Thursday 23 July 2020

பள்ளருக்கு ஏன் வெள்ளாளர் மீது ஆசை

பள்ளருக்கு ஏன் வெள்ளாளர் மீது ஆசை?!

இடையர் (கோனார்) தம்மை "யாதவர்" என்றாக்கக் கோரினால்...
கம்மாளர் (ஆசாரி) தம்மை "விஸ்வகர்மா" என்றாக்க க் கோரினால்...
  எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அத்தகையது பள்ளர் தம்மை "தேவேந்திரகுல வெள்ளாளர்" என்றாக்கக் கோருவது...

இது புதிதல்ல.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு தலைதூக்கிய சாதிய உணர்ச்சியின் விளைவாக  உருவான சங்கங்கள் தமது இயல்பான சாதிப் பெயரை மறைத்து அதைத் தழுவிய சமஸ்கிருதப் பெயர்களையே வைத்துக் கொண்டன.
(சமஸ்கிருதப் பெயர்கள் 1500 களிலேயே வேற்றின ஆட்சியால் அறிமுகப் படுத்தப் ப்பட்டன)

பல்வேறு சாதிகள் ஒரு பட்டத்தை பயன்படுத்திய காலத்தில் அப்பட்டத்தை அடிப்படையாக வைத்து அந்த அனைத்து சாதியினரையும் ஒரு குடையின் கீழ் திரட்டுவது 150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரசியல் ஆகும்.

இதை முதலில் வெற்றிகரமாகச் செய்துகாட்டியது நாடார் பட்டத்தைப் பயன்படுத்திய சாதிகள்.
(இன்று நாடன் என்கிற பட்டத்தை நாடார் ஆக்கிவிட்டனர்.
அதற்குள் எத்தனை சாதிகள் சமாதியாகி உள்ளன என்று கண்டுபிடிக்கவே முடியாது)
இவர்களே முதலில் தம்மை சத்திரியர் என்று அறிவித்து பூணூல் போட்டு
சத்திரிய மடங்களை நிறுவியவர்கள்.
இவர்களே பாண்டியன் என்று பெயர்வைத்துக் கொள்ள ஆரம்பித்தவர்கள்.

பட்டத்தை அடிப்படையாக வைத்து சாதியைத் திரட்டுவது,
தாங்கள் போர்க்குடி (சத்திரியர்) என்று அறிவிப்பது,
அப்படியே ஏதாவது ஒரு மன்னர் பரம்பரைக்கு உரிமை கோருவது.
இது அன்றைய நாடார்கள் காட்டிய வழி.

இதுதான் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக நடந்த அரசியல்.

அதாவது ஆங்கிலேயர் வெளியேறும் சூழல் வந்தபோது அதுவரை இருந்த தேசிய உணர்வு மங்கி மொழியுணர்வு தலைதூக்கியபோல
மொழி அடிப்படையில் மாநிலம் அமையப் போவதை அறிந்த மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற ஏதாவது ஒரு அடையாளத்தின் கீழ்  ஒன்றிணையத் தொடங்கினர்.

சாதியாக இணைவதை விட பட்டத்தின் அடிப்படையில் இணைவது அதிக எண்ணிக்கையை தருவதால் அதிக பலனைத் தந்தது.

இப்படி போலியாக உருவாக்கப்பட்ட சாதிகள்தான் கவுண்டர், தேவர், வன்னியர், நாடார், பிள்ளைமார், பார்கவர் போன்றவை.

(இதில் நேர்மையாக நின்றவர்கள் பறையர் மட்டுமே!
பிற்பாடு அவர்களையும் ஆதிதிராவிடர் ஆக்கிவிட்டனர்.
தற்போது அதை பரையர் ஆக்க முயற்சி நடக்கிறது)

அதாவது இந்த அரசியலின் படிநிலைகள்,

1) ஒரு சாதியின் இயல்பான பெயரை சமஸ்க்கிருதமாக குழப்புவது

2) பட்டத்தைப் பொதுவாக வைத்து வேறொரு சாதியுடன் குழப்புவது

3) சாதி வரலாற்றை புராணங்களில் வரும் கதாபாத்திரத்துடன் அல்லது இலக்கியங்களில் வரும் குறிப்பிட்ட மக்களுடன் குழப்புவது

4) சான்றிதழில் உள்ள பெயரை மாற்றிக் கொள்வது

5) ஏதேனுமொரு கடவுளுடன் தொடர்புபடுத்திக் கொள்வது.

