? அரேபிய கலாச்சார சட்டம் என்று புரிந்துகொள்ளலாம்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
- குர்ஆன் 2:185

முதலில் குறிப்பிட்ட நாட்களில் என்று கூறுகிறது. இரண்டாவது ஒரு மாதத்தில் என்று கூறுகிறது. மாதம் முழுவதுமா என்பதும் தெளிவாகக் கூறப்படவில்லை.

பிற்கால விளக்கவுரை நூல்கள் நோன்பு பற்றி பல விடயங்களைக் கூறுகின்றன. ஆனால் குரான் நோன்பைக் கடைபிடிக்க அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

மனிதத்திற்குப் பிறகுதான் மதம்!
பசியில் வாடும் சக மனிதர் மீதான அக்கறையில் எழுதப்பட்டது இந்த பதிவு.

Sunday 2 May 2021

தெலுங்குவந்தேறிகளைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்

தெலுங்கு வந்தேறிகளை பாராட்டித்தான் ஆக வேண்டும்

கன்னடரிடம் போரில் தோற்ற தமிழர்களின் தாய்நிலத்தில், கன்னடரை காக்கா பிடித்து அவர்களின் பிரதிநிதியாக ஆதிக்க நோக்கத்துடன் குடியேறி கன்னடர் வீழ்ந்த பிறகு 350 ஆண்டுகள் ஆண்டு அனுபவித்து அதன் பிறகும் 350 ஆண்டுகளாக (தொடர்ச்சியாக 700 ஆண்டுகள்) தாம் கைப்பற்றிய அதிகாரத்தையும் சொத்துக்களையும் நிலவுடைமையையும் வழிவழியாக கைமாற்றி தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் ஆதிக்க சக்தியாகவே இருக்கிறார்கள் தெலுங்கர்கள்.

எனக்குத் தெரிந்து வரலாற்றில் வேறு எந்த இனமும் இன்னொரு இனத்தை இப்படி மிக மிகத் தந்திரமாக சுரண்டி கொழுத்து அதுவும் இத்தனை காலம் நீடிக்கவில்லை. எந்த ஒரு இனமும் தமிழினம் போல போரில் ஏற்பட்ட தோல்விக்கு இத்தனை பெரிய விலையைக் கொடுக்கவில்லை.

இன்றுவரை தமிழகத்தில் அவர்களின் மக்கட்தொகையும் சரி, சொத்துபத்துக்களும் சரி, அரசியல் ஆதிக்கமும் சரி, வணிக ஆதிக்கமும் சரி தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில்தான் செல்கிறது.

யூதர்களைக் கூட இவர்களுடன் ஒப்பிட முடியாது, ஏனென்றால் யூதர்கள் ஒரே இனம் கிடையாது. எல்லா இனத்திலும் யூத மதத்தைத் தழுவியவர்கள் வணிக ஆதிக்கம் பெற்று விளங்கினர். நிலவுடைமை, அரசியல் அதிகாரம், மக்கட்தொகைப் பெருக்கம் இவற்றில் யூதர்கள் தமிழகத் தெலுங்கர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்.

ஒற்றுமையில் கூட தமிழக தெலுங்கு வந்தேறிகளின் கால்தூசு பேறமாட்டார்கள் யூதர்கள்.  ஹிட்லரை ஆதரித்த ஜெர்மானிய யூத சங்கம் கூட இருந்தது. ஆனால் தமிழகத் தெலுங்கர்கள் அத்தனை விழிப்பாக ஒற்றுமையாக இருக்கிறார்கள். அசல் ஆந்திரர்களிடம் கூட இவ்வளவு ஒற்றுமை இல்லை.

ஹிந்தியர் நம்மை ஆள்கிறார்கள்தான். ஆனால் வரலாற்றில் எந்த ஒரு பேரரசையும் போல இந்திய ஏகாதிபத்திய அரசும் 200, 300 ஆண்டுகளில் வீழ்ந்துவிடும் என்பது உறுதி. பிற இனங்களின் ஆதிக்கமும் இருக்கிறதுதான். ஆனால் அவையெல்லாம் அகற்ற முடியும் என்கிற நிலையில்தான் இருக்கிறது.

ஆனால் எது எப்படி மாறினாலும் தமிழ் மண்ணில் தெலுங்கு ஆதிக்கம் மட்டும் மறையவே மறையாது என்பது போல் இருக்கிறது.

தமிழினத்தின் வருங்காலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக இதை மட்டும்தான் நான் உணர்கிறேன்.

இன்று மீண்டும் ஆட்சியில் அமர்கிறார் திருமலை நாயக்கரின் மறுபிறவி போல் தோற்றமளிக்கும் ஸ்டாலின்!
பட்டத்து இளவரசர் உதயநிதியும் பதவியில்!
தெலுங்கர் அத்தனை பேரும் வெற்றி!
தமிழ்தேசியம் பேசிய சீமான் தோல்வி!
தமிழர் அத்தனை பேரும் படுதோல்வி!
தமிழக மக்கள் அச்சத்திலும் அதிர்ச்சியிலும்!
வந்தேறிகள் உச்சகட்ட மகிழ்ச்சியில்!

தமிழர்கள் இந்த ஒட்டுண்ணிகளை உணரவே மாட்டார்களா?
இந்த தெலுங்கு ஆதிக்கத்தில் இருந்து நமக்கு விடுதலையே கிடையாதா?
என்றெல்லாம் கதறவேண்டும் போல் இருக்கிறது.