Saturday 25 December 2021

பாவாணர் திருத்தம் செய்த தமிழ்த்தாய் வாழ்த்து

பாவாணர் திருத்தம் செய்த தமிழ்த்தாய் வாழ்த்து

 நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் முகமெனவே திகழ் நாவற் கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தாங்குநறும் பொட்டணியும்
தெக்கணமும் அதிற்சிறந்த தென்மொழிநற் றிருநாடும்
அத்தகும் பொட் டருமணம்போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்
உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

நூல்: தமிழ்வளம்
ஆசிரியர்: தேவநேயப் பாவாணர்

தகவலுக்கு நன்றி: ஐ வலையொளி 

இயேசு மற்றும் கிறிஸ்தவம் பற்றி ஒரு மீள்பார்வை

இயேசு மற்றும் கிறிஸ்தவம் பற்றி ஒரு மீள்பார்வை 

1 ) இயேசு ஒரு கன்னிக்குப் பிறந்தார்.

 தவறு, ஹீப்ரு மொழியில் இளம்பெண் (almah) என்கிற சொல் கிரேக்க மொழியில் கன்னிப்பெண் என தவறாக மொழிபெயர்க்கப் பட்டது. இதிலிருந்தே அனைத்து மொழிகளிலும் இப்பிழையான கருத்து மொழிபெயர்க்கப் பட்டது. இயேசு அதிசயப் பிறவி என்று காட்ட பிற்கால கிறித்துவ அறிஞர்கள் தேவதூதன் கனவில் தோன்றி 'கன்னி கர்ப்பம் தரிப்பாள்' என்று கூறியதாக எழுதினர்.
 
2) ஏசு ஆடு மேய்த்தார்.

 தவறு, ஏசு ஒரு தச்சு ஆசாரி குலத்தில் பிறந்தவர். (யூதர்களின்) வழிகாட்டி என்கிற பொருளில் (மனிதர்களை) மேய்ப்பவர் என்று கூறப்பட்டது பிறகு தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டது

3) இயேசுதான் கடவுள்.

 தவறு, அவர் கடவுளின் மகன் அல்லது தூதன் என்று அழைக்கப்பட்டார். கிறிஸ்து (கர்த்தர்) என்பது கடவுளைக் குறிக்கும் சொல். இயேசு வேறு கிறிஸ்து வேறு. இரண்டும் ஒன்றல்ல. இறக்கும் தருவாயில் ஏசு இறைவனை நோக்கி கேள்வியும் கேட்கிறார்.

4) இயேசு மனிதர் அனைவருக்கும் பொதுவானவர்.

தவறு, ஏசு யூதர்களை நல்வழிப்படுத்தவே விரும்பினார். தான் யூதர்களுக்கு மட்டுமானவன் என்று கூறியுள்ளார். அவர் யூதர் தவிர்த்த பிறரிடம் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று சீடர்களுக்கு கட்டளையும் இட்டிருந்தார். பிற்காலத்தில் பால் என்பவரே அந்த கட்டளையை மீறி இயேசு அனைவருக்குமான கடவுள் என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

5) இயேசு உயிர்த்தெழுந்தார்.

தவறு, பிற்கால நூல்கள் அவ்வாறு எழுதியுள்ளன. அவை நற்செய்தி நூல்கள் என்று அறியப்படுகின்றன. இவை உயிர்த்தெழுந்த நிகழ்வு பற்றி ஒன்றுக்கொன்று முரண்பாடாக கூறுகின்றன. இதை மக்களும் நம்பவில்லை. இன்றும் கூட 'ஏசு திரும்ப வருவார்' என்றுதான் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

6) சிலுவை இயேசுவின் சின்னம்.

தவறு, ஏசு இறந்து பல நூற்றாண்டுக்குப் பிறகே அது கிறித்துவ சின்னம் ஆனது. மற்றபடி அது கொடுமைப்படுத்திக் கொலைசெய்யும் கருவியாகவே அறியப்பட்டது. அதற்கு முன் கிறிஸ்துவத்தின் சின்னம் மீன் ஆகும்.

7) ஏசு பிறந்தபொழுது நட்சத்திரம் தோன்றி வானியல் அறிஞர்களை (சாஸ்திரிகள்) அழைத்து வந்தது.

 இயேசுவின் பிறப்பு நிகழ்வுகள் பிற்காலத்தில் எழுதப்பட்ட நாடக வடிவிலான நூல்களில் (மத்தேயு மற்றும் லூக்கா) மட்டுமே உள்ளது. இயேசு அதிசயப் பிறவி என்று நிறுவும் நோக்கில் எழுதப்பட்ட கதையே அது. 

8 ) ஏசு கிறித்துவ மதத்தை நிறுவினார்.

தவறு, ஏசு எந்த மதத்தையும் நிறுவவில்லை. அவர் யூதராகப் பிறந்து யூதராகவே இறந்தார்.

9) கிறிஸ்துமஸ் ஏசு பிறந்த தினம்
தவறு, ஏற்கனவே கொண்டாடப்பட்டு வந்த யூல் எனும் விழாதான் கிறிஸ்துமஸ் என்றானது. இயேசு பிறந்த மாதம் தெளிவாக தெரியவில்லை. அதை சந்தேகத்துடன் x-mas என்றும் குறிப்பிடுவர்.

10) கிறிஸ்துமஸ் தாத்தா கிறிஸ்தவம் சார்ந்த ஒரு கதாபாத்திரம்.

தவறு, கிறிஸ்துமஸ் தாத்தா போன்ற கற்பனை கதாபாத்திரம் வணிக நோக்கில் வெறும் இரண்டு நூற்றாண்டுகள் முன்பு தோன்றியது. கிறிஸ்துமஸ் தாத்தாவை உலகம் முழுவதிலும் சிவப்பு மற்றும் வெள்ளை உடையில் விளம்பரம் செய்தது கொக்ககோலா நிறுவனம் ஆகும். 

11) இயேசு வெள்ளைத் தோல், பொன்னிற முடி, பூனைக் கண்கள் கொண்ட ஐரோப்பியர் போலிருந்தார்.

தவறு, இயேசு அங்கு வாழ்ந்த மக்கள் போலவே இருந்தார். அதனால் அவரை அடையாளம் காட்ட யூதாஸ் முத்தமிட்டான்.

12) சாத்தான் என்று ஒரு கெட்ட கடவுள் இருக்கிறான்.

 தவறு, பழைய ஏற்பாட்டில் சாத்தான் என்று யாருமில்லை. ஆதாம் ஏவாள் கதையில் பாம்பு கூறியதாக உள்ளது. புதிய ஏற்பாட்டில் எதிரி என்கிற பொருளில் சாத்தான் என்கிற சொல் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அவ்வாறு கடவுளுக்குப் பணியாத தேவதூதன் ஒருவனும் குறிக்கப்பட்டுள்ளதால் அவனே சாத்தான் என்றும் மக்களை தீயவழிக்கு ஊக்கப்படுத்துபவன் என்றும் நரகத்தின் தலைவன் எனுமாறும் புனைவுகள் பிற்காலத்தில் உருவானது. 

13) கிறிஸ்துவம் அறிவியலில் நாட்டம் கொண்ட மதம்

தவறு, ஐரோப்பாவின் இருண்ட காலம் கிறிஸ்துவ மதம் ஆதிக்கம் செலுத்திவந்த காலமே ஆகும். மற்ற எந்த மதத்தையும் விட அதிகமான கட்டுப்பாடுகள் கிறிஸ்துவ மதத்தில் கடைபிடிக்கப்பட்டன. மன்னரை விட ஆதிக்கம் பெற்று விளங்கிய மதகுருக்கள் பலவாறு மக்களைக் கொடுமைப்படுத்தினர். பெண்கள் உள்ளாடையை இரும்பில் செய்து பூட்டு போட்டுவிட்டனர். பாலுறுப்பு வடிவில் இருந்த பூக்களைக் கொண்ட  செடிகளைக் கூட கண்டதும் அழிக்க உத்தரவிட்டனர். மனைவியுடன் இவ்வாறுதான் உடலுறவு கொள்ளவேண்டும் என்றெல்லாம் கூட கட்டுப்பாடுகள் விதித்தனர் 

14) கிறிஸ்துவம் அமைதியையும் மன்னிப்பதையும் வலியுறுத்துவது
சரிதான், ஆனால் நடைமுறையில் தன் மதத்து மக்களை கடவுளின் பெயரால் அதிகம் காவு வாங்கியது கிறித்தவ மதமே! பல்வேறு நாடுகளில் இருந்து மதத்தின் பெயரால் மக்களை ஒன்றுதிரட்டி கிறித்துவ மதகுருக்கள் நடத்திய சிலுவைப் போர்கள்தான் முழுமையான மதப் போர் எனலாம்.

பெரும்பாலான தகவல்களுக்கு நன்றி: இரா.இருதயராஜ்

Wednesday 8 December 2021

ஒரு ஊரில் ஒரு தலைவர் இருந்தாராம்

ஒரு ஊரில் ஒரு தலைவர் இருந்தாராம் 

காலம் கி.பி. 2135

 தலைவர்கள் பெரும்பாலும் எப்படி இருப்பார்கள்?
 இளைஞர்களாக, மக்களுக்காக தியாகம் செய்பவர்களாக, குடும்பத்தை இழந்தவர்களாக, உயிரை பணயம் வைப்பவராக, மனிதநேயத்துடன்,  நேர்மையாக, அதிகம் புகழ் பெறாதவர்களாக, தலைமறைவாக இருப்பவராக, அநீதிக்கு எதிராக குரல்கொடுப்பவராக, சிறை சென்றவராக, எளிமையானவராக இருப்பார்கள் அல்லவா?!

 ஆனால் தமிழர்நாட்டுத் தலைவர் மட்டும் அப்படி இல்லை.
 அவர் பணக்காரனாக, கொள்ளைக்காரனாக,  கொலைகாரனாக, கடத்தல்காரனாக, இனத்திற்காக எந்த தியாகத்தையும் செய்யாதவராக, மக்களை நேசிக்காதவராக, நேர்மையற்றவராக இருந்தார்.

 அப்படியிருந்தும் அவர் எப்படி இனத் தலைவராக உருவெடுத்தார்?

 இதற்கு அன்றைய தாய் நிலத்தின் நிலைமையை புரிந்து கொள்வது அவசியம். தமிழ் இனம் முழுக்க ஒடுக்கப்பட்டு இந்திய ஏகாதிபத்திய அரசாங்கமும் அதன் கண்காணி மாநில அரசாங்கமும் இலங்கைப் பேரினவாத அரசாங்கமும் தமிழர்களைச் சுரண்டி அதன் தலைவர்களை அழித்து வந்தேறிகளை தாய்நிலம் முழுவதும் நிரப்பி அவர்களை அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் பெறச் செய்து தொடர் பிரச்சாரங்களால் இன உணர்வு மழுங்கடிக்கப்பட்டு இனத்தின் நல்லவர்கள் ஒழிக்கப்பட்டு தீயவர்கள் தலையெடுத்து இருந்த காலம்.

 தலைவர் தனது நாற்பது வயது வரை ஒரு கடத்தல்காரனாகவும் கொலைகாரனாகவும் இருந்தார்.  ஓரளவு செல்வம் சேர்த்திருந்தார். இதில் ஆச்சரியம் இல்லை. ஏகாதிப்பதிய சுரண்டல் அரசு இத்தகையவர்களையே ஊக்குவித்து கொண்டிருந்தது. பொது மக்களும் அல்லது பொதுமக்களை நேசிப்பவர்களும் ஒடுக்கப்பட்டு குரல்வளைகள் நசுக்கப்பட்டு இருந்தனர்.

 தலைவரிடம் பிற தலைவர்களைப் போல பொதுவான ஒரே ஒரு குணம் இருந்தது. அது படிக்கும் பழக்கம் மட்டுமே. அதன்மூலம் தடைசெய்யப்பட்ட ஒரு புத்தகத்தை எழுதிய முன்னாள் தமிழ் தேசியவாதி பற்றி அவருக்கு தெரியவந்தது. அவர் எழுத்துக்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தவர் அவர் எழுதிய ஒரு சிறுகதையை படிக்க நேர்ந்தபோது அதில் 'இனத்தின் தலைவன் இனத்திற்காக ஒருவேளை உணவைக் கூடத் தியாகம் செய்யாதவனாகவும் இருக்கலாம்' என்று கூறப்பட்டிருந்தது. இது அவரை மிகவும் பாதித்தது. தன்னுடைய வலிமையை பயன்படுத்தி அந்த இடத்தை அடைய அவருக்கு விருப்பம் வந்தது. ஆம்! 40வயதிற்கு மேல்தான் அவருக்கு தன் இனத்தை அழிவிலிருந்து தடுப்பதன் மூலம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்கிற சிந்தனை உதித்தது. அதற்கு பணம் என்கிற ஆற்றல் வேண்டும் அத்துடன் ஆயுதம் என்கிற பேராற்றல் வேண்டும் என்று முடிவு செய்கிறார்.

 அதன்பிறகு தலைவர் தன்னுடைய கட்டப்பஞ்சாயத்து மற்றும் கடத்தல் தொழிலை ஆயுத மயமாக்கினார். தன்னுடைய கூட்டாளிகளுக்கு கைத்துப்பாக்கி வழங்கினார். நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க ஆரம்பித்தார். அன்று பொதுமக்களுக்கு ஏகாதிபத்திய ராணுவத்தாலும் அதன் கீழ் செயல்படும் மாநில காவல் துறையாலும் ஏகப்பட்ட கொடுமைகள் தினந்தோறும் நடந்துகொண்டு இருந்தன.  தலைவரிடம் வந்து பொதுமக்கள் முறையிடுவார்கள் பணம் இருப்பவரிடம் பணத்தை பெற்றுக் கொள்வார் நகை வைத்திருப்போரிடம் நகையை பெற்றுக்கொள்வார். அப்படி எதுவுமில்லை என்றால் அவர்களது குடும்பத்தில் ஒருவர் அவர் ஆணோ பெண்ணோ முதியவரோ இளைஞரோ அவர்களை தனது படையில் சேர்த்துக் கொள்வார் அல்லது தனக்கு தேவையான நேரத்தில் உதவ வேண்டும் என்கிற வாக்குறுதியை வாங்கிக் கொள்வார். இப்படி வாக்குறுதி கொடுத்த குடும்பங்கள் அவருக்கு உதவி செய்ய தயாராக இருந்தனர். வாக்குறுதி கொடுத்து உதவத் தயங்கியவர்களைக் கொன்றுவிடுவார். அதாவது தலைவருக்காகக் கொள்ளையடிப்பது, கொலைசெய்வது, சொத்துக்களை ஆக்கிரமிப்பது, வன்முறை செய்வது, சிறை செல்வது என எதுவாக வேண்டுமானாலும் வாக்குறுதி கொடுத்தவர்கள் செய்யவேண்டும். அப்படி தனக்கு உதவி செய்பவருக்கு அவரது குடும்பத்தைப் பாதுகாக்கும் வாக்குறுதியை தலைவர் வழங்கியிருந்தார். அதை நிறைவேற்றியும் வந்தார். 

 அவரது அடுத்த நடவடிக்கை நகரங்களின் மையத்தில் பயன்படாமல் இருக்கும் நிலம், கட்டிடம், குடியிருப்பு போன்றவற்றை ஆக்கிரமிப்பது. இவை பெரும்பாலும் சொத்து தகராறில் இருக்கும் அல்லது பணம் கொழுத்தவர்களிடம் உபரியாக இருக்கும். இத்தகைய சொத்துக்களை தலைவர் ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். உரிமையாளர் பிரச்சனை செய்தால் நியாயமான விலை கொடுப்பார். அதற்கும் பணியவில்லை என்றால் கொன்றுவிடுவார். யாருக்கும் பயன்படாமல் இருப்பது யாருக்காவது பயன்படும் என்கிற நிலையில் அவர் இதைச் செய்துவந்தார். அதன்பிறகு அவரது கொள்ளைப்படையின் குடும்பங்கள் நகருக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் பத்து இருபது குடும்பங்களாக எந்த நில உரிமை சான்றுமின்றி குடியமர்த்தப்பட்டனர்.

 தலைவரை மீறி அவரது பணபலத்தை மீறி அவரது கொள்ளைப் படையின் அச்சத்தை மீறி சட்ட ஒழுங்கு அவரது ஆட்கள் மீது பாயவில்லை. 
 இப்படியாக படிப்படியாக பொதுமக்களை அவர் விலைக்குத்தான் வாங்கினார்.
 இப்படி அவரது கொள்ளை படை பொதுமக்களையும் திரட்டி கொண்டு வேகமாக வளர்ந்தது.

 அதைத் தொடர்ந்து சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களை விலைக்கு வாங்கினார். திருடர்கள், வீடற்றவர்கள், முதியவர்கள், திருநங்கைகள், வேலையில்லாத இளைஞர் இளைஞிகள், கைதிகள், ஊனமுற்றவர்கள், காதல் தோல்வி அடைந்தவர்கள் என பலரையும் அவர் தனது கொள்ளைப் படையில் நிரப்பிக்கொண்டார். அதாவது சம்பளம் கொடுப்பதன் மூலமும் செய்த செயல்கள் அடிப்படையில் பணம் கொடுப்பதன் மூலமும் அவர் விலைக்கு வாங்கினார்.
 தலைவரின் படையில் சேர்ந்து அவருக்காக வன்முறையில் ஈடுபடுவதன் மூலம் தனக்கு பணமும் தனது குடும்பத்திற்கு பாதுகாக்கும் கிடைக்கும் என்கிற நிலையில் அவரது படையில் பலரும் சேர்ந்தனர். 

 அதே நேரத்தில் தமிழினத்திற்காக போராடிய வீரப்பன் அவர்களுக்கு ரசிகர் மன்றம் ஒன்றை தொடங்கினார். அதில் இணைந்த பல இளைஞர்கள் இனம், மொழி என்று வெளிப்படையாகப் பேசாமல் சினிமா நடிகரின் ரசிகர் மன்றங்கள் போல இயங்கி வருவதாக வெளியில் காட்டப்பட்டது. ஆனால் தன்னுடைய படையின் ஒருங்கிணைப்பை இந்த ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள் மூலம் தான் தலைவர் செய்துகொண்டிருந்தார். அன்று அறிக்கை விடும் இயக்கங்கள் கூட தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த காலத்தில் தலைவரின் இந்த மறைமுக இயக்கத்தையும் மக்கள் மத்தியில் அவரது அதிகார வளர்ச்சியையும் ஆதிக்க சக்திகள் கவனிக்கத் தவறிவிட்டனர்.