6) ஏதாவதொரு கல்வெட்டின் சொற்களைத் திரித்து பயன்படுத்துக் கொள்வது.

7)  ஏதேனுமொரு மன்னர் பரம்பரை வாரிசுகளாக அறிவித்துக் கொள்வது

8) மொழிதாண்டி வேறொரு சாதியையும் துணைக்கு அழைத்துக் கொள்வது

செந்தில் மள்ளர் செய்வது இந்த அருதப்பழைய அரசியலைத்தான்.

சரி!

இதை தனித்தனியாக பகுத்து ஆராய்வோம்.
---------

தேவேந்திரன் :-

இந்திரன் தமிழ்க் கடவுள் இல்லை என்பது பாவாணர் கூறிய கருத்து.
அவரது பார்வையில் இந்திரன் பர்மாவை ஆண்ட அரசன்.
ஐராவதி ஆறும் வெள்ளை யானையும் அங்கேதான் காணப்படுகிறது.
திருக்குறளில் உள்ள வேற்றுமொழி சொற்களைப் பட்டியலிட்ட அவர் இந்திரன் என்பதை முதலில் வைத்துள்ளார்.

தெய்வம் + இந்திரன் = தெய்வயிந்திரன் என்றுதான் வரவேண்டும்.
தேவ + இந்திர = தேவேந்திர என்றால் இது சமஸ்கிருதம்.
அதாவது சமக்கிருதத்தில் இரண்டு உயிர் எழுத்துக்கள் புணர்ந்து ஒரு உயிரெழுத்தையே தரும்
(எ.கா: சூர்ய + உதயம் = சூர்யோதயம்).
-------

வேளாளர்:-

வேளாளர் - வெள்ளாளர் வேறுபாடு பற்றி பலருக்கு குழப்பம் இருக்கலாம்.
வேள் என்றால் விருப்பம் (வேட்கை).
வேளாளர் என்பவர் விருப்பத்தை அடிப்படையாக் கொண்டவர்.
இது போர்த் தொழிலை விரும்பி ஏற்றவரைக் குறிக்கப் பயன்பட்டது.
அதாவது வேட்டையாடுதலை அடிப்படையாக் கொண்டவர்கள்.
வேளிர், வேளாளர், வேணாட்டினர், வேட்டுவர் போன்ற சொற்கள் மன்னருக்கு அடங்கிய (அல்லது அடங்காத) சிற்றரசர்களைக் குறிக்கும்.
---------

வெள்ளாளர்:-

வெள் என்பது வெள்ளை நிறத்தைக் குறிக்கும்.
வெள்ளாளர் என்பவர் வெள்ளையாக இருக்கும் (அரிசி மற்றும் பருத்தி) வெள்ளாமையை அடிப்படையாக் கொண்டு வாழ்ந்தவர்கள்.
இவர்கள் உழவர்கள் கிடையாது.
------

மள்ளர்:-
இந்த சொல்லுக்கு வீரன் என்றே பொருள். செந்தில் மள்ளர் பேசும் திணை அரசியல் இந்த சொல்லாலேயே தகர்ந்து போகிறது.
ஆம்! மள்ளர் மருத நிலத்தில் மட்டுமல்லாமல் வேறு திணைகளிலும் வாழ்ந்துள்ளனர்.
"மள்ளர் மள்ள" என்று போற்றப்படுபவன் தொண்டைநாட்டு இளந்திரையன்.
மேலும் மள்ளர் எனும் சொல் வீரத்தைக் குறிப்பதாக கீழ்க்காணும் இலக்கியச் சான்றுகள் உள்ளன,

"மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் "
[ஐங்குறுநூறு 371]

“ஆயிரம் விரித்த மைம்மாய மள்ள”
[பரிபாடல் 3 – 41]

“திருவின் கணவ! பெருவிநல் மள்ள"
[பரிபாடல் 3 - 90]