 பிறகு அவரது ஆதிக்கம் அவரது மாவட்டம் தாண்டி பரவத் தொடங்கியது. அவரைப்போல இருந்த நிழலுலக பெருந்தலைகளை அவர் எதிர்க்கத் தொடங்கினார்.
 அதற்குப் பொருள் திரட்ட தாய் நிலத்தில் வெவ்வேறு பகுதிகளில் பெரும் செல்வத்துடனும் அதிகாரத்துடனும் ஆதிக்கம் செலுத்தி வந்த வந்தேறிகள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு அவர்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு தலைவரின் கீழ் இருந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

 பண வலிமையுடனும் படை வலிமையுடனும் பொதுமக்கள் ஆதரவுடனும் மற்ற நிழலுக பெருந்தலைகளை அடக்கி நிழல் உலகத்தில் அவர் மிகபெரிய தலையாக உருவெடுத்தார் .
 இந்த நேரத்தில் அவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு பண உதவி செய்தார். அக்கட்சி பெயருக்கு மட்டுமே இனநலம் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அதன் தலைவரை கொன்றுவிட்டு அடுத்தகட்ட தலைவரை அக்கட்சிக்குத் தலைவராக்கி அந்த கட்சியை அவர் கைப்பற்றினார்.

  நேர்மையான வழியில் சில இளைஞர்கள் ஒரு புரட்சி படையை நிறுவினார்கள். அவர்களுக்கும் தலைவர் மறைமுகமாக உதவி செய்து வந்தார். அந்த படையும் நாளடைவில் நேர்மையான ஒரு கொரில்லாப் படையாக உருவெடுத்தது. 
 அரசுகள் அவர்களையே எதிரியாக நினைத்தது. இந்த நிலையில் தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த கட்சி தலைவரின் ஆசியால் மாநில ஆட்சியைப் பிடித்தது.  தனது ஆட்களைப் பதவியில் அமர்த்தி ஊழல் செய்து, வளங்களைச் சுரண்டி மேலும் பெரும் செல்வம் சேர்த்தார் தலைவர். அதன் மூலம் அவரது கடத்தல் வலையமைப்பு இந்திய அளவில் பரவியது. அத்தனையையும் அவர் ஆயுத பலமாக மாற்றினார். தனிமனித ஆயுதங்கள் அவரது கொள்ளைப்படைக்கும் ராணுவத் தளவாடங்கள் புரட்சிப் படைக்கும் வழங்கப்பட்டன.

 பிறகு ஆட்சிக்கு வந்த அந்த கட்சியினர் தலைவருக்கு எதிராக செயல்பட தொடங்கிவிட்டனர். மாநில காவல் துறை தலைவருக்கு எதிராக திருப்பி விடப்பட்டது. தலைவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் எதுவுமே நடக்கதில்லை. தலைவரின் கொள்ளை படைக்கு முன் காவல்துறை மண்ணை கவ்வியது. நேர்மையானவர்கள் கூட பெரும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டனர். தலைவர் படையின் செழிப்பையும் கம்பீரத்தையும் கண்டு காவலர்கள் பலர் வேலையை விட்டு தலைவரின் படையில் இணைந்தனர். 

 இந்த நிலையில்தான் இந்திய ஏகாதிபத்திய ராணுவம் தலைவரின் பலத்தை அடையாளம் கண்டுகொள்கிறது. ஆட்சி கலைக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி ஆட்சி ஏற்படுத்தப்பட்டு துணை ராணுவம் இறக்கப்பட்டது.
 அதுவும் தலைவரால் பொதுமக்கள் போராட்டங்களாலும் கொரில்லா தாக்குதல்களாலும் கொள்ளைப்படை வன்முறைகளாலும் முறியடிக்கப்பட்டது. அதன்பிறகு இந்திய ராணுவம் இறங்கியது. இலங்கையிலும் இதே போல நிலைதான் தொடர்ந்தது. 

 ஆனால் இதற்குள் தலைவர் தனது இன மக்கள் மூலமும் கடத்தல் வலைப்பின்னல் மூலமும் உலகம் முழுவதும் இருந்து பணத்தையும் ஆயுதங்களையும் குவித்து வைத்திருந்தார்.
  காவல்துறையும், துணை ராணுவமும், ராணுவமும் தலைவரின் வழிகாட்டுதல் படி புரட்சி படையின் ராணுவ ரீதியாக தாக்குதல்களினாலும் பொதுமக்களின் எதிர்பாராத தாக்குதல்களினாலும் நிலைகுலைந்து தோல்வியடைந்தது.

 எப்படியென்றால் சாலையை கடக்கும் ஒரு முதியவர் மனித வெடிகுண்டாக வெடிப்பார், தேநீர் கொடுக்கும் சிறுவன் அதில் விஷத்தை கலந்து இருப்பான், தாக்குதல் நடத்திவிட்டு எந்த வீட்டிற்குள் நுழைந்ததாலும் அடைக்கலம் கிடைக்கும்,  கோவில்களில் ஆயுதக் கிடங்கு இருக்கும், மிக நேர்மையானவர்கள் குடும்பம் அச்சுறுத்தப்படும்,  ராணுவத்திலேயே விலைபோன ஒற்றர்கள் இருப்பார்கள்.
 எப்படி வியட்நாம் ராணுவத்திற்கு விபச்சாரிகளின் உதவி பெறும் பலனை கொடுத்தது அப்படியாக ஒதுக்கப்பட்ட பொதுமக்கள் தலைவருக்கு பெரும் உதவிகள் செய்தனர்.
 இதன் எதிர்வினையாக ராணுவமும் காவல் துறையும் பொதுமக்களை துன்புறுத்தத் தொடங்கினார் அதன் எதிர்விளைவாக தலைவருக்கு மேலும் ஆட்கள் கிடைத்தனர்.

 எல்லைப் பகுதிகளில் இனத்திற்கு எதிரான கலவரங்கள் நடந்தன.  தலைவரின் உத்தரவுப்படி தாய்நிலத்தில் பதில் - கலவரங்கள் நடத்தப்பட்டன. 
 தமிழர்களைத் தாக்கிய அண்டை இனங்களின் தலைமை மீது தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
 தாய்நிலத்தில் இருந்த வந்தேறிகள் முழுமையாக விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களின் மலை மலையான அசையா சொத்துக்கள் தலைவர் வசம் வந்தன. எல்லைப் பகுதி தமிழர்கள் தாய்நிலத்திற்கு விரட்டப்பட்டு அகதிகளாகவந்தனர். அவர்களும் தலைவருடன் இணைந்தனர்.

 இந்நிலையில் அவர் இயற்கை வளங்களையும் கோயில்களையும் தனக்கு உதவாத பொதுமக்களையும் இனப்பற்று இல்லாத தன்னின அரசியல்வாதிகளையும் பணக்காரர்களையும் கொள்ளையடிக்க தயங்கவில்லை.

  இப்படி எல்லாவற்றையும் அவர் ஆயுதபலமாக மாற்றி தன்னுடைய பலத்தை பெருக்கிக் கொண்டார்.
 ஒரு கட்டத்தில் அவருடைய ராணுவப்படை கூட தலைவருக்கு எதிராகத் திரும்பியது .
 அப்பொழுது இரண்டு படைகளும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மோதி அதிலும் தலைவரே வெற்றிபெற்றார்.
 அதன்பிறகு ராணுவ படையின் தலைமையையும் தானே ஏற்றுக்கொண்டார்.

 அதன்பிறகு கொள்ளைப்படை கருப்பு என்றும் புரட்சிப்படை சிவப்பு என்றும் அழைக்கப்பட்டன.
 இவர்கள் எதிர் எதிர் சிந்தனைகொண்டவர்களாக ஒரே தலைமையின் கீழ் இருந்தனர்.

 ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களின் தாய் நிலத்தில் ஒரு கொள்ளைப் படை, ஒரு புரட்சிப் படை, ரசிகர் மன்றம் என்கிற பெயரில் ஒரு இயக்கம், தன் கட்டுப்பாட்டில் ஒரு கட்சி என்கிற வகையில் தனது முழு ஆதிக்கத்தை நிலைநாட்டினார் தலைவர்.

 10 ஆண்டுகள் போராடி இந்திய ராணுவத்தை தோற்கடித்த பின் அவரது புகழும் கொள்கையும் உலகம் முழுவதும் பரவியது. உலகம் முழுவதும் இருக்கும் பெருந்தலைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் தன் இனத்திற்கு தலைவராக வேண்டும் என்கிற ஆசை வந்தது. இப்படி உலகம் முழுவதும் அவருக்கு தோழமைச் சக்திகள் உருவாகின. இதன்பிறகு அனைத்துலக பார்வை தலைவர் மீது விழுந்தது.

  அனைத்து நாடுகளும் இந்திய ஏகாதிபத்தியத்திற்கும் இலங்கை பேரின வாதத்திற்கும் உதவி செய்து நாற்புறமும் சூழ மீண்டும் ஒரு பெரும் போர் தொடங்கியது.
 ஆனால் அதற்குள் தலைவரின் படையில் ஆயுதம் தாங்கிய நபர்கள் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டி விட்டது. இந்த மிகப்பெரிய போர் தலைவரின் அத்தனை சக்திகளும் திரட்டப்பட்டு உலகம் முழுவதும் பரவியிருந்த தனது இன மக்களின் ஆதரவினாலும் பிற இன தேசியவாத சக்திகளின் ஆதரவினாலும் ஒரு இனத்தின் போராக மாறியது. ஆம் தமிழினம் உலகத்தை மிகவும் போராடி முறியடித்தது. இதற்கு பிற இனத்து கூலிப்படைகளையும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் கூட பயன்படுத்தினர். உலகளாவிய வல்லாதிக்க அரசுகளின் தலைமைப் பீடங்கள் தீவிரவாத நடவடிக்கைகள் மூலம் தாக்கப்பட்டன.
 15 ஆண்டுகள் பெரும் இழப்புகள் இருந்தாலும் விடாமல் போராடி தமிழினமே மாபெரும் வெற்றியை ஈட்டியது. 

 அதன்பிறகு தலைவர் சுதந்திரப் பிரகடனம் செய்தார். தேர்தல் நடத்தப்பட்டு தனது நம்பிக்கைக்குரிய ஒரு ஜனநாயகவாதியை அதிபர் ஆக்கினார். தான் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். தலைவரின் புரட்சிப்படை தமிழர்நாட்டு ராணுவமாகவும் ரசிகர் மன்றம் ஆளுங்கட்சியாவும் பொறுப்பேற்றுக் கொண்டது.
 தலைவரின் கொள்ளைப்படை  காவல்துறையாக பொறுப்பேற்றது. கொள்ளைப்படை பொதுமக்கள் மற்றும் குடும்பங்கள் ஆங்காங்கே அடுத்தகட்ட பதவிகளையும் அதிகாரங்களையும் வேலைவாய்ப்பையும் கைப்பற்றிக்கொண்டன.  பிறரை விட நிலவுடைமையும் அவர்களிடமே இருந்தது.
 எதிர்க்கட்சி ஒன்றை அவர்கள் உருவாக்கிக் கொண்டனர். உளவுத்துறையும் இவர்களே!

 அதாவது தலைவருடன் இருந்தவர்கள் அனைவருமே நாட்டின் அனைத்து துறையிலும் ஆதிக்கநிலைக்கு சென்றுவிட்டனர்.

  தலைவரை ஆதரிக்க தயங்கிய அத்தனை பேருமே பின்னுக்கு தள்ளப்பட்டு கீழ்மக்கள் ஆகிவிட்டனர்.
 இவர்கள் மனிதநேயம் பேசும் ஒரு கட்சியை மட்டுமே உருவாக்க முடிந்தது. இவர்கள் வெள்ளை என்று அடையாளப் படுத்தப் பட்டனர்.

 அதன்பிறகு தன் இனத்தின் பண்பாட்டை தனி மதம் என்றாக்கி  அதை அரச மதமாக அறிவிக்கச் செய்தார் தலைவர். தானும் அதற்கு மாறிக்கொண்டார்.
 பெரும்பான்மையான இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கு மாறிக் கொண்டனர். சிறுபான்மையான கிறித்துவ முஸ்லிம்கள் அதற்கு மாறாமல் தயங்கியபடி இருந்தனர். மதப் பிரச்சாரம் தடை செய்யப்பட்ட பிறகு அவர்கள் தமிழ் மதத்துக்கு மாறுவது தொடங்கியது.

 இப்படியாக தன் இனத்திற்கு தனி மதம், ராணுவம், அரசாங்க கட்டமைப்பு, மன்னர் எனும் மாற்றுத் தலைமை என அத்தனையையும் தலைவர் உருவாக்கித் தந்தார்.

 அவரை பார்த்து உலகம் முழுவதும் இருக்கும் இனங்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் அனைவருமே தமக்கான தேசத்தை மீட்டெடுக்க சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். 

  ஏனென்றால் ஒவ்வொரு பெரிய நாடும் ஒரு பெரிய இனத்தின் கீழ் அடக்கப்பட்ட சிறு இனங்களைக் கொண்டுள்ளது.

 இனி தலைவரின் வழிகாட்டுதலில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு போர் ஒலை அனுப்பப்படலாம்!

 அடக்கப்பட்ட இனங்களுக்கு தனிநாடு வழங்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அந்த இனங்களுக்கு தமிழர்நாடு உதவி செய்து தனிநாடு அடையச் செய்யும் என்று எச்சரிக்கை செய்யலாம்!

 பெரிய பெரிய நாடுகள் எல்லாம் துண்டாடப் படலாம்!
உடைந்த துண்டுகள் இணையலாம்!

 உலக வரைபடமே மாற்றப்படலாம்!

சர்வதேச அரங்கில் தமிழர்நாடும், தலைவரின் இனவழி தேசிய நாடுகள் கோட்பாட்டினை ஏற்றுக் கொண்ட நாடுகளும் இனவழி நாடுகள் அமைய குரல் கொடுக்கலாம்!

 தலைவர் இறந்த பின்பும் இது தொடரலாம்!

 உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் பட்டியலில் தமிழனத் தலைவரும் இடம்பெறலாம்!

 தமிழர்நாடு அதன் துணைநாடுகளுடன் உலகையே தலைமையேற்று வழிநடத்தலாம்!

யார் கண்டது.....?!

Wednesday 1 December 2021

இசுலாமியரும் திமுகவும்

இசுலாமியரும் திமுக வும்

 இதில் இசுலாமியர் 15% க்கு மேல் வாழும் பகுதிகளில் வென்ற கட்சிகள் குறிக்கப்பட்டுள்ளன

 இதன்படி 'திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இசுலாமியர் ஏகபோக ஆதரவை வழங்கினர்' என்பது தவறு என்று கூறலாம்.

அதாவது மேற்கண்ட தொகுதிகள் அடிப்படையில் இசுலாமியரின் திமுக ஆதரவு 2/3 என்று கூறலாம்.

 இது பிற தமிழர்களின் மனநிலை தான்.

Thursday 18 November 2021

முடிசூடிய தலைவர்

முடிசூடிய தலைவர்

 ஆண்டு: கி.பி. 2122.

 உலகம் முழுவதிலிருந்தும் தமிழர்நாட்டுத் தலைவரை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவும் தண்டிக்கவும் அழுத்தங்கள் தொடர்ந்தபடி இருந்தன.
 தலைவர் மீட்கப்பட்ட தமிழர்நாட்டின் முப்படைத் தலைவராக இருந்தார்.
 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மேற்கண்ட அழுத்தங்களுக்குப் பணிய மறுத்துவிட்டார்.
 தலைவரை ஒரு மணிநேரம் வீட்டுச்சிறையில் கூட வைக்கமுடியாதென அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார்.