"மாலை மார்ப! நூலறி புலவி!
செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள"
[திருமுருகாற்றுப்படை]

பள்ளர் என்பதை மள்ளர் என்பதுடன் திரிக்க இவர்கள் காட்டும் சான்று மிகவும் பிற்காலத்தில் அதாவது நாயக்கர் காலத்தில் தோன்றிய பள்ளு சிற்றிலக்கியச் சான்றுகள்.
-------

பள்ளர்:-
பள்ளத்தை அடிப்படையாக் கொண்டு வாழ்வோர் பள்ளர்.
அதாவது நிலத்தை உழுது பள்ளமாக்கி தண்ணீர் தேக்கி செயற்கையான சேற்றினை உருவாக்கி அதில் உணவுப் பொருளை விளைவிப்பவர்கள்.
இவர்களே உண்மையான உழவர்கள்.
(பள்ளர் என்பதே சரியான பெயர்!
பள்ளி என்பாரும் பள்ளரே!)

அதாவது பள்ளர் விவசாயம் செய்து தருவார் வெள்ளாளர் அதை அறுவடை செய்து விற்று தமக்கொரு பங்கை எடுத்துக்கொண்டு மீதியை பள்ளருக்குத் தருவார்.

(காராளர் என்ற பிரிவு பிற்காலத்தில் தோன்றியது.
இவர்கள் மழைப்பொழிவை நம்பி விவசாயம் செய்பவர்கள்.
இவர்கள் பள்ளர் - வெள்ளாளர் களுக்கு இடைப்பட்டவர்கள்.
அதாவது சிறிய அளவிலான நிலம் வைத்திருப்பவர்.
தானே உழுது பயிரிட்டு தானே உண்டு மீதியை விற்பனை செய்து வாழ்பவர்)

நிலவுடைமை தோன்றும் முன் வரை நிலம் பள்ளர்களுக்குச் சொந்தமாகவே இருந்தது.

இதை மாற்றி நிலத்தை கோயில் நிர்வாகத்தின்  கீழ் கொண்டுவந்து வெள்ளாளருக்குக் குத்தகைக்குக் கொடுத்தது சோழர் ஆட்சி.

இந்த காலகட்டத்தில்தான் பல சாதியினரும் வெள்ளாளர்களாக மாறினர்.
அதாவது அக்காலகட்டத்தில் சாதி என்பது தொழிலின் அடிப்படையில் இருந்து பிறப்பின் அடிப்படையில் மாறத்தொடங்கிய காலகட்டம்.
சோழர் காலத்தில் இதனாலேயே அகம்படி மறவர், செட்டிச்சி பாப்பாத்தி, உழுப் பறையர் போன்ற இரட்டை சாதிப்பெயர்கள் இருந்தன.

சோழர் ஆட்சி பார்ப்பனர்களுக்கு ஆதரவானது என்று பலரும் கூறுவர் ஆனால் அது உண்மையில்லை.
சோழர் ஆட்சியில் செழிப்புடன் இருந்தவர்கள் வெள்ளாளர்கள்தான் என்று சோழர்கால நிலவுடைமை பற்றி ஆராய்ந்து எழுதி பட்டம்பெற்ற ஆய்வாளர் மே.து.ராசுகுமார் கூறுகிறார்.

பிற்பாடு நாயக்கர் ஆட்சியில் சாதி என்பது தனது முழுமையான கட்டமைப்பை அடைந்தது.
அதுவரை ஏதோ பெயருக்கு இருந்த சாதிய ஏற்றத்தாழ்வு நாயக்கர் ஆட்சியில் விஸ்வரூபம் எடுத்தது.
தீண்டாமையும் நடைமுறைக்கு வந்தது.

நாயக்கர்களால் பள்ளர்கள் குறிவைத்து சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டனர்.
[மேலும் அறிய தேடுக "நாயக்கர் ஆட்சியில் தமிழகம் வேட்டொலி" ]
இதற்கு அக்கால சிற்றிலக்கியங்களான பள்ளு மற்றும் சதகம் நூல்களில் பல சான்றுகள் உள்ளன.

பள்ளர் மட்டுமல்லாமல் எல்லா தமிழ்ச்சாதிகளும் ஒடுக்கப்பட்டன.
வந்தேறிகள் கைக்கு நிலவுடைமை மாறியது.
[தேடுக "நிலவுடைமை வரைபடம் வேட்டொலி" ]

பள்ளர்கள் தாழ்ந்துபோக தெலுங்கர்களான நாயக்கர்களின் ராணுவ ரீதியான ஆட்சியில் உற்பத்தியும் அதைச் செய்யும் தொழிலாளர்களும் அளவுக்கதிமாகச் சுரண்டபட்டதே காரணம்.

நாயக்கர் ஆட்சி நிலைபெறும் முன்பு கி.பி.1528-ம் ஆண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்தைச் சேர்ந்த செப்பேடு பள்ளர் சமூகத்தினருக்கு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தினசரி ஆறுகால பூஜைகள் செய்வது, விழாக்காலங்களில் கோயிலில் கொடி ஏற்றுவது, பிராமணர்கள் நடத்தும் யாகசாலை பூஜை களுக்கு ஏற்பாடு செய்து தருவது, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் தருவது ஆகிய கடமைகள் வழங்கப்பட்டிருந்த செய்தியைக் கூறுகிறது.

(இன்றும் பள்ளர்களுக்கு பழநி முருகன் கோவில், நெல்லையப்பர் கோவில்,  மீனாட்சியம்மன் கோவில் போன்ற பெரிய கோவில்களில் பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்யப்படுகிறது)

நாயக்கர் காலத்தில் அவர்களுக்கு முழுமையாக அடங்காத மறவர் பாளையங்களில் பள்ளர்கள் அதிகம் தாழ்ந்துபோகவில்லை (இன்றும் கூட).
இதனாலேயே மறவர் - பள்ளர் ஒற்றுமையைக் குலைக்கும் அரசியல் திட்டமிட்டு திராவிட வாதிகளால் செய்யப்பட்டு வருகிறது

பள்ளர்கள் முதலில் செய்யவேண்டியது பட்டியல் வெளியேற்றம்.
அதாவது பட்டியல் சாதி (எஸ்.சி) முத்திரையை அழித்துவிட்டு பள்ளர் என்கிற பெயரிலேயே தமது மக்கட்தொகை சதவீதத்திற்கு ஏற்ப (அதாவது மக்கட்தொகையில் 4%) இடவொதுக்கீடு பெறுவது.

ஆனால் சமைத்தமொழியில் அல்லது வேற்றுசாதியினரின் ஒரு பெயரை தமது அடையாளமாக ஆக்க முயல்வது தவறு.
இதன்மூலம் சக தமிழ்ச்சாதியின் வெறுப்பை பெறுவது மொத்த தமிழினத்திற்கு கேடு தரும்.

ஆகையினால் "பள் எனும் வேர்ச்சொல்தான் பாண்டியர் என்று ஆயிற்று" என்று பாவாணர் கூறுவதாக பொய் கூறும் மள்ளரிய மடயர்களை (மடையர் அல்ல) புறந்தள்ளுங்கள் பள்ளர்களே!

பள்ளர் என்கிற பெயரில் அப்படி என்ன குறையிருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நீங்கள் யாரென்று கேட்டால் "பள்ளர்" என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறுங்கள்.

நீங்கள்தான் ஆதி உழவர்.
நீங்கள் மருத நில நாகரீகத்தைத் தோற்றுவித்தவர்கள்.

தமிழர் அனைவரையும் போல நீங்களும் பாண்டியர்கள்தான்.

தேவேந்திரன், மள்ளர் போன்ற திரிபுகளை ஆதரிக்காதீர்கள்.
நாங்கள் மட்டும்தான் பாண்டியர் என்று எண்ணாதீர்கள்.