 மேலும் அவர் விடுத்த விளக்க அறிக்கையில் "எங்கள் தலைவர் கொலைசெய்தார், கொள்ளையடித்தார், வழிபாட்டுத் தலங்களை இடித்தார், அப்பாவிகளைக் கொன்றார், பலரை அகதிகளாக வெளியேற்றினார், போதைப்பொருள் கடத்தினார், ஆயுத உற்பத்தி மற்றும் வியாபாரம் செய்தார், உலக அளவில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தினார், இனரீதியான மோதல்களை பல்வேறு நாடுகளில் தூண்டினார், பிரிவினைவாதம் பேசினார், பிறநாட்டு தீவிரவாதிகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு புகலிடம் கொடுத்தார், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தினார், இனப்படுகொலை செய்தார், ஒப்பந்தங்களை மீறினார் என்று எத்தனையோ குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. 
இவை எதையும் எம் தலைவர் மறுக்கவில்லை.
 எங்கள் தலைவர் தன் இனத்தையும் தனது தாய் நிலத்தையும் காப்பதற்காக இதையெல்லாம் செய்தார். 
அழியும் நிலையில் இருந்த எங்களது இனத்தையும் தாய் மண்ணையும் எந்த நியாய அநியாயங்களையும் யோசிக்காமல் அவர் காப்பாற்றினார். 
அவர் அப்படி செய்தால்தான் எங்கள் ராணுவம் எழுந்தது. 
எங்கள் தாய் நிலத்தை எங்களால் மீட்க முடிந்தது. எமது தலைவரை தண்டிக்க நினைக்கும் உலக நியாயவான்கள் எங்கள் நிலத்தை அண்டை இனங்கள் ஆக்கிரமித்த போதும், எங்கள் வளங்கள் இந்திய ஏகாதிபத்தியத்தாலும் உலக பெருமுதலாளிகளாலும் சுரண்டப்பட்ட போதும், எங்கள் இனம் அண்டை இனங்களால் இனப்படுகொலை செய்யப்பட்டபோதும், அதற்கான சான்றுகளைத் திரட்டி நாங்கள் பல ஆண்டுகள் உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்த போதும் நியாயம் வழங்க முன் வராதது ஏன் என்று கேட்கிறோம். 
எம்மை விட பல மடங்கு பலம் வாய்ந்த எதிரிகளை முறியடிக்க எமக்கு தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தவிர வேறு வழியில்லை. நாங்கள் ஜனநாயக ரீதியான அத்தனை முயற்சிகளையும் செய்து தோற்று எங்கள் இனம் அழியும் தருவாய்க்கு வந்தபிறகுதான் ஆயுதத்தை தூக்கினோம். எங்கள் விடுதலைக்காக நாங்கள் எந்த எல்லைக்கும் சென்றோம். நான் தலைவருக்கு அஞ்சுவதாக யாரும் எண்ணவேண்டாம். 
என் தலைவருக்கு தண்டனை ஏற்பதெல்லாம் பெரிய விடயம் இல்லை. எங்கள் தலைவர் தான் செய்த குற்றத்திற்காக உலகத்தின் முன் பொதுமேடையில் மரணதண்டனையை ஏற்கவும் தயாராக இருக்கிறார். ஆனால் நாங்கள் அதற்கு விடமாட்டோம். 
எங்கள் தலைவருக்கு சிறிய தண்டனை வழங்கினால் கூட இனி வரும்காலங்களில் எங்கள் இனத்தில் வேறு ஒருவர் தலைவராக உருவாக யோசிப்பார். 
ஆகவே எத்தனை பெரிய அழுத்தம் வந்தாலும் சரி நாங்கள் எங்கள் தலைவரை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. நாங்கள் உலகில் எவருக்கும் அஞ்சாத இனம் என்பதோடு உலகிற்கே அஞ்சாத இனம் என்பதையும் உறுதியாக கூறிகிறோம். எங்கள் தலைவர் போலவே ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு தலைவர் உருவாக வேண்டும் என்பது எங்கள் நோக்கம். உலகில் இனி எங்கும் இனத்தின் பெயரால் படுகொலை நடக்கக் கூடாது என்பது எஙகள் லட்சியம். எங்கே மக்கள் இன ரீதியாக ஒடுக்கப்பட்டாலும் அங்கே தமிழர்நாட்டு வேட்டொலி ஒலிக்கும்.  இதுதான் தீவிரவாதம் என்றால் நாங்கள் முழுமையான தீவிரவாதி என்பதை ஒப்புக் கொள்கிறோம். இன்று இப்பரந்த உலகில் இருக்கும் இனங்களில் பழமையான இனம் என்கிற அடிப்படையில் நாங்கள் ஒவ்வொரு இனத்திற்கும் தனிநாடு கிடைக்கும் வரை ஓயமாட்டோம். எங்கள் தலைவரை நீங்கள் தண்டிக்க நினைத்தால் 10 கோடி தமிழர்களைத் தாண்டி 20 லட்சம் தமிழர் சேனைகளைத் தாண்டி மட்டுமே அவரைத் தொடமுடியும். இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் விரைவில் எங்கள் தலைவருக்கு நாங்கள் எங்கள் நாட்டின் மன்னராக முடிசூட்ட உள்ளோம். இது பழமைவாதமா என்றால் ஆம் இது 'நவீன பழமைவாதம்' நாட்டையே காடாக்கி நவீன வசதிகளுடன் ஒட்டுமொத்தமாகப் பழங்குடி வாழ்க்கை முறைக்குத் திரும்பவுள்ள எம்மினத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியே இது."
என்று வெளிப்படையாகக் கூறினார்.

 ஏற்கனவே பிரம்மாண்டமான கோட்டை ஒன்று கட்டப்பட்டு வருவதையும் தமிழர்நாடு இயற்றிய சட்டவரைவில் தமிழர் நாட்டு அரசர் எந்த குற்றம் செய்தாலும் மரண தண்டனை கிடையாது என்று சட்டம் இருந்ததையும் ஊகித்து இப்படி நடக்கும் என்று ஓரிரு பத்திரிகைகள் எழுதியிருந்தன.

 அதிபர் அறிவிப்பை தொடர்ந்து முடிசூட்டுவதற்கான குழு அமைக்கப்பட்டு தலைவர் முன்னிலையில் விவாதங்கள் நடந்தன. மன்னராட்சிக்கும் மக்களாட்சிக்கும் உள்ள வேறுபாடுகள் முதலில் வகைப்படுப்பட்டன. அதாவது இரண்டுமே ஏறத்தாழ ஒன்றுதான். மன்னராட்சியில் மன்னரின் வாரிசுகள் ஆள்வார்கள் பிற மக்களுக்கு ஆளும் வாய்ப்பு கிடைக்காது. மற்றபடி ஆட்சிமுறை ஒன்றுதான்.
 நடைமுறையில் மன்னர் எப்படியும் ஆளப்போவதில்லை. மன்னருக்கு அரசியல் ரீதியாக யாருக்கும் மிகப்பெரிய விருந்தளிப்பது மற்றும் அதிபரை எந்நேரமும் சந்திப்பது தவிர பெரிதாக எந்த சலுகையும் இல்லை.
 கோட்டையில் மன்னர் வாரிசுகளில் மூத்தவர் தவிரபிற வாரிசுகள் திருமணம் ஆகும்வரை மட்டுமே இருக்க அனுமதி.
 மன்னர் பிற இனத்தில் திருமணம் செய்யவும் தமிழர்நாட்டு எல்லைக்கு அப்பால் குடியேறவும் தடை.  மன்னர் நெருக்கடிக் காலத்தில் மட்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார் அவ்வளவுதான்.  

 தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் நாள் முடி சூட்டலாமா அல்லது தமிழர்நாடு விடுதலை நாளன்று முடிசூட்டலாமா என்று விவாதிக்கப்பட்டு கடைசியில் தமிழ் நாட்காட்டியில் நட்சத்திரப்படி தலைவரின் பிறந்தநாள் அன்று விழா தேதி குறிக்கப்பட்டது.

 தலைவர் முடிந்த அளவுக்கு எளிமையாக இயற்கையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். 
 எனவே எந்த ஆடம்பரமும் இல்லாமல் விழா நடத்த முடிவுசெய்யப்பட்டது.

 அரசர், மன்னர், பேரரசர், வேந்தர், கோ போன்ற பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் 'மன்னர்' என்பது பதவியையும் மன்னர் வாரிசுகள் பட்டமாக 'கோ' என்று இட்டுக்கொள்ளவும் முடிவுசெய்யப்பட்டது.

மன்னரின் ரத்தவழி வாரிசுகளில் மூத்தவர் 'இளவரசு' பட்டம் கட்டப்பட்டு (ஆணோ பெண்ணோ) மன்னர் மிக வயோதிகம் அடைந்தபிறகு அடுத்த 'மன்னர்'  ஆவார். 
பிறகு குழுவினர் முடிசூட்டு விழா எப்படி நடந்தது என்பது பற்றி ஆராய கோவில்களுக்குச் சென்று சிலைகளையும் ஓவியங்களையும் பார்வையிட்டனர்.  இலக்கியங்களிலும் பிற நாட்டு மன்னர் குடும்ப சடங்குகளையும் ஆராய்ந்து குறித்துக் கொண்டனர்.
 அதன்படி எல்லா சடங்குகளும் வரிசைப்படுத்தப்பட்டு அழைப்பிதழ் உலக தமிழர்களுக்கு வழங்கப்பட்டது.

 திட்டமிட்ட அந்த நாளும் வந்தது....

 காலையில் கதிரவன் எழுந்ததும் தலைவர் ஆற்றில் நீராடி வெள்ளை சட்டையும் வெள்ளை வேட்டியும் அணிந்து கொண்டார் காலில் தோல் செருப்பும் இடுப்பில் தோல் கச்சையும் அணிந்துகொண்டார் (தமிழ் மதத்தின் கொள்கைப்படி உடலில் உடை செருப்பு இடுப்புக் கச்சை தவிர எதுவும் அணியக்கூடாது. அவசியமான உபகரணங்கள் தேவைப்படும்போது அணியலாம். உடையும் சாயம் தோய்க்காத துணிதான் உடுத்தவேண்டும்).

 நிகழ்ச்சி நடக்கும் இடம் தலைவருக்காக கட்டப்பட்ட கோட்டைக்கு முன்பாக இருந்த அறுவடை முடிந்த வயல்வெளிகளில் சுத்தம் செய்யப்பட்டு நடுவில் ஒரு மேடை அமைக்கப்பட்ட இடமே.
 தலைவர் மங்கல இசையுடன் கோட்டையிலிருந்து தமது பாதுகாப்புப் படை புடைசூழ நடந்து மேடைக்கு வந்து அவருக்காக செய்யப்பட்டிருந்த வேலைப்பாடுகள் கொண்ட (இருவர் அமரக்கூடிய) மர நாற்காலியில் அமர்ந்தார் (தலைவருக்கு மனைவி இல்லை) அந்தனர்கள் தமிழ் மந்திரங்களை ஓதத் தொடங்கினர்.

 மூத்த நெசவாளர் ஒருவர் தன் மனைவியுடன் புதிதாக நெய்த  நீண்ட வெள்ளையான தடிமானான பருத்தித் துணியை தட்டில் வைத்துக்கொண்டு மேடைக்குச் சென்று அதன் ஒரு விளிம்பின் இரு முனைகள் தலைவரின் தோள்கள் மீதும் வரும்படி சுற்றி போர்த்தி முள் மரத்தின் இரண்டு முட்களைக் குத்தி முனைகளைப் பொருத்தி  பொன்னாடை போலப் போர்த்தினார். 
பிறகு பல தரப்பட்ட விவசாயிகள் நாடு முழுவதும் ஓடும் முக்கிய ஆறுகளின் தண்ணீரைக் கொண்டுவந்து ஒரு பெரிய கொப்பரையில் ஊற்றி அதில் இருந்து ஒரு குவளை மொண்டு தலைவருக்கு கொடுக்க தலைவர் அதைக் குடித்தார். 
 பிறகு தமிழ்நாட்டின் எட்டு திசையிலும் எல்லையில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு முப்படைத் தலைவர்களால் அது ஒரு பூந்தொட்டியில் போடப்பட்டு விரவப்பட்டு தலைவர் கையில் கொடுத்து ஒரு மூத்த பெண் விவசாயி  அதில் காவிரி உற்பத்தி ஆகும் இடத்தில் இருந்து கொணரப்பட்ட நீரை ஊற்றி பாரம்பரிய நெல் விதையை ஊன்றினார்.  

 பாதுகாப்புத்துறை அமைச்சர் (சோழர் வாள்போல செய்யப்பட்ட) மூவேந்தர் சின்னம் பொறிக்கப்பட்ட வாள் ஒன்றை அதை வைத்துக்கொள்ளும் உரிமத்துடன் தலைவருக்கு அளிக்க தலைவர் எழுந்து அதைப் பெற்றுக்கொண்டு வாளை உறையுடன் தமது கச்சையில் செருகிக்கொண்டார். 
 தலைவர் நியமித்த புதிய ராணுவத் தலைவர் ஒரு நவீன கைத்துப்பாக்கியை உறையுடனும் பட்டையுடனும் உரிமத்துடனும் தலைவருக்கு கொடுக்க தலைவர் மார்பின் குறுக்காக அணிந்துகொண்டார். 

(ஆவணங்கள் அனைத்தும் சுருக்கமாக மேடையில் வாசிக்கப்படன)
பிறகு அதிபர் மேடையேறி மன்னருக்கான பாதுகாப்புப் படை, அவர்களுக்கான ஆயுதங்கள், கோட்டைப் பாதுகாப்பு பீரங்கிகள் போன்றவற்றிற்கான உரிமங்களை வழங்கினார்.

 ஒரு தூதரும் பதவியேற்றுக் கொண்டார். மன்னர் மற்றும் அதிபர்  இடையே இவர் பாலமாகவும் மன்னருக்கு அரசியல் ஆலோசகராகவும் இருப்பார்.

 பிறகு சபாநாயகர் தலைவரை மன்னராக ஏற்றுக்கொண்ட அனைத்துக்கட்சி தீர்மானத்தை வழங்கினார். 
பதிவுத்துறை அமைச்சர் கோட்டை நிலத்திற்கான பத்திரத்தை வழங்கினார். மன்னர் குடும்ப செலவுகளுக்கு அருகிலிருந்த ஐந்து கிராமங்கள் நிவந்தம் கொடுக்கப்பட்ட பத்திரத்தையும் வழங்கினார். 
இந்த ஐந்து கிராமத்தின் வருமானம் அரசுக்கு சென்று சரிபார்க்கப்பட்டு மன்னர் குடும்பத்திற்கு வழங்கப்படும். மன்னர் குடும்பம் இக்கிராமங்களில் குடியேற முன்னுரிமை அளிக்கப்படும் (மற்றபடி எந்த அதிகாரமும் அக்கிராமங்கள் மேல் மன்னருக்குக் கிடையாது).

 நிதித்துறை அமைச்சர் மன்னர் வங்கிக் கணக்கைத் தொடங்கி அதற்கான காசோலைப் புத்தகத்தை வழங்கினார்.  

 துணை அதிபர் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு மண் போட்டு நிரப்பப்பட்டு அதில் மன்னருக்கு பிரம்மாண்டமான அரண்மனை கட்டப்படும் என்கிற வாக்குறுதிப் படிவத்தையும் அதற்கான பத்திரத்தையும் கையளித்தார்.

 ஊடகத்துறை அமைச்சர் மன்னரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்கள் வெளியிடும் என்கிற வாக்குறுதிப் படிவத்தையும் கோட்டையின் தொலைதொடர்பு சாதனங்களுக்கான உரிமத்தையும் அளித்தார்.

 போக்குவரத்துத் துறை அமைச்சர் சில வாகனங்களையும், ஒரு குதிரை வண்டியையும் கோட்டைக்கு அளிக்கும் ஆவணத்தைக் கையளித்தார்.

 வனத்துறை அமைச்சர் ஒரு யானை வைத்துக் கொள்ளும் உரிமத்தை அளித்தார்.

 பல மதங்களைச் சேர்ந்த குருமார்கள் வாழ்த்துப் படிவங்களை அளித்தனர். 

 இந்நிகழ்வுகள் அத்தனையும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆவணப்படுத்தி சேமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. உலக அளவில் பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தனர். தமிழர்நாட்டின் மூலைமுடுக்குகளில் இருந்தும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.
 
 தலைவருக்கு நேரடி வாரிசு இல்லை. தந்தை வழி உறவில் ஒரு பெண் இருந்தார். அவர் அழைத்து வரப்பட்டிருந்தார். அருகில் இருந்த சிறிய வேலைப்பாடுகள் அமைந்த மர நாற்காலியில் அவரை அமர்த்தி அவரை இளவரசியாக பட்டம் சூட்டும் நிகழ்வு முதலில் நடந்தது.

 பிறகு தலைவர் வணங்கியபடி சற்று குனிந்துகொள்ள சைவ அடியார்கள் பருத்தி துணியை சுருட்டி அதனை சிவனின் சடை போல தலைவரின் தலையில் சுற்றி முடிசூட்டினர். வைணவ அடியார்கள் மயிலிறகை அந்த தலைப்பாகையில் சூடினர். (புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அரச மதமான) தமிழ்மதம் தழுவிய ஒரு பெரியவர் திருநீற்றை கட்டைவிரலில் எடுத்து தலைவர் நெற்றியில் நாமம் வைத்துவிட்டார். கெட்டி மேளமும் பறையிசையும் எக்காளமும் சங்கும் போர் முரசும் விண்ணதிர முழக்கப்பட்டன. புகைப்படம் எடுக்கும் வெளிச்சம் பல மின்னல்கள் போல அவ்விடம் முழுக்க விழுந்தன.

 பிறகு மன்னர் மேடையிலிருந்து இறங்கி பட்டத்து யானை மீது ஏறி மக்கள் மத்தியில் வலம் வந்து மக்களின் வாழ்த்தினைப் பெற்றார். பூக்கள் தூவ அனுமதி இல்லையாதலால் மக்கள் மஞ்சள் நீரை மன்னர் மீது தெளித்து வாழ்த்துக் கூறினர். சுற்றிவிட்டு மேடைக்கு வரும் பொழுது மக்களின் அன்பு மழையால் மன்னரின் வெள்ளுடை மஞ்சளாக மாறி இருந்தது.

  ஆம்! இனி அன்றாட வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் வசதியாக அமர்ந்து கொண்டு நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சிந்திக்க ஒருவர் இருப்பார்.
 உலகை தமிழர்நாடு வழிநடத்தும். தமிழ்நாட்டு அரசாங்கத்தை அவர் வழிநடத்துவார். 
ஒரு மாற்றுத் தலைமையாக இப்போதும் வீற்றிருப்பார்.

 ஈரம் சொட்டச்சொட்ட அரியணையில் அமர்ந்திருந்த மன்னர் எழுந்து சற்று முன்னே வந்து நின்று பணிவாக மக்களை வணங்கினார்.
 வாத்தியங்கள் நின்றன.
ஒரு நொடி எங்கும் அமைதி.
 மன்னர் சட்டென்று நிமிர்ந்து கைத்துப்பாக்கியை விருட்டென்று எடுத்து வானை நோக்கி இருமுறை சுட்டார்.
 அடுத்த நொடி மன்னரின் பாதுகாப்புப் படையும் தமிழர்நாட்டு சேனையும் சேனைத்தலைவர்களும் தளபதிகளும் வான்நோக்கிச் சுட்டனர்.
 கோட்டை பீரங்கிகளும் அரச பீரங்கிகளும் வெடித்து முழங்கின. மக்களின் பலத்த கரகோசமும் ஆரவாரமும் கூச்சலும் விண்ணைப் பிளந்தது. "மன்னர் வாழ்க!", "மன்னர் வாழ்க!" என்று லட்சக்கணக்கான மக்கள் கத்தி இரைந்தனர். அதேநேரத்தில் திட்டமிட்டபடி உலகத் தமிழர்கள் வாழ்த்துக்களை வெளியிட்டனர். 
தலைவரின் 'இனவழி நாடுகள்' கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட நாடுகளும் உலகத் தலைவர்களும் வாழ்த்துக்களை அடுத்தடுத்து வெளியிட்டனர். 
இணையமே ஸ்தம்பித்தது. உலகம் முழுவதும் அதிர்வலை பரவியது. ஊடகங்கள் கதறி ஓய்ந்தன.

ஆம்! "முடிசூடா மன்னன்" இனி.....

" முடிசூடிய மன்னர் "

தமிழர்நாட்டு மன்னர் வாழிய வாழியவே...!

Thursday 11 November 2021

மொழி வரைபடம் 1822


மொழி வரைபடம் 1822 

கி.பி. 1822 இல் Serampore missionary வெளியிட்ட இந்திய மொழிவரைபடத்தில் ஒரு பகுதி இங்கே தரப்பட்டுள்ளது.

 வரைபடத்தில் தெளிவாக இருப்பது ஆறுகள் மட்டுமே!

அவற்றைக் கணக்கில் கொண்டு முடிந்தவரை சரியாக கணித்து வரைந்துள்ளேன்.

இக்கோடு செல்லும் வழியில் வடக்கில் உள்ள தற்போதைய பெயர்களையே தருகிறேன்.

 இந்த எல்லைக்கோடு pulikat ல் தொடங்கி வட மேற்காக swrnamuki ஆறு தொடங்கி வளையும் இடத்தில் உள்ள naidupet வழியாக cheyyaru தொடங்கும் இடமான rayachoty வரை செல்கிறது.

[இதன்படி காளத்தி, திருப்பதி தமிழ்ப் பகுதிகள் என்றாகிறது.
 சித்தூர் தெளிவாகவே தமிழ்ப் பகுதி என்று குறிக்கப்பட்டுள்ளது.]

பிறகு இக்கோடு தெற்காக திரும்பி சிறிது உள்வாங்கி தர்மபுரி அருகே சிறிது வெளிநோக்கிச் சென்று சரியாக (காவிரி ஆறு தெற்கு நோக்கி வளையும்) ஒகேனக்கல் வரை வருகிறது.

[இதன்படி கிருஷ்ணகிரி நமது கொள்ளேகால் நமது இல்லை]

பிறகு மேற்கு நோக்கி வளைந்து (கபினி மற்றும் காவரி) ஆறுகள் சேருமிடமான மேகதாது க்கு சற்று முன்னே ஆறு வளையும் இடம் வரை செல்கிறது
(அதாவது தற்போதைய எல்லை).

[இதன்படி மேகதாட்டு அணைப்பகுதி நமது இல்லை]

 இதன் பிறகு எல்லைக்கோடு காவிரி ஆற்றின் மறுபுறம் செல்கிறது ( ஆனால் தற்போதைய தமிழக எல்லை ஆற்றை ஒட்டி அதிகம் உள்வாங்குகிறது).

 எல்லைகோடு பவானி ஆறு தொடங்கும் கொடநாடு பகுதியை கேரள, கன்னட, தமிழக எல்லைப் புள்ளியாக குறிக்கிறது.

 தொடர்ந்து இக்கோடு தெற்காக நொய்யல் ஆறு தொடங்கும் இடத்தைக் கடக்கிறது.

[இதன்படி பாலக்காடு நகரம் வழியாக எல்லைக் கோடு செல்கிறது. இங்கே சிறிது வெளிநோக்கி வளைந்திருப்பதால் பாலக்காடு நகரம் நமது எனலாம்.]

பிறகு பெரியாறு மற்றும் அமராவதி ஆறு எதிர் எதிர் திசையில் தொடங்கும் இடத்தைக் கடக்கிறது. 
இது தற்போதைய வால்பாறை க்கு சற்று மேற்கே உள்ள எல்லை வளைவு எனலாம்.

இங்கிருந்து மலைகள் உள்நோக்கி வளைய எல்லைக் கோடு வெளிநோக்கி வளைந்து கொச்சி அருகே செல்கிறது 

[இதன்படி கோட்டயம் வரை நமது]

இதன்பின் கொல்லம் பகுதி வரை கடற்கரை விடுபடுகிறது.
[அதாவது காயம்குளம் மற்றும் கொல்லம் ஆகியன நமது. திருவனந்தபுரம் திட்டவட்டமாக நமது என்றாகிறது]

ஆனால் இவ்வரைடபத்தில் ஈழம் விடுபடுகிறது.

 கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்றவற்றின் வடக்கு முழுவதும் மராத்தி என்று குறிக்கப்பட்டுள்ளது. 

 அதாவது தமிழகப் பகுதிகளை சரியாக குறித்துள்ளனர் மற்ற பகுதிகள் தோராயமாக வரைந்துள்ளனர் எனலாம்.

Friday 5 November 2021

தேசிய தனியரசும் பழங்குடி துணையரசும்

தேசிய தனியரசும் பழங்குடி துணையரசும்

 பழங்குடிகளுக்கு தமிழ் தேசியம் முன்வைக்கும் தீர்வு தான் என்ன?

 இன்று இந்திய ஒன்றியத்தில் இருக்கும் மாநிலங்களுக்கு 1947 இல் வழங்கப்பட்ட சுய ஆட்சி உரிமைகள் போல பழங்குடிகளுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
 அதாவது ஒரு இனம் தன்னுடைய தாய் நிலத்தை தாமே ஆள்வது தேசியம் .
அவர்களுக்கான அரசு தேசிய தனியரசு.
இது எந்த அரசுக்கும் கட்டுப்படாமல் தனித்து இயங்கும்.

 இந்த தனியரசில் பூர்வீகமாக மிகவும் சிறுபான்மையாக வாழும் மக்கள் குறிப்பாக காடுகளுக்குள் திரிந்த மொழி பேசும் பழங்குடிகள் தனிநாடாக இயங்குவது கடினம்.
 எனவே அவர்கள் நிலம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சிதறி இருந்தாலும் அதனை தனி மாநிலமாக அறிவித்து அதற்கு நிலத்தின் மீதான உரிமையையும் காவல் காக்கும் உரிமையும் அவர்களுக்கே வழங்க வேண்டும்.
 அம்மாநிலத்தில் அவர்களுக்கு என்று ஒரு துணையரசு இயங்கும்.
 இந்த துணை அரசாங்கத்தை ஒரு முதலமைச்சரின் தலைமையில் சுதந்திரமாக இயங்க அனுமதிப்பது தேசியத்தின் கடமையாகும்.
 பழங்குடி மக்களின் தம் நிலத்தை யாரிடமும் இழக்காமல் வேற்றின குடியேற்றம் தடுக்கப்பட்டு தமக்கான தனிச் சட்டத்தை இயற்றிக்கொண்டு தம்முடைய அடையாளத்துடன் தற்சார்பு பொருளாதாரத்துடன் வாழ்வது இதன்மூலம் உறுதி செய்யப்படும்.
 தேசிய அரசாங்கத்துடன் அவர்களுக்கு பெரிதாக எந்த கொடுக்கல் வாங்கலும் இருக்கக்கூடாது.

  தேசிய அரசு ராணுவ பாதுகாப்பு அளிப்பதற்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட வரியை வாங்கிக் கொள்ள வேண்டும். 
 அந்த பழங்குடி மக்கள் தேசிய அரசிடம் எதையாவது எதிர்பார்த்தால் அதை அவர்களது முதலமைச்சர் மூலம் கேட்டு வாங்கி பெற்றுக் கொள்ளவேண்டும்.
 அதற்கான வரியை செலுத்த வேண்டும். உதாரணமாக போக்குவரத்து, கல்வி, தொலைத்தொடர்பு, வியாபாரம், கட்டமைப்பு போன்ற விடயங்களில் தேசிய அரசிடம் நடக்கும் கொடுக்கல்-வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு அதற்கான வரிகள் விதிக்கப்பட்டு நடைபெற வேண்டும்.
 மற்றபடி மாநில தற்சார்பு விஷயங்களில் தேசிய அரசு அந்த மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் தலையிடக்கூடாது.
 மாநில அரசுக்கு பெரிய அளவில் நிதி தேவைப்பட்டால் அதை தேசிய அரசிடம் வட்டியில்லாத கடனாக பெற்றுக்கொண்டு பிறகு சிறிது சிறிதாக அடைத்துக்கொள்ளலாம்.
 மாநில அரசு நிதியோ, ஆட்களோ, ராணுவமோ அல்லது மற்ற வசதிகளோ தேவைப்படும் பட்சத்தில் தேசிய அரசிடம் கடனுக்கு அல்லது தொகை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.

 இதேபோல தேசிய அரசு (குறிப்பாக போர்க்காலங்களில்) நிதியோ ஆட்களோ அல்லது மற்ற விடயங்களோ திரட்டும்போது மாநில அரசுகள் உதவ வேண்டும்.

 இப்படி தேசிய தனியரசும் மாநில துணையரசும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக தமது தனித் தனி அடையாளத்துடன் ஒற்றுமையாக வாழவேண்டும்.

 இரண்டு பெரிய இனங்களுக்கு மத்தியில் அல்லது ஒரு இனத்தில் எல்லையோரம்தான் இத்தகைய பழங்குடிகள் அல்லது இனச் சிறுபான்மையினர் இருப்பார்கள்.

குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில துணையரசு தேசிய அரசுக்குள் தொடர்ந்து இருக்க விரும்புகிறதா என்று பொது வாக்கெடுப்பும் நடத்தவேண்டும்.

 தொடர விரும்பாத பழங்குடிகள் வெளியேறலாம்!

அவர்கள் தனிநாடு ஆனாலோ அல்லது அண்டை இன தேசிய அரசுடன் இணைந்தாலோ துரோகிகளாக கருதப்படக்கூடாது.

 இதே போல ஒரு பெரிய தேசிய இனத்தின் தனியரசு அதைவிட சிறிய தேசிய தனியரசை தமது மாநிலமாக இருக்க அழைக்கலாம். 
 ஆனால் வலுக்கட்டாயமாக ஒரு சிறிய இனத்தை தேசிய அரசு ஆக்கிரமிக்கக் கூடாது.

 மாநில உரிமை பெற்ற இனம் சற்று பெரிய நிலப்பரப்பைக் கொண்டது என்றால் தேசிய அரசுடனான கொடுக்கல் வாங்கலில் வட்டி இருக்கும். 

 

Sunday 31 October 2021

தமிழ்நாடு பெயர்மாற்றம் மீது அண்ணாதுரை பேச்சு

தமிழ்நாடு பெயர்மாற்றம் மீது அண்ணாதுரை பேச்சு 

படத்தில் இருப்பது மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்று பெயர்மாற்றி அண்ணாதுரை அவர்கள் ஆற்றிய உரை.
 இதைக் கருத்தூன்றிப் படித்தால் தமிழ்நாடு பெயர்மாற்றத்திற்கு ம.பொ.சி அவர்கள்தான் முதற்காரணம் என்பதை அறியலாம்.

 ம.பொ.சி அவர்கள் காங்கிரசு கட்சிக்குள்ளேயே நடத்திய தமிழரசுக் கழகத்தின் சார்பாக உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்த சங்கரலிங்க நாடார் அவர்களைக்கூட அண்ணாதுரை குறிப்பிடவில்லை.

 ம.பொ.சி அவர்கள் நவம்பர் 1 ஆம் தேதியைத் தான் விழாவாகக் கொண்டாட வலியுறுத்தினார்.

Tuesday 26 October 2021

ஒரு சுத்தமான தமிழன் முதலமைச்சராக இருந்திருந்தால்

ஒரு சுத்தமான தமிழன் முதலமைச்சராக இருந்திருந்தால்....

 தமிழகத்திற்கு சொந்தமாக (தமிழக எல்லைக்கு மிக அருகிலேயே) கேரளாவிற்குள் இருக்கும் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆயுதம் தாங்கிய தமிழக காவல்துறையை பாதுகாப்புக்கு அனுப்பியிருப்பார்.
 அந்த காவல்படைக்கு தரைவழி போக்குவரத்தை ஏற்படுத்தி வைத்திருப்பார் ஒருவேளை மலையாள அரசு தரைவழியில் இடையூறு செய்தால் வான்வழியே உணவு, தண்ணீர், ஆயுதம் ஆட்கள் அனுப்புவார்.

 முல்லைப் பெரியாறு அமைந்திருக்கும் இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி தமிழர்கள் தான் வாழ்கிறார்கள். அத்தமிழர்களை தமிழகத்துடன் இடுக்கியைச் சேர்க்க போராடுமாறு அழைப்பு விடுத்திருப்பார்.
 தமிழர்கள் பெருந்திரளாக கேரள அரசு அலுவலகங்கள் மற்றும் மலையாளிகள் செறிவாக வாழும் இடங்களை சுற்றி முற்றுகை போட சொல்லி இருப்பார். இதன்மூலம் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் எந்த ஒரு மலையாளிக்கும் உணவு தண்ணீர் இல்லாமல் தடுக்கப்பட்டு அவர்கள் கெஞ்சும் நிலைக்கு ஆளாக்கியிருப்பார்.

 கேரளாவிற்கு செல்லும் காய்கறி இறைச்சி மற்றும் அத்தியாவசிய பொருட்களை தடை செய்து இருப்பார்.    (இடுக்கி மாவட்ட தமிழர்களுக்கு மட்டும் நம்பிக்கையான தமிழ் அமைப்புகள் மூலம் உணவும் தண்ணீரும் அனுப்புவார்).

தமிழகத்திற்கு உள்ளே இருக்கும் கேரள நிறுவனங்களை மூட சொல்லி இருப்பார்.

இத்தனை செய்தும் மலையாளிகள் பணியவில்லை என்றால் அல்லது தமிழர்களைத் தாக்கினால் கேரளாவில் இருக்கும் தமிழர்களுக்கு தற்காப்புக்காக சிறிய வகை ஆயுதங்களை அனுப்புவார்.

 மலையாளிகளைத் தாக்கிவிட்டு தமிழகத்திற்கு வரும் தமிழர்களுக்கு நிரந்தர அடைக்கலம் கொடுத்திருப்பார்.
 தமிழகத்தில் இருக்கும் மலையாள நிறுவனங்கள் மற்றும் கடைகளை தமிழக பொதுமக்கள் சூரையாடி பொருட்களை எடுத்துக்கொள்ள மறைமுக உத்தரவு  பிறப்பிப்பார்.
 ஏற்கனவே வெள்ள பாதிப்பில் இருக்கும் கேரளா உணவு பற்றாக்குறையுடன் தமிழர்களின் எதிர் தாக்குதலால் சட்ட ஒழுங்கு சீர்குலைவையும் சந்திக்கும்.
 தமிழகத்தின் முன் ஒரு வாரம் கூட கேரளா தாக்குப்பிடிக்க முடியாது.
இந்நிலையில் தமிழகத்தை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைக்கும். 

 1947 நிலவரப்படி இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் சேர்க்க நிபந்தனை விதித்து எந்த அழுத்தம் வந்தாலும் உறுதியாக இருந்து அப்பகுதிகள் தமிழகத்துடன் இணையும் வரை முதலமைச்சர் அசைந்துகொடுக்க மாட்டார். 

 கேரளா சமாதானத்திற்கு அழைத்த உடனே இடுக்கி தமிழருக்கு தமிழக ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டு பெயர் பலகைகள் தமிழில் மாற்றப்படும்.
 பட்டினியாக இருக்கும் மலையாள அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு தமிழக அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர். போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த தமிழர்களை அரசு வேலையில் அமர்த்தப்படுவர்.

 தமிழகத்திற்குதான் இடுக்கி சொந்தம் என்பதற்கான ஆதாரங்களை தொடர்ந்து பொதுவெளியில் வெளியிடுவார். விபரங்களை அரசு கெஜட்டிலும் வெளியிடுவார். மலையாள மொழியிலும் வெளியிடுவார்.
 தமிழக ஊடகத்துறை மூலம் பல குறும்படங்கள் வெளியிடுவார். அதை பல மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து பரவச் செய்வார்.

 நடுவணரசு ஆட்சியைக் கலைத்தாலும் தொடர்ந்து தனது கட்சிக்காரர்கள் மூலம் பொதுமக்களை வழிநடத்தி இடுக்கி இணைப்பைச் சாதிப்பார். பொதுமக்களை எல்லையில் குவிய அழைப்பார். அப்போது தமிழக அரசைக் கலைத்து பொறுப்பேற்கும் மத்திய அரசை இயங்க விடாமல் தமிழகமே கொதித்து எழும். மத்திய அரசு அடக்குமுறையை மேற்கொண்டால் பெரும்புரட்சி வெடிக்கும். எனவே ஹிந்தியர் மலையாளிகளைக் கைவிடுவர்.

தமிழர் முன் மலையாளிகள் கால் தூசு!

 எல்லைகள் மாறுவது ஒன்றும் அதிசயம் இல்லை. சமீபத்தில் பங்களாதேசுடன் ஹிந்தியா ஒப்பந்தம் போட்டு இரு நாடுகளும் தங்கள் எல்லைக்குள் இருக்கும் மற்றொரு நாட்டின் துண்டுதுண்டான பகுதிகளை கொடுக்கவில்லையா?!

 குஜராத்தின் குட்டி குட்டி யூனியன் பிரதேசங்கள் மிக சமீபத்தில் ஒரே யூனியன் பிரதேசம் ஆகவில்லையா?!

 நம்மிடம் மிச்சம் இருக்கும்  ஜனநாயக சக்தி மூலம் இழந்த நிலங்களை மீட்க  ஒரு முதலமைச்சர் கிடைப்பாரா?!

அப்படி ஒரு சுத்தமான தமிழன் முதலமைச்சராக வருவாரா?!

#AnnexIdukkiWithTN

Monday 25 October 2021

ஏனிப்படி செய்கிறார்கள்

ஏனிப்படி செய்கிறார்கள்

 மலையாளிகள் என்றைக்கும் மாறப்போவதில்லை.
ஏனென்றால் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் 
என்றைக்காக இருந்தாலும் தமிழர் தனிநாடு அமைத்தே தீருவார்கள், அப்போது தமிழருடன் என்னதான் நட்புறவோடு இருந்தாலும் தங்கள் கதை முடிந்துவிடும் என்று. 

 இந்தியர் மனநிலையும் இதுவே என்னதான் உரிமைகள் கொடுத்தாலும் தமிழர் தனிநாடு தவிர எதற்கும் மயங்க மாட்டர் என்று. 

 நாம் தான் இதை உணரவில்லை.
நாம் விரும்புகிறோமோ இல்லையோ காலம் நம்மை தனிநாடு ஆக்கத்தான் போகிறது.

 நாம் தனிநாடு ஆவோம். திருப்பி அடிப்போம். நம்முடையதை மீட்டு மற்றவருடையதையும் ஆக்கிரமிப்போம். ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் இருக்க ஆக்கிரமிப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

 அன்று மூன்று புறம் தமிழராலும் ஒரு புறம் கடலாலும் சூழப்பட்டுள்ள மலையாளி மற்றும் சிங்களவர் கடுமையான பாதிக்கப்படுவர். 