மற்றபடி....
வந்தேறி தெலுங்கன் கருணாநிதி தனது சின்னமேளம் சாதியை இசைவேளாளர் என்று மாற்றியபோதும்
அவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) சலுகை கொடுத்தபோதும்
அவர்களுக்கு சாதி சங்கம் (முத்தமிழ் மன்றம்) அமைத்து பெரிய அளவு நிலத்தையும் கட்டிடத்தையும் நன்கொடையையும் வாரி வழங்கியபோதும்
அவர்களுக்கே முதன்முதலாக திருமண நிதி (மூவலூர் ராமாமிர்தம் திட்டம்) வழங்கிய போதும்
எதிர்க்காமல் விட்டது தமிழர் அனைவரின் மாபெரும் தவறுதான்!

தமிழர்கள் அனைவரும் பள்ளர்களை ஆதி உழவர் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.
நெல் நாகரீக முன்னோடிகள் பள்ளர்களே என்றும் ஒத்துக் கொள்ளவேண்டும்.

அவர்களின் பட்டியல் வெளியேற்றத்திற்கு முழு ஆதரவு தந்து தாமும் அதே வழியில் நடக்கவேண்டும்.

இனியாவது தமிழ்ச் சாதியினர் அனைவரும் விழித்துக்கொண்டு ஒற்றுமையாக தத்தமது மக்கட்தொகை சதவீதத்திற்கு ஏற்ப தத்தமது இயல்பான பெயரிலேயே இடவொதுக்கீடு பெற உறுதியேற்க வேண்டும்!

Wednesday 15 July 2020

தமிழகத்தில் பிறமொழியினர் பரவல்



தமிழகத்தில் பிறமொழியினர் பரவல்

1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பிறகு 1961 இல் வெளிவந்த மக்கட்தொகை கணக்கெடுப்பு ஆவணத்தில் [Census of india 1961 vol ix A] கொடுக்கப்பட்டுள்ள ஊரகப் பகுதி மொழி வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட வரைபடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

எல்லைப் புறத்தில் வேற்றின மக்கள் இருப்பது இயல்புதான்.
அப்படிப் பார்த்தால் மலையாளிகள் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை (இன்றைய நிலை தெரியவில்லை).
  இதில் நாம் கவலைப்படவேண்டிய விடயம் எல்லையைத் தாண்டி உட்பகுதி வரை குடியேறியுள்ள கன்னடர் பற்றியும் ஊடுருவி மறுமுனை வரை செறிவாக குடியேறியுள்ள தெலுங்கர் பற்றியும்தான்.

நமது மாநிலம் அமைந்த போது நமது எல்லைப் பகுதிகள் பெரும்பாலானவற்றை இழந்தோம்.

அப்படி நாம் அறுதிப் பெரும்பான்மை யாக இருந்த பகுதி மட்டுமே தமிழகமாக ஆனது.
  அதிலும் உட்பகுதியில் குடியேற்றம் 1961 லேயே இந்த அளவு இருப்பது அப்போதே கவனிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஏனென்றால் நாம் இழந்த பகுதிகள் அனைத்துமே அந்நியர் குடியேற்றத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டதால் இழந்தவைதான்.

குறிப்பாக சிங்களவர் இப்படி குடியேறித்தான் நமது நிலத்தை முழுதாக ஆக்கிரமித்தனர்.