அதிலும் மலையாளிகள் பூமிப் பந்தில் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.

Saturday 23 October 2021

கோழை மீனவர்களும் முழுநேர முட்டாள்களும்

கோழை மீனவர்களும்...
முழுநேர முட்டாள்களும்...

 எழுதவேண்டாம் என்று எவ்வளவு கட்டுப்பாடாக இருந்தும் என்னால் முடியவில்லை.
 அதனால் எழுதிவிடுகிறேன்.
என்ன ஆனாலும் பரவாயில்லை.

 இந்த ஒட்டுமொத்த உலகிலேயே ஆகச்சிறந்த பொட்டைகள் என்றால் அது தமிழக மீனவர்கள்தான்.
 ராமேஸ்வரம் வேதாரண்யம் என்றில்லை முழு தமிழக கடற்கரையிலும் வாழும் மொத்த மீனவர்களும் பொட்டைகள்.
 தமிழகத்தின் மொத்த மீனவர்களில் ஒரு பத்து பேர் சுத்த ஆம்பளை இருந்திருந்திருந்தால் இந்நேரம் ஒரு சிங்கள பிணமாவது தமிழகத்தில் கரை ஒதுங்கியிருக்கும்.
 சிங்கள தமிழகப் போரே வெடித்திருக்கும்.

 பெரிய சண்டியர்கள் என்று திரைப்படங்களில் காட்டப்படும் சென்னை மீனவர்கள் கூட பொட்டைத் தனத்துக்கு  விதிவிலக்கில்லை.
 சென்னை வரை சிங்களவர்கள் வந்து மீன்பிடித்து செல்கிறார்கள். அவர்களிடமும் உதைதான் வாங்குகிறார்கள். தெலுங்கு மீனவர்களிடமும் அடிவாங்காத நாளே கிடையாது. சென்னை மீனவர்களை ஆந்திராவுக்கு கடத்திச் சென்று பணம் பெற்று விடுதலை செய்வது மாதம் ஒருமுறை நடக்கிறது.

 இத்தனைக்கும் இவர்கள் அப்பாவிகள் கிடையாது. ஆயுதம், போதைப்பொருள், தங்கம் மற்றும் பிற வரிவிதிப்பு போடப்பட்ட பொருட்கள்  என 90% கடத்தல் வேலைகளை இவர்கள்தான் செய்கின்றனர். கடற்கரை மாவட்டங்களில் அரசியல்வாதிகளுக்கு அடியாட்கள் வேலை இவர்கள்தான்.

 வெள்ளம், ஜல்லிக்கட்டு போராட்டம், புயல் என தமிழகம் பாதிக்கப்படும் போதெல்லாம் ஓடிவந்து உதவி செய்வதெல்லாம் மீனவர்கள்தான். ஆனால் ஒருவன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும் சிறிதும் வீரமற்ற கோழை என்றால் எவராது அவனை விரும்புவார்களா?!

 மீனவர் ராஜ்கிரண் இறப்பிற்கு இவர்கள் செய்வது என்ன? இரண்டுநாள் ஒப்பாரி கருப்புக் கொடியொடு கடலில் இறங்குதல், ஒருநாள் வேலைநிறுத்தம் என உப்புசப்பில்லாத போராட்டம். இவர்கள் தீக்குளித்தாலும் அந்த பக்கம் ஒண்ணுக்கு போகும் நாய் கூட மதிக்காது. ராஜபக்ச மகனை வேண்டுமென்றே சம்பந்தமில்லாத விழாவுக்கு விருந்தாளியாக அழைத்துவந்து கொஞ்சி குலாவும் ஹிந்தியன் எப்படி மதிப்பான்? இதை அவன் வேண்டுமென்றே செய்கிறான் என்பது புரியவில்லையா? 

 இவர்களுக்கு ஆதரவு முழுநேர முட்டாள்கள். இந்தியா எதாவது செய்யும் என்று இன்னமும் இந்தியாவையே எதிர்பார்க்கும் அடிமுட்டாள்கள். 

 எந்த அடிப்படையில் இந்திய கடற்படை தமிழர்களுக்கு உதவும் என்று நம்புகிறார்கள் என்றே தெரியவில்லை. இரண்டு முறை இந்தியில் பேசச் சொல்லி இந்திய கடற்படை தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளது. சிங்களவர் தமிழருக்கு இரக்கம் பார்த்தாலும் பார்ப்பர், ஆனால் ஹிந்தியர் ஒருநாளும் தமிழரை வாழ விடமாட்டர். 
 இதை உணராத ஒவ்வொரு தமிழனும் அடிமுட்டாள்.

 பொட்டை மீனவர்களே! உங்களுக்கு கரும்புலியாக மாறி சிங்கள கப்பலைத் தகர்க்க துப்பில்லை என்றாலும் ஒரு சிங்கள மீனவனைப் பிடித்துக் கன்னத்திலாவது ஒரு அடி அடித்துக்காட்டுங்கள்!

 உங்கள் பின்னால் ஒட்டுமொத்த தமிழகமும் நிற்கவில்லை என்றால் என் பெயரை பொட்டை என்று மாற்றிக் கொள்ளுகிறேன்.
 
 நீங்கள் திருப்பி அடிக்காதவரை எந்தத் தமிழனும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்! 

 அதற்கும் வக்கில்லை என்றால் நீங்கள் சேலைகட்டிக்கொண்டு வீட்டில் இருங்கள் உங்கள் வீட்டுப் பெண்களை கடலுக்கு அனுப்புங்கள். அவர்கள் நிச்சயம் திருப்பி அடிப்பார்கள்.

Tuesday 5 October 2021

மதச் செலவு

மதச் செலவு

 மதம் என்றவுடன் அதன் கொள்கையைப் பற்றி அல்லது அதன்பின் இருக்கும் அரசியல் பற்றி பேசுகிறோமே தவிர எப்போதும் சாமானியனின் நிலையில் இருந்து நாம் பேசியது கிடையாது.

இந்துக்கள் தொடர்ந்து பிற மதங்களுக்கு மாறுகிறார்கள் ஆனால் யாருமே ஏன் இந்துவாக மாறுவதில்லை?!

ஏனென்றால் இந்து மதத்தில் செலவு அதிகம்.
அவ்வளவுதான்.

 சாதிக்கொடுமை, பார்ப்பனியம் என்றெல்லாம் திராவிடியா பாணியில் வடக்கு முதல் தெற்கு வரை சுற்றி சுற்றி வரவேண்டாம்.

நான் கூறுவது தமிழக எல்லைக்குள் மட்டுமே!

அதாவது தமிழகத்தில் சாதிக் கொடுமை மிகவும் குறைவு.
அதிலும் ஜமீன்தார் ஆதிக்கம் இருந்த பகுதிகளைத் தவிர்த்து (90% ஜமீன்தார்கள் தெலுங்கு கம்பளத்தார்) பார்த்தால் சாதிய சமத்துவம் நிலவும் அற்புதமான மண் தமிழகம் (தஞ்சை மாவட்ட கிழக்குப் பகுதி விதிவிலக்கு)

 மற்றபடி தீண்டாமை, சாதிக்கொடுமை, ஆணவக்கொலை போன்றவை பெரும்பாலும் தெலுங்கு ஆதிக்க சாதிகள் செய்வதுதான். 
 சில சம்பவங்கள் திராவிடியா அரசியல் விளையாட்டுகளின் விளைவாக கடந்த சில ஆண்டுகளில் நடந்துள்ளது. 
 அதாவது அரசிற்கு எதிராக மக்கள் கொந்தளிக்கும்போது எதாவது ஒரு மோதல் சம்பவத்தை சாதிக் கலவரம் ஆக்கி மடைமாற்றுவது திராவிடியா உத்தி.
சிறந்த உதாரணமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடக்க காலத்திலேயே பள்ளர் - நாடார் மோதல் மூலம் திசைதிருப்பப்பட்டதைக் கூறலாம். 

 (தமிழகத்தின் முதல் பெரிய சாதிக் கலவரம் 1899 இல் கிறித்துவ மதமாற்ற மிசினரிகள் வெள்ளைக்கார அரசின் ஆதரவுடன் நடத்திய மறவர் - நாடார் கலவரம்)

 இங்கே இருக்கின்ற கிறித்துவர் மற்றும் இசுலாமியரின் பொருளாதார நிலையை வைத்துப் பார்த்தாலே தெரியும். அவர்கள் நசுக்கப்பட்ட மக்கள் கிடையாது. 

 கிறித்துவமாவது ஆங்கிலேய ஆதரவுடன் மக்கள் மீது திணிக்கப்பட்டது என்று கூறலாம்.
(உதாரணமாக நாடார்கள் கிறித்துவராக மாறினால் வரி குறையும் என்று மதம் மாறியவர்கள். மதவாரி இடவொதுக்கீடு தான் முதலில் வந்தது. அதில் இந்துக்கள் இடத்தை தமிழின பார்ப்பனர் ஆக்கிரமிக்க அதை எதிர்த்து ஜமீன்தார்கள் தொடங்கியதே திராவிடம்)

 தமிழக இசுலாமியரோ முழுக்க முழுக்க மனமுவந்து இசுலாத்தை ஏற்றவர்கள்.

இன்றும் மதமாற்ற குழுக்கள் அயராது உழைத்து வருகின்றன என்றாலும் தமிழகத்தில் மதமாற்றம் குறைவுதான்.

 தமிழகத்தின் பொருளாதார ஏற்ற இறக்கத்தை மதமாற்ற புள்ளவிபரத்துடன் பொருத்திப் பார்த்தால் ஒரு பொதுவான வடிவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

 இந்தியா முழுவதும் இந்து மதத்தை பிற மதத்துடன் ஒப்பிட்டால் இந்துக்கள் இரண்டு மடங்கு செலவு செய்கிறார்கள் எனலாம்.

அதாவது வடக்கே இந்து என்பவர் தன் மதத்துக்காக செலவிடுவதை விட தமிழக இந்து அதிகம் செலவிடுகிறார்.

இது தென்தமிழகத்தில் இன்னமும் அதிகம்!

 திருநெல்வேலியில் பிறந்த என்னை எடுத்துக்கொள்ளுங்கள்.
 என் தந்தையின் குலதெய்வம், என் தாயின் குலதெய்வம், ஊரில் என் சமூகம் நடத்தும் கோவில், ஊருக்கு பொதுவான அனைத்து சமூக கோவில், இந்த நான்கிற்கும் ஆண்டாண்டு அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கொடை விழா வரும் அத்தோடு செலவும் வரும். ஆடு வெட்ட வேண்டும். வரி கொடுக்க வேண்டும். பொங்கல் வைக்கவேண்டும். பூசைப் பொருட்கள், போக்குவரத்து, விடுமுறை என்று நீளும்.
இதில் நேர்த்திக் கடன்கள் தனி.
கும்பாபிசேகம் தனி.
 இதில் வீட்டில் கன்னி வேறு. அதற்கு கடைசி வெள்ளி தோறும் பூசை.
இதுபோக தீபாவளி, பொங்கல், கார்த்திகை, தமிழ்ப் புத்தாண்டு என பெரிய செலவு வரும். பங்குனி உத்திரம், ஆடி அம்மாவசை, ராம நவமி, பிள்ளையார் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை என்று ஏகப்பட்ட பண்டிகைகள் வரும். 
 இதில் சீசனுக்கு ஒரு சாமி அல்லது சாமி அல்லது சாமியார் வேறு. சாய்பாபா, பங்காரு, ஜக்கி போல.
 புதுப்புது பண்டிகைகள் வேறு. விநாயகர் ஊர்வலம், கிருஷ்ண ஜெயந்தி, ஹோலி, ஓணம் போல.

 இது போக ஜாதகம் என்கிற கொடிய சதி இருக்கிறது. அதில் அறிவியலும் இல்லை ஒரு புண்ணாக்கும் இல்லை. அதன் பொருட்டு பெரிய கோவில்களுக்கு சென்று வருதல். 

 இது போக விருப்பத்தின் பேரில் ஆன்மீக சுற்றுப்பயணம், நன்கொடை, சந்தா, உண்டியல், அர்ச்சகர் தட்டு என எல்லாவற்றும் பெரிய செலவு வரும்.

 திருமணம், ஈமக்கடன், வளைகாப்பு, தாய்மாமன் சீர் என பண்பாடு சார்ந்த நிகழ்வுகள் தனி.

 ஆற்றங்கரையில் கூரையில்லாமல் இருந்த தெய்வங்கள் இன்று டைல்ஸ் பதித்த கோவிலில் இருக்கின்றன. ஆனால் அதை வணங்கும் மக்களோ இன்னமும் அதே நிலையில்.

 திருநெல்வேலி குடும்பப் பெண்கள் ஆளுக்கு ஒரு சாமி வைத்திருப்பார்கள். அதாவது சாமியாடுவார்கள். சிலர் இரண்டு மூன்று கூட தனக்குள் பதுக்கி வைத்திருப்பார்கள்.

 வீட்டு ஆண்கள் குடித்து அழிப்பதை விட இவர்கள் கும்பிட்டு அழிப்பது அதிகம். நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை.

 என்னிடம் கேட்டால் பாலாபிசேகம் கேட்கும் கற்கோவில் தெய்வங்கள் சுரண்டுவதை விட குலதெய்வங்கள் சுரண்டுவது மிக அதிகம்.

 ஐயையோ நம் மரபு அழிந்துவிடும், கொடிவழி சொந்தங்கள் விட்டுப்போகும் என்று பதறும் முன் இதற்காக அழிந்துகொண்டிருக்கும் மக்களை எண்ணிப் பாருங்கள்.
ஒரு அடிமட்ட உழைப்பாளி நரம்பு தெறிக்க உழைத்து கொடுத்த பணத்தை கோவில்கொடை என்கிற பெயரில் சீரியல் செட் போட்டு ஸ்பீக்கர்களை அலறவிட்டு வீண்டிப்பதை எண்ணிப் பாருங்கள். 

மதம் மாறுவது அத்தனை எளிதான முடிவல்ல. உடன்பிறந்த உறவுகள் கூட விட்டுப்போகும். தன் மொத்த அடையாளத்தையும் இழக்கவேண்டும் என்கிற முடிவுக்கு ஒருவன் தள்ளப்பட வலுவான காரணம் வேண்டும்.

 ஏதோ இசுலாமியரும் கிறித்தவரும் மதவெறி பிடித்து ஒற்றுமையான மதமாற்ற உணர்வுடன் இந்துக்களுக்கு எதிராக சதி செய்து மதமாற்றம் நடப்பதாக இந்துத்துவ வெறியர்கள் சித்தரிக்கிறார்கள்.

 இவர்களுக்கு ஐரோப்பாவில் இருந்தும் அரேபியாவில் இருந்தும் பெட்டிபெட்டியாக பணம் வருவதாகவும் கதையளக்கிறார்கள்.

 இந்துக்கள் போலவே இசுலாமியரிலும் அந்த பிரிவு இந்த ஜமாத் அந்த கட்சி இந்த இயக்கம் என்று ஏகப்பட்ட பிரிவினைகள்! 

கிறித்துவத்திலும் அந்த சர்ச் இந்த சபை அந்த பாதிரியார் இந்த பிரிவு என்று ஏகப்பட்ட பிரிவினைகள்!

 இவர்களுக்கு தங்களுக்குள் அடித்துக்கொள்ளவே நேரம் போதவில்லை இதிலே இவர்கள் எங்கே இந்துக்களை சதிசெய்து மதம் மாற்ற?

 நான் கூற வருவது என்னவென்றால் மதம் என்பது மக்களைச் சுரண்டவே ஏற்படுத்தப்பட்டது.
 அளவாகச் சுரண்டவில்லை என்றால் மக்கள் மதம் மாறவே செய்வார்கள். பணக்காரர்களைத் தவிர.

ஒரு அடிமட்ட இந்து மதம் மாறியவுடன் அவனது பொருளாதாரம் மேம்படுவது கண்கூடு. அதுவே அவனுக்கு சமூகத்தில் முன்பை விட அதிக மதிப்பைப் பெற உதவுகிறது. மதம் மாறிவிட்டதாலேயே அவனை யாரும் மதிப்பதில்லை. 

 இந்து இந்து என்று கத்துபவர்கள் அடுத்த மதத்தை குறை சொல்வதில்தான் குறியாக இருக்கிறார்கள். தன் மதத்தை எளிமைப் படுத்துவது பற்றி தன் மதத்து மக்களை மேம்படுத்துவது பற்றி சிந்திப்பது கூட கிடையாது. 
 
இந்து மதம் அழிகிறது அதற்கு முதல் காரணம் அதன் குறைகளை சிந்திக்காத இந்த இந்துமதக் காவலர்கள்தான்! 
 

 

Friday 17 September 2021

மதவாதிகள் பற்றி

மதவாதிகள் பற்றி...

யார் மதவாதி?

 தன் சந்தோசத்தை அடுத்தவன் துன்பத்தில் தேடுபவன்தான் மதவாதி!

 வேற்று மதத்தை சேர்ந்தவன் புழுவாய்த் துடிப்பதைப் பார்த்து பேரானந்தம் அடைபவன்தான் மதவாதி!

 நடக்கும் நன்மைக்கெல்லாம் கடவுள் காரணம், நடக்கும் தீமைக்கெல்லாம் மனிதன் காரணம் என்று மனிதநேயத்திற்கு எதிராக சிந்திப்பவன் மதவாதி!

கற்பனைக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாத அறிவுக் குருடன் மதவாதி!

 எது மதம்?

 மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை வெளியே கொண்டுவருவதே மதம்!

 போதைப் பொருட்களில் மிக மோசமானது மதம்!

சமுதாயத்தைப் பிடித்த நோய்களில் மோசமானது மதம்!

 மதம் காவு வாங்கிய அளவு மனித உயிர்களை வேறு எதுவுமே காவு வாங்கியதில்லை!

 ஒரு உண்மையான இந்து தனக்கு எய்ட்ஸ் வந்தால் கூட ஒரு முஸ்லீம் காக்காவலிப்பில் துடிப்பதைப் பார்த்தால் தன் நோய் சரியாகிவிடும் என்று நம்புபவன்.

 ஒரு உண்மையான முஸ்லீம்  தன்னைத் தவிர அனைவரும் கடவுளுக்கு எதிரி என்று நினைப்பவன். மனித குலமே அழிந்து இசுலாமிய வெறியர் மட்டும் உயிரோடு இருக்கவேண்டும் அதுவும் தனக்கு அடிமையாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன்.

 உண்மையான கிறித்துவன், உண்மையான பௌத்தன், உண்மையான சமணன் என எவனும் இதற்கு விதிவிலக்கல்ல!

 தான் சுண்டுவிரல் அசைத்தால் பிணங்கள் குவியவேண்டும் என்று நினைப்பவன் எல்லா மதங்களிலும் இருக்கிறான்.

 சக மனிதனைக் கொல்லவேண்டும். ரத்தம் துடிதுடிக்க ஒரு மனித உயிர் சாகவேண்டும். பெண்களும் குழந்தைகளும் நரக வேதனை பட்டு கதறியபடி உயிரை விட வேண்டும். தெருவெல்லாம் ரத்த ஆறு ஓடவேண்டும். பார்க்கும் இடமெல்லாம் சடலங்களாக குவிந்து கிடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மதவாதிகள்.

 தன்னைப் பற்றி சிந்திக்காமல் எந்நேரமும் அடுத்தவனைக் கெடுப்பதிலும் சீரழிப்பதிலும் சிந்தனையைச் செலுத்துபவன் மதவாதி!

 தான் அம்மணமாக திரிந்தாலும் அடுத்தவன் கோவணத்தில் இருக்கும் ஓட்டைகளை எண்ணுபவன் மதவாதி!

 தன் இரண்டு கண்களையும் ஒருவன் தோண்டி எடுத்தால் அவனிடம் அடுத்த மதத்தவனின் ஒரு கண்ணையாவது தோண்ட கோரிக்கை வைப்பவன் மதவாதி!

 தன் அந்தரங்க கொடூரத்தை அரங்கேற்றி அதற்கு இல்லாத கடவுளின் மேல் பழியைப் போடுபவன் மதவாதி!

 தன் கொடூரத்திற்கு பரிசாக சொர்க்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் மனநோயாளிதான் மதவாதி!

 தன் வெறியை தீர்த்துக்கொள்ள பெற்ற தாயையும் பிறந்த குழந்தையையும் கூட தன் கையால் கொல்ல தயங்காதவன் மதவாதி!

 தான் சொல்வது நடக்கவேண்டும்! உழைக்காமல் பணம் கொட்டவேண்டும்! தானே கடவுளின் அவதாரம்! தன்னை எதிர்ப்பவர்கள் தலை வெட்டப்பட்டு மண்ணில் உருளவேண்டும் என்று நினைக்கும் சுயநல மிருகமே மதவாதி!

 போதை தலைக்கேறி தன் கையைத் தானே அறுத்துக் கொள்பவனை விட ஆபத்தானவன் மதவாதி!

 ரத்த பசி எடுத்து, காம இச்சை அளவு கடந்து, வெறி தலைக்கேறி, சுயநலம் கண்ணை மறைக்க, தனக்குள் இருக்கும் மிருகத்தை வெளிவரச் செய்து அடுத்தவனைத் துன்புறுத்தி அதில் இன்பம் காண்பவன்தான் மதவாதி!

 மதத்தின் பின்னால் போன எந்த நாடும் எந்த மக்களும் நாசமாகப் போனதுதான் சரித்திரம்!
 
 நமக்கு இந்த வெறித்தனம் வேண்டாம்!

நமக்கு மிக அருகில் வந்துவிட்டது ஒரு மதவெறி கூட்டம்!

 அவர்கள் எவ்வளவு மோசமான முட்டாள்கள் என்றால்...

மோடி ஒரு கத்தியை எடுத்து நூறு இந்துக்கள் கழுத்தை சீவினாலும் அதை சரிகட்ட அதே கத்தியால் ஒரு முஸ்லீமின் சுண்டுவிரலை வெட்டிவிட்டால் போதும்!
மோடி பக்தர்கள் கழுத்தறுபட்டு துடித்துக் கொண்டிருக்கும் அந்த நூறு இந்துக்களையும் மிதித்து ஏறி  நடந்து சென்று  அந்த வெட்டப்பட்ட சுண்டுவிரலைப் பார்த்து பார்த்து சந்தோசப் படுவார்களே தவிர மோடியைத் திட்டமாட்டார்கள்!

 இந்த மதவெறி பிடித்த நாய்கள் ஒருநாள் கத்தியுடன் கலவரம் செய்ய திட்டமிட்டுக் கூட்டமாக வருவார்கள்! அன்று பொதுமக்கள் பயப்படாமல் இந்த வெறிநாய்களை கல்லால் அடித்தே கொல்லுங்கள்! இவர்களை அடிக்கிற அடியில் எல்லா மதங்களிலும் மறைந்திருக்கும் வெறிபிடித்த மிருகங்கள் இருந்த இடம் தெரியாமல் பதுங்கிவிட வேண்டும்! 

 இவர்களுக்குப் பாடம் நடத்தி புரியவைத்து திருத்துவதெல்லாம் நடக்காத காரியம்!

 இசுலாமிய மதவெறியோ கிறித்துவ மதவெறியோ நமக்கு இவ்வளவு அருகில் இல்லை!
 அச்சுறுத்தும் அளவில் இல்லை!
அடக்கியாளும் பலம் கொண்டிருக்கவில்லை!

 இந்து மத வெறியர்கள்தான் நம் முதல் எதிரி!

 எவரை நம்பினாலும் இவர்களை நம்பாதீர்கள்!

Saturday 11 September 2021

மேகதாது அணைக்கு பதிலடி

மேகதாது அணைக்கு பதிலடி

 கன்னடர்கள் எப்படியும் மேகதாது அணையைக் கட்டத்தான் போகிறார்கள். அப்படிக் கட்டினால் நாம் கடலில் இருந்து கர்நாடகாவுக்கு தமிழகம் வழியே செல்லும் மேகங்களைத் தமிழக எல்லைக்குள்ளேயே தடுத்து மழை பொழிவிக்க வேண்டும்.
தமிழகம் நீரில் தன்னிறைவு பெற்றாலும் விடாமல் மழை மேகங்களை கடலிலேயே தடுத்து மழையாக்க வேண்டும்.

 இப்படி ஐந்து ஆண்டுகள் முழுமையாகத் தடுத்தால் கர்நாடகாவில் பஞ்சம் வந்து கன்னடர் தமிழர் முன் பணிவர்!

கர்நாடக எல்லையை மூடி தமிழகத்தில் உள்ள கர்நாடக நிறுவனங்கள் மற்றும் பொருட்களுக்குத் தடைவிதித்து கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்து மின்சாரத்தையும் நிறுத்திவிட்டால் மூன்று ஆண்டுகளில் பணிந்துவிடுவர்!

காவிரி ஆற்றுக்குக் குறுக்கே கர்நாடகா கட்டியுள்ள அனைத்து சட்டவிரோத அணைகளையும் இடிக்கச் சொல்லவேண்டும்.

பிறகு மேகங்களை விடவேண்டும். அதன் பிறகே அவை மலையில் மோதி குளிர்ந்து மழை பெய்து ஆறாக மாறும்!

முறை: குளிர் மேகங்களைத் தடுத்து செயற்கை மழையை பொழிவிக்க மழை மேகங்களில் யூரியா, சமையல் உப்பான சோடியம் குளோரைடு, அம்மோனியம் நைட்ரேட், உலர்பனி ஆகியவற்றைத் தூவி மழைமேகங்களின் கனமானது அதிகரிக்கப்படுகிறது.  இப்போது மேகங்களின் மீது வெள்ளி அயோடைடு, உலர் பனிக்கட்டி ஆகியவை தூவப்பட்டு மேகங்கள் குளிர்விக்கப் படுகின்றன. குளிர்ந்த மேகங்களில் இருந்து நீர்த்துளியானது மழையாகப் பெய்கிறது.

 இப்படிப் பெய்யும் மழை ரசாயனத் தாக்கம் கொண்டது.
 சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இதைச் செய்யக்கூடாது.

பி.கு: தமிழகம் 1985 மற்றும் 2003 வறட்சி காலத்தில் (மழைமேகங்கள் இல்லாத சூழலில்) செயற்கை மழை பெய்விக்க முயற்சித்து எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

இதுவே நம்மிடம் ராணுவம் இருக்கிறது என்றால் இயற்கையை தொந்தரவு செய்யாமல் கர்நாடகா மீது படையெடுத்துச் சென்று அத்தனை அணைகளையும் உடைக்கவேண்டும். தமிழர் இழந்த பகுதிகளை மீட்கவும் வேண்டும். குடகு தனிநாடாக உதவவும் வேண்டும்.

ஏனென்றால் சிங்களவர் போல மக்களை நேரடியாகக் கொல்வது மட்டும் இனப்படுகொலை அல்ல!
 ஹிந்தியர் போல மீத்தேன் எடுக்கிறேன் என்று வேளான் மண்டலத்தை அழிப்பதும்,
அண்டை மூன்று இனத்தார் போல தண்ணீரைத் தடுப்பதும் கூட இனப்படுகொலையே!

Friday 3 September 2021

தெற்காசிய தீபகற்ப நாடுகள்

தெற்காசிய தீபகற்ப நாடுகள் 

 "திராவிடம்" என்கிற பொது அடையாளம் தென்னிந்திய இனங்களின் தனித்துவத்தைக் குழப்புகிறது.
அதனால் தெற்கே அந்த அடையாளம் எடுபடவில்லை என்பது சரிதான்.
 என்றால் வடக்கில் உள்ள தென்னிந்தியர் ஒன்றிணைய அது எடுபடவேண்டும்தானே?!

 அதாவது வடக்கே ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பெருநகரங்களில் தென்னிந்தியர் கணிசமாக வாழ்கின்றனர்.

 அவர்கள் ஏன் "திராவிடர்" என்கிற பெயரில் ஒன்றிணையவில்லை?! 
திராவிடத்தை விடுங்கள் "தென்னிந்தியர்" என்கிற பெயரில் கூட ஒன்றிணைவதில்லையே அது ஏன்?!

 அதாவது வெளிநாட்டில் இருக்கின்ற இந்திய குடிமக்கள் மொழி கடந்து "இந்தியர்" என்கிற பொதுவான பெயரில் சங்கங்கள் வைத்துள்ளனர்.

 நான் வடயிந்தியா முழுக்க சுற்றியுள்ளேன்.
 எங்கேயும் தென்னிந்திய மக்கள் இணைந்து "திராவிடர்" என்றோ "தென்னிந்தியர்" என்றோ பொதுவான பெயரில் சங்கமோ இயக்கமோ ஏற்படுத்தியது இல்லை.
 மொழியின் பெயரால் தனித்தனியாகவே சங்கங்கள் வைத்துள்ளனர்.

 இத்தனைக்கும் வடயிந்தியரிடம் நம்மை நாம் "தென்னிந்தியர்" என்று குறிப்பிட்டால்தான் புரியும். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்றால் என்னவென்று வடவருக்குப் புரியாது. அவர்களைப் பொறுத்தவரை நாமெல்லாம் "சவுத் இந்தியன்" அவ்வளவுதான்.
 அதற்கு மேல் நம்மைப் பற்றி அறிந்துகொள்ள ஹிந்தியருக்கு எந்த அக்கறையும் இல்லை.

 வடக்கில் வாழும் தமிழர்கள் "தமிழ்ச் சங்கம்" என்றுதான் வைத்துள்ளார்கள். 
[ இதை நிறுவியர் பெரும்பாலும் தமிழ்ப் பார்ப்பனராக இருப்பார்.
அதில் தமிழ் தெரிந்த பிற இனத்தவர்கூட உறுப்பினராக இருப்பார்கள்.
உதாரணம் நான் இருக்கும் சூரத் மாநகரில் பொன்விழா கண்ட "சூரத் தமிழ்ச் சங்கம்" ]

 வடக்கில் வாழும் தென்னியந்தியர் எவருமே சக தென்னிந்திய இனத்தாரை விட வடவர்களையே நம்பிக்கைக்கு உரியவராக நினைக்கின்றனர்.

 வடவரும் ஓரினம் கிடையாது. அவர்களுக்கு உள்ளேயே இனவாரியான பிரச்சனைகள் பல உண்டு.

 ஆனாலும் வடயிந்திய இனங்களை விட தென்னிந்திய இனங்கள் தமக்குள் அதிக பகைமை உணர்ச்சியுடன் இருக்கின்றன.

 இதுதான் கசப்பான உண்மை!

 ஏனென்றால் மக்களின் இயல்பான மனநிலை அப்படி!
மக்களின் இயல்பான மனநிலையை பெரும்பாலும் (சமீபத்திய) கடந்த கால வரலாறு தீர்மானிக்கிறது.

 வடக்கே இசுலாமிய அரசுகள் ஏற்படுத்திய தாக்கம் அங்கே "இந்து  vs முஸ்லீம்" மனநிலை காணப்படுகிறது.

 தெற்கே தமிழர்களின் பேரரசுகள் ஏற்படுத்திய தாக்கம் "தமிழர் vs தமிழரல்லாதார்" மனநிலையே காணப்படுகிறது.

 கன்னட, தெலுங்க, மலையாளிகள் வடவரை விட தமிழர்களைத்தான் எதிரிகளாகக் கருதுகின்றனர்!
 வடக்கு தெற்கை வரைமுறையின்றி கொள்ளையடித்தாலும் இந்தியாவிலிருந்து பிரிய அவர்கள் நினைப்பதில்லை. 
தமிழகத்திற்கு தண்ணீர் போகாமல் தடுப்பதுதான் அவர்களின் முக்கிய அரசியல்.
 [அதாவது கன்னட, தெலுங்க, மலையாளிகளின் நோக்கமெல்லாம் தமிழர்கள் நாசமாகப் போகவேண்டும் என்பது மட்டுமே!
 சும்மாவா?! நம்ம பாட்டன்கள் அடித்த அடி அப்படி!
 அதிலும் நாம் நமது பழமையை மீண்டும் மீண்டும் பறைசாற்றுவது  கடும் எரிச்சலைத் தருகிறது.]

 இன்றைய நிலையில் தமிழர்கள் மட்டுமே தனிநாட்டு சிந்தனையுடன் இருக்கிறோம்!
 இதுதான் தெளிவான தொலைநோக்குப் பார்வை!
 
  உண்மையை உடைத்துக் கூறவேண்டுமானால் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளிகள் ஒரு குடையின்கீழ் திரண்டால் உலகையே வெல்ல நினைத்தாலும் அது முடியும்!
(ஆனால் இது நடக்கவே நடக்காத காரியம்!)
 அதற்குத்தான் நாம் முயற்சித்தோம்!
தெற்கைத் திரட்டி வடக்கை வெல்ல திராவிடத்தை ஆதரித்தோம்.
 ஆனால் அது திருப்பியடித்துவிட்டது!

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை!

நாம் தனிநாடு அடைய புலிகள் வழியில் முயற்சிப்போம்!
 ஆரம்பத்தில் கன்னட, தெலுங்க, மலையாளிகள் இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
 நாம் எப்படியும் குறிப்பிடத் தகுந்த ராணுவ வெற்றிகளைப் பெறுவோம்!
அப்போது பிற மூன்று இனங்களுக்கும் தனிநாடு ஆசை வரும்!

 அப்போது அவர்கள் வடக்கிற்கு எதிராகத் திரும்புவார்கள்! நமக்கு வேலை கொஞ்சம் குறையும்!

 நாம் விரைவில் புலிகள் ஆண்ட ஈழம் போல (ஐ.நா அங்கீகாரம் பெறாத) தனிநாடு ஆவோம்!

 அப்போது பேரம் பேசி 1956 இல் தமிழகம் அமைந்தபோது அண்டை மூன்று இனங்களிடம் இழந்த பகுதிகளை திரும்பப் பெற்று அதற்குப் பதிலாக நாம் அவர்களுக்கு ராணுவ ரீதியாக உதவி தனிநாடு அமைத்துக் கொடுக்கலாம்!

[ இழந்த எல்லைகள் பற்றி அறிய "தனித் தமிழர்நாடு" எனும் நூல் எழுதியுள்ளேன். இணையத்தில் தேடினால் அட்டைப் படத்தில் வரைபடம் உள்ளது. சான்று காட்டியும் நிலத்தைத் திரும்பத் தரவில்லை என்றால் இழந்த பகுதிகளை நாம் நேரடியாகக் கைப்பற்ற வேண்டும். மூவரில் எவர் நமது நிலத்தைத் தரவில்லையோ அவருக்கு எப்போதும் எக்காலத்திலும் போரியல் ரீதியாக உதவக்கூடாது ]

 சிங்கள நிலம் தவிர்த்த தென்னிந்தியா இனவழி நாடுகளாக ஆகிவிட்ட பிறகு அந்நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கலாம்!
அதற்கு (நியாயப்படி "தமிழிய நாடுகளின் கூட்டமைப்பு" என்றுதான் பெயர் வைக்க வேண்டும் இருந்தாலும்) "தெற்காசிய தீபகற்பம்" என்று பெயர் வைக்கலாம். 
 இது உலகத்திலேயே முதல் பத்து பணக்கார நாடுகளில் இடம்பெறும்.

அதாவது தமக்கென தனி ராணுவம் கொண்ட இனவழி நாடுகள் சேர்ந்து கூட்டணி உருவாக்கி பொதுவான பணத்தாள், கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து மற்றும் குடியேற்றம், நெருக்கடி நேரத்தில் கூட்டணி ராணுவத்துக்கு பங்களித்தல், மைய நிதிசேமிப்புக்கு பணமளித்தல் போன்ற நிபந்தனைகளுடன் இயங்குதல்.

[ சிங்களவரிடம் நாம் இழந்த நிலத்தை அவர்கள் திரும்பக் கொடுத்து 2009 இனப்படுகொலைக்கு அவர்கள் உலகறிய மன்னிப்புக் கேட்டால் அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆனால் இது ஒருக்காலும் நடக்கப்போவதில்லை. நாம் படையெடுத்து பதில்- இனப்படுகொலை செய்துதான் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் ]

 ஒருவேளை ஒரு....வேளை தமிழ், கன்னட, தெலுங்க, மலையாள, சிங்களவர்களின் நாடுகள் கூட்டணி உருவாக்கினால் ஐரோப்பிய யூனியன் போல பலமான கூட்டணியாக இயங்கலாம்.