வரைபடத்திற்கு நன்றி: பணகுடி தென்னவன் ராசா

Friday 10 July 2020

ராஜபாளையத்தைக் கட்டியாளும் ராஜுக்கள்


ராஜபாளையத்தைக் கட்டியாளும் ராஜுக்கள்
விஜயநகர ஆட்சிக் காலத்தில் விஜயவாடா பகுதியை ஆண்டுவந்த பூசாபதி பரம்பரையினர் கிருஷ்ண தேவராயர் காலத்திலிருந்து விஜயநகர அரசை ஆதரிக்கும் சிற்றரசர்களாக இருந்து வந்தனர்.
தமிழகத்தில் விஜயநகர ஆட்சி பரவியபோது அதிகாரிகளாக செயல்பட ஆந்திராவிலிருந்து இந்த ராஜு குலத்தினர் கி.பி. 1600 - 1750 வரையான காலகட்டத்தில் தமிழகத்தில் குடியேறினர்.
இவர்களிடைய நான்கு "கோத்திரங்கள்" மற்றும் அதன் உட்பிரிவுகளாக "வீடு"களும் உள்ளன.
ஒவ்வொரு வீடுகளையும் ஒருங்கிணைக்கும் "சாவடி" என்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
ஒரு சாவடி வசிக்கும் பகுதி "கோட்டை" என்கிற கட்டமைப்பின் கீழ் வருகிறது.
1650 களில் பழையபாளையம் கோட்டை பூசாப்பதி சின்னராஜா என்பவரால் நிறுவப்பட்டது.
1750 களில் திம்மராஜு என்பவரால் சிங்கராஜகோட்டை நிறுவப்பட்டது.
1790 களில் ஜக்காராஜு கோட்டை துரை திம்மராஜு என்பவரால் நிறுவப்பட்டது.
(சிங்கராஜ கோட்டையைச் சேர்ந்த சில சாவடியினர் மிகவும் பிற்பாடு 1951 இல் திருவந்தாபுரம் கோட்டை (பச்சைமடம்) யை நிறுவினர்)
கோட்டையை வைத்து வாழ்விடத்தையும் சாவடியை வைத்து பங்காளி முறையையும் அடையாளம் கண்டுகொள்வர்.
வீடு என்பதை வைத்து அவர் எந்த குடும்பத்தின் வாரிசு என்று கண்டறியமுடியும்.
வேறுபட்ட கோத்திரங்களில் திருமணத் தொடர்பு வைத்துக்கொள்வர்.
  மதுரையைச் சுற்றி சிதறியவாறு குடியிருந்த இவர்கள் சொக்கநாத நாயக்கர் ஆட்சியின்போது இராஜபாளையம் பகுதியில் மொத்தமாகக் குடியேறினர்.
இன்று ராஜபாளையமே இவர்கள் உள்ளங்கையில் என்றால் அது மிகையில்லை.
1923 இல் காக்கிநாடா வில் நடந்த அனைந்திந்திய காங்கிரஸ் மாநாட்டில் ராஜபாளையத்தில் இருந்து சென்றவர் இந்துக்கூரி அரங்கசாமி ராஜா என்பவர்.
இவரை அங்கே வந்திருந்த சிந்தலப்பட்டி பப்பி ராஜு என்பவர் சந்திக்கிறார்.
இதில் இருவரும் ஒரே சாதியினர் என்பதையும் 250 ஆண்டுகள் தாண்டியும் தாய்நிலத்தில் இருந்து 300 மைல்கள் அப்பால் தள்ளியிருந்தாலும் ராஜபாளையம் ராஜு சமுதாயம் தமது தெலுங்கு இன, மொழி, குலம், கோத்திரம், பழக்கவழக்கம் ஆகியனவற்றை அப்படியே பேணிவருவதையும் அறிந்து ஆச்சரியமடைகிறார் பப்பி ராஜு.
இவ்விருவரும் சேர்ந்து மீண்டும் இருதரப்புக்கும் இடையே தொடர்புகளைப் புதுப்பித்துக் கொள்ள முயன்றனர்.
சில திருமண உறவுகள் கூட ஏற்பட்டன.
ஆனால் இதில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை.
ஆனால் ராஜபாளைய ராஜுக்கள் தமக்குள் ஒருங்கிணைய இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.
1927 இல் ஒரு கல்வி அறக்கட்டளை ஏ.கே.டி தர்மராஜா என்பவரால் நிறுவப்பட்டது.
1931-1932 இல் தேனி நகர முதல் பஞ்சாயத்து பிரசிடென்ட் ஆக என்.ஏ.கோண்டு ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1932 இல் ஸ்ரீ ஜெயராம் மோட்டார் என்கிற நிறுவனம் ரங்கசாமி ராஜா குடும்பத்தினரால் தொடங்கப்பட்டது.
1947-1948 ராஜபாளையம் சேர்மனாக என்.ஏ.பி. அழகிரிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1949 - 1952 மதராஸ் மாகாண முதலமைச்சராக பூசாப்பதி பி.எஸ்.குமாரசாமி ராஜா பதவி வகித்தார்.
மேலும் 1952-1954 ஓரிசா கவர்னராகவும் பதவி வகித்தார்.
பூசாப்பதி பி.ஏ.சி. ராமசாமி ராஜா ராஜபாளையத்தின் முதல் சேர்மன் (1941-1947) ஆக பதவிவகித்தார்.
[இதன்பிறகு ராஜபாளையம் சேர்மன் பதவி ராஜுக்களின் பரம்பரை சொத்து என்றே ஆகிவிட்டது]
இவரே ராம்கோ குழுமத்தை நிறுவியவர்.
இவரது மகன் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா ராம்கோ நிறுவனத்தை பெரிய அளவில் வளர்த்தெடுத்தார்.
பேரன் வெங்கட்ராம ராஜா காலத்தில் இது 7000 தொழிலாளர்கள், 2500 கோடி சொத்துமதிப்பு என பெரிய நிறுவனமாக வளர்ந்தது.
பி.எல்.துரைசாமி ராஜா ராஜபாளையம் நகராட்சியின் இரண்டாவது சேர்மன் (1948-1952) ஆக பதவி வகித்தார்.
1952-1957 வரை ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ வாக டி.கே.ராஜு இருந்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட தியாகியான கே.எம். சங்கர ராஜா 1959-1964 வரை ராஜபாளையம் சேர்மனாக இருந்துள்ளார்.
கே.ஏ. ஐயாசாமி ராஜா வடகிழக்கு மாநிலங்கள் ஒன்றாக இருந்தபோது அதன் ராணுவ அதிகாரியாக 1966-1975 வரை இருந்துள்ளார்.
அருணாச்சல பிரதேசம் உருவானபோது அதன் லெப்டினல் கவர்னராக 1975-1977 வரை இருந்தார்.
இவரது சகோதரர் சிங்கப்ப ராஜாவும் இந்திய பாதுகாப்பு பணியில் 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
பங்களாதேஷ் விடுதலைப் போரில் தென்னிந்திய படையணிக்கு இவர் தலைமை தாங்கியுள்ளார்.
மேலும் இந்திய அமைதி காக்கும் படையில் (ஐநா சார்பில்) ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் பணியாற்றியுள்ளார்.
1962-1967 வரை ராஜபாளையம் எம்.எல்.ஏ வாக ஏ.ஏ. சுப்பராஜா இருந்துள்ளார்.
இவர் ராஜபாளையம் சேர்மனாக தொடர்ந்து ஐந்துமுறை தேர்ந்தெடுப்பட்டவர்.
1970 இல் கோட்டைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து சிந்தலப்பட்டி எஸ்.ஆர். நாராயண ராஜா தலைமையில் ராஜபாளைய சத்திரிய மகா சபை (தெலுங்கில் - நாலுகு கோட்ட கும்ப்பு)  தொடங்கப்பட்டது
(இவரது பெயரை வைத்து பார்க்கும்போது முதலில் பார்த்த பப்பிராஜு வாரிசு என்று தோன்றுகிறது).
இன்றுவரை ஒரு நல்ல சமூதாய நீதிமன்றமாக செயல்பட்டு வருகிறது.
1980 இல் சத்திரிய சேவா சமிதி என்ற அமைப்பு  ஐ.பி.ஆர் ரகுபதி தலைமையில் தொடங்கப்பட்டு "கொத்தலு" எனும் பத்திரிக்கையும் தொடங்கப்பட்டது.
என்.ஆர். அழகராஜா தேனி யின் அல்லிநகரம் சேர்மேனாக 1986-1991 வரை இருந்தார்.
மேலும் தேனி தொகுதி எம்.எல்.ஏ வாக 1996-2001 இருந்துள்ளார்.
பூசாப்பதி கந்தசாமி ராஜா வின் மனைவியான தாயம்மாள் 2001 இல் கடையநல்லூர் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தகவல்களுக்கு நன்றி :-
நூல்: Rajapalayam Kshatriya Rajus - The originand nature of the Community.
ஆசிரியர்: I.B.R. Ragupathi Raja.
இந்நூலில் 2002 க்கு பிறகான தகவல்கள் இல்லை.
சிமென்ட் ஆலைகள், மில்கள், கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், அரசியல் என ராஜுக்கள் தமிழகத்தின் எந்த சாதியையும் விட பல படிகள் முன்னேறிய நிலையில் உள்ளனர்.