 எப்படி ஜெர்மனி ஐரோப்பிய யூனியன் மூலம் மறைமுகமாக அமெரிக்கா சீனாவுக்கு ஈடுகொடுத்து உலகை ஆட்டுவிக்கிறதோ அதேபோல தமிழர்களாலும் முடியும்!

 தமிழர் தனிநாடு கண்டால் முதலில் தென்னிந்தியா, பிறகு வடயிந்தியா, பிறகு இந்திய துணைக்கண்டம் என இனவழி நாடுகள் அமைந்து தமிழரைத் தலைமையாக ஏற்று தெற்காசியா பெரும் சக்தியாக உருவெடுக்கும்.
இதன் மூலம் மாபெரும் சர்வதேச அரசியல் மாற்றம் உருவாகும்.

அப்போது நாம் உலகை ஆட்டுவிக்க நினைத்தாலும் அது முடியும்!

 மேற்கத்திய பெருமுதலாளித்துவம், மதவாதம், வல்லரசிய ஏகாதிப்பத்தியம், சர்வாதிகாரம், பெருநிறுவன வளச்சுரண்டல் என இலக்கில்லாமல் சென்றுகொண்டு இருக்கும் சர்வதேச அரசியல் மொத்தமாகத் தடம் மாறும்!

ஒவ்வொரு இனமும் நாடு கேட்கும்!
ஒவ்வொரு நாடும் தன் இனத்தையும் மக்களையும் காக்க நினைக்கும்!
மதவாதம் காணாமல் போகும்!
ஒவ்வொரு பெரிய நாடும் உடையும்!
பெரிய சந்தைகள் உடையும்!
பெருமுதலாளித்துவம் வீழும்!
ஏகாபத்தியங்கள் சாயும்!
உலகம் முழுவதும் அதிகாரப் பரவல் நடக்கும்!
தற்சார்பு அதிகரிக்கும்!
வறுமை குறையும்!
பொருளாதாரம் பெருகும்!
உலகத்திற்கே சுதந்திரம் கிடைக்கும்!
யார் எங்கே இனரீதியாக பாதிக்கப்பட்டாலும் அனைத்துலகம் அதிரும்!

இது வெறும் கனவில்லை! நாம் நினைத்தால் முடியும்! 

ஒவ்வொரு மொழிவழி இனத்துக்கும் ஒரு நாடு!
ஒவ்வொரு மொழிக் குடும்பத்திற்கும் நாடுகளின் கூட்டணி!

இதுவே நவீன அரசியல்!

இன்று உலகின் மூத்த இனம் நாம்!
நினைத்தால்....
நாளை உலகின் தலைமை நாம்!

Monday 16 August 2021

ஆப்கானிஸ்தான் அல்லது பேரரசுகளின் சவக்குழி

ஆப்கானிஸ்தான் - பேரரசுகளின் சவக்குழி 

 தாலிபான் என்றாலே 90% பஷ்தோ மொழிபேசும் பஷ்தூன் (பக்தூன்) இனத்தவர்கள்தான்.
 இவர்களது தாய்நிலம் பாதி பாகிஸ்தானிலும் பாதி ஆப்கானிஸ்தானிலும் பரந்து விரிந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் மத்தியில் அமைந்துள்ள ஹஸாரா மொழிபேசுவோரின் தாய்நிலத்தை சுற்றி வளைத்தவாறு மறுபுறம் வரை கணிசமாக பக்தூன்கள் வாழ்கிறார்கள் (இந்த பகுதிகள்தான் தாலிபான் கட்டுப்பாட்டுப் பகுதிகள், பார்க்க படம்). இந்த ஹஸாரா இனம் செங்கிஸ்கான் படையெடுப்பின்போது குடிவந்த மங்கோலிய வம்சாவளியுடன் கலந்து உருவான கலப்பு மக்கள் என்பர்.

 ஆங்கிலேய பேரரசு அதன் உச்சத்தில் இருந்தபோதே  மோதி மண்ணைக் கவ்விய இனம்தான் பஷ்தோ. (அதிலும் ஆங்கில அரசின் சீக்கியப் படையணி ஆப்கானிஸ்தானில் சகாராகரி போரில் பெருவீரம் காட்டி இறுதியில் தோற்றது. இவர்களுக்கு ஆங்கிலேய அரசு நிறுவிய நினைவுச் சின்னமான டெல்லி இந்தியா கேட் தான் இன்றும் இந்திய ராணுவ நினைவிடம். ஆம் இந்தியா வீரமரணம் அடைந்த தனது ராணுவத்திற்கு ஒரு நினைவு வளாகத்தைக் கூட இன்றுவரை அமைக்கவில்லை)

 ஆப்கான் ரஷ்ய பேரரசின் ஆக்கிரமிப்பின்போது விடுதலைக்காக போராடியபோது பஷ்தூன் இனத்தின் மாணவர்கள் தங்கள் இனத்துக்காக அமைத்துக்கொண்ட படைதான் தாலிபான் (அதாவது மாணவர்கள்).
 அமெரிக்க பாகிஸ்தான் ஆதரவுடன் ரஷ்யாவையும் மண்ணைக் கவ்வ வைத்தனர் பக்தூன்கள். ஆட்சியைக் கைப்பற்றிய தாலிபான்கள் அமெரிக்காவிற்கு பணிந்து போகாததால் மத்தியில் இருக்கும் ஹஜாரா இனத்தைக் கைக்குள் போட்டுக்கொண்டு தனது பொம்மை அரசை நிறுவி தொடர்ந்து தாலிபான்களுடன் போரிட்டு வந்த்து.
 அமெரிக்காவின் மிக நீண்ட போராக இது விடிந்தது.
இப்போது தோல்வியடைந்து வெளியேற வேண்டிய நிலை.

 ஆக மூன்று பேரரசுகளை மண்ணைக் கவ்வ வைத்த மாவீரர்கள் பக்தூன் மக்கள்!
 முதல் இரண்டு பேரரசுகள் பக்தூன்களுடன் மோதிய பிறகு விரைவிலேயே வீழ்ந்தன.
 அமெரிக்காவும் வீழப்போகிறது போலும்!

 இறுதிவரை இவர்களை ஆதரித்தது பாகிஸ்தானின் எல்லைக்குள் வாழும் பக்தூன் மக்கள். பாகிஸ்தான் முதலில் ஆதரித்து பிறகு விலகிக்கொண்டது என்றாலும் அமெரிக்க அழுத்தத்தையும் மீறி தன்னாட்டு பக்தூன்களுக்குப் பயந்து தாலிபான்களுக்கு மறைமுகமாக உதவி வந்தது. தற்போது அமெரிக்காவுக்கு இணையாக வல்லாதிக்கமாக எழுந்துவரும் சீனாவின் ஆதரவு தாலிபான்களுக்குக் கிடைத்த பிறகு மீண்டும் புத்துணர்வுடன் தாலிபான் போரைத் தொடர்ந்தனர்.

  இன்று அமெரிக்க ஆதரித்தவுடன் ஆட்சி புரிந்துவந்த ஹஸாரா இனத்தை வென்று ஆப்கானிஸ்தான் எனும் பல இனங்கள் வாழும் நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளனர்.

 இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆப்கானிஸ்தானில் எங்கும் எதிலும் பக்தூன் ஆதிக்கம்தான் இருக்கப்போகிறது. இனி ஹஸாராக்களின் கதி அதோ கதிதான்.

 நான் எப்போதும் கூறுவது போல அரசியல் என்றாலே இனங்களின் அரசியல்தான்.
மதம் எல்லாம் வெறும் மேற்பூச்சு!

 'ஒரு பின்தங்கிய இனம்கூட தனது தாய்நிலத்தை மீட்க ஆயுதம் தூக்கிவிட்டால் எந்த வல்லரசும் எதிர்நின்று வெல்லமுடியாது' என்பதே தாலிபான்களாகிய பக்தூன்கள் உலகிற்கு உரைக்கும் பாடம்.
அதிலும் 'ஆயுதப் போராட்டம் இந்த நவீன உலகில் சாத்தியமில்லை' என்று பிதற்றிக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு அது முக்கியமான பாடம். 

தாலிபான்கள் மீது மதவெறி, ஆணாதிக்கம், இனவெறி, பயங்கரவாதம் என்று எத்தனையோ குற்றச்சாட்டுகள் இருந்தாலும் தனது ராணுவமான தாலிபான்களை உறுதியாக ஆதரித்து இந்த மாபெரும் வெற்றியை ஈட்டிய பஷ்தோ இனத்தாருக்கு பாராட்டுகள்!

 பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உடைந்து இருபுறமும் வாழும் பஷ்தோ மக்கள் தமக்கான நாட்டை நிறுவ வாழ்த்துகள்!



 
 

 

Wednesday 11 August 2021

மாற்றி யோசித்து ஒரு ஒப்பீடு

மாற்றி யோசித்து ஒரு ஒப்பீடு

 ஒரு தமிழர் பொழுதுபோகாமல் இருக்கிறார்.
 அவர் சென்னையிலிருந்து கிளம்பி இருசக்கர வாகனத்திலேயே ஆந்திர பிரதேசத்தில் நுழைந்து அப்படியே வடக்கு நோக்கி ஆந்திராவின் மறு எல்லை வரை ஓராண்டு கால சுற்றுலா செல்ல திட்டமிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

 அதற்குத் துணையாக ஆந்திரா வாழ் தமிழரான தனது நண்பருடன் விசாகப்பட்டினம் வரை சுற்றுப்பயணத்தைத் திட்டமிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

 தமிழக எல்லை தாண்டி ஆந்திராவில் நுழைந்ததும் தமிழர்களே அரசியல்வாதிகளாகவும் நடிகர்களாகவும் பெரும் செல்வந்தர்களாகவும்  இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

 ஆந்திர முதலமைச்சர் அவரது தாத்தா காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பிழைக்க வந்த குடும்பத்தின் ஒரு தமிழ் வம்சாவளி என்றும் அவரது அமைச்சரவையில் நான்கில் ஒருவர் தமிழர் என்றும் வைத்துக்கொள்வோம்.


 ஆந்திரத் தமிழர்கள் நாம் பேசும் தமிழை விட சிறிது தூய தமிழில் பேசுவதாக வைத்துக்கொள்வோம்.

 அந்த தமிழர் இருசக்கர வாகனத்தில் ஆந்திர மாநில நகர பெருஞ்சாலைகள் வழியே போய் ஆங்காங்கே தங்கி அருகிலிருக்கும் கிராமங்களுக்கும் சென்று சுற்றிப் பார்த்து விட்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

 ஆந்திர நகரங்களில் பெரிய பெரிய வீடுகள் மாளிகைகள் கட்டிடங்கள் போன்றவையும் பெரிய பெரிய வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், நகைக் கடைகள் போன்றவையும் தமிழர்களுக்கு சொந்தமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

 நகரங்களில் தமிழர்கள் சொந்த வீடு வைத்திருக்க மண்ணின் மைந்தர்களான தெலுங்கர்கள் வாடகைக்கு இருக்கிறார்கள் எனவும் வைத்துக் கொள்வோம்.

 ஆந்திர கிராமங்களில் பெரிய பெரிய நிலக்கிழார்கள், முக்கிய நபர்கள், பெரும்புள்ளிகள் தமிழர்களே என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.

 ஆந்திரா முழுவதும் தமிழர்களுக்கான சங்கங்கள் இயக்கங்கள் போன்றவை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

 பழங்கால ஆந்திர அரசர்கள் கட்டிய பிரசித்தி பெற்ற கோவில்கள் தமிழர்களால் நிர்வகிக்கப்படுவதாகவும்  ஆந்திர மக்களும் தமிழில் பாடி பஜனை செய்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 

 அரசு அதிகாரிகள், போலீஸ், அரசிடம் கான்ட்ராக்ட் எடுப்பவர்கள், தாதாக்கள், எந்தவொரு சங்கத்திலும் தலைவர் என ஆந்திராவில் எங்கே பார்த்தாலும் தமிழர்கள் அதிகாரம் பெற்று விளங்குவதாகவும் தெலுங்கர்கள் அவர்களை அண்டி நிற்கும் நிலையில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

 எந்த தெலுங்கனும் ஒரு தமிழனை எதிர்த்து எதையுமே செய்யமுடியாது  என்கிற நிலை இருப்பதாகவும் வைத்துக்கொள்வோம்.

  தமிழ்நாட்டுத் தமிழர்களை விட ஆந்திரத் தமிழர்கள் செழிப்பாகவும் வசதியாகவும் வாழ்கிறார்கள் அதுவும் ஆந்திராவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் குடியேறி வாழ்கிகிறார்கள் என்றும்
 ஒரு சில பகுதிகளில் பூர்வகுடித் தெலுங்கரைவிட பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்றும் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு கணிசமான சிறுபான்மையாக இருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

 இப்படி பனிரெண்டு மாதங்களாக வடக்கு நோக்கி சென்று விசாகப்பட்டினத்தை அவர் அடைகிகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

 அப்படி விசாகப்பட்டினத்தை அடைந்தாலும் அங்கேயும் 70 ஆண்டுக்கும் மேலாக விசாகப்பட்டின ஊரக நகரப் பகுதிகளில் கவுன்சிலர் முதல் எம்.எல்.ஏ வரை அனைவருமே தமிழர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

  இவர் போகும் இடங்களிலெல்லாம் தமிழர்கள் அவரை வரவேற்று இனப் பாசத்துடன் தமிழில் பேசி கலந்துரையாடி மகிழ்ச்சியுடன் உபசரித்து வழினுப்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

 அப்போது அந்த தெலுங்கர் எவ்வளவு மகிழ்ச்சியும் பெருமையும் அடைவார்.

 அதே அளவு மகிழ்ச்சியை நெல்லூரில் இருந்து கிளம்பும் ஒரு தெலுங்கர் தூத்துக்குடிக்கு சுற்றுப்பயணம் வந்தால் நிச்சயம் அடைவார்.

Monday 26 July 2021

சாதிப்பட்டம் சாதிவெறியைத் தூண்டுமா

சாதிப்பட்டம் சாதிவெறியைத் தூண்டுமா?

 தமிழகத்தில் சாதிவெறி அதிகம் என்று கூறுபவர்கள் கூட மதவெறி இல்லை என்று ஒத்துக்கொள்வர். இவற்றை ஒப்பிடுவோம். 

 நான் வட இந்தியாவில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது யாராவது கையில் பை ஏதாவது கொண்டு போனால் அதில் தமிழ் எழுத்துக்கள் இருக்கிறதா என்று பார்ப்பேன்.
 (இது தமிழர்களை அடையாளம் காணத் துடிக்கும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் அனைவரும் செய்கின்ற ஒரு வழக்கமாகும்). இந்த பழக்கதோஷம் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் தொடரும். அவ்வாறு ஜவுளிக்கடை போன்று கையில் ஏதாவது வைத்திருந்தால் அதில் தமிழ் எழுத்துக்கள் இருக்கிறதா என்று பார்ப்பேன். தமிழ் இஸ்லாமியர் கையில் ஏதாவது கொண்டு போனால் அதில் இருக்கும் பெயர்கள் பெரும்பாலும் இசுலாமிய பெயராக இருக்காது (இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் கடைகள் வெளிப்படையான இஸ்லாமிய பெயர்களை பெரும்பாலும் வைத்துக் கொள்வதில்லை. ஆங்கில எழுத்துக்களையோ அல்லது ஆங்கில பெயரையோ வைத்திருப்பார்கள். இதை என்னால் அடையாளம் காண இயலும்). தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இஸ்லாமியரிடம்தான் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்வார்கள் என்கிற தவறான எண்ணம் சிலருக்கு உண்டு. ஆனால் பெரும்பாலும் அது உண்மை இல்லை. நான் பார்த்தவரை தமிழக இஸ்லாமியர்கள் பெரும்பான்மை தமிழர்கள் போலவே பிரபலமான மதம் சாராத கடைகளில்தான் பொருட்களை வாங்குவர்.

 உலகம் முழுவதுமே கூட மதவெறியானது தலைவிரித்து ஆடுகிறது. அதிலும் இஸ்லாமியருக்கு எதிரான போக்கு இந்தியா முழுவதும் மூலைமுடுக்கெல்லாம் காணப்படுகிறது. தமிழகம் கேரளா ஆகியவற்றை தவிர்த்து ஏனைய இடங்களில் மதவெறி தலைவிரித்தாடுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அப்படி ஒரு நிலை இன்றுவரை இல்லை. இத்தனைக்கும் தமிழின இஸ்லாமியர்கள் தான் ஒரு இஸ்லாமியர் என்ற வெளிப்படையான அடையாளத்துடன் தான் இருக்கிறார்கள். இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள். இஸ்லாமிய இஸ்லாமிய உடைகளை அணிந்து கொள்கின்றனர். இஸ்லாமிய பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். பாஜக எதிர்ப்பையும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் மக்கள் தொகையில் ஓரளவு கணிசமான அளவு இருந்தும் இனப்பற்று என்று வரும்போது அவர்கள் அளித்த பங்கு என்று பார்த்தால் குறைவு என்றுதான் கூற வேண்டும். அப்படி இருந்தும் பிற தமிழர்கள் தமது ரத்த சகோதரர்களான தமிழ் இசுலாமியரை ஒதுக்குவதில்லை. ஒருவர் தனது உண்மையான அடையாளத்தை வெளிக்காட்டுவது அந்த அடையாளத்திற்கு எதிராக பிறரைத் தூண்டுவதாக ஆகாது என்று இதன் மூலம் உணரலாம்.

 இப்போது கூறவந்த விடயத்திற்கு வருகிறேன். உலகம் முழுவதும் சாதிப் பட்டத்தைப் பயன்படுத்துகின்றனர் (சமீபத்தில் வெளிவந்த tomorrow war என்கிற ஹாலிவுட் படத்தில் கூட தொலைந்த தன் மகளை froster என்கிற குடிப்பட்டத்தின் மூலம் கதாநாயகன் அடையாளம் கண்டுகொள்கிறான்).
 சாதிப் பட்டம் போட்டுக் கொள்வதன் மூலம் வந்தேறிகளை முழுமையாக அடையாளம் காண முடியாவிட்டாலும் பெரும்பான்மையான வந்தேறிகளை அடையாளம் கண்டுவிட முடியும். இதனாலேயே சாதிப் பட்டத்தை வந்தேறி அரசுகள் ஒழித்தனர். இதனை மீண்டும் கொண்டுவர தமிழ் தேசியவாதிகள் முயற்சிக்கும் பொழுது சாதிப் பட்டம் போட்டால் சாதிவெறி தலைதூக்கும் என்கிற அடிப்படையே இல்லாத ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர். அப்படியென்றால் தமிழகத்தில் இசுலாமியருக்கு எதிரான மதவெறி தலைதூக்கி யிருக்கவேண்டும்  இல்லையா?! 
மத அடையாளம் மத நல்லிணக்கம் அமையத் தடையில்லை என்றால் அடையாளத்துடன் கூடிய சாதிய நல்லிணக்கம் சாத்தியம்தான்.

 தமிழர்களுக்கு சாதிவெறியும் மதவெறியும் கிடையாது. தமிழர்கள் எப்போதுமே ஒரு பண்பட்ட சமூகம். 

 தமிழக கிராங்களில் பல்வேறு சாதியினர் உறவுமுறை சொல்லி அழைத்துக்கொள்வதும், ஒரே தெருவில் பல சாதியினர் வாழ்வதும், ஒரே குலதெய்வக் கோவிலில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் ஒற்றுமையாக வழிபடுவதும். சாதி தாண்டிய உயிர் நண்பர்கள் இருப்பதும், ஊருக்கு பொதுவான கோவிலுக்கு அந்த ஊரில் இருக்கும் சமுதாயங்கள் முறைவைத்துக் கொண்டு விழா எடுப்பதும் சர்வ சாதாரணம்.  ஒரே பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் இருவேறு சாதியினர் கலப்புத் திருமணம் செய்துகொள்வதும் பன்னெடுங்காலமாக இயல்பாகவே நடந்து வருகிறது (உங்கள் பெற்றோரை விசாரித்துப் பாருங்கள் உங்கள் தாத்தா பாட்டி காலத்திற்கு முன்பே சாதிதாண்டிய திருமணம் நடந்திருக்கும்). 

இதற்குச் சான்றாக இருவேறு சாதிகள் தங்களுக்குள் பெண்கொடுத்து பெண்ணெடுத்து அந்த இரு சாதிகளுக்கு நடுவிலேயே ஒரு சிறுபான்மை சாதி உருவாகியிருக்கும். உதாரணமாக நான் சேனைத்தலைவர் சாதியைச் சேர்ந்தவன் (மூப்பனார் பட்டம்) நாங்கள் செங்குந்தர் மற்றும் மறவர் ஆகியோர் கலந்து உருவான சிறுபான்மை சாதி (தமிழக மக்கட்தொகையில்  0.4 சதவீதம்). 

பிரச்சனை எப்போது வருகிறது என்றால் பொருளாதார அந்தஸ்து வேறுபாடான இரு குடும்பங்களில் திருமண சம்பந்தம் நடைபெறுவதில்லை. அதாவது (அது ஒரே சாதியாக இருந்தாலும்) வெவ்வேறு அந்தஸ்தில் இருக்கும் குடும்பங்கள் சம்பந்தம் செய்துகொள்வது இல்லை. இந்நிலையில் ஒரு ஆண் ஏழையாக இருந்தால் அவரது முறைப்  பெண் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றால்  பிரச்சனைகள் வருவது இயல்பு (அதிலும் காதலர்கள் காத்திருந்து காரியத்தைச் சாதிக்காமல் ஊரைவிட்டு ஓடிவிடுவது பெரிய பிரச்சனைகளைக் கொண்டுவரும்). ஆக நாம் இங்கே செய்யவேண்டியது பொருளாதார சமநிலை தான்.  அதாவது அனைத்து சாதியினருக்கும் சம வாய்ப்பு வழங்கி சமமான பொருளாதாரத்திற்கு உயர்த்தி விட்டால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பெண்கொடுத்து பெண்ணெடுத்து கலந்து விடுவது இயல்பாகவே நடந்துவிடும். ஆனால் வந்தேறி அரசுகளும் இயக்கங்களும் ஊடகங்களும் தமிழகத்தில் எங்கோ நடக்கும் சாதிய கொடுமைகளை ஏதோ தமிழகத்தின் பொதுக் கலாசாரம் போல பிரச்சாரம் செய்கின்றனர். புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தில் தான் சாதிய மோதல்கள், ஆணவக்கொலைகள், தீண்டாமை, சாதிய கலவரங்கள் ஆகியன பிற மாநிலங்களை விட மிகவும் குறைவு. இங்கே நடந்த அத்தகைய சில அசம்பாவிதங்களும் திராவிட அரசியல் செய்யும் சாதிய அரசியலே காரணம்.

 ஆகவே தமிழர்களே! நாம் அனைவரும் உலகில் எல்லா முன்னேறிய சமூகங்களும் செய்வது போல நமது தாத்தா பாட்டிகள் போல நமது குடிப் பட்டத்தை நமது பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ளவேண்டும். குடிப்பட்டத்தை பெயருடன் இணைத்துக்கொள்வது சட்டப்படி தவறு இல்லை.  இதை நாம் செய்தால் வந்தேறிகளை அடையாளம் காண்பது மிகவும் எளிதாகிவிடும். தமிழ்ச்சாதிகளின் பட்டங்கள் போன்றே பட்டம் கொண்ட பிற இனத்து சாதிகள் மிகவும் குறைவு.  பெரும்பான்மையான தமிழ் குடி பட்டங்கள் தனித்துவமானவை. ஒருவர் தமிழர் என்று அடையாளம் காண இன்று நமக்கு வேறு வழியில்லை. வெளிப்படையாக நான் ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் பட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.

 தன் குடிப்பெயரை பெயருடன் இணைத்து பயன்படுத்துவது சாதிவெறியாக பார்க்கப்படுவதை தவிர்க்க தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதற்கு 'தமிழர் நிலத்தில் சாதியவேறுபாடுகள் வேற்றின ஆட்சிக்கு முன்பு இல்லை' என்று ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. அவற்றை வெளிக்கொண்டு வந்த எந்த சாதிக்கும் மேலேயோ கீழேயோ கிடையாது என்பதையும் தமிழ் தேசியவாதிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும். 

உலகில் தனது இனத்தை ஓரணியில் திரட்டிய தலைவர்கள் சாதி மத வர்க்க அடையாளங்களை அழித்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று பிரச்சாரம் செய்ததில்லை. 

சாதியை ஒழித்து விட்டு மதத்தை ஒழித்து விட்டு தூய தமிழில் பேசி வர்க்க முரண்பாடுகளை ஒழிக்கும் திட்டத்துடன்தான் ஒரு தமிழ் தேசியவாதி இருக்க வேண்டும் என்று நம்மை மூளைச்சலவை செய்துவைத்துள்ளனர். சாதிய, மத வேறுபாடுகளை ஒழித்தால்தான் தமிழினம் ஒன்றிணைய முடியும் என்பது பித்தலாட்டம். நடக்கவே நடக்காது என்று தெரிந்துதான் வந்தேறிகள் 'இனத்தின் முதல் எதிரி சாதி' என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகின்றனர். நாமும் அந்த வழியை முயன்றுபார்த்து தோற்றுவிட்டோம். வந்தேறிகள் தமது அடையாளத்தை மறைத்துகொண்டு எளிமையாக அதிகாரத்தைக் கைப்பற்றி கொழுத்துவிட்டனர்.

 ஆகவே இனி வழியை மாற்றுவோம் சாதி அடையாளத்துடனும் மத அடையாளத்துடனும் இனவுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைவோம். தனிப்பட்ட கொள்கைகள், விருப்பு வெறுப்புகள், நம்பிக்கைகள் போன்றவற்றைப் பொருட்படுத்த வேண்டாம். 

 முதலில் இன உணர்வு அதற்குப் பிறகு பிற உணர்ச்சிகள் என்று இருந்தால் போதும். குடிப்பட்டத்தை பயன்படுத்தும் ஒரு தமிழருடன் நம்பிக்கையுடன் ஒன்றிணைய முடியும். இந்த வழியில் நம்மால் எளிமையாக ஒன்றிணைய முடியும். 

 ஆகவே முதல்வேலையாக நமது குடிப்பட்டத்தை பெயருடன் இணைப்போம்.  வந்தேறிகள் கதறத்தான் செய்வார்கள். எதையும் பொருட்படுத்தாமல் நாமும் உலகில் வெற்றி பெற்ற இனங்களின் பாதையில் பயணிப்போம். வந்தேறிகளை அடையாளம் காண்போம். அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். முன்னேறுவோம்.

Monday 19 July 2021

இனம் என்றால் என்னவென்றே தெரியாத தமிழர்கள்

இனம் என்றால் என்னவென்றே தெரியாத தமிழர்கள்

ஒரு நபர் இருப்பார்,
தாய்மொழியில் பெயர் கிடையாது.
அவர் சாதிப் பட்டத்தை தன் பெயருடன் போட்டுக் கொள்வார்.
தன் மத அடையாளத்தை வெளிப்படையாக அணிந்துகொள்வார்.
தன் தாய் மொழியுடன் ஆங்கிலம் கலந்து பேசுவார்.
நடை உடை பாவனைகளில் நவீன மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுவார். 
இனம் தாண்டிய கட்சி அல்லது இயக்கத்தில் உறுப்பினராக இருப்பார் (கம்யூனிச கட்சி அல்லது இந்திய அளவிலான கட்சி).
ஏன் இந்தியா மீது பற்றுடன் கூட இருப்பார்.
ஆடம்பரமாகவும் வாழ்வார்.
இயற்கை பற்றிய எந்த புரிதலும் இருக்காது.
உடல் உபாதைகளுக்கு ஆங்கிலவழி மருத்துவமும் செய்து கொள்வார்.
கெட்ட பழக்கங்களும் இருக்கும்.
ஒழுக்கமான குடும்ப வாழ்க்கையும் இருக்காது.
பாடபுத்தகத்தைத் தவிர ஒரு புத்தகத்தைக்கூட படித்திருக்கமாட்டார்.

மேற்குறிப்பிட்ட நபர் ஒரு வேளை கன்னட இனத்திலோ, அல்லது தெலுங்கு இனத்திலோ, அல்லது  மலையாள இனத்திலோ, அல்லது சிங்கள இனத்திலோ பிறந்திருந்தால் அவருக்கு அந்த இனத்தின் தேசியவாதத்தில் இடம் உண்டு.

ஆனால் தமிழ் தேசியத்தில் இப்படிப்பட்ட ஒரு நபருக்கு, ஏன் இதில் ஒரு அம்சம் இருக்கும் நபருக்குக் கூட இடம் கிடையாது என்கிற நிலைதான் இருக்கிறது.

இந்த மனநிலை தற்போது மாறி வருகிறது என்றாலும் அது போதவே போதாது என்பேன். இனம் என்றால் என்னவென்றே புரியாதவாறு நம்மை மூளைச்சலவை செய்துள்ளனர்.

ஒருவன் தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொண்டாலே அவள் வெள்ளை வேட்டி சட்டையுடன் எந்த மத அடையாளங்களும் இல்லாமல் தூய தமிழில் பேசிக் கொண்டு கலப்பு திருமணமும் செய்திருக்க வேண்டும். அவன் எந்த கட்சியிலும் இருக்கவும் கூடாது. ஒழுக்கமாக எளிமையாக மொழிப்புலமையுடன் இருக்கவேண்டும். இப்படியெல்லாம் பல எழுதப்படாத நிபந்தனைகள் இங்கே இருக்கின்றன்.

சாதி, மதம், குடும்பம், சுயநலம், மேற்கத்திய மோகம் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு தமிழனாக மட்டும் ஒன்றிணையவேண்டும் என்றால் அது ஏழேழு ஜென்மத்திற்கும் நடக்காது. அதனால்தான் தமிழ்மொழியைக் கரைத்துக் குடித்த வந்தேறிகள் அந்த இலக்கு நோக்கியே நம்மைத் தள்ளுகிறார்கள்.

தமிழருக்காக அனைத்தையும் துறந்து கிளம்பிய பலரை மேற்கண்டவாறு மாற்றி வெகுஜன மக்களிடம் இருந்து அவரை வேறுபடுத்தி தனிமைப்படுத்தி இறுதியில் பைத்தியக்காரன் போல திரியவேண்டிய நிலைக்குத் தள்ளிவிடுவர்.
மற்ற இனங்கள் பேசும் தேசியவாதத்தில் இனம் தவிர வேறு எந்த விடயத்தையும் அவர்கள் வலிந்து திணிப்பதில்லை. அவர்களின் தேசியவாதத்தில் மொழிக்குக் கூட முக்கியத்துவம் இருக்காது.

இங்கே தற்சார்பு பொருளாதாரம், சங்க கால இலக்கியம், சித்த மருத்துவம், சூழலியல், கார்ப்பரேட் எதிர்ப்பு என அத்தனையையும் தமிழ்தேசியத்தில் கொண்டுவந்து கலந்துவிட்டனர்.  மற்ற இனங்களில் இந்த மடத்தனமான போக்கு இல்லை. அவர்கள் இனத்தில் பிறந்தால் மட்டும் போதும் அவர்களது தேசியவாதத்தில் அவர்களுக்கு இடம் உண்டு.
இப்படித்தான் அத்தனை இனங்களும் வெறும் இனப்பற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முன்னேறுகின்றன.

நாமோ மொழிப்பற்றை அடிப்படையாகக் கொண்டு நம் இனத்தில் பிறக்காத மற்றவர்களையும் சேர்த்துக்கொண்டு கடந்தகால வரலாற்றையும் கல்வெட்டுகளையும் நோண்டிக்கொண்டு இருக்கிறோம்.

நம்மைச் சுற்றி பிற இனங்கள் விஸ்வரூபம் எடுத்து நம்மை வீழ்த்த நேரம் பார்த்துக்கொண்டு இருக்கின்றன.
நாமோ இனவாதம் என்றால் என்னவென்றே தெரியாமல் கொஞ்சம் இனப்பற்று கொண்டு முன்வருபவரையும் மேற்கண்ட terms and conditions போட்டு விரட்டிவிடுகிறோம்.
கொஞ்சமே கொஞ்சம்பேர் சேர்ந்து எதாவது போராட்டம் செய்துகொண்டு போலீஸ்காரனிடம் உதைவாங்கிக்கொண்டு இன விடுதலையைக் கேலிக் கூத்தாக்கி கொண்டிருக்கிறோம்.

உலக இனங்கள் சாதி, மதம், கொள்கை என எதையுமே சமரசம் செய்யாமல் இயல்பான இனப்பற்றுடன் ஒன்றிணைந்து தனக்கான ராணுவத்தை அமைத்து கொண்டு நாட்டை அமைத்துக் கொண்டு சர்வதேச அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றன.

நாம் நமது பழங்கால பேரரசுகளை நமது மனதிற்குள் அமைத்துக்கொண்டு அதில் நம்மைத் நாமே ராஜராஜ சோழனாக நினைத்துக்கொண்டு கனவில் கற்பனையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இனம் என்பது மக்கள், மக்கள் என்பது உயிர், உயிர் என்பது வயிறு.
வயிற்றுப் பசிக்கு உணவிடாத அதாவது தன் இன மக்களின் வருமானத்திற்கு வழிசெய்யாத தேசியவாதம் மணிநேரம் நிலைக்காது.

  உதாரணத்திற்கு கர்நாடகத்தில் ஒரு தொழிற்சாலை அமைகிறது என்று வைத்துக்கொள்வோம் அந்த தொழிற்சாலையிம் கன்னடர்களை எவ்வாறு வேலைக்கு அமர்த்துவது என்றுதான் கன்னட தேசியவாதிகள் சிந்திப்பார்கள். அந்த தொழிற்சாலை சுற்றுச்சூழலுக்கு விரோதமாக இருந்தால் அதை அங்கே இருக்கும் சூழலில் போராளிகள்தான் எதிர்ப்பார்கள். இரண்டிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. நாமோ தேசியவாதத்துடன் பலவற்றையும் குழப்பிக்கொண்டு விழிபிதுங்கி நிற்கிறோம்.

இனியாவது நடைமுறையில் எது சாத்தியப்படுமோ அதைப்பற்றி பேசுவோம்.
இன்றைய நிலையில் நடைமுறையில் வேலைக்கு ஆகும் விடயங்கள் இரண்டுதான் ஒன்று சாதி இன்னொன்று வன்முறை. இதை தவிர்த்து எந்த கொள்கையும் தத்துவமும் சிந்தனையும் நடைமுறையில் உதவப் போவதில்லை.

ஆகவே தமிழ்ச் சாதிகளாக ஒன்றிணைவோம்.
சாதிய அடையாளத்துடனேயே தமிழர் என்கிற இனப்பற்றுடன் வேறு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் ஆயுதம் தாங்கி விடுதலைப் போராட்டத்தில் இறங்கி நமது தாய் நிலத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். விடுதலை பெற ஆயுதவழியைத் தவிர்த்து வேறு வழியே இல்லை.

விடுதலைப் புலிகள் போலவா என்று நீங்கள் கேட்கலாம். புலிகள் போல நேர்மையான ஒழுக்கமான விடுதலை இயக்கம் என்றெல்லாம்கூட வேண்டாம். ஏனென்றால்  நாம் எத்தனை நேர்மையாக போரிட்டாலும் நம் எதிரிகள் நம்மிடம் அப்படி நடக்கப்போவதில்லை. இதற்கு 2009 இனப்படுகொலைக் கொடூரங்களே சான்று. இன்றைய நிலையில் இனப்பற்று மட்டும் போதாது இனவெறி வேண்டும். அதிலும் நாம் இருக்கும் பலவீனமான நிலையில் மிருகத்தனமான இனவெறி இருக்கவேண்டும். நாம் ஆயுதம் தூக்கியாக வேண்டும். நம்முடையதை மீட்டதுபோக பிறரதை ஆக்கிரமிக்கவும் வேண்டும். பல இனப்படுகொலைகள் செய்யவேண்டிய சூழலும் வரலாம். அதாவது மற்ற இனங்கள் போல நாமும் அடித்துப் பிடுங்கத் தயாராக இருக்கவேண்டும். அறம் முறம் என்று பிதற்றிக்கொண்டு இருக்கக்கூடாது. அப்படி இல்லையென்றால் நம் இனம் வரலாற்றில் நிலைத்திருப்பது கடினம்.